Page 137 of 210 FirstFirst ... 3787127135136137138139147187 ... LastLast
Results 1,361 to 1,370 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1361
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (27-11-2020) கோடிகளில் ஒருவர் வழங்கும்..."ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல் காவியம்...
    1.நெல்லை- ரத்னா
    2.தூத்துக்குடி - கிளியோபாட்ரா
    3. சங்கரன்கோவில் -கீத்யாலயா,
    4.. சாத்தான்குளம் - லட்சுமி,
    5ஆலங்குளம் - டிகேவி
    6, காட்டுப்புத்தூர்- செந்தில்
    குதூகல ஆரம்பம்.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1362
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கைபிள்ளைகள் கோபத்தில் விட்ட சாபம்.

    மற்ற தரமான MGR ரசிகர் குரூப்பை நாம் ,மதிப்போம் நட்பு பாராட்டுவோம் , முன்ஜென்ம பாவியான ,(பல பேரில் உலாவரும் )டொங்கர் ,தொடர்ந்து, "தெய்வப்பிறவி "யான நடிகர்திலகத்தை ,அவதூறக பேசுவதை கொள்கையாக வைத்துள்ளான் ,மறுஜென்மத்தில் இழி பிறவியாக பிறப்பான் என்பது திண்ணம் !nakiran நக்.குப்தன்.)

    "சொர்க்கத்து"க்கு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும்.
    போர்டை பார்த்து அவசரமாக "சொர்க்கத்து"க்கு 2 டிக்கெட் கேட்டால் அது நிஜ சொர்க்கமாம். அந்த சொர்க்கத்துக்கு மண்டையை போட்டால் அல்லவா போக முடியும்.
    ஆமாம் இங்கே "சொர்க்கம்" தியேட்டரில் டிக்கெட் கிழித்தவனெல்லாம் தேவர்களால் நடத்தப்படுகிற "சொர்க்கத்து"க்கும் டிக்கெட் கிழிக்க கிளம்பி விட்டனர்.
    செத்தால் கூட கைபிள்ளைகள் டிக்கெட் கிழிக்கும் பழக்கத்தை கைவிட மாட்டார்கள் போல தெரிகிறது.

    அதுவும் அய்யனை துதிப்பவர்களுக்கு "சொர்க்க"மும் அய்யனை பற்றி உண்மையான தகவல் கொடுத்தால் "நரகத்து"க்கும் அனுப்புவார்களாம். அதற்கு முன்னால் "எமனுக்கு எமன்" அய்யன் முன் விசாரணை நடக்குமாம்.
    இதோ எமதர்ம ராஜன் முன்னிலையில் வக்கிரன் நக்கீர குப்தன் கணக்கை வாசிக்கும் காட்சி.

    நரன்:1. அய்யா சொர்க்கத்தின் வாசலை எனக்காக திறவுங்கள் அய்யா?
    நக்.குப்தன்: ம்! நீ பூலோகத்தில் என்ன நன்மை செய்தாய்,அதை முதலில். சொல்!
    நரன்:1 அய்யா, நான் பலருக்கும் பயனடைய உணவுச்சாலைகளே கட்டி அவர்களுக்கு இலவச உணவளித்தேன்.

    நக்.குப்தன்: அதை யாரையா கேட்டது. நீஅய்யனுக்கு என்ன சேவை செய்தாய்? அய்யன் நடித்த படங்களை பார்த்தாயா? அய்யனின் மிகை நடிப்பை ரசித்தாயா? இல்லை அதை புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்தாயா? இல்லை அய்யனின் படத்தை பார்க்க அழைத்து வரப்படும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் வைத்து தானம் செய்தாயா? குறைந்த பட்சம் அய்யனின் படங்களுக்கு ஒரு 100 டிக்கெட்டாவது கிழித்தாயா? அய்யன் சிவனாக நடித்த திருவிளையாடல்
    படத்தை பார்த்த பிறகும் போலி சிவனடியாரை போற்ற வில்லையா?

    நரன்:1. இல்லை ஐயா.

    நக்.குப்தன்: ஆ! மகா பாவி! நீ பூலோகத்தில் அய்யனை நிந்தனை செய்த பெரும் பாவத்தை பெற்றாய்.
    இனி நரகலோகம்தான் உன் வாசம்.
    உன்னை அய்யன் நரகத்தில் கவனித்து கொள்வார்.

    நரன்:1. ஐயோ அய்யனே நான் ஒரு பாவமும் அறியேன்.

    நக் குப்தன் :அடுத்தது யாரப்பா?

    பரசு மினி குப்தன்: யாரோ சங்கரோ! டொங்கரோ! பேரிலேயே குழப்பம் அதிகம் நக் குப்தா?

    நக் குப்தன். வரச்சொல் அவனை!

    சங்கர்: ஐயா: நான் எங்கு இருக்கிறேன்?

    நக்.குப்தன்: நீ தேவலோகத்தில் எமனுக்கு எமன் விசாரணை வளயத்தில். உன் பெயர்?

    சங்கர்: சங்கர் என்று அழைப்பார்கள்
    டொங்கர் என்றும் இன்னும் அமுல் டப்பா மூஞ்சி என்றும் பல பெயர்களில் என்னை அழைப்பதுண்டு அய்யனின் கைபிள்ளைகள்.

    நக்.குப்தன். ம்! என்ன திமிர்? உனக்கு இத்தனை பெயரா?

    சங்கர்: நானாக வைத்துக் கொள்ளவில்லை.

    நக்.குப்தன். இவன் கணக்கு?

    கணக்கு வாசிக்கப்படுகிறது.
    கணக்கை கேட்ட நக்.குப்தன் அதிர்ச்சியில் மகா பாவி, மகா பாவி.
    நீ அய்யனுக்கு பயங்கர துரோகம் செய்திருக்கிறாய்! ஒவ்வொன்றாக வாசிக்கிறேன் கேள்!

    நீ அய்யனின் மிகை நடிப்பை விமர்சித்து கைபிள்ளைகளின் பகையை சம்பாதித்திருக்கிறாய்?
    அய்யன் பாக்கெட்டிலேயே காசு வைத்துக்கொள்ள மாட்டார் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அய்யனை தருமி ரேஞ்சுக்கு கொண்டு போய் கருமி என்று விமர்சித்தாய்.

    அய்யன் செய்யாத தான தர்மத்தை நாங்கள் வானளாவ புகழ நீ உண்மையை போட்டு உடைத்தாய்.

    அது மட்டுமல்ல, நாங்களே இங்கு கணக்கை சரியாக பார்ப்பதில்லை.
    ஆனால் பூலோகத்தில் நாங்கள் டிக்கெட் கிழித்த கணக்கு நாங்களே பார்த்ததில்லை நீ துல்லியமாக கணக்கு பார்த்து சொல்லியிருக்கிறாய்!

    அந்த சிவனே எங்கள் அய்யனின் நடிப்பை பார்த்துவிட்டு பதவி வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டு ஓடி விட்டார் என்று தெரியுமா? உனக்கு? நாங்கள் எல்லாம் அய்யனின் போலி சிவனடியார்கள்.

    இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா? இங்கேயிருக்கும் காலத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியின்மேல் நின்று நரகத்தின் வாசலில் டிக்கெட் கிழிக்க வேண்டும். இது உன்னைப்போல் அய்யனின் புகழ் பாடாதவர்களுக்கு கொடுக்கும் சிறப்பு தண்டனையாகும்.
    அய்யன் அதை நேரடியாக பார்வை செய்வார்.

    சங்கர்: அப்போ உங்க அய்யனும் அங்கேதான் இருப்பாரா???.........KSR.........

  4. #1363
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    **********mgr மதகு************

    1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக
    நெய்யல் ஆற்றில்
    வெள்ளம் கரைபுரன்டு ஒடியது.

    கோவையை சுற்றி உள்ள 32 குளங்களும் நீர் நிரம்பி வழிந்தது.
    அதில் செல்வ சிந்தாமணி குளம் மற்று சிங்காநல்லூர் குளங்கள் கரை உடைந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து.

    கோவையின் ஒரு பகுதி வெள்ளக்காடாய் மாறியது. செட்டிவீதி,செல்வபுரம்
    சுண்டக்காமுத்தூர்
    ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி
    ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.

    இதனால்
    ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி
    ஆகிய கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

    அன்றைய
    தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார்.
    வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர்,
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி,
    நிவாரண உதவிகளை
    வழங்க உத்தரவிட்டார்.

    எம்ஜிஆருடன் அன்றைய
    அமைச்சர்கள்
    செ அரங்கநாயகம்,
    பா குழந்தைவேலு அவர்களும்
    வெள்ள நீரில் நடந்துசென்றார்கள்.

    மழை வெள்ளச் சேற்றில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற எம்.ஜி.ஆருக்கு முள்குத்தி ரத்தம் வந்தது.

    மக்களின்துயரத்தையும்
    வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆருக்கு அது பெரிய வலியாக தெரியவில்லை.

    குளத்தின் கரை உடைந்து பிரதான தார் சாலையை மூழ்கடித்து, இருந்தது வெள்ளம்.

    அதிகாரிகளுடன் உடனடி
    ஆலோசனையில் இறங்கிய
    எம்ஜிஆர்
    ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு திருப்பி
    விட ஆலோசிக்கப்பட்டது.

    போர்கால அடிப்படையில் பனிகள் நடந்தது.
    பாலம் கட்டி
    புதிய மதகும்,
    தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.

    இப்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.

    மக்கள் பிரச்சினை என்றால் அங்கே நேரடியாக சென்ற
    ஒரே முதல்வர் mgr மட்டுமே !

    *எம்ஜிஆர்நேசன்*.........

  5. #1364
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ' ஹலோ தியேட்டர் மேனேஜர் பேசுறேன்...இப்ப ஓடிகிட்டிருக்கிற படத்தைப் போட்டு ரொம்ப பேஜாராப் போச்சு...கட்டுப்படி ஆகலீங்க...உடனே எம்ஜிஆர் படம் போட்டே ஆகனும்...இன்னிக்கே எம்ஜிஆர் படம் அனுப்புங்க....' இப்படித்தான் இன்று பெரும்பாலான தியேட்டர்கள் நிலவரம். ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், நினைத்ததை முடிப்பவன், தர்மம் தலை காக்கும், எங்க வீட்டுப் பிள்ளை, ரகசிய போலீஸ் 115, நம்நாடு என டிஜிட்டலில் கடந்த சில ஆண்டுகளாக சக்கை போடு போட்டு வரும் காவியங்கள் கடந்த 10.11.2020 முதல் நவீன திரையரங்குகளில் அதிரடியாக திரையிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன. காவல்காரன் தேடி வந்த மாப்பிள்ளை, பல்லாண்டு வாழ்க, சிரித்துவாழ வேண்டும், உரிமைக்குரல், நாளை நமதே என பழைய புரஜக்டர் மூலம் திரையிடும் படச்சுருள் உள்ள எம்ஜிஆர் காவியங்கள் இன்னொரு பக்கம் பட்டைய கிளப்பி வருகின்றன. இது மட்டும்தானா? என்று கேட்டால் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. படம் போட்டால் ரசிகர்கள் வருவார்களா என்ற தயக்கத்தில் இருந்த தியேட்டர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து உள்ளனர் எம்ஜிஆரும் அவர்தம் ரசிகர்களும். சமூக இடைவெளி கடைபிடித்து அமைதியாக தியேட்டருக்குள் நுழைந்து அமர்ந்தாலும் திரையில் வாத்தியாரைப் பார்த்ததும் 3 மணி நேரமும் ' தலைவா...தெய்வமே...வாத்தியாரே...' என்ற ஆரவாரத்தால் அதிர்கின்றன திரையரங்குகள். 'நவீன திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கும் எம்ஜிஆர் பக்தர்கள், கடந்த 3 வாரங்களாக திரையிடப்பட்டு வரும் எம்ஜிஆர் படங்களை வாட்சப் முகநூல் மூலமாகவும் நண்பர்கள் போன் மூலமாகவும் தகவல் அறிய முடிகிறது என்றும் எம்ஜிஆர் படங்களுக்கு நாளிதழிலோ உள்ளூரிலோ போதிய விளம்பரம் செய்யவேண்டும் என்றும் ' வலியுறுத்துகின்றனர். எம்ஜிஆர் பக்தர் சாமுவேல் கூறும்போது, ' புரட்சித்தலைவர் காவியங்கள் 1950,1960,1970 காலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டதிலிருந்து நெகடிவ் உரிமை மற்றும் பிரிண்ட உள்ள காவியங்கள் இன்றுவரை தியேட்டர்களில் அடிக்கடி திரையிடப்பட்டுத்தான் வருகின்றன. வசூலிலும் அன்றுபோலவே சாதனை படைக்கின்றன. புரட்சித்தலைவருக்கு அரசியலில் இன்று எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதைப்போல அவரது காவியங்களுக்கும் தனி மவுசு உள்ளது. எனவே அனைத்து எம்ஜிஆர் காவியங்களையும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றினால் உலகம் உள்ளவரை எம்ஜிஆர் படங்களுக்கு இப்போது உள்ள மாஸ் என்றுமே இருக்கும்' என தெரிவித்தார்..........gs.........

  6. #1365
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொரனா காலமாகட்டும், இல்லை இந்த நிவர் புயல், மழை, பனி காலமாக இருக்கட்டும் ஆஹா, திரையுலகை என்றும் வாழ வைக்க இதோ..........நான் இருக்கிறேன்... என்று ஆபத்பாந்தவனாக, அனாதைரட்சகனாக இறைவன் வழியில் காப்பாற்றுபவர் வேறு யார் உள்ளார்கள்???!!! நமது இதயதெய்வம் புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், என்றென்றும் கலை,திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தியாம் எம்.ஜி.ஆர்., அவர்கள்... இப்பொழுதும் தம் கலை காவியங்கள்- படங்கள்- பாடங்கள் வழியே உயிர் கொடுக்கிறார்கள். இத்தகைய அருட்பெருஞ் சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்து கொண்டிருக்க உங்களை விட்டால் வேறு என்ன வழி?!...எப்பொழுதும் வளர்க, வாழ்க நின் புனித பணி...திரையரங்குகள் மற்றும் அதனை சார்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், அரங்க உரிமையாளர்கள், & பணியாளர்கள் சார்பாக புரட்சி தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை மானசிகமாக தெரிவிப்போம்------------

  7. #1366
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகமெங்கும் புதிய படங்கள் வெளியீட்டும் காலாவதியாகிறது...
    நேற்று சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் லஷ்மி தியேட்டரில் புதியபடம் திரையிட்டு பார்க்க 10 பேரகள் கூட வரவில்லை...
    தியேட்டர் மூடபட்டது..
    உடனே "நாடோடி மன்னன்" திரைப்பட காவியத்தை திண்டுக்கல் திரு. நாகராஜன் அவர்களிடம் வாங்கி
    இன்று முதல் திரையிட்டு உள்ளனர்...
    மேலும்
    தலைவரின் க்யூப் சிஸ்டம் படங்கள் தான் பழைய திரைப்படங்களில் அதிகம் உள்ளது...
    நாடோடி மன்னன்
    ஆயிரத்தில் ஒருவன்
    தர்மம் தலைக்காக்கும்
    எங்க வீட்டுப்பிள்ளை
    அடிமைப்பெண்
    ரகசியபோலிஸ் 115
    நினைத்ததை முடிப்பவன்
    நம்நாடு
    ரிக்க்ஷாக்காரன்
    உலகம் சுற்றும் வாலிபன்
    மற்றும் பல திரைப்படங்கள் க்யூப்பில் தயாரிப்பில் உள்ளது....

    விரைவில்
    நாடோடி மன்னன்...
    அடிமைப்பெண்
    மேலும் பல ஊர்களில் திரையிடப்படுகிறது...

    கொராணாவுக்கு பின்
    1200 திரையரங்கில்...
    700 தியேட்டர் திறக்கபட்டது...
    இன்று 28.11.2020 முதல்
    55 தியேட்டர்கள் மூடப் பட்டது...... Ur...

  8. #1367
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*20/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சி இன்று எட்டு திக்கிலும் வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பில்*எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல திரும்புகிற திசையெல்லாம்* மறைந்தும் மறையாத**மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு தகவல்கள், நெகிழ்வான நிகழ்வுகள் வந்து கொண்டே* இருக்கின்றன .* ஒரு பேரருவியாக,அவருடைய வாழ்க்கை வரலாறு என்பது இந்த மனித ஜீவியத்தில்*,பரவி கொண்டே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .*


    பாடம் கற்பிக்கின்ற ஒரு பல்கலை கழகமாக திரை அரங்குகளை நினைத்தார் .அதனால்தான் ஒரு* திரைப்படம் என்பது* பல லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது .* அதில் அமையும், ஒவ்வொரு பாடலும், வரியும் , வசனமும், காட்சியும் படிப்பினையாக இருக்க வேண்டும்**மக்களுக்கு அதன் மூலம் பல நல்ல சமூக கருத்துக்கள் பயனுள்ளதாக தரவேண்டும் என்பதை கட்டாயமாக தன்* திரையுலக வாழ்க்கையில் கடைபிடித்தார் . தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் நடித்தார்கள், சம்பளம் வாங்கினார்கள், புகழ் அடைந்தார்கள், பிரபலம் ஆனார்கள்**ஆனாலும் அவர்களால் சாதிக்க முடியாததை, தனி ஒரு மனிதனாக திரையுலகில் முடிசூடா மன்னனாக, வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்ததோடு,அரசியல் உலகில் நுழைந்து, பட்டொளி வீசி, கொடி கட்டி பறந்து, மக்களை நேசித்து, அபரிமிதமான செல்வாக்கை பெற்று , பத்தாண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து பொற்கால ஆட்சி புரிந்தார் .என்பது சாதனை, சரித்திரம், சகாப்தம் . இந்த வெற்றிகளுக்கு மூல காரணம் என்னவென்றால், திரையுலகில் தான் சம்பாதித்த பணத்தை தனக்கென்று வைத்து கொள்ளாமல் மக்களுக்கு வாரி வாரி இறைத்தார்**


    நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களுடன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது தன்* கையில் இருந்த பணத்தை*மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தபடி சென்றாராம் . அதை கண்ட பாகவதர் இப்படி அள்ளி அள்ளி கொடுத்துவிட்டால் எப்படி சம்பாதிப்பீர்கள் என்று கேட்டுள்ளார் .அன்று மாலையில் ஒரு திரைப்படத்தின் 100 வது நாள் விழா நடைபெற்றது .அதில் இருவரும் கலந்துகொண்டனர் . அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எம்.ஜி.ஆர். சொன்னது என்னவென்றால் காலையில் நான் பார்த்தவர்கள் ஆங்காங்கே அமர்ந்துள்ளார்கள் ,நான் கொடுத்த பணம் எனக்கு திரும்பி வருகிறது . அவர்கள் மூலம் கிடைத்த பணத்தை திரும்ப அவர்களுக்கே கொடுப்பதில்தான் எனக்கு ஆத்ம திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது .என்றாராம் .***


    மாட்டுக்கார வேலன் திரைப்படத்தை ஒரு மூதாட்டி 100 நாட்களும் தொடர்ந்து பார்த்தார் .* அந்த படத்தின் 100* வது* நாள் விழாவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அரங்கிற்கு வருகை தந்தார் . அரங்கின் மேலாளர் அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அவர் தொடர்ந்து 100 நாட்கள் படம் பார்த்த விவரத்தையும் சொன்னார் .* எம்.ஜி.ஆ.ர் அவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து ஒரு படத்தை ஒருமுறை பார்க்கலாம்.படம் நன்றாக இருந்து தங்களுக்கு பிடித்து** இருந்தால் தொடர்ந்து ஒருசில முறை பார்க்கலாம் . ஆனால் நீங்களோ தொடர்ந்து 100 நாட்கள் இந்த படத்தை பார்த்து இருக்கிறீர்கள். அதற்கு கணிசமான பணம் செலவழித்து இருக்கிறீர்கள்.நான் கேட்பதற்காக தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் . அப்படி 100 நாட்கள் தொடர்ந்து பார்ப்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்டாராம்.**அதற்கு அந்த மூதாட்டி ஐயா, எனக்கு வேலன் என்று ஒரு மகன் உண்மையில் இருந்தான் .அவன் மாடு மேய்த்து கொண்டிருந்தான்* நன்றாக ஆடி பாடி கொண்டிருந்தான் .திருமணத்திற்கு முன்பாக ,குறைந்த வயதில் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டான் .அவன் பெயரில் இந்த படம் வெளியானதால் தினசரி என் மகனை பார்க்கும் விதமாக இந்த படத்தை 100 நாட்கள் பார்த்து வந்தேன் . என் மகனை பார்ப்பதற்கு எனக்கு கசக்குமா, இதெல்லாம் ஒரு பெரிய செலவா என்று சொன்னாராம் . நீங்கள் நான் இது விஷயமாக பணம் , தங்கம் கொடுப்பதற்கு* தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்**என்றாராம் எம்.ஜி.ஆர். யாராவது தன் பிள்ளையை பார்த்ததற்காக கூலி தருவார்களா ,என்று கூறி அந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கொடுத்த 100 ரூபாயை திருப்பி கொடுத்தாராம் . உனக்கு தங்கம் போல மிக பெரிய மனசு, அதனால் உன் நினைவாகவும், என் மகன் நினைவாகவும் நீங்கள் அளித்த இந்த ஒரு சவரன்* தங்கத்தை மட்டும் நான் வைத்து கொள்கிறேன் என்று மூதாட்டி சொன்னாராம் .* எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களிடம் இருந்து பெற்ற* பணத்தை மக்களிடமே தருகின்ற குணம் உடையவர் . மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று செல்வி ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் அவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகத்திற்கு சால பொருந்தும்

    .நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.ஆகட்டுமடா*தம்பி ராஜா - நல்ல நேரம்*

    2.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

    3.கண்ணை*நம்பாதே*- நினைத்ததை முடிப்பவன்*

    4.ஒரு பக்கம் பாக்குறா*-- மாட்டுக்கார வேலன்*

  9. #1368
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
    தனியார் டிவிக்களில்
    20/11/20 முதல் 26/11/20 வரை ஒளிபரப்பான விவரம்
    _________
    20/11/20
    சன் லைஃப்- மாலை 4 மணி- ஆனந்த ஜோதி


    21/11/20- சன் லைஃப் - மாலை 4 மணி- கணவன்


    மூன் டிவி- பிற்பகல் 12.30 மணி- காதல் வாகனம்


    மீனாட்சி - பிற்பகல் 1. மணி- நல்ல நேரம்


    22/11/20 - முரசு டிவியில் மதியம் 12 மணி/ இரவு 7 மணி
    தாய் சொல்லை தட்டாதே


    மீனாட்சி- மதியம் 12 மணி - விவசாயி


    மெகா டிவி- பிற்பகல் 2.30 மணி- விவசாயி


    23/11/20- சன் லைஃப்
    காலை 11 மணி- குடியிருந்த கோயில்


    சன் லைஃப் - மாலை 4 மணி- அன்ன மிட்டகை


    ஜெயா மூவிஸ்- இரவு 10 மணி- கு லே பகா வலி


    24/11/20- மூன் டிவியில் பிற்பகல் 12.30 மணி-
    குடும்ப தலைவன்


    வசந்த்- பிற்பகல் 1.30 மணி-ஒரு தாய் மக்கள்


    சன் லைஃப்- மாலை 4 மணி- அரச கட்டளை


    புது யுகம் டிவியில் இரவு 7 மணி- அரச கட்டளை


    வசந்த்- இரவு 7 மணி-
    நான் ஏ ன் பிறந்தேன்


    பா லிமர்- இரவு 11 மணி - ஆனந்த ஜோதி


    25/11/20 சன் லைஃப்- காலை 11 மணி-
    பல்லாண்டு வாழ்க


    வசந்த்- பிற்பகல் 1.30 மணி - குடும்ப தலைவன்


    மெகா24 - பிற்பகல் 2.30 மணி- தொழிலாளி


    சன் லைஃப் - மாலை 4 மணி- தாயை காத்த தனயன்


    ஜெயா மூவிஸ் இரவு-10 மணி- பாசம்


    வேந்தர் டிவி - இரவு 10.30 மணி- ஆனந்த ஜோதி


    26/11/20- மெகா - அதிகாலை 1 மணி- பணதோ ட்டம்


    முரசு டிவியில் மதியம் 12 மணி/ இரவு 7 மணி-
    பெற்றால்தான் பிள்ளையா


    மெகா- பிற்பகல் 1.30 மணி- சந்திரோதயம்



    சன் லைஃப்- மாலை 4 மணி- தேடி வந்த மாப்பிள்ளை


    வசந்த்- இரவு 7.30 மணி- பட்டிக்காட்டு பொன்னையா


    புது யுகம் டிவியில் இரவு 7 மணி- என் கடமை


    ஜெயா மூவிஸ் இரவு 10 மணி- இதய வீணை

  10. #1369
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அகிலம் போற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்களும், சத்யம் காம்ப்ளக் சில் 161 நாட்களும் திரையிடப்பட்டு அரிய சாதனை படைத்தது

    தற்போது கொரோனா காலத்தின் இடையில் மீண்டும் மறு வெளியீடு களி ல் பல அரங்குகளில் தென்னகம் எங்கும் வெற்றி வலம் வந்து புதிய சாதனை படைத் து வருகிறது.

    இன்று முதல்(27/11/20)
    நெல்லை ரத்னா

    தூத்துக்குடி கிளியோபாட்ரா

    காட்டுபுத்தூர் செந்தில்
    தினசரி 4 காட்சிகள்

    தகவல் உதவி திரு.சொக்கலிங்கம்
    திவ்யா பிலிம்ஸ் மற்றும் நெல்லை திரு வி.ராஜா

    மதுரை நாகமலை புதுக்கோட்டை காசி அரங்கில் தினசரி 4 காட்சிகள்

    தகவல் உதவி திரு எஸ் .குமார்

    _________
    இன்று முதல் (27/11/20)
    கோவை டிலைட்டி ல்
    பல்லாண்டு வாழ்க
    தினசரி 2 காட்சிகள்

  11. #1370
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (27/11/20) சென்னை பாலாஜியி ல்
    மக்கள் திலகம் எம் ஜி ஆரின் பெரிய இடத்து பெண் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •