Page 89 of 210 FirstFirst ... 3979878889909199139189 ... LastLast
Results 881 to 890 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #881
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரொம்ப பதிவு சினிமாவைப் பற்றி போட்டாச்சு!. இனி அரசியல் பதிவு ஒன்றை போடலாம் என்று இந்தப் பதிவை வரைய விரும்புகிறேன்.
    தலைவரின் அந்தக்கால சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கதாநாயகியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளேந்தி எதிரிகளை அவர்கள் கோட்டைக்குள்ளே வீழ்த்தி
    ஆட்சியை கைப்பற்றி நாயகியையும் காப்பாற்றி கை பிடிப்பது போல் காட்சி அமைத்திருப்பார்கள்.

    அதே காட்சி அவரது வாழ்க்கையிலும் அரசியலில் நடைபெற்றது. 1980 ல்
    தலைவரது ஆட்சி கலைக்கப்பட்டதும்
    அருகிலிருந்த அரசியல் துரோகிகள் அணி மாறிய காட்சி தீயசக்தியின் தூண்டுதலால் அவரின் திரைக்கதையில் தோன்றியவாறு நிகழ்ந்தது.

    ஆனால் சற்றும் பதட்டமடையாத தலைவர், தன்னை நம்பி வருபவர்களை மட்டும். இருகம்யூனிஸ்ட், காகாதேகா போன்ற கட்சிகளை மட்டும் அரவணைத்துக் கொண்டு தமிழகத்தின் பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்த இ.காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை எதிர்த்து தனியொருவனாக களத்தில் நிராயுதபாணியாக மக்கள் ஆதரவு
    என்ற தேரில் ஏறி அமர்ந்து அதர்மத்தை அழிக்க சங்கொலி முழங்க களத்தில் முன்னேறி வரும் போது மற்றொரு பக்கம் தீயசக்தி தேர்தலுக்கு பின் அமையப்போகும் மந்திரி சபையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற
    பட்டியலை தயாரிக்கும் அதிகார,சதிகார பணியில் இறங்கியிருந்தார்.

    அத்தோடு நிற்கவில்லை. வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு பதவியேற்பு விழாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. புரட்சித்தலைவரோ
    சூறாவளி சுற்றுப் பயணத்தில், நான் செய்த தவறென்ன? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்ப
    மக்களோ மகராசா! உன்னிடம் ஏதும் குறை காணவில்லை. அதோ அந்த தவறான பொருந்தாத கூட்டணி மீதுதான் தவறு! என்று மனமேங்கிக் கொண்டு தர்ம தேவனுக்கு வாக்களிப்பது என்ற சங்கல்பத்தை
    மேற்கொண்டு செல்லும் இடமெல்லாம் மலர்தூவி நின்றனர்
    நம் காவிய நாயகனுக்கு. தேர்தல் வேளை வந்து விட்டது.

    தம்முடன் அணி சேர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காகாதேகா ஆகிய சிறிய அணிகளுடன் பெரும் போரை நடத்தி எதிரிகளை முன்பைவிட பலமாக தாக்கி ஓட ஓட விரட்டி ஆட்சியை கைப்பற்றிய மாட்சி இருக்கிறதே அது சொல்லில் அடங்கா. இதே காட்சியை சிவாஜிக்கு நினைத்து பாருங்கள். ஆட்சி டிஸ்மிஸ் செய்தவுடன் "தில்லானா மோகனாம்பா"ளில் கத்திகுத்துக்கு உருண்ட மாதிரி இந்திரா அம்மையாரின் காலிலும் தீயசக்தியின் காலிலும் கதறி உருண்டு அழுதிருப்பார். புரட்சித்தலைவரின் வீரத்தையும், ஆற்றலையும் பார்த்தும் சில கோழைகளுக்கு வீரம் வரவில்லையே? என்ன செய்ய! கடவுள் வீரத்தை வாயிலேயே வைத்து விட்டான் வசனம் பேசுவதற்கு.

    ஆனால் நம் தலைவரோ 'எதையும் தாங்கும் இதயம் கொண்டு' துரோகிகளை மக்கள் முன் நிறுத்தி தோலுரித்து காட்டி வெற்றி கண்டார். அந்தக் காட்சி "மந்திரி குமாரி"யில் கதாநாயகியை தூக்கிக் கொண்டு போர்புரியும் காட்சியை நினைவு படுத்தவில்லை? "மன்னாதி மன்னனி"ல் கட்டவிழ்த்து பாதபூஜை செய்யச் சொல்லும் போது கொதித்தெழுந்து சோழனின் குலப்பெண்ணையும் தூக்கிக் கொண்டு 'தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீரத்தின் உச்சியில் எக்காளமிட்டு ரதத்தில் ஏறி அனைவரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி விட்டு தாயகம் திரும்பும் காட்சி நிழாலாடுகிறதா?.

    சினிமாவில் மட்டுமல்ல வீரம்? அரசு வித்தைகளிலும் அவர் காட்டும் வீரத்தை மறக்க முடியுமா? 'புறமுதுகு காட்டி ஓடியவர்களுக்கு' இதெல்லாம் புரியுமா என்ன? ஒரு தேர்தலில் தோற்றதற்கு புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியவர்களுக்கு புரியுமா வீரத்தின் விளையாட்டை?. மீண்டும் சதிகாரனோடு சேர்ந்து சபையில் சங்கமித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
    அந்த தேர்தலில் தன்னை நம்பிய கம்யூனிஸ்ட்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியே இதுவாகத்தான் இருக்கும்.

    கம்யூனிஸ்டுகள் 20 சீட்களில் வெற்றி பெற்றார்கள். குமரி அனந்தனின் காகாதேகாவோ 6 சீட் வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை முதலிலே புரட்சித் தலைவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. மதுரை மேற்கில் சுமார் 20000 ஓட்டுகள் அதிகம் பெற்ற வெற்றியடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவு நெஞ்சை விட்டகலா!. தீயசக்தி ஹண்டேயிடம்
    வெற்றிக்கு அண்ணா நகரில் போராடி பின் தலைவரின் கடைக்கண் பார்வையால் வெற்றி கிடைத்த காட்சியை கண்டு தமிழகமே எள்ளி நகையாடியதும் மறக்க முடியாத காட்சி.

    இந்திரா அம்மையாருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையோடு கை கோர்த்தது தவறு என்பதை உணர வைத்த அற்புதமான தேர்தல்.
    புரட்சித்தலைவரின் புனிதப் போரில் அதிமுகவின் வெற்றியின் வீச்சு கூடியிருந்தது. தீயசக்திக்கு கணிசமான அளவு ஆதரவு குறைந்து காணப்பட்டது. அவருடைய ஆர்ப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

    தீயசக்தியின் பதவி ஏற்புக்கு அடிக்கப்பட்ட 'வால்போஸ்டர்' என்ன கதி ஆனதோ தெரியவில்லை. இது போன்ற ஒரு வித்தியாசமான தேர்தலை மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். இது ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்..........ks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #882
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    100% முற்றிலும் உண்மை. 1980ம் வருட தேர்தல் போன்று சிறப்பை பெற்றது வேறில்லை என அடித்து கூறலாம்... அமெரிக்க நாட்டின் TIME, Washington Post, Network Times உட்பட்ட உலக புகழ் வாய்ந்த பத்திரிகைகள் மக்கள் திலகம் அடைந்த பிரம்மாண்டமான வெற்றியை மிகவும் சிலாகித்து எழுதியிருந்த தகவல்கள் நாமறித்து சொல்லொண்ணா மகிழ்ச்சி கொண்டது நினைவிலாடுகிறது. இந்திய ஜனநாயக மாண்பை மிக பாராட்டி எழுதியிருந்தார்கள். மாநிலத்திற்கு யாருடைய ஆட்சி வேண்டும்?!, மத்தியில் எவருடைய ஆட்சி தேவை என்று பகுத்தறிந்து பொது மக்கள் மாபெரும் தீர்ப்பை அளித்திருந்தார்கள். அத்தகைய பெருமைமிகு நிகழ்வுகள் நமக்கெல்லாம் என்றுமே மகத்தான பெருமையே!!!������.........

  4. #883
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " ஏழைப்பங்காளன் " ( 1963 ) - இந்த படத்தில் :

    ஜெமினி கணேசன் மற்றும் ராகினி நடித்தது.

    இந்த படத்தைத் தயாரித்தவர் ஒரு காங்கிரஸ் அபிமானி,

    " ஏழைப் பங்காளன் " என்கிற பெயரையே அவர் , கர்ம வீரர் காமராஜ்

    ஐ மனதிற்கொண்டே வைத்தாராம் !

    " ஏழைப் பங்காளன் " படத்தை எடுத்த அவர் , அந்த படத்தைப் பார்க்க

    வருமாறு காமராஜ் அவர்களை

    - இழுத்துக் கொண்டு ( ! )

    வந்தாராம் !


    " எழைப் பங்காளன் ' படத்தைப் பார்த்தார் காமராஜ்

    படத்தைப் பார்த்த அவர் வெளியே வந்தார்....

    ' விடு விடு/ என்று நடந்தார்....

    காரை நோக்கி வந்தார்.....

    கார் கதவு திறக்கப் பட்டது....

    காரின் உள்ளே செல்ல தயாரானார்.....


    " படம் எப்படி இருந்திச்சு, அண்ணாச்சி....ஒண்ணும்

    சொல்லாமல் போறீங்களே ? "

    - கேட்டவர் தயாரிப்பாளர் !



    காமராஜ் அவரை நோக்கினார்.....சொன்னார் :



    " அதெல்லாம் நடிக்க வேண்டியவங்க நடிச்சத்தான்

    நல்லா இருக்கென்னேன் ! "



    காமராஜ் ஏன் அப்படி சொன்னார் ?


    " ஏழைப்பங்காளன் " படத்தில் ஜெமினிக்குப் பதில்

    எம்ஜிஆர் நடித்திருந்தால் நன்றாக

    இருந்திருக்கும் என்று காமராஜ் நினைத்தார் ! -...............Am...

  5. #884
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #postive #approach.........



    வாத்தியாரைப் பொருத்தவரை #தன்னைத்தேடி #வரும் #வாய்ப்புகளை அப்படியே #ஏற்றுக்கொள்வதில்லை. தன்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அதன்மூலம் #நம்பிக்கையூட்டும் #வகையில் என்ன #கருத்தை சொல்லப் போகிறோம் என்பதற்குத்தான் #முக்கியத்துவம் கொடுப்பார்.

    புரட்சித்தலைவரை வைத்து உதயம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் "இதயவீணை" என்ற திரைப்படத்தைத் தயாரித்து மாபெரும் வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து இன்னொரு படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    எம்ஜிஆருக்கு பொருத்தமாக கதை சொல்ற அளவிற்கு ஒரு கதாசிரியர் வேணும்... அப்படிக் கிடைத்தாலும் அவரோடு ஒத்துப்போகிற அளவிற்கு அந்த கதாசிரியர் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சொல்கின்ற நியாயமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்'. தேடி அலைந்ததில் அப்படி யாரும் கிடைக்கவில்லை.

    இறுதியில் இந்தியில் வெளிவந்த ஒரு படத்தைப் போய் பார்த்தார்கள். அந்தப் படம் எம்ஜிஆருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார்கள். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

    இந்தச் செய்தி எம்ஜிஆர் காதுகளுக்கு எட்டியது. உதயம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசினார். என்ன படம் அது? யாருடைய படம் என்று கேட்டவருக்கு பதில் சொன்னார்கள். அது சாந்தாராமின் 'தோ ஹாங்கி பாராத்'. சாந்தாராமை எம்.ஜி.ஆர் தனது குருவாக வைத்து மதித்தவர். "சாந்தாராமின் படம்னா போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்," என்றார் எம்ஜிஆர்.

    உதயம் புரொடக்ஷன்ஸ் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். ஒரு ஜெயிலர் கொடூரமான கைதிகளை தனது பொறுப்பில் வெளியே கொண்டு வந்து தனி இடத்தில் வைத்து அவர்களைத் திருத்துவதற்கு முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயிலரை கொலை செய்துவிட்டு கைதிகள் தப்பி ஓடி விடுகிறார்கள். இதுதான் இந்திப் படத்தின் கதை.

    படத்தைப் பார்த்த எம்ஜிஆர் எந்த கருத்தும் சொல்லாமல் எழுந்து வெளியே போனார். அவரைத் தொடர்ந்து போன மணியனும் வித்வான் லட்சுமணனும், "இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி விடலாமா," என்று கேட்டார்கள்.

    "இந்தப் படத்தை அப்படியே எடுக்க வேண்டும் என்றால் எனக்குப் பொருத்தமாக இருக்காது. கிளைமாக்ஸை மாற்ற வேண்டும். ஜெயிலரால் வெளியே அழைத்து வரப்பட்ட #கைதிகள் #இறுதியில் #திருந்தினார்கள் #என #முடியவேண்டும். #எனது #படம் #பார்க்க #வருகிறவர்களுக்கு #நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இந்தப் படத்தை #உண்மையான #கைதிகளே #பார்த்தாலும் #அவர்கள் #மனம்திருந்த #வேண்டும். #அப்படிப்பட்ட #கருத்தைதான் #நாம் #சொல்லவேண்டும் இதற்கு நீங்கள் சம்மதித்தால் ரைட்ஸ் வாங்குங்கள் இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்து கொள்ளுங்கள்," என்றார் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டதும் உதயம் புரொடக்ஷன்ஸ் அதிபர்கள் அலறினார்கள். "அய்யய்யோ... உங்களை வைத்துதான் நாங்கள் படம் எடுப்போம். நீங்கள் சொன்னபடியே இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்போம்," என்றார்கள்.

    அதற்கு எம்.ஜி.ஆர், "க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்பதாக இருந்தால் சாந்தாராமிடம் எடுத்துச் சொல்லி அதற்கும் அனுமதி பெற்று வாருங்கள்," என்று கூறி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரின் கருத்தை சாந்தாராமிடம் தெரிவித்து, அனுமதி பெற்று சில மாற்றங்களுடன், கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றி படத்தை எடுத்தார்கள். படமும் வெளியே வந்து பெரும் வெற்றிப் பெற்றது. அந்தப்படம்தான்

    #பல்லாண்டு #வாழ்க'!.........bsm...

  6. #885
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964-ம் ஆண்டில் போலிக் கர்ணன்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து வேட்டையாடிய நிஜக் கர்ணனான நம் வேட்டைக்காரனின் அமர்க்களமான ஸ்டில். மக்கள் திலகத்தின் இந்த ஸ்டைலான போஸை எப்படி வர்ணிப்பது? தாவுகிறாரா? தாண்டுகிறாரா? பறக்கிறாரா?

    இந்த மாதிரி பக்கவாட்டில் கிட்டத்தட்ட 60 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் யாராவது நின்றால் அவர் விழுந்துவிடுவார். தனது உடலின் மொத்த எடையை இடதுகையால் மரத்தை பிடித்தபடி தாங்கி பேலன்ஸ் செய்து நிற்கிறார் மக்கள் திலகம். அப்போதும் அவரது முகத்தில் இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்பதுபோல ஸ்டைலான அலட்சிய குறும்பு. இந்த துள்ளலும் துடிப்பும் சுறுசுறுப்பும் கடைசிவரை மக்கள் திலகத்திடம் குறையவே இல்லை. ...

    அது அந்த தனிப்பிறவிக்கு மட்டுமே உள்ள ஆற்றல்.......... Swamy...

  7. #886
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான பதிவு. மலரும் நினைவுகள். 1980 பிப்ரவரி 17 புரட்சித் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. பொதிகை தொலைக்காட்சியில் மாலை தியாகராஜ பாகவதர் நடித்தசிவகவி படம் ஒளிபரப்பினார்கள். அதை தலைவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி வருகிறது. தலைவர் கொஞ்சமும் கலங்காமல் படத்தை ரசித்து பார்த்தார். சமையல்காரர் மணியை அழைத்து இனிப்பு கொண்டுவரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்துவிட்டு தானும் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார். இதை அந்த சமயத்தில் புரட்சித் தலைவருடன் உடனிருந்த மணியன் அப்போதே சொல்லியிருந்தார். இது சாதாரண விஷயமா? புரட்சித் தலைவருக்கு எவ்வளவு மன உறுதி. மக்களின் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை. மக்களுக்கும் அவர் மீது அன்பும் நம்பிக்கையும் இருப்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்தன..........Sy.

  8. #887
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1980 தேர்தல் முடிவில் க்ளைமாக்சும் அதை புரட்சித் தலைவர் முடித்த விதமும் அற்புதம். "பல்லாண்டு வாழ்க" காவிய படத்தில் தன்னைக் கொல்ல வரும் நம்பியாரை மக்கள் திலகம் அடித்து வீழ்த்துவார். அடிதாங்காமல் சுருண்டு கிடக்கும் நம்பியாருக்கு ஒரு தம்ளரில் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். அதேபோலதான் அந்தத் தேர்தல் முடிவும் அமைந்தது. சூழ்ச்சியால் புரட்சித் தலைவர் ஆட்சியை இந்திராவைக் கொண்டு கருணாநிதி கலைத்தார். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் புரட்சித் தலைவர் கொடுத்த அடியால் வீழ்ந்தார். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் அடி தாங்காமல் கருணாநிதி பெங்களூர் கிளம்பி போய்விட்டார். பல்லாண்டு வாழ்க படத்தில் அடிதாங்காமல் துவண்டு கிடக்கும் நம்பியாருக்கு மனிதாபிமானத்துடன் தண்ணீர் கொடுப்பது போல ஜூன் 3 ம் தேதி காலை கருணாநிதிக்கு போன் செய்து அவருக்கு தலைவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதுதான் தலைவரின் மனிதாபிமானம். ஸ்டைல். தேர்தலில் கொடுத்த அடியைவிட பலமான அடி..........Sy...

  9. #888
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1980 தேர்தலின்போது தமிழன் தமிழனாக வாழ திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு சிவாஜி கணேசன் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்தார். 1977 நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித் தலைவரை ஆதரித்தபோதும், 1984 தேர்தலில் ஆதரித்தபோதும் தமிழன் பற்றி அவருக்கு அக்கறை இல்லைபோல.... "நாடாளப்போகட்டும் கருணாநிதி. நடிக்கப்போகட்டும் எம்ஜிஆர்" என்று மேடையில் சிவாஜி கணேசன் வீரவசனம் பேசினார். அப்போதெல்லாம் மனது கஷ்டமாக இருக்கும். இவரை எல்லாம் தம்பி என்று தலைவர் அன்பு காட்டுகிறாரே என்று வருத்தமாக இருக்கும். தேர்தல் முடிவுகள் புரட்சித் தலைவரை அவதூறு பேசியவர்கள் வாயில் .....யை வைத்து அடைத்தது..........Sy.........

  10. #889
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா

    பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

    பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.

    பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

    அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

    எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

    முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

    1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

    சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

    நான் வணக்கம் தெரிவித்தேன்.

    பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.

    ‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன்.

    சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

    (அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன்.

    ‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

    ‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

    அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

    சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

    அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

    இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

    ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
    - நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)
    ...mgn.........

  11. #890
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Old IS. GOLD திரைப்படங்கள் ...என்றும் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே.. கடந்த பல ஆண்டுகளாக
    மக்கள் திலகத்தின் காவியங்களை வைத்து தான் பல திரையரங்குகள் வாழ்வு பெற்றது.... லட்சத்தில்....
    கீழே சிறு துளி விளம்பரங்கள்....

    திரையிட்ட விளம்பர விபரங்கள்
    ++++++++++++++++++++++++++++
    26.3.1999. படகோட்டி
    திருச்சி பேலஸ் 2 வாரம் ஒடியது.
    புதுக்கோட்டை ஈனா
    23.9.2001 ரகசியபோலிஸ் 115
    கோவை கர்னாடிக் 2 வாரம் ஒடியது.
    25.05.1990 உலகம் சுற்றும் வாலிபன்
    கோவை கவிதா 2 வாரம் ஒடியது.
    01.03.1991 ஒளி விளக்கு
    கோவை சண்முகா 14 நாள் ஒடியது.
    22.07.1996 அன்பே வா
    கோவை டிலைட் 2 வாரம்
    11.11.2004 சக்கரவர்த்தி திருமகள்
    மதுரை மீனாட்சி 13 நாள் ஒடியது
    8.9.2000 குலேபகாவலி
    மதுரை மீனாட்சி 2 வாரம் ஒடியது.
    14.5.2004 மாட்டுக்கார வேலன்
    மதுரை மீனாட்சி இணைந்த 4 வாரம்
    திரையிடப்பட்டது.
    சேலம் சபரி அடிமைப்பெண்
    1997 ல் 2 வாரம்
    சேலம் சங்கம் எங்கவீட்டுப்பிள்ளை
    04.06.2000 ...15 நாட்கள் ஒடியது..........UR...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •