Page 51 of 210 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #501
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    நாடோடி மன்னன் திரைக்காவியம் ஒவ்வொரு வெளியீடுகள் எண்ணிலடங்காதது. ஒவ்வொரு வெளியீட்டிலும் பல வாரங்கள் பல நாட்கள் ஓடிய ஒரே காவியம்
    நாடோடி மன்னன் மட்டுமே என்பது இன்றுவரை சாதனையாகும்.*

    கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் நாடோடி மன்னன் ஓடியது போல் எந்த திரைப்படமும் இதுவரை ஓடி சரித்திரம் படைத்தது கிடையாது. நாடோடி மன்னன் காவியத்தின் 62 வது ஆண்டு ஆண்டை நிறைவு செய்து 63 வது ஆண்டை நோக்கி நிரந்தர வெற்றியுடன் 2021 ம்ஆண்டிலும் சாதனை படைக்கட்டும்.

    தொடரும் பதிவுகள்.............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மகத்தான வெளியீடு ! 1975 ஆம் ஆண்டு வெளியான "இதயக்கனி" திரைக்காவியம் "ரிக்க்ஷாக்காரன்" மாபெரும் வெற்றிக்குப் பின் வெளிவந்த சத்யா மூவிஸின் 2 வது வண்ணக்காவியம்.*

    இதயக்கனி காவியம் வெளிவந்து 45 வருடங்கள் நிறைவு பெறுகிறது. வெற்றிகரமாக 46 ம் ஆண்டு துவங்குகிறது...
    இதயக்கனி திரைக் காவியத்தின் சில சிறப்புக்கள் இங்கே குறிப்பிடப்படுகிறது.*

    மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 காட்சிகள் அரங்கு நிறைந்து*
    5 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்து. தொடர்ந்து மற்ற திரையரங்கில் வெளியிடப்பட்டு 213 நாட்கள் ஓடிய வெற்றிக் காவியம் இதயக்கனி ஆகும்.

    மதுரை மாநகரில் சாதனை என்று தம்பட்டம் அடித்த அனைத்து படங்களையும் குறுகிய நாட்களில் முறியடித்த காவியம் இதயக்கனி திரைப்படம். நடிகர் கணேசனின் பட்டிக்காடா பட்டணமா அதிக வசூல் படமாகத் திகழ்ந்தது அத்திரைப்படத்தின் வசூலை தொடர் ஒட்டத்தில் முறியடித்து வெற்றி கண்டது.*

    இதயக்கனி திரைக்காவியம் நகரில் தொடர்ந்து ஓடி 7 லட்சத்தை வசூல் பெற்ற மூன்றாவது காவியம். இதயக்கனி ,உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்கனி மூன்று திரைப்படங்களும் தொடர் வெளியீட்டில் மகத்தான சாதனை..........

  4. #503
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர்* கிருஷ்ணா அரங்கில் 100 நாட்கள் கடந்து.... நகரில் அதிக வசூல் பெற்ற திரைக்காவியம் ஆக இதயக்கனி திரைக்காவியம் 1978 ஆம் ஆண்டு வரை திகழ்ந்தது.

    நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் மகத்தான சாதனை புரிந்த வெற்றித் திரைப்படமாக நூறு நாட்களை கடந்து ஓடிய மூன்றாவது திரைப்படமாக இதயக்கனி திகழ்ந்தது.*

    அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி...... சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் சாதனையாகும்.

    அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த இதயக்கனி திரைப்படத்தின் வரலாறு சென்னையிலும் மகத்தான வெற்றி படைத்தது.*
    நான்கு திரையரங்குகளில் வெளிவந்து கிட்டத்தட்ட*
    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு* அடுத்தாற்போல் 20 லட்சத்தை வசூல் நெருங்கியது.

    முதல் வெளியீட்டில்**
    44 திரையரங்குகளில் வெளிவந்து 38 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து மற்றும் பெங்களூர் மைசூர் சித்தூர் இலங்கை மாநகரிலும் ஒடியது. அதிகமான திரையரங்குகளில்*
    50 நாட்களை கடந்து வீர சாதனைகள்* புரிந்தது இதயக்கனி திரைக்காவியம்..........( இயக்குனர்/ தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் மிகவும் ஆச்சரியமாக, அபூர்வமாக இப்படத்தின் அப்படியொரு வெற்றியை நிறைவாக சிலாகித்து புகழ்ந்து இப்பட வெற்றி விழாவில் பேசியது அனைவரையும் கவனிக்க வைத்தது...குறிப்பிடத்தக்கது அல்லவா...)
    Last edited by suharaam63783; 23rd August 2020 at 01:58 PM.

  5. #504
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயக்கனி திரைக்காவியம் நடிகர்* கணேசனின் 13 படங்களை முறியடித்தது.முடித்து ஒரு கோடியே 30* லட்சத்தை ஆறு மாத காலத்தில் தந்தது. ஆனால் அந்நடிகரின் 13 படங்கள் தோல்வி அடைந்தது.

    தலைநகர் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் அதிகமான திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய திரைக்காவியம் ஆக*
    உலகம் சுற்றும் வாலிபன் உரிமைகுரல், இதயக்கனி*
    திகழ்ந்தது.

    இதற்குப் பிறகு எந்தப் படமும்*
    1978 ஆம் ஆண்டு வரை 10 திரையரங்குகளில் 100 நாட்கள் நெருங்கவில்லை.... முடியவில்லை.

    இதயக்கனி பல வெளியீடுகளில் சாதனை படைத்து இருந்தாலும் சென்னையில் 1988 ஆம் ஆண்டு இக்காவியம் ஈகா திரையரங்கில்*
    14 நாட்கள் ஓடி 16 ஹவுஸ்புல் காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு லட்சத்து 46 ஆயிரத்து வசூலைக் கொடுத்தது.

    அதேபோல் சென்னை சித்ரா திரையரங்கில் அகன்ற திரையில் முதன்முதலாக வெளியிடப்பட்டு*
    4 காட்சிகள் திரையிடப்பட்டு இதயக்கனி திரைக்காவியம்*
    ஒரே வாரத்தில் 28 காட்சிகளில்*
    82 ஆயிரம்* ரூபாயை வசூலாக கொடுத்து 12 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

    7 மாத இடைவெளியில் மீண்டும் பிளாசா திரையரங்கில் இதயக்கனி திரையிடப்பட்டு அங்கு 56 ஆயிரத்தை வசூலாக கொடுத்து 7 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது..........

  6. #505
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1991 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாஸ்கோப்பில் சென்னை நகரில் திரையிடப்பட்ட காவியம் இதயக்கனி ஆகும். அலங்கார் திரையரங்கில் ஒரு வாரம் இருபத்தொரு காட்சிகளில் 8 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வசூலாக கொடுத்தது. அதுமட்டுமல்லாது அதே வாரத்தில் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நேற்று இன்று நாளை திரைக்காவியம்*
    ஏழு நாட்கள் ஓடி 73 ஆயிரத்தை வசூலாக கொடுத்தது.
    இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை இதயக்கணி திரைக்காவியம் செய்துள்ளது.*
    பல வரலாறுகள் உள்ளது. இக்காவியம் நேற்றுடன் 45 ஆண்டுகள் நிறைவு பெற்று 46 வது ஆண்டில் அதாவது 2021 ஆம் ஆண்டில் மீண்டும் வெள்ளித்திரையில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது திண்ணமாகும்.
    தொடரும் பதிவுகள்.............

  7. #506
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கேள்வி : அரசியல்வாதிகள் திருந்த ஒரு வழி சொல்லுங்கள் ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : பிறரைத் திருத்துவதற்கு தான் அரசியல்வாதிகள். ஆனால், ஒரு சிலர் திருத்தப்பட வேண்டியவர்களாக தான் இருக்கிறார்கள் , அதனால் தான் நாட்டில் இத்தனை குழப்பங்களும் ! என்ன செய்ய ?

    #கேள்வி : உங்களிடம் உள்ள நல்ல குணம் என்ன ? கெட்ட குணம் என்ன ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : தெரியாது

    #கேள்வி : தங்களைப் பற்றி இதுவரை திட்டி பேசாத ஒருவர் திட்டி பேசிவிட்டால் அவரைப் பற்றி தாங்கள் என்ன நினைப்பீர்கள் ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : முதலில் என்னிடம் என்ன குறை புதிதாக உண்டாயிற்று என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று சிந்திப்பேன்.

    #கேள்வி : ஜப்பானில் உள்ள ரசிகர்கள் நம்மை போல நேரத்தை வீணாக்குவது இல்லையே. அதுபோல தாங்களும் தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொள்வீர்களா ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : உங்களுடைய அறியாமைக்கு அனுதாபப் படுகிறேன். அங்குள்ள பல ரசிகர்கள், நாம் ( தமிழர்கள் ) பார்க்கவே விரும்பாத , விரசமான படங்களையெல்லாம் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    #கேள்வி : வாழ்க்கையில் ஆரம்ப நிலையில் இருந்து துன்பப்பட்டு வரும் ஒருவர் மேலும் பல துன்பங்களை சமாளித்து வருகின்றார். இன்பம் என்பதன் தன்மையைப் பற்றி அறியாத அந்த மனிதரைப் பற்றி தங்கள் கருத்தென்ன ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டும் தளராது தன் வழியில் முன்னேறிச் செல்ல முயலும் துணிவுமிக்க ஒரு நல்ல குடிமகன்.

    #கேள்வி : ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதை காப்பி அடித்து நடித்து நம் நாட்டில் நடிப்பில் திலகம் என்று மக்களை நம்பும்படி செய்து வாழ்வது பொருந்துமா ? இயற்கையாக ஏன் பேசி நடித்து பெயர் வாங்க கூடாது ? இதற்கு தங்கள் விளக்கம் என்ன ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : ஒவ்வொரு நடிகரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எந்த பாணியையும் கையாளலாம். ஆனால் முக அமைப்பு , குரல், உருவம் இவைகளுக்கு ஏற்ப நடித்தால்தான் அந்த நடிப்பு சோபிக்கும். யாருடைய நடிப்பாவது அப்படி சோபிக்கிறது என்றால் , இவை அத்தனையும் பொருந்தி இருக்கின்றன என்று பொருள். ஆகவே ஆங்கில பாணியா , சொந்த பாணியா என்ற பிரச்சினைக்கு அப்போது இடம் இல்லை என்றாகி விடுகிறது. மேலும் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப, பிறர் மனதில் பதியும் படியாக நடித்து விட்டால் அந்தப் பாத்திரத்தின் முழுமை உருவாக்கப்பட்டு விட்டது என்றே கொள்ள வேண்டும். அப்படியானால் அது எந்த பாணியானால் என்ன ?

    #கேள்வி : உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன் உங்களுடைய சம்மதம் தேவை ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : எனக்கு வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தை பின்பற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.

    #கேள்வி : கலை உலகில் நீங்கள் யாரை பின்பற்றி நடக்கிறீர்கள் ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : சில வழிகளில் கலைவாணரை.

    #கேள்வி : கூட்டுறவு முறையில் படம் தயாரிப்பது சாத்தியமாகாது என சிலர் கருதுகிறார்கள். தாங்கள் அவர்களுக்கு கூறும் பதில் என்ன ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : ஏழையாகப் பிறந்து ஒருவர் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்று சொல்லி, ஏழையாகவே இருக்க செய்தது இந்த நாட்டில்தான். ஏழையை கவனிக்கவில்லை என்றால் நாட்டில் புரட்சி செய்து நிலைமையை சீர்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவதும் இந்த நாட்டில்தான்.

    நடக்காதது எதுவும் இல்லை. நடத்துவதில் ஒழுங்குமுறை வேண்டும். சந்தேகத்தை நீக்கிவிட்டு தெளிவுடன் செயல்படும் மனப்பான்மை வேண்டும்

    - நாடோடி மன்னன் ஜனவரி 1976

    கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

  8. #507
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் #Dr_எம்ஜிஆர் ப*க்த*ர்க*ளின் அன்பு வேண்டுகோள்...

    #கோடிக்க*ணக்கில் சொத்துக்க*ள் வைத்துள்ள அண்ணா திமுக*வோ அல்ல*து அமைச்ச*ர்க*ளோ அல்ல*து எம்ஜிஆரின் கோடீஸ்வ*ர* விசுவாசிக*ளோ மனம் வைத்தால் அவ*ர*து ப*ல ப*ழைய க*ருப்பு வெள்ளைப் ப*ட*ங்க*ளை முறைப்ப*டி உரிமை பெற்று க*லரில் வெளியிட* முடியும். அல்லது வினியோக*ஸ்த*ர்க*ளுக்கு நிதியுத*வி செய்து ப*ங்குதார*ர்க*ளாக ஆக*லாம். #மன*து_வைப்பார்க*ளா?...

    #ஒன்றுக்கு நூறு மட*ங்கு ப*லன் அளிப்ப*வை Dr.எம்ஜிஆரின் பொக்கிஷ*க் காவிய*ங்க*ள்...

    01. நாடோடி மன்ன*ன் (முழுவ*தும் க*ல*ரில்)
    02.நாடோடி
    03.காவ*ல்கார*ன்
    04.க*லங்க*ரை விளக்கம்
    05.குலேப*காவ*லி
    06.மதுரை வீர*ன் ஆகிய ப*ட*ங்க*ளை முத*ல் முய*ற்சியாக செய்ய*லாம்...

    #நாகேஸ்வ*ர*ராவ், என்.டி.ஆர் சாவித்திரி ந*டித்த மாயாப*ஜார் தெலுங்கு, த*மிழ் ட*ப்பிங்கில் அழ*கு வ*ண்ண*த்தில் வ*ந்தே விட்ட*து...

    #ஹிந்தியிலும் சில ப*ட*ங்க*ள் க*ல*ராக்கி வெளியிட்டுள்ளன*ர். த*மிழில் இதுவ*ரையில்லை. த*லைவ*ரின் ப*ட*மே துவ*க்க*மாக இருக்கட்டும்!!............

  9. #508
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*(02/08/20 ) அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாமரர்களின் ,படிக்காதவர்களின் தலைவர் என்று பேசப்படுகிறது . எம்.ஜி.ஆர். என்பவருக்கு தெரிந்த*தத்துவம் என்பது*மிகப்பெரிய அரிய பொக்கிஷம்* அது மனிதகுலத்திற்கு மட்டுமே*புரிய க்கூடிய ஒரு பாஷை*ஏனென்றால், மனிதர்கள் வாழும்*இந்த உலகத்தில் தாங்க முடியாத*கொடுமை*என்னவென்றால் பசிக்கொடுமைதான் .அதை எம்.ஜி.ஆர். புரிந்திருந்தார் . வாழ்க்கையில் அறிந்திருந்தார் . அதனால்தான்* பலதரப்பட்ட**மனிதர்களோடு சுலபமாக* அவர் தொடர்பு கொண்டிருந்தார் . அவர்களுடைய மனங்களை*வெற்றிகொள்ள முடிந்தது.* உண்மை என்னவென்றால்* .அந்த மாபெரும்*கலைஞன் மனிதாபிமானி என்கிற வழங்கப்படாத பட்டத்தைபெற்ற மாபெரும்* தலைவர் .அவருக்கு என்னவெல்லாம் தெரியும்*என்றால் தொல்காப்பியம் தெரியும்*, நடன சாஸ்திரம் தெரியும்*.பல்வேறு விஷயங்கள் தெரியும்*.


    ஒருமுறை பரதநாட்டியம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியபின் பேசும்போது*எனக்கு*இந்த நாட்டியம் பற்றி அவ்வளவாக தெரியாது*.ஆனால் ஒரு பெண் நாட்டியத்தின்போது குதிக்கிறாள் .அவள் குதிக்கும்போது ஐயோ*குதிக்கிறாளே என்று*** பாவம் பார்க்க கூடாது .அவள் நாட்டியம் ஆடும்போது*கையில்*ஒரு பூப்பந்து தரப்பட்டிருக்கும் . நடனம் முடியும் வரை கையில் உள்ள பூப்பந்தில் உள்ள பூவும்*கசங்க கூடாது, கையும்*நோகக்கூடாது, முகத்தில்*புன்னகை காட்டி, அந்த நடனத்தை பார்ப்பவர்களுக்கு* ஆடும்போது அவள் சிரமப்படுவதாக*முகத்திலோ, உணர்ச்சியிலோ, பாவனையிலோ,நடன அசைவுகளிலோ தெரியும்படி இருக்க கூடாது .அப்படிப்பட்ட ஒரு கலை*ஆர்வத்தோடு, தன்னை*பக்குவப்படுத்திக்கொண்டு* தன் திறமைகள் அனைத்தையும்*வெளிப்படுத்தும் வகையில்*நடனமாடி*பார்வையாளர்களை தன்வசப்படுத்த வேண்டும் .அப்படி நடனம் ஆடுபவர்கள் இந்த நாட்டில்*நிறைய பேர் தோன்ற வேண்டும் . நாட்டியக்கலைக்கு தங்களை*அர்பணித்துக்கொள்ள வேண்டும் .இன்று சிறப்பாக நடனமாடி*நாட்டியக்கலைக்கு பெருமை சேர்த்த*இந்த மாணவியை*நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் என்றார் .


    அதே*போல மயில் பாவனை என்பார்கள்.* பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ, நடக்கும்போது கால்களை முன்னும்*பின்னுமாக வைப்பார்கள் . ஆனால் மயில் நடக்கும்போது ஒரு பக்கமாக*சாய்ந்து ,சாய்ந்து*நடக்கும் . அதனால்தான் ஒரு பெண் நடக்கும்போது மயில்போல*நடக்கிறாள் என்பார்கள் .மிக முக்கியமாக நாட்டிய சாஸ்திரத்தை*பற்றி சொல்கிறார் . அதாவது கண் பார்வை எங்கு இருக்கிறதோ அங்கு மனம் லயித்தால்தான் ,நாட்டியத்தில் ஜொலிக்க முடியும்*என்று ஒரு காட்சியை விவரிக்கிறார் .நாட்டியத்தில் வலது கண் எங்கே*உனது* வலது கையில்*எந்த இடத்தை*பார்க்கிறதோ* அதே நேரத்தில்**ஆடும்போது இடது கண் இடது கையை*பார்க்க வேண்டும். என்பது*சாத்தியமா*என்றால் பலபேருக்கு*சாத்தியம் இல்லை .ஆனால் தேர்ந்த நடனக்காரர்களுக்கு தன் வலது கண் பாவனையையும், இடது கண் பாவனையையும் ஒன்றாக பார்க்கும்அதை ஒன்றாக வெளிப்படுத்தும்**திறன் இருக்கும்*என்று எம்.ஜி.ஆர். மிக்*பெரிய*நுட்பத்தை*அந்த பாரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார் .அதே*போல ஆடுகிறவர் , பாடல் பாடுகிறவர் யாருக்காக*ஆட*வேண்டும், யாருக்காக*பாட வேண்டும் என்பது* உலகிலே**காலம் காலமாய்*கேட்கப்படும் கேள்வி .என்றும் சொல்கிறார் .மேலும் பரத*நாட்டியம் ஆடும்போது இடுப்புக்கு கீழே*பலம் பொருந்திய உடற்கட்டு இருக்க வேண்டும் . இடுப்புக்கு மேலே உடலில் நடன அசைவுகள் நளினமாக தெரிந்தாக வேண்டும். உதாரணத்திற்கு* *பாம்பு ஆடும்போது எப்படி தன் உடலை*கீழே*கிடத்தி , மேலே தலையை*தூக்கி, படம் தெரிகின்றபோது படம் மட்டும் ஆடுவது*போல் காட்டுகிறது அல்லவா அதுபோல்*இருக்க வேண்டும் என்றும் பேசினார் .


    முகலாய பேரரசர்*அக்பர்*சபையில்*பீர்பால்*இருந்தார் .அவருடைய இசையை அக்பர் பெரிதும் விரும்புவார் .பீர்பால் அக்பரிடம் சொன்னார் .ஒருநாள் என்னுடைய குருநாதர் தான்ஸேனை பார்க்க போகலாம் என்று .தான்ஸேன் வீணையை வாசித்தார் என்றால் எரியாத விளக்குகள் எல்லாம் எரியும். அப்படி ஒரு சக்திவாய்ந்த இசை கலைஞன் .தான்ஸேனை பார்த்துவிட்டு வந்த பிறகு*அக்பர் பீர்பாலிடம் ,இதுவரை உன்னைத்தான் மிக பெரிய இசை கலைஞன் என்று நினைத்திருந்தேன் . ஆனால் உன் குருநாதர் உன்னை மிஞ்சிவிட்டாரே எப்படி என கேட்க, பீர்பால் அக்பரிடம் ,அரசே,நான் வாசிப்பது உங்களுக்காக ,ஆனால் என் குரு கடவுளுக்காக வாசிக்கிறார் .ஆகவே நீங்கள் யாருக்காக வாசிக்கிறீர்கள், யாருக்காக ஆடுகிறீர்கள்,பாடுகிறீர்கள் என்பது முக்கியம் என்கிற அதே கருத்தை எம்.ஜி.ஆர். சுருக்கமாக சொல்கிறார் . அதாவது ஒரு பாடல் பாடுகிறவர் ,ஆடுகிறவர் முதலில் தன்னை திருப்தி படுத்திக்கொள்ள வேண்டும், தான் ரசிக்க வேண்டும் தனக்கு திருப்தியானதையே மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்*மிக பெரிய தத்துவமாக கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்கிற வாதம் காலம் காலமாய் நடந்து வருகிறதே அதை கலைக்குரிய அம்சமாக எம்.ஜி.ஆர். எடுத்துரைக்கிறார் .இப்படி, நாட்டிய சாஸ்திரம், தொல்காப்பியம் ஆகியவற்றை பற்றி தன் கருத்துக்களை வெளியிட்டுளளார் .* தமிழிலே எட்டு ரசம்,பாகம் என்று சொல்லுவார்கள்,,அதிலே மோன* நிலை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் உண்டு .அந்த மோன நிலை ,நாட்டியக்கலையிலும் உண்டு . ஒரு மாபெரும் கலைஞன் என்கிற வகையில் தனது நுட்பமாக கவனிப்பை , தனக்கு தெரிந்ததை, அறிந்ததை கற்ற உண்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறையோடு இருந்துள்ளார் .என்பதை அவர் பரதநாட்டியக்கலை பற்றி பேசும்போது நாம் அறிந்து கொள்ளலாம் தொல்காப்பியத்தை பற்றிய அவரது கருத்துக்கள் அவரின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது .*.இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை,கவனம் ,இதுதான் வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அந்த அக்கறை பிற மனிதனின் மீது இருக்கும்போது ,உங்களை அந்த பிற மனிதர்கள்மீது ஒருவராக, இருவராக,நூறாக, ஆயிரமாக, லட்சமாக ,கோடியாக ஆகும்போது நீங்கள் தலைவராகலாம் என்ற தத்துவத்தை உருவாக்கியவர்தான் அந்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.


    நடிகர் ராஜேஷ் தனக்கு தெரிந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறார் . நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்த காலத்தில் ஒரு தயாரிப்பாளருக்கு தெரிந்த சோதிடர் எம்.ஜி.ஆரை சந்தித்து ,நீங்கள் வரும் காலத்தில் இந்த நாட்டை ஆளுகிற சக்தியாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று சொல்லும்போது , உங்களுக்கு பணம் வேண்டுமானால் சொல்லுங்கள் தருகிறேன் . அதற்காக இப்படியெல்லாம் சொல்லி என்னை திருப்திப்படுத்த வேண்டாம் .என்று அந்த காலத்தில் ரூ.500/- கொடுத்தாராம் . ஆனால் அந்த ஜோதிடர்* என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது நான் பணம் வாங்க தயாரில்லை என்று சொல்லிவிட்டு போனாராம் .இது நடந்து அடுத்த 20 ஆண்டுகளில் உண்மையிலேயே எம்.ஜி.ஆர். முதல்வராகிவிட்டார் . ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்.தான் வசூல் சக்கரவர்த்தி, முடிசூடா மன்னன் , அவரது சில படங்கள் வெற்றியடையாவிட்டாலும் குறைந்த பட்ச வசூலை உறுதியாக வசூலித்துவிடும் ,தயாரிப்பாளருக்கு எந்தவகையிலும் நஷ்டம் ஏற்படாது என்கிற நிலை இருந்தது .அந்த காலத்தில் சிவாஜி கணேசன் நடித்த உத்தம புத்திரன் 100 வது நாள் விழாவிற்கு அவரை யானைமீது அமர்த்தி ,ஊர்வலமாக அழைத்து வந்தனர் .அதுபோல நாடோடி மன்னன் படத்தின் வெற்றிவிழாவிற்கு யானைமீது அல்லாமல்ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ,சற்று வித்தியாசமாக* தேரில் அமர்த்தி ,ஊர்வலமாக அழைத்து வரலாம் என்று யோசனை சொன்னார்கள் . ஆனால் தெய்வங்களை அலங்கரித்து அழைத்துவரப்படும் தேரில் தான் அமர தயாரில்லை என்று மறுத்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.என்றும் பதினாறு - கன்னித்தாய்*

    2.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*

    3.ஆடல் காணீரோ ,விளையாடல் காணீரோ -மதுரை வீரன்*

    4.அழகிய தமிழ் மகள் இவள் -ரிக்ஷாக்காரன்*

    5.கடவுள் இருக்கின்றான் - ஆனந்த ஜோதி*

  10. #509
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் டிவிக்களில் நிருத்ய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்களின்*பட்டியல் (17/8/20 முதல் 23/8/20 வரை )
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    17/08/20 - வேந்தர் டிவி -காலை 10.30 மணி -தாயை காத்த தனயன்*

    * * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * *பாலிமர் டிவி -பிற்பகல் 2 மணி -* நல்ல நேரம்*

    18/08/20-சன் லைஃப் - காலை 11 மணி* - காவல்காரன்*

    * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - ஆனந்த ஜோதி*

    * * * * * * * ராஜ் டிஜிட்டல் -* இரவு 7 மணி -* அடிமைப்பெண்*

    19/08/20- மெகா டிவி* - மதியம் 12 மணி -சக்கரவர்த்தி திருமகள்*

    * * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - திருடாதே*

    * * * * * * *ராஜ் டிஜிட்டல் -இரவு 7மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

    20/08/20- சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*

    * * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி /இரவு 7* மணி -நீதிக்கு தலைவணங்கு*

    * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * *புதுயுகம் - இரவு 7 மணி* *-* குடும்ப தலைவன்*

    21/08/20 -* ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*

    22/08/20 - சன் லைஃப் -காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி -இரவு 7 மணி - நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * * ஜெயா டிவி* - இரவு 10 மணி -* ஆயிரத்தில் ஒருவன்*

    23/08/20 - சன் லைஃப் - காலை 11 மணி - சந்திரோதயம்*

    * * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - தேர்த்திருவிழா*
    **

  11. #510
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பாசப்பிணைப்பு

    ஆள்பவன் படையைத் தனக்கு அணையாக வைப்பவன் அல்ல...
    தன் மக்களை தனக்குத் துணையாக வைப்பவன்...

    #புரட்சித்தலைவரின் #வெற்றிக்குக் #காரணம்...
    மக்கள் அவர் மீது கொண்ட நேர்மையான நம்பிக்கை ...

    #எனது #மக்களின் #ஆசிகளே #என்னைத்தாங்கிவருகிறது என்பது பொன்மனச்செம்மலின் அசைக்க முடியாத நம்பிக்கை ...

    தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் வீட்டிலிருந்து கோட்டைக்குச் செல்லும்போதெல்லாம் அவருடைய காருக்கு முன்னால் பைலட் காரெல்லாம் போகாது...இப்போது போல்...

    காரில் உதவியாளர், முதல்வர் பிறகு டிரைவர் அவ்வளவு தான்...

    ஒருமுறை தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் வீட்டிலிருந்து கிளம்பும் போது அப்போதைய போலீஸ் சூப்பரண்ட் திரு. சுப்பையா, முதல்வர் எம்ஜிஆரைப் பார்த்துக்கேட்டார்...
    ஐயா, நான் வேண்டுமென்றால் உங்களுக்கு செக்யூரிட்டியாக வரவா? எனக் கேட்க, சிரித்துக்கொண்டே முதல்வர்,

    "எனக்குப் பாதுகாப்பாக இந்தத் தமிழ்நாட்டு மக்களே இருக்கும்போது தனியாக நீங்கள் எதற்கு???" என்றார்...

    பொன்மனச்செம்மல் ஆட்சியில் மக்கள் மீது முதல்வருக்கும், முதல்வர் மீது மக்களுக்கும் அவ்வளவு பாசப்பிணைப்பு இருந்தது............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •