-
Yesterday, 08:07 AM
#2051
Senior Member
Diamond Hubber
"குடியிருந்த கோயில்", படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே" பாடல் படப்பிடிப்பு,நடனப்பயிற்சி பற்றி நண்பர்கள் பதிவுகள் மூலம் விவாதித்து வருகின்றனர்.இந்த பாடல் மற்றும் படப்பிடிப்பு பற்றி தயாரிப்பாளர் வேலுமணி,டைரக்டர் சங்கர்,நாயகன் தலைவர் ஆகியோர்களிடையே நடைபெற்ற சம்பாஷனைகள் பற்றி,எம்.ஜி.ஆருடன் உடனிருந்து 1950ல் இருந்து திரையுலகில் பயணித்த ரவீந்தர் (இவர்தான் நாடோடிமன்னனுக்கு இணை வசனகர்த்தா) பொம்மை இதழில் எழுதிய சுருக்கம் தந்துள்ளேன்.
ஆடலுடன் பாடலுக்கு செம்மலுடன் ஆட விஜயலட்சுமி ஒப்பந்தம் ஆயிருந்தார்.இளமையும்,திறமையும் உள்ள நடிகையுடன் உடன் ஆட செம்மல் தயங்கினாராம்.
அப்போது தலைவர் சொன்னாராம் நான் "விக்கிரமாதித்தன்", "மன்னாதிமன்னன்" படங்களில் நடனம் ஆடியுள்ளேன்.ஆனால் பரதம் என்றால் காட்சிகளில் அட்ஜஸ் செய்து கொள்ளலாம்.ஆனால் பங்கரா நடனத்துக்கு மூவ்மெண்ட்ஸ் முக்கியம் என்று சொல்லிவிட்டு உடன் படப்பிடிப்பை ஒருவாரம் தள்ளிவைக்க சொன்னாராம்.தயாரிப்பாளர் வேலுமணி எவ்வளவோ சொன்னாராம்.அந்த நாட்களில் பங்கரா டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் பயிற்சி எடுத்தாராம்.டைரக்டர் சங்கர் சொன்னாராம் அண்ணே உங்க திறமையிலே நம்பிக்கை இல்லாம பேசாதிங்க.நான் இந்த பாடலை எடுத்துக்காட்டறேன்.தலைவர் உடன் ஒரு வேண்டுகோள் சொன்னாராம்.பாடல் படப்பிடிப்பை நான் தான் முதலில் பார்க்கணும்.அப்புறம் தான் மத்தவங்களுக்கு காண்பிக்கணும் என்று சொல்லிவிட்டு சீக்கியர் வேஷம் போட சென்றுவிட்டாராம்.எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ஒப்பனை கலைஞர் பீதாம்பரம் (பி.வாசுவின் தந்தை) தலைவரை ,இத்துடன் பதிவு செய்துள்ள படத்தில் உள்ளபடி சீக்கியர் வேஷம் போட்டாராம்.இந்த ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடல் மூன்று நாட்கள் நடைபெற்றது.தலைவரின் மூவ்மெண்ட்ஸ் பார்த்த விஜயலட்சுமி அசந்து பிரமித்துப்போய் சொன்னாராம் "உங்க ஆட்டத்துக்கு முன்னால நான் இல்லை.என்னையே காணோம்".ரஷ் வந்ததும் சங்கர் தலைவரை பார்க்கும்படி சொன்னாராம்.படத்தொகுப்பு செம்மல் பார்த்ததும் ரவீந்தரும் பார்த்தாராம்.செம்மலின் ஆட்டத்தின் திறனை டைரக்டர் மெச்சினார்.டைரக்டர் படப்பிடிப்பு திறனை தலைவர் மெச்சினாராம்.படத்தின் சிறப்பான வெற்றிக்கு அப்பாடல் ஒரு அம்சமாக இருந்தது என்றார் .
இந்த செய்தி பொம்மை இதழில் தலைவரின் வசனகர்த்தா ரவீந்தர் எழுதியுள்ளார்..........nssm...
-
Yesterday 08:07 AM
# ADS
Circuit advertisement
-
Yesterday, 08:14 AM
#2052
Senior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர்
#மக்கள்திலகம்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை
காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வரும் இந்த தொடர் பதிவில் இன்று நாம் தலைவர் நடித்த அவரின் 35 வது படமான
#"மதுரைவீரன் " திரைப்படம் பற்றி காண்போம்..
முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. மட்டுமல்ல, தென்னிந்தியா அளவில்... அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.
இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.
அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.
எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.
காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சென்ட்ரல் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.
இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.
1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.
மதுரை வீரன் ஏப்ரல் 13, 1956 அன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. இப்படம் ஒரு பெரிய வணிக வெற்றியாக மாறியது, மேலும் 200 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா திரைப்படமாக ஆனது. தமிழ்நாடு முழுவதும் 35 திரையரங்குகளில் முதன் முதலாக 100 நாட்கள் கடந்து மிக பெரிய வசூலுடன் ஓடி, மற்றுமொரு முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி வசூலை கடந்ததும் பிரம்மாண்ட சிறப்பு. இது புரட்சி தலைவர் மற்றும் பத்மினி ஆகியோருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. மேலும் இது போன்ற பல படங்கள் உருவாக வழிவகுத்தது.
கதை பற்றி காண்போம்...
வாரணவாசியில் மன்னருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக ஒரு அடையாளத்துடன் மாநிலத்திற்கு ஒரு அழிவை கொண்டுவர விதிக்கப்பட்டுள்ளது. என்று ஜோதிடரின் கட்டளையின் படி, அக்குழந்தை காட்டில் விடப்படுகிறது. கபிலரும் அவரது மனைவியும் காட்டில் அக்குழந்தையை கண்டுபிடித்து, அவனை தங்கள் மகனாக வளர்க்கின்றனர். அவர்கள் அவனுக்கு வீரன் என்று பெயரிடுகிறார்கள், அதாவது போர்வீரன், ஏனெனில் காட்டில் வனவிலங்குகள் அவனை சுற்றி இருந்தாலும் அதற்காக அவன் அழவில்லை.
வீரன் ஒரு துணிச்சலான மற்றும் உன்னதமான மனிதனாக வளர்கிறான். தொட்டியத்தின் இளவரசி பொம்மி, காவேரியில் மூழ்கடிப்பதில் இருந்து காப்பற்ற அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பொம்மி அவனை காதலிக்கிறாள். வீரன் ஆரம்பத்தில் அவளது காதலை மறுபரிசீலனை செய்யவில்லை என்றாலும், பொம்மி மனிதனாக உடையணிந்த யானை மீது சவாரி செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவளின் அன்பின் ஆழத்தை அவன் உணர்கிறான். பொம்மியின் மாமாவான கோழைத்தனம் மிக்க நரசப்பன், பொம்மியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடுகின்றான். வீரனின் குறைந்த பிறப்பை மேற்கோள் காட்டி, நரசப்பன் அவர்கள் இருவருக்கும் தேவையற்ற துன்பத்தை அளிக்கிறான். பொம்மியின் தந்தையின் எதிர்ப்பால், வீரன் இளவரசியை அழைத்து செல்கிறான். இறுதியாக திருச்சியின் ராஜாவிடமிருந்து நரசப்பன் உதவி கோரினார். வீரனும் பொம்மியும் குற்றவாளி அல்ல என்று அறிவித்து, அவர்கள் திருமணத்தில் தங்கள் சங்கத்தை புனிதப்படுத்துகிறார்கள். வீரனின் வீரத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர், அவனை தனது ராணுவ தளபதியாக நியமிக்கிறார்.
மதுரை மக்களை அச்சுறுத்தும் கொள்ளை கும்பலை கட்டுப்படுத்த உதவுமாறு, மதுரையை சேர்ந்த திருமலை நாயக்கர் திருச்சியிடம் வேண்டுகோள் விடுக்கிறார். வீரன் மதுரைக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் நாயக்கரின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். அங்கு அவன் வெள்ளையம்மாவை பார்க்கிறான், அவள் ஒரு அழகான நீதிமன்ற நடனக் கலைஞர். அவளது நல்லொழுக்கங்கள் மற்றும் திறன்களால் அவன் ஈர்க்கப்படுகின்றான். வீரன் மற்றும் வெள்ளையம்மா பொருத்தமான மாறுவேடத்தில் சென்று, திருடர்களின் அழகர் மலை குகையில் நுழைகிறார்கள். மறைந்திருக்கும் வீரர்களின் உதவியுடன், அவர்கள் பெரும்பாலான கொள்ளையர்களை பிடிக்கவும், அவர்கள் கொள்ளையடித்த கொள்ளை பொருட்களையும் மீட்டெடுக்க நிர்வகிக்கிறார்கள்.
வெள்ளையம்மாவை தனது காமக்கிழத்தியாக மாற்ற விரும்பும் நாயக்கர், வீரனை வெள்ளையம்மா காதலிக்கிறாள் என்பதை அறிந்து கோபப்படுகிறார். தீய குணமுடைய நரசப்பன் மற்றும் அவரது தளபதி குட்டிலனால், நாயக்கரின் மனம் மேலும் நஞ்சுப்படுத்தப்படுகிறது. வீரனை ஒரு தேசத்துரோகி என குற்றம் சாட்டி, அவனது கை கால் துண்டிக்கப்படுமாறு கட்டளையிடுகிறார். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், வீரன் கூட்டத்தில் திருடர்களின் தலைவர் சங்கிலிக்கருப்பனை அடையாளம் கண்டு, ஒரு சந்திப்பில் அவரை கொன்றுவிடுகிறார். அவன் இப்போது தனது பணியை நிறைவேற்றியுள்ளான் என்று திருப்தி அடைந்த வீரன், தன்னை சிதைப்பிற்கு உட்படுத்துகிறார். அவரது ஆத்மா விரைவில் அவரது உடலை விட்டு வெளியேறும்போது, பொம்மியும் வெள்ளையம்மாவும் அவருடன் பரலோக வாசஸ்தலத்தில் ஒன்றுபடுகிறார்கள்...
வீரன் - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
நரசப்பன் -டி.எஸ்.பாலையா
வீரனின் வளர்ப்பு தந்தை -என்.எஸ்.கிருஷ்ணன்
செயின்ட் -பி.எஸ்.வெங்கடாச்சலம்
குலதெய்வம் ராஜகோபால்
கல்லபார்ட் நடராசன்
திருமலை நாயக்கர் -ஓ.ஏ.கே.தேவர்
அரசன் பொம்மன் -மா.பாலசுப்ரமணியம்
சொக்கன் -திருப்பதிசாமி
பொம்மி -பானுமதி ராமகிருஷ்ணா
வெள்ளையம்மா -பத்மினி
வீரனின் வளர்ப்பு தாய் -டி.ஏ.மதுரம்
கிள்ளி -ஈ.வி.சரோஜா
நடனம்
லலிதா
ராகினி
சுகுமாரி
மாடி லட்சுமி
மதுரை வீரனின் முதல் காட்சி திரையில் 1939 ஆம் ஆண்டில் வி.ஏ.செல்லப்பா மற்றும் டி.பி.ராஜலட்சுமி நடித்த அதே பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நாட்டுப்புற புராணக்கதை தெய்வமாக மாறியது. புராணக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க மற்றொரு முயற்சி 1940 களின் பிற்பகுதியில் நவீனா பிக்சர்ஸ், பி.யு.சின்னப்பாவை நடிகராக வைத்து எடுத்து. ஆனால் இது செயல்படவில்லை. கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் லீனா செட்டியார் பின்னர் வெற்றிகரமாக மதுரை வீரன் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க முடிந்தது, இதில் தசரி யோகானந்த் இயக்குநராக இருந்தார். இந்த பதிப்பிற்கான திரைக்கதையை கண்ணதாசன் எழுதியுள்ளார், அவர் பாடலாசிரியராகவும் பணியாற்றினார். கலை இயக்கத்தை கங்கா கையாண்டார், வி. பி. நடராஜன் படத்தொகுப்பையும் மற்றும் ஒளிப்பதிவை எம்.ஏ.ரெஹ்மானும் கையாண்டனர். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் இந்த படத்தில் புராணக் குறிப்புகள் இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் வற்புறுத்திய பின்னர் இப்படத்தில் இணைந்தார்.
அசல் புராணத்தில்
வெள்ளையம்மாவின் பாத்திரம் "மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் உணர்ந்தார், மேலும் அவரது திரை சித்தரிப்பில் மாற்றங்களை பரிந்துரைத்தார், அதற்கு தயாரிப்பாளர் ஒப்புதல் அளித்தார். எம்ஜிஆர் ஜோடியாக தனது முதல் படத்தில் பத்மினி நடித்தார்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........skt...
-
Yesterday, 02:58 PM
#2053
Senior Member
Diamond Hubber
எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று ஆகாதடி கிளியே!, அதன் இயற்கை குணம் மாறாதடி! ஆஹா எவ்வளவு பொருள் பொதிந்த பாடல்.
பரந்த மனப்பான்மை கொண்ட தலைவர் ரசிகர்கள் எங்கே? தற்குறி எண்ணம் கொண்ட மாற்று அணியினர் எங்கே? அதனால்தான் காலம் கடந்தும் மாற்றம் வராமல் பழைய நிலையே தொடர்கிறது.
தலைவரின் செயலுக்கும் வள்ளல்தன்மைக்கும் மாசு கற்பிக்க விழையும் மாற்று அணியினரின் செயலைக்கண்டு வாளாதிருந்தால் கயவர்களின் கனவு பலித்து விடும் அல்லவா?. அதன் பொருட்டே எனது பதிவில் தக்க பதிலடி கொடுப்பது அவசியமாகிறது. புரிந்தவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.
அய்யனின் கைஸ்கள் இரட்டை நாக்கு உடையவர்கள். அதிலும் நக்கீரன் என்ற கபட கைஸ் இரட்டை நாக்குடைய நாக்கீரன்.
நாக்கு இரண்டாக கீறி விஷ ஜந்துவின் விஷத்தோடு அலைபவன். இவன் போற இடத்துக்கு புண்ணியம் சேர்ப்பவனாம். இவனுடைய கபடநாடகத்தை என்னிடம் காட்டி தோல்வியடைந்தவன். சர்வ வித்தைகளை காட்டி சாகஸம் பண்ணியும் காலை பிடித்துப் பார்த்தும் கதை நடக்காததால் தலையில் ஏறி அமர்ந்து கொண்டால் ஏதாவது நடக்குமா? என்று அலைபவன்.
இப்போது நம்ம தலைவரின் அபிமானி a. முருகேசனிடம் ஒரு சில கைஸ்கள் காண்டாகி வருகின்றன. உண்மையை சொல்பவன் சதிகாரன்.
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் என்று பாடிய புரட்சியாரின் வாக்கிற்கிணங்க அலையும் வானரங்கள்.
சரி நம் பங்கிற்கு அடுத்த பிரம்மாஸ்திரத்தை எடுப்போம்.
நமது தளத்தில் நாம் சொன்ன பெ.இ.
பெண் 25 திரையரங்கில் 50 நாட்கள் ஓடியது என்றவுடன் பாயி ஆதாரம் கேட்கிறார். தலைவர் படத்தின் 50 நாட்கள் விளம்பரத்தில் சென்னையை தவிர வேறு தியேட்டர்கள் போட இடம் இருக்காது.
அய்யன் படங்களை போல் 4,5 தியேட்டரில் 50 நாட்கள் ஓடினால்தான் விளம்பரத்தில் போட முடியும் என்ற உண்மையை தெரிந்து கொண்டே பாய் கேட்கிறார்.
தலைவர் படங்கள் 70 சதவீத படங்கள் சுமார் 20 திரையரங்கு முதல் 40,50 திரையரங்கில் ஓடுவதால் இதெல்லாம் நமக்கு சாத்தியமில்லை. ஆனால் முதன் முதலில் 30 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டிய "சிவந்தமண்" விளம்பரத்தில் ஓடாத மேலும் சில அரங்குகளையும் சேர்த்து விளம்பரம் தந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். "உரிமைக்குரல்" 50 நாட்கள் விளம்பரத்தில் அத்தனை திரையரங்குகளையும் சேர்ப்பதென்றால் இரண்டு பக்க விளம்பரம் கொடுத்தாலும் பற்றாது.
ஆனால் 1 காட்சி 2 காட்சி என்று போட்டு மதுரை கல்பனாவில் மட்டும் 50 நாட்கள் ஓட்டிய "ஹரிச்சந்திரா" படத்துக்கு முழு பக்க விளம்பரம் கொடுத்து விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது என்பதை நிரூபித்தார்கள். .மேலும் உலகத்திலேயே மிகப் பெரும் விளம்பரம் இதுதான். 6 தியேட்டரில் 50 நாட்கள் ஓட்டிய "தங்கைக்காக" "அருணோதயம்" போன்ற படங்களுக்கு தியேட்டர் போட்டு விளம்பரம் கொடுக்கலாம்.ஆனால் நாம் என்ன செய்வது எவ்வளவு சுமாரான படமானாலும் 20 தியேட்டரில் 50 நாட்கள் ஓடி விடுமே..........ksr.........
-
Yesterday, 10:14 PM
#2054
Senior Member
Platinum Hubber
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*மனிதநேய*விழா மற்றும்*
1971ல் வெளியான*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்களின் பொன்விழா*
நிகழ்ச்சியில் ஸ்ரீதர்*நவராக்ஸ் குழுவினர் இன்னிசையில் ஒலித்த*பாடல்கள்**
விவரம்* *(21/02/21)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
1. தங்க தோணியிலே* - உலகம் சுற்றும் வாலிபன்*
2. பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை*
3.சிரித்து சிரித்து என்னை* சிறையிலிட்டாய்** -தாய் சொல்லை தட்டாதே*
4.தாய் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
5. என்னை தெரியுமா -குடியிருந்த கோயில்*
6.என்னை எடுத்து தன்னை கொடுத்து -படகோட்டி*
7.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக் காரன்*
8. அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்*
9.எங்கே அவள் - குமரிக்கோட்டம்*
10.மஞ்சள் முகமே வருக - வேட்டைக்காரன்*
11.பாடினாள் ஒரு பாட்டு - ஒரு தாய் மக்கள்*
12.பட்டு சேலை காத்தாட - தாய் சொல்லை தட்டாதே*
13.நாம் ஒருவரை ஒருவர் - குமரிக்கோட்டம்*
14.காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்*
15.கனிய கனிய மழலை* பேசும் - மன்னாதி மன்னன்*
16.நாளை உலகை ஆள வேண்டும் -* உழைக்கும் கரங்கள்*
17.இந்த புன்னகை என்ன விலை - தெய்வத்தாய்*
18.அங்கே வருவது யாரோ - நேற்று இன்று நாளை*
19.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*
20.கண்ணை நம்பாதே -நினைத்ததை முடிப்பவன்*
21.நாடு அதை நாடு - நாடோடி*
22.போய் வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க*
23.கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும்*
24.பால் வண்ணம் பருவம் கொண்டு* - பாசம்*
25.இறைவா உன் மாளிகையில்* - ஒளி விளக்கு*
26.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*
27.பொன்னெழில் பூத்தது - கலங்கரை* விளக்கம்*
28.உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்*
29.நாளை நமதே* இந்த நாளும் நமதே -நாளை நமதே*
-
Yesterday, 10:15 PM
#2055
Senior Member
Platinum Hubber
கடந்த*ஞாயிறு (28/02/21) அன்று சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில்*
நவீன்*பைன்* ஆர்ட்ஸ்*சார்பில்*நடைபெற்ற*இன்னிசை நிகழ்ச்சியில்*
பிரபல*இசை அமைப்பாளர்* திரு. லஷ்மண் ஸ்ருதி* குழுவினர்* இசைத்த*
பாடல்கள்*விவரம்* - தகவல் உதவி :: திரு.பி.ஜி.சேகர், பொன்மன*செம்மல்*
எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்*, சென்னை.*
------------------------------------------------------------------------------------------------------------------------
1. அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
2.ராஜாவின்* பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா*
3.பேசுவது கிளியா - பணத்தோட்டம்*
4.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*
5.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக் காரன்*
6.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*
7.ஆடலுடன் பாடலை கேட்டு - குடியிருந்த கோயில்*
8.பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று* நாளை*
9.ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் -சிரித்து வாழ வேண்டும்*
10.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*
11.தங்க* பதக்கத்தின் மேலே -எங்கள் தங்கம்*
12.விழியே கதை எழுது -* உரிமைக்குரல்*
13.நானொரு குழந்தை* - படகோட்டி*
14.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
15.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு* - என் அண்ணன்*
16.என்னை தெரியுமா - குடியிருந்த கோயில்*
17.குமரி பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை*
18.அவள் ஒரு நவரச* நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*
19.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து* - நினைத்ததை முடிப்பவன்*
20.மாசிலா உண்மை காதலே - அலிபாபாவும் 40 திருடர்களும்*
21.ஆயிரம் நிலவே வா* *- அடிமைப்பெண்*
2.உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்*
23.நாளை நமதே இந்த நாளும் நமதே - நாளை* நமதே*
-
Yesterday, 10:16 PM
#2056
Senior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர். நடித்த*
திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்* (21/02/21 முதல் 28/02/21வரை )
----------------------------------------------------------------------------------------------------------------
21/02/21- சன்* லைப் -பிற்பகல் 3 மணி - நான் ஆணையிட்டால்*
22/02/21- சன் லைப் - காலை 11 மணி - என் அண்ணன்*
* * * * * * * *கிங் டிவி _ பிற்பகல் 1 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * *எப் எம். தமிழ் -பிற்பகல் 1 மணி - தனிப்பிறவி*
* * * * * * பாலிமர் டிவி - பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
23/02/21- சன் லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -விவசாயி*
24/02/21-மெகா* 24- அதிகாலை 2.30 மணி - ராஜராஜன்*
* * * * * * * *ஜெயா டிவி - காலை 10 மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * * சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
* * * * * * * கிங் டிவி - பிற்பகல் 1 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * மெகா டிவி -பிற்பகல் 1.30 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * *வி. டிவி* - பிற்பகல் 2 மணி - பட்டிக்காட்டு பொன்னையா**
* * * * * * *ஜெயா மூவிஸ் - மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * *ஜெயா டிவி - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * வி டிவி - இரவு 10 மணி - அடிமைப்பெண்*
* * * * * * *பி.பி. டிவி - இரவு 10 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*
25/02/21-சன்* லைஃப் -காலை 11 மணி -நீரும் நெருப்பும்*
* * * * * * * முரசு -மதியம் 12 மணி/ இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - விவசாயி*
* * * * * * புதுயுகம் - பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை*
26/02/21-சன் லைப்- காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * * சன் லைஃப்* - பிற்பகல் 3 மணி - தெய்வத்தாய்*
* * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -இன்று போல் என்றும் வாழ்க*
27/02/21-சன் லைஃ- காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*
28/02/21- சன் லைஃப் - காலை 11 மணி - கண்ணன் என் காதலன்*
* * * * * *
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks