Page 157 of 210 FirstFirst ... 57107147155156157158159167207 ... LastLast
Results 1,561 to 1,570 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1561
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் எம் ஜி ஆர்
    என்ன சிறப்பான ஆட்சி
    கொடுத்தார் என்று
    பேசிய சீர்கெட்டு, சீரழிந்து போன
    சீ சீ சீ....மானே
    ஒரே ஒரு%ஓட்டுவைத்துக்கொண்டு ஊளையிடும்
    ஓ..நாயே
    கிராஃபிக்ஸில் பிரபாகரனோடு நிற்கும்
    படத்தை போட்டு பேசும்
    கிறுக்கனே
    புரட்சித் தலைவர் ஆதரவும், கோடி கணக்கில் பணஉதவி
    செய்யவில்லை(அதில்தான் ஆயுதமே வாங்கி போராடினார்) என்றால் பிரபாகரனின் கதை,
    சரித்திரம் 1982லே முடிந்திருக்கும்.இது தெரியாமல் உளறும்
    தரித்திரமே
    1967ல் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்
    என்று சொன்ன காமராஜர் கடைசிவரை
    எழுந்திருக்கவில்லை.ஆனால் அவர் பெயரில்
    மாவட்டம் பல்கலைக்கழகம் பெயர் வைத்தார்.கக்கனின்
    கடைசி காலத்தில்
    மருத்துவ செலவுகள்
    வீட்டு வசதி வாரியத்தில் வீடு
    ஓய்வூதிய பணத்தையும்
    கொடுத்து உதவி செய்து அழகு பார்த்த
    அதிசய தலைவரடா
    அறிவில்லாத மூடனே.
    பெரியார் சீர்திருத்த எழுத்து, பெரியார் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரசாங்கத்தின் 100 ஹேக்கர் நிலத்தை ஈரோட்டில் கொடுத்தார் நம் கொடை வள்ளல்.
    பெரியாரை பற்றியே
    தெரியாமல் பேசும்
    பெருச்சாளியே.
    உனக்கு தைரியம்
    இருந்தால் தேர்தல் பிரச்சாரத்தில்
    காமராஜர்.. கக்கன்
    புகைப்படம் மட்டும்
    வைத்து பிரச்சாரம்
    செய்பார்க்கலாம்.
    உனக்கு பதிலடி
    கொடுக்க வைகோவே
    போதும்.
    எம் ஜி ஆர் பக்தர்கள் உனக்கு
    பதிலடி கொடுக்கும்
    அளவிற்கு நீ இன்னும்
    வளரவில்லையடா
    வளர்ச்சியும் (மூளை)
    முதிர்ச்சியும் இல்லாத
    முட்டாளே............Mohandoss.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1562
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள்

    #merry #christmas

    #தெரிந்தவிஷயம் #தான்

    தெரிந்த விஷயமாயிருப்பினும் பொன்மனச்செம்மலின் வரலாறைப் திரும்பத் திரும்ப பதிவிடுவதிலும், அதைப் படித்து ஆனந்தக்கண்ணீர் விடுவதும் தானே #பக்தி...
    செம்மலின் ஒவ்வொரு நிகழ்வும் திகட்டாக்கனி ஆயிற்றே...

    ஒருமுறை தாமஸ் என்பவர் புரட்சித்தலைவரை
    கருணையின் திரு உருவாம் இயேசுநாதர் வேடத்தில் நடிக்கவைக்க விருப்பப்பட்டார்.

    தன்னடக்கத்தின் சிகரமான எம்ஜிஆர், "இயேசுநாதர் வேடத்தில் நான் போய் நடிப்பதா ? எனக்கு அந்தத் தகுதி சிறிது கூட இல்லை..." என்றார்.

    அப்போது தாமஸ் சொன்ன மனதை ஊடுருவும் வார்த்தைகள் தான் இவை...

    "கருணையும், கொடைத்தன்மையும் தேவனின் பெருங்குணங்கள். மனிதநேயத்தின் உச்சம் நீங்கள்.உங்களுடைய கனிவான #பார்வையில் #இறைத்தன்மை குடிகொண்டுள்ளது...

    இத்தகைய மாபெரும் அணிகலன்களைச் சூடிக்கொண்டுள்ள தங்களைத் தவிர வேறு ஒருவரை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது என்னால்..." என்றார்.

    #சரிதானே...bsm...

  4. #1563
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் நினைவுநாள் சிறப்பு பதிவு.. நேரலை.

    கடந்த 32 ஆண்டுகள் தொடர்ந்து தலைவர் நினைவிடத்தில் அஞ்சலிக்கு அவரின் நெஞ்சங்கள் கூடுவது வழக்கம்..

    என் நினைவுக்கு தெரிந்து 1988 ஆம் வருடம் பின் இன்று 2020 அன்று அரசு தரப்பு மரியாதை நிகழ்வுகள் முடிந்து...

    தலைவர் காலத்தில் மன்றம் கண்ட அனைத்து எம்ஜிஆர் கூட்டு அமைப்புகளும் கூடி அமரர் அண்ணா சிலை அருகில் இருந்து தலைவர் நினைவிடம் நோக்கி வழக்கம் போல சென்றோம்.

    அங்கு நாங்கள் கண்ட காட்சி மதியம் 1 மணி அளவில் அலை அலையாக பொங்கி வந்த கூட்டத்தை பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம்...

    நினைவிட வேலைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலும் நாட்டின் பலவேறு பகுதிகளில் இருந்து வந்த தலைவர் நெஞ்சங்கள் கூட்டம் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது...

    என்ன ஒரு திடீர் எழுச்சி என்று நம் மனதில் தோன்றியதில் வியப்பு ஏதும் இல்லை...அது தான் அவரின் மகாசக்தி...

    எப்ப தேவையோ அப்போ அவரின் சக்தி பொங்கி எழும் என்பது கண்கூடாக தெரிந்தது.

    இன்னும் கோரோணா ஊரடங்கு ஓயவில்லை.
    போதிய ரயில் பஸ் வசதி இல்லை ஆனாலும் அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளம் ஆக அவரிடம் நினைவிடம் நோக்கி மக்கள் குவிந்தது..

    ஏதோ ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது..

    பதிவில் இணைக்க பட்டுள்ள படங்களே சாட்சி நிகழ்வுகளுக்கு..
    சாரை சாரை ஆக வந்த பெண்கள்...இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் பக்கம் இல்லை என்பதை போன்ற வதந்திகளை தவிடு பொடியாக்கின இன்றைய நிகழ்வுகள்.

    வாழ்க புரட்சிதலைவர் புகழ்....

    நன்றி...உங்களில் ஒருவன்....தொடரும்..

    இன்று மீண்டும் தலைவர் நெஞ்சங்கள் ஆக பிறந்த உணர்வில் உணர்ச்சியில் இந்த பதிவு.....நன்றி...............

  5. #1564
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பஞ்சம் பசி மேலாதிக்க ஜாதி கொடுமை ஆட்சி காமராஜர் ஆட்சி,
    ஊழல் குடும்ப ஆட்சி கருணாநிதி ஆட்சி,
    ஊழல் தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சி ,

    தமிழகத்தை பொற்க்கால முதல்வர் எம் .ஜி ஆர்., ஆட்சியால் தான் மேற்க்கல்வி, சத்துணவு, கிருஷ்ணா நீர், கரும்பு ஆலை காகித ஆலை மற்றும் தொழில் கல்வி மகளிர் காவல்நிலையம் விலைவாசி குறைவு ரேஷன் சரியாக வினியோகம் தமிழ் மொழிக்காக தமிழர் காமராஜ் செய்யவில்லை. அதற்க்கு பின் வந்த முதல்வர்கள் செய்யவில்லை ,எம் ஜி ஆர் செய்தார் தமிழுக்கு சிறப்பு எப்படி தமிழ்தாயக்கு கோயில் ,ஆயிரம் ஏக்கரில் பல்கலைகழகம் ஐந்தாம் தமிழ் மாநாடு பெரியார் எழுத்து சீர்திருத்தம் என பல
    எம் ஜி ஆரை எம் ஜி ஆர் ஆட்சியை குறை சொல்ல எவருக்கும் தகுதியோ உரிமையோ இல்லை...

    வாழ்க எம்ஜிஆர் புகழ்...Arm...

  6. #1565
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "மக்களின் அன்பு... வாய்விட்டு அழுத எம்.ஜி.ஆர்!"- நினைவுகள் பகிரும் கே.மாயத்தேவர் நேர்காணல்

    அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர். இரட்டை இலை சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கே.மாயத்தேவர், அதிமுகவின ஆரம்ப காலம் முதல் இன்றைய அரசியல் நிலவரம் வரை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.



    2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட்ட நிலையில், அரசியல் அரங்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லாமல் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்கள். நீயா நானா என இரண்டு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளை வீசி வருகி
    இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகின்ற தேர்தலில் ரஜனி, கமலுக்கு விழுகின்ற அடி இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது என காட்டமாக பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக சுயேட்சை சின்னமாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் முதல் வெற்றி வேட்பாளர் கே.மாயத்தேவரை, அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக தொடக்கம் முதல் இன்றைய அரசியல் நிலவரம் வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பரபரப்பான பதில் இதோ...


    எம்.ஜி.ஆர் உடன் ஏற்பட்ட பழக்கம்

    "எனது தாய்மாமன் நல்லுத்தேவர் கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் வாதாட நான் சென்று வந்த சமயம், எம்.ஜி.ஆர் அவர்களை நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கொலை முயற்சி வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கில் ஆஜராக வந்த எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    அதிமுகவின் தோற்றமும் வளர்ச்சியும்:

    அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். அப்படி இருந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கபட்டார். இதையடுத்து திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆருடன் வந்த தலைவர்களின் ஆதரவோடு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார்.

    எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ’நீ வா தலைவா, நாங்கள் இருக்கிறோம்’ என அதிமுகவை மக்கள் வெகுவாக ஆதரித்தார்கள். எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெண்களின் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

    அவருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்ட கருணாநிதி, அதிமுகவை வளரவிட்டால் நமக்கு ஆபத்து என கருதி எம்.ஜி.ஆரை தவிர்த்து கே.ஏ.கிருஷ்ணசாமி, மோகனரங்கம், பம்மல் நல்லதம்பி உட்பட இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு செக்*ஷன் 307ஐ பயன்படுத்தி கொலை முயற்சி வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டார்.

    எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு

    கருணாநிதியால் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மீட்க, பி.எச்.பாண்டியன் போன்ற பெரிய வழக்கறிஞர்களை நியமித்து வாதாடி பகீரத முயற்சி செய்தும் யாரையும் ஜாமீனில் வெளியே எடுக்க முடியவில்லை. கட்சியே அழிந்து விடும் சூழல், எம்.ஜி.ஆருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது எம்.ஜி.ஆர், இரண்டாம் கட்ட தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நல்ல திறமையான தைரியமான போர்குணமுள்ள இளம் வழக்கறிஞர் யாராவது இருந்தால் அழைத்து வாருங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார்.

    இதையடுத்து இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றேன். எம்.ஜி.ஆர் என்னை பார்த்ததும் ’அட நம்ம மாயன், எப்படி இருக்கிறீங்க?’ என்று நலம் விசாரித்து, வழக்கின் தன்மையை விளக்கினார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன். இந்த வழக்கில் இருந்து அனைவரும் ஜாமீனில் வெளிவர நான் என்ன வேண்டுமானால் செய்வேன். பின்பு ஏன் அப்படி செய்தாய், இப்படி செய்தாய் என்று என்னிடம் கேட்கக்கூடாது என்றேன்.

    சிறிது நேரம் யோசனை செய்த எம்.ஜி.ஆர், ’சரி நான் பார்த்துக் கொள்கிறேன்; எனக்குத் தேவை, இந்த கேஸில் இருந்து அனைவரும் வெளியே வரவேண்டும்’ என்றார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது அந்த வழக்கில் ஆஜரான நான், நீதிபதியிடம் ’தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதம் எதையாவது காட்டுங்கள்’ என்றேன்.

    அதற்கு நீதிபதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ’கொலை முயற்சியில் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா?’ என்றேன் அதற்கும் அமைதிதான். ’இப்படி சம்பந்தமில்லாமல் ஒரு கட்சியை அழிக்க நினைக்கும் சூழ்ச்சிக்கு நீதிபதி ஆதரவாக இருக்கலாமா?’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டு, நேருக்கு நேராக சண்டை போட்டு அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தேன். இந்தச் சம்பவம் எம்.ஜி.ஆருடன் எனக்கு நல்ல தொடர்பை ஏற்படுத்தியது.

    முதல் அதிமுக வேட்பாளராக நாடாளுமன்றத்துக்கு போட்டி

    திமுகவைச் சேர்ந்த இராஜாங்கம் என்பவர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவையொட்டி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக முதன்முதலாக களம் கண்டது. அப்போது அதிமுக சார்பாக என்னை வேட்பாளராக எம்.ஜி.ஆர் களமிறக்கினார். அப்போது நான் சொன்னேன்: ’தலைவரே, தேர்தல் களத்தில் செலவுக்கு நிறைய பணம் தேவைப்படும். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை’ என்றேன். ’உன்னால் முடிந்ததை செலவு செய். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்’ என்றார்.

    இரட்டை இலை சின்னம் கிடைத்த வரலாறு

    பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் ஆணைப்படி அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து சின்னம் ஒதுக்கும் நாள் வந்தது. அப்போது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சிரியாக் 16 சின்னங்களை என்னிடம் காட்டினார். முதன்முதலாக தேர்தல் களம் கண்ட அதிமுகவுக்கு சுயேட்சை சின்னம்தான். சிரியாக் காண்பித்த 16 சின்னத்தில் 7-வது சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை நான் தேர்வு செய்து எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

    ’என்ன மாயன், எத்தனையோ சின்னம் இருக்க இரட்டை இலையை?’ என்றார். ’தலைவரே, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற வின்சென்ட் சர்ச்சில் தனது வெற்றியை பறைசாற்ற வெற்றியின் அடையாளமான ’வி’ என்ற எழுத்தை இரண்டு விரல்களில் காட்டிநின்றார். அதேபோல் நீங்களும் இரண்டு விரல்களை மட்டும் காட்டுங்கள். மக்கள் இரட்டை இலை சின்னத்தை எளிதாக புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள்’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அப்படி என்னால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலை சின்னம்தான் இன்று அதிமுகவின் மாய மந்திரம்.

    எம்.ஜி.ஆர் என்மீது கொண்ட பாசம்

    இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் தேர்தல் பிரசாரத்தில் அதிக ஈடுபாடு காட்டினார் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பழக்கப்பட்ட அவருடன் என்னால் ஈடுகொடுத்து வாக்கு சேரிக்க முடியவில்லை. அது எனக்கு பழக்கமும் இல்லை. இப்படித்தான் ஒருமுறை தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது எம்.ஜி.ஆரின் தோளில் சாய்ந்து தூங்கிவிட்டேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை; தூங்கட்டும் என்று விட்டுவிட்டார். பிரச்சாரம் செய்யும் இடம் வந்ததும் என்னை எழுப்பி ’டீ குடிங்கள்’ என்று கொடுத்தார். இது போன்ற பாசமுள்ள தலைவனை இப்ப பார்க்க முடியுமா? அதுதான் எம்.ஜி.ஆர்.

    தன்மீது பாசம் வைத்துள்ள மக்களை நினைத்து வாய்விட்டு அழுத எம்.ஜி.ஆர்


    பிரசாரத்துக்கு செல்லும் வழிநெடுகிலும் மக்களிடம எம்.ஜி.ஆருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குடு குடுவென படிகளை தாண்டி மேடையில் தோன்றும் எம்.ஜி.ஆர், மேடையின் நாலாபுறமும் இருக்கும் மக்களை பார்த்து இரட்டை இலை சின்னத்தை தனது விரல்களால் காட்டி வாக்கு சேகரிப்பார். பின்பு மக்களிடையே பேசத்தொடங்கும் எம்.ஜி.ஆர், ’என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற அவரின் குரலை கேட்டவுடன் ’தலைவா’ என்ற சப்தம் விண்ணைப் பிளக்கும். விசில் சப்தம் காதை கிழிக்கும். அந்த அளவுக்கு மக்கள் அவர்மேல் உயிரையே வைத்திருந்தனர்.

    ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து கண்கலங்கிய மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார். ஒருமுறை பிரச்சாரம் முடிந்து காரில் எறிய எம்.ஜி.ஆர் வாய்விட்டு அழுதுவிட்டார். அதைக்கண்ட நான் அதிர்ச்சியடைந்து ’தலைவா தேர்தலில் தோற்றுவிடுவோம்’ என்று அழுகிறீர்களா என்றேன். ’இல்ல மயான், என்மீது இவ்வளவு அன்புவைத்துள்ள மக்களுக்கு நான் என்ன செய்தேன், என்மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்’ என்றவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார்.

    ராசியானவன் என அழைத்து நடுவில் அமரவைத்த எம்.ஜி.ஆர்

    சென்னை ராமாவரம் இல்லத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது, எம்.ஜி.ஆர் நாஞ்சில் மனோகரனுடன் பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ’வாங்க மாயன்’ என்று அழைத்து இருவருக்கும் நடுவில் என்னை அமரச்சொன்னார். நான் தயங்கினேன். உடனே ’நீங்கதான் ராசியானவர். இந்த கட்சியின் ஆனிவேர். அதனால நடுவுலதான் இருக்கணும்’ என்று கையைப் பிடித்து இழுத்து அமரவைத்தார்.

    இப்படி பாசமான எம்.ஜி.ஆர் பழசை மறக்காமல். தன்னைத்தேடி தனது இல்லத்துக்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரிப்பார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு, தான் அணிந்திருக்கும் சிலுக்கு ஜிப்பா பாக்கெட்டில் கையைவிட்டு எடுக்கும் பணத்தை வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாவண்ணம் அப்படியே கொடுப்பார். அதனால் தான் மக்கள் அவரை கொடைவள்ளல் என்றழைத்தனர்.

    இந்திராவை ஆதரித்து பேசியதற்காக அதிமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டேன்:

    1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது மொராஜி தேசாய் பிரதமராக இருந்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திரா காந்தி மீது பக்கத்து வீட்டு கோழியை திருடிவிட்டார் என்று பொய் கேஸ் போட்டு நாடாளுமன்றத்திலேயே அவரை கைது செய்துவிட்டனர். இதைப் பார்த்து எல்லோரும் அமைதி காக்க, என் மனம் பொறுக்கவில்லை. மொராஜி தேசாயைப் பார்த்து ’இந்திரா காந்தி சாதாரண பெண் அல்ல; சுதந்திரப் போராட்ட தியாகிகள் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரை கைது செய்வதால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தண்டனை வழங்குவார்கள்’ என்று ஆவேசமாக முழங்கினேன்.


    இதை சற்றும் எதிர்பாராத இந்திரா காந்தி எனது கையை பிடித்து முத்தமிட்டு (My bold darling son) எனது மூத்த மகன் நீங்கள் என்று கூறியதுடன் ’உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானலும் கேளுங்கள்; நான் செய்ய காத்திருக்கிறேன்’ என்றார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு என்னை அழைத்த எம்.ஜி.ஆர், ’என்ன மாயன் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று எதிர்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள்’ என்றார். ’நியாயத்தைதானே பேசினேன்’ என்றேன். ஜனதா கட்சியை திருப்திபடுத்த அதிமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் என்னை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தார்.

    எம்.ஜி.ஆருக்கு நான் ராசியானவன்

    1973க்கு பிறகு எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி மற்றும் புத்தாண்டின் முதல் நாள் காலையில் எனது முகத்தில் தான் விழிப்பார். ’நான் தொடங்கிய கட்சியில் நின்று வெற்றி பெற்று அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆணிவேராக இருந்தவன் நீ... அதனால் உனது முகத்தில் முழிப்பதை பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக

    செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று பலரும் கணக்கு போட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்குத் தேவையான நல்ல பல திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார்கள். புதிதாக அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ற இரு ஆளுமைகள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களின் ஓய்வற்ற உழைப்பில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையான இருந்து மீண்டும் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

    நடிகர்களின் அரசியல் வருகையும் எம்.ஜி.ஆர் பெயரும்

    ஜனநாயக நாட்டில் நடிகர்கள் அல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்த அவர்களுக்கு உரிமையில்லை. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக மட்டுமே எம்.ஜி.ஆர் பெயரையும் அவரது உருவப் படத்தையும் பயன்படுத்த முடியும்.

    கருப்பு எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆரின் வாரிசு, எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன், எம்.ஜி.ஆரின் மடியில் தவழ்ந்தேன் என்றெல்லாம் ஆளாளுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைமட்டும் சொல்லிக் கொள்கின்றேன். எம்.ஜி.ஆர் என்றால் அவர் ஒருத்தர்தான். அவரைபோல யாரும் வரமுடியாது. திரைப்படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோலவே வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் கஷ்டங்களை நன்கு அறிந்திருந்தார். பசியின் கொடுமை என்னவென்று அவருக்கு புரியும். அதனால்தான் தன்னை சந்திக்க வரும் மக்களுக்கு வயிராற உணவளித்து மகிழ்ந்தார். அவரைபோல் ஒருவர் பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. அவருக்கு நிகர் அவரே...Poongudi.........

  7. #1566
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு நாள் மதுரை சென்னை பாண்டியன் விரைவு ரயிலில் ஒரு பெட்டியில் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டு இருந்தவர்கள் கூட ஒரு தொழுநோயால் பாதிக்க பட்ட நண்பரும் அதே பெட்டியில் பயணம் செய்து வந்தார்...

    உடன் பயணம் செய்த சிலர் முகம் சுளிக்க ஒருவர் கேட்கிறார் அவரை பார்த்து எங்கு வரை உங்கள் பயணம் என்று கேட்க அவர் சென்னை வரையில் என்று பதில் சொல்கிறார்...

    சென்னைக்கு என்ன வேலையாக என்று அவர் விடாமல் கேட்க அந்த தொழுநோயாளி நண்பர் என் தலைவரை பார்க்க போகிறேன் என்று சொல்ல..

    யார் உங்கள் தலைவர் என்று கேட்க அனைவரும் அவரை உற்று பார்க்க எம்ஜிஆர் அவர்கள் தான் என்று சொல்ல அனைவரும் கேலியாக சிரிக்க....

    நீங்கள் எப்படி அவரை சந்திக்க முடியும்..உங்களை அவர் பார்க்க அனுமதிப்பாரா என்று கேட்க....அவர் கொண்டு வந்த அவர் பழைய பையில் இருந்து பத்திரப்படுத்தி வைத்து இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்க..

    அதில் உங்கள் விருப்ப படி என்னை உங்கள் வசதி படி சந்திக்க நீங்கள் வரலாம்...யாரும் அங்கே உங்களை தடுத்தால்....இந்த எனது கடிதத்தை வாசலில் இருக்கும் காவலாளி இடம் காட்டுங்கள் ..

    அவர் உங்களை உள்ளே என்னை பார்க்க அனுமதிப்பார்.

    உங்கள் அன்பன்..
    எம்.ஜி. ராமச்சந்திரன் என்ற நம் தங்க தலைவரின் கை எழுத்துடன் கூடிய கடிதத்தை அவர் காட்ட.

    உறைந்து போய் ஒன்றும் பேசமுடியாமல் நின்றனர் உடன் பயணித்த பயணியர்.

    அவர் தான் மக்கள் திலகம்....

    வாழ்க அவர் புகழ்.

    இந்த நாளில் இந்த பதிவை உங்களிடம் கொண்டு சேர்க்க உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி.

    உங்களில் ஒருவன்.
    நெல்லை மணி..

    நன்றி..தொடரும்...

    தலைவர் நடிப்பதாக இருந்து பின் வெளிவராத பரமபிதா படத்தில் ஸ்டில் படத்துடன் பதிவு..நன்றி

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று உலகம் சொல்ல வேண்டும்...

    பாடல் வரிகள் படி தானே வாழ்ந்து காட்டிய தானை தலைவர் அல்லவா அவர்...

  8. #1567
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Abdul Rahim பாய், நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் நடந்த விழாவில் காமராஜரா ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக் கோட்டு கொடுத்தார்?. பாடலை எழுதியவரும் பாடியவரும் ரஹீம் பாய்க்கா உழைத்தார்கள்.?. உங்க கால்ஷீட்டிற்கா அவர்கள் காத்துக் கிடந்தார்கள்.?. அத்தனை கூட்டமும் உங்களைப் பார்க்கவா தியேட்டரில் தோரணத்தைக் கட்டியது?. எழுதியவர் சொல்கிறார் எனது வரிகள் உங்களது வாயசைப்பில் தான் உயிர் பெற்றது என்று.வாயசைச்சவர் சொல்கிறார் நீங்க தான் பாடலை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் என்று.அவர் நினைத்தால் பாடலாசிரியரை நொடியில் தூக்கலாம்.அவர் நினைத்தால் புதிய குரலை நொடியில் கொண்டு வரலாம்.இதெல்லாம் உங்களுக்கு சொல்லித் தான் தெரியணுமா?. ஏன் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினால் மட்டும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.இந்த வியாதிக்கு என்ன பெயர் வைப்பது?. ...ASF...

  9. #1568
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வானுலகச் சந்திரன் வளரும்.தேயும்.
    அவ்வப்போது மறையும்.

    மண்ணுலக இராமச்சந்திரருக்கு வாழ்நாளெல்லாம் வளர்பிறை தான்.
    முழுமதியின் குளுமை ஒளி தான்.

    அந்த நல்லொளியில் அன்றைய திரையுலகமும்,
    அரசியல் வானும் துளிர்த்தது.தழைத்தது.செழித்தது.

    எதிர்ப்பாளர்களின் முறைப்பில் மக்கள் திலகம் மகத்தாக வளர்ந்தார்.

    முறைத்தவர்களும்,எதிர்த்தவர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தார்கள்.

    பகைவருக்கும் அருளிய நன்னெஞ்சம் அது.
    ஏழைகளுக்கு இரங்கிய மென்னெஞ்சம் அது.

    மக்கள் தங்கள் இதய சிம்மாசனத்தில் அந்த மன்னவருக்கே முற்றாக முதலிடம் அளித்தார்கள்.

    இவ்வுலகம் இருக்கும் வரை அந்த இரக்க மனச் சிந்தனையாளரின் இறவாப் புகழ் இனிய வாச மலராய் மலர்ந்து,வளர்ந்து
    செழித்திருக்கும்....Arun Ramanan.........
    ����⭐������

  10. #1569
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    �� கசாப்பு கடைக்காரர் , நான் புத்திரின் வாரிசு என்று சொல்ல முடியுமா !
    ����������������������

    எங்கள் தலைவர் நடிகர் இல்லை ! அவர் ஒரு பல்கலை கழகம் !!

    தாய் குலத்தை மதித்த தலைவன் ! தாய்மையை போற்றிய தலைவன் ! !

    பாடல்களில் தமிழ் உணர்வு இருக்கும் ,

    பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சை கலக்காத தலைவன் ,

    தாய் நாட்டை பற்றி இருக்கும் , வீரம் இருக்கும் , விவேகம் இருக்கும் , துணிவு இருக்கும் , பணிவு இருக்கும் , தத்துவம் இருக்கும் , காதலும் இருக்கும் ,

    சுருக்கமாக சொன்னால் ,

    அத்திபழம் ஆப்பில் ஆகமுடியுமா !

    ஒதியன் தேக்குமரம் ஆகமுடியுமா !!

    கழுதை கஸ்தூரி மான் ஆகமுடியுமா !

    கொக்கரகோ தோகைவிரித்தாடும் அழகு மயில் ஆகமுடியுமா !!

    சொறிநாய் சீறும் சிங்கம் ஆகமுடியுமா !

    தலை இருப்பவனெல்லாம் தலைவன் ஆகமுடியுமா !!

    வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கலாம் ! ஆனால்
    சந்திரன் ஒன்று தான் ,

    33 ஆண்டுகள் ஓடிவிட்டது இன்றும் தலைவர் ஆட்சி தான் ,

    விசில் அடிப்பவனெல்லாம் mgr ரசிகர்கள் ஆகமுடியாது !

    Mgr ரசிகர்களிடம் வேறு சின்னத்தை காட்டமுடியாது !!

    2021- லும் தலைவர் அம்மாவின் அரசு ,

    துணை முதல்வர் ops முன்னிலையில் ,

    தமிழக முதல்வர் eps
    தலைமையில் ,
    தொடரும் நூறாண்டு !
    ����������������������.......mgn...

  11. #1570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # சமீப காலமாக தலைவரின் பெயர் மற்றும் அவரின் ஆளுமை, புகழ், மனித நேயம் இவைகளெல்லாம் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பேசு பொருள் ஆகி விட்டது,

    இது ஒரு ஆச்சரியமான விஷயம், காரணம் மறைந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு மனிதனின் பெயர் மக்கள் மனங்களில் உலா வருகிறது மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் அரசியல் வியாபாரிகளுக்குக் கூட அவரின் நாமத்தை உச்சரித்தே ஆக வேண்டிய கட்டாயம்,

    இவைகளை எல்லாம் பார்க்கும் போது தலைவர் ஏற்படுத்தியிருக்கும் இந்த சரித்திரசாதனை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பிரமிப்பையும், குதூகலத்தையும் தருகிறது,

    ஆனால் இன்னொரு பக்கம் இதையெல்லாம் ஜீரணிக்க முடியாமல் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சில கைக்கூலிகளை எச்சில் சோற்றுக்கு கூலிக்கு அமர்த்தி சமூக வலை தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பிரச்சார உத்திகளை முன்னெடுத்து சில சோற்றாலடித்த பிண்டங்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்,

    " தலைவர் வாழும் போதும் நிம்மதியாக இவர்கள் இருந்ததில்லை, இப்போது அவர் இப்பூவுலகில் இல்லாத போதும் அவரின் தாக்கம் இவர்களை நிம்மதியாக தூங்க விடுவதில்லை,

    அதன் எதிரொலிதான் ஏற்கனவே " முரசொலி " யில் தலைவரின் ஆட்சியை விமர்சித்தும், கேலிச் சித்திரங்கள் தீட்டியும் ஒரு கிழ நரி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது,

    இப்போது இதோ இன்னொரு அவதாரம் முன்னாள் சபாநாயகர் க. ராசாராம் அவர்களின் தம்பி காந்தராஜ் என்னும் ஒரு வாலாட்டும் ஜந்து ஒன்று புறப்பட்டிருக்கிறது,

    இந்த குப்பைகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் பொறுப்பிலுள்ளவர்களுக்கு பாவம் அம்மாவின் புகழ் பாடவே நேரமில்லை, தியானம் செய்வதற்கும், அம்மாவின் நினைவு மண்டபத்தில் ஏதாவது குறை உள்ளதா என்று பார்ப்பதற்குமே நேரம் சரியாக உள்ளது,

    ஆனால் இந்த மாதிரி கத்தும் ராஜுகளுக்கு நாம் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான்

    தினத்தந்தி, ராணி யை வைத்து ஆதித்தனாரும்,
    அலை ஓசை, பிலிமாலயா, நவசக்தி, குமுதம் இன்னும் பல பத்திரிக்கைகள் எல்லாம் தலைவர் காலத்தில் அவரை வீழ்த்த என்னென்னவோ செய்து பார்த்தார்கள்,
    கடைசியில் முகம் நிறைய கரியை பூசிக் கொண்டதோடு, சிலர் தலைவர் காலடியில் விழுந்து பாவ மன்னிப்பும் பெற்றுக்கொண்டார்கள் என்பது வரலாறு,

    ஆனால் இப்போதும் சில வடிவேல்கள் வயிற்றெரிச்சலில் புலம்புவதை பார்த்தால் இவர்களெல்லாம் அய்யோ பாவம் என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது, சரி போகட்டும்

    காந்தராஜ் சொன்ன குற்றச்சாட்டுக்கு வருவோம்,


    அதாகப்பட்டது அவர் சொன்னது என்னன்னா
    "COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA ( C A G)என்று சொல்லக்கூடிய இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் எம்ஜிஆர்
    ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெற வில்லை என்று சொன்னது கமல் போன்றவர்களுக்கு தெரியுமா? என்று இவர் பெரிய அறிவுக்கொழுந்து ஆறுமுகம் போல ஒரு கேள்வியை கேட்டு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்,

    சரி அவர் அறிவாளியாகவே இருந்து விட்டுப் போகட்டும், நம்முடைய கேள்வி என்னவென்றால் "CAG " கொடுக்கும் அறிக்கை மட்டும் ஒரு மாநிலத்தின் தலை எழுத்தை நிர்ணயித்து விடுமா?

    இந்த அமைப்பு தேர்தல் ஆணையம், CBI, உச்ச நீதிமன்றம் போல தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு,
    குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பட்டது, அவரால் நேரடியாக நிர்வகிக்கப்படுவது, அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது,

    மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகளின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அதை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும்,
    அதை அவர் PAC என்று சொல்லக்கூடிய பொதுக் கணக்கு குழுவுக்கு அனுப்பி வைப்பார்,

    PAC அதை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்
    அந்த அறிக்கையின் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்,

    PAC என்பது நாடாளுமன்றத்தின் ஒரு அங்கம் எனவே அதுதான் இறுதி அறிக்கையை தயார் செய்யும்,
    ஆனால் CAG அறிக்கை இறுதி அறிக்கை கிடையாது,
    இப்படியிருக்க CAG அறிக்கை கொடுத்தாலே அதுதான் ஒரு ஆட்சியின் இலக்கணம் என்று எப்படி இந்த அரசியல் ஞானி கேள்வி க் கணை தொடுக்கிறார் என்று நமக்குப் புரியவில்லை

    1948 இல் முதல் இந்திய தலைமை கணக்கு அதிகாரி வி. நரஹரி ராவ் தொடங்கி இன்றைக்கு இருக்கும் கிரீஷ் சந்திர முர்மு ( இவர் காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக இருந்ததோடு மட்டுமல்லாது திரு. நரேந்திர மோடி அவர்கள் முந்தைய குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக பணி புரிந்தது குறிப்பிடத் தக்கது )வரையிலும் ஆயிரக் கணக்கான அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறது,
    அதிலெல்லாம் அனைத்து மாநில முதல்வர்களையும், ஆயிரக் கணக்கான அதிகாரிகளையும் விமர்சித்து அறிக்கைகள் வந்திருக்கிறது,

    அந்த அறிக்கைகளின் படி நடவடிக்கை எடுத்தால் எந்த மாநில முதல்வரும் ஆட்சி செய்ய முடியாது,
    ஏழைகளின் ஆட்சி என்று இப்போது பாராட்டப்படும் ஒரிசாவின் முதல்வர் திரு. நவீன் பட்நாயக் ஆட்சியைக் கூட இந்த CAG கடுமையாக விமர்சித்து அறிக்கை சமர்ப்பித்தது உண்டு,
    அதற்காக அவர் நல்லாட்சி கொடுக்கவில்லை என்று அர்த்தம் ஆகி விடுமா என்ன?

    2012 இல் திரு. வினோத் ராய் அவர்கள் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்த போது அவர் வெளிக்கொண்டு வந்த ஊழல்கள்தான் " 2 G அலைக் கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க முறை கேட்டு ஊழல்,

    தலைவரை சுலபமாக கேள்வி கேட்ட இந்த காந்த ராஜ் இவைகளைப் பற்றியும் ஒரு காணொளி வெளியிடலாமே,

    ஏனென்றால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2G அலைக் கற்றையில் ஊழல் நடந்ததாக வினோத் ராய் அறிக்கை சமர்ப்பிக்க அது இந்தியா முழுவதும் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டு பண்ணியது அதனால் காங்கிரஸ் அரசாங்கம் எப்படி கவிழ்ந்து போனது என்பதையும் எல்லோருக்கும் தெளிவாக விளக்கலாமே,

    அதன் முதன்மை குற்றவாளிகளாக எம்ஜிஆரின் சட்டையை பிடிப்பேன் என்று வீர வசனம் பேசிய ஆ. ராசாவும், திருமதி. கனிமொழி அம்மையாரும் திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டு இறுதியில் எதுவும் நிரூபிக்கப் படவில்லை என்று விடப் பட்டதும் ஒரு ஜீபூம்பா கதை,

    அந்த ஊழலில் தள்ளாடும் கிழவிகளுக்குக் கூட பங்கிருந்தது,
    நம்ம காந்த ராஜ் அதை எல்லாம் வசதியாக விட்டு விட்டார்,

    சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் நீதி அரசர் இறுதி தீர்ப்பின் போது சொன்ன வாசகம் இதுதான் " கடைசி வரையிலும் இந்த நீதிமன்றத்தில் CBI இந்த ஊழல் சம்பந்தமாக சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் என்று கடைசி வரையில் காத்திருந்தேன் ஆனால் கடைசி வரை அது நடக்கவே இல்லை எனவே குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்கிறேன் "

    ஆனால் இதுல ஒரு காமெடி என்னன்னா திரு. வைகோ அவர்கள் அப்போது அப்போது திமுக கூட்டணியில் இல்லை,

    அப்போது பேசிய ஒரு காணொளியில் சாதிக் பாட்சா என்னும் ஒரு உதவியாளர் மரணத்தை தொடர்பு படுத்தி வைகோ அவர்கள் 2G அலைக்கற்றை ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் அறிவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு குறிப்பிட்ட நபர்களிடம் கைமாறியது என்று பகிரங்கமாகப் பேசினார்

    ஆனால் பாவம் அவரும் அங்கேயே அடைக்கலாமாகி விட்டார்,

    இறுதியாக இப்போது ஆளும் பாரதீய ஜனதா அரசு இதை கையில் எடுத்திருக்கிறது,
    உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது தினசரி விசாரணையாக நடந்து கொண்டிருக்கிறது,

    இதை சுட்டிக்காட்டி BJP தமிழக தலைவர் திரு. முருகன் கூட அவ்வப்போது திமுக வினர் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார்

    பார்ப்போம் 2G சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எப்படி தண்டனை தரப்போகிறது என்று

    இப்படி இந்த ஊழல் கதையால் திரு. வினோத் ராய் தலைமையிலான CAG அமைப்பை பல நபர் உறுப்பினர் அமைப்பாக மாற்ற முயற்சியும் நடந்தது
    அப்போதைய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட திரு. ஷூங்லு அவர்கள் கூட பிரதமர் அலுவலகத்துக்கு நோட் அனுப்பினார் என்று கூட பேசப்பட்டது,(நிறைய சமாச்சாரங்கள் உண்டு,
    முழுமையாக எழுதினால் பதிவு நீண்டு விடும், )

    இது போல் முன்பு டி. என். சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த போது அவரின் அதிகாரத்தை குறைக்க பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டது,

    தலைவரின் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்று பொத்தாம் பொதுவில் சொன்ன CAG தமிழ் நாட்டின் தனி நபர் வருமானத்தை கணக்கில் எடுக்க வில்லை, மக்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடவில்லை,

    பொதுவாக டை கட்டிக்கொண்டு வரும் பெரிய அறிவு ஜீவிகளுக்கு ஏழை மக்களுக்கான திட்டங்கள் தீட்டி ஆளும் அரசுகளை பிடிப்பதில்லை,

    உதாரணத்துக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட வரும் அதிகாரிகள் குழு சும்மா ஏசி காரில் வந்துவிட்டு, நட்சத்திர விடுதிகளில் தங்கி விட்டு அரசிடம் ஏனோதானோ என்று அறிக்கை கொடுக்கும் லட்சணங்களை கண்டிருக்கிறோம்,

    அதுபோல் அந்த நேரத்தில் தலைவரின் ஆட்சியில் இருந்த IAS, IPS அதிகாரிகள் எல்லாம் கருணாநிதிக்கு தூது சொல்லும் தபால்காரர்களாகத் தான் இருந்தார்கள், இவர்கள் கொடுக்கும் மாற்றான் தாய் மனப்பான்மை விவரங்களை வைத்து தயாரிக்கப்படும் CAG அறிக்கையின் லட்சணம் இப்படித்தான் இருக்கும்,

    திருச்செந்தூர் கோயில் சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை வழக்கில் தலைவர் அமைத்த " பால் கமிஷன் " அறிக்கை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பே கருணாநிதி கைக்கு கிடைக்கச் செய்தவர்கள் தான் அப்போதைய அதிகாரிகள்,

    CAG அதிகாரிகளுக்கு தலைவர் கொண்டுவந்த தெலுங்கு கங்கை திட்டம்,VAO திட்டம், வேலை இல்லாப் பட்டதாரி மாணவ நிதி உதவி திட்டம், ஊனமுற்றோர் நிதி உதவி திட்டம், போக்குவரத்துத் துறை வளர்ச்சித் திட்டம், பல்கலை கழகங்கள் அமைத்தது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,

    ஆனால் இந்த மாதிரி ஏழைகளுக்கான அரசாக இருந்தது அவர்களுக்கு எப்படி பிடிக்கும்?(ஒரு 10 வருடங்கள் முன்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் 12 ரூபாய் இருந்தால் அவன் குடும்பத்துடன் நிம்மதியாக உட்க்கார்ந்து சாப்பிடலாம் என்று அறிக்கை அரசுக்கு கொடுத்தவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?)

    அது மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டில் யாருடைய ஆட்சியில் பாலும் தேனும் ஓடியதோ தெரியவில்லை,

    நடிகர் சோ கூட துக்ளக் இல் எழுதும் போது எம்ஜிஆர் ஆட்சியைத்தான் பொற்காலம் என்று எழுதியதை இங்கே நினைவு கூறுகிறேன்,


    அடுத்து சீமான் சார் ( நானும் கூட கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தேன் )
    போகிற போக்கில் எம்ஜிஆர் கல்வியை, மருத்துவத்தை தனியாருக்கு கொடுத்து விட்டார், முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார் என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார்,

    எம்ஜிஆர் எடுத்த தொலை நோக்கு திட்டத்தின் அடிப்படைதான் இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி படித்து இன்று உயர்ந்த நிலைக்கு வரக்காரணமாக இருந்தது,
    அதேபோல் மருத்துவம் தலைவர் ஆட்சியில் தனியார் மருத்துவ மனைகள் இன்று போல கொள்ளைக் கூடாரங்களாக இருக்கவில்லை,

    தலைவருக்குப் பின்னால் வந்த அரசுகளின் நிர்வாக சீர் கேட்டினால் இன்றைய நிலை ஏற்பட்டது என்றால் தலைவர் எப்படி அதற்கு பொறுப்பாக முடியும்?
    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அன்று என்ன நடந்தது என்ற விபரத்தை அப்போதைய அமைச்சர் ராஜா முஹம்மது அவர்கள் விளக்கமாக சொன்ன பின்பும் இப்படிப்பட்ட ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சீமான் சொல்வாரே என்றால் நானும் அவருக்கு ஒன்றிரண்டு கேள்விகளை முன் வைக்கிறேன்

    1: சீமான் திருமணம் ஆவதற்கு முன்பு நான் திருமணம் செய்வதென்றால் இறந்து போன விடுதலைப் புலி ஒருவரின் மனைவியைத்தான் மனைவியாக ஏற்றுக்கொள்வேன் என்று வீர சபதம் பூண்டாரே அது என்னவாயிற்று?
    கயல் விழி முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளா அல்லது விடுதலைப்புலியின் மனைவியா?

    2: பெண் உரிமை சமத்துவம் பேசும் நீங்கள் நடிகை விஜய லட்சுமிக்கே நியாயம் இன்னும் கொடுக்க வில்லையே சார் அது எப்படி?

    3: சிவாஜி சிலையை கடற்கரையில் இருந்து அகற்றினால் என் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை இறுதி வரை நடத்துவேன் என்று தொண்டை வறள சவால் விட்டீர்களே அது என்ன ஆச்சு?

    இன்னும் நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்களை கொண்டு வருவேன் என்று சொல்லும் நீங்கள் நாளை எப்படி பல்டி அடிப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்?

    மேடையில் வீரமாக பேசி கைத்தட்டல் வாங்கலாமே தவிர வேறு ஒன்றும் நடக்காது,

    மாவீரன் உயிராக நினைத்த தலைவரை இழிவாக பேசிய சீமானே உனக்கான குழியை நீயே வெட்டிக் கொண்டாய் ( இதே போல் ஒரு பொதுக்கூட்டத்தில் தலைவரை பற்றி இழிவாக பேசி பிரேமலதா விஜயகாந்த் இன் தேமுதிக என்ன கதி ஆனது என்பது நினைவிருக்கட்டும் )

    "தாய் "படத்தில் கவியரசர் எழுதிய பாடல் இப்படி :

    " கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க, கூட இரண்டு முதலையையும் விட்டிருக்காங்க "

    ஆனா கடைசியில் பாட்டு எப்படி மாறிப் போனது என்று எல்லாருக்கும் தெரியும் (கூவம் சுத்தப் படுத்த ஒதுக்கிய தொகை என்ன ஆனதோ தெரியவில்லை )
    காந்த ராஜ் இதை எல்லாம் விட்டு விட்டு தலைவர் ஆட்சியை விமர்சிக்க வந்து விட்டார்,

    என்ன செய்ய இந்த மாதிரி அடி முட்டாள்கள் இருக்கும் வரை மக்களுக்கு நன்றாக பொழுது போகும்.


    அன்புடன் தலைவரின் பக்தன்...

    ஜே. ஜேம்ஸ்வாட்!...(J.JamesWatt)...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •