-
4th September 2020, 09:08 AM
#621
Junior Member
Diamond Hubber
வட சென்னையை
கலக்கிய
வாத்தியார் ...........
___________________
எல்லாப் பகுதியிலும் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம் என் பதிவு வடசென்னையை பற்றியது...
வட சென்னையில் பெரும் பகுதி திரையரங்குகளை எம் ஜி ஆர் படங்களே ஆட் கொள்ளும்.
முருகன் திரையரங்கம் எங்களுக்கு பாடசாலை
இத் திரையரங்கில் பூத்த சின்ன சின்ன மலர்கள் நாம்.
சமிபத்தில் இத் திரையரங்கம் இடிக்கப் பட்ட செய்தியறிந்த எனக்கு ஒரு கனம் செய்வதறியாது நின்றேன் .
அங்கு சென்று இடிந்த தூண்களை தொட்டுப் பார்த்தேன் .
எங்களின் விழுதுகள்,
மக்கள் திலகத்தின் கல்வெட்டுக்களல்லவா அத் தூண்கள் .
"மந்திரி குமாரி", படம் மாலை காட்சி அரங்கம் நிறைந்திருந்தது வாராய் நீ வாராய் பாடல் காட்சியில் மக்கள் தன்னை மறந்திருந்தினர் படம் முடிய இன்னும் இருபது நிமிடங்களே உள்ள தருணத்தில் மின்சாரம் தடைபட்டது .
அப்பொழது ஜெனரேட்டர் கிடையாது அரை மணிநேரம் கடந்தும் மின் தடை தொடர்ந்தது பின் செயவதறியாது மக்கள் .
திரையரங்கின் உரிமையாளர் பரமசிவ முதலியார் அனைவரையும் அழைத்து மேனஜர் அறையில் அமர்ந்தவாறே டிக்கெட்டுக்களின் பின்னால் கையொப்பமிட்டு நாளை காலை 11 மணியளவில் வாருங்கள் படம் திரையிடுகிறேன் இப்பபொழது கலைந்து செல்லுங்கள் என்றார் .
அதிசயம்
ஆனால் உண்மை !
அடுத்த நாள் சரியாக 11 மணியளவில் நேற்றைய கூட்டம் மீண்டும் அரங்கு நிறைந்திருந்தது வாராய் நீ வாராய் பாடல் காட்சியிலிருந்து படம் தொடங்கி இருபது நிமிடங்களில் படம் நிறைவடைந்தது !
இது உனக்கு எப்பிடி தெரியும் ? என்ற வினா ? தோன்று கிறதல்லவா !
அக்கூட்டத்தில்
நானும் ஒருவன் ..........
-
4th September 2020 09:08 AM
# ADS
Circuit advertisement
-
4th September 2020, 09:10 AM
#622
Junior Member
Diamond Hubber
ஜோடியில் ஜெ.வுக்கு அடுத்தபடியாக இருப்பவர் சரோஜாதேவி.
1.இந்த அபிநய சரஸ்வதி கன்னடத்துப்
பைங்கிளி தலைவருடன் 26 படங்கள் நடித்துள்ளார்.
2.நாடோடி மன்னனிலிருந்து ஆரம்பித்த இவர் அரசகட்டளை வரை
நடித்த இவர் தீவிர தலைவர் ரசிகை.
3.இவர் எம்ஜிஆருடன் 5
கலர் படம் நடித்துள்ளார்.
அத்தனையும் ஹிட்.
1.நாடோடி மன்னன் படம் பகுதி கலர்.
தலைவர் இயக்கிய படம்
வாழ்வின் திருப்புமுனை ஆக்கியது.
2.எங்க வீட்டுப் பிள்ளை
இந்த படத்தின் வசூல்
விஜயா நர்சிங் ஆஸ்பத்திரி கட்டினார்.
வெள்ளிவிழா படமாகும்.
3.அன்பே வா என்ன அற்புதமான நகைச்சுவைப் படம்.
இதில் நடித்த அனைவருக்கும் எம்ஜிஆர் தன் சொந்த செலவில் சிம்லாவில்
கம்பளி போர்வை
உணவு ஏற்பாடு செய்து
கொடுத்தார்.
தலைவர் வாங்கிய சம்பளம் அன்று 3 இலட்சம்.உடனே செலவு.
மீதி தனது அண்ணன்
குடும்பம் தன் செலவு
மற்றும் திராவிட கழகத்திற்கு தர்ம காரியத்திற்கு
செலவு செய்வதுதான்
தலைவரின் கடமையாகும்.
அப்போது சரோஜாதேவி வாங்கிய சம்பளம் 90000.00ரூபாய்
அவர் குடும்பம் காங்கிரஸ்காரர்கள்.
4.அடுத்து படகோட்டி
மீனவ சமுதாயத்தை
அப்படியே உள்வாங்கி
நடித்தார் செருப்புகூட
அணியாமல் படம் முழுவதும் நடித்திருப்பார்.
பாடல்கள் வாலி.அனைத்தும் ஹிட்
ஆனதால் அவருக்கு
தலைவர் கையிலிருந்த
தங்க மோதிரத்தை பரிசளித்தார்.
மிகவும் அருமை என பாராட்டினார் வள்ளல்.
5.பறக்கும் பாவை
இப்படமே சர்க்கஸ் உலகம்.
தத்ருபமாக இருந்தது.
தலைவர் படத்தில் தான்
நடிப்பார் என்றில்லை
நேரிலேயே தர்மம்
செய்வதலிம்
மக்களை நல்வழிப்படுத்தலும்
தாயை தெய்விம வழிபடுதல்
தமிழ் மொழியை
பாராட்டுதல் இப்படி
எண்ணற்ற காரியங்களகளை
செய்வதில்
அகாய சூரர்.
6.சரோஜாதேவி
தலைவருடன்
மீதி21 படமும் கருப்பு
வெள்ளைதான்.
ஒரு சில படங்கள்
கதை முடிவு சரியில்லாததால் தோல்வி அடைந்தது.
மற்றபடி அனைத்தும்
வெற்றியே.
அப்படியே தோல்வி
என அவருக்கு தெரிந்தால் உடனே
நஷ்ட ஈடு கொடுப்பதும்
தானே சம்பளம் வாங்க மாட்டார்.
நன்றி.........
-
4th September 2020, 09:25 AM
#623
Junior Member
Diamond Hubber
நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., திரி 100001 பதிவுகள் வெற்றிகரமாக கடந்ததற்கும், நீண்டகால சாதனைகளை நீடுழி படைக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பார்வையாளர்களுக்கு மிக்க நன்றிகள்... இத்தகைய சாதனை படைக்க வாய்ப்பளித்த மையம் உரிமையாளர்கள்/ நிர்வாகிகள் மற்றும் நெறியாளர் உட்பட சக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.............
-
4th September 2020, 01:03 PM
#624
Junior Member
Diamond Hubber
சினிமா உலகை தாக்கிய சுனாமி.
உரிமைக்குரல்.
------------------------------------------------------------
இத்தனை காலம் எம்ஜிஆர் நடித்த சாதாரண வெற்றிப் படங்களை பார்த்தோம். ஆனால் மகத்தான வெற்றி பெற்ற ஒரு படத்தை தற்போது பார்க்கலாம். சுனாமி, பிரளயம் இது போன்ற நிகழ்வுகளை பற்றி நாம் ஓரளவு புரிந்து வைத்திருப்போம். ஆனால் ஸ்ரீதர் ஒரு பெரும் சுனாமியில் சிக்கி மகிழ்ந்த கதை தெரியாமா? ஆம்.
அந்த சுனாமிதான் ஸ்ரீ தர் எம்ஜிஆரை வைத்து எடுத்த "உரிமைக்குரல்" படம்.
திரையுலகில் யாரும் இப்படி ஒரு வெற்றியை கண்டிருக்க முடியாது.
சிவாஜியை வைத்து தான் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்க எத்தனை படங்கள் எடுத்தாலும் அது வட்டிக்கே கட்டாது. அந்த சூழ்நிலையில் அவர் தயாரித்த "உரிமைக்குரல்" சினிமா உலகத்தையே தாக்கிய சுனாமி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீதரின் புதுமையும் எம்ஜிஆரின் திறமையும் ஆற்றலும் ஒன்று சேர்ந்து உருவானதுதான் "உரிமைக்குரல்" என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவரை வெளிவந்த அத்தனை தமிழ் தெலுங்கு இந்திப்படங்கள் அனைத்தையும் வாரி சுருட்டி கொண்டு போய் குப்பைகளாக கொட்டிய படம்தான் "உரிமைக்குரல்".
சுனாமியால் பேரழிவை சந்தித்தது உலகம். ஆனால் ஸ்ரீதர் தயாரித்த "உரிமைக்குரல்" எழுப்பிய சுனாமி ஸ்ரீதருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் யாரும் ஸ்ரீதர் பக்கத்திலேயே வராத போது அத்தனை தயாரிப்பாளர்களும் ஸ்ரீதரை சுற்றிக் கொண்டு எம்ஜிஆரை வைத்து எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்ட அதிசயத்தை கண்டு அவர் பூலோகத்திலேயே சொர்க்கத்தை அனுபவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே காட்சியை சற்று பின்னோக்கி பார்க்கிறார். "சிவந்த மண்" வெளியான போது நடைபெற்ற காட்சி அது. கடன்காரர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டதுடன் நில்லாமல் பணம் எப்போது எங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று அனைவரும் ஸ்ரீதரை சுற்றி நெருக்கடி கொடுக்கும் சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
அந்த மரணவேதனையை
அனுபவிக்கும் போது யாரும் அவருக்கு கைகொடுக்க முன் வரவில்லை. ஆனால் தன்னை கரையேற்ற ஒரு அற்புதமான மனிதன் வருவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதை நினைத்துதான் தலைவரை அண்ணனாக நினைத்து தனது அடுத்த படத்துக்கு "அண்ணா நீ என் தெய்வம்" என்ற பெயரை வைத்து
நிம்மதி அடைந்தார்.
படம் வெளிவருவதற்குள் அண்ணன் தன் குறையை தீர்த்தது போல். அனைத்து தமிழக மக்களின் குறை தீர்க்க தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆனந்த கணணீர் வடித்து நின்றார் ஸ்ரீதர்.
இனி அந்த சுனாமியின் ரிக்டர் அளவுகளைப் பற்றி பார்க்கலாம்.
இந்த சுனாமியை பொறுத்தவரை ஊர் ஊருக்கு வெவ்வேறு ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
முதல் சுற்றில் 44 திரையரங்குகளில்
வெளியாகி கிட்டத்தட்ட ஒரு கோடியை வசூலாக பெற்றது. அதன்பிறகு வெளியான இரண்டாவது சுற்று மட்டும் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 3
கோடியை வசூலாக பெற்று இந்திப் படங்களின் வசூலையும் தாண்டி புதிய ரிக்கார்டை உருவாக்கியது.
ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கும் ஸ்ரீதருக்கும் ஒத்து வராது, சீக்கிரம்
இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தவர்கள் "உரிமைக்குரலி"ன் வெற்றியை கண்டு திகைத்து நின்றார்கள்.
அவர்களில் முக்கியமான சிலர் அவரது ஏற்கனவே பாதி நின்று போன படத்தை தொடர விடாமல் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆர் தன்னோடு இருந்தும் ஸ்ரீதர் அடக்கமாக மேற்படி நடிகரிடம் படத்தை முடிக்க முயற்சி செய்தும்,
பல விதத்தில் இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் ஒழுங்காக நடித்துக் கொடுத்தாலே வரும் நஷ்டத்துடன் இந்த நஷ்டமும் சேர்ந்து கொண்டது.
ஏற்கனவே மூன்று படங்கள் மூலம் அவர் அடைந்த இழப்புடன் நாலாவதாக ஒரு டோட்டல் லாஸ் சேர்ந்து கொண்டது. ஆனால் இப்போது ஸ்ரீதர் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக புது உத்வேகத்துடன் மீண்டும் களமிறங்கி தன்னை தவிக்க விட்டவர்களுக்கு பெரிய கலக்கத்தை உண்டு பண்ணினார் எப்படியோ பெரும் சிரமத்துக்கு இடையில் அந்த படத்தை முடித்து மீண்டும் நஷ்டத்தை அடைந்தார். குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதையாக முடிந்தது.
அந்த படத்தை முடிக்காமல் இருந்திருந்தால் பிரிண்ட் செலவு மற்றும் விளம்பர செலவாவது மிச்சமாகியிருக்கும். எம்ஜிஆர் அருகில் இருக்கும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி அதில் வெற்றி பெற்று மீண்டும் அனைவரும் விரும்பும் இயக்குநரானார். கோவையில் "உரிமைக்குரலி"ன் வசூல் யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு இமாலய அளவில் இருந்தது..
மொத்தம் 8,69 000 ஐ
வசூலாக பெற்றதை கண்டு சிவாஜி ரசிகர்கள் கொஞ்ச நாட்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் முக்காடுடன் சென்றதாக ஒரு சிலர்
தகவல் சொன்னார்கள். மதுரையில் 200 நாட்கள் ஓடி இதுதான் சாதனை என்று சாதனைக்கு ஒரு புதிய அளவுகோல் நிர்ணயித்தது
என்றே சொல்ல வேண்டும்..
இது போல் நெல்லையில் வெள்ளிவிழா ஓடி நெல்லையில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது.
பல ஊர்களில் புது புது சாதனைகளை உருவாக்கி சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்ப்படங்கள் இவ்வளவு வசூலை பெற முடியும் என்று உலகுக்கு
உணர்த்திய படம் "உரிமைக்குரல்" என்றால் அது மிகையாகாது..
ஈரோடு ராயல். திரையரங்கில்
155 நாட்கள் ஓடி புதிய சாதனையை உருவாக்கியது..அதன்பிறகு அப்படி ஒரு சுனாமியை திரையுலகில் சந்திக்கவேயில்லை என்று சொல்லலாம். மொத்தத்தில்.
ஸ்ரீதரின் வாழ்வை கவ்விய சூது விலகி தர்மம் வென்று மீண்டும் திரையுலகில் தர்மம் வலம் வந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வே..........
-
4th September 2020, 05:38 PM
#625
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதரின் புற வாழ்க்கையின் ஆன்மாவிற்கு இருந்த துடிப்பு என்னவென்றால், பிறரை நேசி, பிறருக்கு உதவு, பிறருக்கு உன்னால் முடிந்ததை செய் என்பதுதான் .அப்படியான செயல்பாடுகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள்* வாழ்க்கையில்**தங்களை இன்றும் அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் .என்பதை கேட்கும்போது எம்.ஜி.ஆரின் ஆன்மா உண்மையிலேயே வென்றிருக்கிறது .உயிருடன் இருக்கிறது .
எம்.ஜி.ஆர்.அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது ,நெடுஞ்செழியன் நிதி அமைச்சராக* இருக்கிறார் . அப்போது கடுமையான ரேஷன் அரிசி பற்றாக்குறை* வருகிறது .நெடுஞ்செழியன் ,சக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுடன்* அரிசி விலை உயர்வு பற்றி**ஆலோசனை நடத்துகிறார் .*ஆர்.எம்.வீரப்பன் ,பதில் அளிக்கும்போது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருபோதும்**ஏழைகளுக்கு வழங்கும் ரேஷன் அரிசிமீது விலை உயர்வு அளிப்பதை விரும்பமாட்டார் .* அது இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை முடிவு அதில் மாற்றங்கள் செய்ய கூடாது என்றார் .ஆகவே விளிம்புநிலை மக்கள் மற்றும் ஏழைகள் மீது கருணை உள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த செய்தி தெரிவிக்கிறது .
ஒரு தந்தை ,5 வயதுள்ள தன் மகனை தோளில் சுமந்தபடி எம்.ஜி.ஆர். காரில் புறப்படும் சமயம் ஓடி வருகிறார். அதை கண்ட எம்.ஜி.ஆர். யார் நீங்கள்.எதற்காக*இவ்வளவு பெரிய பையனை சுமந்தபடி ஓடி வருகிறீர்கள் என்று விசாரிக்கிறார் .நீங்கள் இவனுக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக என்கிறார் தந்தை .பெரிய பையனாக இருக்கிறான்.இன்னுமா இவனுக்கு பெயர் வைக்கவில்லை. வீட்டில் என்ன பெயர் வைத்து அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மலைக்கள்ளன் என்று தந்தை சொன்னார் .வியந்து போன எம்.ஜி.ஆர். இப்படியா ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது .என கேட்டதற்கு என் மனைவி மலைக்கள்ளன் படம் பார்க்கும்போது இவன் பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயர் வைத்தோம் என்றார் தந்தை ..சரி என்று சொல்லி அந்த குழந்தையின் கையில் ரூ.100/- கொடுத்தார் எம்.ஜி.ஆர். சுமார் பத்தாண்டுகள் கழித்து , அந்த குழந்தை மாணவனாக வளர்ந்த பின்* அந்த மாணவனுடன் தந்தை ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறார் . எம்.ஜி.ஆர். கோட்டைக்கு காரில் புறப்படும் சமயம் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நூறு ருபாய் நோட்டை கண்ணாடிக்குள் வைத்து ,பிரேம் செய்து எம்.ஜி.ஆர். கண்ணில் படும்படி நிற்கிறார்கள்**. எம்.ஜி.ஆர். இதை கவனித்து ,காரை நிறுத்தி,யார் நீங்கள், தினமும் இப்படி நிற்கிறீர்கள்* ,என்ன வேண்டும் என கேட்கிறார் உங்களுக்கு நினைவிருக்கிறதா*.நான்தான் மலைக்கள்ளன் .பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் எனக்கு அளித்த பணம்தான் இந்த ரூ.100/-என்கிறான். என்னை என் தந்தை நன்றாக படிக்க வைத்து நல்ல மார்க் வாங்கியுள்ளேன். எனக்கு மருத்துவம் படிக்க ஆசை. ஆனால் ,எனக்கு போதிய மார்க் இல்லை.அதனால் கிடைக்காது ,வாய்ப்பில்லை என்கிறார்கள் .நீங்கள் தமிழகத்தின் முதல்வராயிற்றே. அதனால் உங்கள் உதவி நாடி வந்துள்ளேன் என்றான் . உடனே,எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனையும் அவன் தந்தையையும் பின்னால் வரும் காரில் ஏற சொல்கிறார் .தமிழ்நாட்டில் மருத்துவத்திற்காக இருக்கைகள் நிரம்பிவிட்டதால்*கர்நாடகத்தின் முதல்வர் குண்டுராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார் .எனக்கு ஒரு மருத்துவ சீட் இடம் வேண்டும் என கேட்க,நீங்கள் கேட்டு நான் இல்லை என்று சொல்ல முடியுமா* யாருக்கு அண்ணா என்று குண்டுராவ் என்று சொல்ல ,என் மகனுக்குத்தான் என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் . இந்த பதிலை சொன்னதும் ,மலைக்கள்ளனின் தந்தை ,ஐயா என் மகனை, உங்கள் மகன் என்று அறிமுகப்படுத்தினீர்கள் அதுவேபோதும் . எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று புளகாங்கிதம் அடைந்தாராம் ..
மலைக்கள்ளன் பெங்களுருவில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார் .தொடர்ந்து பல்வேறு துறைகளில் நிபுணராக விளங்கினார் .* ஜப்பானில் இருந்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் கானு வந்தபோது அவரது உதவியாளராக ஒரு மருத்துவர் வந்து இருந்தார் . அவர் யார் என்று* எம்.ஜி.ஆர்.தரப்பில்*வினவியபோது* *அவர்தான் மலைக்கள்ளன் என்று கூறப்பட்டது .
சென்னை பல்கலை கழகத்தில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதற்கு முடிவு எடுக்கப்பட்டது .சிண்டிகேட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும் .அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன . இதுபற்றி சிண்டிகேட் உறுப்பினராக உள்ள திரு.துரை முருகன் அவர்களுக்கு தகவல்* தெரிவிக்கப்படுகிறது .உடனே, துரைமுருகன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதற்கு சென்னை பல்கலை கழகத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த முடிவை நான் ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்று ஆலோசனை கேட்கிறார் .* ஒருபோதும் எதிர்க்க கூடாது .வேறு யாராவது எதிர்க்கலாமே தவிர, நீ கண்டிப்பாக எதிர்க்க கூடாது .* நீ சட்ட கல்லூரியில் படிக்கும்போது மாதா மாதம் ரூ.500/- பணம் அனுப்பியவர் .அதுமட்டுமல்ல நீ படித்து பட்டம் வாங்கி நல்லமுறையில் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர் . உன் நலனில் எப்போதும் விருப்பம் உள்ளவர் .உன் திருமணத்திற்கு மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்து ,திருமண பரிசாக 25 பவுன் தங்க சங்கிலி கொடுத்தவர் .**அவருடைய தயாள குணத்தை வாழ்த்தி, சிண்டிகேட் உறுப்பினர் என்கிற வகையில் நீதான் அவருக்கு பட்டமளிப்பதை வரவேற்று ஆதரிக்க வேண்டும்*என்று கருணாநிதி யோசனை சொன்னாராம் . உங்களுடைய அரசியல் வாழ்க்கை வரலாறில் ஏதாவது தவறிவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா என்று கருணாநிதியை விகடன் நிருபர்கள் கேட்டதற்கு ,ஆமாம், எம்.ஜி.ஆர். என்கிற ஒரு உற்ற நண்பரை நான் இழந்துவிட்டேன் என்று வருத்தத்துடன் சொன்னாராம் .அப்படி எம்.ஜி.ஆருக்கும் ,கருணாநிதிக்கும் இடையே,அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு ஆழமான நட்பு இருந்திருக்கிறது .
மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
---------------------------------------------------------------------------------
1.ஏய் நாடோடி, போகவேண்டும் ஓடோடி - அன்பே வா*
2..கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
3.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி*
4.எம்.ஜி.ஆர். பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*
5.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
6.எம்.ஜி.ஆர். -எம்.ஜி.சக்கரபாணி உரையாடல் - மலைக்கள்ளன்*
7.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
-
4th September 2020, 08:05 PM
#626
Junior Member
Diamond Hubber
செப்டம்பர் மாதத்தில் நடந்த மக்கள் திலகத்தின் ...... திரை உலகத்தின் மலரும் நினைவுகள் .
1956
*********
மக்கள் திலகம் எம்ஜிஆர் - சின்னப்பா தேவர் கூட்டணியில் உருவான முதல் வெற்றி காவியம்
''தாய்க்கு பின் தாரம் ''
21.9.1956ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி .
1960
**********
மக்கள் திலகத்தின் ''ராஜா தேசிங்கு '' திரைப்படம் 2.9.1960ல் வெளிவந்தது .
மக்கள் திலகத்தின் இரட்டைவேட நடிப்பு மிகவும் அருமை .
மக்கள் திலகம் & பத்மினி நரிக்குறவ நடனம் பிரமாதம் .
1964
********
25.9.1964 அன்று ''தொழிலாளி '' திரைப்படம் வெளிவந்தது .
மக்கள் திலகம் தொழிலாளியாக அறிமுகமாகி பின்னர் உயர் பதிவிற்கு சென்று உழைக்கும் தொழிலாளருக்கு பல நன்மைகள் செய்யும் அருமையான காட்சிகள் படத்தின் சிறப்பாகும் .
1966
********
18.9.1966 அன்று வெளிவந்த திரைப்படம் ''தனிப்பிறவி ''
உழைப்பின் நோக்கத்தை எடுத்துரைத்த சிறப்பான காவியம் .
1967
*******
7.9.1967 அன்று வெளிவந்த ''காவல்காரன் '' பிரமாண்ட வெற்றி படம் .
1967ல் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட படம் .
1968
*******
மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ''ஒளிவிளக்கு ''
20.9.1968ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஜெமினியின் முதல் வண்ணப்படம் ,
1969
********
சென்னை கிருஷ்ணா
மதுரை - சிந்தாமணி
சேலம் - சாந்தி
அடிமைப்பெண் திரைப்படம்
19 வது வாரம் ஓடிக்கொண்டிருந்தது .
நம்நாடு - படத்தின் பாடல்கள் ரிக்கார்ட் அமோக விற்பனையானது .அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். ரசிகர்கள் படம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் .
1970
*********
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்க்காக ஜப்பான் பயணம் செய்தார் .
1971
********
ரிக் ஷாகாரன் 100 வது நாள் வெற்றி விழா. மக்கள் திலகம் பல ஊர்களில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டார் .
1972
********
மக்கள் திலகத்தின் ''அன்னமிட்டகை '' 15.9.1972அண்ணா பிறந்த நாளில் திரைக்கு வந்தது .
படத்தின் துவக்க காட்சிகளில் எம்ஜிஆர் கணீர் குரலில் [ 1966ல் படமாக்கப்பட்டது ] பேசும் காட்சிகள் மிகவும் அருமை .
1973
*******
உலகம் சுற்றும் வாலிபன் 150 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
பட்டிக்காட்டு பொன்னையா படமும் 50 வது நாள் கண்டது .
மக்கள் திலகம் மாஸ்கோ பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் .
1974
*******
நேற்று இன்று நாளை வெற்றிகரமாக 11 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது ,
அதிமுக இயக்கம் அபார வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருந்தது .
1975
********
இதயக்கனி படம் தென்னாடெங்கும் வசூலில் புரட்சியை உருவாக்கியது .6 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது ,
1976
********
மக்கள் திலகம் பல படங்களில் மும்மரமாக நடித்து கொண்டிருந்தார்
1977
********
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் .
மீனவ நண்பன் - 50 வது நாளில் நெருங்கியது ,தமிழகம் முழுவதும் வெற்றி ..........
-
4th September 2020, 08:07 PM
#627
Junior Member
Diamond Hubber
ஜாக்கிசானிடம் எம்.ஜி.ஆர். புத்தகம் அளித்த நடிகர் பில்லி வாங் !
இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் உருப்படியாக செய்து கொண்டிருக்கும் வேலைகளில் ஒன்று எனது பழைய சேகரிப்புகளை ஒழுங்குபடுத்துவது. அப்படி செய்த போது 1994 ம் ஆண்டின் 'பொம்மை' இதழ் ஒன்றில் தாய்லாந்து நடிகர், நமது நண்பர், எம்.ஜி.ஆர். ரசிகரான பில்லி வாங், உலகப்புகழ்
பெற்ற நடிகர் ஜாக்கிசானிடம்
'வேத நாயகன் எம்.ஜி.ஆர்.' புத்தகத்தினை பரிசாக அளித்த படம் இடம் பெற்றிருந்தது.
கதாசிரியர், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான, கதை ஆலோசனை குழுவிலுள்ள வசனகர்த்தா (நாடோடி மன்னன் உட்பட)
ரவீந்தர் எழுதிய புத்தகம் இது. இந்த விபரங்களை பில்லி வாங்கிடம் சொன்ன போது, "என்னிடம் கூட இந்த புத்தகம் இல்லை. என் கவலையை போக்கிவிட்டீர்கள்" என்று தன் மகிழ்ச்சியை, நன்றியை தெரிவித்தார்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.........
-
4th September 2020, 08:12 PM
#628
Junior Member
Diamond Hubber
சென்னையில் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் கடந்த 30 ஆண்டுகளில்...
35 திரையரங்கில்..
மாறி.. மாறி திரையீட்டு
சாதனை படைத்தது.
பாரகன் .. 3
பிளாசா...1
சித்ரா... 4
ஸ்டார்.... 3
காமதேனு... 3
கபாலி... 1
ராம்... 2
லிபர்ட்டி... 3
சீனிவாசா ...5
ஜெயராஜ் ...2
நேஷனல் ... 1
பத்மனாபா.. 3
பிராட்வே.... 2
சிவசக்தி... 2
பாரத் ... 1
மேகலா....5
சரஸ்வதி...1
சரவணா.... 13
பாலாஜி.... 6
முரளி கிருஷ்ணா.. 2
லஷ்மி.. 1
கோல்டன் ஈகின் ..2
ராஜோந்திரா.. 2
விருகை நேஷனல்.. 2
பழனியப்பா..2
செலக்ட்..... 6
தங்கம் .... 3
பிரைட்டன்... 3
பாட்சா.... 4
முருகன்... 4
கிரவுன்...1
நடராஜ்....5
நாகேஷ்...2
கிருஷ்ணவேனி... 2
சன்...1
கோபிகிருஷ்ணா ..1
ராதா...2
சயானி...1
மெலோடி... 1
பாலமுரளீ... 3
பாண்டியன் 2
எம்.எம். தியேட்டர்...1
கடந்த 30 ஆண்டில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட கறுப்பு வெள்ளை காவியம்.
வசூல் பேரரசின்
கலங்கரை விளக்கம்.
எந்த நடிகரின் கலர்படங்கள் கூட வாழ்நாள் திரை ஒட்டத்தில் செய்யாத சாதனையில்..
கறுப்பு வெள்ளைபடமான காவியம் கலங்கரை விளக்கம் ஆகும்.
இன்னும் உள்ள 50 க்கும் மேற்பட்ட கறுப்பு வெள்ளை படங்கள் சென்னை மட்டுமே சாதனை இவ்வளவு... என்றால்... தென்னக வெளியீடு... மலைப்பாகவும், மிக வியப்பாகவும் இருக்கும்...........
-
4th September 2020, 08:19 PM
#629
Junior Member
Diamond Hubber
தமிழ்ப்பட உலகில் மக்கள் திலகத்தின் சாதனை திரைக் காவியங்களின்* வெற்றிகள்...
தொடர்ந்து வெளியான.....*
102 வது காவியமான*
புரட்சியாரின் "அடிமைப்பெண்*"
103 வது காவியமான ......
மக்கள் திலகத்தின் நம் நாடு*
104 வது காவியமான கலைப்பேரரசின்....*
மாட்டுக்கார வேலன்*
105 வது காவியமான....*
நடிகப்பேரரசின் என் அண்ணன்*
ஆகிய நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து சரித்திரம் படைத்த வெற்றிகள் சில.
நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும்* நான்கு தொடர் வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய சாதனையை தக்க வைத்த வரலாறு இன்று வரை கிடையாது.
அடிமைப்பெண் திரைக்காவியம்..
பற்றிய சிறப்புகள் சில......*
1) தமிழகத்தில் முதல் வெளியீட்டில் திரையிடப்பட்ட 40 திரையரங்கு களிலும் 50 நாட்களை கடந்தது.
2) இரண்டாம் வெளியீட்டில் 16 திரையரங்கில் 50 நாட்களை கடந்தது. கர்நாடாவில் 5 அரங்கு
சித்தூர், கேரளா 2 அரங்கு
இலங்கை 4 அரங்கு*
மொத்தம் 68 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை.
3) சென்னையில் நான்கு திரையரங்கில் 100 நாட்களை கடந்த முதல் வண்ணப்படமாக* வெற்றி கொண்டது.
4 ) சென்னையில் நான்கு அரங்கில் 100 காட்சிகள் விதம் 444 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
5) திருச்சியில் 154 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்திய முதல் தென்னிந்திய காவியம் அடிமைப்பெண்.
6) மதுரையில் 116 காட்சிகளும் சேலத்தில் 112 காட்சிகளும் கோவையில் 117 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை....*
7) தமிழகத்தில் 15 திரைப்பட அரங்குகளில் 100 நாட்களை கடந்து மதுரை சிந்தாமணி அரங்கில் வெள்ளிவிழாவை கடந்து சாதனையாகும் . இலங்கையில் 100 நாட்களை வெற்றிக்கொண்டது.....
8) 32 திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து வெற்றி கொண்ட திரைக்காவியம் அடிமைப்பெண்....
9) ஆறு மாத காலத்தில் ஒரு கோடியே 10 லட்சத்தை கடந்து வசூலை உருவாக்கிய திரைக்காவியம்..........
-
4th September 2020, 08:24 PM
#630
Junior Member
Diamond Hubber
10) சென்னை ஸ்ரீ கிருஷ்ணா, சேலம் சாந்தி, திருச்சி ஜுபிடர்.....ஆகிய அரங்கில்*
19 வாரங்கள் நடைபெற்றது அடிமைப்பெண் திரைக்காவியம்....
11) நெல்லையில் மிகப் பெரிய அரங்கான சென்ட்ரல்* அரங்கில் முதன் முறையாக அடிமைப்பெண் திரைக்காவியம் 100 நாட்களை கடந்து.... இரண்டு லட்சத்தை வசூலாக கொடுத்த முதல் காவியம்
12) சென்னையில் எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்குப் பின் 13 லட்சத்திற்கும் மேல் வசூல் கொடுத்த இரண்டாவது திரைக் காவியம் அடிமைப்பெண் ஆகும்.
13 ) தூத்துக்குடி நகரில் முதன் முதலில் 100 நாளை கொண்டாடிய காவியம் அடிமைப்பெண் ஆகும்.
14) பெங்களூர் நகரில் முதன் முறையாக 5 திரையரங்கில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 11 வாரங்கள் அதாவது முப்பத்தி மூன்று வாரங்கள் வெற்றி கொண்ட திரைக்காவியம் அடிமைப்பெண்.
15) இலங்கையில் 5 அரங்குகளில் வெளியிடப்பட்டு சென்ட்ரலில் 100 நாட்களை வெற்றிகொண்ட திரை காவியமாக அடிமைப்பெண் திகழ்ந்தது.
16) அடிமைப்பெண் காவியம் ஈரோடு, கோவை, தஞ்சை,காஞ்சி குடந்தை, வேலூர், கடலூர், மைசூர்
சித்தூர், பாண்டி என பல ஊர்களில் இரண்டு தியேட்டர் வெளியிடப்பட்டு சாதனையாகும்.
17) தஞ்சை, ஈரோடு இரண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 100 நாள் ஓடிய முதல் காவியம் அடிமைப்பெண்.
18) திருவண்ணாமலை நகரில் மூன்று திரையரங்கில் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை ஏற்படுத்திய காவியம் அடிமைப்பெண் ஆகும்.
19)தென்னகமெங்கும் 1969 ல் மாபெரும் வசூலை ஏற்படுத்திக் கொடுத்து அதிக திரையரங்கு களில் 100 நாட்கள், எழுபத்தைந்து நாட்கள், 50 நாட்களை கடந்து வெற்றி கொண்ட முதல் காவியம்*.
20) சென்னையில் 2ம் வெளியீட்டில் 18 திரையரங்கில் வெளியிடப்பட்டு
33* வாரங்கள் ஒடி நகரில்* 6 மாத காலத்தில் 18 லட்சத்தை பெற்ற காவியம் அடிமைப்பெண் ஆகும்.
21) வடசென்னை பகுதியில் எந்தபடமும் செய்யாத சாதனையில் 133 நாளில் 4லட்சத்து 77 ஆயிரத்தை கடந்து பல வெள்ளிவிழா படங்களின் வசூலை
முறியடித்தது அடிமைப்பெண்.
22) அடிமைப்பெண் இந்தியில் டப் செய்யப்பட்டு பல லட்சங்களை வடநாட்டில் குவித்த முதல் தமிழ்படம்.
23)அடிமைப்பெண் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு பல ஊர்களில் சாதனை படைத்தது.
24)* ஆங்கில பத்திரிக்கையான பிலிம் பேர் பத்திரிக்கை அடிமைப்பெண் படத்திற்கு சிறந்தபடம் என்ற பரிசை வழங்கியது.
25) அடிமைப்பெண் போன்ற படத்தை* இந்தியாவில் யாரும் தயாரித்ததில்லை... சர்லதேச படங்களுக்கு ஆறைகூவல் விடும் ஒரே படமாக திகழ்கின்றது என பல முன்னனி பத்திரிக்கைககள் பாராட்டிய ஒரே காவியமாக அடிமைப்பெண் திகழ்ந்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த வண்ண காவியம் மக்கள் திலகத்தின் இரண்டாவது காவியம்* அடிமைப்பெண் ஆகும்.
அகிலம் போற்றிய அடிமைப்பெண் காவியத்தின் வரலாற்றை வெல்லமுடியுமா..
அடுத்து....அவ்வாண்டில் வெளியான புரட்சிப்பேரரசின்
நம் நாடு திரைப் படத்தைப் பற்றி பார்ப்போம்............
Bookmarks