Page 152 of 210 FirstFirst ... 52102142150151152153154162202 ... LastLast
Results 1,511 to 1,520 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1511
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் வீட்டு மாடியில் அடுக்கப் பட்டு படம்பிடித்தேன். இந்தப் படங்கள் பெரிய சைஸ்(A4).மாடியில் உயரத்தில் நின்று படம்பிடித்தது.அதனால் சிறியதாக தெரிகிறது.இது நான் எம்.ஜி.ஆரை சேகரித்து வைத்திருப்பதில் 100 ல் ஒரு பங்கு இன்னும் 99% படங்கள் என் வீட்டிற்குள் மூன்று பீரோ நிறைய நிறைந்திருக்கின்றன.
    என்னைப் போன்ற இளைய எம்.ஜி.ஆர் பக்தர்களைப் பார்த்து நிறைய மூத்த பக்தர்கள் கேட்கும் கேள்வி உங்களுக்கெல்லாம் தலைவரைப் பற்றி அந்த அளவிற்கு தெரியாதென்று.ஆனால் என்னைப் போன்ற இளையவர்கள் அடித்துச் சொல்வோம் எங்களுக்கு எம்.ஜி.ஆரைவிட வேறு யாரையுமே தெரியாது.எம்.ஜி.ஆரை விட வேறு தலைமையே ஏற்காதவர்கள்.
    அவரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் தலைமுடி கூட மடங்காது.எங்கள் ஒரே தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மட்டுமே....
    இது சும்மா ட்ரைலர்தான் ......
    இன்னும் 99% பிறகு தெறிக்கவிடுகிறோம்.....
    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்!!
    ��������������������...Rnjt

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1512
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # சமீப காலமாக சேற்றில் புரளும் பன்றியை விட கேவலமான ஒரு அயோக்கிய எச்சக்கல ( அவன் மூஞ்சிய பார்த்தாலே காறித் துப்பணும் போல இருக்கு, சொறி பிடிச்ச நாய் )யூ ட்யூபில் தகவல் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தினம் தினம் தலைவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கொஞ்சம் மசாலா தூவி எங்கேயோ படித்த முன்னாளைய மஞ்சள் பத்திரிகைகளில் வந்தது பாதி, வராதது பாதி என அவன் இஷ்டத்துக்கு உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறான்,


    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வேறு எந்த நடிகன் படத்தையும் போடுவதில்லை மாறாக தலைவர் படத்தை மட்டும் போட்டு பார்ப்பவர்களை வசமாக தன் பக்கம் ஈர்த்து இப்படி ஒரு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறான் ( இந்த பிழைப்பு நடத்துவதற்குப் பதில் உலகத்தில் பழமையான, முதலீடு இல்லாத இன்னொரு தொழிலை செய்தால் இதை விட அதிகம் சம்பாதிக்கலாமே இந்த வெட்கம் கெட்ட நாய் )

    " சந்திரபாபு மரணத்திற்கு என்ன காரணம் தெரியுமா?,

    சிவாஜியை வீழ்த்த எம்ஜிஆர் செய்த சதி,

    தயாரிப்பாளர்களை கோர்டுக்கு இழுத்த எம்ஜிஆர்,

    இப்படி வகை தொகை இல்லாமல் அவன் விருப்பம் போல வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறான் எச்ச,

    சந்திரபாபு எந்த மீனவ இனத்தை சேர்ந்தவனோ அதே மீனவ இனத்தை சேர்ந்தவன்தான் நானும்,

    சந்திரபாபு படம் எடுக்க தலைவரை அணுகி அது வளர்ந்து வரும் நேரத்தில் என்ன சம்பவத்தினால் அந்த படம் நின்றது என்ற விபரத்தை சொல்லாமல் பொத்தாம் பொதுவில் சாவித்திரியிடம் 25000 கடன் வாங்கி தலைவருக்கு முன்பணம் கொடுத்த கதையை சொல்கிறான் இந்த விளங்கா மூஞ்சி,

    சரிதான், ஆனால் அந்த சம்பவத்தை இவன் விவரிக்கும் விதம் இருக்கிறதே, என்னவோ பக்கத்தில் இருந்து விளக்கு புடிச்ச மாதிரி ,

    சந்திரபாபு அந்த 25000 பணத்தை சாக்கு பையில் போட்டு கொடுத்தாராம்,
    அப்போது எம்ஜிஆர் அந்த பணத்தை ஏனோ அது வரை பணத்தையே பார்க்காதவர் மாதிரி வாங்கிக் கொண்டாராம்,


    அட எச்ச, எரும மாடு தலைவர் அதற்கு முன்னர் பணத்தை பார்க்காதவரா,

    பாக்தாத் திருடன் படத்தில் நடிக்கும் போதே அவரின் சம்பளம் இரண்டரை லட்சத்துக்கு மேல்,

    இது அப்போதைய பத்திரிக்கை செய்தி (1957)

    அதன் பின்னர் தன் சொந்த படமான " நாடோடி மன்னனை பல லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி எடுத்தவன் என் தலைவன்,

    அந்த பட ஷூட்டிங்கின் போது சைவம், அசைவம் இரண்டுக்கும் தனித்தனியாக தொழிலாளர்கள் வயிறார சாப்பிடுவதற்காக இரண்டு பிரபல ஓட்டல்களின் கிளைகளை படப்பிடிப்பு முடியும் வரை ஸ்டூடியோவில் நிறுவச் செய்தவன் என் தலைவன், அது மட்டுமல்ல பணக்காரர்கள் மட்டுமே குடிக்கும் ஓவல் டின் என்னும் பானத்தை அண்டா அண்டாவாக கலக்கி வைத்து தொழிலாளர் களை அருந்த வைத்து அழகு பார்த்தவன் என் தலைவன்,

    அப்படிப்பட்ட என் தலைவனுக்கு 25000 பணம் உதிர்ந்து போகிற ரோமத்திற்கு சமம்டா மயிராண்டி,

    தலைவர் கால்ஷீட் கொடுக்காததால் " மாடி வீட்டு ஏழை " படம் நின்று விட்டதாம்
    அதனால் சந்திரபாபு வீட்டை விற்று கடனாளி ஆகி விட்டாராம்,

    அட பொறம்போக்கு
    இவ்வளவும் சொன்ன உனக்கு தலைவர் திமிர் பிடித்த நடிகனிடம் என்ன சொன்னார், எதனால் அந்த படம் நின்றது என்னும் விபரத்தை கடைசி வரை சொல்லவே இல்லை

    ஏண்டா சொறிநாயே சந்திரபாபு பெரிய யோக்கியன், மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் அப்படித்தானே?

    அந்த படத்தின் மூலம் ஒரு குடும்பம் பட்ட அவமானத்தை கடைசி வரை தலைவர் வெளிப்படுத்தவே இல்லை, மற்றவர்கள் உண்மையை வெளியிடச் சொன்ன போதும் சரி, இதே சந்திரபாபு 1972 இல்
    "பிலிமாலயா " இதழில் தலைவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி கண்ணீர்க் கதை எழுதிய போதும் சரி

    இறுதி வரை உண்மையை சொல்லவே இல்லை

    ஆனால் பின்னாளில் சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் உண்மையை வெளியிட்ட போதுதான் பல பேருக்கு உண்மை தெரிய வந்தது,

    இப்போது கூட you tube இல் குட்டி பத்மினி மேடம் எல்லா கதையையும் சொல்லி இந்த சம்பவங்களுக்குப் பிறகு கூட பொருளாதார ரீதியாக தலைவர் சந்திர பாபுவுக்கு என்னென்ன உதவிகள் செய்தார் என்பதை பட்டியல் போட்டு காட்டியிருக்க யாரோ போடும் எலும்புத் துண்டுக்கு இந்த எச்சிலை வாலா ட்டிக் கொண்டிருக்கிறது

    இதையெல்லாம் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில்தானே இந்த மாதிரி சாக்கடைகள் கழிவுகளை வாரி வீசிக் கொண்டிருக்கிறது,

    சர்க்கார் படத்தில் வரலட்சுமி கேரக்டருக்கு
    கோமளவல்லி என்று பெயர் வைத்ததற்கு துள்ளிக் குதித்தவர்கள் யாரையும், கட்சியை நிறுவி இவர்கள் எல்லோரும் இன்று அனுபவிக்கும் ராஜபோகத்துக்கு தெரியாமல் பாதை போட்டுக் கொடுத்த அந்த மகானை கண்ட கண்ட நாய்கள் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் போது அட்லீஸ்ட் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கக் கூட வக்கில்லாத இவர்கள் தலைவரின் பெயரை மற்றவர்கள் புகழ்ந்தால் மட்டும் சீறிக் கொண்டு அறிக்கை விடுகின்றனர்

    இன்றைக்கு கமல் எம்ஜிஆர் எங்கள் சொத்து என்று உரிமை கொண்டாட ஆயிரம் காரணம் இருக்கிறது,

    கமலை திரைத் துறையில் பெரிய அளவில் கொண்டு வர தலைவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்,
    ஆனால் தலைவர் மறைந்த பிறகு "சத்யா " திரைப்படத்தில் தலைவரின் படத்தை காட்டி அஞ்சலி செலுத்திய கையோடு கமல் பேட்டிகளின் மூலம் தலைவருக்கு செய்த துரோகங்கள் கணக்கில் அடங்காதவை,

    தலைவர் உயிரோடு இருந்தவரை கணேசன் பெயரை கனவிலும் உச்சரிக்காத கமல் அதன்பிறகு சிவாஜியின் வீட்டு மூத்த பிள்ளை நான்,
    சிவாஜி மடியில் வளர்ந்தவன் என்றெல்லாம் ஏகப்பட்ட பிட்டுகளை அள்ளித் தெளித்தவர் இப்போது நான் எம்ஜிஆர் வாரிசு, நீட்சி என்று பேசக் காரணம் தலைவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்னும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு, மகிமை, பக்தி இவைகள்தான் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை,

    இதே கமல் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் கொடுத்த ஒரு பேட்டியில் எம்ஜிஆர் படுக்கை அறை வரை செல்லும் உரிமை எனக்கு உண்டு,

    சில சமயங்களில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் எம்ஜிஆர் இருக்கும் போது அடையாளம் தெரியாமல் அவரை தேடிய நாட்களெல்லாம் உண்டு என்று தலைவரை புகழ்வது மாதிரி இழிவு செய்தவர் கமல் என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது,

    தலைவர் நோய்வாய்ப் பட்டு அமெரிக்க மண்ணில் இருந்த போது எடுக்கப்பட்ட படங்களை பார்த்த போது யாருக்கும் அடையாளம் தெரியாமலா போனது?

    ஆனால் கமலுக்கு மட்டும் அடையாளம் தெரிய வில்லையாம்,

    தமிழில் " வஞ்சப் புகழ்ச்சி அணி " என்று ஒன்று உண்டு,

    அதாவது ஒருவரை புகழ்வது போல் இழிவது,

    கமல் அந்த வகையை சேர்ந்தவர், ஆனால் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தலைவரின் "அண்ணாயிசம்" கொள்கை விளக்கத்தை இன்றிருக்கும் அமைச்சர்களை விட தெளிவாக, அழகாக விளக்கிய பெருமை கமலுக்கு உண்டு

    இன்று காலத்தின் கட்டாயம் கமல் தலைவரின் புகழ் பாடுவது,

    அது தவிர முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு,

    தான் தன் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் தான் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டு மறைந்து போகிறார்,

    சில பல காரணங்கள் மூலம் அவரின் இடத்துக்கு வந்த சில பேர் அந்த மகா மகா மகானின் பெருமை அறியாமல் அவரின் புகழை சீர்குலைக்க முயன்றது, பின்னர் அந்த சிலதின் வழித் தோன்றல்களுக்கும் அதே குணம் இருந்ததால் அந்த மாமனிதர் படம் கூட இடம் பெற முடியாத கொடுமை வேறெங்கும் நடக்குமா?

    ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசின் செய்திப் பிரிவில் இடம் பெற்றிருந்த தலைவரின் செய்திச் சுருள்கள் திட்டமிட்டு அழிக்கப் பட்டன,
    அது மட்டுமல்ல தலைவரின் உருவம் ஸ்டாம்ப் அளவில் இப்போதும் போடப்படுவதற்கு யார் காரணம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்,

    நேற்று கூட ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பயில்வான் ரங்கநாதன் தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட
    அரசின் சாதனை விளக்க மலரில் தலைவரின் படமோ, பெயரோ இல்லாமல் வெளியிட்டதை சுட்டிக்காட்டி பேசினார்,

    எப்போதும் அம்மாவின் அரசு என்று சொல்லும் உங்களுக்கு எதற்கு எம்ஜிஆர் பெயர்?
    தேர்தல் சமயத்தில் கறிவேப்பிலை மாதிரி பயன் படுத்தி ஓட்டு வாங்கும் உங்களின் தந்திரம் ரொம்ப நாட்களுக்கு ஓடாது,

    தான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய இடத்தில் இன்றைய அதிமுக தலைமை அலுவலகம் இருக்கிறது என்று ஒரு நாளும் நினைக்காத தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் அன்னை ஜானகி அம்மையாருக்கு அரசு மரியாதை, விழா கிடையாது ஆனால் சினிமாவில் நடித்து தன் குடும்பத்தை மட்டும் வாழ வைத்த வடிகட்டிய கஞ்சன், கருமி சிவாஜிக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் விழா, மரியாதை, மணி மண்டபம் ,

    இப்படியெல்லாம் செய்து விட்டு தலைவரின் புகழை வேறு யாராவது பாடினால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே அது எப்படி?

    அடுத்து பெரிய தாத்தா ரஜினி வேறு தலைவர் புகழ் பாடுகிறார்

    ஆனால் 1980 களில் மும்பையில் இருந்து வெளி வந்த " காஸ் பாத் " பத்திரிக்கையில் தலைவரைப் பற்றி என்னவெல்லாம் பேட்டி கொடுத்தார் என்பது மட்டும் அவருக்கு மறந்து விட்டது பாவம்

    இப்படி எல்லாம் சம்பவங்கள் நடக்கும் போது கமல் போன்றவர்கள் தலைவர் புகழ் பாடுவது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம்,

    ஒரு நாலைந்து அல்லக்கைகள் இருக்கும் சிவாஜி சமூக நலப் பேரவை சிவாஜி சம்பந்தமான விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் போது தலைவரை இகழும் தறுதலைகளை தட்டிக் கேட்க எந்த நாதியும் இல்லை,

    சிவாஜி பெயரில் இயங்கும் இன்னொரு you tube சேனலில் ஒரு
    பிரகஸ்பதி உட்கார்ந்து கொண்டு தினம் தினம் எதையாவது அள்ளி விடுவது,
    சிவாஜிக்கு பல வருடம் ரசிகர் மன்ற பத்திரிக்கை நடத்திய சித்ரா லட்சுமணன் சொல்கிறார் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் சம கால நடிகர்களாக இருந்த போது எம்ஜிஆர் அடைந்த வெற்றிகள் சிவாஜியால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார், உடனே அவருக்கு கண்டனம் பதிவு செய்வது, மேலும் அவர் பேசும் போது பின்னால் ஓடும் diaplay யில் ஓடும் செய்திகள் திரும்பத் திரும்ப காட்டப் படுகிறது ( ஒரு ஐந்தாறு பழைய குப்பைகள் )

    தலைவர் ராசி அவரை திட்டுபவனுக்கும் படியளப்பது, அப்படித்தான் இந்த நாயும் கஞ்சி குடிக்கிறது,

    ராணி லலிதாங்கி, காத்தவராயன் படங்களில் ஏன் நடிக்கவில்லை என்பதை தலைவர் தன் " நான் ஏன் பிறந்தேன் சுய சரிதையில் தெளிவாக எழுதிய பின்னரும் இந்த நாய் ஏதோ புதுக் கதை சொல்கிறது,

    என்ன செய்ய இவனை மாதிரி சில நாய்கள் இருப்பது எவ்வளவு பெரிய கெடுதியாக இந்த சமுதாயத்திற்கு இருக்கிறது என்பதற்கு இவனே சான்று

    கடைசியாக நம் கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு வெறி கொண்ட மாதிரி பதிவுகள் போட ஆரம்பித்திருக்கு,

    பாவம் எங்கே போய் நிக்கப் போகுதோ தெரியல,

    கதறிக் கதறி சாவதுதான் உன் தலைவிதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும்?


    தலைவரின் பக்தன்


    ஜே.ஜேம்ஸ்வாட்!.........(J.JamesWatt).........

  4. #1513
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    153 அரங்குகளில் '#அன்பே_வா திரையீடு சாதனை !.........திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "அன்பே வா".........

    #இதயக்கனி சேகரித்த விபரங்கள்.

    1) திருநெல்வேலி - ராம் சினிமாஸ்
    2) திருநெல்வேலி -முத்துராம் சினிமாஸ்
    3) திருநெல்வேலி - ரத்னா
    4) தூத்துக்குடி -கே.எஸ்.பி.எஸ் கணபதி
    5) நாகர்கோவில் - வள்ளி(ஏவிஎம்)
    6) தென்காசி - பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ்
    7) கோவில்பட்டி - லட்சுமி
    8) சங்கரன்கோவில் - கீதாலயா
    9) புளியங்குடி - மீனாட்சி
    10)ஆலங்குளம் -டி.டி.வி மல்டிபிளக்ஸ் (அட்மாஸ்)
    11)அம்பை - பாலாஜி
    12)சாத்தான்குளம் - லட்சுமி
    13)சுரண்டை -கவிதா

    எம் ஆர் ஏரியா

    14)மதுரை -அண்ணாமலை 15)தேவகோட்டை -அருணா
    16)தளவாய்புரம் -ஸ்ரீ கிருஷ்ணா
    17)கடலூர் -எஸ்டிபி
    18)கம்பம் - யுவராஜ்
    19)விருதுநகர் ராஜலட்சுமி
    20)திண்டுக்கல் -ராஜேந்திரா
    21)காரைக்குடி -நடராஜா 22)ராஜபாளையம் - மீனாட்சி
    23)மதுரை - சோலைமலை
    24)மதுரை - வெற்றி
    25)பழனி - வள்ளுவர்
    26)தேனி - வெற்றி
    27)அருப்புக்கோட்டை - தமிழ்மணி
    28)ஒட்டன்சத்திரம் - இந்தியன்
    29)வத்தலகுண்டு -கோவிந்தசாமி
    30)சின்னாளபட்டி- ஜெ சினிமாஸ்
    31)மதுரை -மினி பிரியா
    32)போடி -ஆரா
    33)சிவகாசி -பழனி ஆண்டவர்
    34)மேலூர் -கணேஷ்
    35)சின்னமனூர் -பொன்னுசாமி
    36)சோழவந்தான் -வி தியேட்டர்
    37)பெரியகுளம் -லக்கி
    38)உசிலம்பட்டி -பொன்னுசாமி

    டி.டி. ஏரியா

    39)திருச்சி -எல் எ சினிமாஸ்
    40)திருச்சி - சோனா மீனா
    41)தஞ்சாவூர் -ஜூபிடர் 42)கும்பகோணம்- காசி
    43)கரூர் -அமுதா
    44)புதுக்கோட்டை- வெஸ்ட்
    45)மயிலாடுதுறை -கோமதி 46)காரைக்கால் -எல் ஏ சினிமாஸ் 47)திருவாரூர் -தைலம்மை 48)திருத்துறைபூண்டி -விஜிலா 49)மணப்பாறை -உதயம்
    50)பெரம்பலூர் -எல் ஏ சினிமாஸ்(ராம்) 51)ஜெயம்கொண்டான் -சிஆர் பேலஸ்
    52)துறையூர் -ஸ்ரீ லக்ஷ்மி
    53) முசிறி -எல் ஏ சினிமா (ஸ்ரீராம்) 54)சீர்காழி-ஒஎஸ்எம்
    55)அரியலூர் -மகாசக்தி

    - சேலம்

    56)சேலம் - கைலாஷ் ஏசி டிடிஎஸ்
    57)சேலம் -கௌரி ஏசி டிடிஎஸ்
    58)ராசிபுரம் - விஜயலட்சுமி டிடிஎஸ்
    59)ஓசூர் -ஸ்ரீ ராகவேந்திரா டிடிஎஸ் 60)குமாராபாளையம் -ஆர்.ஏ.எஸ் டிடிஎஸ்
    61)ஜலகண்டாபுரம் -ஸ்ரீ அபிராமி டிடிஎஸ்
    62)கிருஷ்ணகிரி -சாந்தி டிடிஎஸ்

    நார்த் அண்ட் சௌத் அர்காட் (NSC)

    63)வேலூர்-விஷ்ணு ஏசி
    64)வேலூர் -பிவிஆர் ஏசி
    65)வேலூர் -திருமலை ஏசி 66)திருவண்ணாமலை -சக்தி சினிமாஸ் ஏசி
    67)திருவண்ணாமலை- பாலசுப்ரமணியர் ஏசி
    68)ஆற்காட்- லட்சுமி ஏசி
    ௬௯)ராணிப்பேட்டை -ராஜேஸ்வரி ஏசி 70)குடியாத்தம் -லட்சுமி
    71)வாணியம்பாடி- சிவாஜி ஏசி 72)ஆரணி- வெங்கடேஸ்வரா
    73)ஆம்பூர் -ஸ்ரீ யோகா
    74)திருப்பத்தூர் கலைமகள் ஏசி
    75)செய்யார் -செல்லம் பேரடைஸ்
    76)சிலான்கர் -சுமதி ஏசி
    77)பாண்டி -ரத்னா ஏசி
    78)பாண்டி- தி சினிமாஸ் ஏசி
    79)கடலூர் - நியூ சினிமா ஏசி
    80)விழுப்புரம் -ஜனாஸ் ஏசி 81)கள்ளக்குறிச்சி - லீனா ஏசி 82)பண்ருட்டி -புவனேஸ்வரி ஏசி
    83)பாக்கம்- சண்முகா
    84)சிதம்பரம்- வடுகநாதன் ஏசி
    85)நெய்வேலி -மகாலட்சுமி ஏசி
    86)சங்கராபுரம் -பரகத்

    கோயம்புத்தூர் பகுதி

    87)கோயம்புத்தூர்- தி சினிமாஸ் 88)கோயம்புத்தூர்-ஐநாக்ஸ்
    89)கோயம்புத்தூர் -கே.ஜி. சினிமாஸ்
    90. கவுண்டம்பாளையம் - கல்பனா
    91)கிணத்துகடவு- சர்வம்
    92)போத்தனூர் -அரசன்
    93)ஆலந்துறை -கோகுலம்
    94)ஈரோடு- அண்ணா (ஸ்கிரீன் 2)
    95)ஈரோடு -ஸ்ரீ சந்திரிகா
    96)ஈரோடு -தேவி அபிராமி
    97) திருப்பூர்- ஸ்ரீ சக்தி சினிமாஸ் 98)திருப்பூர் -உஷா
    99)திருப்பூர் -சரண்யா
    100) திருப்பூர் -சக்தி
    101)பொள்ளாச்சி -தங்கம்
    ௧௦௨)உடுமலைப்பேட்டை - லதாங்கி 103)மேட்டுப்பாளையம் -ஸ்ரீ சக்தி 104)பெருந்துறை -மகாலட்சுமி
    105)சக்தி -சத்யா
    106)சோமனூர் -மீனாம்பிகா 107)மங்களம் -சங்கீதா
    108)அந்தியூர் -பாலமுருகன்
    109)பல்லடம் -அலங்கார் 110)காங்கேயம் -சுவர்க்கம்
    111)கோபி -ஜியான் சினிமாஸ் 112)புளியம்பட்டி -ஸ்ரீதேவி
    113)ஊட்டி- ஸ்ரீ கணபதி
    114)பவானி- ஸ்ரீ விஷ்ணு 115)சின்னிமலை- அண்ணாமர் 116)சிவகிரி -வேல்
    117)பி.என். பாளையம்- ஜெயந்தி

    சென்னை

    118)சத்யம் சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
    119)எஸ்கேப் சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
    120)தேவி சினிப்லக்ஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
    121)உட்லண்ட்ஸ் -சென்னை 122)ஆல்பட்- சென்னை
    123) சங்கம் சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
    124)ஈகா சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
    125)பிவிஆர் ஏசி டிடிஎஸ்- சென்னை
    126)பலாசோ ஏசி டிடிஎஸ்- சென்னை
    127)கமலா சினிமாஸ், ஏசி டிடிஎஸ்- சென்னை
    128) ஐ ட்ரீம் ஏசி டிடிஎஸ்- சென்னை
    129)பாரத் ஏசி டிடிஎஸ்- சென்னை
    130) ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ்- டி நகர்

    (செங்கல்பட்டு ஏரியா)

    131) ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ்-
    வில்லிவாக்கம்
    132)ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ் -ஒ எம் ஆர்
    133) ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ்- மதுரவாயில் 134)ஐநாக்ஸ் -ஓஎம்ஆர்
    135)பாலாஜி ஏசி டிடிஎஸ்-காஞ்சிபுரம்
    136) லக்சி- வேளச்சேரி
    137)பிவிஆர் கிராண்ட் மால்- வேளச்சேரி
    138)பிவிஆர் காலடா- பல்லாவரம்
    139)பிவிஆர் -ரெட் ஹில்ஸ்
    140) பிவிஆர் வி ஆர் மால்- அண்ணாநகர்
    141) சீனிபோலீஸ் பிஎஸ்ஆர் மால் -ஈசிஆர்
    142)காசி டாக்கீஸ் -கேகே நகர்
    143) ரோஹினி காம்ப்ளக்ஸ் ஏசி டிடிஎஸ்-கோயம்பேடு
    144)மாயாஜால் ஏசி டிடிஎஸ் -கானத்தூர்
    145) ஜோதி ஏசி டிடிஎஸ்- பரங்கிமலை
    146)ஸ்ரீ சண்முகா ஏசி டிடிஎஸ்- மூலக்கடை
    147)ஜிகே காம்ப்ளக்ஸ் -போரூர்
    148)ராதா மூவிஸ் பார்க் -ரெட் ஹில்ஸ்
    149)கணேஷ் ஏசி டிடிஎஸ்- அனகாபுத்தூர்
    150)வேலா ஏசி டிடிஎஸ் -திருநின்றவூர்
    151)பாலாஜி ஏசி டிடிஎஸ்- அச்சரபாக்கம் 152)பாபு- அம்மையார்குப்பம்
    153)பூங்கா ஜிகே -மணமதி

    படம் பார்த்த தங்கள் அனுபவங்களை
    நண்பர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    Ithayakkani S Vijayan
    Esakki Pandian P

  5. #1514
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளிதழ்கள் விளம்பரங்கள் இல்லாமலே இதுவும் ஒரு உலக சாதனை, சரித்திரம், சகாப்தம்... மக்கள் திலகம் வழங்கும் " அன்பே வா" டிஜிட்டல் காவியம் இன்னொரு புத்தம் புதிய உச்சம் பெற்ற சாதனைகளை பதிவு செய்துள்ளது... இத்திரைப்பட விநியோகஸ்தர்கள் எந்த விதமான விளம்பரம் செய்யாமல் இருப்பது யாரும் நினைத்து பார்க்க இயலாத விசித்திரமான... விந்தை நிகழ்வு...

  6. #1515
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
    மார்கழி மாதம் 5 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை

    உலக எம்ஜிஆர் ரசிகர்களே
    இந்திய எம்ஜிஆர் ரசிகர்களே
    தமிழக எம்ஜிஆர் ரசிகர்களே
    உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்

    இந்த வீடியோ காட்சியில் உங்கள் முன் அமர்ந்து பேசுபவர் பெயர்

    கலைஞானம்
    தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் ஒருவராக இருந்தார்

    சிவாஜி அவர்களை வைத்து மிருதங்க சக்கரவர்த்தி என்ற படத்தை தயாரித்தவர்
    ரஜினி காந்த் தை வைத்து படம் எடுத்துள்ளார்

    மேலும் பல சினிமா தயாரித்தவர்

    குடும்பத்தில் நடந்த தன் வாழ்க்கையில் நடந்த
    சுக துக்கங்களை மனம்விட்டு பேசுவாராம்
    அப்படி தேவர் அவர்கள் எம்ஜிஆரை பற்றி கூறிய வார்த்தைகளை

    இப்பொழுது கலைஞானம் அவர்கள் உங்கள் முன் கூறுகிறார்.

    எம்ஜிஆரை நம்பியவர்கள் கெட்டது இல்லை என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி ......... Prmc...........

  7. #1516
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் இன்றும் ஏன் பேசும்பொருள் ஆனார்?

    ‘எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

    சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?

    நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார்.

    எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

    எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
    எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள்.

    அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

    தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது.

    ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

    வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.
    எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

    மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

    எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
    ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா? என்பது தெரியவில்லை.

    நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது.

    எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.
    ரஜினி, கமல்தான் என்றில்லை... சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் தக்க பதில் வைத்திருப்பார்கள்.

    ஜாசன் மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர்
    "எம்ஜிஆர் இன்றும் ஏன் பேசும்பொருள் ஆனார்?" https://www.hindutamil.in/amp/news/o...........cmuthu

  8. #1517
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி சொல்லிக்கொள்கிறேன்:...
    ������������������������
    தமிழ்நாட்டில் ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறும் கருத்தான எம்.ஜி.ஆர் பெயரை ரஜினி கமல் போன்றவர்கள் உச்சரிப்பது சுயநலம் என்கின்றனர்.ஆனால் அவர்கள் மட்டும் எந்நேரமும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப் பட்ட கட்சியை அம்மாவின் அரசு என்பார்கள்.
    எம்.ஜி.ஆரை இருட்டடிப்பு செய்வார்கள்.எம்.ஜி.ஆர் பெயரையே சொல்லமாட்டார்கள்.அடுத்தவர் எம்.ஜி.ஆர் புகழ் பாடினாலும் விடமாட்டார்கள்.தானும் சொல்லுவதில்லை,அடுத்தவரையும் சொல்ல விடுவதில்லை.இவர்கள் ஒரே குறிக்கோள் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லக்கூடாது.அவர்கள் அம்மா பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
    இந்த நேரத்தில் நான் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் பக்தன் என்றமுறையில் ரஜினிக்கும் ,கமலுக்கும் என் நன்றி!������
    காரணம் எம்.ஜி.ஆரை அனைத்து ஊடகம் மற்றும் உலகம் முழுதும் அவர் புகழுக்குள்ள
    மதிப்பை அறிய வைத்ததற்கு நன்றி!������
    உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத இறந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக தேர்தலின்
    வெற்றி தோல்விக்கு பயன்படுத்தப்படும் நிரந்தர புகழுக்கு என்றுமே சொந்தக்காரர்
    எம்.ஜி.ஆர் ஒருவர்தான்.தமிழகத்தின் நிரந்தர
    தலைவராக இருக்கும் மக்கள் செல்வாக்கு
    பெற்ற முதல் தலைவர்.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
    ����������������������...Rnjt

  9. #1518
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வங்க_கடலோரத்தில்
    #துயில்_கொள்ளும்
    #என்_தங்க_தலைவர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
    #திங்கட்கிழமை_காலை_வணக்கம்..

    கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்
    புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் தொடருக்கு இன்று ஒரு ஓய்வு கொடுத்து
    கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் பொன்மனச்செம்மல் எம்ஜியார் பற்றி ஒரு பதிவை இங்கே
    பார்ப்போம்...

    தொடர்பதிவை நிறுத்தி இடை பதிவாக இன்று இட காரணம் நேற்றைய இரவில் முகநூல் பக்கத்தில் ஏற்பட்ட இடரே காரணம்.. கட்சி தலைமை புரட்சி தலைவர் எம்ஜியாரை இருட்டடிப்பு செய்வது குறித்து பதிவிட்டால் இவர்களுக்கு கோபம் வருகிறது கட்சியின் தலைமையை விமர்சனம் செய்ய கூடாதாம்.. தலைமை ஒழுங்காக இருந்தால் ஏன் இவர்களை விமர்சனம் செய்ய போகிறேன்..
    புரட்சி தலைவர் வேண்டாமாம் அவரை இருட்டடிப்பு செய்வது பற்றி தலைமையை விமர்சனம் செய்தால் இவர்களுக்கு பிடிக்காது ஆனால் அவரின் இரட்டை இலை சின்னம் மட்டும் தோற்க கூடாதாம்...
    ஒருவர் சொல்கின்றார் அவர் சொந்த காசை செலவு செய்து அஇஅதிமுக வை வளர்த்தாராம் எம்ஜியார் அவருக்கு தோள் கொடுத்தாராம் மிக்க மகிழ்ச்சி.. அதனால் நான் விமர்சனம் செய்ய கூடாதாம் இன்னொருவர் கட்சிக்காக களப்பணி செய்து இருக்கியா என்று
    19 வருட கழக உறுப்பினர் நான்.. கட்சி சார்பில் 22 வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று இருந்தவன் நான் என்பதை இங்கு அவருக்கு சுட்டி காட்டுகிறேன்...

    புரட்சி தலைவர் பக்தர்கள் என்ற போர்வையில் சிலர் புகுந்து கொண்டு
    இருப்பது வேதனை அளிக்கிறது அவர்களுக்கு தான் இந்த பதிவு..

    எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

    சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?

    நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

    எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

    தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

    வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.

    எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

    மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

    எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

    ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.

    நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.

    சமீபத்தில் ஒரு விவாத மேடையில் பயில்வான் ரங்கநாதன்
    கே.சி.பழனிச்சாமி மற்றும் அஇஅதிமுக
    வின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்ட அந்த விவாதத்தில் ரங்கநாதன் எம்ஜியார் அவர்களை இருட்டடிப்பு செய்கின்றனர் என்றும் இன்றைய எம்ஜியார் பக்தர்களின் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னார் அதற்கு புகழேந்தியால் பதில் சொல்ல முடியவில்லை...
    எம்ஜியார் ஆரம்பித்த கட்சியில் அவரை முன்னிலை படுத்த வேண்டும் என்று இன்றைய ஆளும் வர்க்கத்திடம் அழுத்தம் கொடுக்க வேண்டுமாம் ஏன் அவர்கள் என்ன பால் குடிக்கும் குழந்தைகளா..?
    நேரம் வரும்போது தலைமை தலைவரை
    முன்னிலை படுத்துவார்களாம் அதுவரை அமைதியாக இருக்க வேண்டுமாம்..
    எம்ஜியார் பக்தர்கள் என்ற போர்வையில் புகுந்து கொண்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு துணை போகும் புல்லுருவிகளே ஒன்று கழகத்திற்கு சென்று அரசியல் செய்யுங்கள் இல்லை உண்மையான தலைவர் பக்தர்கள் என்று ஒரே இடத்தில் நில்லுங்கள்...
    பச்சோந்தி போல் இருக்காதீர்கள்.

    கழகத்தில் இருக்கும் எம்ஜியார் பக்தர்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு பொறுத்து கொண்டு இருப்பதற்கு இது தலைவர் ஆரம்பித்த இயக்கம் என்பதால் மட்டுமே தலைவரை இருட்டடிப்பு செய்தால் அதன் பலனை அனுபவிப்பர்..........vrh...

  10. #1519
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வங்க_கடலோரத்தில்
    #துயில்_கொள்ளும்
    #என்_தங்க_தலைவர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
    #திங்கட்கிழமை_காலை_வணக்கம்..

    கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்
    புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் தொடருக்கு இன்று ஒரு ஓய்வு கொடுத்து
    கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் பொன்மனச்செம்மல் எம்ஜியார் பற்றி ஒரு பதிவை இங்கே
    பார்ப்போம்...

    தொடர்பதிவை நிறுத்தி இடை பதிவாக இன்று இட காரணம் நேற்றைய இரவில் முகநூல் பக்கத்தில் ஏற்பட்ட இடரே காரணம்.. கட்சி தலைமை புரட்சி தலைவர் எம்ஜியாரை இருட்டடிப்பு செய்வது குறித்து பதிவிட்டால் இவர்களுக்கு கோபம் வருகிறது கட்சியின் தலைமையை விமர்சனம் செய்ய கூடாதாம்.. தலைமை ஒழுங்காக இருந்தால் ஏன் இவர்களை விமர்சனம் செய்ய போகிறேன்..
    புரட்சி தலைவர் வேண்டாமாம் அவரை இருட்டடிப்பு செய்வது பற்றி தலைமையை விமர்சனம் செய்தால் இவர்களுக்கு பிடிக்காது ஆனால் அவரின் இரட்டை இலை சின்னம் மட்டும் தோற்க கூடாதாம்...
    ஒருவர் சொல்கின்றார் அவர் சொந்த காசை செலவு செய்து அஇஅதிமுக வை வளர்த்தாராம் எம்ஜியார் அவருக்கு தோள் கொடுத்தாராம் மிக்க மகிழ்ச்சி.. அதனால் நான் விமர்சனம் செய்ய கூடாதாம் இன்னொருவர் கட்சிக்காக களப்பணி செய்து இருக்கியா என்று
    19 வருட கழக உறுப்பினர் நான்.. கட்சி சார்பில் 22 வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று இருந்தவன் நான் என்பதை இங்கு அவருக்கு சுட்டி காட்டுகிறேன்...

    புரட்சி தலைவர் பக்தர்கள் என்ற போர்வையில் சிலர் புகுந்து கொண்டு
    இருப்பது வேதனை அளிக்கிறது அவர்களுக்கு தான் இந்த பதிவு..

    எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

    சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?

    நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

    எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

    தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

    வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.

    எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

    மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

    எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

    ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.

    நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.

    சமீபத்தில் ஒரு விவாத மேடையில் பயில்வான் ரங்கநாதன்
    கே.சி.பழனிச்சாமி மற்றும் அஇஅதிமுக
    வின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்ட அந்த விவாதத்தில் ரங்கநாதன் எம்ஜியார் அவர்களை இருட்டடிப்பு செய்கின்றனர் என்றும் இன்றைய எம்ஜியார் பக்தர்களின் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னார் அதற்கு புகழேந்தியால் பதில் சொல்ல முடியவில்லை...
    எம்ஜியார் ஆரம்பித்த கட்சியில் அவரை முன்னிலை படுத்த வேண்டும் என்று இன்றைய ஆளும் வர்க்கத்திடம் அழுத்தம் கொடுக்க வேண்டுமாம் ஏன் அவர்கள் என்ன பால் குடிக்கும் குழந்தைகளா..?
    நேரம் வரும்போது தலைமை தலைவரை
    முன்னிலை படுத்துவார்களாம் அதுவரை அமைதியாக இருக்க வேண்டுமாம்..
    எம்ஜியார் பக்தர்கள் என்ற போர்வையில் புகுந்து கொண்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு துணை போகும் புல்லுருவிகளே ஒன்று கழகத்திற்கு சென்று அரசியல் செய்யுங்கள் இல்லை உண்மையான தலைவர் பக்தர்கள் என்று ஒரே இடத்தில் நில்லுங்கள்...
    பச்சோந்தி போல் இருக்காதீர்கள்.

    கழகத்தில் இருக்கும் எம்ஜியார் பக்தர்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு பொறுத்து கொண்டு இருப்பதற்கு இது தலைவர் ஆரம்பித்த இயக்கம் என்பதால் மட்டுமே தலைவரை இருட்டடிப்பு செய்தால் அதன் பலனை அனுபவிப்பர்..........vrh...

  11. #1520
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அகில உலக ஆண்டவர் புரட்சி தலைவரின் அன்பே வா திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு விழாவில் ஆல்பர்ட் தியேட்டரில் ஞாயிறு 20.12.2020 மாலை காட்சிக்கு தலைவரின் திருவுருவத்திற்கு மலர்மாலைகள் சூட்டி எண்ணெய் சீயக்காய்.மஞ்சள்.குங்குமம் விபூதி சந்தனம் தேன் இளநீர் அபிஷேகபொடி பன்னீர் ஆகியவைகளால் அபிஷேகம் செய்து இனிப்பு வழங்கி ரேடியோ செட் போட்டு சிதறுதேங்காய் உடைத்து எலுமிச்சை பூசணிக்காய்களால் திருஷ்டி சுற்றியது மட்டும் அல்லாமல் ஏசி தியேட்டரில் முதல் பாடலுக்கு சூடமும் ஏற்றி தலைவரின் திரு உருவத்திற்கு கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாகவும் அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் சார்பாக நிகழ்த்தி இதயதெய்வத்திற்கு எங்கள் கடமையை செவ்வனே செய்து மகிழ்ந்தோம்...vss...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •