Page 180 of 210 FirstFirst ... 80130170178179180181182190 ... LastLast
Results 1,791 to 1,800 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1791
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவில் படத்தில் ஆந்திர மாநிலம் சித்தூரில் தனது சொந்த இடத்தில் உழைப்பில் நம் தலைவருக்கு அவர் எழுப்பி உள்ள தலைவர் சிலைக்கு வாழை தோரணம் கட்டி

    104 வது பிறந்த நாளில் தன் எளிய குடும்பம் சூழ்ந்து கொண்டாடி மகிழும் அற்புத நிகழ்வு.

    எல்லா நடிகர்கள் அரசியல் தலைவர்களுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் உண்டு..

    ஆனால் நம் தங்க தலைவருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு.

    இவர் பெயர் அவர் நடைத்தைக்கு ஏற்ப பொன்னப்பன்...
    நன்றி பொன்னப்பன் அவர்களே.

    நெற்றி வியர்வை நித்தம் நிலத்தில் விழுந்து உழைக்கும் வர்க்கம் உங்கள் செயல் போற்றி புகழ தக்கது.

    எல்லா வளமும் சூழட்டும் உங்கள் வாழ்வில்...

    உலக எம்ஜிஆர் மன்ற ரசிகர்கள் குழு தலை வணங்கி உங்கள் தலைவர் பக்தியை ஏற்று கொள்கிறோம்.

    வாழ்க தலைவர் புகழ்.

    என்ன ஒரு மகிழ்ச்சி அவர்கள் இல்லத்தில்.

    Ever never again in the universe..
    Mmm.ggg.rrr.............nmi

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1792
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆருக்கே இந்த நிலமை

    உலக எம்ஜிஆர் ரசிகர்களே

    நீங்கள் பார்க்கின்ற இந்த போட்டோ

    எம்ஜிஆரின் நினைவு இடம்

    இது கருணாநிதிஅவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்த காலத்தில்

    முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவுப்படி

    எம்ஜிஆர் சமாதிக்கு மேல் ஒரு குடையை வைத்தார்கள்

    அதைப்பற்றிய கருணாநிதி அவர்கள் குறிப்பிடும் பொழுது

    இந்த நாட்டு மக்கள் எம்ஜிஆர் அவர்களை கொடைவள்ளல் என்று அழைப்பார்கள்

    எம்ஜிஆர் பலபேர்களுக்கு நிழலாக இருந்தார்

    அதற்காகத்தான் என்னுடைய ஆட்சியில் எம்ஜிஆர் சமாதியின் மேல் ஒரு குடையை வைத்துள்ளேன் என்று விளக்கம் கூறினார்

    1987 ஆண்டு எம்ஜிஆர் மரணம் அடைந்த பிறகு ஜானகி அம்மையார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பதவி ஏற்றார்
    பதவி ஏற்றவுடன்

    எம்ஜிஆர் சமாதியை அழகாக கட்டுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள கட்டிடக்கலை இன்ஜினியர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்

    சிறந்த எம்ஜிஆர் நினைவு இல்லம் அமைப்பதற்கு வரைபடம் கொடுப்பவர்களுக்கு முதல் பரிசு

    5 லட்சம் ரூபாய்

    இரண்டாம் பரிசு மூன்று லட்சம் ரூபாய்

    மூன்றாம் பரிசு இரண்டு இலட்சம் ரூபாய்

    டெல்லியை சேர்ந்த 27 வயது கட்டிடக்கலை நிபுணர் இன்ஜினியர் ஒரு வரைபடத்தை சமர்ப்பித்தார்

    ஒரிசாவில் உள்ள சூரியனார் கோயிலை போன்று எம்ஜிஆர் நினைவிடத்தை கட்டுவது அவருடைய திட்டம்

    ஆண்டுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் வரும்

    அந்த ஒரு நாள் மட்டும் ஒரிசாவில் உள்ள சூரியனார் கோயில்உள்ள

    ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சூரியன் அமர்ந்திருக்கும் சிலை மீது

    காலையிலிருந்து மாலை வரை சூரிய ஒளி படரும்

    மற்ற எந்த நாட்களிலும் அந்த சிலை மீது சூரிய ஒளி படாது

    இந்தக் கோயிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசாவில் கட்டி வைத்துள்ளார்கள்

    அதை போலவே

    எம்ஜிஆர் பிறந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதியும்

    எம்ஜிஆர் அவர்கள் இறந்த டிசம்பர் 24ஆம் தேதியும்

    இந்த இரண்டு நாட்களில் மட்டும்

    எம்ஜிஆர் சமாதியின் மீது சூரிய ஒளி படுவதைப் போன்று இந்த கட்டடத்தை கட்டுவதற்கு மனு சமர்ப்பித்திருந்தார்

    இந்த சமாதி கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று அந்த இன்ஜினியர் குறிப்பிட்டிருந்தார

    அதை பார்வையிட்ட அதிகாரிகள் ஜானகி அம்மையார்

    அந்த கட்டிடக்கலை இன்ஜினியர் கொடுத்த வரைபடத்தை தேர்ந்தெடுத்தார்கள்

    அவருக்கு முதல் பரிசு ஐந்துலட்ச ரூபாய் கொடுத்தார்கள்

    அந்தக் கட்டிடக்கலை நிபுணர் திட்டப்படி எம்ஜிஆர் சமாதியை கட்டுவதற்கு ஜானகி அம்மையாரின் அரசு முடிவு எடுத்தது

    இந்த நேரத்தில் ஜெயலலிதா ஜானகி அம்மையாரின் அரசை கலைப்பதற்காக 30 எம்எல்ஏக்களை கடத்திவிட்டார்

    அண்ணா திமுக வில் உள்ள மூத்த தலைவர்களும் மூத்த எம்எல்ஏக்களும் அமைச்சர்களும்

    எம்ஜிஆர் சமாதி கட்டும் வரையில் இந்த ஆட்சி யை கலைத்து விடாதீர்கள் என்று எவ்வளவோ ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்

    ஆனால் ஜெயலலிதா எம்ஜிஆரின் ஆட்சியை எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுகவிழ்த்து விட்டார்

    இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்றார்

    அவர் ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆர் சமாதியின் மீது ஒரு குடையை நிறுவினார்

    அடுத்து ஜெயலலிதா ராஜீவ் காந்தியிடம் கூறி கருணாநிதி அவர்களின் ஆட்சியை கவிழ்த்தார்

    தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்

    ஜெயலலிதா முதலமைச்சராக வந்த காலத்திலிருந்து அவர் மரணமடையும் வரை

    எம்ஜிஆர் சமாதியை ஜானகி அம்மையார் தயாரித்து வைத்திருந்த திட்டப்படி கட்டுங்கள் என்று

    லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்கள்

    நானும் மொத்தம் 85 முறை சர்டிபிகட்ஆப் போஸ்ட் மூலமாக கடிதம் எழுதினேன்

    ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவே கிடையாது

    ஜானகி அம்மையாரின் திட்டப்படி எம்ஜிஆர் நினைவு இல்லம் கட்டப்பட்டிருந்தால்

    ஜனவரி 17ஆம் தேதியும்

    டிசம்பர் 24ஆம் தேதியும்

    எம்ஜிஆர் சமாதியின் மீது சூரிய ஒளி படுவதை பார்ப்பதற்காக இந்திய மக்கள் அனைவரும் சென்னை கடற்கரையில் கூடி இருப்பார்கள் அது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்திருக்கும்

    பாவம் எம்ஜிஆர்

    எம்ஜிஆரின் பழைய ரசிகர்கள் என்று சொல்லப்படுகிற டூப்ளிகேட் ரசிகர்கள்

    இந்த விஷயத்தை பேசுவது கிடையாது
    முகநூல் பதிவில் இதை கண்டிப்பதும் கிடையாது

    பழைய எம்ஜிஆர் ரசிகர்கள்என்று சொல்லப்படுகிற அவர்கள் முகநூலில் ஏன் எம்ஜிஆர் சமாதியை திறம்பட கட்டவில்லை என்று பதிவு போடுவதும் கிடையாது

    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள்

    மழை நேரத்தில்ஒருவன். . ஒரு திண்ணையில் ஒதுங்கினான்

    அந்த வீட்டின் உரிமையாளர் பரிதாபப்பட்டு திண்ணையில் உட்காரும்படி கூறியுள்ளார்

    அந்த வீட்டின் உரிமையாளரை கையை பிடித்து வெளியேதுரத்திவிட்டு

    வீட்டை அபகரித்துக் கொண்டான்

    என்று பழமொழியை தான் நான் கேள்விப்பட்டுள்ளேன்

    ஆனால் எம்ஜிஆரின் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்து விட்டது

    பாவம் வாஜ்பாய் ஆட்சியையும் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார்...Pr.Mnk

  4. #1793
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *MGR ஆட்சி ஒரு சாதனை சகாப்தம். *

    அவர் ஆட்சி காலத்தில் 7 பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. வட்டங்கள் தோறும் பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது. ப்ளஸ் 2 பாட திட்டம் தொடங்கப்பட்டது.

    மதுரையில் 5வது உலக தமிழ் மாநாடு நடத்தபட்டது. பெரியார் எழுத்து சீர்திருத்தம் அமுல்படுத்தபட்டது. கிராம தன்னிறைவு திட்டம் தொடங்கப்பட்டது. கிராமங்கள் தோறும் தாய் ~ சேய் நல விடுதிகள். சத்துணவு திட்டத்தின் மூலம் லட்சம் பேர்க்கு வேலை வாய்ப்பு. மகளிருக்கு தனி பேருந்து வசதி. காவல் துறையில் மகளிர். மகளிருக்கு தனி பல்கலை கழகம். கூட்டுறவு நூற்பாலைகள் ~ சர்க்கரை ஆலைகள். அமைப்புசார தொழிலாளர்களுக்கு ஊதிய விகித நிர்ணயம். புதிய காகித ஆலைகள்.வெடி மருந்து தொழிற்சாலை. ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள். சிமெண்ட் ஆலைகள். ஓசூர் ~ புதுக்கோட்டை பகுதிகளில் தொழிற்பேட்டை. சிறு குறு தொழில் தொடங்க முன்னுரிமை.

    சோத்து பாறை அணை , சண்முகா நதி , நொய்யல் ஆறுகளின் குறுக்கே அணை. தென் மாவட்டங்களில் காற்றாலை மின் திட்டம். தூத்துக்குடி அனல் மின் நிலையம். காடம் பாறை புனல் மின் நிலையம். ஆம்புலன்ஸ் வசதியுடன் நடமாடும் மருத்துவமனை. கூட்டுறவு வங்கி மூலம் கிராம மகளிர்க்கு கடன் வசதி. ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் தட்டுபாடின்றி விநியோகம்.
    குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி.

    தொழில் அமைதி ~ சட்டம் ஒழுங்குக்கு முதலிடம். பால் உற்பத்தியில் இரண்டாம் இடம் பெற்றது. ஓவர் டிராப்ட் வாங்காத மாநிலம் என்று அன்றைய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் பாராட்டை பெற்றது. மக்கள் நல திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு மூலம் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதாக பிரபல பொருளாதார நிபுணர் அமாத்தியா சென் பாராட்டு பெற்றது. தனியார்கள் பல்கலை கழகம் ஆரம்பம். கல்வி முன்னேற்றம்.

    திருத்தப்பட்ட பதிவு

    Ithayakkani S Vijayan with #Venkat, France...

  5. #1794
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான் எம்ஜி ஆர் ரசிகன் மு க ஸ்டாலின் உரை
    அ தி மு க கண்டனம்...

    நான் தான் எம் ஜி ஆரின் நீட்சி
    கமலஹாஸன் உரை

    நான் எம் ஜி ஆர் ஆட்சியை தருவேன்
    ரஜினி காந்து உரை

    பொன்மனசெம்மல் வடிவை நரேந்திர மோடியை கண்டோம்
    பி ஜெ பி (BJP)உரை

    எந்த கட்சி ஜெயித்தாலும் அது எம் ஜி ஆர் வெற்றி

    எந்த தலைவர் வென்றாலும் அது எம்ஜி ஆர் வெற்றி

    எம் ஜி ஆர் புராண கணபதி போல் முதலில் எம் ஜி ஆர் வேண்டும் எல்லோர்க்கும் ...

    வாழ்க எம். ஜி .ஆர் .புகழ்... Arm...

  6. #1795
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையில் அவர்கள் அவ்வாறு கூறுவது பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் அவர்கள் மீது கொண்ட தரமான ஒரு நல்ல மதிப்பு காரணமாகும் ........... பொன்மனச்செம்மல் அவர்களை ஒரு அரசியல் தலைவராக அடையாளம் காணக்கூடாது .......।. அதையெல்லாம் தாண்டி அவர் வானத்தின் கீழ் பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒட்டுமொத்த மானிடர்களின் மானுட நல் வழி காட்டியவார்...... .புரட்சித் தலைவர் அவர்கள் தரத்துடன் வாழ்ந்து முடிந்த மாமனிதர் .......இன்றும் என்றும் அவர் மனித குலத்தின் நல்வழி காட்டி....... பொன்மனச்செம்மல் அவர்களின் பெயரை வானத்தின் கீழே பூமியின் மேற்பரப்பில் வாழும் யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்........... ஆனால் அவரை போல வாழ்ந்து காட்டுதல் அரிது ஆகும்......... ஆமாம் பகைவனை மன்னித்த பண்பாளர் அவர் .......... கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர் ........... வாழ்நாள் முழுவதும் தானதர்மம் செய்து வந்தவர் ........பசியென்று வந்தவர்க்கு புசி என்று கூறியவர் .........புரட்சித் தலைவர் அவர்கள் தனக்கு பிடிக்காதவர்களை ஒருபோதும் திட்ட மாட்டார்......... பழிச் சொற்களை கூறமாட்டார் .........வைதாரையும் வாழவைக்கும் உயரிய பண்பாளர் .........மாற்றுக் கருத்துக் கொண்ட மனிதர்கள் கூட புரட்சித் தலைவரை அவர் பெயரைச் சொல்கிறார்கள் என்றால் புரட்சித்தலைவரின் தரம் எவ்வளவு உயர்வானது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.......... இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் ........புரட்சித் தலைவர் பெயரை சொல்ல கூடாது என்று யாரையும் நாம் கண்டிக்கக் கூடாது ........புரட்சித்தலைவர் பெயரை சொல்பவர்கள் இறைவனின் பெயரை கூறுகிறார்கள்............... வைதாரையும் வாழவைக்கும் புரட்சித்தலைவரின் பண்புகளை நாமும் சொந்த வாழ்வில் கடைப்பிடிப்போம்.......... புரட்சித்தலைவரின் மனித வாழ்க்கை அனைத்து மனிதர்களுக்கும் ஒரு நல்ல பாடமாகும் ..........அவரையே முன்னுதாரணமாக சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் இம்மையில் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் பெருமையும் அடைந்து மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சம் பெறுவர் ........புரட்சித்தலைவர் நாமம் வாழ்த்துதல் வாழ்வாவதே......... ........... பொன்மனச் செம்மலின் நாமத்தால் இப்பூவுலகில் வாழும் சகல மனித இதயங்களையும் வாழ்த்துகின்றேன்........ வாழ்க வளமுடன்............Sri.Kan..

  7. #1796
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே உணவு வழங்கும் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டது அந்த திட்டத்தை மேலும் மெருகூட்டி அதற்கென்று ஒரு தனி துறையையே ஒதுக்கி அதனுடன் மேலும் சத்துப் பொருட்களும் சேர்த்து சத்துணவாக புரட்சித்தலைவர் அளித்து ஏழை குழந்தைகளை பசியின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றினார் ...... புரட்சித் தலைவர் அவர்களின் இந்த மனிதநேய தன்மை சரித்திரத்தில் மறக்க முடியாத ஒன்றாகும் ..........பொன்மனச் செம்மல் அவர்களிடம் எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தது......... அதை பற்றி கூறுவதற்கு இன்றைய உலகில் யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது முக்கியமாக எனக்கு கிடையவே கிடையாது பத்து ரூபாயை 10 முறை எண்ணிப் பார்க்கும் எனக்கு புரட்சித் தலைவரை பற்றி பேசும் தகுதி கிடையாது .........புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் இம்மண்ணில் நீடூடி வாழும்........... பதிவிட்ட சகோதரராகிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்............ வாழ்க வளமுடன்.......Sri.Kan

  8. #1797
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.!”
    - என்.எஸ்.கே.நல்லதம்பி
    https://www.thaaii.com/?p=61589
    *
    எஸ்.பி.அண்ணாமலை

    ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர் என்.எஸ்.கே.நல்லதம்பி.

    மக்கள் திலகத்திற்கு கலைவாணருக்கும் இடையே நெருங்கிய உறவு தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது. 1935 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தான் தமிழில் வெளிவந்த படங்கள் தயாராகின. அதில் பலவற்றை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

    நாடக நடிகர்கள் தான் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நடிகர்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நடிகர்களுக்கான வீடுகள் ஸ்டூடியோ வளாகத்திலேயே இருந்தன. கலைவாணர், பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். போன்ற கலைஞர்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றனர்.

    கலைவாணர் மீது ஈர்ப்பும் பாசமும் மக்கள் திலகத்திற்கு அந்த காலகட்டத்திலேயே உருவாகியது என்று குறிப்பிடலாம். கலைவாணரும் மதுரம் அம்மாவும் தங்களுடைய நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனைக்குரிய கருத்துக்களாலும், பாடல்களாலும் புகழ்பெறத் தொடங்கிய காலகட்டம் அது.

    தன்னுடைய நண்பர், ஆலோசகர், வழிகாட்டி என்ற வகையில் மக்கள் திலகம் கலைவாணரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். “எனக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் நான் தேடிச் சென்று ஆலோசனை பெற்றது கலைவாணர் இடம் தான்!” என்று மக்கள் திலகம் கூறியுள்ளார்.

    கலைவாணரும் எம்.ஜி.ஆரால் பெரிதும் கவரப்பட்டார். கலைத்துறைக்கு அப்பாற்பட்டு இருவருக்குமிடையே இருந்த புரிதல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

    கலைவாணர் சினிமாவில் கூறும் கருத்துக்களும் பாடல் வரிகள் மற்றும் காட்சி அமைப்புகளும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதைக் கூர்ந்து கவனித்த மக்கள் திலகம், “வெற்றி பெற்ற இந்த அணுகுமுறையைத் தம் வாழ்நாள் முழுவதும் திரைப்படங்களிலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    “நடிகர்களாகிய நமக்கு வரும் பணம் என்பது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்து வருவது. அது திரும்பவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும்” என்பது கலைவாணரின் கருத்து. அவர் கடைபிடித்த இந்தக் கொள்கை தன்னை வழிநடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

    1957 ஆம் ஆண்டில் கலைவாணர் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் எங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவர் எங்களுடைய கல்வி, திருமணம் என்று எல்லா நிலைகளிலும் இன்றியமையாத பங்காற்றினார்.

    நான் பள்ளிப் படிப்பு முடித்து மைசூர் மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் பொரியியல் படிப்பதற்கு தேவையான கேபிடேஷன் பீஸ் ரூபாய் 3000 கட்டி என்னுடைய பொறியியல் கனவை நனவாக்கினார் பொன்மனச்செம்மல்.

    1967 – ல் அவர் கொடுத்து உதவிய அந்தத் தொகை, தற்போது பல லட்சங்களுக்கு சமமாகும். அழியாத கல்விச் செல்வத்தை எனக்கு தந்தவர் வள்ளல் எம்.ஜி.ஆர்.

    “செல்வம் நிலையானதல்ல. ஆனால், கல்வி நிலையானது!” என்று நான் கல்லூரிக்குச் செல்லும்போது வாழ்த்தியது இன்றளவும் மறக்க முடியாதது. எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் திலகம் காட்டிய பரிவு, பாசம் என்பது, காலம் கலைவாணர் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றே தோன்றுகிறது.

    1976-ல் எனது திருமணமும் மக்கள் திலகத்தாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அப்போது வாழ்த்திப் பேசியபோது அவர் குறிப்பிட்டார், “மணமக்களாகிய உங்களை ‘அவர்களைப் போல இருங்கள்… இவர்களைப் போல இருங்கள்’ என்று வாழ்த்துவதை விட, நல்ல மனிதர்களாக வாழுங்கள் என்று வாழ்த்தவே விரும்புகிறேன். அதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான பாதையாகும்!” என்றார். அவருடைய வாழ்த்துரை என்றும் என் மனதில் உள்ளது.

    நாகர்கோவிலில் கலைவாணர் கட்டிய மதுர வனம் இல்லம், 1959-ல் ஏலத்துக்கு வந்தது. அந்த வீட்டிற்கான பணத்தைக் கட்டி, வீட்டை எங்கள் குடும்பத்திற்கு மீட்டுத் தந்த வள்ளல் பொன்மனச்செம்மல்.

    சென்னை வாலாஜா சாலையில் இருந்த பாலர் அரங்கம் கட்டடம் 1971-ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் முதல் நிகழ்ச்சியாக என்னுடைய சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் புரட்சித் தலைவர். திருமணத்தில் அவர் பேசும்போது, “இந்த அரங்கம் கலைவாணர் பெயர் தாங்கி பெருமை சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

    தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களால் அப்போதே ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயரிடப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் திகழும் கலைவாணர் அரங்கம், காலம் முழுவதும் என் தந்தையாரின் பெயர் தாங்கி நினைவுச் சின்னமாகத் திகழ்வது எங்கள் குடும்பத்திற்கு பெருமை தரக்கூடியதாகும்.

    மேலும் பெருமை தரக் கூடிய செயல், கலைவாணர் பிறந்த நாகர்கோவிலில் 1967-ல் மக்கள் திலகம் தன்னுடைய சொந்தச் செலவில் கலைவாணரின் முழு உருவச் சிலையை நிறுவியது புரட்சித் தலைவரின் பேருள்ளத்தைக் காட்டுகிறது.

    ஏழைப்பங்காளனாக, வள்ளலாக, கருணையுள்ளம் கொண்டவரான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் இடம் பெற்றிருக்கும்.

    நன்றி: 27.01.2021 தேதியிட்ட குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரை.............

  9. #1798
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முழு மனதுடன் கலப்படமில்லாத சுத்தமான இதயத்துடன் தாங்கள் கூறிய அனைத்து கருத்துகளையும் ஆமோதிக்கிறேன் ............அந்த சினிமா நட்சத்திரங்கள் புரட்சித் தலைவர் அவர்களைப் பற்றி கூறியது உண்மைதான்.......... இதயசுத்தியுடன் அந்த நட்சத்திரங்கள் அவ்வாறு கூறி இருக்கிறார்கள்.....।. மற்ற நட்சத்திரங்கள் கூறாமல் இருக்கின்றார்கள்...... மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.............. பொன்மனச்செம்மல் அவர்களிடம் மற்ற மனிதர்களிடம் இல்லாத ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலாத முடியாத ஒரு வசீகர காந்த சக்தி உண்டு ..........அது இறை தூதர்கள் மற்றும் அவதார புருஷர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள் இவர்களை படைக்கும் போதே இறைவன் கூடவே அவர்களிடம் இந்த காந்த சக்தியை வழங்கி விடுவார் ................பரம்பொருளால் வழங்கப்பட்ட காந்த சக்தி அது அவர்கள் மரணம் பரியந்தமும் அவர்களை தொடரும்......... .. அவர்களிடம் இருக்கும்..............உயிரியல் மின்காந்த சக்தி என்று அதற்கு பெயர்............. வெட்ட வெளியில் இருந்து இந்த காந்த சக்தி அவர்கள் இந்த மண்ணுலகில் வாழும் கடைசி தருணம் வரை அவர்களுக்கு வந்துகொண்டே கொண்டே இருக்கும்.......... பாசிட்டிவ் ஆரோ என்று இவற்றை கூறுவார்கள்........ பகவான் புத்தர் பெருமான்.......... பகவான் இயேசுகிறிஸ்து ..........பகவான் வர்த்தமான மகாவீரர் ..........பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ..........பகவான் ஸ்ரீ வள்ளலார் ராமலிங்க அடிகள் .........பகவான் ஸ்ரீ மகாத்மா காந்தியடிகள் .............பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் ............. ஸ்ரீமதி இந்திராகாந்தி ...........இவர்களிடம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு விவரிக்க முடியாத ஒரு காந்த சக்தி இருக்கும்............ அவர்களின் எதிரே அமர்ந்து இருப்பவர்களை அல்லது அவர்களின் புகைப்படங்களையும் அவர்களின் நினைவுகளை சுமப்பவர்களை. அந்த காந்த சக்தி தன் வசமாக்கி வசியப்படுத்திக் கொண்டு விடும் .............பிரபஞ்ச மண்ணுலகில் இது உண்மைதான் .........முழுமைபெற்ற காந்தசக்தி புரட்சித்தலைவர் அவர்களிடம் இருந்தது............ என்றென்றும் புரட்சித்தலைவர் நாமம் இம்மண்ணுலகில் நிலைத்து நிற்கும் ...............அவர் காலத்தை வென்றவர் ...............அந்த புண்ணியவானை ஒரு அரசியல்வாதி என்ற கோணத்தில் நான் அணுகவில்லை............... அவரை ஒரு கட்சித் தலைவர் என்ற அளவில் அவரை நான் அவரின் எல்லைகளை வரையறுத்து அவரை சுற்றி வட்டமிட விரும்பவில்லை................. வானத்தின் கீழ் பூமியின் மேற்பரப்பில் உள்ள சகல மனிதர்களுக்கும் அவர் ஒரு மானுட குல நல் வழிகாட்டி.........இம் மானுடம் உய்ய பிறந்த மகாத்மா அவர். ஆவார்....... ............ வாழ்க வளமுடன் .........என்றென்றும் புரட்சி தலைவர் அவர்களின் நினைவில் உங்களில் ஒருவன். வி. ஸ்ரீனிவாசன்..........
    பதிவிட்ட சகோதரருக்கு நன்றி............. புரட்சித்தலைவரின் நாமத்தால் அந்த சகோதரரை வாழ்த்துகின்றேன் .।.............. ஆசீர்வதிக்கிறேன்............Sri.Kan

  10. #1799
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே .........இலங்கையில் அவருக்காக சிலையே வடித்தவர் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்கள் ........துரதிஷ்டவசமாக புரட்சித்தலைவரின் புத்திமதிகளை அவர் பின்பற்ற மறுத்துவிட்டார் .......அதுதான் அவரின் வீழ்ச்சிக்கு காரணம் ........பொன்மனச்செம்மல் அவர்கள் யாருக்கு உபதேசம் செய்தாலும் அது அவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்காது ....அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும்........ பொன்மனச்செம்மல் அவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவர்கள் வழங்கிய மரியாதை மிகப்பெரியது........ ஆச்சரியமானது ........நான் எனது வாழ்க்கையின் பின்பற்றும் பின் தொடரும் முதல் மனிதராக இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலத்தில் முதலமைச்சராக உள்ள எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் எம் . ஜி. ராமச்சந்திரன் ., அவர்களையே நினைக்கின்றேன்....... என்னுடைய திரை வாழ்விற்கும் எனது மானசீக ஆசிரியர் மானசீக குருநாதர் அவர்தான் .......எனது அரசியல் பொது வாழ்விற்கும் எனது மானசீகமான ஆசிரியர் மானசீக குருநாதர் அவர்தான் .......அவரை நான் மதித்து போற்றுகிறேன்......... அவரின் காலில் விழுந்து வணங்குகின்றேன்...........
    ....... எமது இதயத்தின் மிக உயர்ந்த பீடத்தில் அவர் இருக்கின்றார்......... இவ்வாறு அவர் பகிரங்கமாக பட்டவர்த்தனமாக பேட்டி கொடுத்தார்...... அது அனைத்து நாளிதழ்களிலும் வந்தது ........ ரொனால்டு ரீகன் அவர்கள் கூறியது. அவரின் ஆத்மார்த்தமான வார்த்தைகள் ஆகும்..।.... இதய சுத்தியுடன் கூறப்பட்ட புனிதமான வார்த்தைகளாகும்............ நமது புரட்சித் தலைவரின் பெருமை இம் மண்ணுலக முழுவதும் பரவி இருந்தது என்பதற்கு இது ஒரு ஆதாரம் ஆகும் .......... இம் மண்ணுலகை இம்மண்ணுலகில் மணற்பரப்பை ஆள்பவர்கள் ஏராளம் ஏராளம் .......மனித இதயங்களின் மனப் பரப்பை ஆட்சி செய்பவர்கள் வெகு சிலரே ........ அந்த வெகு சிலரில் புரட்சித்தலைவர் அவர்களும் ஒருவராவார் ...........நான் நீண்ட காலமாக கூறி வருகின்றேன் .....।.புரட்சித் தலைவர் அவர்கள் ஒரு அவதார புருஷர் என்று ........அது உண்மை என்பதை இப்போது பலரும் உணர்கின்றார்கள் ........வாழ்க வளமுடன்.............. Srinivasan Kannan

  11. #1800
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த ஆய்வு மையம்...
    chief-minister-palanisamy-inaugurated-center-for-research-on-mgr-at-madras-university...
    சென்னை
    சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது .
    இம்மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக உயர் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
    ''முதல்வர் இன்று (22.01.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.
    தமிழக முதல்வர் கடந்த 7.09.2018 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைர விழா ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது, "சென்னைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.
    அந்த வகையில், இப்பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினைக் குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்றும், இம்மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அறிவித்தார்.

    தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பை ஆராயும் முதல் உயர்கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக இம்மையம் விளங்கும். மேலும், எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த பத்து ஆண்டுகளில் அவர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிர்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாகவும் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.
    எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள், எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரை வரலாற்று ரீதியில் ஆராய்தல், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட மேம்பாடுகளை ஆராய்தல், எம்.ஜி.ஆர். பெண்கள், நலிவுற்றோர், பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு ஏற்படுத்திய திட்டங்கள், அவற்றின் வெற்றி பற்றி ஆராய்தல், பொது நிர்வாகத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு குறித்து ஆராய்தல் போன்ற ஆய்வுப் பணிகள் இந்த ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும்''.
    இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...........Baabaa...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •