-
31st January 2021, 06:23 PM
#1831
Junior Member
Diamond Hubber
'டி.வியை off பண்ணு...செல்போனை off பண்ணு...எம்ஜிஆர் படம் பார்க்க தியேட்டருக்கு போவோம்'.... இதுதாங்க எம்ஜிஆர் ரசிகன். ஆனால் இன்று.... 'எம்ஜிஆரின் 110 காவியங்களை கைபேசியில் கண்டுகளியுங்கள்' என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் மக்கள் திலகம் ரசிகர்களுக்கோ இந்த செய்தி ஆச்சரியமாகப்படவில்லை என்பதே உண்மை. தியேட்டரில் அவரது காவியங்களுக்கு மவுசு குறைந்தா விட்டது? கொரோனா பீதி அடங்கியபின் இரண்டு மாதங்களுக்குபின் திறக்கப்பட்ட தியேட்டர்களில் 90 சதவீதம் மக்கள்திலகம் காவியங்களே திரையிடப்பட்டு ரசிகர்கள் ஆதரவைப் பெற்றன. எனவே திரையுலகை மீண்டும் மீட்டது நடிகப் பேரரசர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரே. இன்றைய புதுப்படங்களுக்கு வெற்றிகரமாக 2 வது நாள், 3 வது நாள் என நாளிதழ்களில் விளம்பரம் செய்கிற அவல நிலை உள்ளது. 4 வது நாளிலோ முதலுக்கே மோசம் என்ற நிலையில்... 'எம்ஜிஆர் படத்தை போடு. அப்பத்தான் தியேட்டரை ஓட்ட முடியும்' என்ற நிலை உள்ளது. இன்றுகூட 5 ஊர்களில் நமக்கு தெரிந்து மக்கள் திலகம் காவியங்கள் வெற்றிநடை போடுகிறது. கடந்த 3 மாதங்களில் சேலம் அலங்காரில் நம்நாடு, அடிமைப்பெண் தலா 2 வாரங்கள் ஓடியுள்ளன. திருப்பூரில் அன்பே வா 3 வாரங்கள் ஓடி உள்ளது. திருச்சியில் எங்க வீட்டுப் பிள்ளை 2 வாரம் ஓடி உள்ளது. தமிழகம் முழுவதும் நாம் கணக்கெடுக்க திணறும் வகையில் புள்ளி விபரங்களுடன் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே எண்ணற்ற ஊர்களில் கடந்த 3 மாதங்களாக வசூல் சாதனை படைத்து வருவதை இதே தளத்தில் அவ்வப்போது நாம் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறோம். அதிலும் தொலைக்காட்சிகளில் சுமார் 60 காவியங்கள் மாதம் ஒன்றுக்கு தலா 110 தடவை ஒளிபரப்பாகி வருகிறது. அதையும் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறோம். நிற்க......கடந்த 7 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் காவியம்தான் 190 நாட்கள் சென்னை ஆல்பர்ட், 160 நாட்கள் சத்யம்) அதிக நாட்கள் ஓடிய சாதனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இது மறுவெளியீடுதான். நிற்க. மக்கள் திலகத்தின் ஒவ்வொரு காவியங்களும் முதல் ரிலீஸ் காலத்திலிருந்து அதன் நெகடிவ் உரிமையாளர் மீண்டும் மீண்டும் பிரிண்ட் போட்டு அதன் படப்பெட்டி வைத்திருந்த விநியோகஸ்தர்கள் அந்தக் காவியம் பிலிம்ரோல் சேதமடையும் காலம் வரைக்கும் 70, 50 ஆண்டுக்கணக்கில் திரையிட்டு வாழ்ந்து வருகிறார்கள். நெகடிவ் அழிந்து போய் அல்லது திரையிட முடியாத பல எம்ஜிஆர் காவியங்கள் திரைக்கு வருமேயானால் இன்றும் அமோக வரவேற்பை பெறும். குறிப்பாக மருதநாட்டு இளவரசி, சர்வாதிகாரி, ராஜகுமாரி, மர்மயோகி ஏன் மோகினி, நாம், குமாரி போன்ற காவியங்கள் தியேட்டருக்கு வராதா...என எம்ஜிஆர் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்...அட...60.70 வயது ரசிகர்கள் மட்டும் இல்லீங்க...25, 30 வயதுடைய இளைய தலைமுறை எம்ஜிஆர் ரசிகர்களும்தாங்க. ம்...படகோட்டி காவியம் வராதா என நித்தமும் துடிதுடித்துப் போகிறார்கள் இவர்கள். வேணும்னா பாருங்க...உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வெளியிடும்போது இதெல்லாம் உண்மை என விளங்கும். ரொம்ப சந்தேகம் இருந்தால் இன்று திரையிடப்பட்டுள்ள மேற்கண்ட 5 ஊர் தியேட்டர்களிலும் பக்தி பரவசம், ஆரவாரத்தை காணலாம். எனவே... எனவே... எனவே....போலி தலைவன் போலி நடிகன், போலி ரசிகன்கள்தான் கொரோனாவிலிருந்து தியேட்டரை மீட்டார்கள் என்ற போலி செய்தியை நம்பாதீர்கள். குறிப்பாக கைபேசியில் எம்ஜிஆர் படங்கள் பாருங்கள்...டி.வியில் எம்ஜிஆர் படங்கள்...டிவிடி பிளேயரில் எம்ஜிஆர் படங்கள் பாருங்கள் என கூறி எம்ஜிஆர் ரசிகர்களிடம் காமெடி பண்ணாதீர்கள். எம்...ஜி...ஆரா....கொக்கா? யாருகிட்ட....ம்??????!!! Sml...
-
31st January 2021 06:23 PM
# ADS
Circuit advertisement
-
31st January 2021, 06:24 PM
#1832
Junior Member
Diamond Hubber
இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க!
நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.
Posted by : MG Nagarajan
-
31st January 2021, 06:32 PM
#1833
Junior Member
Diamond Hubber
"பல்லாண்டு வாழ்க"... அருமையான படம். காவியம்...ஒரிஜினல் படத்தில் வார்டன் சாந்தாராம் இறந்துவிடுவார். நமக்கு தலைவர் சாகக்கூடாது. நமக்காக , நம்ப எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி கதை மாற்றப்பட்டது. புரட்சித் தலைவர் எப்பவுமே நம்ம திருப்திக்காக படம் எடுப்பார். எங்களுக்கு அதான்யா வேணும். கல்கியில் படம் வந்த சமயத்தில் நம் தலைவன் ஓலைத் தொப்பியுடன் கூலிங்கிளாசுடன் ஸ்டைலா சிரிக்கும் புகைப்படம் போட்டிருந்தார்கள். ஓட்டை ஓட்டையா இருக்குகிற தொப்பியில் சூரிய ஓளி பாய்ஞ்சு தலைவர் முகத்தில் சூரிய ஒளி புள்ளி புள்ளியா விழும். அருமையான போட்டோ.....நம்பியாருடன் சண்டைக் காட்சி. நம்பியார் குத்தவரும் மண்வெட்டிய காலிலே தேக்கி உதைச்சு தள்ளி, சட்டுனு மின்னல் மாதிரி படுக்கையிலே இருந்து துள்ளி எழுந்து நின்று சண்டைக்கு தயாரா இந்த போஸ் கொடுப்பார். தியேட்டரில் நாற்காலிகள் உடையும்........கடைசியில் ஜீப்புக்கு ஈடு குடுத்து ஓடி வருவாரே. அதுவும் அந்த வயசுல. இதெல்லாம் எந்த நடிகனும் அந்த வயசில் இவ்வளவு சுறுசுறுப்பா நினைச்சுப் பார்க்கமுடியாது. தலைவன் டா........rrn...
-
31st January 2021, 06:34 PM
#1834
Junior Member
Diamond Hubber
கைதி மனோகரோட அம்மா கொடுக்கும் லட்டை மக்கள் திலகம் கண்ணில் தண்ணீரோட அன்போட வாங்கி சாப்பிடுவார்.கிழவியால் வளர்க்க முடியாததால் மனோகரின் 2 குழந்தைகள் இங்கியே இருக்கட்டும் நு சொல்வார். அதுக்கு அந்தக் கிழவி.. ஏழைங்க கஷ்டத்த புரிஞ்சவங்க இந்த உலகத்துல உன்ன மாதிரி யாரும் கிடையாதுப்பான்னு சொல்லும்போது தியேட்டரில் ஆனந்தக் கண்ணீர். இப்ப இந்த சீன் டிவில பாத்தாலும் நெஞ்சு விம்மி எனக்கு அழுகை வரும்..........RRN..........பல்லாண்டு வாழ்க திரைபடத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒரு சன்டை காட்சி. பரங்கிமலை ஜோதி தியேட்டரில் படம் ரிலீஸ். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அன்று மேட்னி ஷோ பார்த்தேன். அப்போது நான் 10 ம் வகுப்பு படிக்கிறேன். தியேட்டரில் அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம், எங்கும் திருவிழாக்கோலம், ஒரே எழச்சி. தலைவர் படத்தை முதல் நாளே பார்த்ததில் ஒரே பரவசம். ஜோதி தியேட்டரில் படம் 99 நாட்கள் ஓடியது. அதன் பிறகு தாம்பரம் வித்யா தியேட்டரில் 2 nd ரிலீஸ் படம் 50 நாட்கள் தாண்டி ஓடியது. அன்றைய நாட்கள் நினைவுகள் பசுமையாக இருக்கிறது........Hayadullah
-
31st January 2021, 06:35 PM
#1835
Junior Member
Diamond Hubber
A unique storyline in which MAKKAL THILAGAM MGR and his favourite and dearest villain actors took part.I heard that V.Shantharam never allows anybody to remake his stories nor his pictures.But when MAKKAL THILAGAM approached him,with the desire to do this character which Shantharam did,he readily accepted it and permitted him.If any other actor would have done this character other than MAKKAL THILAGAM it would have been a fiasco....... Albert Jayakumar Davis
-
1st February 2021, 10:08 AM
#1836
Junior Member
Diamond Hubber
நமது இதய சிம்மாசனத்தில் எம்.ஜி.ஆர் ஏன் வீற்றிருக்கிறார் தெரியுமா ! அவர் அத்துணை புகழுரைக்கும் சொந்தக்காரர் ! !.
1970 ல் சத்யா ஸ்டுடியோவில் பூனா திரைப்பட கல்லூரியில் படித்து தேர்ச்சிபெற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவிக்கும் பொருட்டு ஒரு விழா நடக்கிறது.அந்த விழாவில் என்.டி.ராமாராவ் கலந்துகொண்டு சொன்னார் "எம்.ஜி.ஆர் எதை செய்தாலும் அது வரவேற்கத்தக்கதாகத்தான் இருக்கும்".என்பதோடு எம்.ஜி.ஆர் சேர்ப்பதிலும் செலவழிப்பதிலும் நேர்மையும் நிறைவும் கொண்ட வள்ளன்மை உடையவர் என்றார்.
எம்.ஜி.ஆர் பூனா கலைஞர்களுக்கு அவர் கையொப்பமிட்ட தங்கசங்கிலியை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பூனா கலைக்குழு தலைவர் அஸ்வானி பேசுகையில் லண்டன் ராயல் அகாடமி வாயிலில் எழுதப்பட்ட "நீ சிறந்த கலைஞனாக வேண்டுமாயின் முதலில் நல்ல மனிதனாக மாறு "என்ற வார்த்தைகளின் உண்மைப்பொருளை உள்ளபடியே எம்.ஜி.யாரிடம் பிரதிபலிக்கக் கண்டதாக பிரமித்துக்கூறினார்.
எப்பேர்ப்பட்ட குணக்குன்று நமது எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் பக்த நண்பர்களே அவர் புகழை மறைத்து செயல்படும் எவரையும் நாம் அனுமதிக்கக்கூடாது..........nssm...
-
1st February 2021, 10:12 AM
#1837
Junior Member
Diamond Hubber
மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா !
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா !
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்த தில்லை !என்ற உண்மையை இந்த உலகுக்கு உணர்த்திய உழைக்கும் கரங்களே !
உங்களால் உயர்ந்தவர் கோடி
வாழ்ந்தவர் பல கோடி அதனாலேயே பாசம் கொண்ட நாங்கள் உங்களை
எங்க வீட்டுப் பிள்ளையாக வணங்கினோம் ! இதைக்கண்ட சில புல்லுறிவிகள்
அரசியலிலும் சினிமாவிலும் உங்களை பயன்படுத்தி சொந்தம் கொண்டாட துடிக்கின்றனர் ! அதற்கு உங்கள் செல்வாக்கு ஒன்றே அவர்கள் குறி!அதை தெரிந்து அவர்கள் உங்களை மாதிரி புகழ் பெற நினைக்கின்றனர் !
புலி வேஷம் போட்டவனெல்
லாம் புலியாகி விடமுடியுமா !
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து ஒன்றே இன்று தேர்தலில் வெற்றி பெற உதவும் !
இதை இன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்தால் வெற்றி நமதே !
தேர்தலில் தீய சக்தியை விரட்ட உதய சூரியனை அஸ்தமன சூரியனாக்க இது ஒன்றே வழி ! உணருங்கள் ஆட்சியாளர்களே !
உங்கள் செல்வாக்கு எல்லாம் பூஜியமே !
இந்த சூட்சமத்தை புரிந்து தேர்தல் பணியாற்றுங்கள் !
இனிய இரவு வணக்கம் !
இரத்தத்தின் இரத்தங்களே !
--எம்.எஸ்.சேகர்
கோவை-641103 ..........
-
1st February 2021, 10:14 AM
#1838
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர் உலக சாதனைகள்
உலகிலே அதிக சிலை கொண்ட தலைவர் எம் ஜி ஆர்
உலகிலே அதிக நூல் தனி மனிதன் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில்
உலகிலே நாடாண்ட முதல் நடிகர் எம் ஜி ஆர்
உலகிலே ஒரு நாட்டின் பிரதமர் திறந்த ஒரே நடிகர் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
உலகிலே அதிக செல்வாக்கு கொண்ட நடிகர் அரசியல்வாதி எம் ஜி ஆர் இரு துறைகளிலும்
உலகிலே அதிக நீளம் கொண்ட பெயர் உள்ள இரண்டாவது ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம் ஜி ராமசந்திரன் ரயில் நிலையம் முதல் ரயில் நிலையம் அமேரிக்காவில் உள்ளது
இந்தியாவில் எம் ஜி ஆர்
சாதனைகள்
இந்தியாவின் அத்தனை பட்டங்களையும் பாரத் பத்மஸ்ரீ பாரத்ரத்னா ரூபாநாணயம் பாரளுமன்றத்தில் சிலை ஸ்டாம்பு சாரணர் வெள்ளியானை ரயில்நிலையம் என அத்தனையும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் எம் ஜி ஆர்
ஒருநதியையே தன் நாட்டில் பாயவைத்த ஒரே தலைவர் எம் ஜி ஆர்
ஐ நா பாராட்டிய ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆரை
அமேரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்திய ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆர்
இந்திய யுத்த நிதி முதலில் கொடுத்த அதிக தொகை அதிகம் கொடுத்த முதல் இந்திய குடிமகன் எம் ஜி ஆர்
வெளி நாட்டில் பிரான்ஸில் சிலை கொண்ட ஒரே இந்திய தலைவன் எம் ஜி ஆர்
டெல்லி செங்கோட்டை கொடி தாழ்த்து கட்டி இந்தியா முழுவதும் விடுமுறை விட்டு இந்தியா மரியாதை செலுத்தியா ஒரே மாநில முதல்வர் எம் ஜி ஆர்
ஆசியாவின் பெரிய பஸ் நிலையம் எம் ஜி ஆர் பஸ் நிலையம்
ஒரு துளி நீர் பங்கிட முடியாத அரசியல் நடுவில் ஒரு நதியை கிருஷ்ணா நதியை தமிழகத்தில் பாயவைத்தார் எம் ஜி ஆர் இது எம் ஜி ஆரால் மட்டுமே முடியும்
இந்தியாவில் மக்களின் அதிக செல்வாக்கை அன்பை பெற்ற ஒரே முதல்வர் எம் ஜி ஆர்
வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்.........Arm.........
-
1st February 2021, 10:17 AM
#1839
Junior Member
Diamond Hubber
எங்களின் நிரந்தர புகலிடமே:
தான் முதலமைச்சராக இருந்து எந்த ஒரு திட்டங்களுக்கும் தன் பெயரை முன்னிலை
படுத்தாத ஒரே தலைவர்.
இவரிடம் உங்கள் பெயரில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் திறக்கப் படுகிறது என்று
கூறியவர்களிடம் நாட்டில் எத்தனையோ அறிஞர் பெருமக்கள் இருக்கும்போது என் பெயர் வேண்டாம் என அன்போடு மறுத்தார்.
மீண்டும் அவர்கள் வலியுறுத்தி ஒரு தேதியை தேர்ந்தெடுத்தனர்.அந்த தேதிக்கு முன்னமே
தன் மூச்சு நின்றது,அப்படிப்பட்ட தனிப்பிறவி எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
மற்ற முதல்வர் என்று சொல்லிக்கொண்டு
அனைத்து திட்டங்களையும் தங்கள் பெயரிலே தீட்டிக் கொண்டவர்களை நாங்கள் என்றுமே பொருட்படுத்துவது இல்லை.
எங்கள் தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்,
எங்கள் இறைவன் என்றால் அது எம்.ஜி.ஆர்,
எங்கள் கோவில் என்றால் அது ராமாபுரம்,
மற்றும் மெரினாவில் தாமரையாய் வீற்றிருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர் மட்டுமே....
என்றும் அவருக்கு ரசிகர்களாக,பக்தர்களாக நாங்கள் நிரந்தரமாக இருப்போம்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨...gsn...
-
1st February 2021, 10:18 AM
#1840
Junior Member
Diamond Hubber
நாம் கழகத்தின் உண்மை தொண்டர்கள்.1972ல் கழகம் துவக்கி 1973ல் திண்டுக்கல்,பின்னர் கோவை இடைத்தேர்தல்களில் உழைத்த உழைப்பு.பின்னர் 1977,1980,1984 தேர்தல்களில் உழைப்பு.ஆதரவு.தேர்தல் பணி.பின்னர் தலைவர் 1987ல் தெய்வமானார்.பின்னர் இந்த கழகத்தை தொடர்ந்து நடத்திட ஜானகி அம்மையார் தலைமை ஏற்றார்.எம்.ஜி.ஆர்-ஜானகி அசல் அக்மார்க் ஜோடி.அப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் ஒரு தரப்பு எதிர்ப்பில் இருந்தது.அது ஜானகி அம்மையார் முதல்வராக பொறுப்பேற்றதும் அந்த காழ்ப்பு கழகத்தை உடைத்தது.உடைத்தது யார் ??? இரட்டை இலை பறிபோனது.ஜானகி அம்மையார் அசல் அக்மார்க் துணைவியாதலால் கழகத்தை ஒன்றிணைத்து பறிகொடுத்த இரட்டை இலை மீண்டும் பெற கடிதம் கொடுத்து,கழகம் வளர்ந்திட ஒரு கோடியும் கொடுத்தார்.இது கழக வரலாறு.ஆம்.ஜானகி எம்.ஜி.ஆர் நாடாண்ட முதல் முதல்வர் பெண்மணி.அ.தி.மு.க வின் முதல் பெண்மணி முதல்வர்.இந்த பெண்மணியின் பிறந்தநாளை அரசு விழாக அறிவிக்க கோரி நாம் தார்மீக அடிப்படையில் மட்டுமே முயன்று வருகிறோம்.குமுதம் இதழ் கூட ஜானகி அம்மையார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்று விரும்பி சொல்லியுள்ளது.ஆனால் 2வது பெண் முதல்வருக்கு அரசு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.ஜானகி அம்மையார் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லையே.இரட்டை இலை திரும்பப்பெற அவர்தான் மூலம். நமது கோரிக்கையை அரசு ஏற்று அறிவிப்பு செய்யவேண்டும்.அமீரகத்தில் இருக்கும் நமது உண்மை எம்.ஜி.ஆர் பக்தரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பதிவு செய்துள்ளார்கள்.
-ஒரு சாமானிய 1972அ.தி.மு.க தொண்டன்....
Bookmarks