Page 170 of 210 FirstFirst ... 70120160168169170171172180 ... LastLast
Results 1,691 to 1,700 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1691
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் என்பதற்கு என்ன பொருள்?
    நாடோடி மன்னன் பட வெற்றிவிழாத் துளிகள்!

    1958 ஆம் ஆண்டு.

    அக்டோபர் 26 ஆம் தேதி.

    மதுரையில் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த 'நாடோடி மன்னன்' படத்திற்கு தங்கவாள் பரிசளிப்பு விழா. விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்தவர் அன்றைய தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தவரான மதுரை எஸ்.முத்து.

    மதுரை ரயில் நிலையத்திலிருந்து நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பெரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் எம்.ஜி.ஆர்.

    மூன்றடி நீளமுள்ள தங்கவாளை எம்.ஜி.ஆருக்கு மேடையில் அளித்துப் பாராட்டியவர் நாவலர் நெடுஞ்செழியன்.

    விழாவில் பேசிய இலட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன், “இந்தத் தங்க வாள் அண்ணனுக்கு மட்டும் அளித்த பரிசாகாது. திரையுலக நடிகர்கள் அத்துணை பேருக்கும் அளித்த பரிசாகும்.

    திரைப்பட நடிகர் ஒருவருக்கு தங்கவாள் அளிப்பது வரலாற்றிலேயே இது தான் முதல் தடவை.

    நாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியுமே கவலைப்பட்டு, நாட்டிற்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட நடிகருக்குத் தங்கவாள் பரிசளிப்பு மட்டும் போதாது என்று கருதுகிறேன்” என்றார்.

    தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ் விழாவில் பேசுகிறபோது சொன்னார்.

    ‘நாடோடி மன்னன்’ போல் முன்னாளைய அரசர்கள் ஆட்சி செய்திருந்தால் அவர்கள் தங்கள் இராஜ்யங்களை இழந்திருக்க மாட்டார்கள். முன்பு கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் “நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா” எனப் பாடி வந்தார்.

    இப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் “நாட்டுக்குச் சேவை செய்ய நாடோடி மன்னன் வந்தாரய்யா” என வந்திருக்கிறார்.

    ‘எம்’ என்பது ‘மேன்’ (Man) என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்து;

    தங்கத்திற்கு (Gold) ஆங்கிலத்தில் முதல் எழுத்து ‘ஜி’.

    ‘தங்கமான மனிதர் ராமச்சந்திரன்’ - என்பது தான் ‘எம்.ஜி.ஆர்’ என்பதற்குப் பொருள்.

    அவர் நீடுவாழ்ந்து, நாடு செழிக்க, நாம் செழிக்க உதவுவார் என வாழ்த்துகிறேன்”.........VRH

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1692
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும் எம்.ஜி.ஆர்!!
    -----------------------------
    எம்.ஜி.ஆர்!!
    இந்தத் தலைப்பில் எம்.ஜி.ஆர் இருட்டடிப்பு செய்யப்படுவதை நேற்று வேதனையுடன் விவரித்திருந்தோம்!
    மீண்டும் எம்.ஜி.ஆர்,,கட்சிக்குத் தலைமை தாங்க வருகிறார் என்ற தலையாய மகிழ்ச்சியைக் கொண்டாடுவதே இந்தப் பதிவின் சாரம்!
    நொந்ததை சொல்லித் துயர் பட்ட நாம்,, நமக்கு ஜேசிடி தந்ததை--அவர் வென்று வந்ததை இங்கே விவரிக்கப் போகிறோம்!
    அண்ணன் ஜேசிடி ஒன்றும் சாதாரண நிர்வாகி கிடையாது!
    தேர்தல் வழிக்காட்டு குழு உறுப்பினர்--
    கட்சிப் பணி மற்றும் தேர்தல் மண்டல பொறுப்பாளர்--
    கழக அமைப்புச் செயலாளர்!--இப்படி--
    முக்கியப் பொறுப்புகளை வகித்துக் கொண்டு
    எம்.ஜி.ஆர் புகழ் என்னும் முத்துக் குளிப்பவர்
    கட்சியின் தலைமைக் கழகத்துக்கு--அம்மா மாளிகை என்று பெயர் சூட்டலாமா என்று அன்று துர் மார்க்கக் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கறுப்பாக சிந்தித்த போது பொங்கி எழுந்தவர் ஜே.சி.டி ஒருவரே!
    முக்கியமாக,,ஆர்/பி/உதயகுமாரை நோக்கி அவர் அன்று எய்த கணைகளும்--அக்னியாய் பெய்த மழையும் கொஞ்சமன்று!
    அம்மா,,அம்மா அம்மா--
    எதற்கெடுத்தாலும் அம்மா என்றால் எப்படி?
    அம்மாவுக்கு அவர் இல்லத்தை நினைவில்லம் ஆக்குகிறோம்! மெரீனாவில் அவர் நினைவிடத்தைப் பெரிதாகக் கட்டப் போகிறோம்!
    இன்னம் பல அம்மாவுக்காகவே செய்யப் போகிறோம்!
    கட்சி அலுவலகத்தை நமக்கு தம் சொந்த சொத்தை தானமாகக் கொடுத்த ஜானகி அம்மையாருக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம்?
    அன்றையக் கால கட்டத்தில் அம்மாவைக் குஷிப்படுத்த வேண்டுமென்று தவறான வழியில் சென்ற நாம்,,நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?
    இப்போது அம்மா அன்பு மாளிகை என்றுப் பெயர் மாற்றம் செய்யும் வீண் வேலை எதற்கு?
    இப்படி ஜே.சி.டி,,அந்த செயற்குழுவில் பொங்கி எழுந்ததைப் பார்த்த அனைவருமே அரண்டு தான் போனார்கள்!
    அன்று அவர் ஒருவராக அந்தப் பெயர் மாற்றத்தை தடுத்து நிறுத்தினார்!
    அங்கேப் பேசியதை விட அண்மையில் அவர் ஆற்றிய உரையைக் கேட்போமா?
    அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்து செயற்குழுவில் அவர் தெளித்த அக்கினி திராவகத் துளிகள்--
    கடந்த காலக் கட்சி வரலாறை எடுத்துக் கொண்டால்--எம்.ஜி.ஆரை எப்போதெல்லாம் நாம் புறக்கணித்தோமோ--அப்போதெல்லாம் கழகம் மோசமான தோல்வியைத் தான் சந்தித்திருக்கிறது!
    தீய சக்தியின் திசைப் பக்கம் ஒட்டு மொத்த மக்களையும் திரும்ப விடாமல் செய்த எம்.ஜி.ஆரின் மேஜிக்கை அதற்குப் பின்னர் கழகத்தால் செய்யவே முடியவில்லை!
    அம்மாவை மட்டுமே இனி நாம் உச்சரிப்பதில் பயன் இல்லை. எம்.ஜி.ஆரை மீண்டும் கொண்டு வராமல் நமக்கு8 வெற்றியும் இல்லை!
    தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாது,,இனி கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைவரே முன்னிலை வகிப்பார்!
    மீண்டும் ஒரு 1977ஐக் கொண்டு வரக் கழகத்தில் நான் பாடுபடுவது மட்டுமன்றி செயலாக்கம் காணவும் பாடுபடுவேன்
    நான் மட்டுமன்றிக் கழக முன்னணியினர் பலரும் எம்.ஜி.ஆர் என்ற் முக்கியத்துவத்தை உணர தலைப்பட்டு விட்டனர்!!!
    அன்றைய அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் ஜே.சி.டியின் துணிச்சலான--நியாயமான உரை ,,புதியதொரு எழுச்சியைத் தந்தது என்பதோடு--
    அளவற்ற சந்தோஷ மிகுதியால் அவர்கள் அனைவரின் வாய்களும் குழறிற்று என்பதே உண்மை!
    ஏன் நமக்கும் தானே
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத எம்.ஜி.ஆர் என
    சங்கே முழங்கு!!!!...vtr...

  4. #1693
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடல் கடந்து ஒன்றும் இல்லாமல் வந்த எம் ஜி ஆர் இந்தியாவில் எவரும் பெறாத பட்டங்கள் சாதனைகளை அடைந்தார்

    தன் தொழிலில் முதல் தேசிய விருது மலைகள்ளனுக்கு பெற்றார் எம் ஜி ஆர்

    தானே தயாரித்து இயக்கிய நாடோடி மன்னனுக்கு அரசு விருது பெற்றார் எம் ஜி ஆர்

    தன் சொந்த தயாரிப்பு அடிமை பெண்ணிர்க்காக பிலிம்பெர் பரிசு பெற்றார் எம் ஜி ஆர்

    பலபடங்களுக்கு அரசு விருது பெற்றார் எம் ஜி ஆர்

    ரிக்ஷாகாரனுக்கு பாரத் விருதை பெற்றார் எம் ஜி ஆர்

    லண்டனில் வெளியிட்ட நூற்றாண்டு சினிமா நூலில் இந்தியாவை சேர்ந்த மூவர் இடம் பெற அதில் ஒருவர் எம் ஜி ஆர்

    இந்திய அரசு வழங்கும்
    பாரத்
    பத்மஸ்ரீ
    பாரத்ரத்னா
    என்ற மூன்று பட்டங்களையும் ஒருங்கே பெற்றவர் எம் ஜி ஆர்

    எந்த முதலவருக்கும் கொடுக்காத மரியாதையாக எம் ஜி ஆருக்காக செங்கோட்டை கொடியை அரைகம்பத்தில் பறக்க விட்டு இந்தியா முழுவதும் விடுமுறை விட்டு மரியாதை செலுத்தியது எம் ஜி ஆருக்கு

    மரபுகளை மீறி தலைநகரை விட்டு பிரசிடன்டு பிரதமர் முப்படை தளபதிகள் ஒருங்கே சென்னை வந்து எம் ஜி ஆருக்கு மரியாதை செய்தார்கள்

    இந்திய அரசு இரு முறை எம் ஜி ஆருக்கு தபால் தலை வெளியிட்டது

    நூறு ரூபா ஐந்து ரூபா எம் ஜி ஆர் நாணயம் வெளியிட்டது இந்திய அரசு

    இந்திய பாராளுமன்றத்தில் எம் ஜி ஆர் சிலை நிறுவப்பட்டது

    எம் ஜி ஆர் ரயில் நிலையம் இந்தியாவில் சூட்டபட்டது

    இந்திய அரசின் சாரணர் படையின் வெள்ளி யானை பரிசு எம் ஜி ஆருக்கு வழங்கபட்டது

    இந்திய பிரதமர் நேருஜீ இந்தியா சைனா யுத்த நிதிக்கு இந்தியாவிலே அதிக தொகையை முதல் நிதி வழங்கிய இந்தியன் எம்ஜி ஆர் என்று தன் கைபட நன்றி கடிதம் எழுதி அனுப்பினார்

    இந்தியாவிலே மூன்று பிரதமர் ஒரே குடும்பத்தில் உள்ள நேருஜீ இந்திராகாந்தி ராஜீவ்காந்தி இவர்களின் நன்மதிப்பு பெற்றவர் எம் ஜி ஆர்

    எந்த பதவியும் அடையாத போதே மோரீஸ் நாடு தன் சுதந்திர தின விழாவுக்கு அழைத்து அன் நாட்டு பிரதமரின் அடுத்த இருக்கை நல்கி மரியாதை செய்து சிறப்பித்தது எம் ஜி ஆரை

    அமேரிரிக்கா கனடா பாரளுமன்றங்கள் எம் ஜி ஆருககு மரியாதை செய்ததது

    பிரான்ஸில் சுவாமி விவேகானந்தர் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் இருவர் சிலை மட்டுமே உள்ளது உலகின் பெரிய விருது ஆன நோபல் விருதிற்க்கு எம் ஜி ஆர் பெயர் சிபாரிசு செய்யபட்டது சிறப்பு

    ஒரு இந்திய மனிதனும் எம் ஜி ஆர் அடைந்த மக்கள் அன்பு
    அத்தனை பட்டங்களும்
    பலசாதனைகளையும் தன் சொந்த முயற்சியால் மனிதநேயம் திறமை துணிச்சல்வீரம் வள்ளல் குணத்தின் துணையோடு அடைந்ததில்லைவாழ்க எம். ஜி. ஆர்., புகழ்.........arm...(பத்மஸ்ரீ தலைவர் மறுத்து விட்டார்)

  5. #1694
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #என்னும் #கங்கை...

    தன் மேல் பாவக்கறைகள் படர்ந்தாலும் கங்கை நதியின் புனிதத்தன்மை கெட்டுப்போவதில்லை. மேலும் தன்னை அண்டும் மக்களுக்குப் புண்ணியத்தை வழங்கும் தன்மையுடையது கங்கை...

    அதைப்போல ... தன்மீது மாசுகளைத் தூற்றினாலும் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் தான் நம் பொன்மனச்செம்மல்...

    1977-80 களில் தீவிர மதுவிலக்கை எம்ஜிஆர் அமல்படுத்தி இருந்தார். தலைவரின் ஆட்சிக்கிருந்த நற்பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட கள்ளச்சாராய வியாபார கலாச்சாரம் பெருகியது. இதை ஒழிக்கவும், அரசியல் சூழல்களாலும் தனது மனசாட்சிக்கு விரோதமாக மக்கள்திலகம் மதுவிலக்கை ரத்து செய்தார்...

    இனி விஷயத்துக்கு வருகிறேன்...

    சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை... சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது.

    அவர் தன் ஒரு நாள் கலெக்ஷனை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரை சந்தித்தார். அதை கட்சி நிதியாகவோ, தனிப்பட்ட நிதியாகவோ ஏற்க வேண்டும் என்று வேண்டி நின்றார்... "அந்தப் பணத்தை கையால் கூட தொடமாட்டேன்..." என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர். அந்த தொழிலதிபரும் பிடிவாதமாக இருக்க... வேறு வழியில்லாமல்,

    "இந்த நிதியை சத்துணவுத் திட்டத்துக்கு அளித்து விடுங்கள்" என்று கூறிவிட்டார்...

    அது முடிந்தபிறகும் பிரச்சினை ஓய்ந்ததா...? என்றால் அதுதான் இல்லை...

    சோதனையாக... மறுபடியும் சில நாட்களில் பெரும் தொகையை பெட்டியில் அடுக்கிக்கொண்டு வந்தார் அந்தத் தொழிலதிபர்...

    "இதையாவது நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்"' என்றார். எம்ஜிஆர் மறுக்கிறார்...

    இருந்தாலும் பிடிவாதமாக கட்டாயப்படுத்தி தொழிலதிபர் அங்கேயே அதை வைத்துவிட்டுச் செல்கிறார்.

    எம்ஜிஆர் பார்க்கிறார்... அன்று இரவு முழுக்க அவர் தூங்கவேயில்லை. தனது அறையில் பரணில் அங்கங்கே இருந்த பழைய டைரிகள், பழைய நோட்டுகளை எடுத்து, எடுத்து அதிலிருந்து எதையோ குறிப்பெடுக்கிறார்.

    விடியற்காலை 4 மணிக்கு தன் கதவைத் திறந்து உதவியாளரை அழைக்கிறார். தன் கையில் உள்ள தாள்களை நீட்டி, 'இதில் உள்ள முகவரிகளுக்கெல்லாம் போன் செய்; தந்தி அடி. அவர்களை எல்லாம் இங்கே மாலைக்குள் அவசரமாக வரச்சொல்!' என உத்தரவிடுகிறார்.

    அதே போல் உதவியாளரும் செய்ய, அதில் அழைக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் இல்லம் பதறியடித்து ஓடி வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்கிறார். தனித்தனியே அழைத்துப் பேசுகிறார்.

    ''நீங்க இன்ன நேரத்தில் இப்படி கஷ்டத்தில் இருந்தேன். நீங்க இன்ன உதவி செஞ்சீங்க. அதை மறக்க மாட்டேன். அதற்காக இல்லாவிட்டாலும் எனக்காக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் என்ன உதவி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கேளுங்க. என்னால் முடிஞ்சதை செய்யறேன்!'' என்று சொல்லி கட்டி வைக்கப்பட்டிருந்த பொட்டலங்களை அளிக்கிறார்.

    அந்தப் பொட்டலங்களில் தொழிலதிபர் வைத்து சென்ற பணமே லட்சலட்சமாக பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பைசாவை கூட அவர் தொடவில்லை. கடைசி வரை எம்ஜிஆர் இப்படியேதான் வாழ்ந்தார்...

    எனவேதான் எதிர்க்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுகள் வீசப்பட்ட போதெல்லாம், ''நான் தப்பு செய்தேனா? நான் ஊழல் செய்தேனா?
    அப்படிச் செய்திருந்தால் ஆட்சியை விட்டே செல்கிறேன்!'' என்று மக்களிடம் நேருக்கு நேர் கேட்கும் "தில்"
    புரட்சித்தலைவரிடம் இருந்தது.

    புரட்சித்தலைவரைப் போல இப்படி மார்தட்டிச் சொல்ல வேறு யாரால் முடிந்தது ? இன்றளவும்...

    இப்படித் தூய்மையாக இருந்ததால் எம்ஜிஆர், "இதயதெய்வம்" என்று பக்தர்களால் இன்று புகழப்படுகிறார்...என்றென்றும் புகழப்படுவார்.

    "இதயதெய்வம் என்றால் அது புரட்சித்தலைவர் மட்டுமே..."...bsm ...

  6. #1695
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் பல நன்மைகளை செய்தார். அவரால் பயனடைந்து வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர். அவர் காலஞ்சென்ற பின்பும் அவரால் பலர் பயனடைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

    இன்றும் அவருடைய படங்களால் பல தியேட்டர் அதிபர்கள் லாபம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். சின்னத்திரையிலும் அவர் திரைப்படங்கள் திரையிட்டு லட்சோபலட்சம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் எந்த ஒரு மனிதருக்கும் இல்லாத மவுசு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் இருந்துகொண்டு வருகிறது.

    நூற்றுக் கணக்கான புத்தகங்கள் அவரைப் பற்றி எழுதப்பட்டு இன்றும் வெளியே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவரை பற்றி செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக போட்டு விட்டாலே போதும் அன்றைய தினம் எந்த ஒரு இதழும் கிடைக்காது. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதோ செய்தி வந்திருக்கிறது அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தால் எல்லா இதழ்களும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் சரி, சினிமா நடிகர்களுக்கும் சரி, ஆற்றல் மிக்க அறிஞர்களுக்கும் சரி இன்றளவும் நிகழ்ந்தது இல்லை இனி நிகழப் போவதும் இல்லை. புரட்சித் தலைவருடைய புகழை யாராலும் எவராலும் நெருங்க முடியவில்லை இனி நெருங்கவும் முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். உலகிலேயே மக்களின் உள்ளங்களில் உயர்ந்து மனித தெய்வமாக நேசிக்கப்பட்டவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க......... Saravanan Subramanian

  7. #1696
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுட்டாங்க.., ஆனா மறுபிறவி எடுத்துவந்து அரசியல் சினிமா. இரண்டிலும் இன்னும் வேகமாக கலக்கனாரு..

    பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்..

    நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றம் மோடுக்கு முழுசாக மாறிவிட்டது.

    ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும் எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதி.. சுட்டது எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறை யை கட்டுப்படுத்த.9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.

    எம்ஜிஆர், ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும்.ராயப்பேட்டையில் போலீசார் கடும் சிரமப்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டுவரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்..

    உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டை மட்டும் வேலைகாட்டியது. எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..

    கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் போட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது..ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது....

    பிப்ரவரி 23,, வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆர் பிரச்சா ரத்திற்கு போகாமலேயே அமோகமாக வெற்றிபெற்றது.... திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது....

    எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது... ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது... நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது... என வரலாற்று தேதிகள் சொல்லும்..

    இன்னொரு பக்கம் சுடப்பட்டு கம்பீரமான குரல் போனதால் எம்ஜிஆரின் சினிமா அவ்ளோதான் என்றார்கள்.. டப்பிங் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்று கூட அறிவுரை சொன்னார்கள்..

    என்னை நேசிக்கும் தமிழக மக்கள், என் குரலை காரணம் வைத்து கைவிடமாட்டார்கள், நானே தத்தி தத்தி பேசுகிறேன்.. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் விருப்பம், அவர்கள் முடிவு..என்று எம்ஜிஆர் திடமாக இருந்துவிட்டார்.

    மக்கள் திலகத்தை எந்த அளவுக்கு மக்கள் நேசித்தா ர்கள் தெரியுமா? சுடப்பட்ட பின்தான் எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்பைக்காட்டிலும் தெறி இட்..

    காவல்காரனில் தொடங்கி ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், நம்நாடு, அடிமைப்பெண் எங்கள் தங்கம், மாட்டுக்கார வேலன், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என அது ஒரு பெரிய பிளாக் பஸ்டர் பட்டியல்

    எம்ஜிஆர் சுடப்பட்டு தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மறக்கமுடியாத ஜனவரி12. 1967... Ahilan Raju

  8. #1697
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரு சம்பவத்தை இங்கே
    மறுபடியும் நினைவூட்ட விரும்புகிறேன்,

    " ஜெருசலேம் நகரில் விபச்சாரம் செய்து அதனால் கையும், களவுமாக பிடிபட்ட ஒரு பெண்ணை ஒரு கும்பல் பிடித்துக்கொண்டு வந்து இயேசுவின் முன்னால் நிறுத்துகிறது,

    அப்போது அவர்கள் இயேசுவிடம் சொல்கிறார்கள் " இவள் கொடிய பாவமாக கருதப்படுகிற விபச்சாரத்தை செய்து அதன் காரணமாக பிடிக்கப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறாள்,

    இவளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை இப்போது நீங்கள் சொல்ல வேண்டும்,

    அந்த பெண்ணை கொண்டு வந்தவர்களின் நோக்கம் எப்படியாவது இயேசுவை இந்த விவகாரத்தில் குற்றவாளியாக காண்பித்து விட வேண்டுமே என்பதையன்றி வேறு எதுவும் இல்லை,

    இயேசு அந்த பெண்ணை குற்றவாளி என்று சொன்னால் " ஊருக்கே அன்பை போதிக்கும் ஒருவர் பெண் என்ற மனிதாபிமானம் கொஞ்சம் கூட இன்றி அவளை தண்டிக்கச் சொல்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு நல்ல மனிதரா என்ற கேள்வியை கேட்கலாம்,

    மாறாக அவளை விட்டு விடுங்கள் என்று சொன்னால் " ஆஹா இவர் ரோமைய சட்டத்தை மீறி கொடிய பாவம் செய்த இவளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தையே அவமதித்து விட்டார் என்று அவதூறு பறப்பலாம்,

    ஆனால் இயேசு இவர்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் குனிந்து தரையில் எழுதத் தொடங்கி விடுகிறார்,

    வந்த கும்பலும் விடாமல் அவரை மறுபடி மறுபடி வற்புறுத்தி பதில் சொல்ல வேண்டும் என்று கூக்குரல் இடத் தொடங்குகிறது,

    சிறிது நேரத்துக்குப் பிறகு இயேசு மெதுவாக நிமிர்ந்து அனைவரையும் பார்க்கிறார்,

    பிறகு சொல்கிறார் " உங்களில் பாவம் செய்யாதவன் யாரவது இந்தக் கூட்டத்தில் இருந்தால் அவன் முதல் கல்லை இவள் மேல் எறியட்டும் " என்று சொல்லிவிட்டு மீண்டும் தரையில் குனிந்து எழுதத் தொடங்கி விடுகிறார்,

    சிறிது நேரம் கழித்து அவர் நிமிர்ந்து பார்க்கும் போது அந்த பெண்ணைத் தவிர ஒருவர் கூட அந்த இடத்தில் இருக்கவில்லை,

    இயேசு அந்த பெண்ணிடம் கேட்கிறார்
    " பெண்ணே உன்னை யாரும் தீர்ப்பிட வில்லையா?

    அந்த பெண்ணும் இல்லை என்று பதில் சொல்ல இயேசு சொல்கிறார் "நானும் உன்னை தீர்ப்பிட வில்லை, இனியாவது பாவம் செய்யாமல் வாழ்க்கை நடத்து " என்று சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பி விடுகிறார்,


    நான் எதற்காக இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் இப்போது கொஞ்ச நாட்களாக முகவரியே இல்லாமல் இருக்கும் ஒரு நாலாந்தர நடிகனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் சில தெருப்பொறுக்கி நாய்களும், மலம் தின்னும் சில பன்றிகளை விட மட்டமான கேவலமான பிறவிகள் சிலதும் தலைவரின் காலடி நிழலைக் கூட சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தொட முடியாத எரிச்சலில், மனக்குமுறலில் அந்தக் காலத்தில் கவிஞர் என்று பெயரை வைத்துக்கொண்டு குடியும், கூத்தியாளுமாக தமிழ் பண்பாட்டையே சிதறடித்து கேவலமான சாக்கடை பன்றியை விடக் கேவலமாக வாழ்ந்து கடைசியில் தலைவரின் கருணை உள்ளத்தால் " அரசு மரியாதையுடன் " அரசவைக் கவிஞராக மறைந்து போன " கண்ணதாசன் எழுதிய " எம்ஜிஆர் அகமும் புறமும் " என்ற எச்சை வாந்தியை எங்கேயோ தேடிப் பிடித்து அந்த கேவலமான நடிகனின் பெயரில் இருக்கும் குழுக்களில் எல்லாம் பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்,

    அந்த எச்சை நக்கும் நாய்களிடம் நான் கேட்கிறேன் இதனால் நீங்கள் என்னத்தை சாதித்து விடப் போகிறீர்கள்?

    ஒரு மயிரையும் புடுங்கப் போறதில்லை,மாறாக பதிவிட்ட நீங்கள்தான் அசிங்கப்பட்டு அவமானத்தில் நாக்கை பிடுங்கிக் கொண்டு அழியப் போகிறீர்களடா தெருப் பொறுக்கி நாய்களா

    நான் கேட்கிறேன், அந்த புத்தகத்தை பதிவிட்ட மலம் தின்னும் பன்றிகளும் சரி, வேறு எவனும் சரி, நான் யோக்கியன் என்று நெஞ்சைத் தொட்டு சொல்ல முடியுமா?

    எல்லா மனிதனும் பலவீனம் உள்ளவன்தான், அது மட்டுமல்ல தவறே செய்யாமல் எவனும் வாழ்ந்து விட முடியாது

    மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை இல்லாத ஒரு மனிதனை இந்த உலகத்தில் காட்டுங்கள் பார்ப்போம்,

    ஒவ்வொரு மனிதனுக்கும் பலம் பலவீனம் இரண்டுமே உண்டு, அது பிரபலமானவனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, இந்த ஒரு மாயைகளில் இருந்து தப்பவே முடியாது, என்ன சிலரது வாழ்க்கை வெளியே தெரியும் பலரது வாழ்க்கை வெளியே தெரியாது அவ்வளவுதான் வித்தியாசம்,

    சில சமயங்களில் பிரபலமானவர்களின் கூடவே இருந்து அவர்களின் உப்பை கடைசி வரையில் தின்பவன் சில பேர் அந்த பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்கள் மறைந்தபின் கற்பனை பெருமளவு கலந்து விற்று காசாக்கும் அவலங்களும் நடக்கும்,

    "மனிதரில் மாணிக்கம் " என்று புகழப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் மறைந்த பிறகு அவரின் உதவியாளராய் இருந்த ஓ. பி மத்தாய் நேருவுக்கு முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவின் தாயார் திருமதி. பண்டார நாயகா மற்றும் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எலீனாவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அந்த பரபரப்பை விற்று காசக்கிக் கொண்டார்,
    பின்னர் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பினால் அந்த புத்தகம் தடை செய்யப் பட்டது,

    காந்தியடிகள் கூட தான் வாழ்ந்த காலத்திலேயே தன் பலவீனங்களை பட்டியலிட்டு " சத்திய சோதனை " புத்தகமே எழுதினார்,

    ஒரு மனிதன் மறைந்த பின் இட்டுக் கட்டி எழுதப் படும் பொய்களுக்கு என்றைக்குமே விலை அதிகம்,

    அதே பொய்யைத்தான் முன்னாள் டி. ஜி பி மோகன்தாஸ் தலைவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும்"Man and myth " என்ற பெயரில் புத்தகமாக எழுதி காசு பார்த்தார்,

    இன்னொரு டி. ஜி பியாக இருந்த வைகுந்த் என்பவர் தலைவர் மறைந்தபிறகு
    துக்ளக் இதழில் தலைவரைப் பற்றி என்னவெல்லாமோ எழுதினார்,

    அந்தக் காலத்தில் தலைவரைப் பற்றி " நாத்திகம் " பத்திரிக்கை எழுதாததா?,
    அலை ஓசை எழுதாததா?
    தினத்தந்தி, குமுதம், ராணி, மதி ஒளி இவைகளெல்லாம் எழுதாததா?

    இல்லை கண்ணதாசன் " ராணி " வார இதழில் 1974 இல் " அரங்கமும் அந்தரங்கமும் " என்ற பெயரில் தலைவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதாததா?

    1972 இல் நடிகர் சந்திரபாபு " பிலிமாலயா " இதழில் எழுதாததா?

    இவர்களெல்லாம் எழுதி என்னத்த சாதித்து விட்டார்கள்?

    இதையெல்லாம் மீறிதான் திண்டுக்கல், புதுவை வெற்றிகளை குவித்து இறுதியில் தமிழ் நாட்டின் முதல்வராக தான் சாகும் வரையிலும் முதல்வராக இருந்து சரித்திரம் படைத்தார் தலைவர்,

    கண்ணதாசன் யாரை விட்டு வைத்தார்?

    தான் எந்த சேற்றில் புரண்டேனோ அதே சேற்றில் அடுத்தவரையும் புரண்டதாக அழகுத் தமிழில் சித்தரிப்பது கண்ணதாசனுக்கு கைவந்த கலை,

    அண்ணாவை மிகவும் மரியாதையாக இந்த புத்தகத்தில் குறிப்பிடும் கண்ணதாசன் " வனவாசத்தில் " அண்ணாவை ஒரு பெண் பித்தராக சித்தரித்ததை யாரும் மறந்து விட முடியாது,

    இதற்கு முன் காங்கிரசார் அண்ணாவையும் நடிகை பானுமதியையும் இணைத்து அசிங்கமாக அவர் வீட்டு முன்பே எழுதிப் போட்ட போது
    எல்லோரும் இரவிலும் படிக்கட்டும் என்று விளக்கு வசதி செய்து கொடுத்தவர் அண்ணா,

    இந்த புத்தகத்தில் கருணாநிதி புனிதர் ஆகி கண்ணதாசன் கையால் ஞானஸ்நானம் பெற்றது மிகப்பெரிய காமெடி,
    "மனவாசம், வனவாசம் இரண்டிலும் கையில் எடுக்க உதவாத மனிதனாக, ஸ்திரீ லோலனாக சித்தரிக்கப் பட்டதெல்லாம் " எம்ஜிஆர் எதிர்ப்பு " என்ற ஒற்றை புள்ளியில் காணாமல் போய் விட்டது அதிசயத்திலும் அதிசயம்தான்,

    அதே மாதிரி "கவலை இல்லாத மனிதன் " படத்தை சந்திர பாபுவை வைத்து எடுத்து கடனில் மூழ்கி காணாமல் போனதை கண்ணீர் விட்டு எழுதியதெல்லாம் காணாமலே போய்விட்டது, அது மட்டும் அல்ல 1963 இல் எடுத்த ஒன்றிரண்டு காட்சிகளுடன் நின்று போன "மாடி வீட்டு ஏழை " படத்தினால் 1972 வரை கிட்டத்தட்ட 9 வருடம் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து சந்திரபாபு செத்திருக்கிறார், என்ன கொடுமை பாருங்களேன் இடையில் " அடிமைப் பெண்ணில் நடிக்க வைத்து தான் எதிர் பாராத மிகப்பெரிய தொகையை தலைவர் கொடுத்ததாக சந்திரபாபுவே சொன்னது, பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன் படத்திலெல்லாம் நடிக்க வைத்து ஒரு பெரிய தொகை கொடுக்கப்பட்டதும் இந்த ரத்த வாந்திக்கு இடையில் எப்படி நடந்ததோ தெரியவில்லை?

    மேலும் அசோகன் பற்றியெல்லாம் குறிப்பிட்டு உள்ளார்

    இரவோடு இரவாக அனைத்து நடிகர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்யப் பட்டதும், அசோகன் வீடு தேடி வந்து அது வரை செலவான பணத்தை விட ஒரு மடங்கு மேலான பணத்தை தலைவர் வந்து கொடுத்து விட்டுப் போனதையும் அசோகன் மகன் திரு. வின்சென்ட் அசோகன் ஒரு விழாவில் பேசியதையும் அதையே
    You tube mathima சேனலில் இன்று வரை இருப்பதும் ஏனோ நினைவுக்கு வருகிறது,

    பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்று அருளிய தலைவனுக்கு இந்த நன்றி கெட்ட நாய் தரும் நற்சான்றிதழ் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

    " பாக்தாத் திருடன் " படம் முடிவதற்கு முன்பே "கோல்டன் ஸ்டூடியோ " நாயுடு இறந்து போனால் அந்த படம் வெளி வந்தது எப்படி?
    அந்த ஆண்டின் மாபெரும் வசூல் சாதனைப் படமாக முரசு கொட்டியது எப்படி?
    விடை காண முடியாத கேள்வி.

    தலைவரின் படங்கள் ஒரு வருடத்தில் நான்கு மட்டும் வருமாம் அதில் வரும் வருமானம் இந்த குப்பையின் ஒரு நாள் செலவுக்கே காணாதாம்,

    சரிதான் இதே கை எம்ஜிஆர் படங்களில் பாட்டெழுதி நான் வாங்கும் தொகை மற்ற நடிகர்கள் நடிக்கும் 25 படங்களுக்கு பாட்டெழுதினால் கூட கிடைக்காது என்று எழுதியது எப்படி என்று தெரியவில்லை

    குடிக்கும், கூத்திக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு தான் செலவழிப்பாரோ இந்த செல்வப்பெருந்தகை,

    ஏ. எல். சீனிவாசனிடம் பணம் கேட்டு அவர் கொடுக்க மறுத்ததால் "பழனி " படத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று பாட்டு எழுதியதெல்லாம் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது,
    ஏ. எல். சீனிவாசன் யார் என்று கேட்டு விடாதீர்கள்,

    இந்த புத்தகத்தில் கண்ணதாசன் காழ்ப்புணர்ச்சி அப்படியே தெரிகிறது,
    தன்னைத் தேடி பெண்கள் வருவார்கள் அதில் குடும்பப் பெண்களும் அடக்கம் என்று பெருமையோடு எழுதிய போது தமிழ் பண்பாடு அழியவில்லை,

    மாறாக எம்ஜிஆர் படத்தை பெண்கள் பார்ப்பதோ, ரசிப்பதோ மட்டும் மிகப்பெரிய பண்பாட்டு அழிவாம்,
    என்னய்யா உன்னோட பாலிசி?

    இப்படி இல்லாததையும், பொல்லாததையும் எழுதி விட்டு கடைசியில்
    நான் இதையெல்லாம் எழுதுவதால் எனக்கும், எம்ஜிஆருக்கும் தனிப்பட்ட விரோதம் என்று யாரவது நினைத்தால் அது மடமையாம்,
    சரி வேறு என்ன விரோதம்?

    நான்தான் தனிக்காட்டு ராஜா என்று எண்ணிக் கொண்டு திமிர் பிடித்து அலைந்த உனக்கு தலைவர் வாலி மூலம் மிகப்பெரிய ஆப்பு அடித்தது உன்னை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பது உன் எழுத்து மூலமே தெரிகிறது ( உன் மகன் அண்ணாதுரை கண்ணதாசனும் சாட்சி )
    ஏலம் போன வீட்டை இரண்டு முறை மீட்டுத் தந்ததையும், மிகப்பெரிய பண உதவிகளையெல்லாம் தலைவர் செய்ததையும் இவர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பட்டியல் இடும் காட்சியெல்லாம் கண் முன்னே வந்து போகிறது,

    இந்த புத்தகத்தை உருவேற்றி இருக்கும் நாலாந்தர நடிகனின் காம லீலைகள் எல்லாம் யாருக்கும் தெரியாது என்று இவர்கள் நினைத்தால் அதை அழகாக வெளிக்கொண்டு வரவும் தலைவரின் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும்,

    ஒரே நடிகையை ஒரு தயாரிப்பாளரும், இந்த மயிராண்டியும் கூட்டணி போட்டு தள்ளிக்கொண்டு போனதை சொல்லலாமா?

    சிண்டிகேட் கூட்டத்துக்கு கூட்டிப் போவதாக சொல்லி ஒரு நடிகையை வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி ஹோட்டலுக்கு தள்ளிப் போன கதையை சொல்லலாமா?

    50 வயது தாண்டியும் ஒரு நடிகைக்காக அப்பனும் மகனும் அடித்துக் கொண்ட கதையை சொல்லலாமா?

    ஒரு படத்தில் கூட நடித்த சின்ன வயது நடிகையை பரிசலில் வைத்து சுரண்டிப் பார்த்த கதையை அந்த நடிகை அனைவரிடமும் சொல்லி சிரித்த கதையை சொல்லலாமா?

    எழுத எழுத நீண்டு கொண்டே போகும் கதைகளை எல்லாம் வைத்துக்கொண்டு தலைவருக்கு பாடம் சொல்வது அவ்வளவு நன்றாகவா இருக்கிறது? (ஊருக்கு தெரியாமல் கடைசி வரை வாழ்ந்து செத்த பாடகி கதையையும், திருமலை நாயக்கர் மகால் தூண் போன்ற உயரம் உள்ள கவர்ச்சி நடிகை கதையெல்லாம் சொல்லவே இல்லை )


    இறுதியாக ஒன்று

    ரஷ்யாவை ஜார் மன்னனின் பிடியிலிருந்து மீட்டு அந்த நாட்டை வளமாக்கிய லெனின் அவர்களின் பாடம் செய்யப்பட்ட உடலை வீதியில் தூக்கி எறிந்த உலகம்தானே இது!

    வல்லாதிக்க அரசுகளின் பிடியில் இருந்து அடித்தட்டு மக்களை மீட்க தன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடி
    பொலிவிய காடுகளில் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட " சேகுவேரா " அவர்களையும் கூட விமர்சிக்கும் பூமிதானே இது!

    தனி ஒரு மனிதனாக அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்து வெறும் கரும்புத் தோட்டங்களை மட்டுமே வைத்து கியூப தேசத்தை உயர்த்திக் காட்டிய பிடல் காஸ்ட்ரோ அவர்களைக் கூட விமர்சிக்கும் பூமிதானே இது!

    இப்படி உலகத்துக்கு நன்மை செய்து மடிந்து போன மகா மனிதர்கள் வரிசையில் தன் வாழ்நாள் முடிந்த பிறகும் தான் சேர்த்த சொத்துக்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள், ஊமைகள், காது கேளாதோருக்கு எழுதி வைத்து விட்டு மறைந்து போன என் தலைவனை விமர்சிக்கும் இவர்களெல்லாம்????????


    தலைவரின் பக்தன்...

    ஜே. ஜேம்ஸ் வாட். (J.JamesWatt).........

  9. #1698
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுட்டுவிட சுட்டுவிட தொடரும்!!
    ---------------------------------------------
    தொட்டால் பூ மலரும் பாடலில்--
    சுட்டால் பொன் சிவக்கும்!--எந்த வேளையில் வாலி எழுதினாரோ--
    சுட்டதால் தானே பொன் மனத்தார் மேலும் சிவந்தார்?
    அண்ணாவின் ஆட்சிக்குப் பலரின்--
    தொண்டு அல்லாமல் எம்.ஜி.ஆரை முத்தமிட்ட
    குண்டு தானே பிள்ளையார் சுழி??
    முதல்வர் எம்.ஜி.ஆர்,,நடிகர் சத்யராஜின் திருமணத்துக்காக கோயமுத்தூர் சென்று கொண்டிருக்க--அதே விமானத்தில் ராதாவின் வித்து,,ராதா ரவியும் பயணிக்கிறார்--
    தமது விமானத்திலேயே எம்.ஜி.ஆர் என்னும்--
    மனித உருவிலான மலர்க் குவியலும் பயணிக்கிறதா?
    சிலையாகிறார் ராதாரவி--
    கோவையை ஒத்த சென்னிற மேனியுடன்-
    கோவைக்குப் பயணம் செய்யும்
    கோ வைக் கண்ட மாத்திரத்தில் பிரமிக்கிறார்--அவர் மேலேயே தம் கவனத்தை
    ஒருமிக்கிறார் ரவி!
    என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பாய்ந்து குதித்து அவர் அருகில் சென்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள--
    தாயுள்ளத்துடன் அவரைப் பற்றிக் கேட்டறிகிறார் எம்.ஜி.ஆர்!
    ராதாரவிக்கு மரபை மீறி அப்படி முதலமைச்சர் அருகில் செல்லக் கூடாது என்பது தெரியவில்லை. அதைப் பற்றியக் கவலையும் அந்த நொடி அவருக்கில்லை--
    கோவை விமான நிலையத்தில் தமக்கு முன்னால் தமது பரிவாரம் புடை சூழ சென்று கொண்டிருந்த முதல்வர்,,பின்னால் திரும்பி யாரையோ தேடுவதைக் கண்டு குழம்புகிறார் ரவி?
    அவரும் கிளம்ப யத்தனிக்கையில் அந்தப் போலீஸ் அதிகாரியால் தடுத்து நிறுத்தப் படுகிறார் ரவி??
    இருபது நிமிடம் கழிந்து என் காரில் உங்களை திருமண மண்டபத்துக்கு அழைத்து வரச் சொல்லி சி.எம்மின் உத்தரவு!!
    இது மேலும் ரவியைக் குழப்புகிறது!
    எம்.ஜி.ஆரும்,,அவர் பரிவாரங்களும் சென்ற பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி ரவியைத் தம் காரில் ஏறிக் கொள்ளச் செய்து கொண்ட பிறகு தான் ராதா ரவிக்கு ரகசியம் புரிகிறது??
    எம்.ஜி.ஆரை வரவேற்க விமான நிலையித்தில் வெள்ளமெனக் கூடியிருந்த மக்களிடம் தாம் சிக்கியிருந்தால்??
    மண ஊர்வலத்தைக் காண வேண்டியவர்--
    மரண ஊர்வலத்தில் அல்லவாப் படுத்திருப்பார்??
    தன்னைக் கொல்ல முயன்றவரின் பிள்ளை எனினும்-பிய்ச்சு மேய்ந்திருக்க வேண்டிய தம்மையா
    உச்சி முகர்ந்திருக்கிறார் இந்த உத்தமன்??
    போலீஸ் அதிகாரி சொன்ன இன்னொரு செய்தியைக் கேட்டு மயக்கம் வராத குறை ராதா ரவிக்கு?
    போகும்போது திரும்பி உங்களைப் பார்த்து,,போயிட்டு வரேன்னு அவர் சைகை செஞ்சாராம்,,,நீங்க கவனிக்கவே இல்லையாம்???
    அந்த வார ஜெமினி சினிமா பத்திரிகையில் ராதா ரவியின் பேட்டி இப்படி அமைந்திருக்கிறது--
    பார்த்த நொடியே அவர் மேல் பற்றுகிறது நம் உள்ளம் என்றால் அது வெறும் புகழ்ச்சி வார்த்தை இல்லை. இன்னும் இரண்டு நிமிடங்கள் நான் அவரிடம் கழித்திருந்தாலும்--
    அவர் காலடியில் வீழ்ந்திருப்பேன்??
    இன்னா செய்தாரை ஒறுத்தல்--அவருக்கு
    நன்னா செய்!!
    வள்ளுவனின் குறள்!--இதற்கு
    வள்ளல் தானே பொருள்???
    நிகழ்வின் நெகிழ்ச்சியோடு உங்கள் கமெண்ட்டுக்களை சிந்தலாம்!...vtr...

  10. #1699
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கச்சேரியும் #கரகோஷமும்

    மியூசிக் அக்காடமி !
    அன்று , பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரியை கேட்டு ரசிப்பதற்காக , அங்கே ஏராளமானோர் வருகை தந்திருந்தார்கள் !
    அந்த பாடகர் , தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த அக்கணம் .....

    ஒரு கம்பீரமான மனிதர் , அனைவரையும் அமைதியாக இருக்கும்படி .....தன் விரல் அசைவால் சமிக்ஞை செய்தவாறே ..எவ்வித ஆரவாரமும் இன்றி ..அமைதியாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார் .!.
    ( தனது வருகையால் கச்சேரிக்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் கருதியதே , அவர் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் )....

    தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே அறியா வண்ணம் ....கண்களை மூடியவாறு மெய் மறந்து பாடிக்கொண்டிருந்த பாடகர் ....ஒரு கட்டத்தில் , ...
    '' இராம நாமம் நல்ல நாமம்
    நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
    இராம நாமம் நல்ல நாமம்
    தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
    தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
    இராம நாமம் நல்ல நாமம் ''
    .........எனும் பாடலை பாட ஆரம்பித்தது தான் தாமதம் .....
    அடுத்தகணம் , விண்ணை பிளக்கும்படியான கரகோஷம் அந்த அரங்கத்தில் !......
    ரசிகர்களின் அந்த உற்சாகத்தினால் , பரவசமடைந்த அந்த பாடகர் , மேலும் உற்சாகமும் , மகிழ்ச்சியுமாய் அவர் பாடலை பாடிக்கொண்டிருக்க ... .....
    ஒரு வழியாய் பாடல் முடிந்ததும் ...
    மீண்டும் பலத்த கரகோஷம் !.

    இப்போது , கண்களை மெல்ல திறந்தவாறு கூட்டத்தினரை சுற்றும் முற்றும் பார்த்த அந்த பாடகர் ....பார்வையாளர்கள் மத்தியில் ..புன்னகை பூத்த வதனத்துடன் ....அமர்ந்திருந்த அந்த நபரை கண்டதும் வியப்பின் உச்சக்கட்டத்துக்கே சென்று விட்டார் !!
    இன்ப அதிர்ச்சியில் அப்படியே செய்வதறியாது அமர்ந்திருந்தார் !
    காரணம் , அவர் பார்வை குத்திட்டு நின்ற இடத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்த மாமனிதர் , #விவிஐபி #மக்கள்திலகம் #எம்ஜிஆர் அல்லவோ ?.....

    அவர் எதேச்சையாக , ....'' இராமாயண காவிய நாயகன் '' தசரத ராமனைப் பற்றிப் பாட.....
    கூட்டத்தினரோ , '' இராமாவரம் ராமச்சந்திரனை '' பற்றி அவர் சமயோசிதமாக பாடியதாக எண்ணியதாலேயே , மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட , அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்புக்கான காரணம் என்று அந்த பாடகருக்கு புரிந்தது இப்போது !
    அவரின் வியப்பு இப்போது இரட்டிப்பு மடங்காகியது !
    என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் !...

    ' .... அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது உலகறிந்த விஷயம் .... அப்பேர்ப்பட்ட அந்த மாமனிதர் எத்தனை அடக்கத்துடன் ...வந்த சுவடு தெரியாமல் அமர்ந்திருக்க ...... அவர் வந்ததை கூட அறியாமல் பாடிக் கொண்டிருந்திருக்கிறேனே '
    பாடகர் உள்ளுக்குள் சிலிர்த்து போனார் !
    தன் வாழ்வில் ... பொன்மனச்செம்மலுடன் ... இப்படி
    மெய்சிலிர்க்கும்படியான ....
    இனிமையான ...சுகமான அனுபவம் ...கிடைக்கப்பெற்ற அந்த
    ''பாக்கியசாலி பாடகர் '' வேறு யாருமில்லை ....
    பிரபல பாடகர் #கே #ஜே #ஜேசுதாஸ் தான் அவர் !

    #நன்றி #தகவல் : #திருமதி #Vijayakalyani #அவர்கள்.........BSM...

  11. #1700
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *இன்று ஜனவரி 12*
    **எம்.ஆர்.ராதா**
    **எம்ஜிஆரை சுட்ட நாள்!**

    திரையுலகினரை மட்டுமின்றி
    திரளான மக்களையும்

    *திடுக்கிட வைத்தச் சம்பவம்*



    *(கரிகாலன்)*


    மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா தயாராகிக் கொண்டிருந்தார். *"அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள்"* என, அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடம் சொல்ல, அதை சற்றும் பொருட்படுத்தாமல், அந்நிகழ்ச்சிக்கு துணிவுடன் வந்து, எவ்வித பரபரப்புமின்றி கூட்டத்தில் ராதா பேசினார்.

    *"எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமா நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுகிட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கி தான் இருந்துச்சு. சுட்டுக் கிட்டோம்"* என்றார். இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக் கூட
    மிகச் சாதாரணமாகச் சொல்லி மக்களை சமாளித்தவர் எம்.ஆர்.ராதா.

    எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு *53* ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால்,
    இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச் சூட்டின் பரபரப்பு
    எளிதில் அடங்கி விட்டதாகத் தெரியவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைக்
    கையாண்டார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள்
    மத்தியில் மேலோங்கியே இருக்கிறது.

    *1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5* மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் இந்த
    துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. தாம் கொண்டு சென்ற துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே ராதா நிரப்பியிருந்தார். எம்.ஜி.ஆரை நோக்கி
    துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடது காதை ஒட்டி துப்பாக்கி
    ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப்
    பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார்
    எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருமே தெய்வாதீனமாக உயிர்ப் பிழைத்தனர்.

    *"என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்து வந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?"*
    என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சரியத்தோடு எம்.ஜி.ஆர் கேட்டார்.
    ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்
    சந்திரசேகரன்.
    *"அந்தத் துப்பாக்கி* *ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் ராதா வைத்திருக்கிறார்.*

    *"டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டிருந்த கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய் விட்டது. அதனால்தான் சுடப்பட்ட இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை"* என
    விளக்கம் அளித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்துரைக்கப்பட்டது. எம்.ஆர்.ராதாவின்
    வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும்
    இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும்
    நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

    தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான, *'தொழிலாளி'* திரைப்படப் படப் பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா
    சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர் பேச வேண்டிய வசனம்,
    *"இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்"* என்று அமைந்திருந்த வேளையில், எம்.ஜி.ஆர் அதனை, *"இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்"* என (திமுக மீதான பற்று காரணமாக) மாற்றிப் பேசினாராம்.
    இதனால் சினமடைந்த எம்.ஆர்.ராதா, *"சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு"* என வாக்குவாதம்
    புரிந்திருக்கிறார்.

    இதனால் வெறுப்படைந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர்
    சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தியிருக்கிறார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில், *‘நம்பிக்கை நட்சத்திரம்’* என்றே தேவர் எம்ஜிஆரை பேச வைத்து விட்டார். இது தவிர, காமராஜரைக் கொல்ல சதி நடப்பதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில்,
    எம்.ஆர்.ராதாவை வளர விடாமல் அவருக்கான சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்
    என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தன்று, *"எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்"* என
    ராதா தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டை, தடயவியல் துறை முற்றாக முறியடித்தது. கே.சி.பி.
    கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.
    சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட *3* குண்டுகளும்
    ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியவை என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர்.
    இந்தச் சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி, சம்பவத்தன்று ராதாவோடு வந்திருந்த, படத் தயாரிப்பாளர்
    *வாசு* மட்டும்தான்.

    அவர் தன்னுடைய சாட்சியத்தில், *"எம்.ஜி.ஆரை சுட்டு விட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னைத் தானே ராதா சுட்டுக் கொண்டார்"* என
    வாக்குமூலம் கொடுத்தார். *"எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்"* என ராதா தரப்பில் வாதிடப்பட்ட போதிலும், முடிவில் ராதாவே சிறைத் தண்டனைக்கு ஆளானார். நீதிமன்றத்தில் வாதம் நடந்த போது, பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
    இல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக்
    கொண்டே போக, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராதா, *"யுவர் ஹானர், வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்"*

    *"லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?"* எனக் கேட்க, நீதிமன்றமே அதிர்ந்தது.
    துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு *நவம்பர் மாதம் 4* ஆம் தேதியன்று, நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார்.

    *"அரசியல் முன் விரோதம் காரணமாகவே ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக் கொண்டிருக்கிறார். இதை அரசுத் தரப்பு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது"* எனக் கூறி, ராதாவுக்கு
    *ஏழாண்டு* கடுங்காவல் தண்டனை வழங்குவதாக அறிவித்தார். தீர்ப்பை எதிர்த்து ராதா
    உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆயினும் ராதா, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கே தண்டனை காலம்
    ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை
    காரணமாக, நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

    தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும்,
    சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில்
    ஒன்றைக் கேட்டார் ராதா.
    *"ஏன்யா வெள்ளைக்காரா...*
    *உங்கள் ஊரில்*
    *எப்படி... 30 வருஷம்* *வக்கீலாக இருக்கறவர் தான் ஜட்ஜா வருவாரா?"* எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், *"ஆமாம், எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்"* எனச் சொல்ல, பலமாகச் சிரித்த ராதா, *"அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர், ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், மை லார்டுன்னு சொல்றோமே, இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?"* எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி
    யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் *எம்.ஆர்.ராதா.*

    துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்து விட்டாலும், 1975 இல்
    இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின் போது, மிசா சட்டத்தின் கீழ் ராதா கைது செய்யப்பட்டார். *'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை'* என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும்,
    நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார்
    எம்.ஆர்.ராதா. கடைசிவரை, எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக்
    கொள்ளாமல், இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது
    பெரியாரின் இறப்பின் போதுதான்.

    அப்போது கூட, *"உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்"* என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு. அதன்பின் சிங்கப்பூரிலும்
    மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்தி விட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து, திருச்சி திரும்பினார்.
    *1979 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17* ஆம் தேதி ராதா இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முன்வந்த போதிலும், ராதா குடும்பத்தினர் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர். அரசு மரியாதையையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


    **நிறைவு!**.........gdr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •