Page 138 of 210 FirstFirst ... 3888128136137138139140148188 ... LastLast
Results 1,371 to 1,380 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1371
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (28/11/20)* குமாரபாளையம் ஸ்ரீ லட்சுமியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய*நாடோடி மன்னன்*தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : நெல்லை*திரு.வி.ராஜா .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1372
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

    குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

    மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

    நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்

    எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

    நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

    பொய்க்கால் குதிரை ஆட்டம்

    ‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

    “ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
    ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
    ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
    ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

    என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

    பங்க்ரா நடனம்

    பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

    மேலை நாட்டு நடனம்

    பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

    அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
    இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

    என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

    புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்

    டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

    டான்ஸ் மாஸ்டர்கள்

    எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.

    ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.

    எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.

    Courtesy - net...VND...

  4. #1373
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதேபோல் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த நேரம். வெளி நாட்டு கலைஞர்கள் ஸ்வர்ட் பைட்(வாள் சண்டை) பார்க்க ஆசைப் பட்டார்கள். உடனே தலைவர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சம்பந்தப்பட்ட ஆட்களை வரவழைத்து தலைவர் நடித்த சில முக்கியமான வாட்சண்டை காட்சிகளை போட்டு காட்டச் சொன்னார். அப்போதுதான் சர்வாதிகாரி,அரசிளங்குமரி போன்ற எம்ஜிஆர் படங்களை பார்த்து அவர்கள் வியந்து போனார்கள். தமிழ் படங்கள் வாள் சண்டையில் மிகவும் சிறந்து விளங்குவதாக பாராட்டினார்கள்.

    ஏன் எம்ஜிஆர், சிவாஜியின் வாள் சண்டை படங்களை பார்க்கச் சொல்லியிருக்கலாமே. என் தம்பி,மருத நாட்டு வீரன்,வணங்காமுடி போன்ற படங்களை போட்டுக் காட்டியிருக்கலாமே. அப்படி போட்டு காட்டியிருந்தால் பார்த்தவர்கள் சிவாஜியின் வாள் சண்டையும் அந்த நேரத்தில் அவரது உடல்மொழியையும் பார்த்து சண்டை காட்சியை காட்டச்சொன்னால் காமெடி காட்சியை காட்டுகிறார்களே
    என்று தவறாக நினைத்து விட மாட்டார்களா.

    எம்ஜிஆர் எப்போதும் யார் மீதும் துவேஷம் காட்ட மாட்டார்.
    கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன். எல்லோரும்
    தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் நாட்டிய போட்டி முடிந்தவுடன் சகாதேவன் கத்தியை தூக்கி சிவாஜி கையின்மேல் எறிவாரே அந்த காட்சியில் சிவாஜியின் நடிப்பை கவனியுங்கள். சிறு பிள்ளைகள் மிட்டாய் கேட்டு தாயிடம் தரையில் உருண்டு அடம் பிடிப்பார்களே அதை மிஞ்சி விடும் அந்த காட்சி. அப்படி உருளும் போது கையில் குத்தி நீளமாக இருக்கும் கத்தி கையில் மேலும் உள்ளே இறங்கி விடாதா. கொஞ்சம் பணம் அதிகம் A P N கொடுத்து விட்டார் என்றே நினைக்கிறேன். அதற்கு தகுந்தாற்போல் நடித்திருப்பார்
    சிவாஜி.

    உலகத்திலேயே ஒரு சாதாரண கத்திக்குத்துக்கு இவ்வளவு தூரம் உருண்டு புரண்டு நடித்தவர் யாரும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
    இதேபோல் குடியிருந்த கோயில் படத்தில் ஒரு காட்சி வரும். எம்ஜிஆர் கையில் குண்டடிபட்டவுடன் முகத்தில் அந்த வேதனையை காட்டுவார். உடனே கத்தியை எடுத்து கையை குத்தி ரவையை வெளியே எடுக்கும் காட்சி நம்மையே அதிர வைக்கும்.
    அதில் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியதால் தான் அந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை வென்றார் எங்கள் நடிகப்பேரரசர்.

    சிலர் எம்ஜிஆரின் மனிதநேயத்துக்காகவும்,
    ஏழைகளுக்கு அவர் கொடுக்கும் கொடைக்காகவும் படத்தை பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அப்படியானால் அவருடைய எல்லா படங்களும் ஒரே மாதிரி அல்லவா ஓட வேண்டும், இல்லையே. சில நல்ல கதையம்சமும், நடிப்பும் உள்ள படங்கள் மிகச்சிறப்பாக ஓடுகின்றன.
    மற்ற படங்கள் சுமாரான வெற்றியை
    பெறுகின்றன. எனவே மற்றவர்கள் நடிப்பைக் காட்டிலும் நடிகப்பேரரசர் எம்ஜிஆருடைய நடிப்பையும், அவருடைய நடிப்புடன் கூடிய துடிப்பையும் ரசிகர்களும்,மக்களும் விரும்பி பார்ப்பதால் தான் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் மிகப் பெரிய வெற்றியை பெறுகின்றன.

    மாமா பத்திரிகை அதிமுக வை சீண்டுவதை நிறுத்தாவிட்டால் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் குருஜி..........Suje.Kum..

  5. #1374
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் அனைவரையும் அந்த காலத்து பத்திரிகைகள் குறிப்பாக "தினத்தந்தி" குடும்ப பத்திரிகைகள் மற்றும் "குமுதம்" போன்ற ஆபாசத்தை அரங்கேற்றும் பத்திரிக்கைகள் எம்ஜிஆரை சிறுமை படுத்துவதாக எண்ணி அவரது படங்களுக்கு தரக்குறைவான விமர்சனங்கள் எழுதுவதை கடமையாக நினைத்தன.அதிலும் "அடிமைப்பெண்" படத்திற்கு அவர்கள் எழுதிய விமர்சனம் ஆத்திரமூட்டுவதாக இருக்கும்.

    எம்ஜிஆர் கூனனாக குனிந்து இருக்கும் வரை படம் நிமிர்ந்து நின்றது. எம்ஜிஆர் நிமிர்ந்தவுடன் படம் குனிந்து விட்டது என்றும் எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடுகிறார் (கேமராவுடன் அல்ல)என்றும், படம் முழுவதும் ஒரே காட்டுக்கத்தல் என்றும் எம்ஜிஆர் எவ்வளவு சிரமப்பட்டாரோ அத்தனையும் கிண்டல் செய்தனர் விமர்சனம் என்ற பெயரில். இப்படி பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுவதில் தலை சிறந்து விளங்கியது குமுதம்.

    நான் சொல்வதை சற்று கவனமாக கேட்டு பதிவிடுங்கள் உங்கள் கருத்துகளை.. அதற்கு முன் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்ற எண்ணத்தை மறந்து விட்டு பாருங்கள். அப்பாதுதான் நேர்மையான விமர்சனம் கிடைக்கும்.

    அனைத்து சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, நமது எம்ஜிஆர் ரசிகர்களும் தலைவரே, "தில்லானா மோகனாம்பாள்" படத்தை பார்க்க சொல்லியிருக்கிறார் என்றால் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்று தானே அர்த்தம் என்கிறார்கள். ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் சொன்னது உண்மைதான். ஆனால் எதற்காக "தில்லானா மோகனாம்பாள்" படத்தை பார்க்க சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வெளிநாட்டினர் சிலர் தலைவரை அணுகி தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் தெரிந்து கொள்ள வசதியாக எங்களுக்கு ஒரு தமிழ் படத்தை காட்டுங்கள் என்றதும் எம்ஜிஆர்
    நாதத்தையும்,பரதத்தையும் விளக்கி சொல்லும் படமான தில்லானா மோகனாம்பாள் படத்தை சிபாரிசு செய்தார். படத்தில் A P நாகராஜன் தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வரத்தின் பெருமையை அழகாக சொல்லி இருப்பார். அதுபோல் பரதநாட்டியக்
    கலையையும் பெருமை படுத்தி இருப்பார்.

    படம் முழுவதும் நாதமும் பரதமும் தமிழகத்தின் பெருமை மிகுந்த கலைகள் என்று சொல்லியிருப்பார்கள். மதுரை
    பொன்னுசாமி, சேதுராமனின் அற்புதமான நாதஸ்வர இசையையும் பத்மினி அவர்களின் தெய்வீக
    நாட்டியமும் போட்டி போட்டுக்கொண்டு படம் முழுவதும்
    நமது கலாசாரத்தை பரப்பும் விதமாக அமைந்திருப்பதால் தலைவர் படத்தை பார்க்க சொன்னார்.

    மதுரை பொன்னுசாமி,சேதுராமனின் நாதஸ்வர இசையை அந்த காலத்திலேயே கவர்னர் மாளிகையில் அவர்கள் வாசிக்க கவர்னர் ரசித்திருக்கிறார். காமராஜரும் இவர்களின் வாசிப்பை மிகவும் ரசிப்பார். நமது தலைவரும் ஒரு அற்புதமான இசை ரசிகரே. அதனால் அவர்களை பார்க்க சொன்னதில் வியப்பில்லை..

    இதை வைத்துக் கொண்டு ஏதோ நாதஸ்வரமே சிவாஜி ஊதிதான் நாதஸ்வர இசையே கிடைத்த மாதிரி பெருமை கொள்வதேன்? நாதஸ்வரத்திற்கு சிவாஜி நன்றாக வாயசைப்பார் போய் பாருங்கள் என்றா எம்ஜிஆர் சொன்னார்...........Su.Ku..

  6. #1375
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும் பிரிக்க முடியாத பந்தம்."

    இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.

    பழ நெடுமாறன் கருத்து
    1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.

    எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்
    விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

    எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்[மூலத்தைத் தொகு]
    1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

    இயக்குனர் சீமான் நம்பிக்கை
    "முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்..........mgn.........

  7. #1376
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அய்யன் நடித்த "தெய்வ மகன்" ஒரு மாபெரும் மிகை நடிப்பின் உச்சக்கட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல.. மூன்று வேடங்களிலும் மிகை நடிப்பை புகுத்தி வெகு நேர்த்தியாக இதைவிட வேறு எந்த நடிகரும் மிகை நடிப்பை காட்ட முடியாது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய படம்.
    அதனால் ஆஸ்கருக்கு அனுப்பி ஹாலிவுட் நடிகர்களை பதற வைக்கலாம் என்று பார்த்தால் படம்
    தேசத்தை தாண்டி வெளியே போகாததால் தமிழர்களின் மானம் காக்கப்பட்டது.

    மேலும் ஆஸ்கருக்கு போகாத படத்தை அய்யனின் மூன்று வேடங்களையும் செய்தது ஒரே ஆள் என்பதை நம்ப மறுத்தார்களாம். எப்பேர்ப்பட்ட கரடி விடுகிறார்கள்.
    தகப்பனும் மகனும் அச்சு அசலாக ஒரே ஆள் போல தோன்றுகிறார்கள்.
    முகத்தில் உள்ள கசடுகளை வழித்தால் இன்னொரு மகனின் முகம். இதில் எங்கு இருக்கிறது வித்தியாசம். உலகத்திலேயே இப்படி ஒரு செல்ல பணக்கார மகன் போல
    யாரும் கிடையாது என்றே நினைக்கிறேன். அவருடைய நடிப்பு கொஞ்சம் அலியின் நடிப்பை ஒத்து போகிறது. அலிகளின் பிரதிபலிப்பில் தெரியும் மிகை அய்யன் நாணி கோணி நடிப்பதில் தெரிகிறது.

    பிறகு யாரை பார்த்து அய்யன் காப்பி பண்ணினார்? அலியை பார்த்தா? என்று தெரியவில்லை.
    டணால் தங்கவேலு போல கைபிள்ளைகள் காமெடி குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் மேலும் மேலும் அவர்கள் காமெடி தொடருவது எப்படி அடித்தாலும் தாங்குறான்யா என்ற வடிவேலு காமெடியையும் நினைவு படுத்துகிறது. அய்யன் முக்கி முக்கி நடித்தும் அவரால் வித்யாசம் காட்ட முடியவில்லை.

    ஆனால் புரட்சி தலைவர் "உலகம் சுற்றும் வாலிபனு"க்காக மேடா ரூங்ராத்தை புக் பண்ணும் போது தொப்பி கண்ணாடி சகிதம் ஒரிஜினல் கெட்டப்பிலே இருந்திருக்கிறார். அதன்பின் 'பச்சைக்கிளி' பாடலுக்கு எம்ஜிஆர் மேக்கப்புடன் வந்ததும் மேடா ரூங்ராத் வேர் இஸ் மிஸ்டர் எம்ஜிஆர்? என்று கேட்டதும் எல்லோரும் எம்ஜிஆரை அடையாளம் காட்டியவுடன் அவர் நம்ப மறுத்திருக்கிறார். அதுதான் அற்புதமான கெட்-அப். இனி கைபிள்ளைகள் கண்படி டூப் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே தலை சிறந்த நடிகரான பாரத் எம்ஜிஆர் இருக்கும் போது மாற்று நடிகரின் மிகை நடிப்பை இங்கு பினாத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

    நல்லவேளை ஆங்கில நடிகர்களும் ஆஸ்கர் தேர்வுக்குழுவினரும் தப்பித்துக் கொண்டார்கள். நடிப்பா அது? பதறி குதறி கதறி வளைந்து நெளிந்து நாணி கோணி என்று அத்தனை விதமான நடிப்புகளையும் ஒருங்கே காண்பித்து பார்த்தவர்களை கண் மண் தெரியாமல் பர்லாங்கு தூரம் ஓட வைத்து சினிமா ரசிகர்களை திக்கு முக்காட செய்த படம்தான் "தெய்வ மகன்".

    சரி ஆஸ்கர் வேண்டாம், உள்ளூர் மக்களாவது ரசித்தார்களா? என்றால் ஐயோ பாவம் 'ஜில்லு என்னை கொல்லாதே' என்று எள்ளி நகையாடுவதை போல அய்யா எங்களை விட்டு விடுங்கள் என்று பார்த்தவர்கள் 'சாமி என்ன நாங்க தப்பு செய்தோம்' என ஓடியதால் படம் சென்னை சாந்தியில் 50.நாட்களுக்குள்ளே வாயை பிளந்து விட்டது. கிரவுனில் 5 வாரமும் புவனேசுவரியில் 4 வாரமும் ஓடிய பின்பு 100 நாட்கள் பெரிய பெரிய வடக்கயிறு துணையுடன் ஓட்டப்பட்டது. ஒரு சில படங்களுக்கு பட்டறை வசூலை வாரி வழங்கும் கைபிள்ளைகள் "தெய்வ மகனு"க்கு அதைக்கூட தரவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் "தெய்வ மகனி"ன் நிலையை.

    படத்தின் தயாரிப்பு அய்யனின் குடும்ப நண்பர் பெரியண்ணன் என்று நினைக்கிறேன். இதற்குமுன் "பந்த பாசம்" "அன்புக் கரங்கள்" ஆகிய படங்களை எடுத்து தானும் ஒரு தயாரிப்பாளர் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். "தெய்வ மகனு"ம் வசூல் ரீதியில் தோல்விப்படமானவுடன் தன் முழு சக்தியையும் திரட்டி "தர்மம் எங்கே"?
    என்ற கேள்வியை எழுப்பி தர்மம் அவர் பக்கம் இல்லை என்பதை உறுதி செய்ததுடன் அய்யனின் ராசி வேலை செய்து அத்துடன் அவரின் படத்தயாரிப்பு முடிவுக்கு வத்தது.

    இந்தப் பெரியண்ணன்தான் திருச்சி பிரபாத் தியேட்டர் அதிபர். அய்யனின் அருமை குடும்ப நண்பர் என்பதை உணர்ந்து ஆப்பு வைக்கப் பட்டது . சென்னை சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் இந்த 4 சொந்த மற்றும் குத்தகை தியேட்டர் தவிர வேறு மற்ற தியேட்டர்களின் கணக்கை பார்த்தால் மிக சொற்பமாகத்தான் 100 நாட்கள் கண்டிருக்கும். அதிலும் இழுவை தியேட்டர்கள்தான் அதிகம் இருக்கும்..........ksr...

  8. #1377
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம்...������... நமது ரசிக சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் என்றும் விரும்பும், பூஜிக்கும், நிழலை உண்மையிலேயே நிஜமாகவே, நிஜமாக்கிய வள்ளல் பெருந்தகை இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் எப்பொழுதும் வற்றாத ஜீவ நதியாக அவர் தம் புகழ், மாண்புகள், பெருமைகளை எடுத்து கூறவே நேரமில்லை..... அவ்வளவு தகவல்கள் ஒவ்வொரு அணு தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. அப்படிப்பட்ட நம் ரசிகர்கள் சில தேவையில்லாத நபர்களின் தவறான, அடிப்படையில் ஆதாரங்கள் இல்லாத செய்திகளுக்கு சரியான நேர்மறையான, இன்றைய தலைமுறையினர் (அறியாதவர்கள்) நற் விளக்கங்கள் அளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் பிறருக்கு தெரியப்படுகிறோம். அப்படி தான் சில விடயங்களை தெளிவு படுத்த பதில் பதிவுகள் சொல்ல நேரிடுகிறது. அவ்வாறு சில முட்டாள்தனமான மாற்று முகாம் குழுவினர் பொய்யான, கேலித்தனமாக எழுதும் பதிவுகளுக்கு திரு சங்கர் அவர்கள் பதில் அளிக்கிறார்கள்... சில மடத்தனமான உதாரணங்கள்... நவராத்திரி படத்தில் 9 நபர்கள் நடிப்பை திரைப்பட தேர்வு குழுவினர் மற்றும் நீதிபதிகள் நம்பவில்லை. நடித்தது ஒரே ஆள் இல்லை. அதேபோல் தெய்வ மகன் படம், கௌரவம் படம் இதெற்கெல்லாம் அந்த ரசிக குரூப் இட்டுகட்டிய படு மோசமான பொய் சொல்லி வேறு என்ன சாதிக்க முடியும்? தங்கள் நிலை இன்னும், இன்னும் மோசமாக கீழிருங்கி போய் கொண்டுள்ளதை உணராத மடையர்களாக உள்ளது உள்ளபடி வேதனை தரும் செய்தி...

  9. #1378
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -* வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*24/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    சத்யா*ஸ்டுடியோவில் உழைக்கும்*கரங்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது .அதில் கலந்து*கொண்டு*நடித்த*பின் வீட்டுக்கு காரில்*புறப்படும்*சமயம்*ஒருவர் காரை*மறித்து* பத்திரிகையை*எம்.ஜி.ஆர். அவர்களிடம் தருகிறார்*.* காரின்*குறுக்கே*அவர் விழுந்ததும்*,கார்*ஓட்டுநர் நல்ல வேளையாக*பிரேக்கை* வேகமாக அழுத்தி வண்டியை*நிறுத்துகிறார் .பதற்றமான எம்.ஜி.ஆர். அவர்கள்* அவரை*அழைத்து*ஏன் இப்படி குறுக்கே*விழுந்தாய். தவறிப்போய் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால்*என்ன செய்வது*,உன்னுடைய நல்ல நேரம் .நல்லபடியாக ஒன்றும் பாதிப்பில்லை. சரி*என்ன விஷயம் என்று கேட்க, தலைவரே*, உங்கள் தலைமையில் திருமணம் நடந்தால்தான் திருமணத்திற்கு நான் ஒத்து கொள்வதாக,கடந்த*இரண்டு வருடமாக* குடும்பத்தினரிடம் சபதம் செய்துள்ளேன் . நீங்கள் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை*தருவீர்கள் என்றும் சொல்லிவிட்டேன் .* ஆகவே நீங்கள் அவசியம் வந்து எங்களை*ஆசிர்வதிக்க வேண்டும் என்றார்.* தலைவர் என்றைக்கு , எங்கே திருமணம் என்று கேட்க , ஒரு குறிப்பிட்ட தேதியில்*காலை*9 மணிக்கு*திருமணம் நடைபெறுகிறது என்கிறார் .பத்திரிகையை*வாங்க பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். தன்* உதவியாளரிடம்*திருமண*தேதியை*முன்கூட்டியே எனக்கு*ஞாபகப்படுத்து* என்கிறார் . ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில்*திருமண*ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்றன. மணமக்கள் தயாராகி விட்டனர் .* முகூர்த்த*நேரம் முடியும்*தருவாயில்*உள்ளது ஆனால் தலைவர் எம்.ஜி.ஆர். வருவதாக*எந்த சகுணமும்* தெரியவில்லை*.


    அந்த குறிப்பிட்ட நாளன்று*எம்.ஜி.ஆர். அவர்கள் ஸ்டுடியோவிற்கு வந்து மேக்கப்*அறையில்*நுழைகிறார் . மேஜையின்மீது ஒப்பனை பெட்டி அருகில் அந்த திருமண*பத்திரிகை கிடக்கிறது .* எதேச்சையாக* எடுத்து பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் பதறிப்போய் தன் உதவியாளரிடம் உடனே இந்த திருமணத்திற்கு போக வேண்டும்.* உடன் ஏற்பாடு செய்து, புறப்படு என்கிறார் .* ஆனால் அந்த திருமணம் நடைபெறும் கிராமத்திற்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் குறைந்த பட்சம்*ஒரு மணி நேரமாவது*ஆகும் .* உழைக்கும்*கரங்கள் படப்பிடிப்புக்கான ஒப்பனையுடன் காரில்*புறப்படுகிறார் .* ஆனால் முகூர்த்த*நேரம் தவறிவிட்டது .**திருமண*மண்டபத்திற்கு எம்.ஜி.ஆர். வந்தடைகிறார் .* திருமண*வீட்டார், மணமகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் . ஆனால் மணமகனை*காணவில்லை .* ஒரே குழப்ப*நிலை. அனைவரும் பதற்றமாக உள்ளனர் . நிலைமையை*நேரில் கண்டறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் வேதனை அடைந்து, தன் உதவியாளரை*அழைத்து*எதற்கும் சத்யா*ஸ்டுடியோவிற்கு* உடனே புறப்படலாம் என்று காரில் செல்கிறார் . அங்கு கண்ட*காட்சி*எம்.ஜி.ஆர் அவர்களை வியப்படைய செய்தது.தலைவர் வந்து நடத்திவைத்தால்தான் திருமணம் செய்து கொள்வது என்று மணமகன் ஸ்டூடியோ*வாசலில்*தவம் கிடக்கிறார் . தலைவர் எம்.ஜி.ஆர்.** . உடனே மணமகனை*அழைத்து கொண்டு*மீண்டும் திருமண*மண்டபத்திற்கு வந்தடைந்தார் .தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முகூர்த்தம் தவறினாலும் பரவாயில்லை . நான் தாலி எடுத்து தருகிறேன். அதை மணமகள் கழுத்தில்*கட்டு என்றார் . தாலி கட்டி முடித்ததும்*,மணமகன் காதில்*சில*அறிவுரைகள்*எம்.ஜி.ஆர். சொல்கிறார். பின்னர் மணமக்கள்* இருவரையும்** சத்யா*ஸ்டுடியோவிற்கு அழைத்து*செல்கிறார் . அங்கு ஒரு பெரிய திருமண*பந்தல் அமைக்கப்பட்டு ,விருந்திற்கு சிறப்பான*ஏற்பாடுகள் செய்யப்பட்டன* .திருமண*வீட்டார் அனைவரையும்*வரவழைத்து சிறப்பான, , வகை வகையான*உணவுகள் பரிமாறப்பட்டன .* மணமக்கள் அருகில் எம்.ஜி.ஆர். அமர்ந்து*உணவருந்துகிறார் .* படப்பிடிப்பு குழுவினருக்கும் திருமண*விருந்து*அளிக்கப்பட்டது . மணமக்கள் மனம் குளிர*சிறப்பான*ஏற்பாடுகளை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உதவியாளர் மூலம் செய்திருந்தார் . திருமண விருந்து சாப்பிட்டு*மணமக்கள் புறப்படும்போது ஒரு லாரியில்*மனமக்களுக்கான கட்டில்*,* பீரோ, பித்தளை ,அலுமினியம், எவர்சில்வர் சாமான்கள் ,வெள்ளி பூஜை சாமான்கள் அனைத்தும் சீர் வரிசை பொருட்களாக* வந்து இறங்கின . அந்த சீர்*வரிசை பொருட்கள்*தனி லாரியிலும் , மணமக்கள் ஒரு காரிலும்*தொடர்ந்து செல்லும்படி ஏற்பாடுகள் செய்திருந்தார் தலைவர் எம்.ஜி.ஆர் .* *


    திரு. கா. லியாகத்*அலிகான்*பேட்டி*
    -----------------------------------------------------------மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பலருக்கும்*பல உதவிகள்*செய்த வண்ணம் இருந்தபோது சிலர்*நீங்கள் எதற்காக* ஒருவருக்கு*மீனை*கொடுக்கிறீர்கள். அவருக்கு*மீன் பிடிக்க கற்று கொடுங்கள் என்று சொன்னார்கள் . அப்போது தலைவர் எம்.ஜி.ஆர். அவனுக்கு மீன் பிடிக்க , வலை, மற்றும் உபகரணங்கள் வாங்கி கொடுத்து*, மீன் பிடிக்க கற்று*கொடுப்பதற்குள் அவன் இறந்துவிடுவான்*மீன் பிடிக்க கற்று கொடுக்கிறேனோ இல்லையோ, அவனுக்கு மீனை கொடுத்து*அவனை*பிழைக்க வைக்க வேண்டும் என்பதுதான் எனது கொள்கை*என்று தான் ஆட்சி செய்த*தமிழக*மக்கள் அனைவர்க்கும் உணவு கிடைக்க வேண்டும்* என்கிற*சித்தாந்தத்தின் அடிப்படையில்தான்* ரேஷன் கடைகள்*மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசியின் விலையை*கிலோவுக்கு*ரூ.1/- க்கு*மேலாக உயராத*வண்ணம் பார்த்து கொண்டவர்தான் நமது*அருமைத்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . 1984ல் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று கொண்டிருந்த அந்த கால கட்டத்தில்**சிகிச்சை முடிந்து மூன்று மாத காலம் தொடர்ந்து அமெரிக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலையில்*நிதியமைச்சராக இருந்த*நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்* ரேஷன் கடைகளில் பொது வினியோகத்தில் கிலோ*ரூ.1/-க்கு அரிசி போடுவது*அரசிற்கு பெரிதும் இழப்பு ஏற்படுகிறது . ஆகவே 25 பைசாவை கூட்டி*ரூ.1.25க்கு அரிசி போட்டால்*வருவாய் இழப்பு ஏற்படாது. அதற்கு முதல்வரின் அனுமதி வேண்டும்*என்று கருதி*அந்த கோப்புகளை*விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர் . அந்த கோப்புகளை கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்* 1 நயா*பைசா கூட*விலை ஏற்றம் செய்து பொதுமக்கள் மீது திணிக்க நான் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் இதைவிட* குறைந்த விலையில் அரிசி விநியோகம் பொதுமக்களுக்கு செய்ய முடியுமானால் அதை நான் வரவேற்பேன் என்று முடிவு எடுத்தவர்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**


    ஏழை உலை வைக்கின்ற*அந்த அரிசிதான்*ஒருவனுக்கு உயிர் கொடுக்கும்*உயிர்நீராக இருக்கும் .. ஒரு பழமொழியை*சொல்வார்கள் . தவிப்பவனுக்கு தாகத்திற்கு தண்ணீர் தரவேண்டுமே* ஒழிய ,அவன் இறந்த பிறகு வாயில் பாலை ஊற்றக்கூடாது என்பார்கள் .***அந்த தத்துவத்தின்படி ஏழை, எளியோர்*அரிசியை ரூ.1/-க்குத்தான் வாங்க முடியும்*என்று சொன்னவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அவருக்கு*பின்னால் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா*அவர்கள்**ஏழை எளியோருக்கு இலவச அரிசி திட்டத்தை*அமுல்படுத்தினார் . அதை செவ்வனே இன்றைய அ.தி.மு.க. அரசு எடப்பாடி*பழனிசாமி அவர்கள் தலைமையில் அதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது . அரிசிதானே* என்று ஏளனமாக*நினைக்கவேண்டாம். ஒரு காலத்தில் இதே அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.4.25 க்கு விற்றது .* இதை விமர்சிப்பவர்களை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் ,நீங்கள் பருத்தியை சாப்பிடுங்கள். எலியை*சமைத்து சாப்பிடுங்கள் என்று பதில் சொன்னார்கள்* இவற்றையெல்லாம் பேரறிஞர் அண்ணா*மேடைகளில் விமர்சித்து பேசினார்*இப்படியெல்லாம் பேசுபவர்கள் ஆட்சியில் நீடிப்பது*அவசியமா*என்று கேள்வி எழுப்பினார் . பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும், அந்த ரூ.4.25 க்கு*விற்ற அரிசியை*படிக்கு ஒரு ரூபாய் நிச்சயம், மூன்று படி நிச்சயம் என்ற கொள்கையின்படி ரூ.1/-க்கு படி அரிசி தந்ததை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இறுதி காலம் வரையில் கடைபிடித்து பொதுமக்களுக்கு பொது விநியோகம் மூலம் அரிசி கிடைக்க செய்தது வரலாறு .*மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள்*விழ வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா பாராட்டினாரே , அவருடைய நெறிமுறையில் வழிநடந்தாரே*. .நிச்சயமாக பெருமைப்படத்தக்க இடத்தை நாம் அடைவோம்*என்பதில் எந்த குறையும்** கிடையாது. அதை எப்படியும் அடையலாம். அதை மனதில்*கொண்டு குறைந்தபட்சம் தினசரி 8 மணி நேரம் உழைக்க வேண்டும் . 8 மணி நேரம் ஒய்வு. 8 மணி நேரம் உறக்கம். இவைதான் வாழ்க்கையின் சித்தாந்தம் என்பது*சிக்காகோ*நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரணி, மற்றும் மாநாட்டில் எடுத்த முடிவு . 8* மணி நேரம் வேலை என்பது* 12 மணி நேரம்* 14 மணி நேரம் என்று* உழைத்த காரணத்தால்**புரட்சி வெடித்து* அங்கே தொழிலாளர்களுக்கு தரப்பட்ட*8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஒய்வு, 8 மணி நேரம் உறக்கம்* என்கிற*சித்தாந்தத்தின் அடிப்படையில் அ. தி.மு.க. அரசு .செயல்படுகின்ற வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதிப்படுத்தி தொழிலாளர்களுக்காக தன்னுடைய*வாழ்க்கையை அர்ப்பணித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .


    ஒரு கால கட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி*குறிப்பிட்டு சொல்லும்போது திருச்சியில்*ரகுநாதன் என்கிற தோழர்* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கூட்டத்தில் பார்க்கின்றபோது இன்றைக்கு தொழிலாளர்களுக்கு*கடை சட்டம் என்கிற கடையில் வேலை செய்பவர்களுக்கு உரிய சட்டத்தை கொண்டு வந்தால்*நன்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டு எழுதி கொடுத்ததை*எம்.ஜி.ஆர் அவர்கள் பெற்று கொண்டார். ஆனால் தலைவர்**அவருக்கு இருக்கும் நெருக்கடியில்*இதை*எங்கே பார்க்க போகிறார் என்ற*சந்தேகம் எழுந்ததாம். ஆனால் மனுவை வாங்கிய தலைவர் ஓரிரு மாதங்களில் சட்ட மன்றத்தில்* அமைப்பு சாரா*தொழிலாளர்களுக்காக கடை சட்டம் ஒன்றை*அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்றி காட்டி ,செய்திகளை பத்திரிகைகளில் வெளிவரச்செய்தபோது அதை கண்ட*திருச்சி*ரகுநாதன் என்பவர் பூரித்து போய்*தலைவர் அவர்களுக்கு நன்றியை காணிக்கையாக்கி ,பெருமைப்படுத்தி*திருச்சியில்*கழக*தோழர்களிடம் பேசியிருக்கிறார் . புரட்சி தலைவரின்*ஆட்சி காலத்தில், ஒரு விஷயத்தை, பிரச்னையை*பெரிய அளவில் பிரபலமான ஒருவர்தான்*அவருடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற நியதி இல்லை. ஒரு சாதாரண, சாமான்ய*மனிதனின், வேண்டுகோள் அல்லது மனு என்பது*அவரது கவனத்திற்கு சென்றால் அதை நினைவில் வைத்து உரிய கால*நேரத்தில் முடிவு எடுத்து செயல்படுத்த கூடியவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**

    ஒரு இஸ்லாமியர் தலைவரிடத்தில் ஒரு பிரச்னையை*அவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். சைக்கிளில் செல்பவர்கள் பொதுவாக ஏழை எளியோர்கள் .கணவன்*மனைவி இருவர் சைக்கிளில் செல்லும்போது ,எதிரில் காவலர்*தென்பட்டால் சைக்கிளை*நிறுத்தியதும், மனைவி இறங்கி*ஓடக்கூடிய சூழ்நிலை உள்ளது . மனைவி தவித்து கொண்டிருக்க, கணவன்*காவல் நிலையத்திற்கு அழைத்து*செல்லப்பட்டு*தண்டனைக்கு உள்ளாவான் .**இந்த நிலை மாற வேண்டும் .அதற்குரிய சட்டம் இயற்ற*வேண்டும். சைக்கிளில் இருவர் செல்ல முறையான சட்டம் இயற்றி*ஏழை எளியோரை*வழக்கில் இருந்தும், தண்டனையில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் .தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும்*சில சட்டங்களை உடனடியாக நிறைவேற்றினார். அதில் சைக்கிளை*இருவர்*செல்லலாம் என்பதும் ஒன்று . புகழின் உச்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு சாதாரண*தொண்டனின் கோரிக்கையை ஏற்று ,அதை சட்டமாக்கி,நிறைவேற்றியதால்* ,தொண்டர்கள்* மீது எவ்வளவு அன்பு, பாசம் காட்டினார் என்பதை*இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம் இன்றைக்கு எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். முகலாயர் ஆட்சியில் பாபர்*தன*மகன் ஹுமாயூனிடம் சொன்னாராம். எனக்கு பின்னால் நீதான்*குடும்ப வாரிசு .பின்னர் அமைச்சர்களிடம் சொன்னாராம்.என்னுடைய காலம்,நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது . நான் எப்போது இறப்பேன் என்பது*எனக்கே தெரியாது .அதனால் எனது வாரிசாக*என் மகன் ஹுமாயூனை*அறிவிக்கிறேன் .அந்த காலத்தில்**வாரிசுதாரரை முன்கூட்டியே அறிவிக்கலாம் . பாபர்*தன் மகன் ஹுமாயூனிடம் மகுடம் தலையில்*ஏறிவிட்டதால் மமதையோடு*அலையாதே*.ஏழை எளியோரை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உதாசீனப்படுத்தாதே நாம் முஸ்லீம்*மதத்தை சார்ந்தவர்கள். ஆனால் இங்கு வசிக்கும்*மக்களில் பெரும்பாலானோர்*இந்து மதத்தை சார்ந்தவர்கள் . இந்துக்கள் மனம் புண்படும்படி நீ எந்த காரியமும் செய்ய கூடாது. நம்முடைய மூதாதையர்*.பலர் இந்து கோயில்களை அடித்து நொறுக்கி இருக்க கூடும். அந்த செயலை*மட்டும் நீ கண்டிப்பாக செய்ய கூடாது .இந்துக்கள் வழிபடும்*பசுக்களுக்கும் நீ எந்த இடையூறும் செய்யக்கூடாது .என்று பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு அறிவுரைகள் கூறினாராம் .****


    முகலாய*மன்னர்*பாபர்*போல ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு அரசியல் வாரிசாக*யாரையும் அறிவிக்கவில்லை .* ஆனால் கலையுலக வாரிசாக*நடிகரும், இயக்குநருமாகிய பாக்யராஜ் அவர்களை கலைவாணர் அரங்கில்*ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார் . தான் எழுதிய உயிலில்*நான் வாரிசு என்று யாரையும்*நியமிக்கவோ, அறிவிக்கவோ மாட்டேன் .ஏனென்றால் இது மன்னராட்சி காலமல்ல. மக்களாட்சி காலம் . இந்த காலத்திலே, அ.தி.மு.க. ஆட்சியில் 80 % யாருக்கு ஆதரவாக*இருக்கிறார்களோ, அவர்தான் இந்த கட்சியை வழிநடத்த வேண்டும்* ஒரு வேளை கட்சியில் பிளவு ஏற்படுமேயானால் 80% பேர் யாருக்கு*ஆதரவு தருகிறார்களோ, அவர்தான் கட்சியையும், அரசையும்*வழிநடத்த கூடியவர் . என்று உயில் எழுதி இருக்கிறார் அன்னை ஜானகி அம்மையார் அவர்கள் பெயரில் இருந்த அலுவலகத்தை* அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு*. நான் தானமாக தருகிறேன் என்று எழுதி கொடுத்து , முறைப்படி*ஜானகி அம்மையாரை*நேரில் அழைத்து வந்து**கட்சியின் பெயரில் பதிவு செய்து ,தானமாக*வழங்க செய்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.**அதற்கு பின்னால், ஒரு கால கட்டத்தில் ,ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகள்*ஏற்பட்ட*போது செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு அமோக ஆதரவு பெருகி இருந்த காரணத்தை முன்னிட்டு, ஜானகி அம்மையார் அவர்கள்*ஜெயலலிதா அவர்களுக்கு இருந்த*மக்கள் செல்வாக்கை உணர்ந்து, நான் கட்சி, ஆட்சி பொறுப்புகளில் இருந்து விலகி கொள்கிறேன். நீங்கள் கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நல்லபடியாக வழி நடத்துங்கள் .என்று சொல்லி*அ.தி.மு.க. அலுவலகத்தையும் எழுதி கொடுத்து , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தொடர்ந்து செல்வி ஜெயலலிதா*தலைமையில் ஆட்சியை*பிடித்து, இன்றைக்கு எடப்பாடி*பழனிசாமி அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது . தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மட்டும் 8 முறை ஆட்சி பீடத்தில் அமர்ந்து*சாதனை படைத்துள்ளது*


    .ஆரம்ப*காலத்தில் இருந்து தன் இறுதி காலம் வரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களாட்சி தத்துவம் என்பதில் இருந்து இம்மியளவு கூட*மாறியதில்லை . மன்னராட்சியின் கொடுமைகளை விவரிக்க நாடோடி மன்னன் படத்தை உருவாக்கினார் .* அந்த படத்தில் புரட்சிக்காரராக வரும் வீராங்கன் தாடி வைத்திருப்பார்**மன்னராட்சியை எதிர்த்து நடிகர் சந்திரபாபுவுடன் புரட்சி செய்யும்போது காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் .* மன்னர் மார்தாண்டனை சந்திக்கும்போது மக்கள் படும் அவதிகளையும் . பிரச்னைகளையும் விவரமாக எடுத்து சொல்வார் . அதை தெளிவாக கேட்ட மன்னர் நானும் உங்கள் புரட்சி கூட்டத்தில் சேர்ந்து விடுகிறேன் என்பார் .அப்போது வீராங்கன்* பலமாக வாய்விட்டு சிரித்து, நீங்களும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்துவிட்டால் நாங்கள் யாரை எதிர்த்து போராடுவது என்பார் . புரட்சி என்றதும் பயந்துவிடாதீர்கள்.*புரட்சி என்றால் ஆயுத புரட்சி அல்ல. ஆட்களை நாங்கள் கொல்வதில்லை*நாங்கள் கொள்ளை அடிப்போம் மக்களின் உள்ளங்களை. தீயிடுவோம் தீமைக்கு*என்பார். மன்னர் நாம் இருவரும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களுக்கு எதிராக போராடுவோம் என்பார் . வீராங்கன், மன்னரை பார்த்து ,மன்னா நீங்கள் இவ்வளவு நல்லவரா என்று கேட்பார் . அதுபோலத்தான் உண்மையான உள்ளம் கொண்டவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் .* இவ்வாறு*திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------------
    1.கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*

    2.அன்பே வா சோக பாடல்* - அன்பே வா*

    3.வாரேன் , வழி பார்த்திருப்பேன் -உழைக்கும் கரங்கள்*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி**


    * *.***



    *

  10. Likes orodizli liked this post
  11. #1379
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974

    7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
    சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

    சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .

    நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
    லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .

    மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .

    உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

    1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது.........VND.........
    .

  12. #1380
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்

    டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

    பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

    உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

    கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
    வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

    ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

    கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

    ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

    கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

    ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

    சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

    கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
    (லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

    உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

    பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

    ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.....vs.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •