Page 38 of 210 FirstFirst ... 2836373839404888138 ... LastLast
Results 371 to 380 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #371
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/07/20 அன்று*அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------
    காலத்தை வென்ற காவிய நாயகன்,மன்னாதி மன்னன், ராஜராஜன் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது சகாப்தம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் /பக்தர்கள் தரும் நல்ல வரவேற்பிற்கு அத்தாட்சி ஆகும் .

    நடிகர் சங்கத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்க படுகிறார் . முதல் கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் . சங்க உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது . அந்த கூட்டத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தன்காமிராவுடன்* வந்து* கலந்து கொள்கிறார் . அவரை பார்த்ததும் ,நீங்கள் ஏன் வந்தீர்கள்.தயவுசெய்துவெளியே செல்லுங்கள் .சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த கூட்டத்தில் அனுமதி என்கிறார் எம்.ஜி.ஆர்.*நடிகன் குரல் என்கிற பத்திரிகைக்கு* எம்.ஜி.ஆர். ஆசிரியராக இருந்தும், பொறுப்பு ஆசிரியராக பிலிம் நியூஸ் ஆனந்தனும் செயல்படுகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் அந்த இதழ் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு தரப்படுகிறது .நடிகன் குரலுக்காக பல கட்டுரைகள் எடுத்துக் கொண்டு, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு பலமுறை பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்றுள்ளார் .இருப்பினும் இந்த நடிகர் சங்க கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்படுகிறார் .உடனே சிலர்,எம்.ஜி.ஆரிடம் அவரும் இந்த சங்கத்தின் உறுப்பினர்தான் என்று வலியுறுத்தி சொன்னதும் , அவரை அழைத்து வரச்சொல்லி ,கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார் . விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். விஷயம் தெரியாமல் உங்களை வெளியே அனுப்பிவிட்டேன்,.நீங்கள் உறுப்பினர்தான் என்பது இப்போதுதான் தெரிந்தது. தாங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் . அதற்காக நான் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அனைவரின் முன்னிலையில் எம்.ஜி.ஆர்* எந்தவித . சங்கோஜமும்* இல்லாமல் தெரிவித்தார் .


    நாடோடி மன்னன் படத்தின் 100 வது நாள் வெற்றிவிழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது . விழாவில் அண்ணா அவர்கள் அனைத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சுமார் 60 பேர்களுக்கு பரிசுப்பொருட்களுடன் கேடயமும் வழங்கினார் . நாடோடி மன்னன் படத்தின்*பொதுமக்கள் தொடர்பாளராக பிலிம் நியூஸ் ஆனந்தனை முதன் முதலாக* எம்.ஜி.ஆர். நியமித்திருந்தார் . நாடோடிமன்னன் படத்தின் வெற்றிவிழா குறித்து*பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன . ஆனால் நிகழ்ச்சிக்காக பாடுபட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு விருது வழங்கப்படவில்லை . இதை கேள்விப்பட்டவுடன் எம்.ஜி.ஆர். முதல் விருது நியாயமாக அவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி வருத்தப்பட்டு, பின்னர் , அவருக்கென்றே பிரத்யேகமாக ஒரு கேடயத்தை தயார் செய்து ,ஒரு படப்பிடிப்பில் பல நடிகர் நடிகைகள் முன்னிலையில் கொடுத்து பாராட்டினார் .


    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்மீது எம்.ஜி.ஆர். மிகவும் பற்றுக் கொண்டவர் என்பதற்கு உதாரணம் , ஒருமுறை ஒரு கூட்டத்தில் பேசும்போது*கலைவாணர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்திருப்பார் . நான் அவரது சகாவாக இருந்திருப்பேன் என்று*கூறினார் . ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உடல்நல குறைவால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது*எம்.ஜி.ஆர். அவரை பார்க்க சென்றார். அவர் தூங்குவதால் தொந்தரவு செய்யாமல் அடுத்த முறை வந்து பார்க்கலாம் என்று புறப்பட்டு சென்றார் .சிறிது நேரம் கழித்து கண்விழித்த கலைவாணர்*.* தனது தலையணையின் அடியில் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து* நடிகர் ராமச்சந்திரன் வந்து போனாரா என்று சிஷ்யர்களாக இருந்த நடிகர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஏ. தங்கவேல் ஆகியோரை பார்த்து கேட்டார் .உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்கள் கேட்க, பதிலுக்கு கலைவாணர் வேறு யாருக்கு கட்டு கட்டாக பணம் உதவி தேவைப்படுபவர்களுக்கு**கொடுத்துவிட்டு போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.என்று தலையணையின் கீழே இருந்த பண கட்டுகளை காட்டினாராம்*எனவே ..எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்காவிட்டாலும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு தாமாக மனமுவந்து உதவகிறவர் என்பது*கலைவாணர் காலத்திலேயே உருவான விஷயம் என்பது சிலர் அறியாதது .


    முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் திரு.கக்கன் அவர்கள் ஒய்வு பெற்று அரசு* வீட்டில் இருக்கும்போது மாத வாடகை கூட செலுத்தமுடியாமல் அவதிப்பட்டவர்* என்று சொல்லப்பட்டதுண்டு . எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு விவரம் அறிந்து , கக்கன் அவர்கள் ஒரு நேர்மையான, எளிமையான ,நாட்டுக்கு*மக்களுக்காக உழைத்த உண்மையான தியாகி. அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கக்கூடாது என்று கூறி ,அவருடைய வாடகை பாக்கியை சரி செய்து ,அரசு சார்பில் ஒரு வீட்டை இலவசமாக ஒதுக்கீடு செய்தார் .* ஒருமுறை மதுரைக்கு அரசு விழா குறித்த நிகழ்ச்சிக்கு சென்ற எம்.ஜி.ஆர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கக்கன் அவர்கள்பொது வார்டில்* சிகிச்சையில் உள்ளார் என்று செய்தி அறிந்து ,அதிகாரிகளை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டாராம் . பிறகு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அதிகாரியை அழைத்து ,கக்கன் அவர்கள் இந்த நாட்டிற்காக உழைத்த உத்தமர், நேர்மையான,*எளிமையான தேசத்தியாகி .எனவே அவருக்கு உயர்தர சிகிச்சையை எனக்கு அளிப்பதாக கருதி தாங்கள் சிறப்பாக அளித்து அவர் உடல்நலம் தேறி நல்லமுறையில் குணமடைந்து வீடு திரும்ப* உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . அதுமட்டுமின்றி, கக்கன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ,அவரது வாரிசுதாரர்களுக்கும் வேண்டிய நிரந்தர உதவிகள்*செய்து,நல்ல வழி காட்டியுள்ளார் எம்.ஜிஆர் .



    எதிர்க்கட்சி முகாமில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆரை கடுமையாக குறை சொல்லி,*விமர்சித்து கூட்டங்களில் பேசுவது, பத்திரிகைகளில் எழுதுவது என்பதை வாடிக்கையையாக கடைபிடித்தார் .* ஒருநாள் அவரது மனைவி திடீரென்று நோய்வாய் படுகிறார் .* உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ரூ.10,000/- தேவைப்படுகிறது என்கிற நிலை .* அவர் செய்வதறியாமல் ,பணமில்லாமல் தவிக்கிறார் .அவர் பணியாற்றுகின்ற கட்சி பத்திரிகை நிறுவனத்தில்* உடனடியாக பணம் பத்தாயிரம் அட்வான்ஸ் கேட்டால் தரமாட்டார்கள் என்று மனம் புழுங்கியபடி இருக்க, அவரது நண்பர் ஒருவர் நீங்கள் உடனே சென்று*எம்.ஜி.ஆரை பாருங்கள் என்கிறார் . அது எப்படி முடியும். காலம் முழுவதிலும்*நான் அவரை குறை சொல்லி, விமர்சித்து, திட்டி பேசிவிட்டேன் .* அவர் முகத்தை எப்படி சென்று பார்ப்பேன் என்கிறார் .பரவாயில்லை நீங்கள் அவசியம் சென்று பாருங்கள் என்று நண்பர் வற்புறுத்தி சொல்கிறார் . அதன்படி ராமாவரம் தோட்டத்திற்கு செல்கிறார் . அங்கு கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், முக்கிய விருந்தினர்கள் பலர் புடைசூழ எம்.ஜி.ஆர். பேசிவிட்டு புறப்படும்போது* . இவரை*பார்த்ததும் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் . என்ன விஷயம் பரவாயில்லை சொல்லுங்கள் என்று தனியாக அழைத்து* கேட்கிறார் . முதலில் உங்களை விமர்சித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள், என் மனைவிக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சைக்காக* ரூ.10,000/- உதவி தேவைப்படுகிறது உங்கள் உதவி நாடி வந்துள்ளேன் என்றதும் ,*கவலைப்படாதீர்கள் . என்று கூறி அவர் எதிர்பார்த்த பணத்திற்கு மேலாக ரூ.5,000/- கொடுத்து நல்லபடியாக சிகிச்சை அளித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள், என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டு , இந்த மாதத்துடன் வேலையை விட்டு ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில்*தொலைபேசி அழைப்பாளராக பணியில் சேருங்கள் .பழைய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தைவிட , நல்ல சம்பளம் தரும்படி ஏற்பாடு செய்கிறேன் என்று*காலமெல்லாம் தன்னை திட்டி தீர்த்த, விமர்சித்த, குறைசொல்லி பேசிய நபரின்*வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்தவர் மட்டுமல்ல ,தன்னை எதிர்ப்பவர்களை*தன் வசப்படுத்துவதிலும் வல்லவர் எம்.ஜி.ஆர்.


    எம்.ஜி.ஆர். அவர்களை பற்றிய இலக்கிய இலக்கணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் .* அந்த மன்னாதி, மன்னன், ராஜ ராஜனின் இலக்கிய பயணம் ,நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தொடர்வது பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம் .

    நிகழ்ச்சியில் ஒலித்த* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------------
    1.அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்*

    2.பெண் பார்க்க வரும் காட்சியில் எம்.ஜி.ஆர்.-நல்ல நேரம்*

    3.கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - நாடோடி மன்னன்*

    4.உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் -நாடோடி மன்னன்*

    5.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் - மதுரை வீரன்*

    6.அன்புக்கு நான் அடிமை - இன்றுபோல் என்றும் வாழ்க*

    6.ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*

    7.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

    8.எம்.ஜி.ஆர் .- நாகேஷ் உரையாடல் - அன்பே வா*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #372
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
    104/2020
    எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
    எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
    திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
    நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
    ''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
    ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
    முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
    முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
    தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
    50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
    சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
    படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
    வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
    வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
    கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
    எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .

    30வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
    நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
    வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
    1978க்கு பிறகு 2020 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
    கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ..........

  4. #373
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அடுத்து நாம் பார்க்கப் போகிற படம்தான் "ஊருக்கு உழைப்பவன்".
    இதையும் கணேசன் ரசிகர்கள் தோல்வி படம் என்று சொல்லுவதால்
    "ஊருக்கு உழைப்பவனி"ன் வசூல் விபரங்களோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    1976 ம் ஆண்டு நவ 12 ம் தேதி தீபாவளிக்கு வந்த படம்தான் "ஊருக்கு உழைப்பவன்."

    வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த என் அண்ணன் வெற்றிப் படத்தை அடுத்து தயாரித்த படம். சென்னையில் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டு அதிக பட்சமாக மகாராணியில் 63
    நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 190
    நாட்களில் பெற்ற வசூல் ரூ913395.88. இதுவும் தேவி பாரடைஸ் போன்ற பெரிய தியேட்டரில் வெளியாகமலே இந்த வசூல். வெளியாகியிருந்தால் 10 லட்சத்தை தாண்டி வசூல் செய்து எதிரணியை இன்னும் கலங்கடித்திருக்கும். .

    இந்த வசூல் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் சிவாஜி படங்களைக்காட்டிலும் அதிகம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி,
    தவப்புதல்வன், குலமா குணமா
    ராஜபார்ட் ரங்கதுரை,
    என்மகன்,உத்தமன்,தெய்வமகன் ஞானஒளி,நீதி,மன்னவன் வந்தானடி
    ஆகிய படங்களை காட்டிலும் மிக அதிகமான வசூலாகும்.

    அப்படியானால் இந்த சிவாஜி படங்களெல்லாம் படுதோல்வி படங்களா?. இதையும் 100 நாட்கள் ஓட்டுவதற்கு நிறைய செலவு செய்திருப்பார்கள்.. அதையெல்லாம் கழித்துப் பார்த்தால் "உறித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது" கதைதான். "ஊருக்கு உழைப்பவன்" மதுரை சென்ட்ரலில் 70 நாட்கள் ஓடி முடிய பெற்ற வசூல்
    ரூ 2,76,896 ம், நெல்லை சென்ட்ரலில்
    50 நாட்களில் ஓடி முடிய ரூ 1,12,414 ம், நாகர்கோவில் பயோனியர் முத்துவில் 38 நாட்களில் ரூ 86,131 ம் வசூலாக பெற்று சாதனை படைத்தது.

    நாம் பார்த்தது அத்தனையும் 'a' சென்டர்
    என்றழைக்கப்படும் முக்கியமான நகரங்களின் வசூல்தான். இதற்கப்புறம். 'b' & 'c' சென்டரில் கேட்கவே வேண்டாம்.
    அங்கே மக்கள் திலகம்தான் சக்கரவர்த்தி. இதை நம்மவர்களை விட இலங்கை தமிழர்கள் நன்றாக புரிந்து கொண்டு தலைவருக்கு 'நிருத்திய சக்கரவர்த்தி'
    என்ற பட்டத்தை அளித்தார்கள். சிவாஜியின் படங்கள் அங்கே வசூலில் விரிசல் காண்பதால் 'கலைக்குரிசில்' என்ற
    பெயரில்தான் அழைப்பார்கள்.

    'பைலட் பிரேம்நாத்' என்றொரு படத்தை இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எடுத்து விட்டு இங்கே இந்தியாவில் திரையிட்ட வேகத்தில் திரும்பி விநியோகஸ்தர் மடியில் தஞ்சமடைந்த படத்தை இலங்கையில் இந்திய துணைகண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத ஜ...வ்....வு.. மிட்டாய் போல இழுத்து ஓட்டிய கதை யாரும் அறியாததா? அதையும் சாதனை என்று சொல்ல வெட்கம் சிறிதளவாவது வேண்டாமா?

    இங்கேயாவது வாணிஸ்ரீ போன்ற நடிகைகளின் தயவால் பெற்ற வெற்றியை வைத்து கூத்தாடினார்கள். அங்கே "மாலினி பொன் சேகா" என்ற
    இலங்கை நடிகையின் துணை கொண்டு ஓட்டிய படத்தை பெருமையோடு சொல்வதை கேட்டால் நாடு விட்டு நாடு தாவும் பச்சைத்தமிழனின் மானம் காற்றில் பறக்காதா?. இதை எண்ணிப் பார்த்து மனம் தெளிவு பெறுங்கள்.

    நெல்லையில் திரையிட்ட சிவாஜியின் 10 படங்கள் கூட இந்த "ஊருக்கு உழைப்பவனி"ன் வசூலை பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் மீதி அனைத்தும் படுதோல்வி படங்களா?வேண்டுமானால் உங்கள் படங்களின் உண்மையான வசூலை வெளியிடுங்கள், புரிந்து கொள்ளட்டும் மக்கள் யார் 'வெற்றித்திருமகன்' என்று.

    மீண்டும் அடுத்த பதிவில்..........

  5. #374
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கருணாநிதி சட்டசபை தேர்தல்களில் தோற்றதே இல்லை என்பது உபிஸ் கூட்டத்தின் பெரிய உருட்டு என்பது தெரியுமா..

    இவரிடம் கலைஞர் தோற்றார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்..?

    எம்ஜீஆரின் தயவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா... ?

    இவர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே.

    மு.க வை சட்ட சபையில் கதற விட்டவர்.

    இவரை, ஹண்டே சபையில் எழுந்தால் சண்டே என்பார், மு.க....

    1980ம் ஆண்டு தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது.கருணா 250 வாக்கு பின்தங்கினார். ஹன்டேவை எம்ஜிஆர் அழைத்தார். என்ன நடந்ததோ தெரியாது .. “சில பல டீல்களுக்கு” பிறகு ஹண்டே தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அந்த டீலுக்கான விலை அடுத்து வரும் mlc தேர்தலில்ஹண்டேவை mlcயாக்கி சுகாதரத்துறை அமைச்சராக அமரவைத்தார் எம்ஜீஆர்...

    1980 ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதியில் நின்ற கலைஞர் பெற்ற வாக்குகள் 51290 ...இவரை எதிர்த்து அதிமுகவின் எச். வி. ஹண்டே பெற்ற வாக்குகள் 50591 இருவருக்குமான வாக்கு வித்தியாசம். 699..

    அதற்கு பிறகு கருணா அண்ணா நகரில் நிற்கவே இல்லை.இது சரித்திரம்.எதிலும் தோற்காதவரே தோற்காத வெண்ணை என கூவாதிங்க உபிஸ்..

    சுதந்திரா கட்சிக்கு போனதும் ஹன்டே கருணாவுக்கு பார்ப்பனர் ஆனார். அந்த ஹன்டேயைத்தான் ஆத்திரத்தில் பார்ப்பனன் என்பார் கருணா.

    கடைசி பஞ்ச்...

    காவேரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கடைசி காலங்களில் கருணாநிதிக்கு எட்டு மருத்துவர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது . அந்த எட்டு பேர் குழுவில் இதில் இவர் யாரை பார்ப்பான் என திட்டினாரோ அந்த பார்ப்பனான எச்.வி.ஹண்டேயும் ஒருவர்..........

  6. #375
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உங்களுக்கு பத்துகோடி டாலர் பெரிசு...இந்த உலகத்திலுள்ள தனி ஜீவன் எனக்கு அதைவிட பெரிது... வர்ர்ரே வாவ்...!!!

    மிஸ்டர் பைரவன் ...! நீங்க சாதாரண வியாபாரின்னு நெனச்சேன்...ஆனா இப்ப தான் புரியது நீங்க சந்தைல ஏலம் போடுற வியாபாரி ...

    ஆராய்ச்சிக்காக Demo காண்பிக்க, லதாவை ஒரு அடரந்த காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடச்சொல்வார். அதனால்...நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்...அதைக்கண்டு பயப்படும் லதாவிடம்,
    அந்த தீயை அணைப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்திருப்பதாகக் கூறுவார். அந்த அளவு சமூக அக்கறை கொண்டவர்...நிரூபித்தவர்... மக்கள்திலகம்...

    இப்படி...இந்த தனது ஒரு திரைப்படத்தில் மட்டுமல்ல...தனது எல்லாப் படங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு நீதியைப் புகுத்தியிருப்பார்.

    புரட்சித்தலைவர் பற்றி எழுத எழுத நீண்டுகொண்டே தான் போகும்...
    நமக்கு ஆயுள் பத்தாது...

    #கெத்தான
    #உலகம் #சுற்றும் #வாலிபன்.............

  7. #376
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சில் நிற்கும் வரிகள்

    சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .

    இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )

    அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )

    நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )

    நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )

    தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
    செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)

    பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)

    பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)

    வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)

    உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
    திமிங்கிலம் நீ ( படகோட்டி)

    கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
    தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )

    இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் ..........

  8. #377
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGRamachandiran
    INAINDHA KAÏGAL
    இணைந்த கைகள்

    (photo courtesy
    of MGR Peran,
    JaïShankar
    and
    Sailesh Basu,
    thanks for them)

    MGR's
    Unfinished movies II
    By the end of 1969,

    MGR went on to make a movie under the Banner, MGR Productions “INAINDHA KAÏGAL”.

    The story was inspired from a Hindi film Prithiviraj Kapoor's “DAKTHA MANSOOR”.

    The story is real one from the life of Muslim Chief Mansoor who lived in Iran.

    Arrangements were made the story draft was changed 3 times before it went on to shooting stage.

    N.T.Ramarav was booked for the Telugu version of this movie.

    A grand function was held in Sathya studios on the first day shooting of the movie, presided by "Kalaignar” Karunanidhi.

    The crew involved in this movie are M.S.Visuwanadhan – Music,

    Lyrics by Vâli and Pulavar Vedha,

    Camera by V.Ramamurthy,

    Story – Syed Hajah Mohideen alias Ravindran,

    Dialogues by Sornam,

    Jambu for Editing,

    Stunts by Shiyam Sundhar,

    Arts by Anga Muthu

    and Direction by Chanakya.

    The Ad placed in Daily Thanthi...

    Story : Mansoor was born in Royal family, circumstances make Mansoor and his mother get separated from the family.

    Mansoor was raised by a Poor man named Moosa. Mansoor becomes a thief for living. Years roll by, Mansoor helps the poor and needy by giving them food, care and money, and stand for their cause and against the reigning King.

    An incident happens that he becomes changed man when he falls in Love with a girl who is a princess.

    Her father is Harun Al Rashid.

    Mansoor gets to know his birth mystery.

    He get assisted by his Lover.

    A greater task was kept in front of Mansoor to provide water to her Kingdom.

    He triumphantly performs the task by breaking the mountain with that he gets to know about his Mother and finds her and finally the throne he rightly owned.

    MGR planned to introduce Iranian Actress as the heroine for this movie.

    Four songs were recorded three usual movie songs and one lengthy Kavali type song. The songs such as

    a.”Nilavu Oru Pennagi..." (the song was used in ULAGAM SUTRUM VALIBAN – MGR and Manjula)

    b."Aval Oru Navarasa Nadagam..." (this song also used in ULAGAM SUTRUM VALIBAN – MGR and Latha the one with water ballad)

    c."Konjam Neram Ennai Marenthan...” (this song was used in SIRITHU VAZHA VENDUM – MGR and Latha, remember both of them in lots of costumes for that song)

    A forest set was made in Sathiya Studio and shots were taken as MGR saving four girls and some dialogue scene between MGR and orphan children.

    MGR and Geethanjali in INAINDHA KAÏGAL.

    When the shots in studio were completed MGR asked Chitra Krishnasamy to get the permission from the Iran Government to shoot the movie in their country.

    The situation changed when Chitra Krishnasamy went to meet the Government they asked the story, after reading the story they denied permission.

    The reason the then Iran country was ruled by a King, it is capital punishment to mock a King or telling a story a thief becoming a King.

    King and Queen are highly placed and they do not want such a story to be shot in their country.

    Chitra Krishnasamy returned home and he told the sad story.

    Story writer had a chance meeting Fartheen an International actor who is also one of the member from the Royal Family and asked can he do any help regarding picturising the movie.

    He firmly said you can ask the King to give the greatest treasures from his kingdom but not this kind of story.

    We are very strict we did not like disrespecting the King and Queen.

    You might have seen that all the foreign movies running in Iran are dubbed and released in Persian language. The Censor board is very powerful than our Police.

    I cannot help regarding this movie.

    Then MGR made a 4th draft changing the back drop to India. Some characters are to be deleted and new ones to be created.

    When M.G.Chakrapani was asked to take the role of the King Rashid he did not accept and went on to take the role of Poor Moosa.

    He acted in the role of raising the child character Mansoor because he desired to raise MGR's son in real life but that did not happen for that he wanted to act as Poor Moosa to raise MGR's son in reel life.

    5th draft was made and Actress Geethanjali acted with MGR for some scenes.

    The movie was dropped the reason unknown then MGR went on to make “ULAGAM SUTRUM VALIBAN”.

    MGR asked the story department for lavishness in the movie. Imagine the scene of breaking the mountain and the rushing water in those days.

    3 Dream songs in Iranian back drop.

    The sets are inspired from Arabian Nights story.

    Costumes that MGR used is very different and shows individuality.

    Apart from the head dress MGR keeps the knife in his throat.

    Excerpts
    from Nenjil Neraiantha Ponmanachemmal
    and image
    from
    Ithayakani magazine
    November 2003 issue.
    Roop

    (photo courtesy
    of MGR Peran, JaïShankar and Sailesh Basu,
    thanks for them).........

  9. #378
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !

    இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை

    மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்" தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.." என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.

    அதில்:

    " ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்

    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.

    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்

    வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு

    வா.. வா.. என் தோழா ! "

    - தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?..............

  10. #379
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்

    ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.

    சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.

    உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .

    தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.

    அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.

    இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.

    அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்

    அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.....

  11. #380
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் மறைந்த அன்று மறுநாள் நடந்த ஊர்வல நிகழ்வுகள் 25.12.1987 கிறிஸ்மஸ் தினத்தில் 32 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் அஞ்சலி. நினைவு ஊர்வலம் 5மணி நேரம். 7 கிலோ மீட்டர் நீளம். இந்தியா முழுவதும் அரசு விடுமுறை. 22 நாட்டு தூதர்கள் அஞ்சலி. அமெரிக்க பாராளுமன்றத்தில் அஞ்சலி. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட தலைவர். காஞ்சி திருப்பதி சென்னை பார்த்தசாரதி கோயில்களில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. 5 லட்சம் தொண்டர்கள் மொட்டை போட்டனர். ரயில் பயணம் 2 நாள் இலவசம். இப்படி பல்வேறு சாதனையில் புரட்சித்தலைவரின் நினைவு ஊர்வலம். அன்று தமிழகமெங்கும் சென்னை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •