Page 194 of 210 FirstFirst ... 94144184192193194195196204 ... LastLast
Results 1,931 to 1,940 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1931
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��mgr முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.
    ��காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார்.
    அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது.
    ��உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை.
    ��மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார்.
    �� பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது
    ��. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட பொன்மனம் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
    �� திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார்.
    ����மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை.
    ��கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார்
    ��#எட்டாவது_அதிசயம்_எம்ஜியார். செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடப்பிலும் வாழ்ந்தார் வாத்தியார்...இன்றய நடிகர்களுக்கு சமர்ப்பணம் இந்த பதிவு #வாழ்க_எம்ஜியார்_புகழ் .....
    ��இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...��������

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1932
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தான் காதலித்த தமிழ்மொழியின் சிறப்பினை, இனிமையை உலகமெல்லாம் அறிய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை 1981 ஆம் ஆண்டு மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதுவே உலகத் தமிழ் மாநாட்டிலேயே தலைசிறந்த முதல் மாநாடாக என்றென்றும் திகழ்கிறது. பாரதி கண்ட புதுமை தமிழும் இவரே. தமிழ் தாய் பெற்றெடுத்த முதல் தலைமகனும் இவரே.தமிழ் மொழியின் சிறப்பை உலகம் அறிய தமிழறிஞர் மன்றம் ஒன்றை நிறுவ, யாம் முயற்சி எடுத்துள்ளோம் என்பதை ராஜராஜன் திரைப்படத்தில் எம்ஜிஆர் சொல்லுவார். அதுபோல் நடத்திக் காட்டிய ஒரே பச்சை தமிழன் எம்ஜிஆர் தான். இப்படி எல்லா திரைப்படங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களை அருமையாக எடுத்துக்காட்டிய ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். இப்படி எத்தனையோ எண்ணற்ற சேவைகள் தமிழுக்காக எம்ஜிஆர் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவியவர் எம்ஜிஆர். இது சாதாரணமானதல்ல. இன்று அதே தமிழ் பல்கலைக்கழகத்தில் தான் உலகத் தமிழ் ஆராய்ச்சிகள் அத்தனையும் செய்யப்படுகிறது. தாய் தமிழை போற்றி வணங்கிய தாய் மனம் கொண்ட தேவன் எம்ஜிஆரை என்னாலும் போற்றி அவர் வழி நடப்போம்....Mnkr

  4. #1933
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *"அன்பே வா" ������*
    The 1961 American romantic comedy film *Come September* was adopted by A.C
    Trilogchander... screenwriter for AVM Productions, for the screenplay of Anbe Vaa.

    Tirulokchandar's salary was ₹ *70,000.*

    Aaroor Dass wrote the film's dialogues and S. P. Muthuraman worked as an assistant director. S.
    *Maruti Rao, R. G. Gope* and *A. K. Shekar* were in charge of the cinematography, editing, and art direction, respectively. *A. K. Chopra* was in charge of the film's choreography
    and *Raghuram* , who later went on to become a successful choreographer in Indian cinema, worked as an assistant choreographer to him. *S.P.முத்துராமன் -* Asst.Director.

    Ramachandran gave a call sheet of 72 days. MGR's Salary was
    ₹ *325,000.(* MGRன் வயது 48).
    Final expenses for making this film was
    $ *6 Million dollars.*
    The exchange rate in 1966 was 4.79 Indian rupees (₹) per 1 US dollar (US$).
    The sound effect of the horses' footfall in "Rajavin Paarvai" was created by *Meesai* *Murugesan.* The song " *Once A Pappa"* belongs to Baila, a Sri Lankan musical genre.

    *Lead actors*
    M. G. Ramachandran as J. Balasubramaniam (JB/Balu)
    B. Saroja Devi as Geetha

    *Male supporting actors*
    S. A. Ashokan as Sekar
    Nagesh as Ramaiah
    T. R. Ramachandran as Punyakodi
    P. D. Sambandam as Krishnaiah

    *Female supporting actors*
    Manorama as Kannamma
    T. P. Muthulakshmi as Pappamma
    Madhavi as Mary
    M. S. S. Bhagyam as Govindhammal.

    Famous writer " *சாவி"* acted as an extra in the song " புதிய வானம், புதிய பூமி".
    MGR recommended J. *Jayalalithaa* for the role of the female lead Geetha, but it eventually went to B. Saroja Devi.She was paid ₹ *90,000* for acting in the film.Her *costume design* was done by the Anna Salai-based *Indian* *Silk House.*
    As of February 2010, the costumes that Ramachandran used in the film are still preserved at AVM Studios. As of 2017, the MGTB car driven by Ramachandran in the film is preserved at the Madras Heritage Club's Vintage cars display. In August 2016, the *Studebaker* President car driven by Saroja Devi in the film was on display at the 14th annual exhibitions held at Don Bosco Matriculation Higher Secondary School, Chennai.
    Anbe Vaa attained cult status in Tamil cinema,and was one of the first South Indian films to be shot in Shimla.
    1966 முதல் இன்றுவரை "அன்பே வா" ஏறத்தாழ
    ₹ 1400 கோடிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்.
    MSV வெளியிட்ட வட்ட வடிவிலான ( CD Shaped) *LP Vinyl Record* ஒன்றின் இன்றைய விலை Rs.8000.
    அன்று.. *மதுரை தங்கம்* Theatreல்( seating capacity: 3000), " அன்பே வா" *House Full* ஆக ஓடியது...ஒரு.. unbreakable Record.
    ^^^^^^^^^^^^^^^.........Kri.Mur

  5. #1934
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    #மக்கள்_திலகம்
    மன்னாதி மன்னன்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுக்கிழமை_காலை_வணக்கம்...

    புரட்சி தலைவர்வரின் திரைப்படங்கள்
    பற்றிய இந்த தொடரில் நேற்று புரட்சி தலைவர் கதையின் நாயகனாக நடித்த
    ராஜகுமாரி திரைப்படம் பற்றி பார்த்தோம்
    கதாநாயகனாக நடித்த போதும் அதன் பிறகு மீண்டும் கதாநாயகன் வேடம் பெரிதும் தேடி வரவில்லை அதற்கு பதிலாக கதாபாத்திரம் வேடம் தான் வந்தது தனது 15வது படத்தில் கதாநாயகனாக நடித்த பின்பு மீன்டும்
    தனது 21வது படத்தில் தான் கதாநாயகனாக நடித்தார் அதற்கு இடைப்பட்ட காலத்தில்
    பைத்தியகாரன்,அபிமன்யு, ராஜமுக்தி, மோகினி, ரத்னகுமார் போன்ற படங்களில் குடும்ப சூழ்நிலை காரணமாக நடித்தார்...

    #மருதநாட்டு_இளவரசி’ – புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஹீரோ அங்கீகாரம் தந்த திரைப்படம்
    அதை பற்றி இன்று பார்ப்போம்..!

    சற்று நீண்ட பதிவாக இருக்கும் ஆதலால் மன்னிக்கவும் முடிந்த வரை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று தான் இந்த பதிவு ஆனால் இந்த படத்தில் இருந்து தான் புரட்சி தலைவர் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது அதனால் படத்தை பற்றி பல செய்திகள் சொல்லியாக வேண்டும் என்பதால்...

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு.

    இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக உயர்ந்து விளங்குகிறார்.

    தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராத நிலையில், ஹீரோவாக நடிப்பதைத் தொடர்வதா வேண்டாமா என்று அவர் குழம்பிய தருணமது. அந்தக் காலகட்டத்தில் அவரது திசையைத் தீர்மானித்த திரைப்படங்களில் முதன்மையானது ‘மருதநாட்டு இளவரசி’.

    அதன்பின்னர் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே என்று பல சூப்பர்ஹிட்களை அவர் தருவதற்கு அடித்தளமிட்ட படமும் இதுதான்.

    கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்தபிறகு, எம்ஜிஆர் தனக்கான பார்முலாவை வகுத்துக் கொண்டார். அதில் சிறுதுளி மருதநாட்டு இளவரசி திரைப்படத்திலேயே தெரியும்.

    1937இல் ‘சதிலீலாவதி’ திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து தன் திரை வாழ்வைத் துவக்கினார் புரட்சி தலைவர் எம்ஜிஆர். அதன்பின்னர் தக்*ஷயக்ஞம், மாயா மச்சீந்திரா உட்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

    இடைப்பட்ட காலத்தில் ‘சாயா’ என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்து அது பாதியிலேயே கைவிடப்பட்டது.

    சிறு வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது.

    சாயாவின் இயக்குனராகப் பணியாற்றிய நந்தலால், ‘தொழிலை நேசித்துச் செய், எந்த நேரத்திலும் அது உன்னைக் கைவிடாது’ என்று அப்போது எம்ஜிஆருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு, அதனை ஒருபோதும் தலைவர் மறக்கவில்லை.

    ஒருவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாதியில் நின்றுவிட்டால் மற்றொரு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த காலமது.

    (தினமலர் வாரமலர் இதழில் வெளியான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர்.)

    நாயகனாக நடித்தபிறகு குணசித்திர வேடம், வில்லன் பாத்திரம் போன்றவற்றில் நடிப்பது அக்காலத்தில் சகஜமான விஷயமல்ல
    தனக்கு உடன்பாடில்லாத போதும், குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பல படங்களில் சிறுவேடங்களில் தலைகாட்டினார் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் நாயகனாக நடிக்கப் பேருதவி செய்தவர் இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பின்னாட்களில், அவரது இசையமைப்பில் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே உட்படப் பல படங்களில் எம்ஜிஆர் பணியாற்றினார்.

    மீண்டும் கதாநாயகனாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் நாயகன் ஆவதற்குத் துணை புரிந்தன மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘மந்திரிகுமாரி’ மற்றும் ஜி.கோவிந்தன் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘மருதநாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்கள்.

    இவ்விரண்டிலும் தனது சிறப்பம்சம் என்னவென்று வெளிக்காட்டினார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.

    எம்ஜிஆரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து படம் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை பட அதிபர்களிடம் ஏற்படுத்திய திரைப்படம் ‘மருதநாட்டு இளவரசி’.

    ‘நான் ஏன் பிறந்தேன்’ நூலில், தன் திரையுலக வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களில் இரண்டாவதாக இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர். அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.

    ‘மந்திரிகுமாரி’ திரைப்படம் மு.கருணாநிதியின் எழுத்தில், எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்தது.

    அதே நேரத்தில், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தயாரானது ‘மருதநாட்டு இளவரசி’.

    வாள் சண்டையிடுவது, கேமிரா நோக்கி வசனம் பேசுவது, திரையில் காதலைப் பொழிவது என்று அக்காலத்து நாயகர்களுக்கான இலக்கணங்களை இப்படத்தில் பூர்த்தி செய்தார் எம்ஜிஆர்.

    #மருதநாட்டு_இளவரசி_படத்தின்_கதை #இதுதான்.

    குறிஞ்சி நாட்டு மன்னருக்கு சிங்காரி, சித்ரா என்று இரண்டு மனைவிகள். சிங்காரியின் வாரிசை அரியணையில் அமர வைக்க, அவரது சகோதரர் துர்ஜயன் சித்ராவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.

    இதனை அறிந்து அரண்மனையை விட்டு வெளியேறும் சித்ரா, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அக்குழந்தையை அவர் பிரிகிறார்.

    கார்மேகம் என்பவரிடத்தில் காண்டீபன் எனும் பெயரில் வளர்கிறது சித்ரா பெற்றெடுத்த குழந்தை.

    25 ஆண்டுகள் கழித்து, மருத நாட்டுக்குத் தன் நண்பனுடன் செல்கிறார் காண்டீபன். அந்நாட்டின் இளவரசி ராணியைச் சந்திக்கிறார்.

    சாதாரண பிரஜையாக காட்டிக்கொள்ளும் ராணிக்கும் காண்டீபனுக்கும் இடையே காதல் மலர்கிறது.

    இதனிடையே, மருதநாட்டு இளவரசியை குறிஞ்சி நாட்டு இளவரசன் ரவுத்திரனுக்கு மணமுடிக்கத் திட்டமிடுகிறார் துர்ஜயன். அவரது சதியை முறியடித்து, ராணியின் கைபிடிக்கிறார் காண்டீபன்.
    அவர்தான் குறிஞ்சி நாட்டின் உண்மையான வாரிசு என்று தெரிய வருவதுடன் படம் முடிவடைகிறது.

    படம் ஓடத் தொடங்கி 27 நிமிடங்களுக்குப் பின்னரே புரட்சி தலைவர் எம்ஜிஆரின் அறிமுகம் நிகழ்வது, அக்காலத்தில் முன்கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆனாலும், பின்பாதி முழுக்க நம் தலைவர் எம்ஜிஆர் ராஜ்ஜியம்தான்.

    வழக்கமான அரச கதை என்றாலும், அழகு தமிழில் அமைந்த வசனங்கள் தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றன. அதற்கேற்றவாறு வசனங்களை தெளிவாக உச்சரித்து நடித்திருந்தனர் மருதநாட்டு இளவரசியில் நடித்த நடிகர் நடிகைகள்.

    எழுச்சியூட்டும் வசனங்களைக் கூட இயல்பாக வெளிப்படுத்தித் தனது நடிப்பு பாணி வேறு என்று உணர்த்தினார் எம்ஜிஆர். தன் ஆதர்சமாக எம்.கே.ராதா போன்ற நாயகர்களை அவர் போற்றியதும், ஹாலிவுட் திரைப்படங்களின் மாபெரும் ரசிகனாகத் திகழ்ந்ததும் கூட இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம்.

    புளிமூட்டை ராமசாமியை இளவரசன் ரவுத்திரனாக நடித்தவர் தாக்க, அதனைத் தடுக்கும் எம்ஜிஆர் ‘யாராவது தும்மினால் துள்ளிவிழுவது அவனது பிறவிக்குணம்’ என்பார். இதுவே இப்படத்தில் அவரது முதல் வசனம்.

    பாகவதர் டைப் தலைமுடி, ஸ்லிம்மான உடல்வாகு, இயல்பான உடல்மொழி என்று வித்தியாசமான எம்ஜிஆரை இதில் பார்க்க முடியும். தனக்கென்று தனி பாணியை கைக்கொண்ட பிறகு, அவர் இம்மூன்றையும் துறந்தார்.

    ராஜகுமாரி (1947), அபிமன்யூ (1948) படங்களுக்குப் பின் மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி படங்களில் கருணாநிதியின் வசனங்களைத் திரையில் ஒலித்தார் எம்ஜிஆர்.

    இதே காலகட்டத்தில் கருணாநிதி கைவண்ணத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி வசனம் பேசியதற்கும், இப்படங்களில் எம்ஜிஆர் வசனங்களை உச்சரித்த பாங்கிற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

    நாடக மேடை அனுபவம் உண்டு என்றாலும், சினிமா எனும் கலையின் நுட்பத்தைத் தனக்கேற்ற வகையில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வரித்துக் கொண்டார்.

    இந்த வித்தியாசம்தான் எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் சிகரங்கள் தமிழ்த் திரையின் போக்கைத் தீர்மானிக்கக் காரணமாக அமைந்தது
    என்றால் அது மிகையாகாது. .

    திரையில் மலர்ந்த கொள்கைகள்!
    “மக்கள் எல்லோரும் சமமாக வேணும்; ஏற்றத்தாழ்வு மறைந்தாகணும்” என்று தொடங்கும் பாடலில் சமூகநீதி தொடர்பான பல்வேறு கருத்துகள் மருத நாட்டு இளவரசி படத்தில் இடம்பெற்றிருக்கும்.

    இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், தான் குறிஞ்சி நாட்டு இளவரசன் அல்ல என்றும், அந்நாட்டு மக்களின் தலைவன் என்றும் அவர் பேசும் வசனம் இடம்பெற்றிருக்கும். தனது திரைப்பாதை எதுவென்று அறியாத நிலையில், அவர் இவ்வாறு நடித்தது நிச்சயம் ஆச்சர்யம்தான்.

    பிற்காலத்தில் தன் படங்களில் இது போன்ற கருத்துகள் இடம்பெறுவதை எம்ஜிஆர் வழக்கமாக்கிக் கொண்டார் என்பதே இதன் சிறப்பைப் பறைசாற்றுகிறது.

    மருதநாட்டு இளவரசி டைட்டில் காட்சியில் எம்.ஜி.ராம்சந்தர், வி.என்.ஜானகி என்றே இருவரது பெயர்கள் இடம்பெற்றன.

    எம்ஜிஆர் என்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அக்காலத்தில் தன் பெயர் இடம்பெற அவர் விரும்பவில்லை. காரணம், அந்த காலத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் புகழ்வாய்ந்த நடிகராய்த் திகழ்ந்தார்.

    ராமச்சந்திரன் என்ற பெயரில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் இன்னொருவர்.

    எனவே, தனது பெயர் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று ராம்சந்தர் என்று மாற்றிக்கொண்டார் புரட்சி தலைவர் எம்ஜிஆர். ராஜகுமாரி தொடங்கி கூண்டுக்கிளி வரை இது தொடர்ந்தது.

    ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்தே அவரது பெயர் எம்.ஜி.ராமசந்திரன் என்று டைட்டிலில் இடம்பெறலானது.

    ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் ஆகிய படங்களில் ஜானகி அம்மையாரும் எம்ஜிஆரும் இணைந்து நடித்துள்ளனர். எம்ஜிஆர், அவரது சகோதரர் சக்ரபாணி, கருணாநிதி உட்படச் சிலர் இணைந்து ‘நாம்’ படத்தைத் தயாரித்தனர்.

    இப்படத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஜானகி அம்மையார். 1962ஆம் ஆண்டு ஜானகி அம்மையாரைத் திருமணம் செய்தார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.

    மகாதேவி உட்பட எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. கட்டுடலும் கரகரப்பான குரலும் மிரட்டும் கண்களும் தெளிவான உச்சரிப்பும் இவரது சிறப்பு.

    இப்படத்தில் குறிஞ்சி நாட்டு மன்னராக நடித்திருந்தார் வீரப்பா.

    பத்மினியின் ஸ்லிம் தோற்றம்!

    இப்படத்தின் தொடக்கத்தில் வரும் ‘வீரத்தாயைப் பணிவோம்’ பாடலின் நடனக் காட்சியை வடிவமைத்தவர் காமினிகுமார் சின்ஹா. இப்பாடலில் லலிதா, பத்மினி இருவரும் தோன்றி நடனமாடியிருப்பர்.

    ஸ்லிம் அழகுடன் பத்மினி தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று.

    மைசூரிலுள்ள நவஜோதி ஸ்டூடியோவில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.

    இப்படத்தில் எம்.எம்.மாரியப்பா, பி.லீலா, கே.வி.ஜானகி ஆகியோர் பாடல்களைப் பாடினர். ‘நதியே நீராழி’, ‘இந்த இன்பமே தந்த பைங்கிளி’ பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இருக்கும் என எண்ணுகிறேன்... ஏனென்றால் இப்போது கேட்க்கும் போதே பாடல் மனதில் பதிகின்றதே...

    சிறைபிடிக்கப்பட்ட ஜானகியை மீட்டுவர, எம்ஜிஆரும் சி.கே.நாகரத்னமும் நடனமாடும் காட்சியொன்று உண்டு. அந்த இடத்தில் பாடலுக்குப் பதிலாக வெறும் இசை மட்டுமே இடம்பெற்றிருந்தது இப்போதும் நம்மைக் கவரும்.

    மந்திரிகுமாரி, மர்மயோகி பெற்ற வரவேற்பை, மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மருதநாட்டு இளவரசி திரைப்படம் பெறவில்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
    ஆனால், எம்ஜிஆரை நாயகனாக வைத்துப் படமெடுக்கலாம் என்ற எண்ணத்தைப் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியது இத்திரைப்படம்.

    ‘பராசக்தி’ திரைப்படம் சிவாஜி என்றொரு சகாப்தத்தை அடையாளம் காட்டுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மற்றொரு சக்தியாக மாறிய எம்ஜிஆரை அடையாளம் காட்டிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ‘மருதநாட்டு இளவரசி’.

    படத்தின் பெயர்: மருதநாட்டு இளவரசி, தயாரிப்பு: கோ.கோவிந்தன், படத்தொகுப்பு, சீனாரியோ,
    இயக்கம்: காசிலிங்கம்,
    கதை, வசனம்: மு.கருணாநிதி
    கலை இயக்கம்: ஓ.ஆர்.எம்பாரய்யா, பாடல்கள்: சி.ஏ.லட்சுமணதாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம்,
    இசை: எம்.எஸ்.ஞானமணி,
    ஒளிப்பதிவு: ஜி.துரை,
    ஒலிப்பதிவு: வி.சி.சேகர்,
    லாபரட்டரி: கே.சீதாராம்,
    பிராசஸிங்: ஹரிகிருஷ்ணன்.

    நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, புளிமூட்டை ராமசாமி, சி.கே.சரஸ்வதி மற்றும் பலர்.

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.........

  6. #1935
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நாடோடி மன்னனி"ன் வெற்றி அய்யனையும் கைஸ்களையும் நிலைகுலைய வைத்தது எனலாம்.
    அடுத்து தலைவர் நடித்த சமூகப்படம் சரியாக போகவில்லை என பரவலாக பேச்சு எழுந்ததும் அய்யன் சற்று ஏளனமாக அண்ணே சரித்திரப் படத்தில் நடிப்பதை விட்டு விட்டு சமூகப்படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பொதுவான இடத்தில் கேள்வி கேட்டதும் தலைவருக்கு சங்கோஜமாகி விட்டது.

    உடனே அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க முனைந்தார். அதுதான் சின்ன அண்ணாமலை தயாரிக்க "திருடாதே" படம் உருவான விதம்.. வெறும் 7000 ரூ வைத்து தொடங்கப்பட்ட படம், எம்ஜிஆர் கால்முறிவினால் படப்பிடிப்பு தாமதமானதும் பைனான்ஸ் பிரச்சினையில் படம் தேக்கமடைவதை விரும்பாத எம்ஜிஆர் படத்தை a l s க்கு விற்று சின்ன அண்ணாமலையை பைனான்ஸ் சிக்கலில் இருந்து மீட்டு
    மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் போது சரோஜாதேவி மிகவும் பிஸியான நடிகையாகி நிறைய படங்களில் கமிட் ஆகியிருந்தார்.

    ஒரு சில நேரங்களில் சரோஜாதேவியின் கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து நடித்துக் கொடுத்தார். அதன் பின்னர்தான் எதிர்காலத்தில் இப்படியொரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் நடிகைகளை முதல் படத்தில் புக் பண்ணும் போதே 5 வருட காண்ட்ராக்ட்டில் கையெழுத்து வாங்கினார்.

    அதில் மஞ்சுளா தீயசக்தியின் மேற்பார்வையில் காண்ட்ராக்ட்டுக்கு துரோகம் செய்தார். ஆனால் லதா நல்ல ஒத்துழைப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டு நீண்ட நாள் தலைவரின் நாயகியாக வலம் வந்தார். "திருடாதே" மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    எளிமையான முறையில் சமூக நீதியை போதித்து எந்த வித நட்சத்திரப்பட்டாளமும் இல்லாத சூழலில் வெற்றிக் கனியை சுவைத்ததுடன் விநியோகஸ்தர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை தந்தது.

    ஆனால் "திருடாதே" கூட வந்த அய்யனின் நட்சத்திரப்பட்டாளம் நிறைந்த படத்தை சொந்தத் தியேட்டரில் வெள்ளி விழா ஓட்டினாலும் "திருடாதே" வசூலை எட்டிப்பிடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறியதை விநியோகஸ்தர்கள் போட்டு உடைத்து விட்டனர்.

    அய்யன் படத்தின் வெற்றி என்ற மாயக்கோட்டை தகர்த்து வெள்ளிவிழா ஓடாவிட்டாலும் "திருடாதே" படத்தின் வெற்றி திக்கெட்டும் பரவியதால் எம்ஜிஆரின் மார்க்கெட் எங்கோ பறக்க ஆரம்பித்தது. அய்யன் மீண்டும் நட்சத்திரப் படடாளங்களை கூட்டணி அமைத்தாலும் எம்ஜிஆர் என்ற தனிமனித சக்தியை வெல்ல முடியாததால் குறுக்கு வழியில் படத்தை ஓட்ட ஆரம்பித்து வெற்றி என பொய்முகம் காட்டினர்.

    1961 ல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை "திருடாதே" பெற்றது. அடுத்த இடத்தில் "தாய் சொல்லை தட்டாதே" பெற்றதுடன் கூட வந்த தேச பக்தி படத்தை தோல்வியடையச் செய்தது சற்று வருத்தத்தை தந்தாலும் அது நம் தவறல்ல. தவறான நேரத்தை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளரின் தவறு. இருப்பினும் அந்த நேரத்தில் சுமார் 7 லட்ச ரூபாயை சேதம் செய்து விட்டது.

    எளிமையான படஜெட்டில் எடுக்கப்பட்ட "திருடாதே" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" போன்ற சமூகப் படத்தின் வெற்றி பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் நடித்த அய்யனின் பெரிய பட்ஜெட் படங்களை ஓட ஓட விரட்டியது. தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்பதை "திருடாதே" சமூகப்படத்தின் வெற்றியின் மூலம் நிரூபித்து காட்டினார் மக்கள் திலகம் தாய் சொல்லை தட்டாதே தொடர்ந்து 100 காட்சிகள் hf ஆக ஓடியது. ஆனால் அய்யனின் வெள்ளி விழா படங்கள் தொடர் hf ஆனதில்லை.
    இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அய்யன் படங்களின் வெற்றியின் ரகசியத்தை..........ksr.........

  7. #1936
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஐ #லவ் #யூ #வாத்தியாரே

    Happy Valentine's Day Wishes

    காதலுக்கு வயது தடையல்ல..
    ஏனெனில் 'காதல்' என்பது வயதைப் பற்றிய விஷயமல்ல. மனதைப் பற்றிய விஷயம்...

    இந்த ரீதியில் நன்கு ஆராய்ந்தோமானால் நம் புரட்சித்தலைவனே காதல் தலைவனாகிறான்...
    ஏனெனில் மனதையும், வயதையும் கடைசி வரை கட்டுக்குள் வைத்திருந்தவர் நம்ம வாத்தியார் தாங்க...

    திரைப்படத்துறையில்
    காதல் மன்னன் ஜெமினி கணேசன் முதல்
    காதல் இளவரசன் கமல் வரை கடைசி வரை... அதாவது ஒரு லெவலுக்கு மேல் காதல் காட்சியில் பரிமளிக்க முடியவில்லை. அவர்களின் உடல்வாகும், வயோதிகமும் காரணங்களாக இருக்கலாம். இனிமேல் காதல் காட்சியில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்ற லேசான அச்சமும், தன்னம்பிக்கையும் கூட காரணங்களாக இருக்கலாம்...

    ஆனால் எதற்குமே அசராமல், வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருப்கும் போதும் மிகவும் துடிப்பாக காதல் காட்சியில் பட்டையைக் கிளப்பியது நம்ம வாத்தியார் தாங்க...! யாராவது மறுத்துச் சொல்லமுடியுமா ???

    எந்த அளவு உடலையும் வயதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்னு நான் சொல்லத் தேவையில்லை.
    60 வயதில் காதல் காட்சியில் நடிப்பதற்கு எந்த அளவு துணிவும், தன்னம்பிக்கையும் வாத்தியாருக்கு இருந்திருக்கு பாருங்க..(இந்த தில் உலகத்துல வேற யாருக்கு இருக்கமுடியும்???)

    இதில் ஹைலைட் என்னன்னா...ரசிகர்களும் ஏகோபித்தமாக ஆதரிச்சாங்க வாத்தியாரை...

    தனது ஆரம்பகால படங்களிலுள்ள காதல் காட்சிகளை விட தனது கடைசி கட்ட திரைப்படங்களில் தான் காதல் காட்சிகளில் உற்சாகமாகவும், ஹைஸ்பீடாகவும் தூள் கிளப்பியிருப்பார்...

    உதாரணத்திற்கு,
    உரிமைக்குரல், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், இதயக்கனி, நேற்று இன்று நாளை, உ.சு.வா, நாளை நமதே போன்ற திரைப்படங்களில் (பட்டியல் நீளும்) காதல் காட்சிகளில் வாத்தியார் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருந்ததுன்னு நா சொல்லவா வேணும்...

    வாத்தியாரே
    வீரத்துக்கும் நீ தான்
    காதலுக்கும் நீ தான்

    இந்த உலகத்துல "#வாலன்டைன்ஸ் #டே #கதாநாயகன்னு " சொன்னா அது நீ ஒருத்தரு தான் வாத்தியாரே.........BSM...

  8. #1937
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    மன்னாதி மன்னன்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_திங்கட்கிழமை #காலை_வணக்கம்...

    புரட்சி தலைவர் அவர்களின் திரைப்படங்களின் திரை வரிசையில் மூன்றாவது முறையாக கதையின் நாயகனாக நடித்த ஒரு மாபெரும் வெற்றி சித்திரம் பற்றி இன்று பார்ப்போம்...

    அந்த வெற்றி சித்திரம் தான்
    மந்திரி குமாரி மருதநாட்டு இளவரசி படத்திற்கு பிறகு எடுக்கபட்ட ஒரு வெற்றி காவியம் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் 22 வது திரைப்படம்..

    மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது குண்டலகேசியைத் தழுவி
    மு.கருணாநிதி எழுதிய ஒரு நாடகமாகும். நாடகத்தைப் பார்த்த படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அதைப் படமாக்க விரும்பி, அதற்குத் திரைக்கதை, வசனத்தை
    மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து தயாரித்தார்.
    எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

    இயக்கம்
    எல்லிஸ் டங்கன்
    டி. ஆர். சுந்தரம்
    கதை
    மு. கருணாநிதி
    நடிப்பு
    எம். ஜி. இராமச்சந்திரன்
    மாதுரி தேவி
    எம். என். நம்பியார்
    எஸ். ஏ. நடராஜன்
    ஜி. சகுந்தலா
    வெளியீடு
    1950

    தளபதி வீரமோகனாக தலைவர் எம்.ஜி.ஆர் ,ராஜகுருவாக நம்பியாா், கொள்ளையன் பாா்த்திபனாக எஸ்.ஏ.நடராஜன், இளவரசி ஜீவரேகாவாக ஜி.சகுந்தலா ஆகியோா் நடித்திருந்தனா். மந்திாிகுமாாி அமுதவல்லியாக மாதுாிதேவி நடித்திருந்தாா்.

    இந்த படத்தில் முக்கிய வசனங்கள் இடம்பெற்றது அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

    ராஜகுரு கொள்ளையனாகிய தமது மகன் பாா்த்திபனிடம் 'கொள்ளையடிப்பது கலையா?' என ஆச்சாியமும் அதிா்ச்சியுமாக கேட்கிறாா். பாா்த்திபன் அதற்கொரு விளக்கம் அளித்து தனது செய்கைகளை நியாயப்படுத்தி விளக்கமளிக்கிறான்.
    ராஜகுரு: அழகான விளக்கம்! உன் கலை ஆா்வம் உன் தலையை அறுப்பதாயிருந்தால்?
    பாா்த்திபன்: என் கலைக்காக தியாகம் செய்தவனாவேன்.

    அமுதவல்லி: மரணம்- நான் அணைத்து மகிழ்ந்த பொன்னுடலுக்கா? என் இதயத்திலே இலட்சம் தீபங்களை ஏற்றி வைத்த தங்கள் இன்னுயிருக்கா? முடியாது, முடியவே முடியாது. பாா்த்திபன்: நீ என்ன சாவித்திாியா, சபதம் செய்கிறாய்? இந்தக் காலத்து யமன் இளிச்சவாயனல்ல..

    இந்த வசனங்கள் இன்றும் கை கொட்ட வைக்கின்றது...

    கதைச்சுருக்கம் காண்போம்..
    முல்லை நாட்டின் அரசர் ராஜ குருவின் (எம்.என்.நம்பியார்) சொல்படி நடப்பவர். குருவின் மகன் பார்த்திபன் (எஸ்.ஏ. நடராஜன்) முல்லை நாட்டின் தளபதி ஆக வேண்டும் என்று குரு ஆசைப்பட்டார். மாறாக, வீர மோஹனை தளபதியாக (எம். ஜி. ஆர்) நியமனம் செய்தார் அரசர். அதில் கோபமுற்ற பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை (ஜி. சகுந்தலா) பார்த்திபன் மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோஹனை விரும்பினாள். பார்த்திபன் தன்னை சந்திக்க ஜீவரேகாவிற்கு ரகசிய தூது அனுப்பினான். அந்த தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை (மாதுரி தேவி) சென்றடைந்தது. அவளும் பார்த்திபனை பார்க்கச்செல்ல, இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன் அமுதவல்லியை இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்தினான்.

    இந்நிலையில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முல்லை நாட்டு அரசர் வீர மோஹனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். கோபமடைந்த ராஜ குரு தன் மகனை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிக்கிறார். பெண்தெய்வத்தின் முன் வாதிடுகிறார் ராஜகுரு. அப்போது, அச்சிலையின் பின்னால் ஒளிந்திருந்த அமுதவல்லி, பார்த்திபன் நிரபராதி என்று கூறுகிறாள். அது தெய்வத்தின் குரல் என்று நம்பிய அமுதவல்லியின் தந்தை மந்திரி, பார்த்திபன் நிரபராதி என்று அவரும் கூறிவிடுகிறார். ராஜ குருவுடனும், மந்திரியுடனும் அரசர் கலந்து ஆலோசித்து, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோஹனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான். வீர மோஹனுடன் ஜீவரேகாவும் சென்றுவிடுகிறாள்.

    பார்த்திபனை திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது வழிப்பறியில் ஈடுபடுகிறான் பார்த்திபன். வீரமோஹனை தாக்கி, ஜீவரேகாவை கடத்திவிடுகிறான் பார்த்திபன். அமுதவல்லி தன் கணவரை மாறுவேடத்தில் பின்தொடர்ந்து சென்று, ஜீவரேகாவை காப்பாற்றுகிறாள். அதனால், அமுதவல்லியை கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான் பார்த்திபன். மாறாக, அமுதவல்லி பார்த்திபனை தள்ளி கொன்று, ஒரு புத்தமத துறவியாகிறாள். ஜீவரேகாவை மாறுவேடத்தில் வீர மோகன் சந்திக்க வருகிறான். அப்போது ராஜகுரு அரசரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது பார்த்துவிடுகிறான். ஆனால், அரசர் வீர மோகன் தான் தன்னை கொல்ல வந்ததாக தவறாக நினைக்கிறார். பின்னர் அந்த சூழ்நிலையிலிருந்து வீர மோகன் எவ்வாறு தப்பித்தான் என்பதே மீதிக் கதையாகும்.

    கா. மு. ஷெரிப் மற்றும் ஏ. மருதகாசி எழுதிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி பாடிய பாடல் "வாராய் நீ வாராய்" மிகவும் பிரபலமான பாடலாகும். இப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தன....

    அன்புடன்
    படப்பை...
    ஆர்.டி.பாபு......

  9. #1938
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலக சரித்திரத்தில் உலகத்தில் பெரும் அதிசயம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒருவரே!

    உலக வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரை கலைஞன் என்ற பெருமையைப் பெற்றவர் புரட்சித்தலைவர்.

    உலக வரலாற்றில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை மாற்றி புதிய ஆட்சியை உருவாக்கியவர் புரட்சித்தலைவர்.

    உலக வரலாற்றில் குண்டடிபட்டு மறுபிறவி எடுத்தவர் மாநிலங்கள் போற்றும் புகழுக்குரிய புகழ் வேந்தர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் ஒருவரே என்றும் எப்போதுமே.

    உலக வரலாற்றில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே மாநிலத்தின் முதல்வராகி புதிய சரித்திரத்தை ஏற்படுத்திய முதன் முதல்வர் புரட்சித்தலைவர் ஒருவரே.

    உலக வரலாற்றில் புரட்சித்தலைவரின் உடல் நலம் குன்றிய போது உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனைகள் செய்தனர். மிகப்பெரிய மகத்தான தலைவர் மனிதப்புனிதர் புரட்சித்தலைவர் ஒருவரே

    இப்படி உலக சரித்திரத்தில் பல அருங்குணங்களை கொண்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலகின் அதிசயத்தில் முதல் மனிதர் என்பது நமக்கு பெருமைக்குரியதாகும் !

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........

  10. #1939
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகை சுற்றிய வாலிபன்...பகுதி...5..

    சென்னையில் இருந்து படம் எடுக்க வெளிநாடுகள் புறப்பட்ட தலைவர் அமரர் அண்ணா நினைவிடம் முதல் நாள் இரவு சென்று வணங்கினார்..

    சென்னை விமான நிலையத்தில் தலைவர் அன்னை ஜானகி அம்மா மற்றும் பட குழுவினர் டெல்லிக்கு செல்லும் விமானத்தில் பயணம் போக அங்கே ஜனசமுத்திரம் போல கூட்டம்...

    தலைவர் குழுவை வழி அனுப்பி வைக்க அன்றைய முதல்வரும் வந்து இருக்க....விமானத்தில் ஏறி அனைவரும் அமர மீண்டும் உள்ளே வந்து வழி அனுப்பினார் அந்த நல்லவர்..

    டெல்லி விமானநிலையத்தில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காத்து இருந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தார்....அரசியல் விஷயங்களை...
    தலைவர் மௌனமாக கேட்டு கொண்டு இருந்தார்...

    அனைவரும் செக்கிங் பகுதிக்கு வருமாறு அழைக்க பட அவரவர் பாஸ்போர்ட்டை எடுத்து பார்க்கும் போது லதா அம்மா அவர்கள் ஐய்யோ என் பாஸ்போர்ட் இல்லையே என்று கத்த...

    மொத்த கூட்டமும் தேடி அலைய சிறிது நேரம் முன்னால் அங்கே ரெஸ்ட் ரூம் அவர் போக அங்கேயே தன் கை பையை விட்டு விட்டு இருக்கை திரும்ப...

    கிடைத்து விட்டது என்று மஞ்சுளா பையுடன் அங்கிருந்து ஓடி வர விமானம் புறப்பட்டது.

    ஒரு வரலாற்று படத்தை உருவாக்க போகும் அனைவரையும் சுமந்து கொண்டு வெளிநாட்டுக்கு....

    சென்ற பதிவில் நாகேஷ் குறித்து முடித்து இருந்த இடத்தில் இப்போ தொடர்வோம்..

    நாகேஷ் ரயில்வேயில் வேலை செய்து கொண்டே நாடங்கங்கள் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர்...புகை பிடிக்கும் பழக்கம் தாண்டி பின்னர் மது பழக்கம் கூட வந்து ஒட்டி கொண்டது.......

    தலைவருடன் வெளிநாட்டில் இருக்கும் போது....அங்கே அனைவரும் சாப்பிடும் பில்லுக்கு ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைவர் பார்த்து கையொப்பம் இட பணம் ஹோட்டலுக்கு அப்போ அப்போ பணம் செலுத்த பட.

    ஒரு நாள் குழுவினர் பட பிடிப்புக்கு கிளம்ப நாகேஷ் திடீர் என்று மயங்கி கீழே அங்கேயே விழுந்து விட....அனைவரும் பதறி....உடனே வெளிநாட்டு மருத்துவர் வந்து சோதிக்க..

    இவர் தீவிர மது பழக்கம் கொண்டவர்..
    இவர் ரத்தத்தில் அது கலந்து விட கடந்த நாட்களில் இவர் மது அருந்தவில்லை....அது இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து உள்ளது என்கிறார்.

    தலைவர் செய்தி அறிந்து எப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகர் இப்படி ஒரு வழக்கத்தில் சிக்கி கொண்டார் என்று வருந்தி....எனது நிறுவனம் இதை போன்ற செலவுகளை ஏற்காது.....

    மருத்துவர் அறிவுரைப்படி இவருக்கு அளவோடு அந்த கேடு கெட்ட குடியை கொடுக்க சொல்லுங்கள்....
    ஆனால் இவர் சம்பளத்தில் அந்த செலவு பிடித்து கொள்ள படும் என்று சொல்ல..

    இருவரும் அடுத்து வந்த நாட்களில் சரி வர பேசி கொள்ளவில்லை..
    அனைவர் முன்பும் தலைவர் சொன்ன கருத்துக்களே பின்னால் நாகேஷ் அவர்கள் ஒரு சில இடங்களில் தலைவரை விமர்சிக்க காரணம் ஆன ஆரம்ப புள்ளி இந்த நிகழ்வே.

    ஸ்ரீகாந்த் என்று நடிகர் இருந்தார்....மாணவன் போன்ற அந்த கால படங்களில் நடித்து வில்லன் வேடங்களில் பின்பு நடித்தவர் அவரும் நாகேஷ் அவர்களும் இணை பிரியா நண்பர்கள் அனைத்து நிகழ்வுகளிலும்...

    தலைவர் பின் நாட்களில் அனைத்தையும் மறந்து முழு சம்பளம் கொடுத்தது தனி கதை..

    தலைவருக்கு மட்டுமே படத்தின் அத்துணை படத்தின் கதை அம்சமும் தெரியும்..
    யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை அவர்.

    நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் சில காட்சிகளை எடுக்க சொன்ன போது என்ன இவர் சம்பந்தம் இல்லாமல் காட்சிகளை எடுக்கிறார் என்று முணு முணுக்க....

    அடுத்த பதிவில் நாயர் கடையில் சந்திப்போம்.

    வாழ்க தலைவர் புகழ்.
    உங்களில் ஒருவன்..
    நன்றி.....

  11. #1940
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967 முதல் இந்திய சினிமாவில் சிறந்த நடிக்கருக்கான தேசிய விருதுகள் மத்திய அரசு வழங்குகிறது .தமிழ் மொழியில் 1971ல் வெளியான "ரிக்க்ஷாகாரன்" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதான "பாரத் "விருது தமிழ் நாட்டில் , தென்னிந்தியாவில் முதல் முதலாக மக்கள் திலகத்திற்கு தான் கொடுக்க பட்டது . அதற்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து கமலஹாசன் மூன்றாம் பிறை படத்திற்காக வாங்கினார் . மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பிற்கான அங்கிகாரத்தை மத்திய அரசு கவுரவித்தது . பன்றி மாதிரி 200 , 300 படங்களில் ஏதோ நாமும் நடித்தோம் , கல்லா கட்டினோம் , மக்களை அழ வைத்தோம் என்று இல்லாமலும் , தான் நடிப்பை தாமே புகழ்ந்து கொண்டு எல்லா படங்களிலும் துணை, இணை நடிகர்கள் முன் அவர்களை விட தான் நன்றாக நடிப்பதாக காட்டி கொண்டு குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டி கொண்டு நடித்தவர்கள் எவரும் தேசிய விருதை நெருங்க கூட முடிய வில்லை . அளவாக நடித்து தன் இயற்கை நடிப்பால் தேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் மக்கள் திலகம் ஒருவரே..........bpgi

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •