Page 77 of 113 FirstFirst ... 2767757677787987 ... LastLast
Results 761 to 770 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #761
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    தலை நிமிர்ந்து சொல்வோம் சிங்கத்தமிழன் சிவாஜி ரசிகன் என்று --ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பான எங்கள் எதிரி நடிகரின் நடிப்பில் கலர் படமான அன்பே வா திருச்சி எல்.ஏ சினிமாவில் முதல் காட்சியிலேயே 7 நபர் வந்ததால் அசிங்கப்பட்டு அந்த காட்சியோடு தூக்கி எறியப்பட்ட அவலம் --கட்சி போஸ்ட்டர்ல் தான் ஸ்டாம்ப் ஸைசுக்கு தள்ளப்பட்ட இவர் படத்துக்கு எனோ ரூபாய் 110 கொடுக்க ஒரு ரசிகருக்கு கூட திராணி இல்லை --எங்கள் தெய்வத்தின் வியட்நாம் வீடு கருப்பு வெள்ளை படம் தான் முழுக்க முழுக்க குடும்ப படம் போஸ்டர் நகரில் எங்கும் இல்லை --ஆனாலும் வெள்ளி அன்று மாலை காட்சி ஹவுஸ் புல் --ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் --ஞாயிறு மாலை காட்சியில் திரையரங்கு நிர்வாகத்தினர் பகிர்ந்து கொண்டது mgr படங்கள் முருகன் பேலஸ் கெயிட்டி முதலிய மூன்றாம் தர அரங்குகளில் தான் அவர் ரசிகர்களே சென்று பார்க்கிறார்கள் மற்றபடி ஏசி அரங்குகளில் இவர் படங்களை பார்ப்பதை மக்களும் அவர் ரசிகர்களும் விரும்பவில்லை என்றார் குறிப்பு --சென்ற வருடம் வெளியான வசந்த மாளிகை சோனா திரையில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ் புல் தற்போது வியட்நாம் வீடு வெள்ளி மாலை மற்றும் ஞாயிறு மாலை ஹவுஸ் புல் எந்த நிலையிலும் எங்கள் சிவாஜி அவர்களோடு திரை பயணம் செய்த போதும் இறந்த பின்பு சரி எங்களிடம் தோல்வி ஒன்றே எதிரி நடிகருக்கு மக்கள் கொடுக்கிறார்கள்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #762
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Dindigul Ganesh sunday evening Vietnam veedu movie








    Thanks Venkatesh Waran
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #763
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பொன்னியின் செல்வன் தொடரில் குந்தவை,நந்தினி மோதலை கல்கி அழகாய் விவரித்திருந்தார் இரண்டாம் பாகத்தில்...
    தஞ்சை அரண்மனையில் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலை இப்படி விவரித்திருந்தார் கல்கி...
    இருவரும்மே அந்த போராட்டங்களில் கடும் வேதனையை அனுபவித்தார்கள்..
    இரு பெண் புலிகள் போல் ஒருவரை ஒருவர் காய படுத்தி கொண்டார்கள்.
    ஆனால் அதிலும் ஒரு உற்சாக வெறி அடைந்தார்கள் என்று....

    அது போல தான் இரு திலகங்களின் ரசிகர்களும் மல்லு கட்டி கொள்கிறார்கள்.
    வேதனை அடைக்கிறார்கள்.இருந்தும் ஒரு உற்சாக வெறியும் அவர்கள் பெறுகிறார்கள்...

    மீண்டும் ஒரு பூதத்தை கிளப்பி விட்டிருந்தார்கள் சில தினங்களுக்கு முன்னர்...
    கொடுத்து சிவந்த கரங்கள் கர்ணனுக்கா?
    வேட்டைக்காரனுக்கா? என்று...
    இந்த விவாதத்தில் நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்க பட்டது என்பதே மெய்..

    நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு நாடகம் போடுவார் நாகேஷ்.
    மாணவர் தலைவர்,நாரதர்,சாவித்திரி என்று மூன்று வேடங்கள் அவருக்கு..
    ராமனை போல் ஒருவர் உண்டா உங்களிடம் என்பார் நாரத நாகேஷ்...
    ராமன் எத்தனை ராமன் உண்டோ அத்தனை ராமனும் உண்டு என்பார் மாணவர் நாகேஷ்.

    அடுத்து நாரதர் ராமனுக்கு பிறகு இன்னொரு இதிகாச பாத்திரமான கர்ணனை குறிப்பிடாமல் பறம்புமலை வள்ளல் பாரி போல் உண்டா? என்பார்.
    மாணவர் உடனே பராங்கிமலை வள்ளல் உண்டு இங்கு உண்டு என்பார்...
    நான் கூட நம்பி கைத்தட்டி மகிழ்ந்திருக்கிறேன் அந்த காட்சிக்கு...
    இப்படியாக வள்ளல் என்றால் mgr தான் என்று ஒரு பிம்பம் வலுவாக கட்டமைக்க பட்டு வந்தது அன்று தொட்டு....
    நடிகர் திலகம் இந்த வள்ளல் பட்டம் என்கிற மணிமுடிக்கு உரிமை கொண்டாட முனைந்ததே இல்லை,அதற்கான தகுதி தனக்கு இருந்தும்.. தனக்கு மட்டுமே இருந்தும்...

    நான் இப்படி சொல்கிறேன்,பாருங்களேன் சரியா என்று?
    ஒரு உயர்ந்த மனிதர் நிலம் வாங்கி கோயில் எழுப்பி, பிரகாரம், கோபுரம்,கலசம் அமைத்து நித்திய பூஜைகள் நடத்த நிவந்தமும் விட்டு....தன்னுடைய பெயரை மறைத்து கொள்கிறார்...

    இன்னொரு விளம்பர பிரியர் அதே கோயிலில் மார்க்கழி மாதத்தில் பொங்கல்,சுண்டல் பிரசாத உபயம் செய்கிறார்.....உபயம் இன்னார் என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு...
    கோயிலில் இருண்ட பகுதிகளில் tube light அமைக்கிறார்.அத்தனையிலும் அடியேன் தாசன் என்று தான் பெயரை பொறித்து வைக்கிறார்..

    மக்களே!வள்ளல் என்று யாரை சொல்வீர்?
    பொங்கல் சுண்டலை விழுங்கி விட்டு பிரசாத விநியோகஸ்தரை தானே வள்ளல் என்று வாழ்த்த தோன்றும்!

    போகட்டும் விடுங்கள்!
    நடிகர் திலகத்தின் வள்ளல் தன்மைக்கு சில சம்பவங்களை சொல்கிறேன்.....
    பார்த்து பாராட்டுங்கள்.பகிருங்கள்...

    1952 ஆம் ஆண்டு,ஜூனியர் விம்பிள்டனில் கலந்து கொள்ள திரு.R.கிருஷ்ணன் லண்டன் செல்ல வேண்டும்.அவரது தந்தை ராமநாதன் டென்னிஸ் விளையாடும் தன் நண்பர்கள் சிலரிடம் உதவி கேட்கிறார்.
    அங்கே திரு.T.K.சண்முகம் டென்னிஸ் விளையாடுவதை வேடிக்கை பார்க்க வந்திருந்த கணேசன் என்கிற புது நடிகர்,பராசக்தி படத்தில் மாத சம்பளத்தில் நடிப்பவர் அவர்,தன்னுடைய ஒரு மாத சம்பளமான,250 ரூபாயையை கொடுக்கிறார்.R.ராமநாதன் திகைத்து மகிழ்ந்து அந்த கணேசனை தழுவி கொள்கிறார்...

    1961 ஆம் ஆண்டு...அந்த கணேசன் இப்போது சிவாஜி கணேசன் என்று புகழ் பெற்று விட்டார்.
    மராத்தியத்தில் koyna dam உடைந்து பெரும் சேதம்.
    அணை உடனே சீரமைக்க பட வேண்டும்.
    முதல்வர் Y.B.சவாண் தேசத்திற்கே வேண்டுகோள் வைக்கிறார் உருக்கமுடன்..
    தெற்கே தமிழ் நாட்டில் அந்த சிவாஜி கணேசன் 11,00,000 ரூபாயை உடனே நிதியாக கொடுக்கிறார்.
    1961 ஆம் ஆண்டில்..

    அன்று 1951 ஆம் ஆண்டில் R.கிருஷ்ணனுக்கு கொடுத்தது போல ஒரு மாத ஊதியம் அல்ல இந்த 11,00,000 ரூபாய்.
    ஏறத்தாழ பன்னிரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த தொகை ஊதியமாக கிடைக்கும்.அப்படி பன்னிரண்டு படங்களில் நடிக்க வேறு நடிகருக்கோ எனில் மூன்று,நான்கு ஆண்டுகள் ஆகும்.
    நம் நடிகர் திலகத்திற்கே கூட 18 மாதங்களாவது ஆகும்..
    ஒரு நொடியில் அறிவித்து கொடுத்தார் சிவாஜி அவர்கள்..அந்த 11,00,000ரூபாயை..
    பம்பாயில் சிவாஜி பார்க்,இன்னும் சில இடங்களில் அமைந்துள்ள சத்திரபதி சிவாஜியின் சிலைகளுக்கு பெரும் நிதி கொடுத்திருக்கிறார் நம் சிவாஜி கணேசன்.
    மராட்டியத்தின் மீது ஏன் பாசம்? தன் உடன்பிறவா சகோதரி லதா மங்கேஷ்கர் அந்த மாநிலத்து மகள் என்பதால் பாசம் என்கிறார் சிவாஜி கணேசன்..

    இங்கே இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின் போது அமைக்க பட்ட சிலைகளில் வள்ளுவர் சிலைக்கு
    பொறுப்பேற்று நிதி கொடுத்தவர் அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
    வள்ளுவன் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே!
    என்று திரையில் பாடி நடித்த நம் திலகமே.

    பள்ளியில் தமிழ் பாடத்தில் ஒருபாடல்.
    பெரும்பாணாற்று படையில் இருந்து...
    வள்ளல் ஒருவரிடம் யானை ஒன்றை பரிசாக பெற்று வந்த பானன் ஒருவன் தான் பெற்று வந்த பரிசு எதுவென குறிப்பால் சொல்ல பானனின் மனைவி அதை யூகிக்கும் பாடல் ஒன்று..

    படித்திருப்பீர்கள் நண்பர்கள் யாவரும்...
    யானையை குறிக்கும் ஒவ்வொரு சொல்லாக பானன் சொல்ல,அந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளை பானனின் மனைவி தவறாக புரிந்து கொண்டு சொல்ல...
    மாதங்கம் என்பான்.அவள் மிகுந்த பொன் என்பாள்.
    இறுதியாக கைமா என்பான் சும்மா கலங்கினாளே என்று முடியும் பாடல்..

    வேடிக்கையான பாடல் அது.
    ஆனால் வேடிக்கையாகவே பல யானைகளை கொடையாக கொடுத்தவர் நடிகர் திலகம்...
    காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஒன்று..
    திருவானைக்கா அகிலாண்டஸ்வரிக்கு ஒன்று..
    இன்னும் சில கோயில்களுக்கு கூட ... மட்டும் அல்ல,அமெரிக்காவில் இந்தியானா பொலிஸ் என்னும் நகரத்து சிறு பிள்ளைகள் மகிழ அங்குள்ள காட்சி சாலை ஒன்றிற்கு ஒரு யானை.....
    கணேசன் என்ற தன்னுடைய பெயரால் கொடுத்தாரா,தங்க மலை ரகசியம் படத்தில் யானைகள் வளர்த்த taarzan ஆக நடித்ததால் கொடுத்தாரா?

    நடித்த படங்கள் ஏழு தருகிறேன்.வைத்து சிவாஜி வாரம் நடத்தி கொள்ளுங்கள்.
    வசூல் ஆனதில் தியேட்டர் வாடகை,கேளிக்கை வரி போக மீதத்தை யுத்த நிதியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்ன வள்ளல் இல்லை நடிகர் திலகம்.
    School Master படத்தில் கவுரவ வேடத்தில் நடித்ததற்காக பந்துலு அவர்கள் கொடுத்த 100பவுன் எடையுள்ள தங்க பேனா,மனைவியின் ஏராள ஆபரணங்கள் ஆகியவற்றை யுத்த நிதியாக பிரதமர் சாஸ்திரி அவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தவர் நடிகர் திலகம்.

    பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய இரு வல்லரசுகளை சூயஸ் கால்வாய் விவகாரத்தில் கண்களில் விரல் விட்டு ஆட்டிய எகிப்து அதிபர் நாசருக்கு 3.5 லட்சம் ரூபாயில் நினைவு பரிசு அமைத்து கொடுத்தவர் அவர்...
    அரசு செய்ய வேண்டிய கடமை அது.
    காங்கிரஸ் அரசு செய்ய தவறியது.
    கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தை வாங்கி நினைவு சின்னம் அமைத்து அரசிடம் கொடுத்தவர் நம் வீரபாண்டிய கட்ட பொம்மன்.

    1967 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனை நடத்த கூட 10,000 ரூபாய் இல்லாமல் நடிகர் திலகத்திடம் வந்து நின்றார் காமராஜர்.
    கண்ணீருடன் வந்தவர் களிப்புடன் திரும்பினார்.
    காரணம் நடிகர் திலகம் கொடுத்த தொகை மூன்று லட்சம்...

    முதலிலேயே நான் சொன்னபடி கோயில் அமைத்து கோபுரம் எழுப்பி கலசம் அமைத்து கூடமுழுக்கு நடத்தியவர் அமைதியாக இருக்க....
    மார்க்கழிபஜனையில் சுண்டல் கொடுத்தவர் கொடை வள்ளல் என்றால்....

    யாரை எள்ளி நகையாடுவது!

    அன்புடன் V.Vino Mohan...


    Thanks Vino Mohan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #764
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜி அவர்களின் வியட்நாம் வீடு
    மறுவெளியீடு கொண்டாட்டங்கள்.







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #765
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    திருப்பூரில் வியட்நாம் வீடு கொண்டாட்டம்!!









    Thanks Sivaji Palanikumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #766
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    திருப்பூரில் வியட்நாம் வீடு கொண்டாட்டம்!!









    Thanks Sivaji Palanikumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #767
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like







    Thanks Venkatesh Waran
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #768
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எதற்காக அழுகிறார்கள்?
    இதில் என்ன இருக்கு அழ
    என என் சிறு வயதில் இந்த படத்தை சகோதரியுடன் பார்த்தபோது கேள்வி வருவதுண்டு.
    அதிலும் குறிப்பாக பெண்கள் இருப்பிடத்தில் அமர்ந்து படங்களை பார்ப்பதால்
    பல இடங்களில் இருந்து அழுகை சத்தம் வரும்.
    பின்னாளில் விபரம் தெரிந்த வயதில் இந்த படத்தை பார்க்கும் போது,
    அழுகைக்காக காரணம் தெரிந்தது.
    பலமுறை பாத்தாலும் கண்ணீர் வராமல் இருக்காது..
    நல்ல கதை வேண்டுமா சிவாஜி படம் பாக்கலாம் என சொல்லும் அளவுக்கு பல்வேறு வகையான கதைகள் இவர் படங்களில் கிடைக்கும்.

    திரையில் இவரை தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட காரணத்தாலேயே இந்த கண்ணீர் வருவதுண்டு.

    மறுநாள் அக்கம்பக்கத்து வீட்டாரிடமும்
    இதை சொல்லி தன் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்வார்கள் பெண்கள்.

    தன் ஒவ்வொரு படத்தையும் பெண்களுக்கு
    உண்டான அற்புதமான கதைக்கரு கண்டிப்பாக சிவாஜி கணேசன் படத்தில் இருக்கும்.
    பல குடும்பங்கள் இவரை இன்றும் கொண்டாட காரணம் இதுவே என்பது என் கருத்து.

    நல்ல படங்கள் சிலது சொல்லுங்க
    என என் பாட்டியிடம் கேட்டால்,
    அதில் முதலில் வருவது இந்த படம் தான்.
    பாலும் பழமும்,
    படிக்காத மேதை,
    பாகப்பிரிவினை,
    பார் மகளே பார்,
    என பட்டியல் நீளும்.
    எதை கொண்டு இவர் பெண்களை தன் பக்கம் திருப்பினார்?
    என்று இன்றும் வியப்பது உண்டு.
    இன்று டூரிங் டாக்கீஸ் இல்லாததால்
    இந்த மாதிரி கதைகளை கொண்ட படங்களை மிகவும் தவறவிடுகிறோம்.
    நன்றி

    Thanks Siva Sri Kumar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #769
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜியின் 100 நாட்களுக்கும் மேலாக ஒடிய அதிகப்படியான திரைப்பட வெற்றிகளை மறைத்து விட்டு எண்ணிக்கையில் குறைந்த அளவிலான வெற்றிகளை பெற்ற பிற நடிகர்களை செய்திகளில் முன்னிறுத்தி வருகிறார்களே ஏன் எனக் கேட்டுவிட்டார் நண்பர் ஒருவர்,

    அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட நண்பருக்கு அரசியல் நிகழ்வுகள் கொண்டே விளக்கம் கொடுத்தேன்,

    கடந்த 2019 ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தின் 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது தானே,

    பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும்
    அதிமுக கூட்டணி 1 இடத்திலும் வெற்றி பெற்றதல்லவா,

    சட்டசபை இடைத்தேர்தலைப் பார்த்தால்
    திமுக 13 இடங்களிலும்
    அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன,

    எப்படி பார்த்தாலுமே திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது

    ஆனால் செய்தி ஊடகங்களைப் பொறுத்த அளவில் அதிமுக பெற்ற வெற்றியை திரும்ப திரும்ப சொல்லி பெரிய வெற்றியை போலக் காட்டினர்

    அப்படித்தான் ஊடகங்கள் பலம் நிறைந்தவை,
    பொய்யை மெய்யாக்க முடியும்,
    மெய்யை பொய்யாக்க முடியும்,

    Thanks Sekar Parasuram

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #770
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    14/01/2021 பொங்கல் முதல்
    மதுரை சென்ட்ரல் மற்றும்
    தூத்தக்குடி சத்யா

    நடிகர் திலகத்தின்
    சிவகாமியின் செல்வன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 77 of 113 FirstFirst ... 2767757677787987 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •