Page 135 of 210 FirstFirst ... 3585125133134135136137145185 ... LastLast
Results 1,341 to 1,350 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1341
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1980-அது ஒரு
    இலையுதிர் காலம்
    ***************
    பேரறிஞர் அண்ணா ,
    புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் ஆட்சியில்
    சாதாரண சுப்பனும்,குப்பனும்,
    பதவிக்கு வர முடிந்தது.

    இன்றைய அரசியலில் பணம் இருந்தால் மட்டுமே பதவி
    என்கிற நிலை உருவாகிப் போனது.

    எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் கொள்கை இல்லாத மனிதர்கள்
    கட்சி மாறும் பச்சோந்தி கூட்டம்
    ஆட்சிகள் மாறும்போது சொரணையற்ற சுயநலவாதிகள்
    காட்சிகள் மாற்றிக் கொள்ளும்
    கட்சி மாறிகள்
    சுயமரியாதை இல்லாதவர்கள்
    இருந்தார்கள்.

    1980ல் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது
    அதிமுக

    அது ஒரு இலையுதிர் காலம்
    பழத்தை மட்டுமே ருசிக்க வந்த
    வவ்வால்கள்
    துரோக கூட்டம்
    கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டாவர்கள்.

    நேற்றுவரை எம்ஜிஆரை
    போற்றிய கூட்டம்
    அனி மாறியதால் புழுதி வாரி தூற்றி திமுக விற்கு ஒடிப்போனார்கள்.
    அன்றைக்கு எம்ஜிஆர் அவர்கள் பெருந்தன்மையாக
    நம்மை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியதை
    இன்றைக்கும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

    இன்றைய சூழலில் பா ஜ க தமிழகத்தில் தாமரையை
    மலர வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

    அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் ஆதாயத்தை மட்டுமே எதிரபார்த்து வலை விரித்து
    காத்துக் கொண்டு இருக்கிறது பாஜக,

    பதவியை பயன் படுத்தி
    பலர் அடித்த கொள்ளை பணத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பாதுகாப்பு தேடியும்
    காவிக் கொடி ஏந்த தயாராகி விட்டார்கள்.

    கழகமே குடும்பம்
    குடும்பமே கழகம் என்றாகிப்போன
    மு.க.& கம்பெனி பிரைவேட் லிமிடெட்
    அடிக்கிற காற்றில் தனக்கு ஆதாயம் கிடைக்குமா?
    முதல்வர் பதவி என்பது
    வெறும் கனவா?
    என்கிற நிலையில்
    இலவு காத்த கிளியாக காத்து கிடக்கிறது ஒரு குடும்பம்.

    2021-ல் எதிர்பாராத பல திருப்பங்களும் மாற்றங்களும் நடைபெறலாம்
    சிலருக்கு ஏமாற்றங்களே மிச்சமாக இருக்கலாம்.

    2021- ல் எம்ஜிஆரை பலரும் சொந்தம் கொண்டாடும்
    நிலை உருவாகலாம்...

    *எம்ஜிஆர்நேசன்*...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1342
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முரசொலிக்கு ப*தில*டி..

    புர*ட்சித்த*லைவ*ர் அமெரிக்காவில் சிறுநீர*க* மாற்று அறுவை சிகிச்சை முடிந்து த*மிழ்நாடு திரும்பிய*போது ந*ல்ல ஆரோக்கிய*த்துட*னே வ*ந்தார்..இல்லையெனில் சுமார் 36 ம*ணிநேர*ம் விமான*த்தில் ப*ற*ந்து வ*ர*முடியுமா? சென்னை வ*ந்த*வுட*ன் த*ன*து இல்ல*த்திலோ/ந*ட்ச*த்திர* ஓட்ட*லிலோ சென்று த*ங்க*வில்லை..நேராக* வ*ர*வேற்பு திட*ல் மேடைக்கு வ*ந்து வ*ர*வேற்பை ஏற்றுக்கொண்டார்..மேடையின் கீழே அம*ர்ந்திருந்த* எஸ்.எஸ்.ராஜேந்திர*ன், திருச்சி ச*வுந்திர*ராஜ*ன் ம*ற்றும் சில பிர*ப*ல*ங்க*ளை அடையாள*ங்க*ண்டு அவ*ரே மேடைக்கு அழைத்து ந*லம் விசாரித்தார். அவ*ர் சென்னை அப்ப*லோவில் அட்மிட் ஆன*திலிருந்து புருக்ளீன் சிகிச்சை வ*ரையிலும் அவ*ர*து உட*ல்நிலை த*க*வ*ல்க*ள் ப*த்திரிக்கைக*ளுக்கு நாள்தோறும் வ*ழ*ங்க*ப்பட்ட*ன..மூளையில் ஏற்ப*ட்ட* க*ட்டியால் பேசும்ச*க்தி சிறிது பாதிக்க*ப்ப*ட்ட*தும் அனைவ*ருக்கும் தெரியும். அத*ற்காக* பேச்சுப்ப*யிற்சி எடுத்து வ*ந்த*தை ப*த்திரிக்கைக*ளுக்கும் அறிவித்த*ன*ர்..அவ*ர் முழு ஆரோக்கிய*த்துட*னும், ந*ல்ல ம*ன*நிலையிலும் இருந்த*தால்தான் க*வ*ர்ன*ர் குரானா ப*த*வியேற்க*வே அழைத்தார். எம்ஜிஆருக்கு சிகிச்சை முடிந்து சிலநாட்க*ளே ஆன*தால் நோய்தொற்று ஏதும் வ*ந்துவிட*க்கூடாது என்ப*தாலேயே மூன்றாவ*து முறை ப*த*விப்பிர*மாண*த்தை க*வ*ர்ன*ர் மாளிகையில் உள்ள ஒரு ஹாலில் அதிக* கூட்ட*த்திற்கு இட*ம் த*ராம*ல் ந*ட*த்தின*ர். ஆனால் அந்த* நிக*ழ்ச்சியின் வீடியோ/புகைப்ப*ட*ங்க*ள் அனைத்து ஊட*க*ங்க*ளுக்கும் வ*ழ*ங்க*ப்ப*ட்ட*ன..அண்ட*ப்புழுகே..ஆகாச*ப்புழுகே..இ ன்ன*மும் உன*து புழுகு மூட்டைக*ளுக்கு ப*தில் தொட*ரும்............vr...

  4. #1343
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    '

    கைபிள்ளைகளின் முதல் கதறலை எடுத்துக் கொள்வோம். இந்த கைபிள்ளையின் பதிவை பார்த்தவுடன் அய்யன் பாடிய 'சில முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே' என்ற பாடல் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

    திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் "பாகப்பிரிவினை"யும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
    நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,

    கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,

    அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
    மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக "பாகப்பிரிவினை" மட்டுமே.என்ற
    இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் "மதுரை வீரன்" தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் "பாகப்பிரிவினை" எனக் குறிப்பிட்டார்,

    விவரங்களை அலசுவோம்,

    "பாகப்பிரிவினை" வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
    திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
    வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
    100 நாட்களுக்கான 15 வாரங்களில்
    15weeksX16 shows
    = 240 shows
    240 showsX 1560 seats
    = 3,74,400 viewers

    1959 வெளியான "பாகப்பிரிவினை"யின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்

    100 நாட்களில்
    3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060

    அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,

    அதற்கான பதில்.

    பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி!'
    பாரதியாரின் பாடல் வீச்சு புரிந்த கைபிள்ளைகள் அய்யன் மீது கொண்ட பக்தி அதிகமானதால் பார்த்த முகமெல்லாம் அய்யனைப் போல் தெரிகிறதாம். இது அய்ய பக்தியின் அசுர வெளிப்பாடு. சமீபத்தில் எனது முகத்தை உற்று நோக்கிய அய்யன் பக்தர்கள் அமுல் டப்பா மூஞ்சி என்று சொன்னதும் எனக்கு அவர்கள் அய்யன் பக்தியின் வெளிப்பாடு புரிந்தது. நன்றி. அவரது திரைப்படங்களும் விநியோகஸ்தர்கள் ஆபிஸில் தகர டப்பா போல் இடத்தை அடைத்துக் கொண்டு வெட்டி வாடகை கொடுக்க வேண்டியதால் அய்யன் படத்தின் தகர டப்பாக்களை காலால் உதைத்து தள்ளுவதாக கேள்வி. சில பேர் அந்த தகர டப்பாவை அமரும் சீட்டாக பயன்படுத்துவதை அய்யன் கைபிள்ளைகள் கவனிக்க வேண்டும்.

    'உண்மையை சொன்னவன் சதிகாரன் இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்' தலைவர் பாடிய பாடலின் சாரம்.
    சகட்டுமேனிக்கு புளுகிக் கொண்டிருந்த அய்யன் கைபிள்ளைங்களுக்கு நாம் உண்மையை ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னவுடன் கைபிள்ளைகள் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்து விட்டனர். நம்முடைய ஆதாரங்களுக்கு தெளிவான ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்காமல் ஆத்திரத்தில் வெறுப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர். அய்யனின் அண்டப்புளுகு சாதனையை எல்லோரும் புறந்தள்ளி விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.

    அய்யனின் தீவிர பக்தரான திரு பம்மலார் அவர்கள் சமீபத்தில் உண்மையை உணர்ந்து 'Box Office emperor' என்றால் அது புரட்சி நடிகர் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டு
    அதற்காக தனி புத்தகம் போடப் போவதாக நண்யரிடம் கூறி சிலாகித்ததை கைபிள்ளைகள் அறிவார்களா? தெரியவில்லை. அவரிடம்தான் "மதுரைவீரன்" 33 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் இருப்பதாக அவரே தெரிவித்தார். கருத்துப்போன துருப்பிடித்த பித்தளையை எடுத்து தங்கமாக மாற்றி தரும் மோடி மஸ்தான் வேலையை எங்களிடமா காட்டுவது சுருளி "துணிவே துணை"யில் செய்வதை போல.

    சரி முதல் அண்டப்புளுகை
    பார்க்கலாம். அய்யனின் முதல் சாதனை முதன் முதலில் மதுரையில் "பாகப்பிரிவினை" ரூ 3 லட்சம் வசூல் ஈட்டியதாம். ஆனால் உண்மையான சாதனை என்னவென்றால் ரிலீஸானது முதல் "பாகப்பிரிவினை" தீபாவளி முதலே தினசரி 2 காட்சிகள் தானாம். இது ஒரு பயங்கரமான சாதனை. ஆனால் 100 நாட்கள் வரை நடைபெற்ற அத்தனை காட்சியும் ஹவுஸ்புல்தானாம்.அதுவும் 100 நாட் களுக்கு 15 வாரங்கள் என்பது கைபிள்ளையின் கண்டுபிடிப்பு. இத்தகைய சாதனைகள் எல்லாம் நம்ம அய்யனால்தான் செய்ய முடியும். தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகக்கூடிய படத்துக்கு எப்படி ஷோவை குறைக்கிறார்களோ தெரியவில்லை.

    அந்தக் காலத்தில் தினசரி 2 காட்சிகள்தானாம். என்ன ஒரு அறிவுஜீவிகள். இவர்கள்தான் அய்யன் படுதோல்வி அடைய காரணமானவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரே நடைமுறை தான்
    "கர்ணன்" 100 வது நாளில்கூட தினசரி 3 சனி,ஞாயிறு 4, பராசக்தி 1952 லேயே தினசரி 3 , மனோகரா சென்னையில் முதல் வாரத்தில் 5 திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன.. இதெல்லாம் அவர்கள் படத்துக்குதான். தலைவரின் பல படங்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. தூத்துக்குடியில் "ஆயிரத்தில் ஒருவன்" தினசரி 4 காட்சிகளாக 10 தினங்கள் நடைபெற்றதுதான் முதல் தூத்துக்குடி சாதனை. "நாடோடி மன்னன்" வெளியாகும் போது தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள்தான். அது தவிர ஸ்பெஷல் காட்சிகளும் நடைபெற்றன. இதையெல்லாம் விட 1948 ல் வெளியான ஜெமினியின் சக்ரதாரி சென்னையில் தினசரி 3 காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    மற்றபடி 1950 க்கு முன்பே எல்லா திரையரங்குகளிலும் தினசரி 3 சனிஞாயிறு 4 நடைமுறைக்கு வந்தது கூட தெரியாத கைபிள்ளைகள் கண்டபடி உளறுகின்றனர். மேலும் முதன்முதலில் 3 லட்சம் வசூல் வந்த படம் "மதுரை வீரன்", பின்னர் "நாடோடி மன்னன்"தான். ஆனால் "பாகப்பிரிவினை" மதுரையில் 3 லட்சம் தொடவில்லை. அவர்களின் பட்டறை வசூலை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பட்டறை வசூலை போட்டு எல்லோரையும் நம்ப வைத்து விடலாம் என்ற மனப்பால் குடிக்க வேண்டாம். "பாகப்பிரிவினை" 2வது 100 நாட்கள் வசூல் சுமார் 60000 கூட வரவில்லை.
    இப்படிப்பட்ட நம்பமுடியாத கணக்குகளின் அடிப்படையில் கைபிள்ளைகளே கணக்கு பார்த்து தனக்கு தானே புளகாங்கிதமடைவதை என்ன சொல்வது. மூடர் கூட்டம் என்று புறந்தள்ளி விடலாம் என்றாலும் சும்மா கிடக்காமல் எதையாவது ஊதி விடுகின்றனர். இன்று அய்யனின் மிகைநடிப்பை ஊரறிய கலக்கியTV
    நிகழ்ச்சியை பார்த்து கலங்கி நின்ற கைபிள்ளைகளே! நிதானத்துக்கு வந்தால் அய்யனின் நடிப்பில் அலறிய மக்கள் நிலை புரியும்.

    இது போல தான் "தங்கப்பதக்கமும்" கடைசி வாரத்தில் சாந்தியில் நடைபெற்ற எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் தானாம். ஆனால் ஹவுஸ்புல்லா ஓடும்போதுதான் படத்தை தூக்குவார்களாம். இது போல தூத்துக்குடியிலும் "சிவந்தமண்" கடைசி வாரத்தில் எல்லா காட்சிகளும் மேலும் நடக்காத எக்ஸ்டிரா காட்சிகளும் ஹவுஸ்புல். ஆனால் அதே வாரத்தில் படம் காலி.

    "ஹிட்லர் உமாநாத்" படத்தில் சுருளி சொல்லுவார். இந்தப் பக்கத்தில் வட்ட வடிவில் ஒரு பள்ளிகூடம் கட்டியிருப்பார்கள். அங்கு 0 மார்க் எடுத்தாதான் பாஸ் என்பார். அது "உமாநாத்து"க்கு மட்டுமல்ல அய்யனின் எல்லா படங்களுக்கும் பொருந்தும். 10,20 பேர் வந்தால் மட்டுமே தொடர்ந்து ஓடும் அய்யன் படங்கள் தொடர் ஹவுஸ்புல் ஆரம்பித்ததும் தூக்கி விடுவார்கள். இது எப்படி இருக்கு?. ஊழல் மன்னன் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சினிமா ஊழலில் மன்னாதி மன்னனை இப்போதுதான் பார்க்கிறோம்.

    என் பெயர் சங்கரோ, டொங்கரோ என்று விளிக்கும் போலி சிவனடியாரே! வக்கிரன் நக்கீரரே! ஆனாலும் தைரியமாக பெயரை சொல்கிறேன். கைபிள்ளைங்க நாலைந்து புனைப்பெயரில் அதுவும் பொம்பளைங்க படத்தை போட்டு அசிங்கமான கமெண்ட் கொடுத்து விட்டு அய்யனை போலவே தலைவரிடம் தோற்று, புறமுதுகு காட்டி ஓடியதைப்போல் ஓடுவதில் வல்லவர்கள்.
    உங்க சொந்த பெயரை போட்டு பதிவு செய்யுங்கப்பா கைபிள்ளைகளா. 'தைரியமாக சொல்! நீ மனிதன்தானா!'
    என்று கேட்ட புரட்சி நடிகரிடம், நான் மனிதன்தான்! என்று சொல்ல தைரியமில்லாமல் 'யாரடா மனிதன் இங்கே?' என்று புலம்பியவர் அல்லவா உங்கள் அய்யன்.

    தொடரும்..........KSR.........

  5. #1344
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும் க*ட்சிக்கு த*ம் ஆத*ர*வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத*லே தேர*டி திட*லில் கூட ஆர*ம்பித்துவிட்டார்கள்.
    அப்போதெல்லாம் அவ்வ*ளவு ப*ஸ் வ*ச*தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க*ளில் உள்ள மக்களெல்லாம் க*ட்டுச்சோற்றை க*ட்டிக்கொண்டு கால்ந*டையாக*வும், மாட்டு வ*ண்டியிலும், குதிரை வ*ண்டியிலும் வ*ந்து மக்கள் தேர*டியில் இட*ம் பிடிக்க* ஆர*ம்பித்து விட்டார்க*ள். 2 கிலோமீட்ட*ர் தூர*த்திற்கு மக்கள் வெள்ளம் ம*தியமே அலை மோதிய*து.
    இனிமேல் அவ்வ*ளவு கூட்ட*த்தை க*லைக்க*வும் முடியாது. க*லைத்தாலும் நிலைமை விப*ரீத*மாகிவிடும் என்று மேலிட*த்திற்கு தெரிவித்துவிட்டு க*லெக்ட*ர் கூட்ட*த்திற்கு ஒருவ*ழியாக அன்று மதிய*ம் அனுமதி அளித்துவிட்டார்.
    நிலைமை இவ்வாறிருக்க தோட்ட*த்திலோ எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மருத்துவ*ர்க*ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த*டுத்துவிட்ட*ன*ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க*வ*னித்துக் கொண்டார். நேர*மோ சென்று கொண்டிருந்த*து.
    கூட்ட*த்திற்கு போகும்வ*ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க*ட்ட* ஒரு கூட்ட*மும், அவ*ர் முக*த்தில் திராவ*க*த்தை வீச ஒரு கூட்ட*மும் த*யாராக இருப்ப*தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த*க*வ*ல் கிடைத்த*து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட*ல்நிலை ச*ரியில்லாத*தால் பொதுக்கூட்ட*ம் ர*த்து என்ற செய்தியும் வ*ர* மக்கள் கொதித்து போயின*ர். ப*லர் ர*க*ளையில் ஈடுப*ட்ட*ன*ர்.
    நிலைமையின் விப*ரீத*த்தை உணர்ந்த மன்றத்த*லைவ*ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற*ப்ப*ட்டார். வ*ழியில் காரை மறித்து ப*லர் என்னைய்யா! வாத்தியார் வ*ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த*ன*ர். க*ண்டிப்பாக வ*ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட*த்திற்கு சென்றார் பாலாஜி.
    அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய*டைந்தார். ஒருப*க்க*ம் எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மறுபுற*ம் அவ*ரை கொல்ல* காத்திருக்கும் கூட்ட*ம். க*வ*லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த*லைவ*ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட*ம் வாத*ம் செய்தார்.
    உட*னே பாலாஜி, த*லைவ*ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட*த்திற்கு வ*ர*வில்லையென்றால் அந்த மாமர*த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட*, எம்ஜிஆர் மருத்துவ*ர்க*ள், ஜானகி அம்மையாரையும் ச*மாதான*ப்ப*டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப*லவ*ழியில் சுற்றி வ*ந்து காஞ்சிபுர*ம் வ*ந்த*டைந்தது. ஏற்கெனவே திட்ட*மிட்ட*ப*டி எம்ஜிஆரை வ*ய*ல்வெளி வ*ழியே 1/2 கி.மீ ந*ட*த்தியே கூட்டி வ*ந்த*ன*ர். மேடையின் பின்புற*ம் இருந்த ப*ள்ளிவாச*ல் காம்ப*வுண்ட் கேட் வ*ழியே எம்ஜிஆர் வ*ந்து திடீரென மேடையில் தோன்றிய*தும் ம*க்க*ள் ஆர*வார*த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச*ந்தோஷ*த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட*த்திற்கு த*லைமையேற்க செய்தார். க*ட்சி ஆரம்பித்து ஒருவார*மே ஆகியிருந்த* நிலையில் எம்ஜிஆர் க*ருப்பு சிவ*ப்பு க*ரைவேட்டியையே க*ட்டியிருந்தார். தோளில் க*ருப்பு சிவ*ப்பு பார்ட*ரில் துண்டும் இருந்த*து. ப*க்க*த்து க*ட்டிட*த்தில் திராவ*க*ம் வீச காத்திருந்த கும்ப*ல், இவ்வ*ளவு ப*ர*ப*ர*ப்பான கூட்ட*த்தில் திராவ*க*த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த*ப்புவ*து எளித*ல்ல என்று முடிவு செய்து இட*த்தை காலி செய்த*ன*ர்.
    த*லைவ*ர்மீது மக்கள் க*ருப்பு மற்றும் சிவ*ப்பு துண்டுக*ளை கீழேயிருந்து வீசின*ர். அனைத்தையும் லாவ*க*மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக*த்தையும் பார்த்த* மக்களின் கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும் விண்ணை பிளந்த*து.
    இது திமுக கூட்ட*மா அல்ல*து அண்ணா திமுக கூட்ட*மா என விய*க்கும*ளவிற்கு மேடையில் க*ருப்பு சிவ*ப்பு துண்டுக*ள் குவிந்து கிட*ந்த*து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க*தை முடிந்த*து என ஆட்சியாளர்க*ளுக்கு உரைத்த*து.
    இந்த* ஆர*வார* ச*ந்தோஷத்தில் த*லைவ*ரின் காய்ச்ச*ல் ப*ற*ந்தோடிய*து. மாறாக த*லைவ*ரின் வ*ளர்ச்சியை பிடிக்காத க*ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த*மிழ*க அர*சிய*ல் க*ட்சித் த*லைவ*ர்க*ளுக்கு காய்ச்ச*ல் தொற்றிக் கொண்ட*து.
    எவ்வித* குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என*து ர*த்த*த்தின் ர*த்த*மான உட*ன்பிற*ப்புக*ளே! என ஆர*ம்பித்து, நான் க*ணக்கு கேட்ட*து த*வ*றா? என்ற கேள்வியுட*ன் திமுக வ*ளர்ச்சிக்கு த*ன்னுடைய ப*ங்கு, என சுமார் இர*ண்டு மணி நேர*ம் (இர*வு 10 மணிமுத*ல் 12 மணிவ*ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின*ச*ரிக*ளிலும், எம்ஜிஆர் த*லைப்பு செய்தி ஆனார்.
    இனிய காலை வ*ணக்கத்துட*ன்.............Ch.muthu

  6. #1345
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பா, சங்கர். நல்லா விளக்கம் சொல்லிருக்கீங்க. சிறுசா இருந்தாலும் பரவால்ல. தினம் பதிவு போடு நண்பா. கணேசன் ரசிகர்கள் பொய்யை தினமும் உடைத்து எறி. கணேசன் ரசிகர்களுக்கு சினிமாவப் பத்தியும் தெரியாது. அரசியல் பத்தியும் தெரியாது. இப்ப என்னடான்னா எம்ஜிஆரால் 1957, ஆண்டு 1962 ல் திமுகவுக்கு தேர்தலில் அவர் பிரச்சாரம் செஞ்சும் வெற்றி கிடைக்கவில்லை, 1967 தேர்தலில் அவர் ஆஸுபத்திரியில் இருக்காம பிரச்ச்சாரம் செய்தால் முடிவு மாறியிருக்குமோ என்று கேட்கின்றார்கள். ஒண்ணே ஒண்ணு.. சொல்றேன். எம்ஜிஆர் தொடர்ச்சியா 3 தடவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனார்.். வேறு யாரும் தமிழ்நாட்டில் இந்த சாதனை செய்யவில்லை. இனிமேலயும் செய்ய முடியாது. அவர் முதல்வராகஇருந்ததை மறுக்க மாட்டாங்க. ஆனால் நடிகர் கணேசன் திருவையாறு தொகுதியில் தோற்றது ஏன்? ஒரு வார்டு கவுன்சிலராக்கூட ஆக முடியாதது ஏன்? அதுக்கு அவங்ககிட்டயே பதில் இருக்கு. சிவம் வல்லிபுரம் என்பவர் சொல்கிறார். 1967 தேர்தலில் அண்ணா போட்டியிட்டு தோற்றாராம். திமுக அதிக இடத்தில் ஜெயித்ததால் வேற ஒத்தரை எம் எல் ஏ பதவிய ராஜினாமா பண்ண்ச் சொல்லிவிட்டு அங்கே இடைத்தேர்தலில் நின்று ஜெயிச்சு முதல்வராக இருந்தாராம். அட ஞானசூனியங்களா. அண்ணா அந்த 1967 தேர்தலில் போட்டியே போடலை. அப்புறம் எப்படி அண்ணா முதல்வர் ஆனார்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. இவங்களை வெச்சிக்கிட்டு கணேசன் எப்படி ஜெயிப்பாரு. பரவால்ல.இவங்க அறிவு அப்படியே இருக்கட்டும். அப்பதான் இவங்க போற இடம் எல்லாம் தோத்துபோகும். எல்லாரும் இவங்களை விரட்டுவாங்க. நமக்கு ஜாலியாஇருக்கும். கணேசன் எவ்வழி. பிள்ளைங்க அவ்வழி. அவங்க அறிவு அவ்வளவு தான். இதுங்கள்ளாம் எம்ஜி ஆரையும் அவர் செல்வாக்கு பத்தியும் பேசுதுங்க. 1967 தேர்தல் பத்தி சிவம் வல்லிபுரம் சொல்லிருக்கிறதப் பாருங்க... இவங்க போற இடம் எப்படி விளங்கும். இப்படி தப்பான தகவல் சொல்லி நடிகர் கணேசனுக்கு குழி வெட்டி ஊத்தி மூடினாங்க. கணேசன் ராசி அப்படி. அவரு பிள்ளைங்க ராசி இப்படி......rrn...

  7. #1346
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் !

    இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின் பொருளாளர்
    செ. மாதவன், வலதுபுறம் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம்.
    1983 என்று நினைவு. அப்போது தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இருந்தது. சத்துணவு திட்டம் வந்தபின்
    அரிசிக்கு அதிக தேவை இருந்தது என்றாலும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தருவதில் தாமதம் செய்தனர். அதனால் பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.,
    அ.தி.மு.க. சார்பில் இப்படி உண்ணாவிரத வழியை கையாண்டார்.

    காலை வந்தவர், மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் வந்தபின் மாலை விரதம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரண்டு தினங்களில் அரிசி வந்து சேர்ந்தது.

    ஊழல் காரணமாக தி.மு.க தான் காங்கிரசிடம் அடிமையாக இருந்ததன்றி, எம்.ஜி.ஆருக்கு பின்பும் செல்வி ஜெயலலிதா, இன்றைய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகட்டும் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. எம்.ஜி.ஆர். என்ற சக்தி அ.தி.முகவை காத்து நிற்கும்.

    அ.தி.மு.க. யாருக்கும் அடிமையில்லை.
    யாரும் அடிமைப்படுத்த முடியாது என்பதை கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர்.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.........

  8. #1347
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    குறவர் வேஷம் போட்டு
    குறவஞ்சி பாடிய
    தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?

    படகோட்டி சென்று மீனவ நண்பனை
    கண்டது யாரோ?
    நாளை நமதே என்று
    நம்பிக்கை அளித்தவர் யாரோ?

    என் அண்ணன்
    என்று சொல்லும்
    ஊருக்கு உழைப்பவன் யாரோ?

    பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
    மலைக் கள்ளன் யாரோ?
    ஓரம் போ! என்று சொல்லும்
    ரிக் ஷாக்காரன் யாரோ?

    காதல்வாகனம் ஏறி
    குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?

    அடிமைப் பெண்னை
    விடிதலை செய்தது யாரோ?
    கூண்டுக் கிளியை
    பறக்க விட்டது யாரோ?

    மந்திரி குமாரியை
    மணக்கச் சென்றவர் யாரோ?
    ராஜ குமாரியை
    கண்டவர்தான் யாரோ?

    பெற்றால்தான் பிள்ளையா?
    என்று கேட்டவர்தான் யாரோ?
    நீரும் நெருப்புடனும்
    விளையடியவர்தான் யாரோ?

    தாழம் பூவை அழகு என்று
    சொன்னவர்தான் யாரோ?
    தொழிலாளிக்கு
    தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?

    யார் அவர்?
    புதுமை பித்தனா?
    ராஜா தேசிங்கா?
    நாடோடியா?
    நாடோடி மன்னனா?
    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?

    யார்தான் அவர்?

    புது யுகத்தின் புரட்சி நாயகர்
    டாக்டர் எம்.ஜி.ஆர்!

    courtesy
    புதுவை வேலு.........

  9. #1348
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் !

    இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின் பொருளாளர்
    செ. மாதவன், வலதுபுறம் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம்.
    1983 என்று நினைவு. அப்போது தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இருந்தது. சத்துணவு திட்டம் வந்தபின்
    அரிசிக்கு அதிக தேவை இருந்தது என்றாலும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தருவதில் தாமதம் செய்தனர். அதனால் பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.,
    அ.தி.மு.க. சார்பில் இப்படி உண்ணாவிரத வழியை கையாண்டார்.

    காலை வந்தவர், மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் வந்தபின் மாலை விரதம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரண்டு தினங்களில் அரிசி வந்து சேர்ந்தது.

    ஊழல் காரணமாக தி.மு.க தான் காங்கிரசிடம் அடிமையாக இருந்ததன்றி, எம்.ஜி.ஆருக்கு பின்பும் செல்வி ஜெயலலிதா, இன்றைய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகட்டும் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. எம்.ஜி.ஆர். என்ற சக்தி அ.தி.முகவை காத்து நிற்கும்.

    அ.தி.மு.க. யாருக்கும் அடிமையில்லை.
    யாரும் அடிமைப்படுத்த முடியாது என்பதை கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர்.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..........

  10. #1349
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # இந்த போண்டா மணி, ஐஸ் குச்சி குமாரன், முக்கியமா கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு, இப்போ புதுசா நாலைந்து அல்லக்கைகள் தொல்லை தாங்க முடியலப்பா !

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி "தேவி பாரடைஸ் " தியேட்டரில் வெறுமனே பாலாஜியின் கைங்கர்யத்தால் ஒரு 50 நாளைக்கு "பூச்சி " காட்டிய " ராசா " காலொடிஞ்சு நம்ம தலைவரின் " ரிக் ஷாக்கார"னிடம் சரணாகதி அடைந்த கதையை தக்க ஆதாரங்களுடன் சங்கர் சார் புட்டுப் புட்டு வைத்தார்,

    அதன் பிறகு அதற்கு எந்த பதிலும் இல்லை மாறாக ஆதாரங்களுடன் விளக்கிய சங்கர் சாரை தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்,

    இது ஆரோக்கியமான விஷயம் இல்லை கொஞ்சம் யோசித்து பதிவு போடவும்

    இப்போ புதுசா 1974 இல் வந்து கொஞ்சம் சலசலப்பு காட்டிய " தங்கப்பதக்கம் " படத்தை தூக்கிக் கொண்டு வந்து பதிவு போடத் தொடங்கியிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கனடா தங்கவேலு அந்தக் காலத்தில் எல்லோராலும் " மட ஒளி " என்று அழைக்கப்பட்ட புளுகு மூட்டைக் கூடாரமான
    மதி ஒளி பத்திரிக்கை யில் வந்த செய்தியை எடுத்துப் போட்டு வழக்கம் போலவே அல்லக்கைகளுடன் சேர்ந்து புளங்காகிதம் அடைந்திருக்கிறார்,

    சரி அந்த தகரப்பதக்கத்தின் கதையை கொஞ்சம் அலசுவோமா?

    1973 இல் இருந்தே கணேசனின் அதல பாதாள சறுக்கல் ஆரம்பித்து விட்டது,

    அதிலும் குறிப்பாக " பாரத விலாஸ் " படம் தள்ளாடினாலும் கொஞ்ச காயங்களுடன் தப்பித்துக் கொண்டது,

    பின்னர்தான் ஏழரை நாட்டு சனி ஆரம்பமானது,

    "பேசும் படம் " பத்திரிக்கையோடு ஜி. உமாபதி போதும் என்ற மனத்தோடு வாழ்ந்திருக்கலாம் ஆனால் விதி வலியதல்லவா, அது யாரையும் வீழ்த்த சக்தி படைத்தது,
    அதற்கு உமாபதியும் விதி விலக்கு அல்லவே !

    அவருக்கு விதி கணேசனின் ரூபத்தில் வந்தது,

    அமரர் கல்கி அவர்கள் எழுதி லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து இன்பமுற்ற "பொன்னியின் செல்வன் நாவலை உமாபதி அவர்களும் படித்திருப்பார் போல் தெரிகிறது ,

    அதையே படமாக எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்திருக்கலாம்
    ஆனால் "வந்தியத்தேவன் " வேடத்தில் ஒரே ஒருவரைத்தான் நினைத்திருப்பார்,
    ஆனால் அது சாத்தியப்படாமல் போகவே "மாமன்னன் " ராஜராஜசோழன் " கதையையாவது படமாக்குவோம் என்று நினைத்து கடைசியில் ஒரு பெரிய திருப்பூர் ஜமக்காளத்தை தலையில் போடக் காரணமான " ராஜராஜ சோழன் " படத்தை எடுத்து மாட்டிக் கொண்டார்,

    படம் ரிலீஸ் ஆன புதிதில் அவரும் தம் பிடித்துக்கொண்டு இத்தனை ஷோ அரங்கு நிறைந்தது, அத்தனை ஷோ அரங்கு நிறைந்தது என்று விளம்பரம் எல்லாம் கொடுத்தும் கடைசியில் ஒரு பருப்பும் வேகாமல் கணேசனால் அந்த படம் தலை குப்புற விழுந்தது,

    ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்காக உமாபதி அவர்கள் அவருக்கு சொந்தமான " ஆனந்த் " அரங்கில் 99 நாள் ஓட்டி வெடித்து வந்த அழுகையை திருப்பூர்
    போர்வையால் மறைத்துக் கொண்டார் பாவம்,

    அந்த படம் வந்த புதிதில் அதை எடுத்து பட்ட அவமானத்தை மறைந்த தலைவரின் பக்தர் திரு. முத்தையன் அம்மு அவர்கள் மய்யம் இணைய தளத்தில் முன்பு விளக்கியிருந்தார்கள்
    அடுத்தது பொன் ஊஞ்சல் ஆட நினைத்த தயாரிப்பாளர் ஊஞ்சல் அறுந்து பலத்த அடி,
    அடுத்து எங்க தங்க ராசா கொஞ்சம் தேறின மாதிரி தெரிஞ்சது
    அடுத்து வந்த கவுரவம் போன போக்கு " இந்து " ரங்கராஜனிடம் யாராவது கோடம்பாக்கத்துக்கு வழி கேட்டால் கூட சொல்லியிருக்க மாட்டார்,

    கிளைமாக்ஸ் இனிமேதான் இருக்கு
    மனிதரில் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை (வி. சி குகநாதனின் போறாத காலம் )
    சிவகாமியின் செல்வன் ( பாவம் கனகசபை " விநாசகாலே விபரீத புத்தி "
    ஜெயந்தி பிலிம்சே பிப்பிப்பீ )
    " தாய் " (அய்யோ பாவம் ஏ. சி திருலோகச்சந்தர் )

    இப்படி அனைத்து படங்களும் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் போகவும் கடைசியில் இந்த தகரப்பதக்கத்தை ஓட்டியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் முன்னேற்பாடாக சாந்தி, கிரவுன், புவநேஸ்வரி( DCR நம்ம கையில் இருக்கும் அல்லவா? ) தமிழ்நாடு முழுக்க பிள்ளைகள் கையை ஊணி கரணம் அடிக்காத குறையாக ஓட்டியும் ஒண்ணும் புடுங்க முடியல

    " சிவந்த மண்ணை 100 நாள் தூத்துக்குடியில் ஓட்டியவர்களுக்கு இந்த தகரத்தை 41நாளைக்கு மேல் ஓட்ட முடியவில்லை,
    எங்கள் குமரியில் 61 நாள் ஓட்டி கேவலமான வசூல் 1, 14000(நேற்று இன்று நாளை இந்த படத்தை புற வாலில் கட்டி அடித்தது )

    இவர்கள் இப்படி மட ஒளி யில் சுட்ட இந்த ஊத்தப்பம் தமிழ் நாடு முழுக்க "வெள்ளிக்கிழமை விரதம் " படத்துடன் மோத முடியாமல் குப்பைக்கு போனது வேறு விஷயம்
    அது மட்டுமல்ல நிறைய B&C சென்டர்களில் ஜெய்சங்கர் நடித்த "திருடி " யுடன் மோதிய
    S.P. சௌத்ரி மூக்கறுபட்டு தலை குனிந்ததெல்லாம் தனிக்கதை (நமக்கு இதெல்லாம் சகஜம்தானே பாஸ்,
    ஆனா வெறப்பா நிப்போம்ல )

    இப்படி தமிழ் நாடு முழுக்க 100 நாட்களில் ஒரு கோடியை நெருங்கி விட்டதாக அயோக்கியன் சண்முகம் நடத்திய மட ஒளி பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது,


    நல்லா கவனிச்சுக்கோங்க 100 நாளில் ஒரு கோடியை நெருங்கிய தகரம் 175 நாள் ஓடி முடிய கூட பத்து லட்சம்தான் வசூல் செய்ததா? அது மட்டுமல்ல வெற்றி விளம்பரத்தில் இந்தியா
    முழுவதும் என்று வேறு போட்டிருந்தீர்கள் அப்படியிருக்க இவ்வளவுதான் வசூலா?

    அதுவும் சென்னை சாந்தியில் 168 வது நாளில் இன்றே கடைசி, நாளை முதல் pocket maar என்னும் படம் திரையிடப்படும் என்று அறிவித்தபிறகு திடீரென்று கூட 8 நாள் ஓட்ட வேண்டிய காரணம் என்ன?

    அதுவும் தியேட்டர் நிர்வாகம் சொன்ன தகவல் 23 வாரத்திலேயே வாராந்திர நெட் விழுந்து விட்டது,
    அப்படியிருக்க கடைசி எட்டு நாட்களும் 24 ஷோ எப்படிப்பா ஹவுஸ் புல் ஆகியது?

    மொத்தம் 60 லட்சம் கூட தேறாத தகரத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையா பாஸ்?

    இது ஒரு miracle தான்
    நேற்று சங்கர் சார் போட்ட பதிவில் அனைத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்

    எனவே இந்த தகரத்தின் பெருமை பூச்சை உங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

    சொன்னது கொஞ்சம்தான் ,
    போதாது இன்னமும் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எல்லாம் கிழிந்து தொங்கி விடும்
    ஜாக்கிரதை !


    அடுத்து நாஞ்சில் தும்பு
    "தமிழக அரசியல் " பத்திரிக்கையில் முன்பு வாந்தி எடுத்த சில விஷயங்களை நம்ம கனடா தங்கவேலு எடுத்து போட்டிருக்கார்,

    இந்த தும்பு தான் அதே பத்திரிக்கையில் எழுதியது மனோகரா படம் சென்னையில் ஒரே வாரத்தில் 84 லட்சம் வசூல் செய்தது

    அப்புறம் ஜெமினி நிறுவனத்துக்கு மூடு விழா நடத்திய " விளையாட்டுப்பிள்ளை " படம் வசூலைக் கொட்டியது என்று

    அதே போல அவர் எழுதிய வீர வரிகள் பின்னே வருகிறது ( யாரும் சிரிக்க வேண்டாம், அடக்கிக் கொள்ளுங்கள் )

    " நடிகர் திலகத்துடன் நேரடியாக மோத முடியாதவர்களுக்கெல்லாம் " வசூல் சக்கரவர்த்தி " பட்டம் கொடுத்திருக்கிறார்கள்

    " எங்க மாமா " வெலிங்டன் தியேட்டரில் நன்றாக ஓடினாராம் ஆனால் யாருடைய வற்புறுத்தலின் பேரிலோ படத்தை எடுத்து விட்டார்களாம் ...

    அதுவும் முதல் வாரத்தில் அதிக வசூலாம், அப்படியிருந்தும் படத்தை எடுத்து விட்டார்களாம் ( அப்போ இரு மலர்கள் 100 நாள் ஆளே இல்லாமல் எப்படி ஓடியது தும்பு? )

    அதே போல நிறை குடம் படமும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் போதே யாரோ சொல்லி எடுத்து விட்டார்களாம் ( யாருக்கும் தெரியாத இந்த தங்கமலை ரகசியம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது பாஸ், கொஞ்சம் என் காதிலும் அந்த ரகசியத்தை சொல்ல முடியுமா பாஸ் ப்ளீஸ் )

    ஆமா " மாட்டுக்கார வேலன் " நான்கு அரங்கிலும் 400 ஷோ full அப்படீன்னு விளம்பரம் வந்த மாதிரி ஒரு ஞாபகம் அது எப்படிப்பா? ( உங்க அய்யன் இப்படித்தானே பேசுவாப்பல )

    " சின்னக் கவுண்டர் " படத்துல கவுண்டமணி செந்தில்ட்ட கேப்பாரே
    " ஏண்டா இதெல்லாம் நீயா கேக்குறியா இல்ல யாராவது சொல்லித் தந்து இப்படி கேக்குறியா என்று,

    அதேபோல் தும்பு இதெல்லாம் உன் கற்பனையில் உதிச்சதா இல்ல யாராவது சொல்லித் தந்து இப்படி பெனாத்துறியா?

    சரி அந்த யாரோ யாரு ?!
    முத்து ராமனா இல்ல ஜெய்சங்கரா?
    இப்படி வற்புறுத்தி படத்தை எடுக்கச் சொல்ல என்ன காரணம்? (நிறை குடம் படத்துல வாணிஸ்ரீ அண்ணனா நடிச்சது முத்து ராமன் தானே?
    முக்தா சீனிவாசன் கூட இப்படி யோசித்திருக்க முடியாதேப்பா )

    சரி அடுத்து சீக்கிரம் எதையாவது போடுங்கப்பா, போரடிக்குது !


    தலைவரின் பக்தன்...


    ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

  11. #1350
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..

    இதோ உலக எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த தளத்தில்....

    59 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.

    இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...

    1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..

    2....அதி ரூப அமராவதி.
    (தலைவர்..பானுமதி)

    3....குமாரதேவன்...
    (ஜமுனா கதாநாயகி)

    4 ...பவானி....
    (பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)

    5...வெள்ளிக்கிழமை.
    (தீயசக்திப்படம்)

    6....இணைந்த கைகள்.
    (எம்ஜிஆர் நிறுவனம்)

    7.....தபால்காரன் தங்கை...
    (தேவிகா உடன்)

    8....மாடி வீட்டு ஏழை.
    (சாவித்திரி. )

    9....கேரள கன்னி.
    ( பால சூரியா நிறுவனம்)

    10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.

    11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.

    12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..

    13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..

    14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.

    15...பரமபிதா.

    16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..

    17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..

    18...கண்ண தாசனின்
    ஊமையன் கோட்டை.

    19...பாகன் மகள்..

    20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
    21 ....ரிகஷாரங்கன்.

    22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.

    23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.

    24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.

    25......தேனாற்றங்கரை..
    26...உடன்பிறப்பு.

    27...புரட்சி பித்தன்.

    28....வேலுத்தேவன்..

    29...ஏசுநாதர்..

    30....மண்ணில் தெரியுது வானம்.

    31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.

    32..உன்னை விட மாட்டேன்.

    33...எல்லை காவலன்.

    35...கேப்டன் ராஜு.

    36....தியாகத்தின் வெற்றி..

    37...இதுதான் பதில்.

    38.....வேலு தம்பி...

    39.. ஊரே என் உறவு.

    40..உதயம் நிறுவனம் .
    போட்டோகிராபர்..

    41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...

    43...இன்ப நிலா.

    44.. வாழ்வே வா..

    45...காணிக்கை.

    46....அண்ணா பிறந்தநாடு.

    47....அண்ணா நீ என் தெய்வம்..

    48...நல்லதை நாடு கேட்கும்..

    49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.

    50....மரகத சிலை.

    51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..

    52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..

    53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..

    54....உங்களுக்காக நான்...

    55...வீனஸ் நிறுவனம்.
    எங்கள் வாத்தியார்.

    56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
    ஆளப்பிறந்தவன்..

    57.....இமயத்தின் உச்சியிலே..

    58...கர்ணன் இயக்கத்தில் குதிரை வீரன்.

    59 .சி.என்.வி.மூவிஸ்
    தங்கத்திலே வைரம்.

    வாழ்க எம்ஜிஆர் புகழ்..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •