Page 176 of 210 FirstFirst ... 76126166174175176177178186 ... LastLast
Results 1,751 to 1,760 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1751
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*பிறந்த நாளை முன்னிட்டு**
    ஞாயிறு* *அன்று* (17/01/2021)
    தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய* திரைக்காவியங்கள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * * * * * * * * * * *காலை 10 மணி - பணம் படைத்தவன்*

    * * * * * * * * * * * * * * * மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
    ** * * * * * * * * * * * * * * இரவு* 7 மணி - இதய வீணை*

    ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * * * * * * * *இரவு 9* *மணி -* குமரிக்கோட்டம்*

    சன் லைஃப் - காலை 11 மணி - என் கடமை*

    மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

    ராஜ் டிவி* - பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*

    மெகா 24 - பிற்பகல் 2.30 மணி- வேட்டைக்காரன்*

    * * * * * * * * * * மாலை 6 மணி - நல்ல நேரம்*


    பாலிமர் டிவி - இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*

    மீனாட்சி டிவி*-மதியம் 12 மணி - நல்ல நேரம்* *(உள்ளூர் கேபிள்*)

    டி*திரை.எஸ்.சி.வி.- பிற்பகல் 12.30 மணி -எங்க வீட்டு*பிள்ளை*

    டி. டி.வி. (உள்ளூர் கேபிள்*) -மாலை 6 மணி - எங்க வீட்டு*பிள்ளை*

    புது யுகம் டிவி*- இரவு 7 மணி - நல்ல நேரம்*

    டி.திரை.எஸ்.சி.வி. - இரவு 8 மணி - அடிமைப்பெண்*

    மொத்தம் 17 திரைப்படங்கள் பல்வேறு சானல்களில் ஒளிபரப்பாகின.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1752
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1956 அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூபாய் 11,000 நன்கொடை வழங்கிய வள்ளல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    தியாகராய கல்லூரி நிதி : ரூ. 2500

    மதுரைத் தமிழ்ச்சங்க நிதி : ரூ. 1500

    அன்னபூரண உணவுச்சாலை நீதி : ரூ. 1000

    தாழ்த்தப்பட்ட பள்ளிக்கூட நிதி : ரூ. 1000

    சென்னை சிறுவர் பள்ளிக்கூட நீதி : ரூ. 500.

    திருச்சி மழை நிவாரண நிதி : ரூ. 3000

    சென்னை தீப்பிடித்த குடிசைகள் நீதி : ரூ. 1500

    கொடுப்பதற்கென்றே அவதரித்த மகா உத்தமர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....SSubn

  5. #1753
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    33 / 43 / 104 / 74

    காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.... .

    74 ஆண்டுகள் [ 1947 - 2021 ] தொடர்ந்து பயணித்து வரும் 7 தலைமுறை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் .

    43 ஆண்டுகள் [ 1977-2021 ] கடந்த பின்னரும் திரை உலகில் இன்னமும் தொடர்ந்து வரும் எம்ஜிஆர் திரைப்பட தாக்கங்கள்

    33 ஆண்டுகள் மறைந்தாலும் இன்னமும் மறையாமல் மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    104வது பிறந்த நாள் நாடெங்கும் கொண்டாடப்பட்ட புரட்சித்தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்த ரசிகர்கள் / மக்கள் / தொண்டர்கள் .

    2021 தேர்தலை முன்னிட்டு எம்ஜிஆரின் பெயர் / கொடி / சின்னம் / முன்னிலையில் உள்ளது .

    111 பட்டை நாமத்தின் அடையாளம் . எம்ஜிஆரை மறந்த , இருட்டடிப்பு செய்த அனைவருக்கும் வழங்குவோம் .

    உண்மையான எம்ஜிஆர் பக்தர்களின் வேண்டுகோள்
    ************************************************** ************************ .

    50வது ஆண்டு அதிமுக [ 2021] பொன் விழா நேரத்தில் நமது இயக்கத்தின் புகழ் கொடிகட்டி பறக்கட்டும் .தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு இயக்கம் பரிசுத்தமாக பொன்விழாவை சிறப்பிக்கட்டும் ...

    அதிமுக தலைமை நிலையம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் பெயர் சூட்டவேண்டும் .

    திருமதி ஜானகி எம்ஜிஆர் திருவுருவப்படம் அமைக்க வேண்டும் .

    1977- 1987 எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடந்த அரசு விழாக்கள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் .

    அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் .

    எம்ஜிஆரை பற்றி வார /மாத இதழ்கள் / எம்ஜிஆர் படத்தின் பெயரில் புத்தகம் வைத்தவர்கள் / சமூக ஊடகங்களில் தவறாக கட்டுரைகள் / செய்திகள் / ஆடியோ பேச்சுக்கள் / மிகைப்படுத்தி நடக்காத ஒன்றை எழுதியவர்கள் / பேசியவர்கள்
    போலி வேடமிட்டவர்கள் / எம்ஜிஆரை களங்கப்படுத்தியவர்கள் ........அடியோடு ஒதுக்க வேண்டும் ..........vns...

  6. #1754
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஊனமுற்றோர் வாழ்வில் பொன்மனச் செம்மலின் சேவை :
    ������������������������������

    1980 புரட்சித் தலைவர் 2 வது முறையாக
    பதவியேற்றபோது உடல் ஊனமுற்றோர் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவற்றில் சில மட்டும்:

    �� 2142 பேர்களுக்கு 3 சக்கர வண்டி.

    �� 1167 பேர்களுக்கு காது கேட்கும் கருவி.

    �� 2211 பேர்களுக்கு பெட்டிக்கடை வைக்க
    நிதியுதவி.

    �� 1194 பேர்களுக்கு நிரந்தர வேலை பெறும்
    அரசு தொழில்கள் மற்றும்

    �� 2353 பேர்களுக்கு கல்வி அறிவு அளித்தல்.

    �� 771 பேர்களுக்கு சொந்த தொழில் செய்ய
    மானியம்.

    �� 1000 பேர்களுக்கு மேல் செயற்கை கை
    கால் உடலுறுப்புகள் பெற்றனர்....Rnjt

    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

  7. #1755
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய முதல் காவியம் முதல் கடைசி திரைப்படம் வரை ஒரே கொள்கையுடன் ஒரே லட்சியத்துடன் நடித்து மக்கள் மன்றத்தில் நிலையான புகழ் பெற்றார்.
    கொள்கையில்லாத திரைப்படங்கள் எத்தனையோ எம்.ஜி.ஆரை நாடிவந்து ஒப்பந்தம் செய்தபோது திட்டவட்டமாக மறுத்தார். இதனால் பல படங்களில் வரும் லட்சக்கணக்கான,கோடிக்கணக்கான பணத்தை இழந்து, மக்களின் ஒரே குறிக்கோளின் எண்ணப்படி திரையில் நடித்த - நடிக மன்னர், ஒரே சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். ஒருவரே.
    புரட்சி என்பது மக்களின் உள்ளத்தின் தெளிவை வெளிப்படுத்துவது ஆகும். அந்த மக்களின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் நல்ல பலப் புரட்சிகரமான எண்ணங்களைத் திரைப்படத்தில் தான் நடிக்கின்ற கதாபாத்திரத்தின் கருத்தாகவும், எழுத்தின் வடிவமாகவும், பேசும் பேச்சின் மூலமாகவும் இலக்கணமாக வாழ்ந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.
    மக்களின் சிந்தனைக்கும், நாட்டின் ஏற்றமிகு முன்னேற்றத்திற்கும் - மனித உழைப்பின் உன்னதக் கோட்பாட்டிற்கும் - சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், பல நல்ல கருத்துக்களைப் பல படங்கள் வாயிலாகச் சொல்லி அதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பாடமாக மாற்றி அமைத்த ஒரே திரையுலகப் பேராசிரியர் பொன்மனச் செம்மல்! அதனால்தான் உலக வானில் மக்கள் மேதையின் காவியங்கள் மட்டுமே தனி முத்திரை பதிந்து உலா வந்தன, வருகின்றன.
    திரைப்பட உலகில் ஒரு கதாநாயகன் எப்படி ஒழுக்கத்துடன் மக்கள் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் விதம் இருந்தால் அந்தக் கதாநாயகன் உலக வானில் நிலையான புகழ்பெற முடியும் என்பதற்கு உதாரணமாகத் திழ்ந்தார் எம்.ஜி.ஆர். கலையுலகில் தன்னை ஒரு ஒழுக்கமுள்ள கதாநாயகனாக மற்ற நடிகர்கள் பின்பற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றார். சிகரெட் புகையின் மண்டலத்திலும், மதுவின் மயக்கத்திலும் மூழ்கி இருக்கும் சினிமா உலகில் மாறுபட்டு உலக அதிசயமாகத் தன்னை ஒருநிலைப்படுத்தி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகத்தான மனிதர் மக்கள் திலகமே.
    பாதுகாப்பு நிதியாக இருந்தாலும், குடிசைகள் தீப்பற்றி எரிந்தாலும், வெள்ள நிவாரணப் பிரச்சனையில் மக்கள் அவதியுற்றாலும், வறுமைக் கோட்டின் கீழ் ஏழை மக்கள் நொடிந்தாலும், திரைப்படக் கலைஞர்களின் கஷ்டமானாலும், நமது தமிழ் மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநில இயற்கைச் சீற்ற இழப்பானாலும் அங்கு எம்.ஜி.ஆரின் பங்கு முதலிடம் பெறும் என்பதே உண்மை. அங்கு ஏழைகளின் குறை தீர்க்க எந்த நேரத்திலும் பணஉதவி, பொருள் உதவி செய்து அவர்களின் குறைகளைத் தீர்க்க முன்னிலை வகித்த ஒரே திரையுலகக் கலைஞர் எம்.ஜி.ஆர். ஒருவரே....Sujeeth Kumar

  8. #1756
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொஞ்சம் பாலிடிக்ஸ்!!!.........
    -------------------------------------ர்
    இது ஒரு அரசியல் பதிவு!
    இது ஒரு அரசியல் பதிவு ஆனதாலேயே காரத்தை எதிர்பார்க்கலாம்!
    அது ஒரு அரசியல் பதிவு என்றவுடனேயே இதில் விமர்சனத்துக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம்!
    இது ஒரு---வேண்டாம்--போதும்-பதிவுக்குள் போகலாம்-
    கமலஹாசன்!
    தமிழ்த் திரையுலகின் தகுதியை சர்வ தேசத்துக்கு உயர்த்தக் கூடியவர் என்பதை,,எம்.ஜி.ஆருக்குப் பின்னரான தலைமுறையில் இவரைச் சொல்லலாம்!
    அந்த விதத்தில் கமலுக்கு அந்தத் தகுதி நிறையவே உண்டு.
    அரசியல் கமலஹாசன்!
    கருத்து சொல்வது கொஞ்சம் கஷ்டம் தான்!
    காரணம்??
    பொது வாழ்க்கைக்கு வரும் எந்த ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது அரங்கத்தில் நிச்சயமாக ஆராயப்படும். அலசப்படும்!
    நடிப்புத் துறை--அல்லது வேறு எந்தக் கலைத்துறை--அல்லது தொழில் சார்ந்த வியாபாரம்--இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வது அவஸ்யமில்லை.
    அரசியல்--ஆன்மீகம்--இந்த இரண்டில் மட்டும் அது தான் அடிப்படை என்றாகிறது! பிகாஸ்??
    இவை இரண்டு மட்டுமே சேவை ஆற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது இல்லையா?
    மருத்துவர்,,சட்டம்--ஆசிரியர்--காவல்துறை--ராணுவம் போன்ற பிற சேவைகளை விட மக்கள் இந்த அரசியல் ஆன்மிகம் இவற்றாளேயே முக்கியப் பயனடைவதால் இவை இரண்டும் முக்கியமாகிறது!
    அப்படி கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மன்னிக்கவும்--நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது?
    ஓகே! கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை இங்கே ஆராய்வது நமக்குத் தேவையில்லாத ஒன்று என்பதால் அதை விட்டு விடுவோம்!
    அண்மையில் அரசியல் வாதியாகக் கமல்??
    நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று ஸீன் போட்டு எம்.ஜி.ஆரை மிக உயர்த்திப் பேசியது அரசியல் ஆதாயத்துக்காகவே என்று அ.தி.மு.க கட்சியினர் வாதாடினாலும்--
    பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் கமலின் இத்தகைய செயல்பாடுகள் நமக்கு வருத்தத்தை தரவில்லை என்பதுடன்,,அதை நாம் வரவேற்கிறோம் என்பதையும் அழுத்தமாக இங்கேப் பதிவு செய்கிறோம்??
    இந்த இடத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி இங்கேக் குறிப்பிட வேண்டியிருக்கிறது
    கட்சி ஆரம்பித்து புரட்சித் தலைவர் என்னும் விருதை அவர் அன்றைக்குப் பெற்றிருந்தாலும்,,அதை விட வலுவான புரட்சித் தலைவராக இப்போது தான் வலம் வருகிறார்--
    உலக சரித்திரத்தில் மாற்றுக் கட்சியினரையும் மதிக்கச் செய்த ஒரே தலைவன் எம்.ஜி.ஆர் தான் என்பது--
    உலக புரட்சியாகத் தானே உச்சரிக்கப்படுகிறது?
    காந்தியைக் கொண்டாடுபவர்கள்--சுதந்திரம்--விடுதலை போன்றவற்றை முன்னெடுக்கும் காங்கிரஸில் மட்டும் தானே?
    அண்ணாவை ஆராதிப்பது தென்னகத்தில் அதுவும் தமிழ் நாட்டில்--அதுவும் திராவிடம் பேசுபவர்கள் மத்தியில் மட்டும் தானே??
    சவாலாகவே ஒன்றை சொல்லுவேன்--
    ஒரு தி.மு.க நிர்வாகியுடன் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிப்[ பாருங்கள்--
    எம்.ஜி.ஆர விடுங்க,,அவர விட்டுட்டுப் பேசுங்க--இப்படித் தான் குறிப்பிடுவார்கள். எவர் வேண்டுமானாலும் முயன்று பார்க்கலாம்.
    மெகா ஸ்டாராக ஆந்திராவில் சிரஞ்சீவி!
    சூப்பர் ஸ்டாராக தமிழகத்தில் ரஜினி!
    மெகா சூப்பர் ஸ்டாராக எப்போதுமே இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர் ஒருவர் தானே?
    சொல்லப் போனால் ஜாதி இன--மத-சமயம் கடந்து அனைவருக்குமே அவர் ஆண்டவனாகத் தானே தோன்றுகிறார்?-
    ரஜினி என்ற சவாலும் இல்லை
    ஆளுமையான--கவர்ச்சியான தலைமையும் அ.தி.மு.கவில் இல்லை என்னும் போது--
    எம்.ஜி.ஆர் என்னும் ட்ரம்ப் கார்டை கமல் உபயோகிப்பதில் என்ன தவறு?
    அ.தி.மு.க தலைமையே--
    நீங்கள் எம்.ஜி.ஆரை உணர மறுப்பது எவ்வளவு பேர்களுக்கு உபயோகமாகிறது பார்த்தீர்களா?
    உங்கள் கட்சியின் அனுதாபி என்ற விதத்தில் ஒன்று சொல்வேன்--
    இப்போது கமலைத் தேவையில்லாமல் தூற்ற வேண்டாம்?
    அப்படியாவது பறங்கி மலையான் சிறப்பு பவனி வரட்டும். சொல்ல முடியாது?
    நாளையத் தேர்தலில் அதுவே இரட்டை இலையின் மகிமை இன்னும் பரவி உங்களுக்கு வாக்குகளைக் குவிக்கலாம்?
    எம்.ஜி.ஆர் தொண்டர்களே--
    எங்கள் எம்.ஜி.ஆருக்கு மறைவு என்பதே இல்லை என்பீர்களே?
    இதோ,,ஒரு கமல்,,ஒரு மோடி இப்படிப் பலர் மூலம் மறுபடியும் ஒரு பயணத்தைத் தொடங்கி விட்டார் நம் பாரத புத்திரன்!!!.........vtr...

  9. #1757
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்துக்கு ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது?
    என்பதில் பலரும் பலவிதமான கருத்துகள் கொண்டிருந்தாலும்
    ஒன்று மட்டும் அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள் யாரும் நெருங்க முடியாத அளவு சம்பளம். ஆனால் ஒரே சம்பளத்தை அவர் எல்லா படத்துக்கும் வாங்கியதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அவரது சம்பளம் மாறுபடும். அவருடைய சம்பளம் இந்தியாவிலேயே அதிகபட்சம் சம்பளம் பெறும் இந்தி நடிகர்களை காட்டிலும் அதிகமானது.

    கண்ணதாசன் தனது சுயசரிதையில் மற்றவர்களை பற்றி எழுதும்போது தான் எந்த மனநிலையில் இருக்கிறாரோ அதன் வெளிப்பாடகவே அது இருக்கும். அவருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் போதும் அதற்கு யார் காரணம் என்பதை அவரே தீர்மானித்து அவர்களை சாட ஆரம்பித்து விடுவார். பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டு விடும் என்பதைப் போல, அது சரியா தவறா என்பது கூட அவருக்கே தெரியாது. எம்ஜிஆருக்கு எழுதிய பல பாடல்களில் திருத்தம் செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க வாலியை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலையை அவரே உருவாக்கினார்.

    அதன்பின் தன்னை எம்ஜிஆர் ஒதுக்க ஆரம்பித்து விட்டார் என்று அவரே முடிவு செய்து தலைவரை கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பித்தார். இவர் இல்லையெனறால் எம்ஜிஆரால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்திருந்த அவருக்கு வாலியின் வரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்போது அவர் எழுதிய 'அகமும் புறமும்' என்ற காழ்புணர்ச்சி சாடல் பதிவில் எம்ஜிஆர் வாங்கும் சம்பளத்தை பற்றி அவர் குறிப்பிடும் போது எம்ஜிஆர் கணக்கில் வருவதை காட்டிலும் 6 மடங்கு கணக்கில் இல்லாமல் வாங்குகிறார் என்று பொறாமையால் பொங்கி இருந்தார்.

    அதன்படி கணக்கு பார்த்தால் எம்ஜிஆர் "அன்பே வா" படத்துக்கு கணக்கில் 3.25 லட்சமும் கணக்கில் இல்லாமல் 19.5 லட்சமும் மொத்தம் 22.75 லட்சமும் வாங்கியதாக சொல்கிறார் என்றால் தலைவரின் வியாபார விஸ்தீரணம் என்ன என்பதை யாரும் கற்பனை செய்ய முடியாதது. கண்ணதாசன் மாற்று நடிகரின் அணியில் இருந்து கொண்டே அவர் ஒரு செல்லாக்காசு என்பதை தலைவர் மீது கொண்ட பொறாமையில் ஒத்துக்கொண்டது
    தெரிகிறதா? கைஸ்களே. இனியாவது தங்களின் தகுதிக்கு தக்கவர்களோடு மோதுங்கள். தலைவர் படத்துக்காக பெற்ற பணத்தின் பெரும் பகுதி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவே பயன்படுத்தினார்.

    பின்னர் எம்ஜிஆரால் அரசவை கவிஞர் பதவியும் அவரது கடனும் தலைவரால் அடைக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் மீது கனிவும் பரிவும் அதிகமாக, வானளாவ புகழ ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே. ஏன் கண்ணதாசன் சந்திரபாபுவால் பட்ட பாடு நாடறியும். "கவலை இல்லாத மனிதன்" படத்தை எடுத்து ஒரு குடிகாரனை அழைத்து வர சந்திரபாபு வீட்டில் தவம் கிடந்ததையும் அவர் இவர் இருக்கிறார் என்று தெரிந்து பின்வாசல் வழியாக தப்பி ஓடி கவிஞரை தவிக்க விட்ட கதையை கண்ணதாசனே விவரித்தது நாடறியும்.

    அப்படியிருக்க எளியவர்கள் மற்றும் புதியவர்கள் எப்படி புரட்சி நடிகரை வைத்து படமெடுக்க முடியும் என்ற
    கேள்வி எழுவதில் வியப்பில்லை.
    எம்ஜிஆரின் ஒப்புதல் கிடைத்து விட்டால் போதும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் விநியோகஸ்தர்கள் தர தயாராக இருந்தார்கள்.

    அப்படித்தான் ஒரு 100 ரூ கூட அட்வான்ஸ் கொடுக்க முடியாத பந்துலு தலைவரை வைத்து "ஆயிரத்தில் ஒருவனை" லட்சக்கணக்கில் செலவழித்து பிரமாண்டமாக எடுக்கவில்லையா?
    ஸ்ரீதரைக் கண்டாலே ஓடி ஒளியும் விநியோகஸ்தர்கள் எம்ஜிஆரின் கடைக்கண் பார்வை கிடைத்ததும் உரிமைக்குரலை எழுப்ப ஓடி வரவில்லையா! இது எம்ஜிஆர் தனக்கு செய்யும் உதவி என்று அடக்கத்துடன் நின்று அவர் வழியில் படத்தை தயாரிக்கும் சூட்சுமத்தை புரிந்தவர்கள் வென்றார்கள்.

    அதை விடுத்து மமதை கொண்டு தானே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்று கொக்கரித்த தயாரிப்பாளர்களுக்கு தன்நிலை புரிய வைத்தபின் அவர்களை கரை சேர்ப்பார். அப்படியும் பிரமாண்ட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தில் எம்ஜிஆர் கமிட் ஆக விரும்புவதில்லை. ஒரு காலத்தில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த படத்தில் மக்கள் திலகம் நடித்ததில்லை, ஓரிரண்டு படங்களை தவிர.

    ஆனால் மாற்று நடிகரோ பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அண்டியே பிழைத்து வந்தார். அவர்கள் தரும் சம்பளத்தை சிந்தாமல் சிதறாமல் அள்ளி விடுவதிலேயே குறியாக இருப்பார். அவர்களிடம் அதிக பட்சமாக ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டு வேலையை முடித்து கொடுத்து விடுவார். ஆனால் எம்ஜிஆர் நட்பின் அடிப்படையில் தேவரின் படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்தார். யாரும் நினைத்து பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலும் பரமஏழைகளும் நெருங்கும் விதத்தில் எளிமையாக வாழ்ந்த ஒரு மாபெரும் மனிதர் என்பதே உண்மை...........ksr...

  10. #1758
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தேசிய தலைவர்கள் பெயர்கள்
    மட்டுமே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சாலைகளுக்கு (அந்தந்த மாநில தலைவர் பெயர்கள் தவிர்த்து) வைக்கப்படும்...

    உதாரணமாக:-
    மகாத்மா காந்தி சாலை
    அம்பேத்கர் சாலை
    நேரு சாலை
    இந்திரா காந்தி சாலை
    ராஜிவ்காந்தி சாலை
    என்று ஆனால்
    வேறொரு மாநில முதல்வரின்
    பெயரை வேறொரு மாநில சாலைகளுக்கு சூட்ட பட்டது என்றால்
    அது நம்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் பெயர் மட்டுமே ஆகும்...

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக...

    இனிய வணக்கம்... Sen.bu

  11. #1759
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொஞ்சம் பாலிடிக்ஸ்!!
    --------------------------------
    நேற்றைய --கொஞ்சம் பாலிடிக்ஸ்-பதிவு இப்படி நீளும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இந்தப் பதிவிலும் உங்களுக்கு ஒரு முக்கிய சேதி இருக்கிறது
    நேற்றையப் பதிவைக் கொஞ்சம் நினைவு கூர்வோம்--
    வலுவான--மக்களை ஈர்க்கக் கூடிய தலைமை அ.தி.மு.கவில் இல்லாத இந்தச் சூழ் நிலையை,,கமல் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயல்கிறார் என்பது--அ.தி.மு.க கட்சிக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவும்-
    அரசியல் கடந்த எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்றே நான் சொல்லியிருந்தேன்
    இதில் எந்த இடத்தில் கமலை நான் புகழ்ந்திருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை
    எம்.ஜி.ஆர் சக்தி என்பது இருட்டடிப்பு செய்யப்பட முடியாத சக்தி என்பதை இன்றைய அ.தி.மு.க உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு என்று தானே கருத வேண்டும்.
    சொல்லப் போனால் பதிவின் ஆரம்பத்திலேயே பொது சேவைக்குக் கமல் லாயக்கற்றவர் என்று தானேக் குறிப்பிட்டிருக்கிறேன்?
    கமலின் பிரம்மாண்ட சினிமா இமேஜ்--
    ரஜினியின் ஒதுங்கலால் அவருக்கு உண்டாகியிருக்கும் சௌகர்யம் இவற்றையெல்லாம் விட--
    இன்று அருவமாக அருள் ரூபமாக ஆட்சி செய்யும்-
    சினிமாவை விட்டு45 வருடங்கள் கடந்தவருமான எம்.ஜி.ஆர் தான் கமலுக்கும் தேவைப்படுகிறார் என்பது நமக்குத் தானே பெருமை?
    கமல் என்ன எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவது? என்ற வாதம் நகைப்புக்கு உரியது எப்போதுமே--
    இருப்பவன் ஏதும் செய்யாத நிலையில்--
    இல்லாதவன் முனைவதில் என்ன தவறு?
    எம்.ஜி.ஆர் என்பவர் இந்திய தேச தலைவராகிவிட்டார். இந்திய அரங்கில்--சில காலத்துக்குப் பின் உலக அளவில் பேசப்படப் போகும் ஒரு சக்தியை அ.தி.மு.க என்னும் சிறு பிடிக்குள்ளேயே வைத்திருக்க எண்ணுவதும் தவறல்லவா?
    இதில் ஒரு வேடிக்கை?
    நான் ஐயராம்? அதனால் கமலை ஆதரிக்கிறேனாம்?
    அவர் கருணா நிதியிடம் பாடம் படித்திருப்பார் போலும்?
    முக நூலுக்குப் பூணூல் போடுகிறார்??
    சரி,,இன்றைய விஷயத்துக்கு வருவோம்--
    ஆங்காங்கே அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் வழக்கத்தை விட வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது?
    அந்தக் கட்சியின் மேல் மட்ட நிர்வாகி ஒருவருடன் பேசிய போது ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்தது?
    ஒன்றிய--ஊரக--வட்ட--சதுர அமைப்புகள் யாவும் வெகு விமரிசையாக எம்.ஜி.ஆரைக் கொண்டாட வேண்டும் என்பது--முதல்வரிடமிருந்து வந்திருக்கும் முக்கிய ஓலையாம்??
    மகிழ்ச்சியான இந்த செய்திக்காக நாம் முதல்வரைப் பாராட்டும் அதே நேரத்தில்--
    இரண்டொரு ஐயங்கள்??
    அம்மாவுக்கு எதிராக வாய் திறக்கவே முடியலீங்க என்று அன்று ஒப்பாரி வைத்தவர்கள் தானே இவர்கள்?
    ஜெ மறைந்து,,நான்கு வருடங்கள் கழிந்து இந்த வருடம் மட்டும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை தடபுடல் செய்வது ஏன்?
    கொரோனாவின் பாதிப்பு இன்னும் முற்றிலும் அகலாத சூழல் இது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்?
    இதற்கு என்ன காரணம்??
    சில மாதங்களில் வரப் போகும் தேர்தல்???
    சரி,,,,எம்.ஜி.ஆரை வேறு யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பது சரி என்றே வைத்துக் கொள்வோம்--
    சரி,,அந்தக் கட்சியின் போஸ்டர்கள் என்ன சொல்கிறது?
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்!!
    இதய தெய்வம் அம்மா??
    இது இவர்கள் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தும் லட்சணம்??
    எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரனிடம் ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்லியிருக்கிறார்--
    என் மீட்டிங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதியில் என்னிடம் இரட்டை இலையை இரட்டை விரல்களால் காட்டியே விடை தருகிறார்கள்???
    மீண்டும் சொல்வேன்--
    நீங்கள் உங்கள் கட்டுக்குள் எம்.ஜி.ஆர் என்னும் வீட்டை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது அவசியம்
    வீட்டைத் திறந்து வைத்திருப்பது தவறில்லை
    திருடன் உள்ளே வந்து திருடுவது தான் குற்றம்?? என்றால்??????...vtr

  12. #1760
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    மன்னாதி மன்னன்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

    கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் மூலம் நம் மக்கள் திலகம் மக்களுக்கு
    கூறும் பாடல்கள் பற்றிய இந்த தொடர் பதிவை புரட்சி தலைவர் பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இருந்ததால் பதிவை இரு நாட்கள் தொடர முடியாமல் போனது மன்னிக்கவும்..
    வாருங்கள் தொடரை தொடருவோம்..

    1975 – ஆம் ஆண்டு, துக்ளக் சோவின் கதை வசனத்தில், இயக்கத்தில் வெளிவந்த படமே, ‘யாருக்கும் வெட்கமில்லை!’ என்ற படம்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலம். துக்ளக் சோவோ தி.மு.க, எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா தி.மு.க, இரண்டும் தமிழகத்தில் வளர்ந்து விடாது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தவர். இதே வேகத்தில் நின்றவரே கண்ணதாசன்.

    அதனால், ‘யாருக்கும் வெட்கமில்லை’, படத்தில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து ஒரு பாடல் காட்சி.

    அப்பாடல் காட்சிக்கான பாடலைப் பார்ப்போமே!

    “சினிமாவில் வருவது போலே – நீ
    சிரித்துக் கொண்டு டூயட் பாடடி!….”

    என்று தொடங்கும் பாடலில்,

    ஆண்: “அழகிய தமிழ் மகளே!

    பெண்: என் அன்பே! கொடை வள்ளலே!

    ஆண்: புரட்சித் தலைவி நீயே!

    பெண்: என் புதுமைக் கலைஞன் நீயே!
    நீ இல்லை என்றால் நான் இல்லை!

    ஆண்: அடி நீ அல்லை என்றால் நான் இல்லை!”

    என்றெல்லாம் வரிகள் வளர்ந்து வரும்.

    எம்.ஜி.ஆரைக் கேலி செய்து கவிஞர் எழுதிய பாடல் வரிகளில் கூட,

    ‘கொடை வள்ளல்!’ ‘புதுமைக் கலைஞன்!’ என்ற சொற்கள் வந்துதானே நிற்கின்றன.

    1990 – ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவை, 1975 – ஆம் ஆண்டே கவிஞரின் பாடல் வரி,

    ‘புரட்சித்தலைவி நீயே!’

    என்று சுட்டுவதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! அப்போது புரியும் அவரது வாக்கின் வலிமை.

    ஜெயலலிதா அரசியலுக்கு வராத அக்காலகட்டத்தில், கவியரசரின் எண்ணத்தில் எழுந்து வந்த வார்த்தை, இன்று தமிழகமெங்கும் ஒலிக்கப் பெறுவதை எண்ணிப் பாருங்கள்!

    பின்னர், ‘நீ இல்லை என்றால் நான் இல்லை!’ என்ற தொடருக்கு, நீங்களே பதில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்!

    எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவராய்’ அவர் நின்று காத்த இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவியாய்’ ஜெயலலிதா இறக்கும் வரை இருந்து காத்த அதிசயம், உங்கள் இதயங்களுக்குள் கவி வாக்கின் பெருமைதனைப் பேசிட வைக்கும் என்பதும் உண்மைதானே...

    அன்புடன Shenthilbabu Manoharan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •