Page 81 of 113 FirstFirst ... 3171798081828391 ... LastLast
Results 801 to 810 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #801
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அந்தமான் காதலி 26/01/1978




    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தீபம் 26/01/1977




    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #803
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    26.1.21 குடியரசுதினத்தை முன்னிட்டு,

    முதன்முறையாக
    மதுரையில் உள்ள சிவாஜி சிலை பீடத்தில்
    தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    காலையில இருந்தே நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் குவிய தொடங்கினர்....

    காலை 10.30 மணிக்கு, மதுரையில் சிலை வைத்த,
    ஐயா வி.என்.சிதம்பரம் அவர்களின் அருந்தவப்புதல்வன் வி.என்.சித.வள்ளியப்பன் அவர்கள்
    தேசியக் கொடியை ஏற்றினார்.

    மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சாா்பாக,
    ரசிகர் ஒருவருக்கு நான்கு சக்கர வண்டி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றம்,
    நகர் சிவாஜி மன்றம்,
    புறநகர் சிவாஜி மன்றம்,
    சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
    சிவாஜி சமூகநல பேரவை,
    சிவாஜி ஃபைன் ஆரட்ஸ்,
    ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ்,
    மாவட்ட பிரபு மன்ற நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

    சமீபத்தில் சிலை முன்பு,
    சிவாஜி பொங்கல் கொண்டாடப்பட்டது.

    தற்போது, சிவாஜியின் குடியரசு தின விழா...

    என தொடர்ந்து மதுரையை கலக்கி வரும்

    சிவாஜியின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



    Thanks Sundar Rajan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #804
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    27/01/1979 ல் வெளிவந்த வசூல் காவியம் திரிசூலம்

    27/01/2021 ல் 42 ஆண்டுகள் நிறைவு.

    இதற்குமுன்னர் வந்த அனைத்து தமிழ் படங்களின் வசூல்சாதனைகயும் தவிடுபொடியாக்கி
    முதல் வெளியீட்டில் பல கோடிகளை வசூலாகப்பெற்று சினிமா உலகை உலுக்கி
    தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வெற்றிக்காவியம் திரிசூலம்.




    திரிசூலம்

    சென்னை..............................சாந்தி... ..... ............175 ..நாட்கள்....16.13.648-90
    சென்னை..............................கிரவுண்.. ..... ..........175...நாட்கள்..... 8.59.663-45
    சென்னை..............................புவனேஸ்வரி.... ..... .175....நாட்கள்.......8.47.818-20

    சென்னை நகர் 3தியேட்டர்கள் மொத்த வசூல்...................................33.21 .130-55

    கோவை.................................கீதாலயா. ..... .........175...நாட்கள்.......12.38.284-90
    மதுரை....................................சிந் தாமணி ..........200..நாட்கள்.........10.28.819-55
    திரிச்சி..................................... பிரபா த்..................175...நாட்கள்......8.39.7 85-80
    சேலம்.....................................ஒரி யண்டல ்........195...நாட்கள்..........7.12.329-14
    வேலூர்....................................அப் சரா.. ................175...நாட்கள்.......6.39.949-25
    திருப்புர்................................... டைமன் ட்..............142ஈநாட்கள்.........4.62.612-55
    ஈரோடு..ராயல்..103+ஸ்டார்..13..+ஶ்ரீகிருஸ்ணா 8..124..நாட்கள்......4.59.649-68
    தஞ்சை...................................அருள் ..... ............153..நாட்கள்.............4.09.768-65
    குடந்தை................................தேவி.. ..... ............139..நாட்கள்..............3.99.123-25
    பொள்ளாச்சி..........................துரைஸ்... ..... ........125..நாட்கள்............3.88.184-75
    பாண்டி....................................ஜெய ராம். ...........151...நாட்கள்...........3.56.366-55
    நெல்லை..............சென்ட்ரல்..105+பாபுலர்..1 0-...115..நாட்கள்...........3.53.710-00
    நாகர்கோவில்................ராஜேஸ்..77+..யுவரா ஜ்..2 8-.105..நாட்கள்.....3.05.270-85
    திருவண்ணாமலை...........பாலசுப்பிரமணி......... 143.. நாட்கள்..........3.03.952-95
    மாயுரம்................................பியர்ல ஸ்... ...............125..நாட்கள்.........2.58.112-10
    காஞ்சி..................................லட்சு மி... ...................77..நாட்கள்..........2.46.734-45
    தாம்பரம்..............................ஶ்ரீவித ்தியா .................69..நாட்கள்.........2.40.000-00
    திருவாரூர்.........................தையலம்மை.. ..... ..........80..நாட்கள்.........2.12.303-65
    ஊட்டி..................................ஶ்ரீகண ேஷ்.. ..................60..நாட்கள்.........1.90.092-15
    தூத்துகுடி...........................காரனேசன் ..... ................50...நாட்கள்.......1.84.642-50

    விழும்புரம் .......................சாந்தி..................... .........64..நாட்கள்.........1.79.248-30

    அரக்கோணம்...................கற்பகம்.......... ..... ............60...நாட்கள்.........1.70.000-00

    சிதம்பரம்...........................வடுகநாதன் ..... ..............64...நாட்கள்.........1.67.164-74

    பழநி...................................வள்ளுவ ர்... .................50...நாட்கள்............1.67.153-70

    மூன்று தியேட்டர்களில் ஷிப்டிங்கில் ஓடியது உட்பட மொத்தம்

    11 தியேட்டர்களில் வெள்ளிவிழா.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #805
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    YouTube ல் புகழ்பெற்ற கதாநாயகர்களின் Top 25 movies என வீடியோ தொகுப்பை வெளியிட்ட்டு வருகிறார்கள்,
    அதில் நடிகர் திலகத்தின் Top 25 movies என தேர்வு செய்வதில் அவர்களுக்கு எந்த சிரமும் இல்லை போல, ஏனெனில் நடிகர் திலகத்தின் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள் என ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்து விடுகிறார்கள், அதையும் தாண்டி ஒன்றிரண்டு திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் அவையும் சாதனைக் காவியங்களாவே அமைந்து இருக்கிறது, உதாரணத்திற்கு நவராத்திரி, தெய்வமகன்,தில்லானா மோகனாம்பாள், கர்ணன்,புதிய பறவை போல,

    அதே தருணத்தில் பிற நடிகர்களின் top 25 movies என தேடிப்பிடிப்பதில் அவர்களுக்கு உண்டாகியிருக்கும் சிரமங்களை சொல்ல வேண்டுமானால் தேர்வு செய்த திரைப்படங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்,
    ஓடாத டப்பாப் படங்களை சூப்பர் ஹிட் , பாக்ஸ் ஆபிஸ், சிலவர் ஜூப்ளி என சொல்லி சமாளிக்கிறார்கள்,

    அவற்றை வேண்டுமானால் விருப்பமானவர்கள் பார்த்து சிரித்து மகிழலாம்
    அவ்வளவு காமெடி நிறைந்து இருக்கிறது,


    Thanks Sekar Parasuram

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #806
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ்
    'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
    நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
    ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
    சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
    அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
    அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
    தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
    தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
    நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
    - டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
    தினத்தந்தி அதிபர்.
    செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
    இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.



    vaannila v
    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #807
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் ஹை-லைட்
    30000 உணவுப் பொட்டலங்கள் சிவாஜிகணேசன் அளித்தார்.
    இதுவரை ரூ.40000 உதவி
    1000 பவுண்டு பால் பவுடரும் வழங்கினார்...
    இது 1960 நவம்பர் 13, கழக ஆதரவுப் பத்திரிகையான தனிஅரசு வில் வெளியான செய்தி.
    சென்னை, நவ. 13-
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இன்று 30000 உணவுப் பொட்டலங்களை மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார். பல பகுதிகளில் பாதிக்ககப்பட்ட மக்ககளுக்கு கார்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
    ரூபாய் 40,000
    தமிழ் நாட்டில் பெய்த பெருமழையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரைப் போக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இதுவரை 40000 ரூபாய் வரை பணமாகவும், அரிசியாகவும், உணவாகவும் வழங்கியிருக்கிறார்.
    பால் பவுடர்
    தமது வெள்ள நிவாரணக் குழு மூலம் தனது சொந்த மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பணியின் நான்காவது நாளாக 30,000 க்கும் மேலான உணவுப் பொட்டலங்களும் , 1000 பவுண்டு பால் பவுடரும் விநியோகிக்கப் பட்டது.
    கவுன்சிலர்கள்
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்படி உதவி அந்தந்த கவுன்சிலர்கள் மூலமும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலமும் சரியான நேரத்திற்கு முன்னால் ஒவ்வோர் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை சரியான முறையில் விநியோகிக்கப் படுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
    ( தனிஅரசு, நவம்பர் 1960)
    நடிகர்திலகத்தின் ஹை-லைட்ஸ் :6
    தென்னிந்திய திரைப்பட டெக்னீஷியன்ஸ் சங்க கட்டிட நிதிக்காக சிவாஜி நாடக மன்றத்தாரின் ' வியட்நாம் வீடு ' நாடகம் மியூசிக் அகாடமி ஹாலில் அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை மாலை நடை பெற்றது. இந்த நாடகத்தில் ரூ. 30,000 வசூலாயிற்று.
    வசூலான தொகை நடிகர்திலகத்தின் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது.
    இலவசமாக நாடகத்தை நடத்தித் தந்த நடிகர் திலகத்துக்கு சங்கச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
    (சினிமா ஸ்டார், நவம்பர் 1969)
    -வசந்தமாளிகை மாத இதழிலிருந்து தகவல் திரட்டப்பட்டது.
    அள்ளிக் கொடுத்தவரும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வாங்கிக் கொண்டோரும் கடைசிவரை வாய்த் திறக்கவில்லை.
    என்றாலும்,
    எல்லாப் புகழும் அய்யன் ஒருவருக்கே.

    Vaannila Vijayakumaran‎

    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #808
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31/01/1958 . இன்று 63 வருடங்கள் நிறைவு.



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #809
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1952 ம் வருடம் அக்டோபர் 17ந் தேதிதீபாவளி திருநாளில் வெளியானது பராசக்தி படம்
    வெளியானது . அதுவரை யாரிடமும் இல்லாத காந்த சக்தி சிவாஜியின் கண்களுக்கு இருந்ததை கண்டு மொத்தமாக அவர்பால் ஈர்க்கப்பட்டனர் .அவர் வசனம் பேசிய முறை உடல் மொழி பிரமிக்க வைத்தது .உச்ச கட்ட காட்சியில் வசனத்தை ஒரு ஜல்லிக்கட்டு காளை யை போல சிவாஜி திமிறிக்கொண்டு பேசியதை பார்த்த போது ,ஒவ்வொரு ரசிகனும் தன்னுடுய உடம்பில் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தனர் .பராசக்தி பார்த்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் ப...ோட்டு அமர்ந்தார் .படம் வெளியான அன்று ரசிகர்கள் எப்படி படத்தை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க சிவாஜி பெருமாள் முதலியார் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் பாரகன் தியேட்டருக்கு சென்றார்கள் .அவர்கள் உற்கார்ந்த வரிசைக்கு முன் உற்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் படத்தையும் சிவாஜியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான் .தனக்கு பின்னால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து அமர்ந்து இருப்பது சிவாஜிதான் என்று தெரிந்து கொண்டான் .நீதி மன்ற காட்சி முடிந்ததும் அந்த சிறுவன் ஓடி வந்து பலம் கொண்ட மட்டும் சிவாஜியின் கையை பிடித்து குலுக்கினான் .அந்த சிறுவன்தான் நல்லி குப்புசாமி செட்டியார் .சிவாஜி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாட துவங்கினார்கள் .பராசக்தி திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களில் எல்லாம் திருவிலாகோலம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக குவியதொடங்கினார்கள் .பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட கிராமபோன் நிறுவனம் பராசக்தி படத்தின் வசனத்தை பதிவு செய்து வெளியிட்டது .விற்பனையிலும் அந்த ரேக்காட்கள் சாதனை புரிந்தது . வெள்ளிவிழா கண்டு வெற்றிக் கொடி நாட்டியது பராசக்தி படம்.

    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #810
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பராசக்தி - சிவாஜி ஜாலம்
    சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார்.
    அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி.
    ... இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
    இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
    செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
    நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
    கல்யாணி: இட்லிக் கடையா?
    பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
    குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
    போலீஸ்காரன்: ஏய்
    குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
    போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
    பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
    குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
    பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
    சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை.
    இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார்.
    அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது.
    ஏன், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
    இதுதான் முதல் படத்திலேயே ஐயன் செய்த ஜாலம்!
    -RV

    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 81 of 113 FirstFirst ... 3171798081828391 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •