-
24th November 2020, 11:09 PM
#1
Senior Member
Devoted Hubber
1970 களின் துவக்கத்தில்,
1662 இருக்கைகள் கொண்டிருந்த மதுரைசெண்ட்ரல் திரையங்கில்,
84 நாட்களில் தோராயமாக நடைபெற்ற 276 காட்சிகளில் ( இதில் 139 காட்சிகள் தொடர் ஹவுஸ்ஃபுல்) படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 4,22,464 பேர்.
வசூலான தொகை : ரூ3,71,310
#ஒருவரலாற்றுவெற்றி
#பட்டிக்காடா_பட்டணமா
( மேற்கொண்டு இப்படத்தின் வசூல் மற்றும் சாதனைகளை துல்லியமாக அலசி ஆராய்ந்து பதிவிடுமாறு திரு.சேகர்பரசுராம் அவர்களை வழிமொழிகிறேன்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th November 2020 11:09 PM
# ADS
Circuit advertisement
-
25th November 2020, 10:56 PM
#2
Senior Member
Devoted Hubber
வணக்கங்கள். முதற்கண் உங்களுக்கு நீங்கள் விரும்பும் விடியோவை போடுவதற்கு இந்த சுதந்திர நாட்டில் உரிமை உண்டு. இருப்பினும், நாமாக ஒரு controversy topic பதிவு செய்வது சரியா என்று தெரியவில்லை. சில விஷயங்கள் தினத்தந்தி சிந்துபாத் கதை போல, சில விஷயம், கோழியில் இருந்து மூட்டையா...முட்டையில் இருந்து கோழியா எனும் ரகம். நடிகர்திலகம் ...மக்கள் திலகம் நாம் போடும் ஒரு பதிவால் ..பத்து பதிவால் புகழ் அடையபோவதில்லை காரணம் ஏற்கனவே புகழ் உச்சியில் உள்ளவர்கள்...அவர் அவர் துறையில்.. சிவாஜியிடம் அல்பமான விஷயத்திற்காக கோபித்து போனவர்கள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பதை உலகரியும். அது அவர்கள் தலையெழுத்து..அதற்கு எம்ஜிஆர் பொறுப்பேற்க எப்படி சாத்தியமாகும்? ஒருவர் மனகசாப்பில் இருக்கும்போது மூட்டிவிட்டு தான் மற்றவரிடம் சன்மானமும், நல்ல பெயர் சம்பாதிக்கவும் செய்த முயற்சி தான் பந்துலு, ஏபிஎன், கூடார மாற்றம். ஏபின் சிவாஜியை வைத்து படம் பண்ணினேன், எம்ஜிஆர் வைத்து பணம் பண்ணினேன் என்று சொன்னால்....நவரத்தினம் எந்த அளவிற்கு பணம் கொடுத்து என்ற கேள்வி வரும். காரணம் அது அவருக்கு பணமே தரவில்லை என்பது திரையுலகமே அறியும். வேறு படமும் apn அவரை வைத்து எடுக்கவில்லை. அவர் இந்த உலகிற்கு வந்த வேலை முடிந்தது. இறைவன் அடி சேர்ந்தார். அடுத்து பந்துலு... சிவாஜியை வைத்து 10 படங்கள் தயாரித்தார்...அவர் குழப்ப மன நிலையில் இருந்தபோது, அவரை தூண்டி விட்டவர்கள் வேண்டுமானால் எம்ஜிஆர் அவர்களிடம் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள்...ஆனால் 1965 முதல் 1974 வரை, 4 படங்களை மட்டுமே பந்துலுவால் 9 வருடங்களில் எம்ஜிஆர் அவர்களை வைத்து தயாரிக்க முடிந்தது....அதே 9 வருடங்களில் சிவாஜியை வைத்து 10 படங்களை தயாரித்தவர் பந்துலு 1955 முதல் 1964 வரை..அனைத்து படங்களும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் வெளியிட்டு பணம் பார்த்தார். அடுத்து ஜி ஏன் வேலுமணி, 2 படங்கள் சிவாஜியை வைத்து தயாரித்தார்...பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும்..ரெண்டுமே மிக பிரம்மாண்ட வெற்றி படங்களை, வசூல் குவித்த படங்கள். ஆனால் அவர் சிவாஜியை விட்டு சென்றார்...கடைசி காலங்களில் அவர் பஸ் இல் சென்று வந்து கொண்டிருந்தது அணைவருக்கும் தெரியும். அடுத்து ஸ்ரீதர்....ஸ்ரீதருக்கு பத்து பைசா கையில் இல்லாத சமயத்தில், அவர் வேலை செய்வது பிடித்துபோக, நடிகர்திலகதிடம், என்னிடம் பணம் இல்லை, உங்களை வைத்து எடுக்க நல்ல கதை உள்ளது, உங்கள் கால்ஷீட் கொடுத்தால் நான் பைனான்ஸ் வாங்கிவிடுவேன் என்று சிவாஜியிடம் வேண்டுகோள் வைக்க, சிவாஜி பெருந்தன்மையுடன், ஒத்துழைக்க, ஸ்ரீதர் அவர்களை தயாரிப்பாளராக உயர்த்தியதே சிவாஜிதான். ஸ்ரீதர் அகல கால் வைத்தார் ...சிவந்த மண் எடுக்கும்போதே சிவாஜி எச்சரித்தார்...ஹிந்தியில் இப்போது கால் பதிக்க வேண்டாம்...என்று...அதையும் மீறி, ஹிந்தியில் தயாரித்தார்..பிறகு, ஓ மஞ்சு மற்றும் இன்னும் ரெண்டு படங்களை ஒரே சமயத்தில் எடுத்தார். சிவந்த மண் தமிழ் வடிவம், அந்த ஆண்டின் அதிக வசூல் படமாக அமைந்தது..இருப்பினும், ஹிந்தியில் இவருக்கு காசு வரவில்லை கணக்கு மட்டும் வந்தது. மீதி படங்களும் சருக்கியது.... உடனே , ஒரு சிலர் கதை கட்டி விட்டார்கள் சிவந்த மண் தோல்வி என்று...36 அரங்குகளில் 10 வாரமும், 9 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடிய சிவந்த மண் எப்படி தோல்வி ஆகும்? மேலும் தமிழில் சிவந்த மண் மிக பெரிய வசூல் என்று திரு கோபு அவர்கள் காணொளி இதே Youtube இல் கூறியிருக்கிறார். அவர் அந்த தயாரிப்பில் ஸ்ரீதரின் பக்க பலமாக கூடவே இருந்தவர். ஆனால் ஒரு சில மாற்று கூடார ரசிகர்கள், அவர்கள் மன ஆறுதலுக்கு இப்படி இன்னும் பொய் பேசிக்கொண்டு திரிவது நல்ல வேடிக்கை.
Thank Nadigar Thilagam TV
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th November 2020, 10:58 PM
#3
Senior Member
Devoted Hubber
சிவாஜி அவர் சார்ந்த துறையில் உலக சாதனைகள் பல புரிந்த முதல் இந்திய நடிகர். அவர் சாதனைகளை யாரும் அந்த கால கட்டத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு சில சரித்திர சாதனைகளை எந்த காலத்திலும் நடத்திகாட்டுவது மிக கடினம். சிவாஜியை வீழ்த்த ஒரு பெரும் கூட்டம் மற்றும் ராஜதந்திரிகள் முயன்றனர், எம்ஜிஆர் அவர்களை கேடயம் போல முன்னால் வைத்து. அதில் படு தோல்வி அடையவும் செய்தனர்...இதற்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நேரிடையாக எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை..இருப்பினும், அந்த மாதிரி நிகழ்வில் தமக்கு சம்பந்தம் இல்லை என்பதை எந்த காலத்திலும் எம்ஜிஆர் அவர்கள் கூறிய தகவலும் இல்லை. ஆனால், தொழில் போட்டி மீறி இருவருக்கும் ஒரு பாச பிணைப்பு இருந்திருப்பதை இருவருவருமே வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்தில் ஆனால் எம்ஜிஆர் திமுகாவில் 1953 முதல் 1972 வரை பதவியில் இருந்து சினிமாவில் நடிக்கும்போது திமுக வின் முழு பின்பலத்தையும் கொடுத்த கருணாநிதி, சம்பத், நாவலர், சௌந்தரா கைலாசம், ஐசிரி வேலன், அசோகன், ஆகியோர் அந்த சித்து வேலைகளை திரியை நிமிண்டி ப்ரகாசத்துடன் எரியும் , ஜொலிக்கும் என்று நினைத்து ஆவண செய்தார்கள் என்பது நிறைய விஷயங்கள், நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளலாம். பிற்காலத்தில் தேங்காய் சீனிவாசனும் இதில் அடக்கம். இதையெல்லாம் தாண்டித்தான் நடிகர்திலகம் இதுபோன்றவர்களுக்கு எட்டாகனியாகவும், இவர்கள் சதிகளை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு மிக உச்சியில் துருவ நட்சத்திரமாக திகழ்ந்தார் பல பல அசுர வெற்றிகளை குவித்தார் திரை உலகில்.
Thank Nadigar Thilagam TV
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th November 2020, 11:03 PM
#4
Senior Member
Devoted Hubber
அட டுபாகூர்,
எங்களது சந்தேகம் என்பது
1956 ல் வெளியான மதுரை வீரன் மதுரையில் 180 நாளில் ரூபாய் 3, 67, 000/- வசூலித்தது என்றால்
அதே மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 1965 ல் 9ஆண்டுகள் கழித்து வெளியான எங்க வீட்டு பிள்ளை 175 நாளில் ஏன் ரூபாய் 3, 85, 000 மட்டுமே வசூலித்தது,
9 வருஷமா டிக்கெட் விலை உயராமல் இருந்ததா என்ன?
எங்க வீட்டு பிள்ளை குறைந்த படசம் 5 லடசம் வசூலித்து இருக்க வேண்டுமே?
அல்லது
மதுரை வீரன் வசூல் என்பது உண்மையா?
எங்க விட்டு பிள்ளை வசூல் என்பது உண்மையா?
அதுக்கு விளக்கம் கண்டு புடி,
கர்ணன் 40 லடசம் செலவு என்றால் அடிமைப்பெண் செலவு எவ்வளவு?
1964 ல் கர்ணன் 40 லடசம் என்றால்
1969 ல் அடிமைப்பெண் 70 லடசம் ஆகியிருக்குமே,( உங்க வாத்தி சம்பளம் மட்டுமே பல மடங்கு அதிகமாச்சே?)
அப்படி பார்த்தால் லாபம் பெற அடிமைப்பெண் குறைந்த படசம் 1.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வேண்டுமே?
ஆனால் வசூலித்தது 55 லடசம் தானே?
இந்த கணக்கெல்லாம் போட தெரியாதா?
ஆனால் சிவந்த மண், கர்ணன் இந்த இரண்டு படங்களை பற்றிய கணக்கு மட்டுமே உங்க வாத்தி சொல்லி கொடுத்தாரா?
Thanks Sekar .P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks