Page 169 of 210 FirstFirst ... 69119159167168169170171179 ... LastLast
Results 1,681 to 1,690 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1681
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள் திலகம் எழுதிய உன்ன*த* உயில்..

    1986 ஏப்ரல் 28ல் புர*ட்சித்த*லைவ*ர் ஓர் உயில் எழுதியிருந்தார். பிற*கு அதை ர*த்து செய்து சில திருத்த*ங்க*ளுட*ன் 11 மாதங்களுக்கு பிற*கு 1987 ஜனவரி 18ம் தேதி புதிய உயிலை எழுதி வெளியிட்டார். அந்த உயில் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் முன்னிலையில் அ.தி.மு.க தலைமை கழகத்தில் வைத்து வழக்கறிஞர் ராகவாச்சாரி வெளியிட்டார். அ.தி.மு.க நிர்வாகிகளான வள்ளிமுத்து, ராகவானந்தம், மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் குமாரனாகவும், தமிழக முதல் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான் சுயநினைவோடும், மனப்பூர்வத்தோடும், பிறர் தூண்டுதல் இல்லாமல் இந்த புதிய உயிலை எழுதி வைத்து இருக்கிறேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. எனக்கு ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி ஜானகி அம்மாள்தான். அவளை தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்திற்கு பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எவ்வித வழக்குகள், தகராறுகள் வராமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயில் ஏற்பாட்டினை செய்து இருக்கிறேன்.

    இந்த உயிலை நிறைவேற்றுபவர்களாக மூத்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி மற்றும் எனது மருமகன் ராஜேந்திரனையும் நியமிக்கிறேன். அவர்கள் காலத்திற்கு பின் சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டிருந்த எம்.ஜி.ஆர் தனக்கு சொந்தமான 7 வகையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வரிசைப்படி பட்டியலிட்டு உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி எம்.ஜி.ஆர் குடியிருந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் அவரது பெயரில் இருந்த ‘எம்.ஜி.ஆர். கார்டன்’ எனும் பங்களாவும் தோட்டமும் (6 ஏக்கர் 34 சென்டு), சென்னை தி.நகர் ஆற்காடு சாலையில் 27ம் எண்ணில் இருந்த கட்டிடமும், அடி மனையும், சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம் (8.5 ஏக்கர்), சென்னை ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 முதல் 47 வரை உள்ள கட்டிடங்களும், அடிமனையும். ராமாவரம் தோட்டத்தில் உள்ள அசையும் சொத்துக்களான தனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். தன் சொந்த மர இரும்பு சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்கள், மோட்டார் வாகனங்கள், பசு உள்ளிட்ட கால்நடைகள். சத்யா ஸ்டியோ நிறுவனத்தில் தனது பெயரில் உள்ள பங்குகள் (எம்.ஜி.ஆர் பெயரில் 95% பங்குகளும், ஜானகி அம்மாள் பெயரில் 5% பங்குகளும் இருந்தன). என இவை எல்லாம் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை எனவும், தனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்ட சொத்துகளில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள பங்களா, கார்செட், கோவில் பழத்தோட்டம் ஆகியவற்றை தனது மனைவி வி.என்.ஜானகிக்கு அவரது ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்து கொள்ள குறிப்பிட்ட அதே வேளையில் அவற்றை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது எனவும் எழுதியிருந்தார். ஜானகியின் காலத்திற்கு பின் அவரது சொந்தகார பெண் கீதா, நிர்மலா, ராதா, ஜனம், சுதா ஆகிய நால்வரும் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ, பி, சி, டி. என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்து கொள்ளவும் அதே வேளையில் அவற்றை விற்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமையில்லை எனவும் அவர்களது காலத்திற்கு பின் இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெற வேண்டும் என தனித்தனியே உயில் எழுதியுள்ளார்.

    இவை தவிர ராமாவரம் தோட்டத்தில் உள்ள காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர் அதில் ‘‘எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம்’’ என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்த வேண்டும். அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும், காதுகேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவற்றுக்காக அந்த காலில் இடங்களில் செட்டுகள் மற்றும் கட்டடங்களும் அமைத்து கொள்ள வேண்டும். அத்துடன் ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும். இதே போல் காது கேளாதவர்களுக்கு தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும் இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் உள்ள சத்யா தோட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டும்.

    தனது வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், ஆற்காடு சாலை வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள் ஆகியவற்றை கொண்டு ஆற்காடு சாலையில் உள்ள கட்டிடத்தில் தனது காலத்திற்கு பிறகு ‘எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்’ என பெயரிட்டு பாதுகாக்க வேண்டும். அந்த இடத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வசதி செய்து தரப்பட வேண்டும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை இல்லை. இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவிற்கும், காவல் காப்பதற்கும் ஏற்படும் செலவிற்கு ஆலந்தூர் மார்க்கெட் கட்டடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன் படுத்தி கொள்ள வேண்டும். இதற்கென அந்த மார்க்கெட் கட்டடங்களை எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு எழுதி வைத்தும் உள்ளார்.

    பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லங்கள் அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு ஏற்படும் இந்த செலவினை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    சத்யா ஸ்டுடியோ கம்பெனியில் (95 கிரவுண்டு பரப்பு) தனக்கு உள்ள பங்குகள் அனைத்தும் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு சேர வேண்டும், அந்த பங்குகளை அ.தி.மு.க கட்சி பெற்று கொண்டு நிர்வாகம் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்து கொள்ளவும், ஒருவேளை கட்சி பிளவு பட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ சத்யா ஸ்டுடியோ பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைபற்றி எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். அத்துடன் சத்யா ஸ்டுடியோ கட்டிடத்திற்கு தனது தாயின் பெயரான ‘‘சத்யபாமா எம்.ஜி.ஆர் மாளிகை’’ என பெயர் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    எம்.ஜி.ஆரின் உயில்படி அமைய உள்ள எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லத்துக்காக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இல்லம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் துவக்கப்பட்டு இன்றளவும் இயங்கி வருகிறது. இளமை காலத்தில் ஏழ்மையின் பிடியில் தவித்த எம்.ஜி.ஆர் தன்னால் ஈட்டப்பட்ட வருவாயில் ஒவ்வொரு ரூபாயினையும் எப்படி எதற்கு செலவழிக்க வேண்டும் என்பதை தனது உயிலின் மூலம் வெளிகாட்டி இருந்தார்.

    "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என நிழல் உலகில் தான் பாடிய பாடலை உண்மையாக்கி சென்று விட்டார் மக்கள் திலகம்.

    இனிய வ*ணக்கத்துட*ன்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1682
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆருடன் சினிமாவிலும் அரசியல் வாழ்விலும் கூடவே பயணித்த ராமகிருஷ்ணனை சந்தித்தோம். எம்.ஜி.ஆர் இரட்டை வேடமிட்ட படங்களில் டூப் எம்.ஜி.ஆராக நடித்த ராமகிருஷ்ணன், அவர் முதல்வரான பிறகும் பாதுகாவலராக அருகில் இருந்தவர்.

    ‘‘1945ல இருந்து எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியும். அப்போ நான் சௌகார்பேட்டையில பால் கடையில் வேலை செய்துகிட்டிருந்தேன். சைனா பஜார்ல எம்.ஜி.ஆர் குடும்பத்தோட தங்கி, சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிட்டிருந்தார். பால்கடைக்கு வரும்போது பழக்கமானார். ஒரு பொங்கல் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மாவைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எம்.ஜி.ஆரை விட நல்ல சிவப்பு சத்யா அம்மா. எனக்கு பொங்கல் கொடுத்து உபசரிச்சு, கையில நாலணா கொடுத்து அனுப்பி வச்சாங்க.

    1949ல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்துல பயில்வானா நடிக்கப் போயிருந்தேன். சின்னப்பாவை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். சின்னப்பா என் பக்கம் திரும்பி, ‘இவரை நல்லா பழக்கம் புடிச்சி வச்சுக்கோ... பின்னால பெரிய ஹீரோவா வருவாரு’ன்னு எம்.ஜி.ஆரைக் காட்டி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவான பிறகு, அவர் படங்கள்ல ஸ்டன்ட் நடிகரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘சிரித்து வாழவேண்டும்’, ‘ஆசை முகம்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நீரும் நெருப்பும்’னு சில இரட்டை வேடப் படங்கள்ல முகம் காட்டாத எம்.ஜி.ஆராவும் என்னை நடிக்க வச்சார். அவரோட கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருக்காக டூப் போட்டு நடிச்சிருக்கேன். ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு எம்.ஜி.ஆரும் கத்தி சண்டை போடுற சீன்ல இன்னொரு எம்.ஜி.ஆரா அவர்கூட கத்திச் சண்டை போட்டேன். கத்திச் சண்டையில உடம்பை ரோலிங் செய்யிறது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆர் அதில் கில்லாடி. நானும் அப்படிச் செய்ததைப் பார்த்துட்டு ஸ்பாட்லயே ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாராட்டினார்’’ என்ற ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் உணவுப் பழக்கங்களை பட்டியலிட்டார்.

    ‘‘தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். தங்கம் மாதிரி ஜொலிக்கிறவருக்கு தங்க பஸ்பம் எதுக்கு? கேரளாவிலிருந்து நங்கி கருவாடை வரவழைச்சு, அதை வறுத்துப் பொடியாக்கி சோத்துல பிசைஞ்சு சாப்பிடுவார். அதுல அவருக்கு அலாதி பிரியம். அப்புறம், மத்தி மீன் சாப்பிடுவார். காலையிலேயே இட்லிக்கு கோழி குருமா வச்சு சாப்பிடுவார். மதியத்துக்கும் கறிக் குழம்புதான். முருங்கை கீரையை ப்ரியமா சாப்பிடுவார். அடிக்கடி கோதுமை பாயசம் செய்து தரச் சொல்லி குடிப்பார்.

    வாய்க்கு ருசியா தான் மட்டும் சாப்பிடுற ஆளு இல்லை அவர். அரசியலுக்கு வந்த பிறகு, ராமாவரம் தோட்டத்துல மனு கொடுக்க வர்றவங்களைக் கூட வெறும் வயித்தோட அனுப்ப மாட்டார். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுறதுல தலைவர் ஒரு தனிப்பிறவி.

    என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது முதல்ல ‘தெலுங்கு ராஜ்ஜியம்’னு கட்சிக்குக் பெயர் வச்சார். தலைவர்தான் ‘தெலுங்கு தேசம்’னு மாத்தச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்த என்.டி.ஆர், ஆட்சியைப் பிடிச்சு முதல்ல தலைவரைத்தான் பார்த்துட்டுப் போனார். அப்போ கர்நாடக முதல்வரா இருந்த குண்டுராவுக்கும் தலைவர் மேல ரொம்பப் பாசம். அவரோட பிறந்தநாளுக்கு ஒரு தடவை தலைவரைக் கூப்பிட்டு விருந்து வச்சார். பெங்களூர்ல இருந்து திரும்பி வந்துக்கிட்டிருந்தப்போ, வெயில்ல செருப்பில்லாம் நடந்து போன ஒரு பாட்டிக்கு ஜானகி அம்மாளோட செருப்பைக் கழட்டிக் கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர்.

    1979ல ஒரு தடவை காமராஜர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கறதுக்காக தலைவர் போய்க்கிட்டிருந்தார். ராணி சீதை ஹால் கிட்ட கார் போகும்போது ரோட்டுல ஒருத்தர் காக்கா வலிப்பால துடிக்கிறதைப் பார்த்துட்டு காரை நிறுத்தச் சொன்னவர், அந்த ஆளை போலீஸ் வண்டியிலயே ஏத்தி ஹாஸ்பிடல் கொண்டு போகச் சொன்னார். சினிமால எப்படி ஹீரோவா ஓடிப் போய் உதவி செய்வாரோ, அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் கடைசிவரை ஹீரோவா இருந்தவர் தலைவர்.

    தலைவர் கூட இருந்தவங்க எல்லாம் இப்ப எங்கயோ இருக்காங்க. ‘எம்.ஜி.ஆர் கூட இருந்துட்டு நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படுறீங்க’ன்னு என்னைப் பார்க்க வர்றவங்கல்லாம் கேப்பாங்க. அவர் கூட இருந்ததையே பெரிய சொத்தா நினைச்சதால அப்போ எனக்கு எதையும் கேட்க தோணல. ஆனா, கேட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது’’ என்று ஐந்துக்கு எட்டு அடி அறையில் அமர்ந்தபடி கலங்கினார் ராமகிருஷ்ணன் ....

  4. #1683
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*பட்டியல் (06/01/21 முதல் 10/01/21 வரை )
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    06/01/21* * *சன்* லைஃப் - காலை 11 மணி -* அன்பே வா*

    * * * * * * * * * வேந்தர் டிவி - காலை 10 மணி - விவசாயி*

    * * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * * * பெப்பர்ஸ் - பிற்பகல் 2.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - கன்னித்தாய்*

    07/01/21- ஜெயா மூவிஸ் -அதிகாலை 1 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - நாடோடி*

    * * * * * * *வசந்த் - பிற்பகல் 1.30* மணி - பெற்றால்தான் பிள்ளையா*

    * * * * * * *சன் லைஃப் - மாலை 4 மணி -நீதிக்கு தலைவணங்கு*

    08/01/21- சன் லைஃப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*

    * * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - பறக்கும் பாவை*

    * * * * * * * பெப்பர்ஸ் டிவி - பிற்பகல்* 2.30 மணி -குடும்ப தலைவன்*

    * * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நவரத்தினம்*

    09/01/21- முரசு -மதியம் 12 மணி - இரவு 7 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*

    10/01/21- மெகா 24 -பிற்பகல் 2.30 மணி -சக்கரவர்த்தி திருமகள்**

  5. #1684
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -10/01/21
    ----------------------------------
    தேசிய திரைப்பட*ஆவண*காலண்டரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகைகள் அர்ச்சனா*, லட்சுமி*
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    மகாராஷ்டிரா மாநிலம் புனே*வில் உள்ள தேசிய*திரைப்பட*ஆவண*காப்பகம் ,
    மத்திய அரசின்*தகவல் ஒளிபரப்பு* துறையின்*கீழ் செயல்பட்டு வருகிறது*.
    இந்தியாவில் ரிலீசான*ஆயிரக்கணக்கான பழைய படங்கள்* *இங்கு பாதுகாக்க
    படுகிறது .* இந்த காப்பகம் சார்பில்*ஆண்டுதோறும்* காலண்டர் வெளியிட*
    படுகிறது .* இதில்*சினிமா*துறைக்கு*சிறந்த*பங்களிப்பு செய்தவர்களின் புகை*
    படங்கள்* இடம் பெறும்*.* இந்த ஆண்டு* காலண்டரில் , தமிழகத்தில் இருந்து*
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ( ரிக்*ஷாக்*காரன்*),அர்ச்சனா*( தாசி - தெலுங்கு )
    லட்சுமி ( சில*நேரங்களில் சில மனிதர்கள் ) ஆகியோரின் புகைப்படங்கள்*
    இடம் பெற்றுள்ளன .

  6. #1685
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொலைக்காட்சி டிவி சேனல்களில் விவாத மேடை, பேச்சரங்கங்களில் கட்சியின் சார்பில் கலந்துக் கொள்ளும் சில பேச்சாளர்கள் தலைவரின் சாதனைகள் பற்றி நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறுகிறார்கள். அவர்களின் பார்வைக்காக தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி க்கால சாதனைகள்-100 இங்கு பதிவிடுகிறேன்.
    டி.வி.சேனல்களின் விவாத அரங்கங்களில் அஇஅதிமுக சார்பாக கலந்துக் கொள்ளும் சில பேச்சாளர்கள் தலைவரின் சாதனைகள் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறுகிறார்கள். அவர்களுக்காக இப்பதிவுகள்---
    தலைவர் எம்ஜிஆர் ஆட்சி சாதனைகள்-100
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
    1.சத்துணவு திட்டம்(01-07-82 முதல் அமுல்படுத்தப்பட்டது.
    2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
    3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
    4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
    5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
    6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
    8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
    9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
    10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.
    எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
    எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
    11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
    12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
    13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
    14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
    15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
    16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
    17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
    18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
    19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
    20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
    பகுதி 3 தொடர்ச்சி
    21.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
    22.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
    23.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
    24.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
    25.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
    26.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
    27.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
    28.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
    29.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
    30.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
    பகுதி4
    31.அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா,ஆந்திரா முதல்வர்கள்(தேவராஜ் அர்ஸ்,குண்டுராவ்,ராமகிருஷ்ண ஹெக்டே)அனைவருடனும நல்லுறவு பூண்டு மாநிலத்திற்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொண்டார்.
    32.தமிழக மக்களின் நல்வாழ்விற்காக மத்தியில் ஆட்சி புரிந்த மாற்று கட்சியினருடனும் சுமுக உறவு கொண்டு மக்கள் நலதிட்டங்கள் பல கொண்டுவந்தார்.
    33.நாட்டிலேயே மகளிருக்காக காவல்நிலையங்களை தமிழகத்தில் முதன்முதலாக ஏற்படுத்தினார்.
    34.சந்தேக கேஸ் எனும் பிரிவை குற்றவியலிலிருந்து நீக்கினார்.
    35.சைக்கிளில் இருவர் செல்வதற்கு அனுமதி முதன்முதலாக வழங்கப்பட்டது.
    36.விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை எனும் சட்டம் கொண்டு வந்து குற்றம் இருபாலருக்கும் பொதுவானது என உணர்த்தினார்.
    37.தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.
    38.ஹரிஜன் என்ற சொலலை விடுத்து ஆதி திராவிடர் என மாற்றிட சட்டம் கொண்டு வந்தார்.
    39.குக்கிராமங்களில் வாழும் மக்களுக்காக மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்குவரத்துக்கு வழி வகுத்தார்.
    40.சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கென தனி வாரியம் அமைத்தார்.
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
    பகுதி5
    41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
    42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
    43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
    44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
    45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
    46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
    47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
    48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
    49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
    50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினா
    ர்.
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்100
    பகுதி6
    51.ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்திட்டத்தின்கீழ் ரூபாய் 10000வழங்க உத்தரவிட்டார்
    52.விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.
    53.கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.
    54.10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
    55.மதுரை மாநகரில்ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.
    56.நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.
    57.Encounters இல்லாமல்தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார்.
    58.புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
    59.தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.
    60.ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப்பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
    பகுதி7
    61.சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில்திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
    62.ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.
    63.சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.
    64.தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.
    65.சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என இபபோதும் போற்றப்படுகிறார்.
    66.சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.
    67.முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.
    68.நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.
    69.அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி கவிஞர் பாரதியார் மற்றும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டுவிழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.
    70.அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.
    எம்.ஜி.ஆர் சாதனைகள்100
    பகுதி8
    71.தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.
    72.1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ850 கோடி ஆகும்.
    73.தொழிலாளர நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலைநிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.
    74.சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார்.1979ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2சதவீதத்திலிருந்து 1982ல் 12.1சதவீதமாய் உயர்ந்தது.
    75.இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தைப பிடித்தது.
    76.1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
    77.20000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
    78.கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75ஆக குறைக்க உத்தரவிட்டார்.
    79.அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.
    80.பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
    பகுதி 9
    81.தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.

    82.வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
    83.திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார்.அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார்.திருவள்ளுவர்
    திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
    84.தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
    85.சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க..விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
    86.மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.
    87.மேலும் அதே மதுரை மா நகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.
    88.காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.
    89.சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.
    90.பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.

    எம்.ஜி.ஆரின ஆட்சி சாதனைகள்100
    நிறைவுப்பகுதி 10
    91.திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று.பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை.இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
    92.மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது.இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது.அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.
    93.சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடீத்திட்டமாக இன்று உள்ளது.ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.
    94.பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார்.அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
    95.பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.
    96.சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
    97.குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.
    98.மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார்.காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.
    99.தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சிஅரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
    100.பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார்.முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார்.இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார்.முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார்
    வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
    அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.
    அடுத்து எம்.ஜி.ஆரின் திரைப்பட சாதனைகள் 100 -தொடரும்.
    நன்றி:அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச்சங்கம் ,தமிழ்நாடு மற்றும் தி இந்து(தமிழ்).........

  7. #1686
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., நடிப்பில வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் பரிசு. இப்படத்தின சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் 30 வயது மதிக்கதக்க ஒரு பெண் திடீரென ஓடிவந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் நின்றன. அவரை எழுந்திருக்க சொன்ன எம்.ஜி.ஆர்., என்ன விஷயம் என்று விசாரித்தார். அந்தப் பெண், ‛‛தன் கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் வனத்துறையில் வேலை பார்த்து வந்த தன் கணவர் சரிவர வேலைக்கு போகாமல் ஒரு நாள் குடித்துவிட்டு வரும்போது காட்டு யானை தாக்கி என் கணவர் இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ கருணை தொகையோ தரவில்லை எங்களை காப்பாற்ற வேண்டும்'' என்று எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார்.

    இளகிய மனம் படைத்த எம்.ஜி.ஆர், ‛‛அழாதே உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்கு தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா, மேலும் உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒருவரையும் அழைத்து வா என்று சொல்லி அனுப்பினார். அதேபோல வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒருவரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைக்து வந்தார் அந்தப் பெண். அந்தப் பெண் அதிர்ஷ்டமோ என்னவோ அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருநத அவரை எம்.ஜி.ஆர் விசாரித்து விபரம் அறிந்த பின் இப்போது இவர்கள் நிலைமை ரொம்ப பரிதாபமாக உள்ளது உங்கள் அலுவலக விதிமுறைகளின்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள்.

    இது சம்பந்தமாக உயர் அதிகாரி யாரிடமாவது பேசவேண்டுமென்றால் நானே பேசுகின்றேன் என்றார். மேலும் இப்போது குடிசையில் தங்கும் இவர்கள் கவுரவமாக தங்கும்; வகையில் வாடகைக்கு ஒரு சிறிய வீட்டையும் அந்தப்பெண்ணிற்கு ஒரு வேலையையும் வாங்கித்தர அந்த அதிகாரியிடம் கேடடார். எம்.ஜி.ஆரே கேட்கும் போது அவரது ரசிகரான அந்த அதிகாரி மறுப்பாரா என்ன? இரண்டுக்கும் ஒப்புக்கொண்ட அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வீட்டில் அந்த பெண்ணிற்கு வீட்டு வேலை செய்ய சேர்து விடுவதாகவும் கூறினார்.

    பின்னர் அந்தப்பெண்ணின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் டீச்சரை அழைத்து எஸ்எஸ்எல்சி வரை இந்த பிள்ளைகள் படிப்பதற்கான செலவுகளை கேட்டறிந்தார். படத்தின் தயாரிப்பாளரான கொட்டாரக்கராவிடம் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கி அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அந்த தொகையை அப்படியே அந்த பெண்ணிடம் கொடுத்தார் எம் ஜி ஆர். ஒரு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார் அந்த வனத்துறை அதிகாரி. உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் அந்த பெண்ணிற்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப்பணம் கிடைத்துவிடும் என்றும் கூறினார். இதை கேட்ட எம்ஜிஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 1963 ஆம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது மிகப்பெரிய தொகை..

    - ஆரூர்தாஸ் , தினத்தந்தியில்...

  8. #1687
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1968 ஜன 11 என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது "ரகசிய போலீஸ் 115" தான். மிகுந்த எதிர்பார்ப்போடு பத்மினி பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்த தலைவர் நடித்த மூன்றாவது மாபெரும் வெற்றிப் படம்தான் "ரகசிய போலீஸ் 115". "காவல்காரன்" "விவசாயி" ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப்பின் வந்த படம்.

    படத்தின் வால்போஸ்டரை பார்க்கவே தியேட்டரின் வாசலில் மாபெரும் கூட்டம் தினசரி வந்து போனது. தலைவரின் ரசிகர்கள் சினிமாவில் தீவிரமாக இருந்த போது வந்து வசூலை வாரி குவித்த படம். தூத்துக்குடியில் ப்ளாக்டிக்கெட் கொடி கட்டி பறந்தது இந்தப்படத்திலிருந்துதான். தியேட்டர் நிர்வாகமே ப்ளாக்கில் டிக்கெட் விற்க தொடங்கிய நேரம்.

    ஒரு காட்சிக்கு சுமார் 1000 டிக்கெட்கள் கொடுப்பார்கள். அதில் 300 டிக்கெட்டை தவிர மீதி அனைத்தையும் ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர் மந்திரம் என்பவருக்கு கமிஷன் அடிப்படையில் கொடுத்து விடுவார்கள். ஒரு டிக்கெட்டுக்கு 50 பைசா கமிஷன் கொடுப்பார்கள்.
    மந்திரத்திடம் ஒரு 10 பேர் வேலை
    பார்ப்பார்கள். தியேட்டர் நிர்வாகத்திடம் பெற்ற டிக்கெட்டை இவர்கள் ப்ளாக்கில் விற்று கமிஷனை எடுத்துக்கொண்டு மீதத்தை தியேட்டர் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.

    ஒரு டிக்கெட் 5ரூ என்று விற்பனை நடக்கும். டிக்கெட் ஸ்டாக் குறைய குறைய ரேட் கூடிக்கொண்டே போகும். "ரகசிய போலீஸு"க்கு ஒரு டிக்கெட் அதிகபட்சமாக ரூ 20 வரை விற்கப்பட்டது. ஒரு டிக்கெட் 5ரூ என்றால் 700 டிக்கெட் சுமார் 3500 ரூ வரை கிடைக்கும். ஹவுஸ்புல் ஆனால் கூட ரூ 800 க்கு மேல் கிடைக்காது.
    இதில் கமிஷன் மற்ற செலவுகள் போக ஒரு காட்சிக்கு குறைந்த பட்சம் ரூ3000 வரை பார்ப்பார்கள்.

    படம் திரையிடப்பட்ட முதல் 6 நாட்கள் குறைந்த பட்சம் 4 காட்சிகளும் அதற்கு மேலும் நடைபெற்றது. ஒரு நாள் ப்ளாக் டிக்கெட் வருமானம் 12000ரூ. அப்படியானால் 6 நாட்களுக்கு ப்ளாக் டிக்கெட் வருமானம் ரூ72000. இந்த வருமானத்தின் பெரும்பகுதி தியேட்டர் ஓனருக்கும் அதில் சிறு பகுதி விநியோகஸ்தர் ரெப்புக்கும்
    கிடைக்கும். இது முதல் 6 நாட்கள் மட்டும் மீண்டும் தொடர்ச்சியாக டிக்கெட் ப்ளாக்கில் கூட்டத்தின் அடிப்படையில் ரேட் நிர்ணயம் பண்ணி விற்பார்கள்.

    இந்த லாபமானது திருநெல்வேலியில் படம் 100 நாட்கள் ஓடினால் கூட தியேட்டர் ஷேர் இவ்வளவு கிடைக்காது. மதுரை தங்கத்தில் கூட முதல்வார வசூல் அதிக பட்சமாக சுமார் 50000ரூ தாண்டும். இந்தப்பணத்தை தியேட்டர் நிர்வாகம் பங்குத்தொகையாக பெற சுமார் 5 வாரங்கள் முதல் 50 நாட்கள் வரை ஆகும். ஆனால் தூத்துக்குடியில் இவ்வளவு லாபம் அடைந்தாலும் தியேட்டரின் எந்தவித அடிப்படை வசதி, கழிவறை உட்பட, படுமோசமாக இருக்கும்.

    இந்த லாபத்தில் கணிசமான பகுதி கமர்ஷியல் டாக்ஸ் அதிகாரிகளுக்கு போய் விடும். தியேட்டரில் எந்த செக்கிங்கும் இருக்காது. யார் என்ன புகார் கொடுத்தாலும் வரி அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். வெளியூரிலிருந்து அதிகாரிகள் ரெய்டு வரும் போது உள்ளூர் கைக்கூலி அதிகாரிகள் முன்னமே சொல்லி விடுவார்கள்.
    அன்றைய தினம் ஒரு காட்சி மட்டும் டிக்கெட் முறையாக கொடுப்பார்கள்.

    இப்படி கறுப்பு பணத்தில் திளைத்த தூத்துக்குடி தியேட்டர்காரர்கள் இன்று ஏதோ ஒரு டப்பிங் படத்தின் வால்போஸ்டரை ஒட்டிக் கொண்டு ஒரு 10 பேராவது வர மாட்டார்களா என்று ஏக்கத்தோடு பார்ப்பதும் அப்படி வரவில்லையென்றால் காட்சியை ரத்து செய்து விட்டு ஓய்வும் எடுத்துக் கொள்வதை பார்த்தால் தெய்வம் தண்டனையை மிகுந்த கால தாமதாக்கி கொடுப்பதை பார்க்கிறோம்.

    "ரகசிய போலீஸி"ன் முதல் 11 நாள் வசூல் அதுவரை வந்த எந்த படமும் பெறவில்லை என்பதை விநியோகஸ்தர்கள் அடித்து கூறினார்கள். தூத்துக்குடியில் முதன்முதலாக 30 நாட்களை தாண்டி 33 நாட்கள் வரை பகல் காட்சி நடைபெற்ற படம். 53 நாட்கள் ஓடி வசூல் 50000 ரூ தாண்டி பெற்ற படம். அதுவரை எந்த படமும் இந்த சாதனையை செய்யவில்லை. மதுரையில் 92 நாட்களில் பெற்ற வசூல் அதுவரை எந்த நடிகரின் படங்களும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் மொத்தம் 26 திரையரங்குகளில் 50 நாட்களை தாண்டி அசுரவெற்றியை பெற்ற படம். பிப் 23ல் வந்த 'தேர்த்திருவிழா" மற்றும் மார்ச் 15ல் வெளியான "குடியிருந்த கோயில்" "ரகசிய போலீஸி"ன் வேகத்தை குறைத்தாலும் இன்று வரை விநியோகஸ்தர்களின் பொக்கிஷமாக கொண்டாடப் படுகிறது..........ksr.........

  9. #1688
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இனிய மையம் இணையம் வழக்கம் போல் எளிதாக இயங்குகிறது என்ற தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... மையம் Proprietors/ Administrators எல்லோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்/நல்வாழ்த்துக்கள்...������

  10. #1689
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைஞர் காசை வாங்கி கொன்டு சீட் கொடுப்பார் ..ஆனால் தலைவர் உண்மை தொண்டர்களுக்கு சீட் வழங்கி விட்டு ..தேர்தல் செலவுக்கு ஒரு பெருந்தொகையும் கொடுப்பாராம் ..ஏன் பணம் கொடுக்கிறிர்கள் என ஒரு கழக முன்னோடி கேட்ட போது ..நாம் அவரை தேர்தலுக்கு செலவு செய்ய விட்டால் ..அவர் வெற்றி பெற்ற பின் தான் விட்டதை பிடிக்க தனக்கு வாக்களித்த மக்களிடமே வசூல் செய்வார் ..அது மக்களை தான் பாதிக்கும் ..அதனால் நானே கொடுத்து விடுகிறேன் என கூறினாராம் ..எந்நிலையிலும் மக்கள் கஷ்டபடக்கூடாது என நினைத்த ஒரே தலைவர் நம் புரட்சித்தலைவர் தான்...gdr...

  11. #1690
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் எல்லாரும் எம்ஜிஆர் ஆகமுடியாது.கட்சி ஆரம்பிச்சவர்கள் எல்லாம் எம்ஜிஆர் மாதிரி தமிழக முதல்வர் ஆக முடியாது. .........................நன்றி.. ஒன் இண்டியா தளம் ------------------சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கோரியும் கட்சி தொடங்குமாறும் வலியுறுத்தியும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    அவர் தனது உடல்நிலை குறித்து எந்தளவுக்கு விளக்கி கூற முடியுமோ அந்தளவுக்கு எடுத்துக்கூறியும் தங்கள் தலைவர் மீது பாவம் காட்டுவதாக தெரியவில்லை ரஜினி ரசிகர்கள்.
    இன்று ரஜினிகாந்தை எப்படி அவரது ரசிகர்கள் கட்சி தொடங்குமாறு கூறி வருகிறார்களோ அதேபோல் தான் அன்று சிவாஜி கணேசனையும் அவரது ரசிகர்கள் வலியுறுத்தி கட்சி தொடங்க வைத்தனர்.
    சிவாஜி
    நடிகர் திலகம் சிவாஜிகணேசனை பொறுத்தவரை எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். திமுக அனுதாபியாக தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அவர், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கருதி தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் சிவாஜிக்கும் மூப்பனாருக்கும் இடையேயான உறவு சொல்லிகொள்ளும் வகையில் இல்லை.கோஷ்டிப்பூசல்
    காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள கோஷ்டிப்பூசல் அன்றும் இருந்தது. அது சிவாஜியையும் விட்டுவைக்கவில்லை. இருப்பினும் வேட்பாளர் தேர்வு தொடங்கி பிரச்சாரம் வரை பல விவகாரங்களிலும் சிவாஜியின் பங்களிப்பு இருந்து வந்தது. இதனிடையே சினிமாவை கடந்து எம்.ஜி.ஆருடன் நட்புறவு பேணி வந்த சிவாஜி அதை அரசியலிலும் தொடர்ந்தார்.இந்திரா காங்கிரஸ்
    தனது நண்பர் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தருணத்தில் ஜானகி எம்.ஜி.ஆருக்கு இந்திரா காங்கிரஸ் உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தார் சிவாஜி. இது தொடர்பாக ராஜீவ்காந்தியை சிவாஜி சந்தித்து பேச முயன்றும் அது முடியாமல் போனது. இதனிடையே ஜானகி தலைமையிலான அரசுக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவு கொடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் சிவாஜி.
    ராஜீவ்காந்தி
    முரண்பட்ட முடிவு
    ஆனால் ஜானகி தலைமையிலான அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ராஜீவ்காந்தி. தன் குரலுக்கு மதிப்பில்லாத இடத்தில் இனியும் இருந்து என்ன பயன் எனக் கருதி காங்கிரஸில் இருந்து விலகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார் சிவாஜி. ஜானகி எம்.ஜி.ஆர். விவகாரத்தில் ராஜீவ்காந்தி எடுத்து முரண்பட்ட முடிவை கடுமையாக சாடினார் சிவாஜி. இனி நான் காங்கிரஸ்காரன் அல்ல இந்தியன், அதிலும் தமிழன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    போதுமடா சாமி
    அரசியலே வேண்டாம்
    போதுமடா சாமி அரசியலே வேண்டாம் என நினைத்திருந்த சிவாஜியை விடுவார்களா அவரது ரசிகர்கள். தனிக் கட்சி தொடங்க வேண்டும் என உரக்க குரல் எழுப்பத் தொடங்கினர். 'பிள்ளைகளா' அது சரிபட்டு வராது என்று எத்தனையோ முறை எடுத்துக் கூறினார். (சிவாஜி தனது ரசிகர்களை 'பிள்ளைகள்' என பாசத்துடன் அழைப்பார்.) இப்போது எப்படி ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்துகிறார்களோ அதேபோல் சிவாஜியையும் தனிக்கட்சி தொடங்குமாறு அவரது 'பிள்ளைகள்' (ரசிகர்கள்)வற்புறுத்தி அழைத்தனர்.
    தமிழக முன்னேற்ற முன்னணி
    வெள்ளை -சிவப்பு
    பிறகு ஒருவழியாக 1988-ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய சிவாஜிகணேசன் கட்சிக் கொடியையும் வெளியிட்டார். வெள்ளை -சிவப்பு என்ற இருவண்ணக் கொடியை அறிமுகப்படுத்தி வெள்ளை நிறம் தூய்மையையும், சமாதானத்தையும் வெளிப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம் தியாகத்தையும், உழைப்பையும் வெளிப்படுத்துவதாகவும் கூறினார். (கிட்டதட்ட இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடி இருக்கிறதே அதே போல்)
    ரஜினி ரசிகர்கள்
    சிவாஜி ரசிகர்கள்
    இப்போது ரஜினி ரசிகர்கள் எப்படி போஸ்டர் ஒட்டுகிறார்களோ அதற்கெல்லாம் ஒரு படி மேலாக, அதுவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக 'எட்டப்பனை அடக்க வந்த கட்டபொம்மன்' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டினர் சிவாஜி ரசிகர்கள். சிவாஜி கட்சியில் மேஜர் சுந்தர்ராஜன் தொடங்கி இன்னும் பல அந்தக் கால நடிகர்கள் இணைந்தனர்.
    1989 சட்டமன்றத் தேர்தல்
    ரஜினியும் கமலும்
    1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜானகி அனியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி. அந்த தேர்தலில் 49 இடங்களில் சிவாஜி கணேசன் கட்சி போட்டியிட்டது. தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் சிவாஜி களம் கண்டார். அவருக்கு ஆதரவாக ரஜினியும் கமலும் பிரச்சாரம் செய்யவிருந்து அந்த திட்டத்தை திடீரென கைவிட்டனர். இதனிடையே சிவாஜிகணேசன் உட்பட போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
    பதம் பார்த்தது
    நினைவூட்டுகிறது
    அதுவரை சிவாஜிகணேசன் மீதிருந்த இமேஜை அந்த தேர்தல் பதம் பார்த்தது. தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க நினைத்த சிவாஜி தனது ரசிகர்களின் வற்புறுத்தல் காரணமாக கட்சி தொடங்கி கரையேற முடியாமல் தவித்தார். இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப்பார்த்தும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் கட்சி தொடங்க வலியுறுத்துவது சிவாஜி கால அரசியலையே நினைவூட்டுகிறது. https://tamil.oneindia.com/news/chen...ml.........RRN...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •