Page 155 of 210 FirstFirst ... 55105145153154155156157165205 ... LastLast
Results 1,541 to 1,550 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1541
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாங்கள் வணங்கும் ஒரே தெய்வம், தீர்க்கதரிசி, மனோ தத்துவ மேதை, கலையுலக அரசாளும் கலை வித்தகர், திரையுலகில் சுடரொளி, அரசியல் வானில் முடிசூடா மன்னர், ஏழைகளின் ஒளிவிளக்கு, உழைப்பாளிகளின் விடிவெள்ளி, சேவையின் பிறப்பிடம், தர்மத்தின் சொரூபம், அன்னமிட்ட கை, பழுதுபடாத வீரத்திற்கு சொந்தக்காரனான ஒரே புரட்சி நடிகர், உலகின் முதல் தலைசிறந்த ஆணழகன், எங்கள் இதய வீணையை மீட்டும் இதய தெய்வம், தங்க மனம் கொண்ட பொன்மனச் செம்மல், கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் மக்கள் திலகம், மக்களின் உள்ளத்தில் புரட்சிக் கனலை விதைத்த புரட்சித் தலைவன், எங்கள் தீரா காதலர், மக்கள் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட உள்ளங்கவர் கள்வன் ஆன மலைக்கள்ளன், எங்கள் இதயக் கோயிலில் கொலுவீற்றிருக்கும் குடியிருந்த கோயில் எம்ஜிஆரின் முப்பத்தி மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் தூய்மையான பக்தியுடன் ஆண்டவர் எம்ஜிஆரை வணங்கி இதய அஞ்சலி செலுத்துகிறோம்............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1542
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கருணாநிதியை வீழ்த்திய *குணநிதியே* ....!!!

    வரும்பகையழிக்கும் வல்லவரே...!!!

    எங்கள் உயிரினும் இனியவரே...!!!

    எங்கள் புன்னகைகளின்
    புகலிடமே...!!!

    எங்கள் சந்தோசங்களின்
    சந்நிதானமே...!!!

    எங்கள் சுவாசத்தின் மூச்சுக்காற்றே...!!!

    எங்கள் இதயத்தின் இருப்பிடமே...!!!

    நாங்கள் நற்பண்புகளுடன் வாழ வரம் தந்தவரே...!!!

    இரண்டு வரி வடித்து உம்மை
    வாழ்த்திட என் இதயம்
    இடமளிக்கவில்லை தலைவா...

    வார்த்தைகள் தேடி தோற்றுப்போய்
    விட்டேன் உன் மீதான அன்புக்கு முன்னே,

    உன்னை வாழ்த்திட
    வரிகள் மறந்த நிலையில்,

    எவரும் தொடாத உயரங்கள் நீ தொட்டதிற்கு,

    மறைந்தும் மக்கள் மனதில் மறையாமல் வாழும் தலைவா,

    உன் புன்னகை முகம் என்றுமே
    எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.

    நாங்கள் வாழும் வரை
    எங்களுக்குள் வாழ்ந்து
    கொண்டிருப்பாய் தலைவா!!! வரலாறு படைக்கவும்
    வருங்காலத்தை பிடிக்கவும்
    வன்முறை தேவையில்லை

    வளம் இன்றி நிற்கும் மக்களின்
    வளர்ச்சிக்கு வித்திட்டாலே
    வருங்காலம் மட்டும் அல்ல
    வரலாறே உன் பெயர் படிக்கும்

    சோர்ந்து போகும் போதெல்லாம்
    சோதனை தாங்கும் போதெல்லாம்
    ஒற்றை விரல் அசைவில்
    உலகை கட்டிப்போடும்
    உன்னதத்தை கற்றுத்தந்த தலைவா..! தலைமுறை தாண்டிய தலைவர்...

    மனித நேயம் இவரிடம் இருந்துதான் தோன்றியது...



    இவருக்கு சாதி தெரியாது..
    இவருக்கு இனம் தெரியாது..

    எதிரிகளிடமும் அன்பு பாராட்டுவார்..
    இவரைப் பற்றி எழுத பக்கங்கள் பத்தாது...

    # *mgr* என்ற ஒரு வார்த்தையில் அனைத்தும் அடங்கிவிட்டது.. அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்,
    யாராலும் நிராகரிக்கப் படாதவர்,
    #என்றும்_நிரந்தரமானவர்,
    கரைபடாதவர்
    மக்கள் மேல் அக்கரைபடுபவர்


    என்றும் எங்களுக்கு முகவரியாய் இருப்பவர் *முன்றெழுத்து* *அரசியல்* *அரிச்சுவடியை* படிப்போம் .. *புரட்சிதலைவரின்* சாதனை என்றென்றும் நினைப்போம்...������

  4. #1543
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கருணாநிதியும் நீங்களும் சமகாலத்தவர்கள்..

    உங்களுக்கு முன்னரே முதல்வரானவர் கருணாநிதி...

    நீங்கள் மறைந்து 33 ஆண்டுகள் ஆயிற்று

    ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மறைந்தார் உங்கள் சமகாலத்து கருணாநிதி...

    கருணாநிதி மகன் உட்பட கருணாநிதி ஆட்சியமைப்பேன் என யாரும் சொல்வதில்லை...

    நேற்று முளைத்த காளான்கள் கூட புரட்சிதலைவர் ஆட்சி அமைப்போம் என கூற வைத்திருக்கும் மாயாஜால வித்தைக்காரன்* நீங்கள் ..

    மக்கள் மனமறிந்து மக்களுக்காகவே செயல்பட்ட மக்கள் தலைவன் எங்கள் தலைவர் #mgr...

    எம் தலைவனுக்கு புகழஞ்சலி* ������✌️✌️✌️������������*.........arh....... ..

  5. #1544
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது* நினைவு நாளை முன்னிட்டு*
    வெள்ளித்திரையில் வெளியாகின்ற படங்கள்*விவரம் -மறுவெளியீடு தொடர்ச்சி .....
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    23/12/20- திருப்பரங்குன்றம் லட்சுமியில் - குடியிருந்த கோயில் -தினசரி 2காட்சிகள்*

    24//12/20 - திருச்சி -அருணா - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்*

    * * * * * * * * *திருச்சி - முருகன் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்*


    தகவல் உதவி : திரு.கிருஷ்ணன் , திருச்சி.*

    25/12/20 - மதுரை சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 3 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .

    25/12/20- மதுரை பழனி ஆறுமுகம் - நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .


    25/12/20* -கோவை*- டிலைட்*- தாயை*காத்த*தனயன் -தினசரி 2 காட்சிகள்*

    * * * * * * * *கோவை*- சண்முகா - நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .
    Last edited by puratchi nadigar mgr; 25th December 2020 at 12:21 AM.

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #1545
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது*பிறந்த நாளை முன்னிட்டு*தனியார் தொலைக்காட்சிகளில் (24/12/20) வியாழன் அன்று ஒளிபரப்பான*தலைவரின்*திரைக்காவியங்கள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    மெகா டிவி -காலை 9 மணி - படகோட்டி*

    ஜெயா டிவி - காலை 10 மணி - இதய வீணை*

    முரசு டிவி -மதியம் 12 மணி- இரவு 7மணி-நான் ஏன் பிறந்தேன்*

    மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*

    ஜெயா டிவி - பிற்பகல் 1.30 மணி - குமரி கோட்டம்*

    வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*

    மெகா* 24 - பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*

    சன் லைஃப் - மாலை 4 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    ஜெயா மூவிஸ் - இரவு 7 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    புதுயுகம் டிவி- இரவு* 7 மணி - நீரும் நெருப்பும்*

    மெகா 24- இரவு 9 மணி - நல்ல நேரம்*

    மீனாட்சி டிவி -இரவு 9 மணி - விவசாயி*

  8. Likes orodizli liked this post
  9. #1546
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள்.........

    #merry #christmas

    #தெரிந்தவிஷயம் #தான்

    தெரிந்த விஷயமாயிருப்பினும் பொன்மனச்செம்மலின் வரலாறைப் திரும்பத் திரும்ப பதிவிடுவதிலும், அதைப் படித்து ஆனந்தக்கண்ணீர் விடுவதும் தானே #பக்தி...
    செம்மலின் ஒவ்வொரு நிகழ்வும் திகட்டாக்கனி ஆயிற்றே...

    ஒருமுறை தாமஸ் என்பவர் புரட்சித்தலைவரை
    கருணையின் திரு உருவாம் இயேசுநாதர் வேடத்தில் நடிக்கவைக்க விருப்பப்பட்டார்.

    தன்னடக்கத்தின் சிகரமான எம்ஜிஆர், "இயேசுநாதர் வேடத்தில் நான் போய் நடிப்பதா ? எனக்கு அந்தத் தகுதி சிறிது கூட இல்லை..." என்றார்.

    அப்போது தாமஸ் சொன்ன மனதை ஊடுருவும் வார்த்தைகள் தான் இவை...

    "கருணையும், கொடைத்தன்மையும் தேவனின் பெருங்குணங்கள். மனிதநேயத்தின் உச்சம் நீங்கள்.உங்களுடைய கனிவான #பார்வையில் #இறைத்தன்மை குடிகொண்டுள்ளது...

    இத்தகைய மாபெரும் அணிகலன்களைச் சூடிக்கொண்டுள்ள தங்களைத் தவிர வேறு ஒருவரை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது என்னால்..." என்றார்.

    #சரிதானே............bsm ...

  10. #1547
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கால வெள்ளத்தால் கரைக்க முடியாத திருப்பெயர் இது மறைந்தும் மறையாமல் வாழும் மனித மாணிக்கங்களின் இவரும் ஒருவர் என்பதால் இந்தத் திருப்பெயர் நிலைத்து வாழ்கிறது.

    மக்கள் திலகம், புரட்சித்தலைவர்
    என்றெல்லாம் பாமர மக்கள் உளமார அழைத்ததின் பொருட்டே அவரது புகழ் நமது நினைவுகளில் இரண்டறக் கலந்து வாழ்கின்றது.

    அவருக்கு வாரிசு இல்லை என்பார்கள் சிலர் அப்படிச் சொல்பவர்கள் ஆறறிவில் ஒரறிவு போனவர்களாகத்தான் இருக்க முடியும்.

    1) பெற்ற தாய் தந்தையரை பேணிக்காப்பது.
    2) குருமார் சொல் கேட்டு நடப்பது.
    3) விருந்தினர்களை வரவேற்று
    உபசரிப்பது
    4) வறியோர்களுக்கு உதவுவது.

    தலைசிறந்த நற்குணங்களான இவை நான்கையும் எவர் ஒருவர் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்கின்றனரோ அவர்களெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் தான் என்பதைத் திண்ணமாய்க் கூறலாம்

    மங்காப் புகழ் உடைய அந்த மாமனிதன் தனது வாழ்வில் இவை அனைத்தயும் கடைப்பிடித்து வாழ்ந்தார் (இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார் )

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........vrh...

  11. #1548
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #Dedicated #to #True #MGR #devotees.........

    #எம்ஜிஆர் #எங்குதான் #வாழ்கிறார்???

    23.12.2018 அன்று நடந்த சம்பவம்...

    புகைப்படத்திலுள்ள பேருந்து ஒட்டுநர்
    யார் என்று உங்களுக்கு தெரியுமா!
    எனக்கும் தெரியாது!
    இவர் பெயரும் தெரியாது...!!!

    ஆனால் இவர் ஒரு தலைசிறந்த எம்ஜிஆர் பக்தராக இருப்பார் என்பது மட்டும் தெரியும்...

    சொல்கிறேன்...

    இரு தினங்களுக்கு முன் சென்னை மாநகரப்பேருத்தில் சென்றுகொண்டிருந்தேன்... கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணம்... பேருந்து நிலையத்திலேயே ஏறிவிட்டேன்...டிரைவர் தமது சீட்டில் ஏறி அமர்ந்தார். பேருந்தை ஸ்டார்ட் செய்த அடுத்த விநாடியே, 'செட்' ஐ ஆன் செய்தார்....'வாத்தியார் பாட்டு' ஒலிக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக எல்லாமே வாத்தியார் பாட்டு தான்..அதுவும் 'ஸோலோ' வாகப் பாடிய கொள்கைப்பாடல்கள் மட்டுமே...காதல் பாடல் ஒன்று கூட கிடையாது.

    ஒவ்வொரு வரிக்கும் அந்த ஓட்டுநர் தனது தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக்கொண்டே இருந்தது அவர் நிச்சயமாக தூய்மையான எம்ஜிஆர் பக்தராகத்தான் இருப்பார் என்பதைப் பறைசாற்றியது...

    அதேநேரம் பேருந்தையும் லாவகமாகவும் நேர்த்தியாகவும், துல்லியமாகவும் ஓட்டிவந்தார்.

    சிறிது கூட்டமாக இருந்ததால் என்னால் அந்த பேருந்து ஓட்டுநருடன் பேசமுடியவில்லை...அவர் பெயரும் தெரியவில்லை...

    இறங்குமுன் சற்றுத் தள்ளியிருந்தபடி அவரை போட்டோ எடுத்தேன். அவ்வளவே...!

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாத...
    ஆடம்பரமோ, சுயவிளம்பரமோ தேடிக்கொள்ளாத...
    வாத்தியார் பெயரைச்சொல்லி ஏமாற்றி சம்பாதிக்காத...
    இதுபோன்ற எளியோரின் நெஞ்சத்தில் தான் எம்ஜிஆர் வாழ்கிறார் என்பதை சத்தியமாக என்னால் சொல்லமுடியும்...!!!...BSM...

  12. #1549
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முன்னாள் முதலமைச்சர்
    MG. ராமச்சந்திரன் அவர்கள் சினிமாவிலும், அரசியலிலும் சாதித்தது கொஞ்சநஞ்சமல்ல. இந்த பூவுலகை அவர் விட்டு பிரிந்து இன்றோடு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பொன்மனச்செம்மலின் நீங்க நினைவை சற்று நினைவு கூறுவோம்.எம்.ஜி.ஆர் அவர்கள் கையசைத்தாலே போதும் மக்களின் ஓசை வானை முட்டும், இறந்த பின்னும் மக்கள் மனதில் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் !!

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம் !! உயர்ந்தாலும்
    தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் !!

    என்ற பாடலின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் தான் மாபெரும் சகாப்தமான MGR அவர்கள்.

    MG. இராமச்சந்திரன் அவர்கள் இலங்கையில் கண்டிக்கு அருகே உள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன்மேனன் - சத்தியபாமா என்ற தம்பதிக்கு 5வது மகனாக பிறந்தார்.

    அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். பின்னர் திடீர்னு ஒருநாள் தந்தை இறந்துவிடவே குடும்பத்தை எப்படி நடத்துவது என கேள்வி குறியானது.

    அதனால் அவர்கள் கும்பகோணத்தில் குடிபெயர்ந்தனர். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாததால் ராமச்சந்திரன் அவர்கள் தனது சகோததருடன் நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நாடகம் நடிக்க தொடங்கினார்.

    அதில் பெற்ற அனுபவத்தால், தனது கடின உழைப்பு காரணமாக திரைப்பட துறைக்கு வரும் வாய்ப்பை பெற்றார். பின்னர் 1936ல் சதிலீலாவதி எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார் .

    ஆனால் 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படத்திற்கு பின்னரே அவர் பெரும்நடிகராக உயர்ந்தார். குண்டடிபட்டாலும் அவரது நடிப்பின் வீரியம் சற்றும் குறையவில்லை. அவர் நடிப்பை மக்கள் ரசிக்க தொடங்கினர்.

    அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் மக்கள் கொண்டாடினார்கள். 1971ம் ஆண்டில் அகில இந்திய சிறந்த நடிகராக விளங்கிய MGRக்கு மத்திய அரசு "பாரத ரத்தனா " விருதை வழங்கி பெருமை படுத்தியது.

    திரைப்படங்களிலும் மக்களுக்கு கருத்துக்கூற கூடிய படங்களிலேயே நடித்தார். பெரும் மக்களின் ஆதரவை பெற்று

    1977ல் நாட்டின் முதலமைச்சரானார். இவர் ஆட்சிக்காலத்தில், அண்ணாவால் கொண்டுவரப்பட்ட மதியவுணவு திட்டத்தை, சத்துணவாக விரிவு படுத்தினார்.

    இலவச சீருடை, இலவச காலனி, இலவச பாடநூல் என பள்ளி குழைந்தைகளுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தார்.

    மகளிருக்கும், தாலிக்கு தங்கம், விதவை பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி என பல திட்டங்களை தீட்டி புரட்சி தலைவனாக தோன்றினார்.

    தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்த இவர், தனது 70 வயதில் கடும் நோய்வக்குள்ளாகி சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்,1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி மூச்சுப்பிரச்சனை காரணமாக மண்ணை விட்டு பிரிந்தார்.

    முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்ததால் இவரின் பூவுடலை தமிழக அரசு சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்தது.

    அவருக்காக அங்கு தாமரை மலர் விரிந்த நிலையில் உள்ள கட்டமைப்புக்கு நடுவே அவருக்கு சமாதி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது....Valliammai...

  13. #1550
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அது ஒரு மாலை நேரம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருட்டிக்கொண்டு வருகிறது.எந்த நேரத்திலும் அடை மழைக்கான அறிவிப்பு வரலாம்.வழக்கம்போல தனது கை ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு அந்த வயதானவர் வீடு நோக்கி விரையும் அவசரத்தில் இருக்கிறார்.சரியாக கோடம்பாக்கம் ரயில்வே கிராஸில் அவர் சிக்கிக்கொள்கிறார்.பிடித்தது அடை மழை.ரிக்ஷாவின் கூரையை இழுத்துப்போட்டும் அவர் தொப்பலாக நனைந்தார்.குளிரில் உடம்பு நடுங்க கூனிக் குறுகி ரிக்ஷாவில் தஞ்சமான முதியவரின் அவஸ்தையை ஏற்றப்பட்ட கார் கண்ணாடி வழியாக இரு கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தது.ரயில் வரும் சத்தம்.வரிசையாக வண்டிகள் நகர்ந்தபோதும் அந்த இரு விழிகள் மட்டும் அந்த ரிக்ஷாவையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தது. விழிகளுக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம்.தனது படகு போன்ற ப்ளைமூத்தில் துளி கூட நனையாமல் பயணம் செய்தபோதும் மனது மட்டும் அந்த ரிக்ஷாக்காரரையே நினைத்துக்கொண்டிருந்தது.கதிரேசா மூ.னா.கானா வீட்டுக்குப் போ. டிரைவரிடம் சொல்ல அந்த 2248 ப்ளைமூத் வழி மாறிப்போனது..அறிஞர் அண்ணா முதல்வராக கலைஞர் அமைச்சராக இருந்த நேரமது.

    நேராக கலைஞரிடம் வந்து நாம ரிக்ஷாக்காரர்களுக்கு ஏதாவது செய்தாகணும்.என்ன செய்யணும்?. மெட்ராஸ் மழையில இனிமேல் எந்த ரிக்ஷாக்காரரும் நனையக் கூடாது.அண்ணாகிட்ட சொல்லி ஒரு டேட்ஸ் வாங்குங்க. சிட்டில இருக்கிற எல்லோருக்கும் மழை கோட்டு குடுக்கிறோம்.மடமடவென காரியங்கள் ஆக நூறு மெஷின்கள் ராப்பகலா இயங்க 3500 மழைக் கோட்டு ரெடி.அப்போது தான் அறிமுகமான ப்ளாஸ்டிக் கோட்.தார்பாய் துணியெல்லாம் ஒத்து வராததால் முழு உடலையும் மறைக்கும்படி வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்ட கோட்டுக்களை கை ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கும் விழாவாக நுங்கம்பாக்கம் லேக் ஏரியா கிரவுண்டில் அண்ணா தலைமையில் அனைவருக்கும் வழங்கிய பிறகு தான் மக்கள் திலகம் நிம்மதியானார்.எவ்வளவோ பட்டங்கள் அவரை அலங்கரிக்க இந்தப் பட்டம் மட்டும் அவரை விடாமல் ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதற்கான விடை தேடிப் புறப்பட்டபோது சட்டென மனதில் தோன்றிய நினைவு இது தான்.மக்கள் திலகம் என்ற அடை மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவரது நினைவு தினம் இன்று.

    ஒரு சினிமா நடிகர் அன்றாடம் எவ்வளவோ மனிதர்களை பொது வெளியில் கடந்துபோகிறார்.ஆனால் யாருக்குமே வராத பரிதாபம் ஒருவருக்கு மட்டும் வருகிறது என்றால் அவரை நாம் வெறும் நடிகராக எப்படிப் பார்ப்பது?. எம்.ஜி.ஆர்.என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் உதடுகள் முதலில் கவனத்தில் கொள்வது அவரது மனித நேயத்தைத் தான்.அரை நூற்றாண்டு காலமாக திரைத்துறை அரசியல் என இரு வேறு தளங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக ஒருவர் விளங்கினார் என்றால் அவர் கடந்து வந்த பாதை எவ்வளவு சுவாரசியமான பாதையாக இருந்திருக்கும்.திரைப்பட நடிகர்களிலேயே அதிகமதிகம் பேசப்பட்ட பெயர் எம்.ஜி.ஆர்.அதிகமதிகம் எழுதப்பட்டவரும் அவர் தான்.காரணம் தான் பங்கேற்ற இரு துறைகளிலும் அவர் வெற்றிக்கொடி நாட்டியது மட்டுமல்ல பல வியக்க வைக்கும் சம்பவங்களுக்கும் அவர் சொந்தக்காரர்.

    ஒரு திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக டைட்டில் கார்டு போடுவார்கள்.மற்ற நடிகர்கள் படங்களுக்கு போடும் டைட்டிலுக்கும் மக்கள் திலகம் படங்களின் டைட்டிலுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.படத்தின் தலைப்பு தொடங்கி இயக்குநர் பெயர் வரும் வரை எத்தனை பெயர் வருகிறதோ அத்தனை பெயர்களிலும் எம்.ஜி.ஆர். இருப்பார்.எங்கோ ஒரு மூலையில் வரும் துணை நடிகரிடம் கேட்டால் அவராலதாங்க நான் இங்கே வந்தேன் என்பார்.டெக்னீஷியன்களிடம் கேட்டால் அவரைப் பற்றி வண்டி வண்டியாகச் சொல்வார்கள்.தனக்குத் தந்த வேலை நடிப்பு மட்டுமே என்று அவர் இருந்திருந்தால் அநேக வீடுகளில் அடுப்பெரிந்திருக்காது.தனக்கு கிடைத்த சம்பளத்தோடு அவர் ஒதுங்கியிருந்தால் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்.சினிமா என்ற தொழிற்சாலையில் பல்லாயிரம் தொழிலாளர்களின் பிரதிநிதியாக இருந்தவர் மக்கள் திலகம் என்பதில் தான் அவரது மனித நேயம் மிளிர்கிறது.

    விக்கிரமாதித்தன் படம் முடிந்து விட்ட நேரத்தில் தான் மனைவி சதானந்தவதி இறந்தார்.துக்கத்தில் துவண்டிருந்த நேரத்தில் அவரைக் காண ஸ்டண்ட் கலைஞர்கள் வந்தார்கள்.அந்த நேரத்திலும் வந்தவர்களிடம் உங்களுக்கு பணத்தை செட்டில் பண்ணினார்களா என்று தான் கேட்டார்.தயங்கிய அவர்கள் இல்லையென்றது தான் தாமதம் அந்த கம்பெனிக்கு போனைப் போடு என்றார்.தயாரிப்பாளரைப் பிடித்து காய்ச்சியெடுத்தார்.கட்சி ஆட்கள் கலையுலக பிரமுகர்கள் என நிறைந்திருந்ததைப் பற்றி அவர் கவலையேபடவில்லை.சக தொழிலாளர்கள் மீது எந்த நேரத்திலும் அக்கறை கொண்டவர் என்பதற்கு இம் மாதிரி ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்.

    மக்கள் திலகம் வாழ்க்கை வரலாறு ஒரு திறந்த புத்தகம்.அவரைப் பற்றி அவரே எழுதியது போக லைட் பாய் முதல் இயக்குநர் வரை அவரோடு பணியாற்றியதைப் பற்றி சொன்னது தான் அதிகம்.படிப்பவர்களுக்கு சில நேரம் மிகையாகத் தெரியலாம்.ஆனால் அது உண்மை என்பதை கூட இருந்தவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.பலருக்கு அவர் உதவியதை யாருக்கும் சொல்லாதே என உறுதிமொழி வாங்கிவிட்டுத் தான் உதவுவார்.ஆனால் உதவி பெற்றவர்கள் பிற்காலத்தில் அதை மீறிய வரலாறு அவருடையது மட்டும் தான்.கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரான ஜீவானந்தம் வீடு தாம்பரத்தில் இருந்தது.ஒரு முறை ஷூட்டிங் முடிந்து எதேச்சையாக அவரை சந்திக்க அவர் வாழ்ந்த வீட்டைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.பேசிவிட்டு விடைபெறும்போது கூட இருந்த ஜீவாவின் அண்ணன் மகன் மோகன் காந்திராமனிடம் நாளைக்கு தோட்டத்திற்கு வா என்றார்.என்ன செய்வியோ தெரியாது சித்தப்பாவை கொஞ்ச நாளைக்கு வேறு வீட்டில் கொண்டு போய் வை.இப்போ இருக்கிற வீட்டை நாம கட்டுறோம். விஷயம் வெளியே தெரிஞ்சா தொலைச்சிடுவேன்.செங்கல் செங்கல்லாக வளர்வதை அக்கறையுடன் விசாரித்தார்.ஜீவா இறக்கும் வரை அவருக்கே தெரியாது அது எம்.ஜி.ஆர்.கட்டித்தந்த வீடு என்று.உலகத்திற்கே தெரியாது மோகன் காந்தி ராமன் சொல்லும் வரை.

    சினிமா நடிகர் என்ற பிம்பத்தைத் தாண்டி எம்.ஜி.ஆரைத் தேடினால் மனிதருள் மாணிக்கமாக அவரைப் பார்க்கலாம்.இதற்காக எங்குமே அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டதில்லை.கூட இருந்தவர் சொல்லக் கேட்டது தான்.அம்மே வெஷப்பு.தனது தாயிடம் பசிக்கும்போது குரல் கொடுப்பார்.அந்த அம்மா உள்ளேயிருந்து இருடே கணேஷூ வரட்டும் என்பார்.வால்டாக்ஸ் ஒற்றை வாடையில் நடிகர் திலகம் நடித்து முடித்து வரும் வரை பசியோடு காத்திருந்த எம்.ஜி.ஆரை இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்.?. இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு இடத்தில் கூட எம்.ஜி.ஆர் விளம்பரப்படுத்தியதில்லை.செய்தியைச் சொன்னது சாட்சாத் நடிகர் திலகம் தான்.அவர் சின்ன அண்ணாமலையிடம் சொல்லி அவர் மக்களுக்குச் சொன்னது.இரவு நேரங்களில் பல ஊர்களுக்கு நாடகம் நடிக்கப் போகும்போது பின் சீட்டில் மக்கள் திலகத்தின் தோளில் சாய்ந்து தான் நடிகர் திலகம் கண்ணயர்வார்.அப்படிப் போகும்போது உளுந்தூர் பேட்டை தாண்டி ஒரு விபத்தை சந்தித்தோம் என டிரைவர் கதிரேசன் சொல்லித் தான் நமக்கே விஷயம் தெரியும்.

    திரையுலகில் அவருக்கென்று தனி பாணி அவரே ஏற்படுத்திக்கொண்டது.தமிழ்த் திரையுலகில் வெகுஜன சினிமாவை அறிமுகப்படுத்தியது அவர் தான்.சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர்.படங்கள் அலர்ஜி தான்.உண்மையான சினிமா இவரால் தான் திசை மாறிப் போனது என்பது அவர்களது குற்றச்சாட்டு.அது உண்மை தான்.மலையாள வங்காளப் படங்களை ஒப்பிடும்போது ஒரிஜினல் சினிமா இவரால் தான் காணாமல் போனது.ஆனால் உழைத்துக் களைத்துப்போய் வரும் ரசிகனின் ஆதர்ஷ நாயகன் அவர் தான்.அவரைப் போன்றதொரு என்டர்டைனர் இது வரை அமையவில்லை.அவரது அடியொற்றித் தான் பிற்கால நடிகர்கள் தங்களை வளர்த்துக்கொண்டார்கள்.திரையுலகில் மிகப் பெரிய மாஸ் ஹீரோ என்ற அடை மொழியை அவர் தான் ஆரம்பித்து வைத்தார்.இப்போதைய பன்ச் டயலாக்குகளின் முன்னோடி அவர் தான்.அவருக்கென்றே உழைத்தார்கள் வசனகர்த்தாக்கள் .பாத்திரங்களைத் தாண்டி காட்சிகளில் அவர் தான் தெரிவார்.ரசிகர்களின் பல்ஸ் தெரிந்த ஒரே நடிகர் அவர் தான்.அவரது கேரக்டர்கள் எளிமையானவர்கள்.தொழிலாளி ரிக்ஷாக்காரன் படகோட்டி மீனவ நண்பன் விவசாயி காவல்காரன் என எளிய மனிதர்கள்.

    சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்கு நகரும் கதைக் களம் அவருடையது.படம் பார்க்கும் சாதாரண ரசிகன் அவரில் தன்னையே காண்பான்.எவ்வளவு தான் அதர்மம் ஆட்டம் போட்டாலும் கடைசியில் வெல்வது தர்மம் தான்.அதற்காக தனக்கு சமமான வில்லன்களையே அவர் படைப்பார்.சமூக அவலங்கள் அவர்கள் மூலமே வெளி வரும்.அவரது நடிப்பு எல்லாமே எதார்த்தமாக இருக்கும்.படகோட்டியில் ஒரு இரும்புக் கம்பியை வளைப்பார்.உண்மையில் அது ஈசியாக வளையக் கூடியது தான்.மிகவும் சிமப்பட்டு கை நரம்புகள் கழுத்து நரம்புகள் புடைக்க அவர் வளைக்கும்போது நாமே வளைப்பது போல் இருக்கும்.நாடோடியில் ஒரு காட்சி .சிறை வைக்கப்பட்ட இடத்திலுள்ள பூட்டை உடைக்க வேண்டும்.கைக்கு மட்டும் க்ளோஸப் கொடுங்கள் என்றார்.கை நரம்புகள் புடைக்க அந்த க்ளோஸப் அருமையாக வந்திருக்கும்.எத்தனையோ நடிகர்களிடம் நான் நடித்திருந்தும் எதார்த்தமான நடிப்பை நான் எம்.ஜி.ஆரிடம் தான் பார்த்தேன்.ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த வைஜயந்தி மாலா சொன்னது.நடிப்பில் மைம்ஸ் என்றொரு பாணி உண்டு.இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டி நடிக்கும் மோனோ ஆக்டிங்.இதை எம்.ஜி.ஆர்.அட்டகாசமாக செய்வார்.மாட்டுக்கார வேலனில் வரலட்சிமியிடம் முரண்டு பிடிக்கும் மாட்டை எப்படி அடக்க வேண்டும் என்பதை ஒரு டெமோவாக செய்து காட்டுவார்.குடியிருந்த கோயிலில் தனக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு என்பதை பண்டரிபாயிடம் நாசூக்காக காட்டும் மைம்ஸ் அட்டகாசமாக இருக்கும்.பெண்கள் காட்டும் நளினத்தை அழகாக பல படங்களில் செய்துகாட்டுவார்.

    அவரது சண்டைக் காட்சிகள் தனித்துவமானவை.எடுத்தவுடன் கை நீட்டமாட்டார்.அதே நேரத்தில் எதிரிக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே தருவார்.இங்கே ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள்.இது ஒரு அருமையான சைக்காலஜி.எதிர்பார்ப்பை எகிற வைப்பது.மூன்றுக்கு மேல் சான்ஸே இல்லை என்பதை முன் கூட்டியே தீர்மானிக்கும் ரசிகர்கள் தான் அவரது முழு பலம்.உதட்டோரம் ரத்தத்தைப் பார்த்தால் அவரை விடக் கொதிப்பது அவரது ரசிகன் தான்.ஒளி விளக்கில் உழைத்துச் சம்பாதித்த காசுகளை மனோகரன் தட்டிவிடும்போது தான் அவர் உஷ்ணமாவார்.திருடனாக இருந்தபோது கரன்ஸி நோட்டுகளை கண்டவர் இந்த காசுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்திருப்பார்.உழைப்பின் மகத்துவத்தை வெறும் சண்டைக் காட்சியில் கொண்டு போய் வைத்திருப்பது உழைக்கும் ரசிகனுக்கு உற்சாகத்தை தந்திருக்கும். சிரித்துக்கொண்டே சண்டையிடும் ஒரே நடிகர் அவர் தான்.மூர்க்கமாக சண்டை போடும்போது கூட அவருக்கு வேர்க்காது என்கிறார்கள் சக கலைஞர்கள்.நாங்கள் தொப்பலாக நனைந்தபோதும் உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே என கேட்டால் உங்க ஆக்ரோஷத்தை வெறும் நடிப்பா காட்டினால் உங்களுக்கும் வேர்க்காது என்பார்.எங்களுக்கு கடைசி வரை அது வரவில்லை என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.அவரது சண்டைக் காட்சிகளில் அதிகமாக லாக்கிங் என்ற பிடி அதிகமாக இருக்கும்.மல்யுத்தக் கலைஞர்களுக்கு மட்டுமே இது அமையும்.பல படங்களில் அட்டகாசமான லாக்கிங் முறைகளை பயன்படுத்திய ஒரே நடிகர் அவர் தான்.இதயக் கனியில் ஜஸ்டினை அவர் லாக் செய்தபோது அந்த ஆஜானுபாகு திணறுவதை தத்ரூபமாக பார்க்கலாம்.சராசரி உயரம் தான்.கச்சிதமான உடல் அமைப்பு தான்.ஆனால் எதிராளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மண்டியிடும் வித்தை அவருக்குத் தெரியும்.

    சண்டைக் காட்சிகளில் கேமிரா கோணங்களை அவர் தான் அமைப்பார்.இயக்குநர் ஒதுங்கிக்கொள்ள படச்சுருள்கள் எடிட்டிங் டேபிளுக்கு வந்த பிறகு விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும்.அறையெங்கும் கும்மிருட்டு.ஒரே ஒரு லைட்டிங்.அது டார்ச்சாக இருக்கலாம்.மேலே தொங்கும் விளக்காக இருக்கலாம்.அட்டகாசமாக காட்சிகளை அவரே அமைப்பார்.ரிக்ஷாக்காரனில் பெரிய டேபிளில் சுருள் வாள் சுற்றும் காட்சி.கேமிராவை நிறுத்தாதே என சொல்லிவிட்டு சுற்ற ஆரம்பிப்பார். சத்தியமாக ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கே சவாலான காட்சியது.வியக்க வைக்கும் கேமிரா கோணங்களில் எம்.ஜி.ஆரை வியப்போடு பார்க்கலாம்.ரிக்ஷாவில் அமர்ந்துகொண்டே சிலம்பம் ஆடிய ஒரே நடிகர் அவர் தான்.கடைசி கட்ட மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் ஒரு தர்பார் வாட் சண்டை.இளைஞர்களுக்கே சவால் விடும் காட்சியது.அறுபது வயதை நெருங்கும்போதும் அவர் காட்டிய சுறுசுறுப்பு அத்தனையும் தத்ரூபம்.அதே சுறுசுறுப்பை பாடல் காட்சிகளிலும் காணலாம்.

    உள்ளமட்டும் அள்ளிச் செல்லும் மனம் வேண்டும் என பாடிவிட்டு அதை சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும் என்ற வரிகள் அவருக்கு மட்டுமே பொருந்தும்.நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ..ஓ..உற்சாக வெள்ளத்தில் ஒரிஜினாலிடி இருக்கும்.ஓராம் மாசம் உடலது தளரும் ஈராம் மாசம் இடையது மெலியும். படிப்படியாக பத்து மாசமும் பக்குவமாக வந்திருக்கும்.நீயும் நானும் பாடிய பாட்டை பாடிப் பாடி என குழறலோடு பாடும்போது பாடி லேங்குவேஜ் அருமையாக வந்திருக்கும்.உதட்டுச் சிவப்பெடுத்து படிக்க முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ சிருங்கார ரசத்தை சிந்தாமல் தந்திருப்பார்.காதல் காட்சிகளில் கைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதன் இலக்கணத்தை இவரிடம் தான் கற்க வேண்டும்.வேட்டைக்காரனில் மஞ்சள் முகமே வருக பாடலில் நடிகையர் திலகத்தோடு ஒரு காவியமே படைத்திருப்பார்.

    இன்னொரு வானம் இன்னொரு நிலவு தான் லதாவின் முதல் ஷாட்.ரோமியோ என்றபடியே படியில் இறங்க வேண்டும்.கீழே என்னம்மா தேடுறே என்றார் நீலகண்டன்.அப்போது தான் புரிந்தது அவர் ரோமியோ பார்த்தபடியே வரவில்லை என்பது.முதல் நாள் காட்சி.சுற்றிலும் ஏகப்பட்ட கலைஞர்கள்.மெதுவாக தோளில் கை போட்டபடி அவரை தனியாக அழைத்து பயமா இருக்கா?. ஆமாங்க.ஹீரோவை மாத்திடலாமா?. நெர்வஸை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற லலிதா மஹாலில் லதா வெளுத்து வாங்கினார்.கொள்கைப் பாடல்கள் என தனிப் புத்தகம் போட்ட ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்.தான்.நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று ஏழை முகம் பார்த்துக்கொள்வான்.வாழ்வில் நிறைவேறாத ஒரே எனக்கொரு மகன் பிறப்பான்.தனது ஆசைக் கனவுகளை அப்படியே தந்திருப்பார்.சுற்றி பகை வந்து சூழும் திருநாளில் வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்.அவருக்காகவே உழைத்த கவிஞர்கள் ஏராளம்.தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது.குதூகலமாவார்கள் கவிஞர்கள்.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை.நாணயத்தோடு நல்லறம் காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை.மக்கள் திலகம் மறைந்து எத்தனை ஆண்டுகளானாலும் சரி இந்த நிமிடம் கூட தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றித் தான் சுழல்கிறது.எம்.ஜி.ஆர்.ஆட்சியை அமைப்போம் என இரு கரம் கூப்பி வரப்போகிறது.வருபவரெல்லாம் எம்.ஜி.ஆர்.ஆக முடியுமா?. அவர் வந்த பாதையைக் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?. வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி.வரிகளுக்கு உயிர் கொடுத்த மகத்தான மனிதரை இந்த உலகம் தேடிக்கொண்டேயிருக்கிறது.அந்த இடம் வெற்றிடமாக அப்படியே தான் இருக்கிறது..........கருத்து... Abdul samad fayaz...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •