Page 171 of 210 FirstFirst ... 71121161169170171172173181 ... LastLast
Results 1,701 to 1,710 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1701
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய " காலை வணக்கம் "

    ஜனவரி 12
    நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
    நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்களை திரு. எம் ஆர் ராதா அவர்கள் துப்பாக்கியால் சுட்ட நாள் மீண்டும் ஒரு முறை நமது வாழ்வில். அந்த வேதனை தந்த நாளை ( 12-01-67 ) குறிக்கும் பத்து ரூபாய் நோட்டு உங்கள் பார்வைக்கு...........

    கடந்த 1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

    ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர், இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், ராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் ராதா குற்றவாளியென முடிவு செய்ததாக கூறப்பட்டது.

    இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராதாவின் வயது (அப்போது 57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தது..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1702
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Temple | எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்
    சென்னை: இறைவன் எம்ஜிஆர் என்னும் பூவின் மூலம் நான் புகழடைந்துள்ளேன் என்று எம்ஜிஆருக்கு கோவில் கட்டியுள்ள அவரது ரசிகர்க கூறியுள்ளார்.
    திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார்.

    எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அவர் கொடுத்த ஐடியாபடியே இந்த கோவிலைக் கட்டியுள்ளார்.
    கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
    கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 10க்கு 10 அறையில்தான் கட்ட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. எல்லாம் இறைவன் எம்ஜிஆர் அருள்தான் என்று கூறியுள்ளார்.
    1977ஆம் ஆண்டு எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்ததாக கூறும் கலைவாணன் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். தர்மத்தின் வழியில் நடந்த அவர்தான் தனது இறைவன் என்கிறார். இறைவன் எம்ஜிஆர் என்கிற பூவின் மூலம் இந்த கலைவாணன் மணக்கிறான். சாதாரண பேப்பர் போடும் நபரான தனக்கு எம்ஜிஆர் மூலம்தான் பணம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர் கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்.
    மவுண்ட்ரோட்டில் பேப்பர் போடும் தொழில் செய்து வந்த தனக்கு எல்லாமே எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார். அவருக்கு உதவி செய்பவர் அவரது மகள் சங்கீதா.
    ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் இறைவன் எம்.ஜி.ஆர்.தான் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி நெகிழ்கிறார் கலைவாணன். இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கும் குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்..........Baabaa

  4. #1703
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு. உ..த்தமன் 12
    -----------------------------------------------
    தலைப்பு செய்திக்கு முன் ஒரு முக்கியமான தகவலை குறிப்பிட வேண்டி இருக்கிறது. 1968 ல் வெளியான "கலாட்டா கல்யாணம்" ஜோஸப்பில் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவில் தூத்துக்குடி பெரிய உப்பு கம்பெனி அதிபரின் வீட்டில் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. அவரது வாரிசுகளிலும் தீவிரமான கைஸ்கள் உண்டு. அவர்களில் ஒரு சிலர் நட்பின் அடிப்படையில் எனக்கு பழக்கமுண்டு.

    அந்த பழைய நாட்களில் அய்யன், முத்துராமன், மனோரமா அவர்களில் யார் தூத்துக்குடி வந்தாலும் உப்பு அதிபர் வீட்டு விருந்தில் கலந்து கொள்வர்.
    இதில் "கலாட்டா கல்யாணம்" ரிலீஸிக்கு முந்தைய நாள் திரையிட்டு பார்க்கும் போது நிறைய கைஸ்கள் வெளியே நின்று படத்தின் ரிசல்ட் கேட்பதற்கு நடு இரவில் காத்து நின்றனர். படத்தை பற்றி புகழ்ந்து பேசிய கைஸ்கள் மறுநாள் ஜோஸப் தியேட்டரில் வரவேற்பு ஆர்ச்சில் எம்ஜிஆரை கேவலப்படுத்தும் வாசகங்களை ஒட்டி மகிழ்ந்தனர்.

    அதன்பின் எம்ஜிஆர் ரசிகர்கள் கூட்டமாக வந்து அனைத்தையும் புடுங்கி எறிந்து விட்டு அய்யன் கைஸ்களை அடித்து விரட்டினர். இது போன்ற சமாசாரங்கள் இங்கு அவ்வப்போது நடைபெறும். இதனால் கோபமடைந்த எம்ஜிஆர் ரசிகர்கள் அய்யனின் போஸ்டர்களை கிழித்தும், அபிஷேக (சாணி) மழை பொழியவும் செய்தனர். அன்றிலிருந்து அய்யன் போஸ்டர்களை பார்த்தவுடன் அபிஷேகம் தெளிவாக நடந்தது. இந்த விஷயத்தில் அய்யனின் கைஸ்களுக்கு தெளிவான திறமையும் ஆட்களும் இல்லாததால் தோல்வி அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

    அவர்கள் வீட்டு கைஸ்கள் பல புதிய தகவல்களை சொல்வார்கள். பிற்காலத்தில் அவர்களே தியேட்டர் கட்டி அதில் கமலஹாசனோடு அய்யன் நடித்த படத்தை திரையிட்டு அதை 100 நாட்கள் ஓட்டி மகிழ்ந்தனர். அவர்கள் திரையரங்கில் இன்றும் அய்யனின் படத்தை பிரதானமாக வைத்து விட்டு மற்ற நடிகர்களின் படத்தை சுற்றி வரைந்து வைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள்.

    இப்படி ஊரில் உள்ள பணக்கார கைஸ்கள் சேர்ந்து ஓட்டிய படம்தான் "சிவந்தமண்". அய்யனுக்கு முதல் 100 நாள் படத்தை காணிக்கையாக செலுத்தினர். அடுத்தாற்போல் "உலகம் சுற்றும் வாலிபன்" "உரிமைக்குரல்" "இதயக்கனி" போன்ற தலைவரின் படங்களின் சாதனையை அடுத்து வேதனை கொண்ட கைஸ்களின் நெஞ்சத்தில் பால் வார்க்கும் என்று நினைத்த "உத்தமன்" 1976ல் காரனேஷனில் வெளியானது. மீண்டும் சிவந்த மண்ணைப்போல் அய்யனுக்கு இன்னொரு சாதனையை உருவாக்க நினைத்த கைஸ்களுக்கு மிஞ்சியது வேதனைதான்.

    அந்த ஆண்டு அய்யனின் 4 படங்கள் காரனேஷனில் வெளியானது. "கிரகப்பிரவேசம்" "சத்யம்" "சித்ராபவுர்ணமி" மற்றும் "உ....த்தமன்"
    ஆகிய படங்கள் அனைத்தும் குப்பையாக இருந்ததால் "உ...த்தமனை" தேர்ந்தெடுத்து அதை
    105 நாட்கள் படமாகவும் 100 காட்சிகள் தொடர்hf ஆகவும் அவர்கள் போட்ட திட்டத்தை கைஸ்கள் பெருமையாக சொல்லி கொண்டனர். "கிரகப்பிரவேசம்" 18 நாட்களும் "சத்யம்" 21 நாட்களும் "சித்ராபவுர்ணமி" அந்த ஆண்டின் சாதனை படமாக அமைந்து 13 நாட்களும் ஓடியது. உ....த்தமன்" 1976 ஜீன் 25 ல் படம் வெளியானது.

    மீண்டும் அடுத்த பதிவில்.........ksr...

  5. #1704
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய "பொங்கல்" திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...

  6. #1705
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் பல நன்மைகளை செய்தார். அவரால் பயனடைந்து வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர். அவர் காலஞ்சென்ற பின்பும் அவரால் பலர் பயனடைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

    இன்றும் அவருடைய படங்களால் பல தியேட்டர் அதிபர்கள் லாபம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். சின்னத்திரையிலும் அவர் திரைப்படங்கள் திரையிட்டு லட்சோபலட்சம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் எந்த ஒரு மனிதருக்கும் இல்லாத மவுசு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் இருந்துகொண்டு வருகிறது.

    நூற்றுக் கணக்கான புத்தகங்கள் அவரைப் பற்றி எழுதப்பட்டு இன்றும் வெளியே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவரை பற்றி செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக போட்டு விட்டாலே போதும் அன்றைய தினம் எந்த ஒரு இதழும் கிடைக்காது. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதோ செய்தி வந்திருக்கிறது அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தால் எல்லா இதழ்களும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் சரி, சினிமா நடிகர்களுக்கும் சரி, ஆற்றல் மிக்க அறிஞர்களுக்கும் சரி இன்றளவும் நிகழ்ந்தது இல்லை இனி நிகழப் போவதும் இல்லை. புரட்சித் தலைவருடைய புகழை யாராலும் எவராலும் நெருங்க முடியவில்லை இனி நெருங்கவும் முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். உலகிலேயே மக்களின் உள்ளங்களில் உயர்ந்து மனித தெய்வமாக நேசிக்கப்பட்டவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

  7. #1706
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்திலகம் சுடப்பட்டு.. ஆயிற்று 54 ஆண்டுகள். அது 1967 ஜனவரி 12..

    எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 54 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை.

    என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது.

    1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா.

    எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.

    "என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் (இராஜிவ் கொலை வழக்கு) ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.

    ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன்.

    'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' எம்ஜியாரிடம் விளக்கினார்.

    துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது.

    எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

    #தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர்,

    ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும்.

    ஆனால் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

    இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா,

    ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார்.

    இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து முருகா, ந*ம*து ப*ட*ப்பிடிப்பில் சண்டையும், அர*சிய*லும் வேண்டாம் என்று சமாதானப்படுத்தினார்.

    இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா.

    இதுதவிர, 'காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும்' ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது.

    வழக்கு விசாரணையில், 'எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்' என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

    'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்'

    -என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர்.

    இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில்,

    'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார்.

    'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.

    நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன.

    'எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
    இல்லாத துப்பாக்கியால் சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா,

    "யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

    துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார்.

    'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி,

    ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

    கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான்.

    அப்போதுகூட, 'உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.

    மலேசிய நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார்.

    1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

    1967ல் எம்.ஆர்.ராதாவால் சுட*ப்ப*ட்ட* எம்ஜிஆர் 4 மாத*ங்க*ளில் பூர*ண* குண*ம் பெற்றார். குர*லில் சற்று பாதிப்பு ஏற்ப*ட்டாலும் அதை பொருட்ப*டுத்த*வில்லை. முன்பை விட* வேக*மாக*வும், செல்வாக்குட*னும் இருந்து மேலும் 10 ஆண்டுக*ள் திரைவானிலும், 20 ஆண்டுக*ள் அர*சிய*ல் உலகிலும் முடிசூடா ம*ன்ன*ராக விள*ங்கினார். ம*றைந்து 33 ஆண்டுக*ள் ஆகியும் ம*ங்காப்புக*ழுட*ன் இருக்கிறார் மக்கள் திலகம்..

    ஆனால், குற்ற*வாளியான* எம்.ஆர்.ராதாவோ நான்க*ரை ஆண்டுக*ளில் விடுத*லையானாலும் திரையுல*க வாழ்க்கை சோபிக்க*வில்லை..க*ருணாநிதியுட*ன் சேர்ந்துகொண்டு அவ*ர*து த*யாரிப்பான* ச*மைய*ல்கார*ன், வ*ண்டிக்கார*ன் ம*க*ன் உள்ளிட்ட* பாடாவ*தி ப*ட*ங்க*ளில் ந*டித்து பாதாள*த்திற்கு போனார்...

    "த*ர்ம*மும் நீதியுமே எப்போதும் வெல்லும்"..

    வாழ்க* பொன்ம*ன*ச் செம்ம*ல் புக*ழ்...

  8. #1707
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பொங்கல் #ஸ்பெஷல் 1

    #பொங்கல் 2021 #நல்வாழ்த்துக்கள்... "குடியிருந்த கோயில்"...

    இந்தப் படத்தோட டைட்டில் சீனே சும்மா தூள் பறக்கும்...
    ஓபனிங் சீன் கேட்கவே வேண்டாம் ...
    அனல் பறக்கும் ...
    தியேட்டர்ல விசில் பறக்கும்...

    இந்த இரண்டுமே வாத்தியார் படத்துல அம்சமாக இருக்கும்.
    வாத்தியார் படங்களின் இமாலயவெற்றிகளுக்கு இதுவும் முக்கிய காரணங்கள்.

    இதைப் பார்த்துத்தான் இன்றைய நடிகர்கள் காப்பி அடிக்கிறார்கள்... இது
    "புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட" கதை தான்.

    இதோ அந்த டைட்டில் காட்சியும், வாத்தியாரின் ஸ்டைலான ஓபனிங் சண்டைக்காட்சியும்...

    #தமிழர் #திருநாளை முன்னிட்டு தனது பக்தகோடிகளான ரத்தத்தின் ரத்தங்களுக்கு தரிசனம் தரவருகிறார்
    "#வாத்தியார்"

    இதோ...!!!.........bsm...

  9. #1708
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Temple | எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்
    சென்னை: இறைவன் எம்ஜிஆர் என்னும் பூவின் மூலம் நான் புகழடைந்துள்ளேன் என்று எம்ஜிஆருக்கு கோவில் கட்டியுள்ள அவரது ரசிகர்க கூறியுள்ளார்.
    திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார்.

    எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அவர் கொடுத்த ஐடியாபடியே இந்த கோவிலைக் கட்டியுள்ளார்.
    கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
    கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 10க்கு 10 அறையில்தான் கட்ட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. எல்லாம் இறைவன் எம்ஜிஆர் அருள்தான் என்று கூறியுள்ளார்.
    1977ஆம் ஆண்டு எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்ததாக கூறும் கலைவாணன் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். தர்மத்தின் வழியில் நடந்த அவர்தான் தனது இறைவன் என்கிறார். இறைவன் எம்ஜிஆர் என்கிற பூவின் மூலம் இந்த கலைவாணன் மணக்கிறான். சாதாரண பேப்பர் போடும் நபரான தனக்கு எம்ஜிஆர் மூலம்தான் பணம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர் கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்.
    மவுண்ட்ரோட்டில் பேப்பர் போடும் தொழில் செய்து வந்த தனக்கு எல்லாமே எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார். அவருக்கு உதவி செய்பவர் அவரது மகள் சங்கீதா.
    ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் இறைவன் எம்.ஜி.ஆர்.தான் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி நெகிழ்கிறார் கலைவாணன். இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கும் குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்..........Baabaa...

  10. #1709
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!
    https://www.thaaii.com/?p=59758

    ஒசாமஅசா தொடர்; 16 எழுத்தும், தொகுப்பும்; மணா

    பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.

    அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.

    “தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..

    “என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.

    “எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”

    அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.

    அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல் தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம். விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.

    யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.

    சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.

    “இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

    அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.

    இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.

    “ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.

    எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..

    அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.

    எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

    வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது என்மீது விசேஷமான பரிவைக் காட்டியிருக்கிறார். நான் அப்போது மாலை நேரங்களில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்ததால் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரமே எடுத்து அனுப்புவார்.

    ‘அடிமைப்பெண்’ படத்திற்காக ஜெய்ப்பூரில் பதினைந்து நாட்களுக்கு மேல் ‘ஷூட்டிங்’. நான் புறப்படுவதற்கு முன்பே அவரிடம் நான் லீகல் அட்வைஸராக இருந்த டி.டி.கே. கம்பெனியில் ஒரு வழக்கு விஷயமாக குறிப்பிட்ட நாளில் சென்னை திரும்பியாக வேண்டும்.

    அந்த வழக்கில் வாய்தா கேட்காமல் நான் ஆஜராக வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தேன். அவரும் எப்படியாவது அதற்குள் என்னை அனுப்பி விடுவதாகச் சொல்லியிருந்தார்.

    ஜெய்ப்பூருக்குக் கிளம்பிப் போய்விட்டோம். அதற்குப்பிறகு எம்.ஜி.ஆரிடம் நான் அதை நினைவுப்படுத்தவில்லை. ‘ஷுட்டிங்’ நடந்து கொண்டிருந்தபோது எனக்குத் தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுவலி. துடித்துப்போய் விட்டேன். எம்.ஜி.ஆர். என்னை வந்து பார்த்தார்.

    “உங்களுக்கு உடம்பு சரியாகிற வரைக்கும் நடிக்க வேண்டாம். ரெஸ்ட் எடுங்க. சென்னைக்குப் போக ‘டிலே’ ஆகிடும்னு நினைக்காதீங்க. உங்களைச் சொன்னபடி சரியா அனுப்பி வைச்சுடுவேன்” என்று சொல்லிவிட்டு அவருக்காக அவருடன் வந்திருந்த டாக்டரை என்னுடன் தங்க வைத்துக் கவனித்தார்.

    என்னுடன் வந்திருந்த நண்பர்களை அழைத்து “அவர் கூடவே இருந்து கவனிச்சுக்குங்க. அவர் எதையும் கேட்கத் தயங்குவார். நீங்க எது வேண்டுமானாலும் புரொடக்ஷன் மேனஜரை உடனே காண்டாக்ட் பண்ணுங்க” என்று பரிவோடு என்னைப் பார்த்துக் கொண்டார்.

    அன்றைக்கு நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டிய தினம். அதை நான் வலியுறுத்தாவிட்டாலும் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அன்று மாலைக்குள் எடுத்து முடித்துவிட்டு, “நான் சொன்னபடி செஞ்சுட்டேன். பார்த்தீங்களா?” என்று கேட்டார்.

    நாங்கள் ஜெய்ப்பூரில் இருந்தபோது அவருடைய நூறாவது படமான ‘ஒளிவிளக்கு’ தமிழகத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு.

    நாங்களோ பாலைவனத்தில் ஷூட்டிங்கில் இருந்தோம்.

    “ஏமாற்றாதே... ஏமாற்றாதே...” பாட்டுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ‘ஒளிவிளக்கு’ ரிலீஸ் ஆனதற்காக எம்.ஜி.ஆரைப் பாராட்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த நண்பர்களுடன் கூடி முடிவு செய்தேன்.

    ஒரு பெரிய விளக்கை வாங்கினோம். அதில் நூறு துவாரங்கள் இருந்தன. அதில் வரிசையாக எம்.ஜி.ஆர். நடித்த படங்களை எழுதி ஒட்டி அன்றைக்கு இரவு படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தோம்.

    அன்றைக்கு மிகவும் நெகிழ்ந்து “நான் இதை ரொம்பப் பத்திரமா வைச்சிருப்பேன்” என்றார் எம்.ஜி.ஆர்.

    அவருடைய ஞாபக சக்தி அசாத்தியமானது. எப்படி இதையெல்லாம் அவர் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். ஜெய்ப்பூரில் ‘அடிமைப்பெண்’ ஷூட்டிங். என்னுடன் சில நண்பர்களும் வந்திருந்தார்கள்.

    நான் அங்கு போனதும் ‘மேக்கப்’ போடப் போய்விட்டேன். நண்பர்கள் ‘ஷூட்டிங் ஸ்பாட்’டை வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். அப்படி முதலில் அங்கு போன என் நண்பர்களைப் பார்த்துவிட்டார் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயர்களை முதற்கொண்டு சரியாக நினைவில் வைத்து “நீங்க தானே ரெங்காச்சாரி?” என்று அவரவர் பெயர்களைச் சொல்லி அவர் கூப்பிட்டு விசாரித்ததும் அவர்கள் அசந்துபோய் அவரைப் புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

    அதே மாதிரி இன்னொரு நிகழ்ச்சி, எங்கள் நாடகக்குழுவில் நடிக்கும் நண்பனான நீலு ஒரு முறை ஷூட்டிங்கிற்கு வந்திருந்தான். கல்கத்தாவில் வேலை பார்த்ததால் அங்கு ஒரு வருஷம் இருந்துவிட்டு அப்போதுதான் சென்னைக்கு வந்திருந்தான்.

    அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்களுடைய நாடகம் ஒன்றிற்கு தலைமை தாங்கியிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நீலு நடிக்கவில்லை. ‘எம்.ஜி.ஆரிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய், “இவன் தான் நீலு. எங்க டிராமாக்களில் நடிக்கிறான்” – அறிமுகப்படுத்தினேன்.

    “எனக்குத்தான் இவரைத் தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்தேனே!” – என்றார் எம்.ஜி.ஆர்.

    “சார்.. இரண்டு நாட்களுக்கு முன்னாடி நீங்க பார்த்த டிராமாவில் இவன் நடிக்கவே இல்லை. இன்னைக்குத்தான் சென்னைக்கு வந்திருக்கான். இவனைத் தெரியும்னு சொல்றீங்களே” என்று நான் குறுக்கிட்டேன்.

    “நான் ரெண்டு நாட்களுக்கு முன்னாடி பார்த்த நாடகத்தில் இவர் நடிச்சதா நான் சொன்னேனா? உங்க நாடகத்தில்னுதானே சொன்னேன்.

    போன வருஷம் நான் பார்த்த உங்க நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்… இவர்தானே. அதைத்தான் நான் சொன்னேன்” கேட்டுக் கொண்டிருந்த நானும், நண்பர்களும் திகைக்கிற அளவுக்கு இருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல்.............

  11. #1710
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாளை முன்னிட்டு*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*மறுவெளியீடு* பட்டியல் விவரம் தொடர்ச்சி .........
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    மதுரை ராம் அரங்கில் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை.*


    திருச்சி -பேலஸ்* அடிமைப்பெண்* - தினசரி 4 காட்சிகள்*

    திருச்சி -முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.கிருஷ்ணன், திருச்சி.


    சேலம் -அலங்கார - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

    தகவல் உதவி :திரு.வி.ராஜா, நெல்லை.


    கோவை - டிலைட் - சக்கரவர்த்தி திருமகள் - தினசரி* 2* காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.ஜெயக்குமார், கோவை.**

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •