Page 87 of 113 FirstFirst ... 3777858687888997 ... LastLast
Results 861 to 870 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #861
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    உலகம் பலவிதம்.=14/4/55. 66 ஆண்டுகள் நிறைவு.

    சம்பூர்ணராமாயணம்=14/4/58. 63 ஆண்டுகள் நிறைவு.

    படித்தால் மட்டும்போதுமா=14/4/62. 59 ஆண்டுகள் நிறைவு.

    பேசும்தெய்வம்=14/4/68. 53 ஆண்டுகள் நிறைவு.

    பிராப்தம்=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.

    சுமதி என் சுந்தரி=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.

    சங்கிலி=14/4/82. 39 ஆண்டுகள் நிறைவு.

    வாழ்க்கை=14/4/84. 37 ஆண்டுகள் நிறைவு.

    வீரபாண்டியன்=14/4/87. 34 ஆண்டுகள் நிறைவு.

    பசும்பொன்=14/4/95. 26 ஆண்டுகள் நிறைவு.

    கெளரவதோற்றம்:-

    4. ஸ்கூல் மாஸ்டர்( இந்தி)=14/4/59. 62 ஆண்டுகள் நிறைவு.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #862
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1)எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
    2)‘புரோட்டோகால்’ எனப்படும் அரசு மரபுகளை மீறி, பிரதமராக இருந்த வி.பி.சிங், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய இருவரும் சென்னை வந்தபோது சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு வருகை தந்து கவுரவம் செய்தனர்.
    3)நாடுகடந்த அரசு என்ற முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திபெத்தின் தலைவர் தலாய்லாமா சென்னை வந்தார். அப்போது அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜியின் ‘உத்தம புத்திரன்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்தினார்.
    நன்றி ! இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து ...



    siva-466.jpg

    Thanks Ganesh Pandian
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #863
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எனது ஊர் செய்யார் தாலுகா திருமனி ம்துரா வெங்கிடேசன் பட்டி அது திருவண்ணாமலை மாவட்டத்தில்.உள்ளது.
    சிறிய வயதில் நான் வசிக்கும்.போது சினிமா பார்க்க் வேண்டுமென்றால். எங்கள் பக்கத்து ஊர் முனுக்ப்பட்டு வழியாக வாழப்ப்ந்தல் என்ற ஊரில் கீத்து கொட்டகையில்தான் படம்.பார்க்க முடியும்
    பெரும் பாலும் நடிகர் திலகத்தின் படம் எம் ஜி ஆரின்.படம் அதிகமாக திரையிடுவார்கள்
    7 கிலோ மீட்டர் நடந்து சென்று படம் பார்ப்பார்ப்போம்
    என்னுடைய தாய் மாமன் திரும்னியை சேர்ந்தவர் அவர் அடிக்கடி படத்துக்கு செல்வார் எப்போதாவது ஒரு முறை என் அம்மா அதாவது அவர் தங்கையை பார்க்க வருவார் ஏதோ.அண்ணன் என்ற முறையில்
    -அவர் எம் ஜி ஆர் ரசிகர் ஜாலியான சிவாஜி படங்களை பார்பார்
    ஒரு முறை பாச மலர் படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவர் நண்பர்களுடன்
    பல நாட்கள் அடிககடி அந்த படத்தையே பார்த்தாராம். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருபவர் அடிக்கடி வருவார் பாசமலர் படம்பார்த்தேன் குடும்பம்ன்னா என்ன.பாசம் என்ன இவ்வளவு நாள் குடுபத்த உணராமல் இருந்திட்டேன்னுன்னு தோன்றுகின்ற மாதிரி இருக்கிறது என்று வருத்தபப்டும்படி என் அம்மாவிடம் சொன்னாராம்
    அதற்க்கு பின் தங்கச்சியும் தன்னுடைய மகளுக்கு சமம் என்று சிவாஜியின் படத்தை பார்த்து பாசம் குடுமப உறவுகளுக்கு முக்கியம் கொடுத்தத நான் வாழ்வது அவர்தான் காரணம் என்று -அடிக்கடி என் அம்மாவிடம் சொன்னதாக என் அம்மா என்னிடம் சொல்வார்
    என்னுடைய தாய் மாமன் மாதிரி பாசமலர் போன்ற படங்களை பார்த்து எத்தனைஅன்னன்கள் தங்கைகள் மீது பாசம் கொண்டவர் இருந்திருந்தார்கள்
    இன்று இருக்கின்ற இனிமேலும் இருக்க. சிவாஜியின் படங்கள் பாடமாக எப்போதும் இருக்கும்
    கீதம் சங்கீதம்
    இசைக்குழு
    வெங்கிடேசன் பட்டி
    P s முனியாண்டி
    அனுபவம் இல்லாதவர்கள் கூட நடிகர் திலகத்தின் படத்தை பார்த்தால் அனுபவசாலியாகிவிடுவார்கள்

    Thanks Muniyandi Saminathan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #864
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகத் திலகம் எப்பொழுதும் கம்பீரம்் நேர்மை தன் நம்பிக்கை கடைபிடித்தார்
    உலகை ்.எங்கும் தன் நடிப்பால். கவர்ந்தா காலக்கட்டத்தில் தன்னுடன் நடிக்கும நடிகருக்கு கொடுத்து இருக்கும் பாத்திரம் படம். வெளியே வந்தவுடன் தன்னைவிட அந்த நடிகர் அதிகமாக புகழப்படுவார் என்று தெரிந்தும் அந்த கதாபாத்திரத்தை தனக்கு கேட்காமல். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கொடுங்கள் என்று சொல்வாரம்
    மனிதரில் மாணிக்கம் படத்தில் ஏ வி எம் ராஜனை கதாநாயகன் அந்த படத்தில் கொளரவ வேடம் நடிக்ர் திலகம்
    பச்சை விளக்கு படத்தில சிவாஜிக்கு மைத்துனனாக நடிப்பார் எஸ் எஸ் ராஜேந்திரன்
    குத்து விளக்கே்றிய கூடமெங்கும்.பூ மனக்கும் என்ற டி எம் எஸ் சுசிலா பாடிய.பாடலை எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு கொடுக்க சம்மதித்தார் நடிகர் திலகம்
    வேறு எந்த நடிகராக இருந்தால் அந்த பாட்டு தனக்கு வரும்படி காட்சி அனமயுங்கள் அந்த டியூன் எனக்கு வருமபடி செய்யுங்கள் இல்லையென்ரால் அந்த பாடலஅந்த படத்தில் ் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கல்
    மூன்று தெய்வங்கள் படத்தில் சிவகுமார் கதானாயகன் போன்று கதையை கொண்டு செல்வார்கள் சிவகுமார் காதலுக்கு உதவி செய்வது போல் நடிகர் திலகத்துக்கு கதைப்படி வரும் இதில் அவருக்கு ஜோடி இல்லை
    கே ஆர் விஜயா சிவாஜிக்கு காதலியாக ந்டிக்க வேண்டியவர் முத்துராமனுக்கு காதலியாக ந்டிக்க சம்மதித்தார்
    இன்னும்.ஏராளமாக அடிக்கிக்கொண்டே போகலாம் பல படங்களில் ஜோடி இல்லாமல் மேக்கப் இல்லாமல் நடித்தார்
    பாடலே இல்லாதே படமும்.வில்லனாக ந்டித்த படமும் உண்டு
    திரை உலகத்தில் ஈடு இணையற்ற ஜோடி என்று அந்த காலத்தில் சிவாஜி பதமினி வலம் வந்தார்கள் குரு ந்தட்சனை படத்தில் மான்சீக குருவாக பதமினியை ஏற்று கொண்டு பள்ளி ஆசிரியராக இருக்கும் பதமினி காலில் நம் சிவாஜி .வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கு வது போல் இருக்கும். கதைப்படி அதனால் நம் தலைவருடைய இமேஜ் கெடும் பலர் அறிவுரை கூறினார்கள் ஆனால் கதைப்படி அப்படி செய்யவேண்டும் என்றால் நடித்துதான் ஆக வேண்டும் என்று தன் நடிபபு தொழில் மீது நம்பிக்கை வைத்தார்
    கடைசிக்காலக்கட்டத்தில் நான் வாழ்வைப்பேன் படத்தில ரஜினிக்கு அசத்தலான கதாபாத்திரத்தை கொடுக்க செய்தார் தேவர் மகன் கமல் கதா பாத்திரத்தை பேசும் படி செய்தார்
    திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பற்றி சொல்ல தேவையில்லை மற்றவர்களுக்கு உதவு மட்டுமல்லாமல் பிறரை புகழ் அடையவும் செய்தார் அவருக்கு தன் நம்பிக்கை அதிகம்
    தன் நம்பிக்கைக்கு இவர் உதாரனம் வாழ்க எங்கள் நடிகர் திலகத்தின் புகழ்

    Thanks Muniyandi Saminathan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #865
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 48
    சென்ற ஒரு வாரமாக எனது டெஸ்க்டாப் கணினி சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதன் காரணமாகவே சென்ற வார பதிவை போஸ்ட் பண்ண முடியவில்லை இப்போதுதான் சரியானது.
    ஒரு வார இடைவேளைக்கு Sorry இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
    1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த 15-வது நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
    படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது. அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்டா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
    இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார்.
    இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
    வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை.
    இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
    தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து, 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
    தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
    நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
    பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
    அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
    வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
    நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
    படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
    நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
    1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
    1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
    அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல் ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள். விழா முதலில் தமுக்கம் மைதானத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து திரையரங்கிற்கு படத்தில் வருவது போல் மாட்டு வண்டி ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் குறிப்பிட்ட அக்டோபர் 22 பொதுக்கூட்டத்திற்கு பின் நடந்த வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஊர்வலத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னார். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
    மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் வசந்த மாளிகை படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும். அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
    இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றார். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
    பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
    10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
    அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
    மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
    நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
    வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
    [எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
    சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
    எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
    உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
    நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
    ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
    இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
    (தொடரும்)
    அன்புடன்
    siva-473.jpg
    நன்றி முரளி சிறினிவாசன் ( நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #866
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அமரகாவியம் 24/04/1981. 40 ஆண்டுகள் நிறைவு.

    siva-474.jpg

    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #867
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சில வருடங்களுக்கு முன் சென்னை ஸ்ரீ நிவாசா திரையரங்கில் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது, அனைத்து வார இறுதி நாட்களிலும் அரங்கு நிறைந்து விடும்,
    அப்படி ஒரு ஞாயிறு அன்று மாலைக் காட்சிக்கு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் பெருமளவு குவிந்து டிக்கெட் கவுண்டரில் நீண்ட கியூவில் நின்றுக் கொண்டிருந்தோம்
    அப்போது இரண்டு நபர்கள் குடித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை போதையில் இருப்பது போல கலாட்டா செய்தனர் அவர்கள் கியூவில் நின்றவர்கள் மேலே விழுவதும் படம் நல்லாயில்ல டிக்கெட் வாங்காதீங்க என உளருவதுமாக இருந்தார்கள், வழக்கம் போல நடிகர் திலகம் ரசிகர்கள் அந்த மர்ம நபர்களைக் கண்டு கொள்ளாமல் நான் உட்பட டிக்கெட் கவுண்டரில் முன்னேறிக் கொண்டிருந்தோம், வெறுப்பான மர்ம நபர்கள் டிக்கெட் கவுண்டரில் உரக்க சத்தமிட்டு ரகளை செய்தனர், தியேட்டர் ஊழியர்கள் அவர்களிடம் "நீங்கள் யார் உங்களை யார் அனுப்பி சிவாஜி படம் போட்டா கலாட்டா செய்ய சொல்லி வருகிறார்கள் என்ற விபரமெல்லாம் தெரியும் அமைதியா கெளம்புங்க'" எனச் சொல்லியவாறு ஹவுஸ்புல் அறிவிப்பை தொங்கவிட்டு மர்மநபர்கள் முகத்தில் கரியைப் பூசி தியேட்டர் வளாகத்தில் இருந்து வெளியேற்றி கேட்டை இழுத்துப் பூட்டினார்கள்,
    நடிகர் திலகம் திரைப்படங்கள் திரையிடும் போதெல்லாம். இது போன்ற சம்பவங்கள் பல திரையரங்குகளில் நடந்ததுண்டு,

    Siva-475.jpg

    siva-476.jpg

    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #868
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி அழைத்து வரும் காட்சிதான் இது.
    பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார். அடிக்கல் நாட்டும்போது நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், பத்து வருடங்கள் கழித்து நடந்த திறப்பு விழாவின்போது முதல்வராகி விழாவில் கலந்துகொண்டார்.
    திறப்பு விழா அன்று ‘சாம்ராட் அசோகன்’ என்ற சிவாஜியின் நாடகம் நடந்தது. போர்க்களத்தில் அசோகரின் மனசாட்சி பேசுவது போன்ற காட்சியில் வேறு எந்த கேரக்டர்களும் இல்லாமல் சிவாஜி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் நடித்தார்.
    அசரீரி குரலுக்காக மனோரமா வாய்ஸ் கொடுத்தார். மேடைக்கு கீழே அமர்ந்தபடி நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜியின் பாவனைகளில் நெகிழ்ந்து போய், ‘அற்புதமான நடிப்பு’ எனப் பாராட்டினார்.
    siva-480.jpg

    Thanks Gaesh Pandian
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #869
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கீழ் அடியில் அகழ்வாராய்ச்சியில் தமிழனின் கலாச்சாரத்தோடு எப்படி வாழ்ந்தான் என்னன்ன வாழ்க்கை நடத்துவதற்கு என்ன பழமை வாழ்ந்த பொருள்கள் பயன் படுத்தினான் என்று தெரிகிறது
    அதுபோல்
    நடிகர் திலகத்தின் படங்கள் பாது காக்க வேண்டிய படங்கள் தமிழ் மொழி உச்சரிப்பது மனிதனுடைய வாழ்க்கை முறை மன்னர்காலத்து கலாச்சார முறை புராண காலத்து கலாச்சாரத்தின் முறை வாழ்க்கைக்கு தேவையான அத்துனையும் வரும் காலம் அறிய உதவும்
    திருக்குறள் படித்து வாழ்க்கையின் நெரி முறைகளை தெரிந்து கொள்ளலாம்
    ஆனால்
    நடிகர் திலகத்தின் படம் பார்த்து வாழ்க்கை முறைகளை அறிந்த மனதில் பதிய வைக்கலாம் , வரும் தலைமுறையும்
    உலகம் அறிந்த மெரினா பீச்சில இருந்த் நடிகர் திலகத்தின் சிலை மனிமண்டபத்தில் வைத்தால் நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சி பெட்டிகளிலும் திரையருங்கலிலும் திரையிட மாட்டார்கள் என்ற அர்த்தமாகாது
    மக்கள் மனத்திரையில் நடிகர் திலகம் எப்பொதும் அவர் திரைப்படங்கள் ஒடிகொண்டுதான் இருக்கிறது
    ஏனென்றால். தமிழ் கலாச்சாரதோடு உலகம் போற்றிய ஒரே நடிகன்.நடிகர் திலகம்
    சிவாஜி ரசிகன்
    P s முனியாண்டி
    வெங்கிடேசன் பட்டி கிராமம்

    Thanks Muniyandi Saminathan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #870
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்கள் பல பேர் சமுதாயத்திலிருந்து கற்றுகொண்டு நடிப்பார்கள்
    ஆனால்
    நடிகர் திலகம் மட்டும்தான் அவருடை நடிப்பால் சமுதாயம் கற்று கொண்டது.
    ஒவ்வொரு பதவியில் இருப்பவ்ரும் இவர் ஏற்ற..கதாபாத்திரங்கள் போல் வாழ நினைத்தார்கள் உதாரனமாக
    தங்க பதக்க்ம் சொளத்திரியை போல் எத்தனையோ பேர் வாழ்க்கையில் காவல் துறையை சேர்ந்தவர்கள் பின் பற்றினார்கள்
    இது போன்ற ஒவ்வொரு துரையிலும் அடிக்கிக்கொண்ட சொல்லலாம்
    இவர் நடித்த ஒவ்வொரு படமும கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு நூறு படத்திற்கு சமமாகும்
    சமூதாய கருத்துக்களை வாழ்க்கையின் கலாச்சர்த்தையும் தமிழகத்தின் அடையாளமாக இருந்த நம்முடைய நடிகர் திலகத்தை பெயரை கெடுக்க எத்தனையோ சதிகள் சூழ்ச்சிகள்.
    அத்தனையும் முறியடித்து கொண்டுதான் இருக்கிறது
    அவரின் நடிப்பினாலும் பொது வாழ்க்கையிலும் சமூதாயத்திலும் நல்ல மனிதன் என்பதாலும்
    நல்லவர்கள் ஒன்று நினைப்பதுதான் நடப்ப்தில்லை தமிழகத்தில் அன்றே சொன்னார் நடிகர் திலகம்
    சிவாஜி ரசிகன்
    வெங்கிடேசன் பட்டி
    P s முனியாண்டி

    Thanks Muniyandi Saminathan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 87 of 113 FirstFirst ... 3777858687888997 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •