-
8th October 2020, 08:54 PM
#961
Junior Member
Diamond Hubber
காஞ்சிபுரத்தில் சிவந்த மண் திரைப்படம் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு ப்ளாக்கில் விற்றதாக இவர்களாக கற்பனை செய்தியை தயாரித்துள்ளதையும் அவர்கள் போட்டிருப்பது அப்போது வந்த செய்தி இல்லை, இப்போது இவர்கள் தயாரித்த பொய் செய்தி என்பதையும் சொல்லி அதை உணர்த்த சீர்திருத்த எழுத்தையும் ஏற்கெனவே உதாரணம் காட்டினேன். அவர்களிடம் உண்மையான செய்தி இல்லை. உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அப்போது வந்த செய்தியை வெளியிட மாட்டார்களா? அவர்கள் போட்டிருப்பது பொய் செய்தி என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். பேசும்படம் அட்டையில் புதிய பறவை படத்துக்காக வரையப்பட்ட ஓவியத்தை ஒரு கண்ணில் அதிர்ச்சியும் ஒரு கண்ணில் பயமும் சிவாஜி கணேசன் காட்டியிருப்பதாக இவர்களாக கற்பனையாக எழுதியிருக்கும் பொய்யையும் ஏற்கெனவே சொன்னேன். இதுபோல நிறைய பொய் சொல்கிறார்கள். இன்னொரு உதாரணம்.
1954ல் வெளியான சிவாஜி கணேசன் நடித்த மனோகரா படம் சென்னையில் ஒரே வாரத்தில் 84,00, 276 ரூபாய் (நன்றாக கவனியுங்கள். 84 ஆயிரம் இல்லை. 84 லட்சத்து 276 ரூபாய் வசூலித்ததாம்.) அடேங்கப்பா. ஒரு வாரத்துக்கே இப்படி என்றால் ஓடி முடிய எவ்வளவு கோடிகள் வசூல் ஆகியிருக்கும். சென்னையில் மட்டுமே இப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க எத்தனை எத்தனை ஆயிரம் கோடிகள் வசூலாகியிருக்கும்? ஊமைப் பட காலத்தில் இருந்து இதுவரை உலகத்தில் வெளியான எல்லா படங்களின் வசூலையும் சேர்த்தாலும் இனிமேல் வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்தே படங்களின் வசூலையும் சேர்த்தாலும் மனோகராவை நெருங்க முடியாது போல. சிவாஜி கணேசனை இப்படித்தான் வசூல் சக்ரவர்த்தியாக்க அவரின் ரசிகர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் பொய்யை மக்கள் நம்பவில்லை, சிரிக்கிறார்கள். அதனால், தாங்களே பொய் வசூல் வெளியிட்டு, தாங்களே திருப்தி அடைகிறார்கள். இப்படித்தான் இவர்களின் சிவந்த மண் பொய் வசூலும். இதுதான் சிவாஜி கணேசனை அவரின் ரசிகர்கள் வசூல் சக்கரவர்த்தி ஆக்கிய கதை. பாவம்.. அவர்களின் இயலாமையைப் பார்த்து பரிதாபப்படலாம். வேறு என்ன செய்ய?... Swamy...
-
8th October 2020 08:54 PM
# ADS
Circuit advertisement
-
8th October 2020, 08:55 PM
#962
Junior Member
Diamond Hubber
1969 ல்
நம்நாடு காவியத்தை விட ஒரு படம் அதிகம் ஒரு தியேட்டர் ஒடியதாம்..
விளம்பரத்தில் தியேட்டர் இல்லையாம் என ஒரு பதிவை முன்னால் பார்த்து இருக்கிறேன்...
நம்நாடு காவியம்
8 அரங்கில் 100 நாள் தான்.
ஆனால்...
50 நாள் 52 அரங்கு...
இதில் 18 அரங்கு
75 நாள்...
12 வாரம் 15 அரங்கு...
நம்நாடு 100 நாள்....
++++++++++++++++
மதுரை
மீனாட்சி 133 நாள்...
திருச்சி
வெலிங்டன் 119 நாள்..
சேலம்
பேலஸ் 109 நாள்....
குடந்தை
விஜயலட்சுமி 100 நாள்
சென்னை
கிருஷ்ணா 105 நாள்
சித்ரா 105 நாள்
சரவணா 105 நாள்
அடுத்து...
பட்டுக்கோட்டை 96 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
ஈரோடு 91 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
வேலூர் 83 நாள்
பாண்டிச்சேரி 82 நாள்
அடுத்து....
சென்னை
சீனிவாசா 78 நாள்
நெல்லை 76 நாள்
திண்டுக்கல் 76 நாள்
நாகர் கோவில் 76 நாள்
++++++++++++++++++++
இப்படி அந்த நடிகரின் வெளிநாடு படம் ஒடியதுண்டா...
நம் நாடு காவியமே
இப்படி என்றால்....
அடிமைப்பெண்
15 அரங்கில் 100 நாள்..
இதில் ....
மதுரை 176 நாள்
திருச்சி 133 நாள்
சென்னை 133 நாள்
சேலம் 133 நாள்
கோவை,நெல்லை
120 நாள்....
திண்டுக்கல்,
சென்னை (4 ) நா.கோவில்,வேலூர்
தஞ்சை , தூத்துக்குடி, ஈரோடு......
மேலும் 15 திரையரங்கில்
11 வாரங்கள்...
பாண்டி 92
ராம்நாட் 84
ஆத்தூர் 80
விருதுநகர், விருதுநகர்
பழனி, சிதம்பரம்,
கரூர், ப.கோட்டை
தி.மலை, காஞ்சிபுரம்
கடலூர் பெங்களுர் (3)
++++++++++++++++++++
மொத்தம் 68 திரையில் 50 நாட்கள்...
இலங்கையில்
(சென்ட்ரல்) 100 நாட்களும்...
ராணியில் 85 நாட்களும் ஒடியது.
மைசூரில் முதன் முறையாக 2 அரங்கில் வெளியீட்டு 66 நாள் ஒடி சாதனை...
திருவண்ணாமலை நகரில் 3 அரங்கில் திரையிட்ட முதல் சாதனைகாவியம்
அடிமைப்பெண்...
(76 நாள்) சென்னை நீங்கலாக தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் மூன்று தியேட்டர் வெளியிட்டது அன்று மிகப்பெரிய சாதனையாகும்....
இப்படி தோண்ட தோண்ட பல சாதனைகளை உருவாக்கும் வல்லமை படைத்த காவியங்களை தந்த ஒரே தனிப்பெரும் நாயகன் என்றுமே நம்
மக்கள் திலகமே........
Ur...
-
8th October 2020, 08:56 PM
#963
Junior Member
Diamond Hubber
இந்திய திரையுலகில் ஒரே ஒரு தனிப்பெரும்
கதாநாயகன் மக்கள் திலகம் மட்டுமே...
சாதாரண நடிகர்கள் தான் நடிக்கும் எல்லாபடங்களிலும் சில முன்னனி நடிகர்களை சேர்த்து தான் கதை எடுபடும்...
ஆனால் மக்கள் திலகம் தனியாக நின்று சாதித்த
சாதனைகளின் வெற்றி நம் மூன்றெழுத்து மந்திரத்திற்கு மட்டுமே
பாரதத்தில் சொந்தமாகும்......
அதுப்போல தான்
நம்நாடு வெற்றி
மகுடம் என்றால்...
அடிமைப்பெண்
வெற்றி
மலையாகும்....
நம்நாடு எழுச்சி என்றால்
அடிமைப்பெண்
புரட்சி ஆகும்...
ஒரே ஆண்டில் சென்னையில் தொடர்ந்த வெளியான இரண்டு வண்ணக் காவியங்கள் ... 8 அரங்கில் வெளிவந்து
7 அரங்கில் 100 நாளை கடந்து 1969 ல் சாதனை..
அடிமைப்பெண்
++++++++++++++
கிருஷ்ணா 133 நாள்
133 நாளில் வடசென்னையில் வெள்ளிவிழா ஒடிய பிற நடிகர்களின் படத்தை
19 வாரத்தில் முறியடித்து
புதிய சாதனை...
மிட்லண்ட் 100 நாள்
மேகலா 105 நாள்
நூர்ஜகான் 100 நாள்
நம் நாடு
+++++++++
கிருஷ்ணா 105 நாள்
சித்ரா 105 நாள்
சரவணா 105 நாள்
ஸ்ரீசினீவாசா 78 நாள்
இது போன்ற இரண்டு காவியங்கள் படைத்த சாதனையை..... பின்னால் வந்த எந்த நடிகர் படமும்
தொடர்ந்து 8 அரங்கில்
ஒடியதில்லை
சென்னையில்....
இரண்டுத்திரைப்படமும்
8 அரங்கில் வசூல்
24 லட்சத்தை கடந்தது..
சென்னையில் முதல் வெளியீட்டில் ஒடி முடிய
32 லட்சத்தை கடந்தது...
+++++++++++++++++++
சாதாரண நடிகருக்கு
எப்பொழுதாவது
வரலாறு பதிவிடும்..
ஆனால்
தனிப்பெரும் கதாநாயகரான
மக்கள் திலகம்
அவர்களே...
தன் திரைப்படங்கள் மூலம் வரலாற்றை ஆண்டு தோறும் படைப்பார்.
அதையே முறியடித்து மீண்டும் புதிய வரலாற்றையும் எழுதுவார்....படைப்பார்!
தனிப்பெரும் கதாநாயகனின் திரை வரலாறு தங்க சுரங்கம் போன்றது...
வசூலை தந்து கொண்டு வரும் அமுதசுரபி.....
அட்சயபாத்திரம்...
ஆம் நம் கொடை வள்ளல் பிறருக்கு கணக்கில்லாமல் கொடுப்பது போல்...
அத்தலைவரின் அழியாத காவியமும்
திரையரங்கில் வசூலை அள்ளி அள்ளி கணக்கில்லாது கொடுத்து வந்தது..
இனியும் கொராணா முடிந்தும் கொடுக்கும்.........ur...
-
8th October 2020, 08:56 PM
#964
Junior Member
Diamond Hubber
தலைவரின் நம்நாடு காவியம் பெற்ற சாதனை வசூல் வரலாறே மகத்தானது...
நம்நாடு படத்தயாரிப்பு செலவை விட ...
5 மடங்கு விஜயா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்த காவியம் நம்நாடு..
அத்திரைப்படத்தின் மறு வெளியீடு இன்று வரை சாதனையில் உள்ளது..
ஊரடங்கு வருவதற்கு முன்னால் கூட நம்நாடு
சென்னையில் மட்டுமே 2020 மார்ச் வரை
5 அரங்கில் வெளிவந்தது.
அடிமைப்பெண்
வசூல் வரலாறு எட்டாத தூரத்தில் அன்றும் இன்றும் என்றுமே உள்ளது...
தயவு செய்து
தாங்கள் நம் தலைவரின் காலத்தால் அழியாத
அடிமைப்பெண்
நம் நாடு
திரைப்படங்களை
வேறு நடிகரின் படங்களுடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.
கடந்த 50 ஆண்டு காலத்தில்....
அடிமைப்பெண்
சென்னையில் மட்டும்
26 வெளியீடுகளையும்...
நம்நாடு
23 வெளியீடுகளையும்
பெற்றுள்ளது...
இந்த வெளியீட்டில் மட்டும்....
எத்தனை அரங்கு
எத்தனை கோடி வசூல்
யார் யார் பெற்றார்கள்
என்பதே பதிவிட முடியாத சாதனையாகும்.
ஒரு குறிப்பு :
1991 ல் புரசை
சங்கம் ac யில் அரங்கில் இரண்டு முறை திரையிட்ட ஒரே படம் நம்நாடு ஆகும்.
முதல் 6 நாள்
வசூல் : 1,04,246.00 ஆகும்.
மீண்டும் 6 நாள்
வசூல் : 88,711,05
அடுத்து...
2017 ல்
அடிமைப்பெண்
சென்னையில்
தேவி ஞாயிறு காட்சி மட்டும் அரங்கு நிறைந்த
ஒரு காட்சி வசூல் : 1லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.(1100 பேர்)
(ஒரு டிக்கட் விலை :152)
அது மட்டுமல்ல
ஆல்பட் அரங்கிலும் ஞாயிறு அன்று தீடிர் என திரையிட்டு 650 பேர்கள் பார்த்த நிகழ்வு......
இது வரை ஒரு பழைய திரைப்படத்திற்கு என்றால் அது நம் மக்கள்திலகத்தின்
காவியங்களுக்கு மட்டும் தான்.
மேலும் தாங்கள் கொடுத்த விளக்கபதிவு..
புள்ளிவிபரங்கள் யாவுமே மகத்தானது சார்...தொடரட்டும் தலைவரின் அழிவில்லா பணி......ur...
-
9th October 2020, 07:25 AM
#965
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு திமுக காரர், பின்பு பிரிந்து அதிமுக என்கிற கட்சியைத் துவங்கினார், முதல்வர் ஆனார். இவ்வளவுதானே நமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத விஷயம் இருக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.
ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார். ஆனாலும், கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.
ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி "சொல்றேன்" என்கிற ஒற்றை*
வார்த்தையால் தவிர்த்து விடுவார். சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர்* காமராஜர் வந்திருந்தார். கடைசியாக ஒருமுறை அழைத்து விடுவது என்கிற நம்பிக்கையில் வழியனுப்பும் *போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர்.
அப்போதும் அதே புன்னகை மாறாமல்.., "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது* என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன். ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திருப்பியும் அந்த ருசி நாக்கு தேடும்.. அதுக்கு நான் எங்கே போறது" என்று கூற *ஆடிப்போனார் எம்ஜிஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை வணங்கி விட்டாராம் மக்கள் திலகம் எம்ஜிஆர். அதுமுதல் காமராஜரை அழைப்பதில்லை..! இப்படி ஒரு முதல்வர் நமது தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்கு கிடைப்பாரா?.........vr...
-
9th October 2020, 07:27 AM
#966
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தை திகைக்க வைத்தேன் - நடிகை சச்சு!
ஆம் முன்பெல்லாம் நான் எம்.ஜி.ஆர். அவர்களை "சார்" என்று தான் அழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் "சச்சு! என்ன ஸார் வேண்டியி குக்கு .... அண்ணா என்று கூப்பிடு" என்று அவரே தான் சொன்னார். அதன் பிறகு "அண்ணா" என்று அழகா ஆரம்பித்தேன்.
கோவை , ஜூபிடர் ஸ்டூடியோவில், "ராணி" படம் தயாராகி வந்த தேரம் . அதில் சிறுமி பாத்திரத்தில் நான் நடித்து வந்தேன் . அப்பொழுது அங்கு "நாம்" படமும் தயாராகி வந்தது. முதன் முதலில் நான் எம். ஜி ஆரைச் சந்தித்தது அங்குதான். அன்று தொடங்கி "எப்போது பார்த்தாலும் என்ன ஓயாமல் எம். ஜி.ஆர் . பேச்சு" , என்று பாட்டியும் சகோதரர் சகோதரியரும் கடிந்து கொள்ளும் அளவுக்கு நான் அவர் ரசிகையாகி விட்டேன், எம்.ஜி.ஆர் . அண்ணாவை நான் ஒரு சமயம் திணற வைத்திருக்கிறேன்!.........
-
9th October 2020, 07:28 AM
#967
Junior Member
Diamond Hubber
சில ஆண்டுகளுக்கு முன் ஆதவன் என்ற தமிழ் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் நடித்தார்கள்.
ஒரு நாள் படப்பிடிப்பின் நடுவில் பிரேக்கில் உணவு இடைவேளை போது அவர் கொண்டு வந்து இருந்த இரு பொருட்கள் உடன் இருந்த மற்ற அனைவரையும் கவர்ந்தன..
அவர்கள் என்ன இது வெள்ளி தட்டு அத்துடன் ஒரு டம்ளர் போல அமைப்பில் மூடியுடன் ஒரு straa இணைக்க பட்டது போல ஒரு பாத்திரம்...என்று கேட்க.
அவர் சொல்ல அனைத்து பட குழுவினரும் ஆர்வமுடன் கேட்க..
எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்...ஜமீன்தார் வீட்டு மணமகன் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடன் நானும் என் அப்பா வேடத்தில் நடித்த ரங்காராவ் அவர்களும் நடித்த ஒரு காட்சி.
ஒரு சூட்டிங் பார்க்க நாங்க போய் இருக்கும் போது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலில் அவர்கள் நடிக்க அதை பார்க்க போன நாங்கள் அந்த பாடலை தொடர்வதாக காட்சி அமைப்பு.
இதே போல இடைவேளையில் விலை உயர்ந்த புடவை அணிந்து கொண்டு தலைவர் பக்கத்தில் நான் அமர்ந்து இருக்கும் போது குடிக்க காபி கொடுக்க பட்டது.
நான் குடிக்க தலைவர் மறுக்க அப்போது ஒரு சொட்டு காபி என் புடவையில் சிந்தி விட பதறி நான் துடைக்க தலைவர் பார்த்து சிரிக்க.
அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பில் இது எனது பரிசு உங்களுக்கு இனி எந்த பானமும் உங்கள் உடையில் சிந்தாது என்று இந்த கிளாஸ் போன்ற இதையும் தட்டையும் இரண்டும் வெள்ளியால் செய்ய பட்டவை...எனக்கு பரிசாக கொடுத்தார்.
என்ன ஒரு மனது அவருக்கு....அன்று முதல் வெளிப்புற படப்பிடிப்பு எங்கு இருந்தாலும் இந்த இரண்டு பொருட்களும் என்னுடன் பயணிக்கின்றன இன்று வரை என்று சொல்லி முடிக்கிறார் அபிநய சரஸ்வதி சரோ அவர்கள்.
சுற்றி அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் என்ன ஒரு அற்புத மனிதர் எம்ஜிஆர் அவர்கள் என்று மனதில் பேசி கொண்டது அரங்கம் முழுவதும் எதிர் ஒலித்தது சத்தியம்.
தலைவருக்கு பக்கத்தில் படத்தில் இரு பக்கமும் கை பிடி உடன் கூடிய அந்த வெள்ளி கிளாஸ்.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...உங்களில் ஒருவன்.....நன்றி......Mn...
-
9th October 2020, 07:29 AM
#968
Junior Member
Diamond Hubber
""நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன்.
அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.
தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''
- புலவர் புலமைப்பித்தன் ..........vr...
-
9th October 2020, 07:35 AM
#969
Junior Member
Diamond Hubber
தலைவரின் "நம்நாடு" காவியம் பெற்ற சாதனை வசூல் வரலாறே மகத்தானது...
நம்நாடு படத்தயாரிப்பு செலவை விட ...
5 மடங்கு விஜயா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்த காவியம் நம்நாடு..
அத்திரைப்படத்தின் மறு வெளியீடு இன்று வரை சாதனையில் உள்ளது..
ஊரடங்கு வருவதற்கு முன்னால் கூட நம்நாடு
சென்னையில் மட்டுமே 2020 மார்ச் வரை
5 அரங்கில் வெளிவந்தது.
அடிமைப்பெண்
வசூல் வரலாறு எட்டாத தூரத்தில் அன்றும் இன்றும் என்றுமே உள்ளது...
தயவு செய்து
தாங்கள் நம் தலைவரின் காலத்தால் அழியாத
அடிமைப்பெண்
நம் நாடு
திரைப்படங்களை
வேறு நடிகரின் படங்களுடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.
கடந்த 50 ஆண்டு காலத்தில்....
அடிமைப்பெண்
சென்னையில் மட்டும்
26 வெளியீடுகளையும்...
நம்நாடு
23 வெளியீடுகளையும்
பெற்றுள்ளது...
இந்த வெளியீட்டில் மட்டும்....
எத்தனை அரங்கு
எத்தனை கோடி வசூல்
யார் யார் பெற்றார்கள்
என்பதே பதிவிட முடியாத சாதனையாகும்.
ஒரு குறிப்பு :
1991 ல் புரசை
சங்கம் ac யில் அரங்கில் இரண்டு முறை திரையிட்ட ஒரே படம் நம்நாடு ஆகும்.
முதல் 6 நாள்
வசூல் : 1,04,246.00 ஆகும்.
மீண்டும் 6 நாள்
வசூல் : 88,711,05
அடுத்து...
2017 ல்
அடிமைப்பெண்
சென்னையில்
தேவி ஞாயிறு காட்சி மட்டும் அரங்கு நிறைந்த
ஒரு காட்சி வசூல் : 1லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.(1100 பேர்)
(ஒரு டிக்கட் விலை :152)
அது மட்டுமல்ல
ஆல்பட் அரங்கிலும் ஞாயிறு அன்று தீடிர் என திரையிட்டு 650 பேர்கள் பார்த்த நிகழ்வு......
இது வரை ஒரு பழைய திரைப்படத்திற்கு என்றால் அது நம் மக்கள்திலகத்தின்
காவியங்களுக்கு மட்டும் தான்.
மேலும் தாங்கள் கொடுத்த விளக்கபதிவு..
புள்ளிவிபரங்கள் யாவுமே மகத்தானது சார்...தொடரட்டும் தலைவரின் அழிவில்லா பணி...ur...
-
9th October 2020, 01:31 PM
#970
Junior Member
Diamond Hubber
தாயை காத்த தனயன் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த மூன்றாவது படம். 1962 ஏப் 13 ல் வெளிவந்து 100 நாட்கள் பல திரையரங்குகளில் ஓடி வெற்றியை குவித்த படம். தமிழகத்தில் 7 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.
1962 ன் பிளாக் பஸ்டர் திரைப்படம் தாயைக் காத்த தனயன்தான். திரையிட்ட திரையரங்குகளிலெல்லாம் திருவிழாக் கோலம்தான்.
படப்பிடிப்பு வாகினியில் போட்ட செட் என்றாலும் காட்டுக்குள் சென்று படம் பார்த்த வித்தியாசமான உணர்வை கொடுத்தது. பாடல்கள் மகாதேவனின் இசையில் மயக்கும் மல்லிகையாய் மணம் வீசியது. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்தான் காதல் பாடல்களில் நம்பர் 1 பாடல் என்றால் அன்பே வா க்கு முன்னால் காதல் பாடல்களில் தலைசிறந்த பாடலாக காவேரி கரையிருக்கு பாடல்தான் விளங்கியது எனலாம்.
எம்ஜிஆர் நல்ல சுறுசுறுப்பாக வந்து கம்புச்சண்டை போடும் அழகை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம். காட்டில் புலி படுத்தும் பாடு ஆங்கிலப் படங்களை பார்த்த த்ரில் அனுபவத்தை உண்டாக்கி வியர்க்க வைத்தது.
படம் பார்த்தவர்கள் இந்தக் காட்சியை சிலாகித்து பேசும் போது படம் பார்க்காதவர்களையும். பார்க்கத் தூண்டின.
கட்டித்தங்கம் வெட்டி எடுத்து அற்புதமான பாடல். T m s ன் குரலின் இனிமை இந்த பாடலில் பளிச்சென்று தெரியும். நடக்கும் என்பார் நடக்காது சோகப் பாட்டிலும் சுவையான பாடல். காட்டுராணி கோட்டையிலே சரோஜாதேவி அறிமுகப் பாடல் வழக்கம் போல் அவருடைய. அழகின் வெனிப்பாடு அருமையாக இருக்கும்.
மூடித்திறந்த இமையிரண்டும் இவை அத்தனையும் ஒருங்கே இணைந்து அறுசுவை விருந்து படைத்தது போல் இருந்தது.
M.r ராதா இரட்டை வேட நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியிருப்பார். டீக்கடைக்காரனாக காமெடியிலும் வில்லத்தனத்திலும் முத்திரை பதித்தார். மொத்தத்தில் விறுவிறுப்பாக அனைவரையும் காட்டிற்கு அழைத்து சென்ற உணர்வோடு சிறந்த பொழுது போக்கும் உணர்வையும் ஏற்படுத்திய படம்.
சென்னையில் பிளாசா பாரத் மகாலட்சுமியில் வெளியாகி அனைத்து அரங்குகளிலும் 112 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. திருநெல்வேலி ராயலில் 70 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. தூத்துக்குடி ஜோஸப்பில் 63 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 திரையரங்குகளில் 50.நாட்கள் ஓடி வெற்றி கொடியை உயர்த்தி பிடித்த படம். மதுரை கல்பனா, திருச்சி பேலஸ், சேலம் பேலஸ், மற்றும் கோவை கர்னாட்டிக் கிலும் 100 நாட்களை தாண்டி அதிகபட்சமாக 137 நாட்கள் வரை ஓடியது. இலங்கை கிங்ஸ்லி யிலும் 100 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது.
ஒரு சில நடிகர்கள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் வடக்கயிறு போட்டு இழுத்து 100 நாட்கள் ஓட்டி விட்டு 100 நாட்கள் விழாவுக்கு அந்த நடிகர் கம்பீரமாக வருவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இதற்குதான் ஆசைப்பட்டாயா கணேசா? என்று கேட்கவேண்டும் போல தோன்றும். ஆனால் நம் புரட்சி நடிகரோ 7 தியேட்டரில் 100
நாட்கள் ஓடிய "தாயை காத்த தனயன்", "ஆயிரத்தில் ஒருவன்", 20 திரையரங்கில் ஓடிய "உலகம் சுற்றும் வாலிபன்" உட்பட பட படங்களுக்கு விழாவுக்கு வர மறுத்து விட்டார்.
எந்த பேரும் புகழையும் தேடிப் போகாதவர். நாடி வந்த விழாக்களையும் தவிர்க்கும் ஒரு மாமனிதர் மக்கள் திலகம் மட்டுமே..........ksr.........
Bookmarks