Page 182 of 210 FirstFirst ... 82132172180181182183184192 ... LastLast
Results 1,811 to 1,820 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1811
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் வித்தியாசமான படங்கள்...

    #பறக்கும்_பாவை..!!!

    ஒரு தொழிலதிபரின் மகனான ஜீவா (மக்கள் திலகம்) தன் குடும்ப நண்பரும், நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கும் வேதாச்சலம் (சித்தூர் நாகையா) விற்கு அவரின் மகளான கலாவை ((சரோஜா தேவி)) எவ்வித ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்வதாகவும், பாதுகாவலனாக இருப்பதாகவும் உறுதி அளிக்கிறார். கலாவிற்கு தன் தந்தையின் சொத்துக்கள் வந்து சேரவே, அவரது உயிருக்கும் ஆபத்து வருகிறது. நிம்மதி வேண்டி தன் வீட்டை விட்டு வெளியேறி சர்க்கஸ் கம்பெனியில் சேருகிறார் கலா.அங்கே பறக்கும் பாவையாகிறார். ஆனால் கலாவிற்கு சர்க்கஸ் கம்பெனியிலும் உயிருக்கு ஆபத்து தொடர்கிறது. சிங்கக்கூண்டு கலாவை குறிவைத்து திறக்கப்படுகிறது, அவர் மேல் மர்ம நபர்களால் கத்தி வீசப்படுகிறது. அனைத்து ஆபத்துகளிலிருந்தும் ஜீவாவின் உதவியோடு தப்புகிறார்.

    கலாவின் தகப்பனாருக்கு உறுதி அளித்தபடி கலாவை தேடி கண்டுபிடித்து, சர்க்கஸ் கம்பெனியில் தானும் சேர்ந்து..கலாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் ஜீவா.

    இந்த படம் மக்கள் திலகத்தின் மற்ற படங்களிலிருந்து எப்படி வேறு படுகிறதென்றால், இரண்டாவது பாதி முழுவதும் சர்க்கஸை களமாக கொண்டு கதை புனையப்பட்டிருப்பதுதான். விறுவிறுப்பான திரைக்கதையோடு சர்க்கஸ் தொழிலாளர்களின் போராட்டமான வாழ்க்கையையும் முன் நிறுத்தியிருப்பதில் இயக்குநர் ராமண்ணா வெற்றி கண்டுள்ளார்.

    மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்வில் அடித்தட்டு-விளிம்புநிலை மக்களின் அசைக்கமுடியாத ஆதரவு இருந்ததற்கு அம்மக்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கையை தன் படங்களில் பதிவு செய்ததுதான். "படகோட்டியில் -மீனவர் ; ரிக்ஷாகாரனில் -ரிக்ஷா இழுப்பவர்; மாட்டுக்கார வேலன்; போன்ற பல படங்களைப்போன்றே இதிலும் சர்க்கஸ் தொழிலாளியாக அசத்தியுள்ளார்.

    சரோஜா தேவி, காஞ்சனா, சந்திரபாபு, மனோகர், தங்கவேலு, அசோகன், நம்பியார் ஆகியோரும் தங்களது நடிப்பால் மனம் கவர்கிறார்கள். அதிலும் கோமாளியாக வரும் சந்திரபாபு தூள். காஞ்சனாவிற்கு சற்று வில்லத்தனமான வித்தியாசமான பாத்திரம்.

    வழக்கம் போல் மெல்லிசை மன்னரின் இசை காலங்களைதாண்டி நிற்கிறது. *"பட்டுப்பாவாடை எங்கே"
    *"உன்னைத்தானே ஏய்"
    *"கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா"
    *"முத்தமோ..மோகமோ"
    *" நிலவென்னும் ஆடை கொண்டாளோ"
    *"சுகம் எதிலே.."
    *யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்"
    என வித்தியாசமான இசையமைப்பில் அசத்தியுள்ளார். அதிலும் "முத்தமோ..மோகமோ பாடலில் மிருகங்களின் உருமல்களையும், ஓசைகளையுமே இசையாக்கி இருப்பது புதுமை,அருமை.

    "பறக்கும் பாவை" வணிக ரீதியாக வென்றது.

    புகைப்படம் :https://www.tamil2lyrics.com/movies/parakkum-paavai/

    தகவல் :
    https://en.m.wikipedia.org/wiki/Para............Sr.Bu...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1812
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வேட்டைக்காரன் எம்ஜிஆர்...

    அப்பொழுதெல்லாம் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்குள்ளும் கடும் போட்டா போட்டி இருந்து வந்தது. இவர்கள் இருவரின் படங்கள் வெளிவரும் போது இரண்டு நாயகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்ளவார்கள்.
    அப்படிப்பட்ட சூழ் நிலையல் தான் எம்.ஜி.ஆர்.நடித்த வேட்டைக்காரன் படமும், சிவாஜி நடித்த கர்ணன் படமும் ரெடியாகி கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் டைரக்டர் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய கர்ணன் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கலர் படம்.
    இதில் முன்னணி நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருந்தது. படமும் பாதியளவில் முடிந்து அடுத்தத கட்ட படப்பிடிப்பிற்கு போகும் போதுதான் எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படம் ஆரம்பிக்கப்பட்டது.
    இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். அவரது சகோதரர் எம்.ஏ. திருமுகம் படத்தை இயக்கியிருந்தார்.இதில் ‘மகாதேவி’, ‘பரிசு’ படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சாவித்ரி நடித்திருந்தார்.
    கருப்பு வெள்ளையில் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் வேட்டைக்காரன்.
    டைரக்டர் பி.ஆர்.பந்துலு கர்ணன் படத்தின் அனைத்து கட்டப் படப்பிடிப்புகளையும் முடித்து படத்தை பொங்கலன்று (14.01.1964) வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார்.
    அப்பொழுதுதான் பி.ஆர்.பந்துலுவின் நண்பர் ஒருவர் ஒரு செய்தியை வந்து சொன்னார். சிவாஜி நடித்த கர்ணன் படம் வெளியாகும் அன்றே எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படமும் வெளியாகிறது என்ற செய்திதான் அது.
    ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் சேர்ந்து வருவதைவிட தனித்தனியாக வந்தால் அந்தந்த படங்களுக்கு கிடைக்க வேண்டிய வசூல் கிடைக்கும். இரண்டு நடிகர்களுக்கும் நிகரான ரசிகர் பட்டாளம் உண்டு.
    டைரக்டர் பந்துலு தனது படக்குழுவினருடன் கலந்து பேசினார். இதுபற்றிய செய்தியை சிவாஜி அவர்களிடமும் தெரிவித்தார்கள். சிவாஜியும் யோசனையில் ஆழ்ந்தார்.
    சாண்டோ சின்னப்பா தேவரை வரவழைத்து பேசினார்கள். அவரும் படம் எடுத்திருப்பது தேவர் பிலிம்ஸ் தான்.
    ஆனால் படம் வெளியாகும் தேதியை சின்னவர் (எம்.ஜி.ஆர்) தானே முடிவு பண்ணுவார் அவரிடம் எப்படி பேசுவது, ஒருவாரம் தள்ளி படத்தை வெளியிடுங்கள் என்று.
    இறுதியில் படக்குழுவினர் ஒருவர் சொன்ன ஐடியாபடி சிவாஜி நடித்த கர்ணன் படத்தை எம்.ஜி.ஆருக்கு மட்டும் தனியாக போட்டு காட்டுவது.
    அதன்பிறகு இதுபற்றிப் பேசுவது என்று முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள்.
    கர்ணன் படத்தைத் தங்களுக்காக பிரத்யோகமாக போட்டு காட்ட விரும்புகிறோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தந்தீர்களானால் நாங்கள் படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்கின்றோம் என்று சொன்னார்கள்.
    எம்.ஜி.ஆரும் ஒரு குழந்தையை போல துள்ளிகுதித்து கர்ணன் படத்தைப் பார்க்கச் சம்மதித்தார். படமும் அவருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

    படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜியை மனதார பாராட்டினார். அற்புதமாக நடித்திருக்கிறார். அப்படியே கர்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
    இவரைப்போல ஒரு சிறந்த நடிகரை எங்கேயும் பார்க்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார். படத்தின் பிரம்மாண்டத்தையும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவையும் மற்ற கலைஞர்களையும் வாயாரப் புகழ்ந்தார்.படம்
    வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவும் அவரிடம் வேட்டைக்காரன் படம் கொஞ்சம் தள்ளி வெளிவந்தால் உதவிகரமாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பேசத் தயங்கினார்கள்.
    மறுநாள் சாண்டோ சின்னப்பா தேவரை வைத்தே எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். அவரும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘படம் பார்த்தேன் பிரம்மாண்டமாக இருக்கிறது.
    நண்பர் சிவாஜியும் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தை தைரியமாக ரிலீஸ் பண்ணச்ச சொல்லுங்க..
    அதே நேரம் வேட்டைக்காரன் படமும் அந்த நேரத்தில் வெளிவந்தால்தான் நல்லது.
    தம்பி சிவாஜி ரசிகர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும். எனது ரசிர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும் மொத்தத்தில் எல்லா ரசிகர்களும் இந்த இரண்டு படத்தை பார்க்கட்டும்,’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
    இறுதியில் இரண்டு படங்ளும் ( வேட்டைக்காரன் & கர்ணன்) 14.1.1964 அன்று வெளிவந்தன. வெளிவந்த தியேட்டர்கள் வாசலில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கர்ணன் படத்திற்கான விளம்பர பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
    சூரியபகவான் பல குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வருவதுபோல் பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
    வேட்டைக்காரன் ரிலிசான தியோட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான ஒரு புலியை அதில் அடைத்து வைத்தார்கள். படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் நிஜப் புலியைப் பார்க்க கூட்டம் கூடியது.
    கர்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தன.ஆனால் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அளவிற்கும் படம் வெற்றி பெறவில்லை.
    குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் மிகுந்த வசூலை அள்ளி கொடுத்தது.
    பின்னாளில் எம்.ஜி.ஆர். பி.ஆர்.பந்துலுவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதிக லாபம் பெற வைத்தார் (1965)...........Baabaa

  4. #1813
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Ahead of Tamil Nadu Assembly Polls This Year, Scramble for MGR's Legacy Worries Ruling AIADMK

    While the AIADMK is partially pleased at the way everyone is praising its founder, it is concerned that this could bring political gains for rivals.



    MGR



    Saradha V

    NEWS18CHENNAI

    UPDATED ON:JANUARY 27, 2021, 08:29 IST

    FOLLOW US ON:

    Facebook*Twitter*Instagram

    MG Ramachandran, aka MGR, the matinee idol and former chief minister of Tamil Nadu, continues to be an irresistible presence in Tamil Nadu’s political space. The 104th birth anniversary of MGR, who died in 1987 and was fondly called Puratchi Thalaivar or Revolutionary Leader by many, was celebrated across the state on January 17. It was also an opportunity for many politicians from different parties to cherish and flaunt their memories and proximity with the late actor-turned-politician, who was probably one of the most influential film stars of South Asia as well as the only actor whose political career continues to survive even after three decades.
    President of Dravida Munnetra Kazhagam (DMK) MK Stalin has always been careful in his remarks about MGR, the arch rival of his late father M Karunanidhi. It was MGR’s tussle with Karunanidhi that forced the former to create a new party, AIADMK, in 1972.
    Advertisement
    Even as Stalin would fondly recall his personal connection with MGR, he would be extra cautious when it comes to MGR’s governance or schemes.
    In a meeting held at Dharmapuri a few days ago, Stalin said, "I am a great fan of MGR. I used to miss classes to watch his films. It was Karunanidhi who brought MGR into films. MGR used to make sure that nobody would call Karunanidhi by his name; that is the kind of respect he had for Kalaignar.”
    Advertisement


    Kamal Haasan, another film star who entered politics recently, has been claiming the legacy of MGR ever since he floated his party. Haasan’s party, Makkal Needhi Maiam, having contested on almost all seats in the state during the 2019 Lok Sabha polls, gained about a 2% vote share.
    While it remains a fact that it is not easy for film stars to convert their fame into votes, aspiring politicians or chief ministers like 66-year-old Haasan are also seen by the public as personalities who entered politics as a “post-retirement plan”, after completing decades in acting.
    Advertisement
    Haasan has memories with MGR to cherish, like how he grew up on the legend's lap and was very close to him though not involved in politics along with him. His political slogan "Naalai Namadhe" is inspired by the title of an MGR film, he would say. Recently, Haasan accused the AIADMK of forgetting MGR and his ideals. After releasing the documentary 'Kaalathai Vendravan' at MGR's residence at Ramapuram in Chennai, he said, "MGR's photographs in ADMK posters are becoming smaller day by day. I share MGR's dreams and goals and so I can claim his legacy."
    The AIADMK has been vehemently resisting anyone who tries to appropriate MGR's legacy, be it alliance partner BJP or principal opposition DMK.
    MGR and Jayalalithaa are two icons of AIADMK who formed successive governments in Tamil Nadu. While no one is claiming Jayalalithaa's legacy, every party now wants to associate itself with MGR's name and politics.
    It was only Jayalalithaa's image which was prominent in the party until her death. After that, the party has been facing an identity crisis and the elections ahead are not going to be easy for it.
    While the AIADMK is partially pleased at the way everyone is praising its founder MGR, it is concerned that this could bring political gains for rivals.
    Chief minister Edappadi Palaniswami, while speaking at one of the events held in Chennai as part of MGR 's 104th birth anniversary celebrations, said, "It is a fact that even people launching new parties have to use MGR's name." Last month, while paying homage at MGR's memorial in Chennai on his death anniversary, he pledged not to allow opponents to appropriate MGR's legacy. When the BJP used pictures of MGR in its campaign videos, juxtaposing them with Modi and party state president L Murugan, AIADMK minister Jayakumar was quick to react. He said, "Use pictures of your own leaders. Why do you use our leader's? MGR was the founder of AIADMK and he would always want only AIADMK to be in power."
    Arunan, author of 'MGR- History of actors becoming chief minister', observed, "Appropriating MGR's image helps in anti-DMK politics. MGR termed Karunanidhi an 'evil force' to build a negative image around him. So BJP, Kamal Haasan, whoever wants to take on DMK uses MGR's image. DMK understands that it will gain nothing by criticising a leader who is dead. Therefore, they talk only about the warm and cozy relationship that Karunanidhi and MGR shared in the early days. It is ADMK who is in a fix now, so it is trying to bring back its founder leader."..........
    News 18

  5. #1814
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவியரசர் கண்ணதாசனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்த புரட்சித் தலைவர்...

    கவியரசரின் துணைவியார் வள்ளியம்மை அவர்களின் பதிவிலிருந்து...

    கவிஞருக்கு மிக்க சந்தோஷத்தை ஏற்படுத்திய விஷயம், அவருக்கு ஆயுள் கால ஆஸ்தான கவிஞர் பதவியைத் தரப்போவதாக எம்.ஜி.ஆர் போனில் தெரிவித்துதான்.
    அவரை அவ்வளவு சந்தோசமாக நான் அதுவரை பார்த்ததே இல்லை. “உன் கணவன் இனிமேல் கவிஞன் இல்லை, அரசு கவிஞன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்...

    வாழ்க்கையில் கணவரின் நிறைவேறாத ஆசை எம்.ஜி.ஆர் கொடுத்த தங்கப் பதக்கத்தைத் தான் இறக்கும்போது மாா்பில் வைத்து எரிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
    குடும்பக் குழப்பத்தில் அதுவும் நடக்கவில்லை.
    நன்றி: இந்திய டுடே...1996...

  6. #1815
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்களுக்கு ஓர் தனி சிறப்பு உண்டு! அவரை புகழ்ந்து போற்றுபவர்கள் மட்டுமல்ல அவரை தூற்றுபவர்கள் கூட நன்மை அடைவார்கள்; அப்படி தூற்றியவர்கள் கூட எதிர்த்தவர்கள் உட்பட பிற்காலத்தில் அவரை போற்றி வணங்குவார்கள்; இதற்க்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வளவு என்? அவரது அரசியல் நேர் எதிரி கலைஞர். அவருடைய மகன் திரு ஸ்டாலினே புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் அவர் படத்துக்கு மாலை அணிவித்து இரு கரம் கூப்பி பல தி. மு. க. தொண்டர்களுடன் வணங்கினாரே..... போன வருடம் பல கோடி செலவில் உருவான புதிய சட்டசபை வளாகத்தை திறந்து வைத்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் அவர்கள் திருமதி சோனியா, கலைஞர் மற்றும் பல காங்கிரஸ் தி. மு. க. பிரமுகர்கள் எதிரிலேயே "இன்று இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளில் பின் பற்றப்படும் மதிய உணவு திட்டத்துக்கு" காரணமாக விளங்குபவர் "அமரர் எம். ஜி. ஆர்" அவர்கள் என்று புகழாரம் சூடினாரே! அதை என்னவென்று சொல்வது? ஒரே வரியில் சொல்வதென்றால், எம். ஜி. ஆர் அவர்கள் "குற்றமில்லாத மனிதன், கோயில் இல்லாத இறைவன்" -
    அன்புடன்...✌✌✌✌ ரசிகன்... Sekar Covai...

  7. #1816
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எம்.ஜி.ஆரின் மரபு கவலைகள் போராடும் AIADMK...

    AIADMK அதன் நிறுவனரை எல்லோரும் புகழ்ந்து பேசும் விதத்தில் ஓரளவு மகிழ்ச்சியடைகையில், இது போட்டியாளர்களுக்கு அரசியல் லாபத்தை தரக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது.



    எம்.ஜி.ஆர்



    சாரதா வி

    செய்தி 18சென்னை

    புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 27, 2021, 08:29 IST

    எங்களைப் பின்தொடரவும்:

    பேஸ்புக்*ட்விட்டர்*இன்ஸ்டாகிராம்

    எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர், மேட்டினி சிலை மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தமிழகத்தின் அரசியல் இடத்தில் தவிர்க்கமுடியாத இருப்பைத் தொடர்கிறார்.*1987 ஆம் ஆண்டில் இறந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள், பலரால் "புரட்சி தலைவர்" அல்லது புரட்சிகரத் தலைவர் என்று அழைக்கப்பட்டது, ஜனவரி 17 அன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் தங்கள் நினைவுகளை மதிக்கவும், வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும். மறைந்த நடிகராக மாறிய அரசியல்வாதியுடன், தெற்காசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகவும், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் அரசியல் வாழ்க்கை தொடர்ந்து நீடிக்கும் ஒரே நடிகராகவும் இருக்கலாம்.
    திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைவர் எம்.கே.ஸ்டாலின் தனது மறைந்த தந்தை எம்.கருணாநிதியின் பரம எதிரியான எம்.ஜி.ஆர் பற்றி தனது கருத்துக்களில் எப்போதும் கவனமாக இருக்கிறார்.*கருணாநிதியுடனான எம்.ஜி.ஆரின் மோதல்தான் 1972 ல் அதிமுக என்ற புதிய கட்சியை உருவாக்க முன்னாள் கட்டாயப்படுத்தியது.
    விளம்பரம்
    எம்.ஜி.ஆருடனான தனது தனிப்பட்ட தொடர்பை ஸ்டாலின் அன்புடன் நினைவு கூர்ந்தாலும், எம்.ஜி.ஆரின் ஆளுகை அல்லது திட்டங்களுக்கு வரும்போது அவர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பார்.
    சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஸ்டாலின், "நான் எம்.ஜி.ஆரின் சிறந்த ரசிகன். அவரது படங்களைப் பார்ப்பதற்காக வகுப்புகளைத் தவறவிட்டேன். எம்.ஜி.ஆரை படங்களில் கொண்டுவந்தது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர் யாரும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதிசெய்தார் கருணாநிதியை அவரது பெயரால் அழைக்கவும்; அதுதான் கலைங்கருக்கு அவர் கொண்டிருந்த மரியாதை. ”
    விளம்பரம்


    அண்மையில் அரசியலில் நுழைந்த மற்றொரு திரைப்பட நட்சத்திரமான கமல்ஹாசன், எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை தனது கட்சியில் மிதந்ததிலிருந்து கூறி வருகிறார்.*2019 மக்களவைத் தேர்தலின் போது மாநிலத்தின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட ஹாசனின் கட்சியான மக்கல் நீதி மய்யம் சுமார் 2% வாக்குகளைப் பெற்றார்.
    திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் புகழை வாக்குகளாக மாற்றுவது எளிதல்ல என்பது ஒரு உண்மையாக இருக்கும்போது, ​​ஆர்வமுள்ள அரசியல்வாதிகள் அல்லது 66 வயதான ஹாசன் போன்ற முதலமைச்சர்களும் அரசியலில் நுழைந்த ஆளுமைகளாக “ஓய்வூதியத்திற்கு பிந்தைய திட்டமாக” பார்க்கப்படுகிறார்கள். ”, நடிப்பில் பல தசாப்தங்கள் முடிந்த பிறகு.
    விளம்பரம்
    புராணத்தின் மடியில் அவர் எப்படி வளர்ந்தார், அவருடன் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது போன்ற ஹாசனுக்கு எம்.ஜி.ஆருடன் நினைவுகள் உள்ளன.*அவரது அரசியல் முழக்கம் "நாளை நமதே" ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறுவார்.*அண்மையில், எம்.ஜி.ஆர்., மற்றும் அவரது கொள்கைகளை AIADMK மறந்துவிட்டதாக கமலஹாசன் குற்றம் சாட்டினார்.*சென்னையில் உள்ள ராமபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் "காலத்தை வென்றவர்" , என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர், "ஏ.டி.எம்.கே சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் நாளுக்கு நாள் சிறியதாகி வருகின்றன. எம்.ஜி.ஆரின் கனவுகளையும் குறிக்கோள்களையும் பகிர்ந்து கொள்கிறேன், எனவே அவரது மரபுக்கு நான் உரிமை கோர முடியும்" என்றார்.
    எம்.ஜி.ஆரின் மரபுக்கு பொருத்தமான எவரையும் AIADMK கடுமையாக எதிர்த்து வருகிறது, அது கூட்டணி பங்குதாரர் பாஜக அல்லது பிரதான எதிர்க்கட்சியான திமுக.
    எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் அடுத்தடுத்து அரசாங்கங்களை அமைத்த அதிமுகவின் இரண்டு சின்னங்கள்.*ஜெயலலிதாவின் மரபுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றாலும், ஒவ்வொரு கட்சியும் இப்போது எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் அரசியலுடன் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகின்றன.
    ஜெயலலிதாவின் உருவம் மட்டுமே அவர் இறக்கும் வரை கட்சியில் முக்கியத்துவம் பெற்றது.*அதன்பிறகு, கட்சி ஒரு அடையாள நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, மேலும் தேர்தல்கள் அதற்கு எளிதானதாக இருக்காது.
    AIADMK அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரை அனைவரும் புகழ்ந்து பேசும் விதத்தில் ஓரளவு மகிழ்ச்சி அடைகையில், இது போட்டியாளர்களுக்கு அரசியல் லாபத்தை தரக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது.
    எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "புதிய கட்சிகளைத் தொடங்கும் மக்கள் கூட எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்பது உண்மைதான்" என்றார்.*கடந்த மாதம், அவரது மரண ஆண்டு விழாவில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது, ​​எம்.ஜி.ஆரின் மரபுக்கு பொருத்தமான எதிரிகளை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.*பா.ஜ.க தனது பிரச்சார வீடியோக்களில் எம்.ஜி.ஆரின் படங்களை பயன்படுத்தியபோது, ​​அவற்றை மோடி மற்றும் கட்சி மாநிலத் தலைவர் எல்.*அவர் கூறினார், "உங்கள் சொந்த தலைவர்களின் படங்களை பயன்படுத்துங்கள். எங்கள் தலைவரை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? எம்.ஜி.ஆர் AIADMK இன் நிறுவனர் ஆவார், மேலும் அவர் எப்போதும் AIADMK மட்டுமே அதிகாரத்தில் இருக்க விரும்புவார்" என்று கூறினார்.
    'எம்.ஜி.ஆர்- நடிகர்கள் முதலமைச்சர் ஆனது' என்ற எழுத்தாளர் அருணன், "எம்.ஜி.ஆரின் உருவத்தை ஏற்றுக்கொள்வது திமுக எதிர்ப்பு அரசியலுக்கு உதவுகிறது. எம்.ஜி.ஆர் கருணாநிதி தன்னைச் சுற்றி ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்க ஒரு 'தீய சக்தி' என்று குறிப்பிட்டார். எனவே பாஜக, கமல்ஹாசன், டி.எம்.கே.யைப் பெற விரும்பும் எவரும் எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்துகிறார். இறந்த ஒரு தலைவரை விமர்சிப்பதன் மூலம் அது ஒன்றும் பெறாது என்பதை டி.எம்.கே புரிந்துகொள்கிறது. ஆகையால், ஆரம்ப நாட்களில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பகிர்ந்து கொண்ட அன்பான மற்றும் வசதியான உறவைப் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். ஏ.டி.எம்.கே. இப்போது ஒரு தீர்வில் உள்ளது, எனவே அதன் நிறுவனர் தலைவரை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. ".........News 18...

  8. #1817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
    எங்களின் இதயமே நீ தானே.
    ================================================== =========
    எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
    ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
    ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
    இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
    “சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
    இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
    “இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
    காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
    படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
    நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
    அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
    # இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
    இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
    #“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
    “லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
    # எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
    இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!.........VRH...

  9. #1818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் லட்சியப் படமான "பல்லாண்டு வாழ்க" 1975 அக் 31 ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. உதயம் புரடொக்ஷன்ஸார் தலைவரோடு இணைந்த 3 வது தயாரிப்பான "பல்லாண்டு வாழ்க" முதல் இரண்டு படங்களான "இதயவீணை" "சிரித்து வாழ வேண்டும்" ஆகியவை 100 நாட்கள் ஓடினாலும் அதனினும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் தலைவரின் கண்களுக்கு உள்ள சக்தியை அனைவரையும் உணர வைத்தது.

    பாடல்கள் அத்தனையும் அருமையான இளமையான மெட்டுக்கள். 'தோ ஆங்கென் பாராகத்' என்ற சாந்தாராமின் படத்தை தழுவி எடுத்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து எடுக்கப்பட்டது. "இதயக்கனி"யின் 72 வது நாளில் வெளியாகிய போதிலும் அதற்கு அடுத்ததொரு வெற்றியை பெற்றாலும் ஒரு சில சென்டர்களில் அபரிமிதமான வசூலை கொடுத்தது எனலாம்.

    நெல்லை பூர்ணகலாவில் 101 நாட்கள் ஓடி மாநகரிலேயே மாற்று நடிகரின் எந்த ஒரு படமும் நெருங்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.நெல்லை பூர்ணகலாவில் 100 நாட்கள் கண்ட ஒரே படம் "பல்லாண்டு வாழ்க" மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 101 நாட்களில் ரூ 260000 ஐ வசூலாக பெற்று அசர வைத்தது.

    மதுரையில் 33 நாட்களிலேயே 3 லட்சத்தை தாண்டி சாதனை செய்தது.
    சென்னையில் தேவிபாரடைஸ்(104) அகஸ்தியா(104) சரவணாவில்(70) வெளியாகி மொத்தம் 278 நாட்கள் ஓடி ரூ 1453287.36 வசூலாக பெற்றது.1975 ம் ஆண்டில் 3வது 10 லட்சம் தாண்டி வசூலான படமாக சாதனை செய்தது.

    தேவிபாரடைஸில் மட்டும் ரூ 793428.80 வசூலானது. அகஸ்தியாவில் 104 நாட்களில்
    ரூ 428927.19 வசூலாக பெற்றது.
    சரவணாவில் 70 நாட்களில் ரு 230931.37 வசூலானது. தேவி பாரடைஸில் வெளியான அய்யனின் அனைத்து படங்களையும் வென்று முன்னணி பெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் 101 நாட்களிலேயே ரூ 260534.80 பெற்று அய்யனின் அனைத்து படங்களையும் ஓவர்டேக் செய்தது "பல்லாண்டு வாழ்க" படத்தின் தனி சிறப்பு..........ksr.........

  10. #1819
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    35 ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவனாக இருந்த போது*
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று எம்.ஜி.ஆர்
    விழா ஒன்றில் திருச்சியை சேர்ந்த ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்

    35 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட பாலகன் இன்று வளர்ந்து 40 வயதை தொட்டு விட்டார். அவரது பெயர் கே. புஷ்பராஜ். எம்.எஸ்சி., பி.எட் படித்து உள்ள இவர் தற்போது ஆசிரியர் பணியை செய்து வருகிறார் காட்டூர் பாத்திமாபுரத்தில் வசித்து வரும் இவரது மனைவி பெயர் ஜூலி மேரி. இந்த தம்பதியினருக்கு மேஷா (வயது5) என்ற பெண் குழந்தையும் ஆண்டோ (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளன. புஷ்பராஜின் தந்தை பெயர் குழந்தைசாமி, தாயார் ஞானசவுந்தரி நிர்மலா மேரி,

    மகிழ்ச்சி நிறைந்த
    இனிய வணக்கம்..........*

  11. #1820
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் சிகர சாதனையின் சிற்பி - 1970ல் பேசும்படம் புகழாரம்
    நமது தலைவர் எம்.ஜி.ஆரின் மிக உன்னத மகோன்னத படைப்பு "அடிமைப்பெண்", வெள்ளிவிழா காவியம், படம்.176 நாட்கள் ஓடியது.இந்த படத்திற்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.இந்த படத்தின் பெருமைகளை நாம் பல கோணங்களில் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த படத்தை எம்.ஜி.ஆர்., ஒருவர் தான் இவ்வளவு சிறப்பாக எடுக்கவும்,இயக்கவும் முடியும் (படம் கே.சங்கர் இயக்கம் என்றாலும் இயக்கியது தலைவரே.ஒவ்வொரு பிரேமும் தலைவர் அனுமதி இல்லாமல் படம் பிடிக்கப்படவில்லை ) என்று இந்திய திரை உலகமே சொன்னது.இந்தப்படம் சென்னையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்துடன் பார்த்துவிட்டு காட்சிக்கு காட்சி தனது பிரமிப்பை தன் குடும்பத்துடன் உணர்ச்சி மேலிட்டு சொல்லிவந்தாராம்.அண்ணனை தவிர வேறு எவரும் இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுக்க முடியாது என்று சொன்னாராம்.
    பேசும்படம் தனது 1970 ஜூலை இதழில் அடிமைப்பெண் படம் பற்றி வானுயர புகழ்ந்து எழுதியது.மக்கள் திலகதின் ஒரு மாபெரும் சாதனை ,புதுமையின் விளைநிலம் புரட்சிநடிகர் என்று புகழ்ந்தது."சிகர சாதனையின் சிற்பி" என்று புகழாரம் சூட்டியதோடு ,அந்த சிறப்புக்குப் பிறப்பு கொடுத்தது அடிமைப்பெண் என்றது.பேசும்படம் புகழுரை இத்துடன் பதிவு செய்துள்ளேன்..........nssm...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •