-
2nd March 2020, 07:39 AM
#11
Senior Member
Devoted Hubber
2, கண் இருந்தும் காட்சி இல்லை. கால் இருந்தும் இயங்கவில்லை. என்றாலும், செவியினால் நம் அய்யனின் சப்தம் கேட்டு, அய்யனை பாராட்டிய ஒரு பெண், கேரள திரு நாட்டிலே.
நான் டப்ளமா படித்த காலத்தில் அய்யனின் திரிசூலம் வெற்றிகரமாக திரை அரங்கங்களை அலங்கரித்து கொண்டிருந்தது.
கேரள கரையோரம் தமிழகத்தின் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு அழகிய ஊர். பெயர் புவார்.
இங்கு வாழும் மக்கள் தமிழ் கலந்த மலையாளமே பேசுவார்கள். இங்கு உள்ள திரை அரங்கில்(டூறிங் டாக்கீஸ்) 98% தமிழ் படங்களே திரையிடப்படும். எப்படிப்பட்ட நல்ல படமாக இருந்தாலும் 4 தினங்கள் மட்டுமே தரையிடபபடும். அய்யனின் திரிசூலம் 15 நாட்கள் வெற்றி வாகை கண்டது.
ஒரு ஞாயிறன்று நாகர்கோயிலில் பல முறை பார்த்திருந்தாலும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நண்பர்களுடன் இந்த திரை அரங்கிற்கு பகல் காட்சி காண சென்றோம்.(திரை அரங்கின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் இஸ்லாம் பெயர்).
திரை அரங்கத்தில் அய்யனின் திரிசூலம் பார்ப்பதற்கு அலை போல் கூட்டம். அன்றய தினம்தான் புவாரின் பக்கத்து ஊரான கொல்லங்கோடு (கொல்லங்கோடு என்ற ஊர் பாதியளவு தமிழகத்தில் இருக்கின்றது) என்ற ஊரிலிருந்து பலரும் அய்யனின் திரிசூலம் பார்க்க வந்திருந்தனர். அந்த பலரில் ஒரு தேவதை போன்று அழகு மிகுந்த சுமார் 18 வயது நிறைந்த ஒரு பெண் அய்யனின் திரிசூலம் படத்தை காதால் கேட்டு மகிழ வந்தாள். பெயர் ரெஜீனா.
கண்ணின் காட்சியையும், காலில் ஊனத்தையும் கொடுத்த தெய்வம், உடல் முழுவதும் பார்பவரை மீண்டும் பார்க்க தூண்டும் அழகை அந்த சகோதரிக்கு கொடுத்திருந்தான்.
என் நண்பன் என்னிடம் இங்கு பார் என்றான். அங்கு பார்த்த போதுதான் நான் கூறிப்பிட்ட இந்த அழகிய சகோதரி மடங்கிய காலுடன் பார்வையற்று இருந்தாள். அந்த கூட்டத்திலும் நான் அவர் பக்கத்தில் சென்றேன்.
தங்கையே தங்களுக்கு கண் இல்லையே. எப்படி நீங்கள் இந்த படத்தை பார்க்க வந்தீர்கள் என்று நான் கேட்டேன். அந்த தங்கையின் பதிலோ, என்னை கண்ணில் ஆனந்த கண்ணீருடன் ஆச்சரியம் கொள்ள செய்தது.
சகோதரா, நான் சிவாஜியின் பல படங்களின் ஒலி நாடாவை கேடட்டுள்ளேன். அந்த அற்புத நடிகனின் சப்தம் என்னை அவர்பால் காதல் கொள்ள செய்து விட்டது. பல நடிகர்களின் ஒலி நாடாவை கேட்டுள்ளேன். ஆனால் சிவாஜியின் ஒலிநாடாவை கேட்கும்போது, அவரின் வசன உச்சரிப்புகள், குரலில் ஏற்ற இரக்கம், முக்கியமாக அவரின் குரலின் இனிமை என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
சிவாஜி அதேகத்தின்(அவர்களின்) முகம் பார்கும் பாக்கியம் எனக்கு இறைவன் தரவில்லை. ஆனால் அதேகத்தின்(அவரகளின்) வசனத்தை கேட்க இறைவன் எனக்கு குரல் கேட்கும் காதை தந்துள்ளார். அந்த காதினால் சிவாஜி அதேகத்தின் வசனத்தை கேட்டு மகிழ்வேன் என்றார், மாற்று மொழியின் சொந்தமான அந்த அழகு சகோதரி.
திரைபடம் முடிந்த பிறகு தங்கையுடன் வந்தவர்களுக்கு அய்யனின் சார்பாக குடியும்(தேனீர்), கடியும்(மோதகம்) வாங்கி கொடுத்து எங்களின் வாழ்துக்களையும், நன்றிகளையும் பகிர்ந்து மகிழ்ந்தோம்.
மாற்று மொழி மக்கள், மொழி தெரியவில்லை என்றாலும், கண் கொண்டு அய்யனின் நடிப்பை பார்த்து மகிழ்ந்தார்கள்.
கண் காட்சி இல்லாதவரோ, கேட்டு மகிழ்ந்தார் அய்யனின் வாய் சொல்லின் சப்தத்தை.
உகில் எந்த நடிகனுக்கும் கிட்டிடாத பெண் ரசிகை. கண் இல்லா, கால் இல்லா வேற்று மொழி ரசிகை. இந்த மாபெரும் சம்பவத்தின் அழகு, அய்யனின் நடிப்பில் மட்டுமே மக்கள் மகிழவில்லை. அய்யனின் வசன உச்சரிப்பிலும் மக்கள் மகிழ்கின்றார்கள் என்பதே, உலகில் எந்த நடிகனுக்கும் இல்லா சிறப்பு.
அய்யனே, தங்களின் ரசிகன் என்று என்னை நான் சொல்லி கொள்வதில் பெருமை கொள்கின்றேன். வாழ்க உனது நாமம். மேலும் தொடரும்.
Thanks Selvarai Fernandez
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd March 2020 07:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks