Page 164 of 210 FirstFirst ... 64114154162163164165166174 ... LastLast
Results 1,631 to 1,640 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1631
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள்*
    ஒளிபரப்பான*விவரம் (01/01/21* ,முதல் 05/01/21 வரை )
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    *01/01/21* *-* சன் லைஃப் - காலை 11 மணி - ரிக்ஷாக் காரன்*

    * * * * * * * * * பெப்பர்ஸ்* டிவி -பிற்பகல் 2.30 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * * * *மீனாட்சி - இரவு 9 மணி* - நல்ல நேரம்*


    02/01/21 -சித்திரம் டிவி -காலை 11மணி /மாலை 6 மணி -அபிமன்யு*

    * * * * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - விவசாயி*

    03/01/21--சன்* லைஃப் - காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * * * மீனாட்சி டிவி --மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9 மணி* விவசாயி*

    04/01/21 -வேந்தர் - காலை 10.30 மணி-தாய் சொல்லை தட்டாதே*

    * * * * * * * * சன் லைஃப்-காலை 11 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * *முரசு டிவி -மதியம் 12மணி /இரவு 7 மணி -தாயின் மடியில்*

    * * * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி- குடியிருந்த கோயில்*

    * * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2* மணி -நல்ல* நேரம்*

    * * * * * * *பெப்பர்ஸ்- பிற்பகல் 2.30மணி -தாயை காத்த தனயன்*

    * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - அரச கட்டளை*

    05/01/21-ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - பணம் படைத்தவன்*

    * * * * * * * பெப்பர்ஸ்- பிற்பகல் 2.30 மணி - தர்மம் தலை காக்கும்*

    * * * * * * * சன் லைஃப்- மாலை 4 மணி - நவரத்தினம்***

    * * * * * * * * * *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1632
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுப மங்களம்!!
    ---------------------
    புயல் இங்கேக் கரை கடக்கும் அங்கே அடிக்கும் என்ற பூச்சாண்டி காட்டல் ஒன்று புஸ்வாணம் ஆகி விட்டது?
    ரஜினி அரசியலுக்கு வரவில்லை??
    நாம் ஏற்கனவே ரஜினி பற்றி யூகித்திருந்ததால் நமக்குப் பெரிய அளவில் ஆச்சரியம் இல்லை என்றாலும்--
    அவரது ரசிகர்களுக்கு இது பெரிய அளவில் ஏமாற்றமே!
    நாம் முன்பேக் குறிப்பிட்டிருந்தது போல--
    நல்லதோ கெட்டதோ--சரியோ தவறோ துணிந்து இறங்கி விடும் கமலின் தைரியம் ரஜினிக்கு ஆரம்பத்திலிருந்தே கிடையாது!
    அரசியலில் நுழைவதற்கு முன்பே,,சினிமாவில் கூட பல வித்தியாச முயற்சிகளை விதைக்கப் பார்ப்பார் கமல்!!
    ஏதோ,,தம் படங்கள் சில நாட்களாவது ஓடி வசூல் பார்க்க வேண்டுமே என்று அவ்வப்போது அரசியல் உதார் காட்டி வந்த ரஜினி--
    சினிமா--கவுண்டமணி,,வடிவேல் கணக்காக மிரண்டு விட்டார் என்பதையே அவரது அறிவிப்புக் காட்டுகிறது!
    நமக்கு சில ஐயங்கள்?
    தொண்டர்களின் மன உளைச்சல் பற்றி ரஜினி ஏன் திடீரென்று இப்போது கவலை கொள்ள வேண்டும்?
    தொண்டர்கள் பணம் செலவழிப்பதைப் பற்றி இப்போது தான் அவருக்குத் தெரிந்ததா?
    பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் சட்டமன்றத் தேர்தலில் இருந்து அரசியலில் குதிப்பேன் என்று அன்று சொன்னது யார்?
    இத்தனை காலமும் ரசிகர்களை நம்ப வைத்தது ஏன்?
    இன்றைய இவரது விளக்கங்கள் இவருக்கு அன்றேத் தெரியவில்லையா?
    அரசியலில் ஆன்மிகத்தை தருவேன் என்றவரின்-
    ஆன்மிகத்தில் அரசியல் புகுந்துவிட்டதா?
    எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்பதை அவரது ரசிகர்களே உணர்ந்து கொள்ள இது உதவும்!
    ஆப்பக்கடை ஆயா முதல் அம்பானி ரேஞ்ச் பணக்காரன் வரை அன்று எந்தத் தொண்டனுமே எம்.ஜி.ஆரின் பணத்தை நம்பிக் கட்சிப் பணி ஆற்றவில்லை! அதற்கு தேவையும் அன்று இருக்கவில்லை!
    முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் ஓட்டு!!
    ரஜினி--கமலாவது சினிமாவில் ஈட்டியப் பொருளை அரசியலில் முதலீடு செய்ய எண்ணினர்!
    அன்று எம்.ஜி.ஆரிடம் அதற்குக் கூட வாய்ப்பில்லை?
    கேட்டவன்--கேட்காதவன் என்று அத்தனை பேருக்கும் வாரி இறைத்தால் அவரிடம் எப்படி இருக்கும்?
    எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்குமுள்ள வேற்றுமை--
    தொண்டன் கஷ்டப்படக் கூடாதே என்பதால் ரஜினி அரசியலில் நுழையவில்லை?
    தொண்டன் அடி பட்டுக் கஷ்டப்பட்டதாலேயே எம்.ஜி.ஆர் அன்று அரசியலில் நுழைந்ததுடன் ஆட்சியையும் பிடித்தார்?
    எம்.ஜி.ஆர் என்ற மகா சக்தியோடு ஜெ வை ஒப்பிடுவதே தவறு என்னும் போது ரஜினியை ஒப்பிடுவது மிகப் பெரிய தவறே!!
    ஆனால் ஒன்று மட்டும் உறுதி!
    என்னதான் உதட்டளவில் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும்--உள்ளத்தளவில் கொஞ்சம் உதறிக் கொண்டிருந்த--அ.தி.மு.க--தி.மு.க வுக்கு --
    ரஜினி கொடுத்திருக்கும் புத்தாண்டு பரிசே இது!!!.........vtr...

  4. #1633
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சித்தலைவர்

    கடந்த 75 ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகளால் உச்சரிக்கபடும் ஒப்பற்ற தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர்,

    காரணம் தனக்கென வாழாமல் பொதுநல நோக்கத்தோடு வாழ்ந்த மனிதநேயர்,

    தமிழக முதல்வராக இருந்தபோது ஏழைகளின் நலன்கருதி, அவர்களுக்காக பல பயன்பெரும் திட்டங்கள் நிறைவேற்றியவர்,

    ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்,

    சிறைசெல்லாத தமிழக முதல்வர்,

    தோல்வி காணாத தலைவர்,

    சொன்ன செய்தியை மாற்றி சொல்லாத அரசியல்வாதி,

    கொள்கை மாறாமல், தன் உயிருக்கு ஆபத்து வந்த நிலையிலும் தேர்தலை சந்தித்த, நெஞ்சுரம் கொண்டவர்,

    முதல்வராக இருக்கும்காலங்களில் அரசு காரை பயன்படுத்தாமல்,
    தன் சொந்த காரையே பயன்படுத்தியவர் (பெட்ரோல் உட்பட),

    ஆடம்பர பங்களாவில் வசிக்காமல், எளியமுறையில் தோட்டத்தில் வசித்தவர், ( நிலத்தடிநீர், விறகு அடுப்பு, மட்டுமே பயன்படுத்தியவர்),

    ஆடம்பரமாக நகைகளோ, உடைகளோ, வெளிநாட்டு கார்களையோ பயன்படுத்தாதவர்,

    தன் மருத்துவ சிகிச்சை செலவை, அரசுக்கு தன் சொந்த பணத்தால் செலுத்திய முதல்வர்,

    அவர் ஆட்சி காலத்தில் வந்த இடைத்தேர்தலில், தன் கட்சி வேட்பாளரை நிறுத்தாத பண்பாளர்,

    அவர் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் நடைபயணம் மேற்கொண்டபோது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நல்லாட்சி நாயகர்,

    தன் காலத்திற்கு பிறகு நினைவிடம் அமைக்க, தன் வீட்டையே தானம் செய்த கொள்கைவாதி,

    முதல்வராக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, தன் இறுதிகாலம்வரை, தமிழகத்தில் அவருக்கு சொந்தமாக கல்லூரியோ, திருமண மண்டபமோ, திரையரங்குகளோ, ஏன் கால் கிரவுண்ட் இடம்கூட வாங்காத நேர்மையின் சிகரம் ,

    ஏழைமக்களின் நலன் கருதி
    வாழ்ந்து, ஏழைகளுக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்த தர்மசிந்தனைகொண்ட ஏழை பங்காளர்,

    இப்போது மட்டுமல்ல, எப்போதும் புரட்சி தலைவர் சரித்திர நாயகர்தான்............ Hussain...

  5. #1634
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவருடைய ஆட்சி சாதனைகள் அதிகம். குறைகள் குறைவு இது அந்தக் காலத்திலிருந்தே மக்களுக்கு நன்றாய் தெரியும் அதனால்தான் பதவியேற்றதிலிருந்து இறக்கும்வரை நிரந்தர முதல்வராகவே இருந்தார்.அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி கூட்டம் அன்றும் இருந்தது,இன்றும் இருக்கிறது.ஆனால் மக்களோ நிரந்தரமாக அன்பு வைத்திருக்கின்றனர்.காரணம் யாருமே நெருங்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர்
    புரட்சித் தலைவர்.அவர் புகழ் வாழ்க!!��������...Rnjt.........

  6. #1635
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இருமலர்கள் வெளியாவதால் ஊட்டி படத்தை தள்ளி வைக்கணும் என்று சித்திராலயா கோபு மூலம் கணேசன் கேட்டிருக்கார். அதுக்கு ஸ்ரீதர் முடியாதுன்னுட்டாராம். இருமலர்கள் தரப்பும் தள்ளிவைப்பதாக இல்லை. 2 படமும் ஒரே நாளில் வந்தது. இதை கோபு சொல்லி இருக்கிறார். இருமலர்கள் சென்னயிலே மட்டும் வெலிங்டனில் 100 நாள் ஓடிச்சு. அந்த படத்தை வெளியிட்டது ஏவி எம். நிறுவனம். வெலிங்டன் தியேட்டரை ஏவி எம் லீசுக்கு எடுத்தது. அதனால் தங்கள் படத்தை சென்னையில் கூட்டமே இல்லாமல் ஓட்டினார்கள். உயர்ந்த மனிதன் ஏவி எம் நிறுவனமே தயாரித்தது. அதுவும் இதே வெலிங்டனில் மட்டும் இதே கதைதான். ஊட்டி வரை உறவு படம் லாபம் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லிக் கொண்ட படம் என்று கணேசன் தனது ரசிகர் மன்றம் மலரில் சொல்லிருக்கார். படம் லாபம் இல்லை என்று கோவை செழியன் ஏன் பொய் சொல்லப் போகிறார். அப்புறம் கணேசனை விட்டு வந்து நம் தலைவரை வெச்சு குமரிக்கோட்டம் எடுத்தார். அது 100 நாள் ஓடி நல்ல லாபம் கொடுத்தது. அடுத்து உழைக்கும் கரங்கள் எடுத்தார் . அது100 நாள் எட்ட முடியாட்டியும் நல்ல வசூல் கொடுத்தது. பல ஊரில்50 நாள் தாண்டி ஓடியது. சேலத்தில் கல்பனா 21 அலங்கார்77 நாள் 2ம் சேர்த்து 98 நாள் ஓடியது. 75 நாளில் கல்பனாவில் ஓடிய 21 நாள் ஐயும் சேர்த்து 96 நாள் என விளம்பரம் கொடுத்தார்கள். உழைக்கும் கரங்கள் படத்துக்கு சென்னை கமலா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி கோபால் என்ற எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்தவர் இறந்தார். அவர் குடும்பத்துக்கும் புரட்சித் தலைவர் நிதி கொடுத்து உதவினார்....rrn...

  7. #1636
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள்.
    அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள்.

    ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.

    என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.

    அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.

    அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.

    அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.

    சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.

    திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.

    1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.

    திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.

    கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.

    24/12/1987அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
    புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.

    திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.

    1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை...MJ...

  8. #1637
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இரு மலர்கள் ரெண்டு வாரம் கூட தாண்ட வில்லை ஊட்டி வரை உறவு இழுத்து பிடித்து நாலைன்சு வாரம் ஓடியது..................விவசாயி ஐம்பது நாள்கள் தாண்டி ஓடினது கும்பகோணத்தில் ......................ap...

  9. #1638
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு: உத்தமன் 9
    -------------------------------------------
    சார்லஸ் திரையரங்கம் 1958 ல் தொடங்கப் பட்டது. ஆரம்பத்தில் "நாடோடி மன்னன்" 79 நாட்கள் ஓடியதுதான் அதிகபட்சமாக இருந்தது. "நாடோடி மன்னனு"க்கு கவுண்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் மோதியதால் சில்லறையை வாங்கி போட "தீ" என்ற சிகப்பு வாளியை பயன்படுத்தினார்கள். டிக்கெட் கொடுத்து முடிந்தவுடன் ஒவ்வொரு கவுண்டரிலும் இருந்தும் அந்த "தீ" வாளியை எடுத்து செல்வதை அதிசயமாக பார்த்ததாக அந்தக்கால ரசிகர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.சார்லஸில் பாலும் பழமும் படத்தை தொடர்ந்து "தாய் சொல்லை தட்டாதே" வெளியாகி 50 நாட்களை தாண்டி
    ஓடியது.

    அதன்பின் "பெரிய இடத்துப் பெண்" 50 நாட்களை தாண்டியும்,
    "பணக்கார குடும்பம்" 53 நாட்களும் "படகோட்டி" 50 நாட்களும் ஓடியது.1965 ல் வெளியான "எங்க வீட்டுப் பிள்ளை" 100 நாட்களை தாண்டி ஓட வேண்டிய படத்தை 77 நாட்களில் மாற்றினார்கள். காரனேஷன் தியேட்டர் சார்லஸில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத தியேட்டரில், "புதியபூமி" 29 நாட்களில்
    சுமார் ரூ32000 வசூல் பெற்ற நிலையில் "எங்க வீட்டுப் பிள்ளை"க்கு அவர்கள் காட்டிய வசூல் ரு 49000 தான். ஏமாற்றி ஏப்பம் விட்ட வசூல் எவ்வளவோ?

    1969 ல் வெளியான நம்நாடு 50 நாளில் தூக்கப்பட்டது தூத்துக்குடி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதன்பின் மாபெரும் வெற்றிப் படமான "உலகம் சுற்றும் வாலிபனை" புக் பண்ணுவதற்கு தலைவர் வீட்டு வாசலில் காத்து கிடந்து வெளியிட்டார். படம் வெளியான மே 11 அன்றைய அரசியல் சூழ்நிலையில் பிரிண்ட் ரெடியாகவில்லை. எனக்கு படம் பார்க்காமல் காய்ச்சல் உச்சக் கட்டத்தில் இருந்தது.

    இரண்டு நாள் கழித்து மே 13 ஞாயிறன்று வெளியாகி படத்தை பார்த்தவுடன்தான் நார்மல் நிலைக்கு வந்தேன். பக்கத்தில் உள்ள திருநெல்வேலியில் படம் பார்க்கலாம் என்றால் அங்கு சென்று படம் பார்க்க முடியாமல் வந்தவர்கள் சொல்வதை கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தோம். தியேட்டர் கொள்ளளவை காட்டிலும் சுமார் 5 மடங்கு ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அலைவதை பார்க்கும் போது நமக்கெல்லாம் டிக்கெட் எங்கே கிடைக்கும் என்று சொன்னதை கேட்டதும் அந்த முயற்சியையும் கை விட்டோம்.

    சைக்கிள் டோக்கன் வாங்க சுமார் 1 பர்லாங்கு தூரத்திற்கு மேல் நின்ற வரிசையை பார்க்க வெளியூர்களிலிருந்து வந்த கூட்டம் வேறு கட்டுக்கடங்காமல் இருந்தது. எப்படியோ மே 13 ம் தேதி மட்டும் இரண்டு தடவை பார்த்து விட்டு தினசரி 1 தடவை பார்த்து மகிழ்ந்தேன். பேப்பரில் மதுரை மீனாட்சி தனி விளம்பரமாக 'முதல் 100 நாட்களுக்கு எவ்வித இலவச அனுமதியும் கிடையாது' என்று வந்தது புதுமையாக இருந்தது.

    மொத்தத்தில் "உலகம் சுற்றும் வாலிபன்" திருவிழா மறக்க முடியாத திருவிழாவாக அமைந்தது. சார்லஸில் 100 வது நாள் விழாவுக்கு எம்ஜிஆரை அழைத்து வர சென்னையில் தலைவர் வீட்டு வாசலில் தவமிருந்தும் தலைவரிடமிருந்து பாஸிட்டிவ் சிக்னல் கிடைக்காததால் படத்தை 104 நாட்களில் தூக்கி விட்டு "எங்கள் தங்க ராஜா"வை வெளியிட்டு வேண்டுமென்றே தலைவர் வராத கடுப்பில் 53 நாட்கள் ஓட்டினார்கள்.

    அதன்பின் வெளிவந்த "நேற்று இன்று நாளை" "நல்ல நேரம்" "ராமன் தேடிய சீதை" "நான் ஏன் பிறந்தேன்" "நாளை நமதே" "பல்லாண்டு வாழ்க"படங்களை வெளியிட்டு எந்த படத்தையும் 50 நாட்கள் ஒட்டவில்லை. "இதயக்கனி" மட்டும் 50 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. முதல் 2 வாரங்களிலேயே 50 நாட்கள் பார்க்கும் பார்வையாளர்களை அனுமதிப்பதால் படத்தை சீக்கிரம் எடுத்து விடுவார்கள். ஆனால்
    அய்யன் படத்துக்கு ஒரு காட்சிக்கே தகுந்த கூட்டம் வராததால் அவர்களுக்கு இந்த பிரச்சினை கிடையாது.

    முதன்முதலில் "உலகம் சுற்றும் வாலிபனு"க்குதான் ரிசர்வேஷன் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் கவுண்டரில் கொடுக்கும் டிக்கெட்டிற்கும் அதிக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தனர். இப்படி அவர்கள் செய்த மொள்ளமாரித்தனம் கணக்கிலடங்கா. படத்தின் டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கும் அதே வேளையில் படத்தையும் ஆரம்பித்து விடுவார்கள். படத்தை முதல் காட்சியிலிருந்து பார்த்தவர்கள் மிக சொற்பமே. இப்படி அனைவரின் சாபத்தையும் பெற்றதால் இரண்டு தியேட்டர்களும் காலத்தின் சுழற்சியில் இன்று காணாமல் போய் விட்டது.

    மீண்டும் அடுத்த பதிவில்.........ksr.........

  10. #1639
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் திடுக்கிட்டார்??
    ------------------------------------------
    முழங்--கை சட்டை காமராஜரும் --கொடை
    வழங்--கை பாணியில் எம்.ஜி.ஆரும்--ஏழைகளுக்கு
    தருங்-கை கொண்டே தமிழகத்தை ஆண்டு
    வெறுங்-கை கொண்டே விண்ணுலகம் ஏகியவர்கர்கள்!!
    இருவரும் படிக்காத மேதைகளே!!
    எம்.ஜி.ஆரின் இதயத்து ஓரத்தில் கர்ம வீரரும்
    காமராஜரின் கவனத்தில் மர்ம யோகியும் !!!--
    காலந்--தொட்டு ஒருவருக்கு ஒருவர் நின்று-இன்றும்
    ஞாலந்-தொட்டு நம் இதயங்களில் வாழ்கிறார்கள்!!
    காமராஜருக்கு,, அன்றைய தி.மு.க வைப் பிடிக்காது எனினும்,,,அண்ணாவின் கண்ணியமும் அவர் தம்
    அறிவாற்றலும்--அஃதைப் போன்றே--
    எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையும்,,வசீகரமும் அவர் இதயத்தில் ஏற்றமுடன் விளங்கியது!!
    பின்னே நடக்கப் போவதை யூகித்து
    முன்னே கூறும் காமராஜரின் அறிவுத் திறன் கண்டு
    என்னே இவர் திறமை? என்று அண்ணாவே பலமுறை
    வியந்திருக்கிறாராம்??
    எம்.ஜி.ஆரும்,,சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த கருப்பு காந்தியை களிப்புடன் சந்தித்திருக்கிறார்!!
    ஒரு நாள் அப்படி சந்திக்கும் போது தான்---
    அனைவரின் பசியையும் போக்கும் நீ,,மாணவ மாணவிகளின் பசியையும் போக்கணும்!!--அவர்களின்
    வயிற்றுப் பசியை போக்கும் நீ அதே சமயம் அவர்கள்
    அறிவுப் பசியை வளர்க்கணும்??
    கல்வி அறிவு இல்லாத எந்த நாடும் செழிக்காது!!
    ருசியுடன் அவர்கள் அப்படிப் படிக்க--அவர்கள்
    பசியுடன் இருத்தல் கூடாது??
    சுருக்கமாகச் சொல்வதானால்--
    எல்லாருக்கும் உணவிடும் நீ
    கல்லாருக்கும் உணவிட்டு,,,அவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும்!!
    உனக்கு அப்படி செய்யக் கூடிய காலம் ஒன்று எதிர்காலத்தில் வரும்??
    காமராஜரின் இந்த வார்த்தைகளால் திடுக்கிடுகிறார் எம்.ஜி.ஆர்??--காரணம்???
    அப்பொது அண்ணாவே முதல்வர் ஆகாத காலம்!!
    செய்வேன் என்று எனக்கு வாக்குக் கொடு என்று எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார் காமராஜர்??
    தேக்குறுதி கொண்ட எம்.ஜி.ஆரே சிலிர்த்துப் போய்
    வாக்குறுதி கொடுக்கிறார் !!
    கிங்-மேக்கர் காமராஜரின் கணிப்புப் படியே--
    பின் நாட்களில் ---தமிழ் நாட்டின்
    கிங் !! ஆன எம்.ஜி.ஆரின் உள்ளத்தில் இந்த வார்த்தைகள் உறுத்திக் கொண்டே இருக்க--
    அதிகாரிகளை அழைத்து,,சத்துணவுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடுகிறார்!!
    நிதி நிலை சரியில்லையே என்ற அதிகாரிகளிடம்--
    நீதி நிலை தான் எனக்கு முக்கியம்!! நிறைவேற்றுங்கள் திட்டத்தை என்று தீர்மானமாக உரைக்கிறார்!!
    எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தான் மாணவர்களுக்கு--
    சத்துணவு மட்டுமல்லாது,,,இலவச
    சீருடை,,,காலணி,,நோட்டுப் புத்தகங்கள் என்று அனைத்தும் வழங்கப்பட்டன இலவசமாக!!--இன்றோ
    அரசியலுக்காக வழங்கப்படுகின்றன இலவசங்கள்????
    வானம் பொய்த்தாலும்--
    பெரியோர் வாக்கும்,,அரியோர் நோக்கும் பொய்ப்பதில்லை என்பதை--
    உரியோர் இந்த இருவரின் மூலம் காலம் நமக்கு உணர்த்துகிறது அல்லவா????...vtr...

  11. #1640
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பசி அறிந்தவர் பசி ஆற்ற சத்துணவு தந்தார் எம் ஜி ஆர்

    மண்ணால் செங்கட்டியால் பல் தேய்த்த எங்களை பல்பொடியால் பல் துலக்க பல் பொடி கொடுத்தார் எம் ஜி ஆர்

    கந்தல் கட்டி நாங்கள் புது உடையுடன் பணக்கார பிள்ளைகள் எங்கள் வேதனை போக்க சீருடை தந்தார் எம் ஜி ஆர்

    நாளை வாங்கலாம் என நாளை தள்ளி விட்ட எங்கள் பெற்றோர் சுமை குறைக்க புஸ்தகம் எல்லாம் தந்தார் எம் ஜி ஆர்

    எங்க அப்பா அந்த தெருவை கண்டதும் செருப்பை கழட்டி நடக்க சமத்துவ சமுதாயம் காண எங்களுக்கு செருப்பு தந்து தலை நிமிற்ந்து நடக்க வைத்தார் எம் ஜி ஆர்

    மேல் படிப்பை பள்ளியிலே பயில ப்ளஸ் டூ தந்தார் எம் ஜி ஆர்

    மேல் படிப்பு காண செல்ல பஸ் வராத எங்கள் கிராமங்களில் எல்லாம் பஸ் வரசெய்தார் எம் ஜி ஆர்

    மண்எண்ணை விழக்கில் வாழ்ந்த எங்களை ஒரு விளக்கு திட்டம் மூலம் வெளிச்சத்தில்பயில வைத்தார் எம் ஜி ஆர்

    உலக தர அண்ணா பல்கலைகழகம் பெண்கள் தனி அன்னை தெரஷா பல்கலைகழகம் தமிழ் பல்கலைகழகம் என எட்டு பல்கலைகழகம் தந்து எங்களை உலக தர மாணவர்கள் ஆக்கினார் எம் ஜி ஆர்

    கணணியில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்து தமிழை கணணியில் உலகதரம் ஆக்கினார் எம் ஜி ஆர்

    ஊருக்கு ஒர் இஞ்சினீர்யர் இருந்த எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு இஞ்சினீர்யர்களை உருவாக்கினார் எம் ஜி ஆர்

    இன்று நாங்கள் வெளிநாட்டில் பெரிய வேலையில் அமர்ந்து எங்களையும் எங்கள் ஊரையும் செழிப்பாக்கினோம் என்றால் அது எம் ஜி ஆரால்

    எந்த ஆட்சியும் எந்த முதல்வரும் செய்யாத சாதனை இது எம் ஜி ஆர் ஆட்சி பொற்க்கால ஆட்சி
    எம் ஜி ஆரை கடவுளாய் வணங்குவோம்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •