Page 173 of 210 FirstFirst ... 73123163171172173174175183 ... LastLast
Results 1,721 to 1,730 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1721
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஒருமுறை தஞ்சைக்கு வருகிறார் நம் மன்னவர்.

    இடம் சாமியார் மடம் தெற்கு வீதியில்...திருவையாறு சாலை முதல் கொடி மரத்து மூலை வரை எங்கும் மக்கள் வெள்ளம்....தலைவரின் கார் கோனார் தோட்டம் வழியே வந்து கொண்டு இருக்க வீதி வெறிச்சோடி கிடக்க ஒரு வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டு தலைவர் காரை நிறுத்த சொல்லி வீட்டின் உள்ளே நுழைகிறார்.

    குழந்தை பிறந்து இருபது நாள் ஆன நிலையில் அந்த தாய் தன் வீட்டுக்குள் ஒரு தங்க விக்கிரகம் போல தலைவர் நுழைவதை பார்த்து வியந்து வாய் பேச முடியாமல் திகைக்க.

    அம்மா அழும் குழந்தை உங்கள் குழந்தையா என்று கேட்டு அதை தூக்கி வாசலுக்கு வந்து இருந்த ஒரு மர இருக்கையில் அமர்ந்து குழந்தையை கொஞ்ச துவங்க....

    ஐயா தெரு மொத்த சனமும் உங்களை பார்க்க அங்கே போய் இருக்காங்க...நான் பச்சை உடம்புகாரி என்று போகவில்லை என்று சொல்ல..

    விஷயம் காட்டு தீயை போல பரவ மொத்த ஊரும் மீண்டும் இங்கே ஓடி வர அந்த குழந்தையின் தந்தை மாயவனும் வர.

    அவரை அருகில் தலைவர் அழைக்க மாயவன் மருண்டு மறுக்க காரணம் அவர் குடி போதையில் இருந்தது....தெரிந்து தலைவர் அவரை முறைக்க....

    அவர் காலில் விழுந்து ஐயா என்னை மன்னித்து விடுங்கள் என்று கதற...உங்க கையில் இருக்க என் மகன் கொடுத்து வைத்தவன் அவனுக்கு நீங்களே ஒரு பெயர் இப்போதே இங்கே வையுங்க என்று சொல்ல.

    தலைவர் அண்ணாதுரை என்று பெயர் சொல்லி அழைத்து... மாயவா நான் வந்து இருப்பது மது ஒழிப்பு நிகழ்வில் பேச ஆனா நீ இப்படி இருக்கலாமா என்று கடிந்து கொள்ள.

    தலைவரே இனி என் வாழ்நாளில் இந்த மதுவை தொட மாட்டேன் என்று கதறி அழ தலைவர் அருகில் அவரை அழைத்து நம்பலாமா என்று கேட்டு அவரின் வழிந்த கண்ணீரை தன் கை குட்டையால் துடைக்க.

    அது தவறி கீழே விழ மாயவன் அதை எடுத்து தன் மடியில் செருகி கொள்ள வேண்டாம் அது பழசு என்று தலைவர் சொல்ல.

    உங்கள் கரம் பட்ட இந்த கைக்குட்டை தான் என்னை திருத்தும் ஆயுதம் இது இனி எனக்கே என்று சொல்ல.

    தலைவர் வழக்கம் போல பணத்தை அள்ளி அண்ணாதுரையின் தாயின் கையில் கொடுத்து கை கூப்பி விடை பெற சுற்றி நின்ற மொத்த கூட்டமும் வாய் அடைத்து நிற்க.

    நிகழ்வின் தொடர்வதாக மாயவன் தன் குடி பழக்கத்தை நிறுத்தி 25 ஆண்டுகள் தாண்டி போகின்றன.

    ஆரம்பத்தில் தலைவரை சந்தித்த மாயவன் திடீர் என்று மது அருந்தும் பழக்கம் நிறுத்த அவர் உடல் நிலை பாதிக்க பட மருத்துவர்கள் இப்படி திடீர் என்று நிறுத்துவது ஆபத்து என்று சொல்லியும்.

    என் தலைவருக்கு நான் வாக்கு கொடுத்து விட்டேன்..நான் இறந்தாலும் பரவாயில்லை....இனி மதுவை தொட மாட்டேன் என்று சொல்ல...

    நிகழ்வு தொடர்ச்சி..

    இன்று மாயவனின் மகன் அண்ணாதுரை வாலிப பருவத்தில் இருக்க....தன்னை அண்ணாதுரை என்று அண்ணா அவர்களின் பெயர் சொல்லி அழைக்க விரும்பாமல்

    தன் தந்தை திருந்த காரணம் ஆக இருந்த தலைவர் படத்தை பூஜை அறையில் வைத்து தனது பெயரை தங்க துரை என்று மாற்றி கொண்டு. தலைவர் அன்று விட்டு சென்ற கை குட்டை அதையும் வீட்டில் வைத்து வணங்கி மகிழ்வது நமக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திதானே?

    மது ஒழிப்பு மாநாட்டு நிகழ்வுக்கு சென்ற நம் தலைவர் ஒருவரை ஆவது அன்று திருத்திய செயல் உண்மையில் வரலாற்று நிகழ்வே ஆகும்..

    வாழ்க தலைவர் புகழ்.

    தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.

    மன்னவன் என்றொரு மாயவன் தோன்றிய அடுத்த நிகழ்வில் சந்திப்போம்..நன்றி.

    தரணி போற்ற வாழ்ந்த எங்கள் மன்னவரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..எங்கள் அனைத்து உண்மை உங்கள் நெஞ்சங்கள் சார்பாக...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1722
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் வெற்றித் தலைவர் புரட்சித்தலைவர் கலையுலகில் காலத்தால் அழியாத அற்புத காவியங்களை கொடுத்தவர் நம் புரட்சித்தலைவர். மக்களின் மனங்கவர்ந்த நாயகன் என்றும் புரட்சித்தலைவரே !

    புரட்சித்தலைவரின் காலத்திற்குப் பிறகு இன்று வரை எத்தனையோ நடிகர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் எவரின் படங்களும் சொல்லிக் கொள்வது போல் இருப்பதில்லை ... 10 திரைப்படங்கள் வெளிவந்தால் அதில் ஒன்று இரண்டுதான் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் அப்படி இருக்காது.

    புரட்சித்தலைவரின் அனைத்து திரைப்படங்களுக்கு இன்று வரையில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறை புரட்சித்தலைவரின் ரசிகர்களாக இருக்கும் நாங்கள் விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரையில் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல சரித்திரம் போற்றும் நாயகனாக எவராலும் வரமுடியாது. அதேபோல் புரட்சித்தலைவரைப் போல அற்புதமான, அருமையான, அதிரடியான திரைப்படங்களுக்கு ஈடு இணை எந்த திரைப்படங்களும் கிடையாது.என்றும் என்றென்றும் அனைவராலும் போற்றப்படும் மாபெரும் சரித்திரநாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.......SSub.

  4. #1723
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*பிறந்த நாளை முன்னிட்டு**
    ஞாயிறு* *அன்று* (17/01/2021)
    தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைக்காவியங்கள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * * * * * * * * * * *காலை 10 மணி - பணம் படைத்தவன்*

    * * * * * * * * * * * * * * * மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
    ** * * * * * * * * * * * * * * இரவு* 7 மணி - இதய வீணை*

    ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * * * * * * * *இரவு 9* *மணி -* குமரிக்கோட்டம்*

    சன் லைஃப் - காலை 11 மணி - என் கடமை*

    மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

    ராஜ் டிவி* - பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*

    மெகா 24 - பிற்பகல் 2.30 மணி- வேட்டைக்காரன்*

    * * * * * * * * * * மாலை 6 மணி - நல்ல நேரம்*


    பாலிமர் டிவி - இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*


    மேலும் சில சானல்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள்*
    ஒளிபரப்ப வாய்ப்புள்ளது .

  5. Likes orodizli liked this post
  6. #1724
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட*மறுவெளியீடு*தொடர்ச்சி............... ....
    ------------------------------------------------------------------------------------------------------------------

    15/01/21 முதல்* தாம்பரம் நேஷனல் , &* காஞ்சிபுரம் நாராயணமூர்த்தி*

    * * * * * * * *அரங்குகளில் நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள்*

    தகவல் உதவி :திரு.ராமு, மின்ட்.


    17/01/21 முதல் தூத்துக்குடி மினிராஜ் அரங்கில் எங்க வீட்டு பிள்ளை*

    தகவல் உதவி : திரு. ஜெயமணி , தூத்துக்குடி*

  7. Likes orodizli liked this post
  8. #1725
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அவதார புருஷர் அவதரித்த தினம்..!
    சைதை சா. துரைசாமி
    சென்னை பெருநகர முன்னாள் மேயர்
    -
    ’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம்தனிலே நிற்கின்றார்’ – என்று ’மன்னாதி மன்னன்’ படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்தில் ஓட்டு போடத் தெரியாத ஒரு பரம்பரையைப் பெற்றிருக்கிறார். இன்றும் சமாதியில் காதுவைத்து, எம்.ஜி.ஆரின் கடிகாரச்சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார். இன்றுவரை தியேட்டர்களில் புரட்சித்தலைவரின் பழைய படங்கள் வெளியாகும்போது, எந்த எதிர்பார்ப்புமின்றி ஃப்ளக்ஸ், பேனர் வைத்துக் கொண்டாடும் தொண்டர்களைப் பெற்றிருக்கிறார்.

    எப்படி இவையெல்லாம் சாத்தியமானது என்பதை அவரது பிறந்த தினத்தில் அறிந்துகொள்வோம். திரையரங்குகளில் எல்லோரும் வணிகரீதியாக பொழுதுபோக்கு படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில், புரட்சித்தலைவர் மட்டும் மனிதநேயச் சிந்தனை, நேர்மை, வாய்மை, உழைப்பு, குடும்ப உறவு, முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை வெளியிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆரை இளைஞர்கள் இன்றும் வாத்தியார் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    புரட்சியாளர்
    எம்.ஜி.ஆர். நாடக நடிகர் என்பதால், பாடல்களின் முக்கியத்துவம் அறிந்தவர், அதாவது, சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்டது போன்று சமூக முன்னேற்றத்துக்கும் பாடல்கள் பயன்படும் என்று நம்பினார். தன்னுடைய படத்தின் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அக்கறை செலுத்தினார். 1954ம் ஆண்டு வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து, தன்னுடைய படத்தின் பாடல்களை தி.மு.க.வின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்.
    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் – என்று அன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். தைரியமாகப் பாடியதும், அவரை ஒரு சமூகப் புரட்சியாளராக மக்கள் கொண்டாடினார்கள். அடுத்து, ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்து, அருந்ததி இன மக்களின் குலதெய்வமாகவே மாறினார். அதனாலே இன்றும் பட்டியலின மக்கள் வீட்டுக்கு வீடு எம்.ஜி.ஆரின் போட்டோவை மதுரைவீரன் சாமியாக வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.

    1958-ல் வெளியான, ‘நாடோடி மன்னன்’ படத்தில் திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு சின்னம் அமைத்தார். அதனால் கிராமத்து மக்களும் ரசிகர்களும் தி.மு.க. கொடியை எம்.ஜி.ஆர். கொடியாகவே பார்த்தார்கள். புரட்சித்தலைவரும் தி.மு.க.வை தன்னுடைய கட்சியாகவே நினைத்து வளர்த்தார்.

    ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித்தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது. உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி, தொழிலாளி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவ நண்பன் என்று படங்களுக்கு பெயர் சூட்டி, தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் உணரவைத்தார்.
    தரை மேல் பிறக்க வைத்தான்
    எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான்
    பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் – என்று ’படகோட்டி’ படத்தில் மீனவர்களின் துயரத்தைப் பாடியதன் மூலம் மீனவர்களின் தலைவராகவே மாறினார். பாடல் மட்டுமின்றி, வசனம், காட்சி அமைப்புகளிலும் மக்களின் மனதை தொட்டார். இந்த உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு, அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும்தான்.
    தெய்வப்பிறவி
    தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும், சாதனையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவர். அதனாலே, எம்.ஜி.ஆரை தெய்வப்பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    வெற்றிகரமான சினிமா நடிகராக இருந்தாலும், நாடகக்கலையிலும் தொடர்ந்து அக்கறை காட்டினார் புரட்சித்தலைவர். சீர்காழியில் நடைபெற்ற, ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்த நேரத்தில், மிகப்பருமனான நடிகர் குண்டுமணியை அலேக்காக தூக்கினார். அந்த நேரத்தில் சற்றே சரிந்ததால் கால் எலும்பு முறிந்துவிட்டது. இதையடுத்து, இனிமேல் சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிக்கவே முடியாது என்று வதந்தி பரவியது. ஆனால், அடுத்தடுத்து வந்த ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் படங்களில் முன்னிலும் வேகமாக சண்டையிட்டு வதந்தியை பொய்யாக்கினார்.

    அதேபோன்று எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். பிழைக்கவே மாட்டார்’ என்றும், ‘பிழைத்தாலும் அவரால் பேசவே முடியாது’ என்று எதிரிகள் பேசினார்கள். ஆனால், அந்த சோதனையையும் எம்.ஜி.ஆர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கட்டுப்போட்டபடி எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருக்கும் படம்தான் தமிழகம் முழுவதும் 1967ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒட்டப்பட்டன. அந்த புகைப்படத்தைப் பார்த்து பதறிய மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு அண்ணாவை அரியணையில் ஏற்றினார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரக்காரணம் எம்.ஜி.ஆர். மட்டும்தான் என்பதை அண்ணா உணர்ந்திருந்த காரணத்தால்தான், அவரை இதயக்கனியாக கடைசி வரை போற்றி பாதுகாத்தார்.

    1984ம் ஆண்டு புரட்சித்தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை’, ‘அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால், தமிழக மக்களின் அன்பான பிரார்த்தனைகள் மூலம் அந்த சோதனையையும் வென்று, மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்சியைப் பிடித்தார். இப்படி, ஒவ்வொரு தோல்வியின் போதும் எம்.ஜி.ஆர். வீழ்ந்துவிட்டார் என்று எதிரிகள் நினைக்க, முன்னிலும் வீரியமாக எழுந்து சாதனை படைத்தார்,


    வெற்றி மேல் வெற்றி
    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவரும் புரட்சித்தலைவர்தான். சொத்துக்கணக்கு கேட்டதற்காக தி.மு.க.வில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேற்றப்பட்ட நேரத்தில், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நல்லவர்கள், நாணயமானவர்கள், நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள், நேர்மையாளர்கள், கடவுள் பக்தியும் மனசாட்சியும் உள்ள நடுநிலை மக்கள், அர்ப்பணிப்பு குணமிக்க தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் பக்கம் நின்றனர்.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்த நேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையிலான காங்கிரஸை மீறி வெற்றி பெறமுடியுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல் முதல் அமைச்சராக பதவி வகித்தார். அந்த மக்களும், தொண்டர்களும்தான் இன்றுவரை அ.தி.மு.க. என்ற மாளிகையின் கடகாலாகத் திகழ்கிறார்கள்.
    நாடோடி மன்னன் படத்தில், ‘நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் திட்டம்… நாடு நலம் பெறும் திட்டம்’ என்று பாடியதை நிஜமாக்கிக் காட்டும் ஆட்சி புரிந்த தீர்க்கதரிசி ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘நமது தேவையே பிறருடைய நன்மைதான். மக்களுக்காக நாம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நமக்கு என சேமித்து வைக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டால் பிறருக்காக நாம் எதையுமே சாதிக்க முடியாது’ என்று சுயநலமற்ற மனிதநேய சிந்தனையை மக்கள் மனதில் பதியவைத்தார்.
    ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்கு புரட்சித்தலைவர் தயாராக இருந்தார். ரேசன் அரிசி விலையை புரட்சித்தலைவரின் அரசு ஏற்றவில்லை என்ற காரணத்தால், மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது. உடனே, பொங்கியெழுந்து அண்ணா சமாதியில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தது வரலாறு.
    ஒருமுறை எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே, கைக்குழந்தைகளுடன் சில பெண்களை சந்தித்தார். 'காலையில் சாப்பிட்டீர்களா' என்றார். இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது

    சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பணி பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர். ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர், நெசவாளர், பனையேறுவோர், கட்டிடத் தொழிலாளர், கை வண்டி இழுப்போர், மாட்டுவண்டி ஓட்டுவோர், பீடி சுற்றுவோர், சுமை ஏற்றி இறக்குவோர், மண் பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்துவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நல வாரியங்கள் அமைத்து, குறைந்தபட்ச ஊதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர். முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் புரட்சித்தலைவர்தான்.

    ஜாதி, மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார். ‘உரிமைக்குரல்’ படத்தில், ’தாழ்த்தப்பட்ட ஜாதி உயர்த்தப்பட்ட ஜாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை, என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே ஜாதிதான், அது மனித ஜாதி’ என்று வசனம் பேசுவார். மேலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டியதும், புரட்சித்தலைவர்தான்.

    திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், புரட்சித்தலைவர் தன்னை ஆன்மிக அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அன்னை மூகாம்பிகையை தன்னுடைய அன்னை என்றார். அதேநேரம் அனைத்து மதங்களையும் சமமாகவே மதித்தார். நாகூர் தர்கா அருகே ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’ என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.

    புரட்சித்தலைவர் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கட்சி பேதமின்றி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து மத மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    ‘இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளி விளக்கு’ - என்ற பாடல் தமிழகம் முழுக்க எதிரொலித்தது. மக்களின் நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் நோயில் இருந்து புரட்சித்தலைவர் எழுந்துவந்த காரணத்தால், தமிழகத்தில் ஆன்மிகம் மீண்டும் புதிய எழுச்சி கண்டது.

    ’நாடோடி மன்னன்’ படத்தில், ’வேலை செய்ய முடியாத வயோதிகர்கள், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைக்கவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னதுபோலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார்.

    கொடுத்து சிவந்த கரம்
    நடிகர், முதல்வர் என்பதைவிட, புரட்சித்தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது, அவரது வள்ளல் தன்மைதான்.
    ’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ – என்று ‘பணம் படைத்தவன்’ படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கத் தொடங்கிய காலத்திலேயே, சக கலைஞர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். கொடைத்தன்மை அவரது ரத்தத்திலே ஊறிப்போயிருந்தது.

    இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக்கூடியவர். அதேபோன்று நேரம், இடம் பார்க்காமல் மனதிற்குத் தோன்றியதும் அள்ளிக் கொடுப்பவர். அதனால்தான், ‘அடுப்பில் உலை வைத்துவிட்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன்பு உதவி கிடைத்துவிடும்’ என்று பேசினார்கள். அது உண்மையும்தான்.

    புரட்சித்தலைவரின் வள்ளல்தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்லமுடியும். அவை எல்லாவற்றையும் அடுக்குவதைவிட, 1961ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.

    ‘புயல் மழையால் – சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல, சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்’ என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.

    இப்படியொரு தனிமனிதப் பண்பு, கலைத்திறன், நிர்வாகத்திறன், ஏழைகளிடம் கனிவு, ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கென சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால்தான், புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.

    காவிய வள்ளல் கர்ணன், கடையெழு வள்ளல்கள் போன்று காலத்தை வென்ற கலியுக வள்ளல் புரட்சித்தலைவர் எனும் அவதார புருஷர் அவதரித்த தினம் இன்று. திருக்குறள் முக்காலத்துக்கும் ஏற்ற நூலாக எப்படி திகழ்கிறதோ, அதுபோன்று புரட்சித்தலைவரின் புகழ் எக்காலமும் இம்மண்ணில் வாழும்..........

  9. #1726
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று காலை சென்னையில் புரட்சித் தலைவர் ராமவரம் வீட்டில் அவரைப்பற்றிய "காலத்தை வென்றவன்", ஆவணப் படம் வெளியீட்டு விழா நடக்கின்றது. தலைமை கமல ஹாசன். யாரா இருந்தாலும் அரசியலில் நம் தங்கத் தலைவன் பேர சொன்னாத்தான் வாழ்வு. அந்த அளவு இன்னும் ஜனங்கள் மனதில் புரட்சித் தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதனால் ஓட்டு விழும் என்று ஆசையில் எல்லாரும் நம் தலைவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது நமக்கு பெருமை... காலத்தை வென்று புகழோடு வாழும் ஏழைகளின் தெய்வம், எட்டாவது அதிசயம், பூமிக்கு வந்த மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க....rrn...

  10. #1727
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகராக இருந்த போதும் முதல்வரான பிறகும், எம்.ஜி.ஆர். விரும்பிக் கொண்டாடியது" பொங்கல்" பண்டிகையைத்தான். அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார்.

    அன்று தன்னைப் பார்க்க எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் முகமலர்ச்சியுடன் சந்தித்து, பரிசுப்பணம் அளித்து சந்தோஷப்படுத்துவார். எம்.ஜி.ஆருடன் பொங்கல் பண்டிகை அனுபவம் பற்றி, அவரிடம் உதவியாளர்களாக இருந்த சாமிநாதன், மகாலிங்கம் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அலாதியானது.

    அவர்கள் கூறியதாவது: புத்தாண்டு, தீபாவளியை மட்டும் அல்ல, தன் பிறந்த நாளைக்கூட கொண்டாடாதவர். தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் சின்னதாய் சிரிப்பார்.

    அதேபோல, ஜனவரி 17-ல் அவரது பிறந்த நாளை, அவர் இருந்தவரை கொண்டாடியது இல்லை. முதல்வரான பிறகு, புத்தாண்டில் அதிகாரிகளை சந்திப்பது மரபு என்பதால் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.

    ஆனால், பொங்கல் பண்டிகையை எப்போதுமே உற்சாகமாக கொண்டாடுவார். நடிகராக இருந்தபோது ராமாவரம் தோட்டம், சத்யா ஸ்டூடியோ, இப்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகமாக உள்ள சத்தியபாமா திருமண மண்டபம், திருநகர் கட்சி அலுவலகம் என எல்லா இடத்திலும், அனைத்து தரப்பினரையும் எம்.ஜி.ஆர். சந்திப்பார்.

    அதற்கு முன் முதல் காரியமாக, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை பொங்கலன்று காலையிலேயே சந்திப்பார். இதற்காக, ராமாவரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு நாங்கள் போய்விடுவோம். எல்லாருக்கும் நல்ல துணிமணிகளுடன், நிறைய பணமும், உணவும் தந்து உபசரிப்பார்.

    குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பேசுவார். எங்கள் குடும்பத்தில் பலரும், அவரது புண்ணியத்தில்தான் பட்டு வேட்டி, சேலையைப் பார்த்தோம். சத்தியபாமா திருமண மண்டபத்தில், இன்னும் உற்சாகமாக இருப்பார். ஊழியர்களுக்கு, சாக்கு போட்டி, ஸ்பூன் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்விப்பார்.

    இதேபோல ஸ்டூடியோ, தி.நகர் கட்சி அலுவலகம் சென்று, அங்குள்ளவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். எங்கே போனாலும், எம்.ஜி.ஆரை காண மக்கள் திரண்டுவிடுவர். அவர்களையும் அருகில் அழைத்துப் பேசுவார். அவரைப் பொறுத்தவரை கையில் பணம் இருந்தால், அதை பரிசளித்து செலவிடும் வரை துாங்கமாட்டார் என்றே சொல்லலாம்.

    ஒரு முறை, ஒரு படத்தின் மூலம் சில லட்சம் ரூபாய் கூடுதலாக வந்தது. அந்தப் பணத்தை, வேண்டியவர்களுக்கு தேடித் தேடிக் கொடுத்து உதவினார். எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு, ஒரு நாளுக்கு நூற்றுக்கும் அதிகமான கடிதங்கள் வரும். பல கடிதங்களில் முழு முகவரி இருக்காது. 'எம்.ஜி.ஆர். சென்னை' என்று மட்டுமே இருக்கும்.

    இன்னும் சில கடிதங்களில், முகவரி பகுதியில் அவர் படத்தை மட்டும் ஒட்டி அனுப்பியிருப்பர். எந்தக் கடிதத்தையும் புறக்கணிக்க மாட்டார். படிப்புச் செலவு கேட்டு யாராவது எழுதியிருந்தால், முதல் வேலையாக அதை கவனிப்பார். தன்னால் முடியாத காரியமாக இருந்தால், 'முடியாது' என, நிர்தாட்சண்யமாக மறுக்க மாட்டார். மனதைக் காயப்படுத்தாமல் பதில் எழுதுவார்.

    ஒருவர், தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கேட்டு, அதற்கு வாய்ப்பில்லை என்றால், எம்.ஜி.ஆர். பதில் சொல்லும் பாணியே தனி. 'உங்கள் தகுதிக்கு வியாபாரம் செய்தால் நன்றாக வருவீர்கள். ஆரம்ப செலவிற்கு பணம் அனுப்புகிறேன். வியாபாரம் செய்யுங்கள்' என்று பதில் எழுதி பணமும் தருவார். அப்படி உதவி பெற்று, பின்னாளில் பெரும் வியாபாரிகளாக மாறி, எம்.ஜி.ஆரைச் சந்தித்து ஆசிபெற்றவர்கள் ஏராளம்.

    அதேபோல எம்.ஜி.ஆர். என்றால், அவர் எதுவும் கேட்காமலே மக்கள் உதவிக்கரம் நீட்டியதும் உண்டு. அ.தி.மு.க.வை துவக்கியபோது, கட்சி செலவுக்கு, தங்களால் இயன்ற 1 ரூபாய், 2 ரூபாய் கூட கட்சி நிதியாக தபாலில் அனுப்பியவர்கள் ஏராளம்.

    ஒரு முறை, ஒரு ஏழை உப்பளத் தொழிலாளி, "தலைவரே, என்னால் உங்களுக்கு கொடுக்க முடிந்தது இதுதான்" என்று சொல்லி, மடியில் இருந்த உப்புப் பொட்டலத்தைக் கொடுத்தார். அதையும் அன்புடன் வாங்கிக் கொண்டார். ஊழியர்களை, தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பார் எம்.ஜி.ஆர். அவரிடம் உதவியாளராக இருந்த எனக்கு திருமணத்தை நடத்தி வைத்ததே அவர்தான்.

    எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் பெயரில்தான் அழைப்பிதழே அச்சிடப்பட்டது. ஊழியர்களின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பார். தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தால், மூன்று முடிச்சு போடப்படும் வரை, மாங்கல்யத்தை கையில் பிடித்தபடி இருப்பது அவரது சுபாவம், என் திருமண படத்தைப் பார்த்தால் அது தெரியும்.

    - நன்றி 'தினமலர்' நாளிதழ்..........

  11. #1728
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்_ஜி_ஆர்_ஒரு_சகாப்தம்…

    மக்கள் தலைவரின் கடைசி நாட்கள்…….

    1987 டிசம்பர் 2…

    ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

    டிசம்பர் 5…

    அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

    டிசம்பர் 6…

    சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்… என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை…’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்…’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

    டிசம்பர் 15..

    எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

    டிசம்பர் 20…

    ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா… நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்…’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்…’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

    டிசம்பர் 22…

    சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.

    டிசம்பர் 23…

    மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்…’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்… கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

    டிசம்பர் 24…

    அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்…’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை....ns...

  12. #1729
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் தலைவர் பிறந்தநாளை(Jan17) உலக தமிழ் சங்கம் ,அதனை நிறுவிய தலைவரை போற்றும் வகையில் விழா எடுக்கிறது.அதில் ஆள்பவர்கள் மறந்தாலும் இலக்கிய திறனாளர்கள் தனது கவிதைகளால் புகழாரம் சூட்டுகிறார்கள்.தலைவரை மறந்தவர்கள்,மறைத்தவர் கள் மத்தியிலே மறக்காதவர்கள் புகழாரம் சூட்டி மகிழ்கிறார்கள்.அதில் இரா. ரவி என்னும் இளம் திறனாளர் தனது கவிதையை இங்கு பகிர்கிறார்:

    போற்றிப்பாடுவோம் பொன்மனச்செம்மலை

    கவிஞர் இரா. இரவி

    துயர்தனை துடைத்தல்!

    உடலின் நிறம் மட்டுமல்ல வெள்ளை
    உள்ளத்தின் நிறமும் வெள்ளை

    ஏழைகளைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தவர்
    இன்னலை நீக்கி மனம் மகிழ்ந்தவர்

    மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்தவர்
    மதியம் பசி நீக்கிய நவீன வள்ளலார்

    உணவிற்காகவே பள்ளிக்கு வர வைத்தவர்
    உணவோடு கல்வியைப் புகட்டியவர்

    பொன்மனச் செம்மல் வெறும் பட்டமல்ல
    பொன்மனம் படைத்த செம்மல் அவர்

    பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டையின்
    பாடல் வரிகளுக்கு செயல் வடிவம் தந்தவர்

    கவியரசு கண்ணதாசன் வைர வரிகளை
    கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தியவர்

    ரத்தத்தின் ரத்தமே என்று சொல்லி
    ரசிகர்களின் ரத்தத்தில் கலந்தவர்

    தாய்குலங்களே என்று சொல்லி
    தாய்குலங்களின் மனதில் நின்றவர்

    கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
    கற்கண்டு சொற்களுக்குச் சொந்தக்காரர்

    கடையேழு வள்ளல்களில் வரிசையில் நின்றவர்
    கண்ணீரைத் துடைத்து மகிழ்ந்த மாமனிதர்

    தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியவர்
    தந்தை பெரியாரின் சமூக நீதியை கட்டிக் காத்தவர்

    பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கியவர்
    பேரறிஞருக்குப் புகழ் பல சேர்த்த நல்லவர்

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்தவர்
    கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்

    புன்னகையை எப்போதும் அணிந்தே இருந்தவர்
    புன்னகையை ஏழைகளுக்கு வரவழைத்துப் பார்த்தவர்

    எம் ஜி ஆர் என்ற மூன்று எழுத்து எப்போதும்
    ஏழைகளின் இதயத்தில் மறையாத பொன்எழுத்து!

    *****மதுரை கண்ணன்!...

  13. #1730
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #எம்_ஜி_ஆர் பிறந்த நாள் ஜனவரி 17

    மக்கள் திலகமே...

    நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை ...

    திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்

    திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்

    உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்

    தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்

    தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்

    குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்

    வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்

    வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்

    கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்

    தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்

    உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்

    தரக்குறைவான வசனங்களை பேசாதவர்

    எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்

    இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்

    இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....

    நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து

    எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்

    1.1947- 1977 வரை தமிழ் திரையுலகில் ஒரே முடிசூடா வசூல் சக்ரவர்த்தி

    2.முதல் முதலில் நடிகர் ஒருவர் இயக்குனராக அரிதாரம்

    3.முதல் முதலாக தான் சார்ந்த கட்சியினை ஆட்சி கட்டிலில் இருமுறை அமர்த்திய பெருமை - 1967, 1971

    4. முதல் முதலில் நடிகர் ஒருவர் முதல்வர் ஆனது -1977 மற்றவர்களை போல் வார்த்தையில் சொல்லாமல் நிஜத்தில் தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி ஆனார் .

    5.முதல் முதலில் தமிழகத்தில் முன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்தது

    6.மறு வெளியிடு கள் மூலம் தனது படங்களை இன்று வரை தொடர்ந்து வலம் வந்து விநியோகஸ்தர்களை வாழவைக்கும் ஒரே நடிகர்

    அ முதல் அஃகு வரை

    நாளை அவரது பிறந்த தினம்..........ns...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •