Page 167 of 210 FirstFirst ... 67117157165166167168169177 ... LastLast
Results 1,661 to 1,670 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1661
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் சிரித்தார்!!!.........
    -------------------------------------
    எம்.ஜி.ஆர்!!!
    அட்டைக் கத்தி வீரன் என்று ஏளனம் செய்தாலும்,, அதைத் துளியும்--
    சட்டை செய்யாது தன் சண்டைக் காட்சிகளில்
    பட்டைக் கத்தியுடன் சுழன்று,, ஏசியவர்களின்
    குட்டை உடைத்தவர்!!--எதிரிகள்
    திணறும் வண்ணம் தன் வாள் வீச்சினால் கலக்கி
    உணரும் வண்ணம் உளறுவாயர்களை ஒடுக்கியவர்!!
    அது நீரும் நெருப்பும் படப்பிடிப்பு!!
    கரிகால எம்.ஜி.ஆர்,,,அசோகன்,,மற்றும்,,அவரது ஆட்களுடன் சண்டையிடுவதாக அன்றைய காட்சி!!
    விருகம்பாக்கத்தில் ஒரு தோப்புக்கு அருகில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஷூட்டிங்!!
    சண்டை மாஸ்டர் ஷ்யாம் சுந்தருக்கோ கடுமையான வயிற்று வலி??
    இயக்குனர்,,ப. நீலகண்டன்,,அவரை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,,தாமே,,அதற்கான மூவ் மெண்டுகளை,,அசோகன்,,மற்றும் அவரது ஆட்களுக்கு சொல்கிறார்!!
    நீ,இப்படி வாளை ஓங்கிக் கொண்டு வா!! நீ அப்படி தடு--இப்படி,,காலையிலிருந்து அவர்களுக்கு டைரக்ட் செய்த வண்ணம் இருக்கிறார்!!
    மதியம் இரண்டு மணி அளவில் எம்.ஜி.ஆர் வந்து இறங்குகிறார்??---விபரம் அறிகிறார்!!
    பா நீ--- மூவ்மெண்ட் சொல்லிக் கொடுக்கும்
    பாணி?? யை கவனிக்கிறார்!!---அதாவது அவரது
    ஒத்திகையை--
    ஒத்திக்--கை கட்டி கவனித்த எம்.ஜி.ஆர்??
    இரண்டு நிமிடங்கள் அதை கவனித்தவர்,,குறும்புப் புன்னகையுடன் இயக்குனரைப் பார்த்து--
    நீங்கள் சற்று அமருங்கள் என்று கூறி விட்டு--
    காலையிலிருந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட விதங்களை அடியோடு மாற்றுகிறார்??
    குழப்பத்துடன் பார்க்கும் நீலகண்டனிடம்--
    அரை மணி நேர பயிற்சிக்குப் பின் --காட்சியைப் படமாக்குமாறு சொல்கிறார் எம்.ஜி.ஆர்??
    நமக்கேன் வம்பு?? என்று காட்சியை எடுத்த நீலகண்டன் திகைக்கிறார்???
    காட்சியோ,,படு நேர்த்தியாக படச் சுருளில்???
    நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி எடுத்திருந்தால்--கேமராவில்-ஒருவர் முகம் தெரிந்திருக்கும்!! ஒருவர் வாள் தெரிந்திருக்கும்!! ஆனால்---
    ஒழுங்கான சண்டைக் காட்சி தெரிந்திருக்காது???
    எம்.ஜி.ஆர்,,ஆங்கிள் வைத்து விளக்க--
    வாயடைத்துப் போனாராம் நீலகண்டன்??
    ஏன்?? பிரமிப்பில் நாமும் தானே?????.........vtr...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1662
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காவல்துறையைப் #போற்றியவர்...

    புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.

    தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.

    இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
    காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.

    காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.

    ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
    ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.

    தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் '#இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

    மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது...........bsm...

  4. #1663
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விமர்சிக்கும் பொறாமையாளர்கள்

    விமர்சனம் கடவுளைக்கே உண்டு
    இப்போது எல்லா கட்சியும்
    எல்லா தலைவர்களும் பாராட்டும் வணங்கும் ஒரே தலைவன் எம் ஜி ஆர்

    எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அது எம் ஜி ஆரை சார்ந்தே அமையும்

    இதை கண்டு பொறாமை கொண்டு ஈன பிறவிகள் சிலர் யூடுபிலும் வலைதளத்திலும் மீடியாகளிலும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆரை பொய் உரைகளால் விமர்சிக்கிறார்கள் அவர்கள் உணருவதில்லை எவ்வளவு விமர்சிக்கிறார்களோ அதை விட பலமடங்கு பெரிதாகும் எம் ஜி ஆர் புகழ்

    இப்போது தன்னை விழம்பரபடுத்த ஒருவன் ஒன்று எம் ஜி ஆரை புகழுவது அல்லது விமர்சிப்பது இதன் மூலம் பிரபலமாக நினைக்கிறான்

    தன்னை நம்பியவனையும் வாழவைக்கிறார் எம் ஜி ஆர்
    தன்னை விமர்சிப்பவனையும் வாழவைக்கிறார் எம் ஜி ஆர் கடவுள் போல்

    விமர்சிக்கும் கேவலபடுத்த நினைக்கும் கேவலமானவர்களே நீங்கள் உங்கள் செய்கை சூரியனை பார்த்து குரைக்கும் நாய்க்கு சமம் என்பதை உணருங்கள்

    எம் ஜி ஆர் புகழ் அழிவில்லா இயற்கையோடு கலந்தது

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........Arm...

  5. #1664
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுப்பு மாதிரி ஆளுங்களுக்கு நாம நன்றி சொல்லணும். அவங்க நடிகரோட உண்மையான செல்வாக்கு என்ன, படத்துக்கு மக்கள் வரவேற்பு என்ன என்பதை காட்டுறாங்க. பிரிஸ்டீஜ் பதுமனாபன் பேரைக் கேட்டாலே அவனவன் இனிமே பிரிஸ்டீஜ் பிரஷர் குக்கர் வாங்க கூட யோசிப்பான்......rrn...

  6. #1665
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நானும் நிறய பேர பாத்திருக்கேன். எம்ஜிஆரை வாழ்த்து இல்ல பேசாமல் போ. அது அவரவர் விருப்பம். ஆனால் தேவையில்லாம எம்ஜிஆரை விமர்சித்தவர்கள்,அவர் மேல சேறு வீசலாம்னு நினைச்சவர்கள் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை. அந்த அளவுக்கு எம்ஜிஆர் தெய்வ அம்சம் கொண்டவர். அடுத்தாப்போல் இந்த ஆலங்குடி வெள்ளச்சாமின்னு ஒருத்தன் வாய்க்கு வந்ததை எல்லாம் ஆதாரம் இல்லாம பேசறான். அவனுக்கும் இருக்கு. புரட்சித் தலைவர் பாத்துக்குவார்....rrn

  7. #1666
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (8/1/21) முதல்
    மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
    வெளியான விவரம்
    *_________

    மதுரை மிட்லண்ட் அரங்கில் நினைத்ததை
    முடிப் பவன்
    தினசரி 4 காட்சிகள்

    தகவல் உதவி:திரு.எஸ். குமார், மதுரை

    கோவை சண்முகா
    மதுரை வீரன்
    தினசரி 3 காட்சிகள்

    தகவல் உதவி திரு. ஜெயகுமார், கோவை.


    தூத்துக்குடி சத்யா
    எங்க வீட்டு பிள்ளை
    தினசரி 3 காட்சிகள்

    தகவல் உதவி திரு. ஜெயமணி தூத்துக்குடி


    பழனி வள்ளுவர்
    நாடோடி மன்னன்
    தினசரி 3 காட்சிகள்


    ராஜபாளையம் ஜெய் ஆனந்த் அரங்கில்
    அடிமை பெண்
    தினசரி 3 காட்சிகள்

    தகவல் உதவி திரு. வி. ராஜா, நெல்லை


    அருப்பு கோட்டை
    இளைய ராணி
    மற்றும்
    திருச்சி ஶ்ரீரங்கம்
    ரங்கரா ஜாவில்
    ஆயிரத்தில் ஒருவன்
    தினசரி 3 காட்சிகள்

    தகவல் உதவி
    திரு.சொக்கலிங்கம்,
    திவ்யா பிலிம்ஸ்


    சென்னை பாலாஜி யி ல் இன்று முதல் (8/1/21)
    குலே பகா வலி
    தினசரி 3 காட்சிகள்
    நடைபெறுகிறது.

    தகவல் உதவி திரு. ராமு, மின்ட்.


    குறிப்பு*: மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*மறு வெளியீடு பல்லாண்டு காலம்* திரை அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை*போட்டு வருவது*அனைவரும் அறிந்ததே. அந்த அரிய சாதனை*2021ம் ஆண்டிலும் தொடர்கிறது .வேறு எந்த நடிகரின்*பழைய படங்களும் இத்தகைய அரிய*சாதனையை*எந்த ஆண்டிலும் புரியவில்லை*என்பது*குறிப்பிடத்தக்கது .

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #1667
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இதயதெய்வம் அவர்கள் நடிப்பில் வந்த "விக்கிரமாதித்தன்" படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் வாஹிணி அரங்கில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது..

    எல்லாம் முடிந்து படத்தின் தயாரிப்பாளர் இல்லம் சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தின் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு சண்டை நடிகர்கள் சம்பளம் கேட்டு போகிறார்கள்.

    அடுத்த மாதம் வந்து பாருங்க...இப்போ பணம் இல்லை என்று கையை விரிக்க குழுவினர் ஸ்டண்ட் சோமு அவர்களிடம் போய் சொல்ல அவரோ எனக்கும் அட்வான்ஸ் மட்டுமே இன்னும் மீதி பணம் வரவில்லை என்று சொல்ல...

    அனைவரும் படத்தின் இயக்குனர் என்.எஸ். ராமதாஸ் வீட்டுக்கு சென்று முறையிட அவர் நான் இதில் தலையிட முடியாது என்று மறுக்க.

    யாரும் தலைவர் வசம் இந்த நிகழ்வை எடுத்து செல்லவில்லை..காரணம் அப்போது தான் அவர் மனைவி சதானந்தவதி அவர்கள் மறைந்த நேரம்...

    விஷயம் கசிந்து தலைவர் உடனே அனைவரையும் வரவழைத்து தகவல் அறிந்து தயாரிப்பாளர் அவரை உடனே தொடர்பு கொண்டு பட பிடிப்பு முடிந்து விட்டது ஏன் இன்னும் சம்பளம் பாக்கி அவர்களுக்கு என்று கேட்க..

    அவர் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன் என்று விளக்கம் கொடுக்க..

    தலைவர் உடனே அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தொழில் செய்பவர்கள்...உடனே ஊதியம் கிடைக்கா விட்டால் அவர்கள் நிலை என்ன நான் இப்போதே எனது உதவியாளர் அவர்களை அனுப்புகிறேன்..மொத்த பணத்தையும் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல..

    கோபத்துடன் தொலை பேசியை தலைவர் வைக்க...அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்டண்ட் நடிகர்கள் முழு சம்பள பாக்கியும் மொத்தமாக வந்து சேர்ந்தது.

    அப்போது அவர்களுக்கு இப்போது போல யூனியன் அமைப்பு கிடையாது...தலைவர் படங்களில் நடிப்பவர்களுக்கு என்றும் தலைவரே பாதுகாப்பு...

    தன் மனைவி பிரிந்த நிலையில் கூட அடுத்தவர் துன்பம் நீக்க சுட்டு விரல் நீட்டி கண்களை துடைக்கும் புனித உள்ளம் நம் புரட்சிதலைவருக்கே என்றும் சொந்தம்.

    வாழ்க தலைவர் புகழ்.

    உங்களில் ஒருவன்.
    நெல்லை மணி..நன்றி.......

  10. #1668
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரை புதிய ஆண்டு தொடக்கமாக எழுதுகிறேன். .பார்த்தால்நீளமாக இருக்கும் படித்தால் சுலபமாக இருக்கும்

    சந்திரோதயம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரைகள்
    1. தற்கொலை கேவலமானது. பலவீனமானது. .கோழைதனமாது..

    2, குடை பிடித்தால் சூரியன் மறையாது மற்றவங்க பார்வையில் நாம் தான் மறைவோம்

    3. அநீதியின் போர்வையில் கொஞ்சநாள் மறைந்திருக்கலாம் நீதியின் பார்வையில் எப்பவும் தப்பிக்க முடியாது..

    4, ,வசதியுள்ளவங்க வாழ்க்கையில் நொறுங்கி போனவங்களுக்கு சுமை தாங்கி இருந்தா இங்கு மட்டும் அல்ல உலகத்தில் எங்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் இருக்கும். .

    5. ஏழைகளும் நம்மைப்போல பத்து மாதம் தான் ஆனால் உடல் கறுப்பு உள்ளம் வெண்மை உதிரம் சிவப்பு. .

    6. வீட்டுக் கூரையிலே ஒட்டடை படியனும் என்று யாரும் விரும்புவதில்லை. அது தானாகத்தாத்தான் படியும். அதுப்போல்தான் நமது வாழ்க்கையில் வரும் துன்பமும். .அதை மன உறுதியால் தான் போக்கனும். .

    7. வாழ்க்கையில் முன்னுக்கு வரனும் என்று முயற்சி பன்றது தப்பில்லை. அதற்காக குறுக்கு வழியில் கோபுரம் ஏறக்கூடாது. .

    8. பெண்களை தெய்வமாக மதிக்கிற நாடு இது. கல்விக்கு சரஸ்வதியும். .செல்வத்துக்கு லஷ்மியும். .பொறுமைக்கு பூமாதேவியும் குறிப்பிடுக்கிறோம். .அப்படிப்பட்ட நாட்டில் தான் பெண்ணை இழிவு படுத்துகிறார்கள்.

    9. தனிப்பட்ட விரோதத்திற்க்காகவும். .நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்துவது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யற மிகப்பெரிய துரோகம். ஆகும். .

    10. நாட்டிலே பெண்களுக்கு பஞ்சம் இல்லை பெண்களின் உரிமைக்குத்தான் பஞ்சம். அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத ஆண்களின் அறிவுக்குதான் பஞ்சம்

    11. கேவலம் பணத்துக்காக பண்பை பகுத்தறிவை மனிதாபிமானத்தை முறிக்க கூடாது.

    12. அசிங்கமான ஏழைகளின் பணத்தால்தான் பத்திரிகை வளர்கிறது பணக்காரர்களின் வாழ்வு மலருகிறது

    13. கூண்டுக்குள் போர்வையில் இருக்கிற புலிகள் எவ்வளவோ மேலானது. .வெளியே மனித உருவில் ஆயிரக்கணக்கான புலிகள் இருக்கின்றன அவங்க இதயத்தைப் போர்வையாக்கி இருக்கிறாங்க. .

    14. என்னதான் கருப்பாக இருந்தாலும் காகம் குயிலாக மாறாது. காரணம் நல்லா இருந்தா பொய்யைக்கூட அனுமதிக்கலாம். என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். .

    15. பெண்கள் முட்டைக்குள் இருக்கிற மஞ்சள் கரு மாதிரி. . என்ன நடந்தாலும் நான்கு சுவற்றுக்குள்தான் இருக்கனும். நான்கு சுவர் என்பது. அச்சம். .மடம். .நாணம். .பயிர்ப்பு. .பண்புகள் தான். .

    16. பெண்கள் கடவுள் சிலை மாதிரி கோயிலை விட்டு வெளியே போனால் வெறும் கல்தான் இறைவன் கழுத்தில் உள்ள மாலை போல் இருக்கிற வரைக்கும் மரியாதை செய்வார்கள் கும்பிடுவார்கள். அதே மாலை வெளியே வந்து விழுந்தா யார் வேண்டுமானாலும் மிதிப்பார்கள்.

    17. மனிதனின் முகம் இருக்கிற அதே இடத்தில் இதயம் இருந்தால் உலகத்திலேயே குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். . என்ன செய்யறது கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருக்கிறதனால்தான் உலகத்தில் இத்தனை அக்கிரமம் நடக்கிறது. .

    18. மழைத்துளியில் எந்த வித்தியாசமும் இல்லை அதுவே நத்தையின் வாயிலே விழும் போது முத்தாக இருக்கிறது குப்பையில் விழும் போது சேறு ஆகிறது. .

    19. குப்பையில் விழுந்தாலும் அது மாணிக்கமாக இருந்தா குனிந்து எடுக்கிறோம் இல்லையா? ? .

    20. பத்திரிகையில் பொய்யான செய்தி வெளியிடுவதால் நாட்டினிலே எத்தனையோ குடும்பங்கள் திசை மாறி போய். ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. .

    21. இந்த நாட்டிலேயே இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் யாராவது ஒருவருக்கு தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் இருக்கிறார்கள் என்கிற கருத்து நமக்குள் இருக்க வேண்டும். .

    22. ஆண்டவன் நிரபராதிகளை கைவிடுவதில்லை. குறைந்த அறிவுள்ள கோழிக்கூட தன் குஞ்சுகளை அடைக்காத்து வளர்க்கிறது. .
    என்ன நண்பர்களே இந்த ஆண்டு வாத்தியார் கூறிய கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுங்கள் அதுவே இந்த ஆண்டு முதல் தொடக்கமாக இருக்கட்டும்.
    வாழ்க தமிழ் வளர்க புரட்சித்தலைவர் புகழ் தொடரட்டும் உங்கள் தொண்டு...Sivaa...

  11. #1669
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசன் அகமும் புறமும்
    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில், அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்து, கழகத்துக்கு சோதனை வரும் போதெல்லாம், தன் சொந்தப் பணத்தை வாரி வழங்கியும், பிரச்சாரம் மூலம், பாமர மக்களைக் கவர்ந்து ஒரு பெரிய ஓட்டு வங்கியை தி,மு,க விற்கு சேமித்து வைத்த காலகட்டம் அது.
    செய்வதறியாது, திகைத்த அன்றைய காங்கிரஸார், தங்கள் துருப்புச் சீட்டாக. கவிஞர் கண்ணதாசனை முதலில் பலிகடா ஆக்கினர். (பின்னர் எம்.ஆர்.ராதா)
    கவிஞரை அறிந்தோர்க்குத்தெரியும், எதையுமே அவர் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதுவதுதான் வழக்கம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
    கவிஞர் மேல் எனக்கு, 55 ஆண்டுகளாக, மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.
    முதலில், அவர் தீட்டிய ஒரு கவிதையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
    “ மலையளவு தூக்கிப் பின் வலிக்கும் வரை தாக்குவதில், மனிதருள் நான் ஒரு மிருகம்.”
    கவிஞர் எழுதிய ‘வனவாசம்’ படித்தவர்களுக்குத் தெரியும், அவரிடம், மிக அணுக்கமாக இருந்த நண்பர் யார் என்று ! கவிஞரை, ” இவரெல்லாம் ஒரு கவிஞரா ?” என்று அவர் கூறியதாக யாரோ போட்டுக் கொடுத்துள்ளார்கள்.
    அதற்கு அவர் எழுதிய பாடல்,

    அஞ்சாதா சிங்கமென்றும்
    அன்றெடுத்த தங்கமென்றும்
    பிஞ்சான நெஞ்சினர் முன்
    பேதையர்முன் ஏழையர் முன்
    நெஞ்சாரப் பொய்யுரைத்து
    தன்சாதி
    தன்குடும்பம்
    தான்வாழ* தனியிடத்து
    பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
    பண்புடையான் கவிஞ*னெனில்
    நானோ கவிஞ*னில்லை
    என்பாட்டும் கவிதையல்ல*.
    பகுத்தறிவை ஊர்க்குரைத்து
    பணத்தறிவை தனக்குவைத்து
    தொகுத்துரைத்த* பொய்களுக்கும்
    சோடனைகள் செய்து வைத்து
    நகத்து நுனி உண்மையின்றி
    நாள்முழுதும் வேடமிட்டு
    மடத்தில் உள்ள சாமிபோல்
    மாமாய* கதையுரைத்து
    வகுத்துண*ரும் வழியறியா
    மானிடத்து தலைவரென்று
    பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
    பேதையனே கவிஞ*னெனில்
    நானோ கவிஞ*னில்லை
    என்பாட்டும் கவிதையல்ல’
    கண்ணதாசனின், வீடு எத்தனையோ முறை ஏலத்திற்கு, வந்திருக்கின்றன. கவிஞர்,எதிர்பாராத நேரத்தில், இருமுறை வீட்டை மீட்டு, தந்துள்ளார், எம்.ஜி.ஆர்.--- --இது அண்ணாதுரை கண்ணதாசன்,மெகா தொலைக் காட்சி பேட்டி. இன்னும், எம்.ஜி.ஆர். கவிஞர் குடும்பத்துக்கு, செய்த பல்வேறு உதவிகளைப் பட்டியலிடுகிறார்.
    28.03.1978 அன்று, அரசவைக் கவிஞர் என்ற உயரிய, மகுடத்தை, கவிஞருக்கு சூட்டினார். தமிழ்ச்சங்க கூட்டத்துக்கு, சென்றபோது அமெரிக்காவில், சிகாகோவில் மறைந்த போது, அரசு செலவில், கவிஞரின் பொன்னுடல் கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதைகளுடன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். (17.10.1981)
    ’மாடி வீட்டு ஏழை’ படம் எடுப்பதாக சொல்லி, நட்புடன் படப்பிடிப்புக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மூச்சு முட்டக்குடித்து விட்டு, நடிகைகள் தோளில், கைத்தாங்கலாக வந்து ஹலோ மிஸ்டர் எம்.ஜி.ஆர். என்று அழைத்த சந்திரபாபுவை சகித்துக் கொண்டு, அவர் படத்துக்கு, நடித்துக் கொடுத்திருக்க வேண்டுமா? ஏன் சிவாஜியைப் போட்டு படம் எடுக்க வேண்டியதுதானே ? அந்த மனிதரையும், மன்னித்து, தன் சொந்தப்படமான ’அடிமைப் பெண்’ படத்தில் வாய்ப்பு தந்தவர், எம்.ஜி.ஆர். பறக்கும் பாவை பட வாய்ப்பும் அவரால்தான் கிடைத்தது. குலதெய்வம் ராஜகோபால் இறுதி காலத்தை ஓட்டியதே, எம்.ஜி.ஆரின், சீடர் பாக்கியராஜ் புண்ணியத்தில்தான்
    என்பதும், இவர்கள் எல்லாம் ஒட்டிக் கிடந்த காங்கிரஸ் கட்சியும், சிவாஜியும், இவர்கள் யாருக்குமே, உதவிக்கரம் நீட்டியதில்லை.
    ” என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை! நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு” –எம்.ஜி.ஆர். நீதி மன்றத்தில், அவதூறு வழக்கு தொடர்ந்து, பின் தடை விதிக்கப் பட்ட புத்தகம் மூலம், தலைவர், புகழ் பேச வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!
    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை... Rathnam Raju...

  12. #1670
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசன் கவிஞர் என்கிற வகையில் ஒரு ஒப்பற்ற கவிஞர். அரசியல் வாதி என்று எடுத்துக் கொண்டால் மிகவும் பரிதாபமான ஒரு தலைவர்(?). அவர் எம்.ஜி.யாரை மட்டும் அல்ல, அவர் அவ்வப்போது இருந்த கட்சி நேரத்தில் அண்ணா, காமராஜர், கருணாநிதி, சிவாஜி கணேசன், ஈ.வே.ரா. ஈ.வே.கி. சம்பத் போன்ற எல்லோரையும் தாக்கி பேசியும் எழுதினார். கடைசி நாட்களில் எம்.ஜி.யார். ஆட்சியில் அரசு அவை கவிஞராகவும் இருந்து சம்பளம், சலுகைகள் பெற்றார். ஏதாவது கிறுக்குத்தனம் அல்லது சிறிதாவது நார்மல் இல்லாதவர்கள் ஜீனியஸ் படைப்பாளியாக ஆக முடியாது. நம்மைப் போன்ற நார்மலாக இருப்பவர்கள் சிறந்த படைப்புகள் படைத்த சரித்திரம் இல்லை. கண்ணதாசன் அவர்களையும் இந்த வரிசையில் தான் நாம் சில விஷயங்களில் நாம் நாம் நம்ப வேண்டும்..... Duraisamy Buvanendran...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •