Page 165 of 210 FirstFirst ... 65115155163164165166167175 ... LastLast
Results 1,641 to 1,650 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1641
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
    மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
    #மக்கள்திலகம்_எம்ஜிஆர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #ஆசியோடு_நண்பர்கள்
    #அனைவருக்கும்_இனிய
    #புதன்கிழமை_காலை_வணக்கம்...

    கவிஞர் கண்ணதாசன் வரிகளில்
    மக்கள் திலகம் எம்ஜியாரின் கருத்துக்களை தொடர் பதிவாக பார்த்து வருகின்றோம் அந்த வகையில் இன்றைய பதிவை சமர்ப்பிக்கிறேன்..

    1966 – ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் நடித்த ஒன்பது படங்கள் வெளியாயின. 1963 – ஆம் ஆண்டிற்குப் பின் இந்த ஆண்டில்தான், ஒன்பது படங்கள் வெளியாயின.

    இவற்றுள், அன்பே வா, நாடோடிமன்னன், நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, தாலி பாக்கியம், பெற்றால்தான் பிள்ளையா உள்ளிட்ட ஆறு படங்களில் சரோஜாதேவியும், முகராசி, சந்திரோதயம், தனிப்பிறவி முதலிய மூன்று படங்களில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்திருந்தனர்.

    இவற்றுள் நாடோடி, பறக்கும் பாவை, முகராசி, தனிப்பிறவி ஆகிய நான்கு படங்களில் கண்ணதாசனின் பாடல்கள் முழுமையாக இடம் பெற்றிருந்தன.

    முகராசி – மகராசி – பொருத்தம்!
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு, காதல்மன்னன் ஜெமினி கணேசன் சேர்ந்த ஒரே படம் ‘முகராசி’ தான். இப்படத்தில் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்தவர் கலைச்செல்வி ஜெயலலிதா.

    ‘முகராசி’ திரைப்படத்தை பதின்மூன்று நாட்களிலே தயாரித்து வெளியிட்ட பெருமை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தையே சாரும்.
    எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில்,
    கே.வி.மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்க பாடல்களும் நிறைந்த இப்படம் 18.2.1966 – ஆம் நாளில் வெளியானது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான வெற்றியையும் பெற்றது.

    புரட்சி தலைவரோடு, கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த மூன்றாவது படமே ‘முகராசி’ இப்படம் வெளிவந்த இதே ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடித்த பதினான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றுள் தமிழ்ப்படங்கள் மட்டும் ஒன்பது; தெலுங்குப்படங்கள் மூன்று; கன்னடப் படம் ஒன்று; ‘எபிசில்’ என்ற ஆங்கிலப்படம் ஒன்று.

    இதில் பெரும் வியப்பு என்னவெனில் 1965 – ஆம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்து, சித்திரைத் திருநாளில் ‘வெண்ணிற ஆடை’ படமும், அதனையடுத்து மக்கள் திலகத்தோடு இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும், ‘கன்னித்தாய்’ படமும்; இவற்றோடு வேறு நான்கு படங்களுமாக மொத்தம் ஏழு படங்கள் வெளியாயின. ஆக நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் ஜெயலலிதாவின் இருபத்தோரு படங்கள் வெளியானது சாதனையல்லவா!

    எனவேதான் இந்த மகராசியையும், எம்.ஜி.ஆரின் முகராசியையும், தனது கருத்துப் பார்வையில் பார்த்த கவியரசர்,

    “எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்! – இதில்
    எத்தனை கண்களுக்கு வருத்தம்! – நம்
    இருவருக்கும் உள்ள நெருக்கம் – இனி
    யாருக்கு இங்கே கிடைக்கும்?….”

    என்று, புரட்சித்தலைவரும், தலைவியும் அன்றே பாடல் காட்சியில் பாடித் தோன்றிடும் விதமாகப் பாடலொன்றை எழுதினார்.

    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனும் ஜோடி மிகவும் பிரபலமாக இருந்த நேரத்தில், எழுந்த பலதரப்பு விமர்சனங்களுக்கும், கண்ணதாசனின் இப்பாடலே பதிலாக அமைந்தது என்று, அன்றே பலரும் கூறிய கூற்றுகள் இன்று வரை, பொய்க்கவில்லை.

    ‘அவர்களது பொருத்தம்!
    இன்றுவரை பலருக்கும் ஏற்படும் வருத்தம்!
    அரசியலில் அவர்களுக்குள் உருவான நெருக்கம்!
    இப்புவியில், இனியும் யாருக்காவது
    கிட்டுமா? யோசியுங்கள்!

    எனவே காலக்கவிஞர் தந்திட்ட கவிதை வார்த்தைகள், வாக்குப் பலிதமாக, இன்றும் புரட்சித் தலைவரின் வாரிசு புரட்சித்தலைவியே என்று புவி போற்றிடும் அளவிற்கு உயர்ந்துள்ள உண்மையை யார்தான் மறுக்க முடியும்?’

    புரட்சிதலைவர் புகழ் ஓங்குக...

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1642
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் வாழ்கின்ற காலத்தில் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றையும் அவர்களின் சரித்திரத்தையும் நாம் புத்தக வடிவிலும் பிறர் மூலம் சொல்வது மூலமும் திரைப்படங்கள் மூலமும் தெரிந்தும், பார்த்தோம் , கேட்டுள்ளோம். வரலாற்றில் எத்தனையோ மகான்கள் மனிதப் பிறப்பாக பிறந்து பின்னாளில் மக்களால் ஏற்றுக் கொண்டு அவர்களை கடவுளாக மதித்து வணங்கி வருகின்றனர்.

    புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக - தோழா ஏழை நமக்காக என திரைப்படத்தின் மூலமாக மக்கள் திலகம் பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றது. ஆனால் இந்த மகன்கள் யாவரும் மக்களால் நேசிக்கப்பட்ட பிறகு பின்பு கடவுளாக உலகமெங்கும் வழிபடுகின்றனர் என்பது வரலாறு. அது மட்டுமல்ல நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்ச்சிகள்.

    அந்த மகான்களின் வரிசையில் ஒரு சாதாரண மனிதராக பிறந்து பின்னாளில் திரையுலகிலும், அரசியல் வானிலும் பொது வாழ்க்கையிலும் நிலையான இடத்தைப் பெற்றவர் மக்கள் திலகம். வலியோருக்கு வாரி வழங்கிய மாபெரும் கொடைவள்ளல் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் கடவுளாக நிலைநிறுத்தி வணங்குகின்றனர். ஏழைகளுக்காக உழைத்த உத்தமரை நாம் இறைவனாக ஏற்றுக் கொள்கிறோம். பசியைத் தீர்த்த பகலவனை நாம் போற்றுகின்றோம். நல்ல ஒழுக்கமான கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் விதைத்த அறிவுச் செல்வத்தை புரட்சித் தலைவரை நாம் பின்பற்றுகின்றோம். எங்கு துன்பம் நேர்ந்தாலும் அங்கு தூய மகானின் தொண்டு நிற்கும். எண்ணற்ற பள்ளிகள் வளர்க்க முடியாத கல்விதனை தன் காவியங்கள் மூலமும் பாடல்கள் மூலமும் தமிழக மக்களுக்கு கற்பித்த ஆசானாக இன்றும் திகழ்கிறார் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....ssn

  4. #1643
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.!

    மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.!

    100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது!.

    பட்டியலின, பழக்குடியின மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.!

    அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக ஆக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்!.

    பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (VAO) என சட்டம் கொண்டு வந்தார்.!

    பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.!

    இதெல்லாம் பல அதிமுகவினரும் மறந்துபோன சாதனைகள்.!

    இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்!.

    தற்போது தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்!.

    கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.!

    இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்டைகள் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.!

    எம்.ஜி.ஆர் இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்து ஆண்டைகளின் கோபத்திற்கு ஆளானார்!.

    திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது!.

    அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்!

    அப்போதுமுதல் ரேஷன் கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.!

    அதனால்தான் அவர் மக்களால்
    புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார்.!........Rah.Shari.

  5. #1644
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதிகப் பிரசங்கம்!!
    -----------------------------
    எம்.ஜி.ஆரின் சினிமா,,பொது வாழ்க்கை--அரசியல் என மூன்று பயணங்களையும் வித்தியாசமாக அலசும் ஆர்வம் நமக்கிருக்கிறது!
    எந்த அளவு என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தயக்கத்தாலேயே அந்த முயற்சி தள்ளிப் போகிறது!
    நாகேஷ் அருமையான ஒன்றை சொல்லியிருக்கிறார்--
    இந்திய அளவில் எவரையுமே எம்.ஜி.ஆருடன் ஒப்பிடக் கூடாது!
    கிரேட் அலெக்ஸாண்டர்--மா வீரன் நெப்போலியன்--கென்னடி இப்படி உலகத் தலைவர்களுடனேயே அந்த உத்தமத் தலைவனை ஒப்பிட வேண்டும்!!
    எம்.ஜி.ஆரது திரைப்படங்களை எடுத்துக் கொண்டால்--எவரையுமே வசவுச் சொற்களைப் பயன்படுத்தி திட்ட மாட்டார்! கூர்ந்து கவனித்தால் அது புரியும்!
    எதிரி எவ்வளவு தவறு செய்திருந்தாலுல்--
    ஏறிடுவார்--எதிர்ப்பார்--வெல்வார்--மன்னிப்பார்!
    இந்த நான்கு நிலைகளிலேயே அனைத்துப் படங்களிலும் அவரது பாணி அமைந்திருக்கும்!
    அது தலைவன் பட ஷூட்டிங்!
    சித்து விளையாட்டு,,யோகா இவற்றின் அருமைகளை விளக்கும் படம் அது!
    ஒரு காட்சியில் நாகேஷ்,,எம்.ஜி.ஆரிடம் வேலை கேட்டு வருவார்.
    தனது பிரதாபங்களையெல்லாம் எம்.ஜி.ஆரிடம் அள்ளி விடுவார்!
    எம்.ஜி.ஆர்,,நாகேஷிடம் கேட்பார்--
    உனக்கு என்ன வேலை தெரியும்?
    நாகேஷ் உற்சாகமாக பதில் சொல்வார்--
    நீங்க எந்த வேலைக் கொடுத்தாலும் செய்வேன்.
    நீங்க எள்ளைக் கேட்டால் எண்ணையையேக் கொண்டு வருவேன்!!

    எள்ளுன்னா--எண்ணையா இருப்பான்
    வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டியே கொண்டு வருவான்---இவையெல்லாம் சுறுசுறுப்புக்கான சொல் வாடைகள்!
    ஆனால் இங்கே எம்.ஜி.ஆரோ நறுக்குத் தெறித்தார் போல் நாகேஷிடம் சொல்வார்--
    அது அதிகப்பிரசங்கித் தனம்??
    நான் எள்ளு கேட்டால் நீ எள்ளு தான் கொண்டு வரணும்!!!
    மிகக் கூர்மையான பதில் இது.
    உளவு வேலை,,ராணுவம் போன்ற பணிகளில் மேலதிகாரி சொல்லும் வேலையை மட்டுமே செய்ய வேண்டுமே அல்லாது ஆர்வக் கோளாறினால் அதிகப்படியாகச் செய்து அவஸ்தையில் விழக் கூடாது!
    எம்.ஜி.ஆர் பட வசனங்கள் அதனாலோ--
    இன்றும் பேசப்படுகின்றன???...vtr......

  6. #1645
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தி.மு.க விற்கு சவால் பதிவு :
    ����������������������
    புரட்சித் தலைவரின் விவசாயிகளுக்கான சாதனை இதோ :
    ��������������������������������
    விவசாயத்திற்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்குப் பன்னிரண்டு காசுகளாகக் குறைத்தார் புரட்சித் தலைவர்.

    விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம்
    வழங்கும் கடனை விரிவுபடுத்தினார்.சுமார்
    40 கோடி ரூபாயை உடனடியாக வழங்கச் செய்தார்.
    அடுத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.
    இதனால் நெல் உற்பத்தி ஆண்டுக்கு 60
    இலட்சம் டன்களாக உயர்ந்தது.

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:
    ����������������������������

    பாசனத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த
    3.31 இலட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக
    மின்சார இணைப்புக் கொடுக்க ஏற்பாடு செய்தவர் புரட்சித் தலைவர்.
    அவர் 10.5 இலட்சம் சிறு விவசாயிகளுக்கு
    இலவச மின்சாரம் வழங்கினார்.இவை தவிர
    விவசாயிகளின் கடன் சுமை ரூ.325 கோடியை
    தள்ளுபடி செய்தும் நிவாரணமளித்தார்.
    தன்னிகரில்லாத தன்னிறைவு திட்டம் ஒன்றை வகுத்தளித்து ரூ.215 கோடியை
    அதற்கென ஒதுக்கினார்.
    இதுபோல் பல்வேறு நலத்திட்டங்கள் புரட்சித் தலைவரால் வழங்கப்பட்டதே!இது போதாதென்றால் அனைத்திற்கும் பதில் நாங்கள் தருவோம்.ஏனென்றால் நாங்கள் எம்.ஜி.ஆர் என்ற தெய்வத்திற்கு பக்தர்கள்!!
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!��������.........Rnjt

  7. #1646
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. மிகவும் அழகானவர், தோற்றப்பொலிவு மிக்கவர், பொன்னைப் போன்ற நிறம் கொண்டவர், சிரித்தபடி அவர் வரும்போது, ரோஜாத் தோட்டமே நடந்து வருவது போலிருக்கும். இதெல்லாம் அவரது வசீகரமான அம்சங்கள்தான்; சந்தேகமில்லை. என்றாலும், இதையெல்லாம் கடந்த அவரது அரவணைத்துச் செல்லும் பண்பும், மனிதநேயமும்தான் அரசியல் எதிரிகளையும் அவர்பால் ஈர்த்தன!

    திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப் பட்ட சமயம். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஒரு வரலாற்று சம்பவம். கொந்தளிப்பான சூழ்நிலையில், அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியதுடன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிடுவதில் மும் முரமாக இருந்தார். அதற்கு எத் தனையோ முட்டுக்கட்டைகள். அப் போது, திமுகவில் இருந்த மதுரை முத்து, ‘‘அந்தப் படம் வெளிவராது. படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்.’’ என்று சவால் விட்டார். எம்.ஜி.ஆர். பற்றியும் கடுமையாக மேடைகளில் விமர்சித்தார்.

    அந்த சமயத்தில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த ரசிகர்களை தினமும் எம்.ஜி.ஆர். சந்தித்து, அவர் களிடம் பேசுவார். ஒருநாள், அப்படிப் பேசும்போது ‘‘மதுரை முத்தண்ணன் அவர்கள் கூட…’’ என்று குறிப்பிட்டார். அப்போது குப்புதாஸ் என்ற ரசிகர், முத்துவைப் பற்றிக் கடுமையாக விமர் சித்து, ‘‘அவரைப் பற்றி பேசாதீர்கள்’’ என்று கத்தினார்.

    அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் மரியாதையோடு பேசும் எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்தது. கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘அவர் யாரு? நம்ம ஆளா? குழப்பம் விளைவிக்க வந்திருக்கும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவரா?’’ என்று கேட்டார். அந்த ரசிகரும் ‘‘நான் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவன்’’ என்று சொல்லி தன்னிடம் உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சற்று கோபம் தணிந்தார்.

    கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘தம்பி, முத்தண்ணன் இன்று என்னை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், அவர் திராவிட இயக்க வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை மறக்கலாமா? ஏன்? முத்தண்ணனே காலப்போக்கில் நம் பக்கம் வரலாம். யாரை யும் கண்ணியக்குறைவாக பேசாதீர்கள்’’ என்று கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்!

    அதைப் போலவே, சில ஆண்டுகளில் நிலைமைகள் மாறின. அதிமுகவில் சேர விரும்பினார் மதுரை முத்து. கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.! இதுகூட பெரிதல்ல; பின்னர், முத்துவை மதுரை மேயராகவும் ஆக்கினார்!

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, ஊட்டியில் அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். அதைக் காரணம் காட்டி, அந்த சமயத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் படப்பிடிப்பை அங் குள்ள அரசுக்கு சொந்தமான பூங்கா வில் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்....Suj.Kum...

  8. #1647
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னை மக்களிடம் நெருக்கமாக்கிய திரையுலகுக்கும், கலைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர். எவ்வளவோ உதவிகள் செய் துள்ளார். திரையரங்கு உரிமையாளர் களுக்கு சுமையாக இருந்த விற்பனை வரி செலுத்தும் முறையை நீக்கி, ஒரு காட்சி நடந்தால் இவ்வளவு வரி கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ‘காம்பவுண்டிங் டாக்ஸ்’ முறையை முதல்வர் எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்.

    அப்படிப்பட்டவர், படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பாரா? விஷயம் அறிந்து ‘ஒரு கைதியின் டைரி’ படப்பிடிப்பை அரசு பூங்காவில் நடத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பைக் காணவும் வந்துவிட்டார்.

    படப்பிடிப்பின்போது தொழில்நுட்பக் கலைஞர்கள் இரண்டு பேர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டே இருந்தனர். இதை கவனித்து அவர்களைப் பற்றி விசாரித்து இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று எம்.ஜி.ஆர். அறிந்து கொண்டார். அவர்களது பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

    பின்னர், படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். தனது சொந்த செலவிலேயே மதிய விருந்து அளித்தார். சுற்றிச் சுற்றி வந்து எல்லோ ரையும் உபசரித்தார். அந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இரண்டு பேரும் ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். அளிக்கும் விருந்தை சாப்பிடுவதில் அவர்களுக்குத் தயக்கம். அதேநேரம், விருந்தை புறக்கணிக்கவும் முடியாத நிலைமை. இந்த தர்மசங்கடத்தாலும் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பாததாலும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டனர்.

    அந்தத் தொழில்நுட்பக் கலைஞர் கள் அருகில் எம்.ஜி.ஆர். வந்தார். அவர் களது தலைகள் இன்னும் குனிந்தபோது, சத்தமாக அவர்களின் பெயரை சொல்லி அழைத்தார்! அதிர்ச்சியுடன் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவர்களது தோளைத் தட்டி, ‘‘நல்லா சாப்பிடுங்க’’ என்றார். சொன்னதோடு மட்டுமில்லாமல், ‘‘இதை சாப்பிடுங்கள், நல்லா இருக்கும்’’ என்று சொல்லி சில பதார்த்தங்களை அவர்களது இலையில் வைத்து உபசரித்தார். ஒரு முதல்வர், தங்கள் மீது இவ்வளவு அன்பு காட்டியதில் இருவரின் கண்களும் கலங்கி விட்டன. அதற்கு மறுநாள் அந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருவரும் அதிமுகவில்!...Suj.Kum...

  9. #1648
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதோ விழுந்த அடியிலேருந்து சுப்புரமணியன் சுப்புராமன் இப்பதான் 4 நாள் கழிச்சு மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிக்கிறார். 8 நிமிசம் முன்னாடி பதிவு போட்டுருக்காரு. சென்னை ஆல்பட் தியேட்டரில் அன்னதானம் போட்டு கூட்டம் சேர்க்க பாத்திருக்கானுக. அப்படியும் கூட்டம் வரலை. 10 பேர் இவனுகளே நிக்கிறானுக. பின்ன அன்னதானம் யாருக்கு போட்டானுங்க. இவனுங்களே சாப்பிட்டானுங்க போலருக்கு. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஜாதி மதம் கிடையாது. எல்லாரும் எம்ஜிஆர் ஜாதி. ஆனா சுப்புரமணி போட்ட பதிவில் ஒரு ஆளு கனேசனுக்கு அய்யர் ரசிகர்தான் ஜாஸ்தின்னு பேசறான். அவனுங்க ஜாதியாலயும் மதத்தாலும் பிரிஞ்சுருக்கானுக. கணேசன் படங்களில் தேவை இல்லாமல் தன் ஜாதிப் பெருமை பேசுவார். கணேசன் எவ்வழி. பிள்ளைங்க அவ்வழி. ஜாதி மதம் கடந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க....rrn...

  10. #1649
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் கதாநாயகியரில்
    முதன்மையானவர்.புரட்சித் தலைவருக்கேற்ற
    சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்தவர்.
    கன்னடத்து பைங்கிளி என அனைத்து ரசிகராலும் அழைக்கப்பட்ட அபிநய சரஸ்வதி
    திருமதி.சரோஜா தேவி அவர்களுடைய
    பிறந்த நாளான இன்று (7.1.2021) அவரை வாழ்த்தி வணங்குவதில் புரட்சித் தலைவர்
    ரசிகர்கள் பெருமைகொள்கிறோம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!��������
    எந்த இடத்தில் பேசினாலும் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் புகழைப் போற்றி பேசுவதில் அக்கறை கொண்டவர்.என் தெய்வம் எம்.ஜி.ஆர் என்றே பேசத் தொடங்குவார்.
    புரட்சித் தலைவர் திரைப்பட காலங்களில் 1960 முதல் 1967 வரை அற்புத படங்கள்,
    பாடல்களால் புரட்சித் தலைவர் ரசிகர்களை
    கொள்ளை கொண்ட அழகான ஜோடி.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!����������.........Rnjt

  11. #1650
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது நிஜம்!!
    -----------------
    அபூர்வ விஷயம் ஒன்றைத் தாங்கிய பதிவு இது!
    செல்வி ஜெ.ஜெயலலிதா!
    இவரின் இரண்டு குணாதிசயங்கள் நம்மைக் கவர்ந்ததே!
    புத்தகம் படிக்கும் பழக்கம் ஒன்று
    எதிராளியிடம் சட்டென்று கோபம் கொள்வது இன்னொன்று!!
    அதென்ன? கோபம் கொள்வது பிடிக்குமா என்று கேட்கிறீர்களாஃ??
    ஆம்! அதுவும் அரசியலில் இருந்து கொண்டு கோபம் கொள்வது சாதாரண விஷயம் அல்ல?
    சந்தர்ப்பவாதிகள் தான் அரசியலில் சட்டென்று கோபப்படாமல் சரியான சமயம் பார்த்து எதிரியைக் கருவறுப்பார்கள்!
    உள் மனதில் ஒன்றுமில்லாமல் அந்தக் கணத்தில் கோபப்பட்டு அடுத்த கணமே அதை மறப்பவர்களின் வெளிப்படைத் தன்மைக்கும் நேர்மைக்கும் உத்தரவாதம் எளிதாகக் கொடுத்து விடலாம்!!
    இன்னொன்று அவரின் புத்தகம் படிக்கும் பழக்கம்!!
    அது ஒரு மதியப் பொழுது!
    பூங்க்குன்றனிடம் ஒரு வேலையைக் கொடுக்க--
    அவர் அந்த வேலையை முடித்து விட்டு ஜாலியாக டிவியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க--
    அடுத்த கணமே ஜெ ஆகிறார்---
    அம்மனோ சாமியோ???
    உண்மையை அறிந்து அடுத்த நொடியே அமைதி ஆனவர்,,தாமும் அந்தப் பாட்டைக் கேட்கிறார்--

    அந்தப் பாட்டு??
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    வாறி வாறி வழங்கும்போது வள்ளலாகலாம்1!
    சிரித்துக் கொண்டே பூங்குன்றனிடம் சொல்கிறார்--
    இந்தப் பாட்டை முழுசா,,,நிதானமாக் கேளு. இது என் அரசியல் குரு நாதர் எம்.ஜி.ஆருக்கு அப்படியேப் பொருந்தும்.
    நான் ஒரு நாள்,,கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டேன்--இந்தப் பாட்டை நீங்க எம்.ஜி.ஆர மனசுல வச்சு எழுதினீங்களான்னு!!
    ஜெவின் நுட்பமான ரசனையைக் கண்டு வியந்து போகிறார் பூங்க்குன்றன்!
    நாமும் தானே???..........vtr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •