Page 181 of 210 FirstFirst ... 81131171179180181182183191 ... LastLast
Results 1,801 to 1,810 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1801
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "சூரியன் உதித்ததுங்கோ இங்கே காரிருள் மறைந்ததுங்கோ" இந்த வரிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் நீக்குவது தவறு. எம்ஜிஆர் எதையுமே தீர்க்கமாக பார்த்து தான் செய்வார். அவர் அனுமதி இல்லாமல் பாடல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு காட்சியும் அவர் திரைப்படங்களில் இடம் பெற்றது கிடையாது. எம்ஜிஆரை புரிந்து கொள்ளாதவர்கள் மனப்பாங்கு இது. சூரியன் என்றால் என்ன தி.மு.க.வோ அல்லது கருணாநிதியோ கிடையாது. எம்ஜிஆர் மட்டும்தான்.ஓயாது உழைப்பதில் சூரியனாக இருப்பவரும் அவரே, ஒவ்வொரு வீட்டிலும் சந்திரோதயம் ஆக இருப்பவர்அவரே. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்த உடன் பாமர மக்களின் அறியாமை, துன்பம் என்ற இருள் நீங்கி ஒளிவீசும் என்பதாகும். பின்னால் வரும் வரிகளை கவனிக்கவேண்டும் சரித்திர மாறுது இனிமே சரியா போகும். இது மட்டுமல்ல இந்த நான்கு வரிகளும் சர்வ சாதாரணமாகவே கேட்டவுடனே தெரிந்து விடுமே எம்ஜிஆர் தீர்க்கதரிசி என்பது. இன்னும் இது போல் எத்தனையோ சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரை நன்கு புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான்அரசியல் பிரச்சாரங்களின் போது,நம்நாடு திரைப்படத்தில் உள்ள இந்தப் பாடலில் இந்த வரிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பினார்கள், அடிமைப்பெண் திரைப்பட பாடலை ஒளிபரப்பும் போது ஓயாது உழைப்பதில் சூரியன் நீ என்ற வரிகளை நீக்கி விட்டு ஒளிபரப்புகிறார்கள்.நாடோடி மன்னன் டிஜிட்டல் திரைப்படத்தில் நம்ம திராவிட குலமே என்று தொடங்கும் ஏழு நிமிடம் பாடலை வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள் வருக வருக வேந்தே என்று, எங்கள் திராவிட சூரியனே என்றெல்லாம் சிறப்பாக வரும் பாடல் அது. அதுமட்டுமல்ல 2014 ஆம் ஆண்டு டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும், எம் என் நம்பியார் எம்ஜிஆரை பார்த்து சொல்வார் வாள் சண்டையின் போது, நீ அணையப் போகும் சுடர், அஸ்தமித்த சூரியன் என்று, அதற்கு எம்ஜிஆர் அவர்கள் அஸ்தமித்த சூரியன் அடுத்த நாளே உதயம் ஆவான் என்று சொல்லி சண்டை போடுவார். இதையும் வேண்டுமென்றே கட் செய்துவிட்டு தான் எடுத்தார்கள். இதெல்லாம் தீர்க்கதரிசனமாக உங்களுக்கு தெரியவில்லையா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இந்த காட்சி எடுக்கப்பட்டபோது 64 65 இருக்கும்அந்த நேரத்திலெல்லாம் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்தபோது சூரியன் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் பலவாறாக பேசிக்கொண்டிருந்தார்கள் , அப்படி இருக்கையில் அண்ணாவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி உதய சூரியனை ஒளிர செய்தவர் எம்ஜிஆர். அதனால் தீர்க்கதரிசி இறைவன் எம்ஜிஆரை உண்மையாகப் புரிந்து கொண்டு அவர் வழி நடப்பவர் புனிதமானவர். தீர்க்கமாக பார்த்து நல்வழி நடவுங்கள். தவறு ஏதும் இருந்தால் அடியேனை மன்னித்துக் கொள்ளுங்கள். வாழ்க எம் ஜி ஆர் புகழ்! வாழ்க எம் ஜி ஆர் பக்தர்கள்..........s mm

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1802
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடரின் இறுதி பதிவு. உ...த்தமன் 15

    நீங்க ஆரம்பத்திலேயே நினைத்திருக்கலாம். "உத்தமனு"க்கு ஏன் உ போட்டு நிறைய புள்ளிகள் வைத்து பின் எழுத வேண்டிய காரணத்தை யோசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.படத்தின் உள்ளும் புறமும் இழுவையின் தன்மையை குறிப்பால் உணர்த்தவேதான் இந்த புள்ளி சமாசாரம்.

    படத்தை யாரும் தனியாக சென்று பார்த்துவிட முடியாது. அப்படி ஒரு அறுவை என்று சொல்ல கேள்வி. . நானும் இந்தப்படத்தை பார்க்கவில்லை. ஆனால் அதன் இந்திப்பதிப்பு ஆ கலே லகு ஜா வில் சசிகபூர், ஷர்மிளா டாகூர் அசத்தலாக நடித்திருப்பார்கள். கதைக்கு ஏற்ற பொருத்தமான ஜோடி மற்றும் அளவான நடிப்பால் படம் வெற்றி மகுடத்தில் ஜொலிக்கும்படி அமைந்திருக்கும்.

    ஆனால் "உ....த்தமனை" பார்த்தவர்கள் படம் அய்யனும் மஞ்சுளாவும் அருவருப்பாக நடித்ததாக சொன்னதும் படம் பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
    ஆனால் கைபிள்ளைகள் அதை எப்படி கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை அய்யன் தன் கைபிள்ளைகளை மனச்சிதைவு ஏற்படுத்தி விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

    நல்ல கதையை அய்யன் தனது மிகையான கசாப்பு நடிப்பை பயன்படுத்தி கொத்தி குதறுவதை பார்த்த உண்மை ரசிகர்கள் மனம் பதைத்து வெதும்புவதை காணமுடிந்தது. இதனால் அய்யனின் நடிப்பை ஒதுக்கி தள்ளி விட்டு வேறு சின்ன சின்ன நடிகர்களின் படங்களை பார்க்க ஆரம்பித்தார்கள். அய்யனின் மிகை நடிப்பை பார்த்து மனம் வெறுத்தவர்கள், இளையவர்களின் இயற்கை நடிப்பில் மனம் நெகிழ்ந்து அய்யனை உதறி தள்ளி விட்டு சென்று விட்டார்கள்.
    அய்யனின் எதிர்காலத்தை அவரே சிதைத்துக்கொண்டு மூலையில் போய் ஒதுங்கி விட்ட பிறகு எனக்கு அரசாங்கம் விருது கொடுத்து கெளரவிக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்தார்.

    அப்படியிருந்தும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கட்சி செய்த உதவி என்று நினைக்காமல் பிரதமர் பதவி கொடுக்கவில்லையே என்கிற மாதிரி ஏக்கம் வேறு. தற்போது வந்த "வியட்நாம் வீடு" அவரது தீவிர ரசிகரான சுப்புவை எங்கே கொண்டு போய் விட்டதோ தெரியவில்லை. படத்தில் அவர் போடும் கூச்சல் பக்கத்து குடும்பங்களையும் சிதைத்து விடும் அளவுக்கு இருக்கும். பட்டாசு இத்தனை டெசிபல்தான் ஒலி எழுப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பர்கள் அய்யனின் அலறலுக்கு டெசிபல் நிர்ணயித்தால் தியேட்டருக்கு வருபவர்கள் நிம்மதியாக உறங்கவாவது வழி பிறக்கும். பாதி தூக்கத்தில் அய்யனின் அலறல் ஒலி கேட்டு பயப்பட தேவையில்லை அல்லவா கைஸ்களே.

    சரி "உ....த்தமனு"க்கு வருவோம். படத்தை என்ன செய்தும் நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்ததும் படத்தை 50 வது நாளில் கீழே போட்டு விட்டு ஓடிப் போயினர். அவர்கள் கனவு கலைந்து போனது. ஆனால் அந்தப் பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
    அந்தப்பக்கம் போனவர்களை எல்லாம் பிடித்து தியேட்டருக்குள் போட்டதால் அந்தப் பக்கம் டிராபிக் குறைந்து வெறிச்சோடி போனது. இந்தக் காலத்தில் டிராபிக்கை கட்டுப்படுத்த கொரானா பயன்பட்ட மாதிரி அந்தக்காலத்தில் அய்யன் படங்கள் மூலமாகத்தான் டிராபிக்கை கட்டுப்படுத்தியிருப்பார்கள் போல தெரிகிறது.

    படத்தை தூக்கியபிறகுதான் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவ்வளவு செய்தும் "உத்தமன்" வசூலை வெளியிட மறுத்து விட்டனர். கடல்கடந்து படத்தை ஓட்டிய படத்தின் கப்ஸா வசூலை அளந்து விட்டவர்கள் எல்லாம் உள்ளூரில் ஓட்டிய "உ....த்தமன்" வசூலை வெளியிட தயாரா? அதுதான் பட்டறை போட்டாகி விட்டதே?, பின்னர் என்ன தயக்கம் கைஸ்களே?

    இந்த கத்தல் நடிகனின் முத்தல் நடிப்பில் கதிகலங்கி சித்தம் தடுமாறிய அநேகர் மக்கள் திலகத்தின் ரசிகர்களாக மாறியதால்தான் மக்கள் திலகம் நம்பர் ஒன் நடிகராக மக்கள் மனதில் கொலுவிருந்தார் என்று கூறலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் சிறந்த நடிகராக இறுதி வரை திரையுலகில் வலம் வந்தார் என்று சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    அது மட்டுமா? அவருடைய இயல்பான நடிப்பில் பல விருதுகள் பெற்ற படங்களை பார்க்கலாம். அகில இந்தியாவிலும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்து மத்திய அரசின் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற "மலைக்கள்ளன்". மிகச்சிறந்த படம் என்று உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் விருது பெற்ற "நாடோடி மன்னன்"

    சென்னை வெகுஜன சினிமா ரசிகர் சங்கத்தால் சிறந்த படம் என்ற விருது பெற்ற "எங்க வீட்டுப் பிள்ளை"
    தமிழக அரசால் சிறந்த படம் என அறிவிக்கப்பட்ட "காவல்காரன்" தயிழகத்திலேயே சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட "குடியிருந்த கோயில்" சிறந்த படம் என்று பிலிம்பேர் விருது பெற்ற "அடிமைப்பெண்"அகில இந்தியாவிலும் சிறந்த நடிகர் என்று பாரத் விருது பெற்ற "ரிக்ஷாக்காரன்"
    என்று சொல்லிக்கொண்டே போகலாம். எந்தவித கத்தலும் கதறலும் இன்றி தெளிந்த நீரோடை போன்ற நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அத்தனை புரட்சி நடிகரின் படங்களும் விருதுக்கு தகுதியான படங்களே.

    பதினைந்து வாரங்கள் தொடர்ந்து வந்த இந்த பதிவை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி.

    தொடர் இத்துடன் நிறைவடைந்தது.
    நன்றி வணக்கம்..........ksr.........

  4. #1803
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    The definition of grandeur in cinema has changed drastically over the decades. Ambitious filmmakers world over have been pushing the envelope when it comes to enriching our big-screen experience by making expensive and visually spectacular movies. Recently, Hollywood filmmaker Christopher Nolan revealed that he crashed an actual Boeing 747 filming a sequence for his upcoming movie Tenet.
    Back home in the 60s, merely showing a landing Air India passenger aircraft made a movie a large-scale production. And if the aircraft was shown in 16mm Eastmancolor film, the experience just got bigger.
    AVM Production’s Anbe Vaa was one of the early colour films of Tamil cinema. It was a modern big-budget movie that established a template for future big-budget movies. There is also a noble intent behind the film’s extravagant production. Back in the day, this movie could have been the closest many members in the audience would have come to experience air travel, picturesque mountainous landscape, sprawling mansion and the lifestyle of a man who comes from money. Cinema still remains a dream portal through which many see exotic locations across the world and experience things that they may not be able to do in their lifetime.
    Loosely inspired by Come September (1961), Anbe Vaa (1966) starred legendary MG Ramachandran. The screenplay by A. C. Tirulokchandar, who also helmed the movie, is a case study for how one can spin a star-vehicle without undermining the need for a strong script and logic.
    MGR plays a young business magnate called J Balasubramaniam aka JB. The hectic work schedule starts affecting JB’s well-being. And to restore balance in his life, he decides to take a vacation. Man’s gotta have some fun, yo.
    Cut to the next scene, JB arrives in Shimla. And he celebrates the break from his stressful life by singing the iconic “Pudhiya Vaanam” through the streets of Shimla. Wait, he is a rich businessman, but why is he walking the streets like a vagrant? Where are the expensive cars?
    The first thing that JB notices soon after he deboards the train at Shimla is nobody is waiting for him to chaperone him to his mansion. He is visibly irritated. And he picks up a telephone at the railway station and calls his staff at the mansion. But, the guy who picks up the phone is a self-obsessed, cocky and money-minded newcomer who lacks basic manners and hangs up the call without knowing who is on the other end of the telephone: it is the big boss. Hence, JB had to walk home.
    Maybe Tirulokchandar could have easily chosen to ignore this plot continuity and right away jumped into the first song. Well, he would have known that nobody would complain as long as they get to see MGR sprinting through hilly roads. But, no. As a writer, Tirulokchandar stayed loyal to his material and did not overlook the importance of cause and effect in his screenplay. The entire narration seamlessly develops and moves forward so organically.
    The protagonist in Anbe Vaa wants to have fun and get away from his mechanical life. So he assumes an alternate identity as Balu and even tolerates Ramaiah (a wonderful Nagesh) who mistreats him without knowing his actual identity. JB plays well-meaning pranks on Geetha (B. Saroja Devi), and challenges her in good spirit. And he never vows to teach the woman a lesson by putting her in her place. He wins over everyone by his charm and good behaviour. In the meantime, the audience also learns new information about JB in every scene. He is not just a workaholic but also a fun-loving person who does not take his wealth and social status seriously. He plays golf, and he is kind, chivalrous, strong and can throw a punch if need be.
    Tirulokchandar never deviates from the plot to accommodate unwanted things to serve MGR’s image. Imagine, if MGR broke into a song in Anbe Vaa that spoke about revolution, instead of pleasures of twist dance, test match and blessings of youth. Or as a side gig, he fought corrupt politicians and cops when he was not busy playing pranks on his girlfriend.
    Tirulokchandar’s discipline and focus are what many big-budget, star-vehicles lack today....Baabaa

  5. #1804
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆமாம் தானே?
    -------------------------
    எம்.ஜி.ஆர் தான் 2016 வரைக்கும் ஆண்டு கொண்டிருந்தாராமே என்று முக நூலில் எவரோ நக்கலாகக் கேட்டிருந்தார்களாம்?
    அதன் பாதிப்பில் பிறந்தது தான் இந்தப் பதிவில் நாம் கேட்கும் இந்தக் கேள்வி!
    முக நூல் வாட்ஸ்-அப் இப்படி இனி எந்த அரசியல் கட்சிகளின் தலையெழுத்தையும் எழுதப் போவது கம்ப்யூட்டர் தான். அதாவது--
    கணினி தான் பிரதானம் என்னும் போது--
    கணி--நீ அ.தி.மு.கவின் வெற்றியை என்று கேட்டால்--
    அ.தி.மு.கவின் ஆட்சிக் கட்டிலில்--
    ஜெ டாட் காம்--
    ஓ.பி.எஸ் டாட் காம்
    எடப்பாடி டாட் காம்
    நாளை வேறொருவர் டாட் காம்--
    இப்படி யூஸர் ஐ.டிக்கள் மாறினாலும்
    அவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும்-பாஸ் வோர்ட்--
    எம்.ஜி.ஆர் 07 டாட் காம் மட்டும் தானே??
    சரியா தப்பா என்றக் கேள்விக்கே இடமில்லாத படி
    சரியாதப்பா உன் செல்வாக்கு!!
    ஆம் அல்லது இல்லை--நீங்கள் அலசுங்கள்.........vtr.........

  6. #1805
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆருக்கு அப்படி ஒரு நிலை வர கூடாது இறைவா
    எஸ் . என்.லட்சுமி ...

    "தொழிலாளி", "விவசாயி " போன்ற பல படங்களில் எம் ஜி ஆரின் தாய் ஆக நடித்தவர் எஸ் என்.லட்சுமி தன் ஆரம்பகால சம்பாதியத்தை சேர்த்து வைத்து ஒரு வீடு கட்டுகிறார் முக்கால் பாகம் முடிந்தது மீதி கட்ட பணம் இல்லை எவரிடமும் பணம் கேட்கும் குணம் இல்லாதவர் அதனால் வீடு அப்படியே நிற்க்க இப்படி விட்டால் பாழகிவிடும் என்று தன் உற்ற தோழிடம் கூறுகிறார் இது எப்படியோ எம் ஜி ஆர் அறிய நேரிட ஒரு நாள் வரலட்சுமி வீட்டிற்க்கு ஒருவர் வந்து சின்னவர் தரசொன்னார் என்று ஒரு பணபொட்டலத்தை கொடுத்து விட்டு செல்லுகிறார் பணத்தை திகைப்போடு பெற்று கொண்ட வரலட்சுமி நிற்க்க வீடு செய்யும் மேஸ்திரி வந்து எம் ஜி ஆரிடம் இருந்து பணம் வந்ததாக வீடு உடனே முடிக்க சொல்லி எம் ஜி ஆரிடம் இருந்து உத்தரவு வந்ததை கூற பணம் பொட்டலத்தை பிரிக்காமலே அவர் கையில் கொடுக்கிறார்

    எவரிடமும் பணம் பெற விரும்பாத குணம் உடைய நான் உடனே புறபட்டு எம் ஜி ஆரிடம் சென்று உங்களுக்கு எதற்க்கு இந்த சிலவு என்று கூற
    அம்மா உங்கள் குணம் எனக்கு தெரியும் இப்போது உங்களுக்கு பணம் தேவை அது என்னிடம் இருக்கு தருகிறேன் இன்னொரு முறை எனக்கு பணம் தட்டுபாடு வரும் போது தாருங்கள் வாங்கி கொள்கிறேன் என கூறி என்னை உண்ண வைத்து அனுப்பினார்
    நான் உடனே இறைவனிடம் இந்த நல்ல உள்ளம் படைத்தவருக்கு அந்த நிலையை உருவாக்காதே என உளமாற இறைவனை வேண்டினேன்

    அள்ள அள்ள குறையாத அட்ச பாத்திரம் எம் ஜி ஆரின் கொடை

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........

  7. #1806
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எனது எண்ணங்கள்

    தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

    தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

    எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.

    இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.

    கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.

    எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.

    இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.

    இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.

    அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.

    அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்..........

  8. #1807
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முதல் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் போட்ட முட்டுக்கட்டைகள்

    -சித்ரா லட்சுமணன்

    “முதலில் நீ பெண்ணைப் பார். உனக்குப் பிடித்தால் கல்யாணம் பண்ணிக் கொள். இல்லையென்றால் மதியம் ரயிலிலேயே நாம் மதராஸ் போய்விடலாம்” என்று சொல்லி ஒரு புறம் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்திய அவரது தாயார் மறுபுறத்திலே அன்று நடைபெறவிருந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் செய்தபடி இருந்தார்.

    பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏழெட்டு வீடுகள் தள்ளி அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீடு இருந்தது. எம்.ஜி.ஆர் தங்கியிருந்த அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் அந்த வீடு நன்றாக தெரியும். அங்கே மணப்பந்தல் போடப் பட்டிருந்ததையும் அந்தக் திருமணத்தில் எந்த பிரச்னையும் இல்லாததுபோல அங்கே உற்சாகமாக பலர் நடமாடிக் கொண்டிருந்ததை தையும் தனது அறையிலிருந்து பார்த்த எம்.ஜி.ஆருக்கு தன்னுடைய திருமணத்தை எப்படியும் நடத்தி முடித்து விடுவது என்ற முடிவில் தன்னுடைய தாயார் இருப்பது லேசாக புரியத் தொடங்கியது

    .ஆகவே தன்னுடைய திருமணத்தைத் தடுத்து நிறுத்த தன்னுடைய அண்ணன் சக்ரபாணி ஊரில் இல்லாததை ஒரு ஆயுதமாகப் பயன் படுத்திக் கொள்ள முடிவெடுத்த அவர் “கடைசியாகக் கேட்கிறேன். இந்தத் திருமணம் பற்றி உன்னுடைய முடிவு என்ன?” என்று அவரது தாயார் கேட்டபோது அண்ணன் இல்லாமல் எப்படி என்னால் திருமணம் செய்துகொள்ள முடியும்” என்ற கேள்வியை தன்னுடைய தாயாரின் முன்னே வைத்தார்.

    தன்னுடைய தாயிடம் தான் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் மதராசிலிருந்து புறப்பட்டால் கூட தனது அண்ணனால் பாலக்காட்டிற்கு வந்து சேர முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும் என்பதால் திருமணத்தைத் தள்ளிப் போட மிகப்பெரிய உத்தியை பயன் படுத்தி விட்டதாக அவர் தன்னுடைய மனதளவில் ஆனந்தம் அடைந்தார்.

    ஆனால் அவர் அப்படி சொல்லி முடித்த அடுத்த நிமிடமே அவருடைய திட்டத்தை ஒரு கடிதத்தின் மூலம் தவிடு பொடியாக்கினார் அவரது தாயார்
    “நானும் உங்க அண்ணனும் சேர்ந்துதாண்டா இந்த ஏற்பாட்டினை செய்தோம்” என்று சொன்ன அவர் தனது மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்

    “தாங்கள் சொன்னபடி தங்கள் கடிதம் கிடைத்ததும் ராமச்சந்திரனை அனுப்பி வைக்கிறேன். விரைவில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவும் செய்து விட வேண்டாம். அவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆகவே நன்கு யோசித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யவும் “என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் சக்ரபாணி.

    அந்தக் கடிதத்தை தன்னுடைய தாயாரிடமிருந்து வாங்கிப் படித்த எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்ன செய்வது என்று சிறிது நேரம் புரியவில்லை. திருமணத்தை தடுத்து நிறுத்த அடுத்து என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் யோசிக்கத் தொடங்கியபோது அவருடைய மனதுக்குள் இன்னொரு யோசனை பளிச்சிட்டது .

    சில காலம் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்து இருந்ததால் கதர் ஆடைகள் மீது எம். ஜி. ஆர் அளவில்லா விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவரது தாயாருக்கோ அவர் கதர் ஆடை அணிவது சுத்தமாகப் பிடிக்காது.இனி நீ கதர் ஆடைகளை அணியக்கூடாது என்று பல முறை எம்.ஜி.ஆரைக் கண்டித்திருக்கிறார் அவர்.ஆகவே தன்னுடைய திருமணத் தைத் தடுத்து நிறுத்த அந்தக் கதர் ஆடைகளையே ஒரு ஆயுதமாக பயன் படுத்த முடிவெடுத்த அவர் “இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் நான் கேட்கும் ஒரு விஷயத்துக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று தன்னுடைய தாயாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.எப்படியாவது அந்தத் திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்த சத்யபாமா அம்மையார் எம். ஜி. ஆரின் நிபந்தனை என்ன என்று கூட அவரிடம் கேட்காமல் "எந்த நிபந்தனை என்றாலும் ஏற்றுக் கொள்கிறேன் "என்று கூறிவிட்டார்.

    அவர் அப்படிச் சொன்னவுடன் “இந்த திருமணத்தின் போதும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி நான் கதர் ஆடைகளைத்தான் அணிவேன்.அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால் இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக் கொள்கிறேன்”என்ற எம்.ஜி.ஆர் தான் அப்படிச் சொன்னவுடன் தன்னுடைய தாயின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்று எதிர்பார்த்தார் .

    ஆனால் அவரது தாயாரோ ஒரு கணம் கூட யோசிக்காமல் "நீ விருப்பப்படும் உடைகளை அணிந்து கொள்ளலாம் .நான் எந்தத் தடையும் சொல்ல மாட்டேன்"என்றார்
    அவ்வளவு எளிதாக தன்னுடைய நிபந்தனையை தாயார் ஏற்றுக் கொண்டுவிட்டதும் “பெண்ணைப் பார்க்காமலே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டோமே”என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது.

    ஆனால் தான் மணக்கவிருந்த பெண்ணைப் பார்த்தபோது அவர் அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    தனது தாயின் காலில் விழுந்து வணங்கிவிட்டு மணமகளின் வீட்டுக்குப் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்ததும் அங்கே இருந்த ஒரு பெரியவர் "பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள்" என்று உரத்த குரலில் உத்தரவிட்டார் .அவர் அப்படி குரல் கொடுத்தவுடன் தன்னையும் அறியாமல் எம்.ஜி.ஆர் தலையைக் குனிந்து கொண்டார்.

    சிறிது நேரத்தில் அங்கே ஏற்பட்ட சலசலப்பிலிருந்து மணப்பெண் வந்து கொண்டிருக்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது.

    அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்ப்பதா இல்லை பார்க்காமல் இருப்பதா என்று என்று ராமச்சந்திரன் தனது மனதிற்குள்ளே விவாத மேடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது "இந்தத் துணியை அந்தப் பெண்ணிடம் கொடு"என்று சொல்லியபடி ஒரு சேலையை எம்.ஜி.ஆரின் கையில் கொடுத்தார் அவரது மாமா.புடவையைக் கொடுக்கும்போது எப்படி பெண்ணைப் பார்க்காமல் இருக்க முடியும்?ஆகவே தலையை நிமிர்த்தி லேசாக அந்தப் பெண்ணைப் பார்த்தார் ராமச்சந்திரன்.

    அந்தப் பெண்ணைப் பார்த்த அடுத்த நிமிடம் அவரது கண்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் அப்படியே நிலை குத்தி நின்று விட்டன.

    அந்தப் பெண் அந்த புடவையை வாங்கிக் கொண்டு திரும்பிப் போனதற்குப் பிறகுதான் தனது பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்பினார் எம்.ஜி.ஆர் .

    ஆனால் அப்போதும் அந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து அவர் முழுமையாக விடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
    ஒரு பெண் இவ்வளவு சிவப்பாகக்கூட இருக்க முடியுமா என்று தனது மனதுக்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டார் அவர்.எம். ஜி. ஆரே அப்போதுதான் மலர்ந்த ரோஜா மலரைப் போல செக்கச் சிவப்பாக இருக்கக் கூடியவ்ர் .அப்படியிருக்க அவரே அந்த மணப்பெண்ணின் நிறத்தைப் பார்த்து அந்த அளவிற்கு பிரம்மித்துப் போனார் என்றால் அந்த மணமகள் எப்படிப்பட்ட நிறத்தில் இருந்திருப்பார் என்பதை நாம் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்

    ஒல்லியாக இருந்தாலும் தனது உயரத்துக்கு ஏற்ற உருவம் பெற்றிருந்த அந்த மணமகளின் தலை முடி முழங்கால் வரை நீண்டிருந்ததையும், அவரது கண்களுக்கு அபாரமான ஈர்க்கும் சக்தி இருந்ததையும் பார்த்த எம். ஜி. ஆர். மிரண்டு போனார்.

    அந்தத் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்க பல உத்திகளைக் கையாண்ட அவரது தாயார் ஒரு முறை அந்தப் பெண்ணை அவரது கண் முன்னே ஒரு முறை காட்டியிருந்தார் என்றால் அடுத்த நிமிடமே மறு வார்த்தையின்றி அந்தப் பெண்ணின் கழுத்திலே அவர் தாலியைக் கட்டியிருப்பார் என்பதுதான் உண்மை.அந்த அளவிற்கு அந்த மணப்பெண்ணின் அழகு எம். ஜி. ஆரை ஈர்த்திருந்தது.

    திருமணம் முடிந்து அன்று இரவு தனியறையில் இருந்தபோது"என்னை உனக்குப் பிடித்திருக்கா ?'என்று தனது மனைவி பார்கவியிடம் எம். ஜி. ஆர் கேட்டபோது கடைக்கண்ணால் அவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தரையைப் பார்த்தார் பார்கவி.

    "நல்லா இருக்கேனா இல்லையா என்று பார்க்கிறியா?"என்று அவரைப் பார்த்து எம்.ஜி.ஆர் மீண்டும் கேட்டபோது "என்ன இருந்தாலும் அவளோடு ஒப்பிடும்போது உன்னை அழகன் என்று சொல்ல முடியாது " என்று ராமச்சந்திரனின் உள் மனது அவருக்குக் கூறியது

    "கற்பனையில் துவங்கி நினைவில் நிலைத்து விடுவதுதானே இல்லற வாழ்க்கை.ஆனால் எங்களைப் பொறுத்தவரை அந்த முதலிரவு கற்பனையோடு நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது " என்று தன்னுடைய முதலிரவு அனுபவத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் வெளிப்படையாகக் குறிப்பட்டிருக்கிறார் எம் ஜி ஆர்

    திருமணம் முடிந்ததும் எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவி பார்கவியை மதராசுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். எம்.ஜி.சக்ரபாணி, அவரது மனைவி, எம். ஜி. ஆர்,அவரது மனைவி பார்கவி.அன்னை சத்யபாமா ஆகிய அனைவரும் கூட்டுக் குடும்பமாக வால்டாக்ஸ் சாலையில் தங்கி இருந்தனர்.

    எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையிலே அசைவம் இல்லாமல் அவருக்கு சாப்பாடு இறங்காது.ஆனால் அவரது மனைவியான பார்கவிக்கோ அசைவ வாடையே ஆகாது. வீட்டில் அசைவம் சமைக்கின்ற நாட்களில் ஏறக்குறைய பட்டினியாகவே இருந்து விடுவார் அவர்.

    மனைவிக்கு அசைவம் ஆகாது என்பதால் பல நாட்கள் சைவ சாப்பாடே போதும் என்று கூட சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்

    அப்படி ஈருடல் ஒருயிர் என்று வாழ்ந்த அந்தத் தம்பதிகளை அவர்களுடைய திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே நிரந்தரமாக பிரித்து வைத்து காலம் கண்ணாமூச்சு ஆடியது....Baabaa

  9. #1808
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்_ப்ளாக்பஸ்டர்

    #படகோட்டி.

    எத்தனையோ கடலும் கடல் சார்ந்த திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வந்தாலும், அத்தனைக்கும் மைல்கல் #படகோட்டி ஒன்றே.இந்த படத்தில் மீனவர் சமுதாயத்தை படமாக பார்க்க வைக்கவில்லை இயக்குநர் டி.பிரகாஷ் ராவ், மாறாக படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களையும் மீனவ மக்களோடும்-மீனவர் தலைவனாய் வரும் மக்கள் திலகத்தோடும் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

    மாணிக்கம் பாத்திரத்தில் மீனவர்களின் தலைவனாக வாழ்ந்து காட்டியிருக்கும் மக்கள் திலகம்- அவர்களது ஒற்றுமைக்காக தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் வழங்குபவராக அற்புதமாக நடித்துள்ளார்.

    திருக்கை மீனவர்கள்-சுறா மீனவர்கள் என ஜமீன்தார் நீலமேகத்தின் சூழ்ச்சியால் பிரிந்து கிடக்கும் மீனவ சமுதாயத்தை தன் தந்தையாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க,பல சூழ்ச்சிகளை முறியடித்து சேர்த்து வைக்கும் ஏழைப்பங்காளனாக அற்புதமாய் நடித்திருக்கிறார் மக்கள் திலகம்..

    அவரோடு சரோஜா தேவி, நம்பியார், ராமதாஸ், அசோகன், நாகேஷ், மனோரமா ஆகியோரும் அருமையான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.அதிலும் "முத்தழகி"பாத்திரத்தில் நடிக்கும் சரோஜாதேவி அசத்தியிருக்கிறார். அவரது குறும்பான நடிப்பும்- மக்கள் திலகத்தை அவர் பார்க்கும் போதெல்லாம் சொல்லும் "அய்யோடி சொக்கி"யும் ரசிக்க வைக்கின்றன.

    பாட்டுக்களை பற்றி கூறவும் வேண்டுமா? "பாட்டுக்கு ஒரு படகோட்டி" என படம் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் பாடல்களுக்கு பெயர் உண்டு...எட்டு பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டு..!!!அதே போல "ராய்" அவர்களின் ஒளிப்பதிவு இப்படம் படமாக்கப்பட்ட கேரள கடற்கறைகளுக்கே நம்மையும் பயணிக்க வைக்கிறது.

    1964ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இந்தப்படம், பிற வெளியீடுகளான நவராத்திரி, முரடன் முத்து ஆகிய படங்களோடு போட்டியிட்டு தமிழகமெங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. நூறு நாட்களுக்கு மேல் அதிக திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.

    பின்னாளில் மக்கள் திலகம், அரசியலில் நுழைந்த பிறகு அந்த இயக்கத்துக்கென்று நிலையான வாக்கு வங்கியை பெற்றுத்தர மிக முக்கிய காரணியாக இந்தப்படம் விளங்கியது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    தகவல் :https://en.wikipedia.org/wiki/Padagotti.........Sr.Bu...

  10. #1809
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!
    l)தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
    எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *
    எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
    எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
    எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
    எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
    எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'. *
    எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
    எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
    எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
    எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
    எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
    எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
    எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
    எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
    எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆர். படத்தில்தான்
    நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'. எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
    எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
    எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
    எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான். எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
    எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
    எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம். எம்.ஜி.ஆர்.
    அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
    அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
    எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'. எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
    எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'. எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
    எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'. எம்.ஜி.ஆர்.
    சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
    எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்',
    கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
    எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ். எம்.ஜி.ஆர்.
    வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார்.
    'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
    எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான். 'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

  11. #1810
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "சிவந்தமண்" அதன் தயாரிப்பு செலவுக்கு வசூலான தொகை மிகவும் சொற்பம். உள்நாட்டில் தயாரித்த "கர்ணனி"ன் தயாரிப்பு செலவு ரூ40 லட்சம் என்று பேசும்படம் சொன்னது. அதுபோல் "சிவந்தமண்ணி"ன் குறைந்த பட்ச தமிழ் தயாரிப்பு செலவு ரூ 80 லட்சம் என்று பல்வேறு பத்திரிகை செய்தி மூலம் அறியப்பட்டாலும் கைஸ்கள் அதன் வசூலை போட்டு சாதனை என்று உளறி கொட்டுகிறார்கள்.

    தயாரிப்பு செலவுக்கு வசூலான தொகை அவர்கள் கூற்றுப்படி ரூ 50 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் வரி நீக்கி தியேட்டர் ஷேர் போக ரூ20 லட்சம் கூட தேறாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படியானால் வரவு 20 :80 என்றால் 4ல் ஒரு பகுதி கூட வசூலாகவில்லை. அதை ஏற்றுக் கொள்ளாத கைஸ்கள் செலவு குறைந்த படங்களோடு முறையற்ற வகையில் கம்பேர் செய்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். அதையே விநியோகஸ்தர்கள் "சிவந்தமண்" 175 நாட்கள் தொடர்ந்து அத்தனை திரைகளிலும் எல்லா காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடினாலும் லாபம் வராது என்று அடித்துக் கூறியும் காதில் ஏறாமல் ஸ்ரீதர் பெரும் கடனில் சிக்கி கொண்டார்.

    ஒரு வியாபாரி, இந்த சரக்கு இவ்வளவு தொகை தான் விற்கும் என்று கூட தெரியாமல் முதலீடு செய்வானா?.
    ஸ்ரீதரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்?
    விதியின் குற்றமா? இல்லை விதி என்ற பெயரில் வந்த வி.சி.கணேசனின் குற்றமா? என்று ஆய்வு செய்து பார்த்தால் அதில் வி.சி.கணேசனுக்கு தான் பெரும் பங்கு உண்டு என்று தெரிகிறது. தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள ஸ்ரீதரை பகடைக்காயை போல பயன்படுத்தியிருப்பதை மிக நன்றாக புரிந்து கொள்ளலாம். "சிவந்தமண்ணை" அய்யன், ஸ்ரீதர் டைரக்ஷனில் தனது சொந்த படமாகவேட தயாரித்திருக்கலாமே. தனது மார்க்கெட்டை பற்றி தெரிந்தும் அந்த தவறை கணேசன் செய்வாரா?

    ஸ்ரீதர் தலையில் பெரும் கடன் சுமையை ஏற்றி வசமாக சிக்க வைத்து விட்டார் விசி கணேசு. தன்னை நம்பியவர்களை வாழ வைப்பார் கடவுள் கணேசன். தன்னை நம்பியவர்களை சீரழித்து பார்ப்பார் நம்ம வி.சி.கணேசன். அந்த பானை வயிற்றோன் பக்தர்களை காப்பவன்.
    இந்த பானை வயிற்றோன் நம்பியவர்களை சீரழிப்பவன். என்னை நம்பியிருந்தால் அவர் நலமடைவார்
    என்றும் அதுதானே என் விருப்பம் என்பதற்கு அடையாளமாக ஸ்ரீதரின் "உரிமைக்குரலை" ஓங்கி ஒலிக்கச் செய்த புரட்சி தலைவரின் மனிதநேயம் யாருக்கும் வராது.

    அய்யன் பாடிய "அகப்பட்டுக்கொண்டார் ஸ்ரீதரே, அந்தோ பரிதாபம். ஆடிய நாடகம் புரியவில்லை அடியேன் அனுதாபம்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அதிலும் பரமார்த்த குருவின் சீடர்களை காட்டிலும் மோசமான கைஸ்கள் "சிவந்தமண்ணி"ன் வசூலை "உரிமைக்குரலோ"டு ஒப்பிடுவதை பார்க்கும் போது மூடத்தனம் போய் மொள்ளமாரித்தனம் வந்த மாதிரி தெரிகிறது.

    சென்னையை போட்டவர்கள், அடுத்த ஊரான கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களை ஏன் போடவில்லை. தூத்துக்குடியில் "சிவந்தமண்" ஓட்டிய நாட்களோடு "உரிமைக்குரல்" ஓடிய நாட்களை கம்பேர் செய்திருக்கிறார்கள். எப்போதுமே தூத்துக்குடி வசூலோடு நாகர்கோவில் வசூல் மிக அதிகமாக இருக்கும். இது கைபிள்ளைகளுக்கும் நன்றாகவே தெரியும்.

    ஆனால் "சிவந்தமண்" ணின் நாகர்கோவில் 50 நாட்கள் வசூலை காட்டிலும் தூத்துக்குடி 50 நாட்கள் வசூல் மிக அதிகமாக இருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது முட்டாள் கைஸ்களின் வேலையை. இதேபோல் மதுரை திருச்சி கோவை சேலம் நெல்லை தூத்துக்குடியில் "உரிமைக்குரல்" 50 நாட்கள் வசூல் அய்யனின் "சிவந்தமண்" வசூலை சுனாமி தாக்கி சீரழித்ததை நாம் புரிந்து கொள்ளலாம். எப்போதுமே அவர்களுக்கு எது தோதாக தெரிகிற தோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    அதைப்போல "நீதி"யின் 4 வார வசூல் "ராஜா"வை தாண்டி விட்டதாக போட்டிருப்பதால் "ராஜா"வின் வசூல் கப்ஸா வசூலோ என்ற சந்தேகம் வருகிறது. நெல்லையில் "ராஜா" 2 வார வசூல் பார்வதியில் ரூ46000 என்று போட்டவர்கள் மிகப்பெரிய திரையரங்கமான செள்ட்ரலில் "நீதி"யின் 4 வார வசூல் ரூ53000 என்று படுகேவலமான வசூலை பதிவு செய்திருக்கிறார்கள். படத்தை 5 வது வாரத்திலேயே தூக்கி வீசி விட்டார்கள். இதெல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவி கைஸ்களை ஏமாற்றவா இந்த வசூல் நாடகம்.

    அதே சென்ட்ரலில் 69 ல் வெளியான அடிமைப்பெண் 4 வாரத்திலேயே 1 லட்சத்தை தாண்டி வசூலானது பாலாஜிக்கு தெரியாமல் போய் விட்டதா? இப்படியெல்லாம் ஏமாற்றி கைஸ்களை முட்டாளாக ஆக்கியிருப்பது அவர்களுக்கே புரியாது. அய்யன் நடித்த அத்தனை பிரமாண்ட படங்களும் "கர்ணன்" "சிவந்தமண்" "ராஜராஜ சோழன்" "ராஜரிஷி" உட்பட அனைத்தும் படுதோல்வி படங்களே...........ksr.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •