Page 15 of 107 FirstFirst ... 513141516172565 ... LastLast
Results 141 to 150 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் நாற்பதாவது படமாக...


    வாணி ராணி 1974

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 40



    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    #தச்சோளிஅம்பு








    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #4
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பட்டம் பதவியை விரும்பாதவர் என்று மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்று விட முடியுமா?
    1962 ல் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வந்தது,
    அந்தத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக பலமாக மோதிக்கொண்டன, இரண்டு கட்சிகளுக்குமே நடிகர் திலகம் சிவாஜி, புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற இரு பெரும் சக்திகள் துனை நின்றன,
    நடிகர் திலகத்தை பொறுத்த அளவில் திமுக உறவை 1956 ல் முறித்துக் கொண்டு சில வருட இடைவெளிக்குப் பின் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று 1961 ல் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தார், ஆனால் எம்ஜிஆர் அவர்களோ 1954 லிலிருந்து நடிகர் திலகத்திற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் இணைந்து தன்னை முன்னிறுத்திய அரசியலில் ஈடுபட்டு வந்தார்,
    இந்நிலையில் தான் 1962 ல் நடைபெற்ற தேர்தலானது சிவாஜி VS எம்ஜிஆர் என்ற மோதலை குக்கிராமங்கள் வரை கொண்டு சென்றது,
    திமுக வின் மேடையில் எம்ஜிஆர் அவர்கள் பேரறிஞர் அண்ணா முன்னிலையில் தேர்தல் நிதியாக ரூபாய் ஒரு லட்சம் தருகிறேன் என்று அறிவித்தார்,
    காங்கிரஸ் தரப்பில் நடிகர் திலகம் அவர்கள் நலிந்த வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகிதிகளின் ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளையும் ஏற்பதாக அறிவித்தார்,
    அந்தத் தேர்தலானது நடிகர் திலகத்திற்குத்தான் பெரும் சவால்கள் கொடுக்கும் நிலையில் இருந்தது, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பொதுவாகவே இருக்கும் எதிர்ப்பலை இருக்கவே செய்தது, மேலும் தென் தமிழகத்தில் பெரும் செல்வாக்கிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பகைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் என இன்னொரு எதிர்ப்பலை, இத்தனையையும் மீறி நடிகர் திலகம் மேற்கொண்ட சூறாவளி தேர்தல் சுற்றுப் பயனம் வளர்ச்சி பாதையில் பயணித்து வந்த திமுகவை நிலை குலையச் செய்தது,
    முக்குலத்தோர் நிரம்பிய பகுதியில் நடிகர் திலகம் பிராச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக பல திட்டங்கள் தீட்டினர், ஆனால் எதுவும் ப்யனளிக்கவில்லை, நடிகர் திலகத்தின் முன்னேறிய பிரச்சாரம் தொடர்ந்தது,

    தேர்தலும் நடந்தது அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, 139 தொகுதிகளைக் கைப்பற்றியது, திமுகவிற்கு 50 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது,
    தற்போது பதிவின் தலைப்பிற்கு வருகிறேன், "பட்டம் பதவியை விரும்பாதவரா நடிகர் திலகம்"
    ஆம் நிச்சயமாக விரும்பாதவர் என்று நடிகர் திலகம் தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்ள முடியும்,
    ஏனெனில் எதிர்தரப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுக தோல்வியுற்ற போதிலும் கூட தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர் ஐ கௌரவப்படுத்தும் விதமாக சட்ட மன்ற மேலவை உறுப்பினர்( எம்.எல்.சி) பதவிக் கொடுத்து கௌரவப்படுத்தினார்,
    அதே தருணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை பெற்றும் கூட அந்த வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் ஈடுபட்ட நடிகர் திலகத்திற்கு எதிர்தரப்பினர்ப் போல பதவி என்ற கௌரவம் கொடுக்க முன்வரவும் இல்லை, நடிகர் திலகமும் பட்டம் பதவியை எதிர்நோக்கவும் இல்லை,

    சிலர் கேட்கக்கூடும்
    அவ்வாறு வெற்றியை பெற்று கொடுத்த உங்கள் நடிகர் திலகத்தால் அதற்கு அடுத்தத் தேர்தல்களில் ஏன் வெற்றியை பெற்றுத் தரமுடியவில்லை? என்று
    அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் கல்லூரி மானவர்களை வளைத்துப் போட்ட இந்தி எதிர்ப்பும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களது துப்பாக்கிச் சூடு மட்டுமே காரணம்,

    :- புகைப்படம் நியூஸ் 7 சேனலிலிருந்து


    thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #5
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    ராணுவ வீரர்களுக்கு நிதி உதவி




    Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #6
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 41-வது படமாக...

    தங்கப்பதக்கம் 1974



    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 41

    வெளியான நாள் ஜுன் 1 1974

    திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
    ஓடிய நாள் 134
    மொத்த வசூல் ரூ 5, 42 ,902.90

    நிகர வசூல் ரூ 2, 74, 013 .55

    வி பங்குத் தொகை 1, 46, 115.79

    படம் வெளியான 6 மாத காலத்திற்குள் முதல் சுற்றில்
    வசூல் செய்த மொத்தத்தொகை 1 ,10,04 ,257.82



    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #7
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது சாதனை எது?

    அதன் அளவுகோல் எது?

    அதிக நாள் ஓடுவதா?

    அதிக வசூல் பெறுவதா?

    அதிக மக்கள் பார்ப்பதா?

    அல்லது
    அதிக நாள் ஓட்டுவதா?

    அதிக வசூல் பெற்றதாக பொய் வசூல் காட்டுவதா?

    அதிக நாள் ஓடியதாக பொய்யான தகவல் தெரிவிப்பதா?

    அல்லது குறைந்த நாட்கள் ஓடிய படத்துடன்
    கூடிய நாட்கள் ஓடிய படத்தை ஒப்பிட்டு காட்டுவதா?

    இதைத்தான் அடுத்தபக்கத்து நண்பர்கள் விரும்புகிறார்கள்
    எனவேதான் அந்த ஒப்பீடுகள்.

    (ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
    திரையிடப்பட்டது
    ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
    தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
    திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
    ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
    முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
    அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
    அதற்கான பதிலடியை மின்மினி
    பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
    அது பழைய கதை அதை விடுவோம்
    புது கதையை பாருங்கள்
    ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
    ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதட் 2013 பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
    அல்லது சாதனை காட்டுகிறார்கள)
    மேற்கண்ட பதிவு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 12 ல் என்னால் பதிவிடப்பட்டது.

    அந்த நேரத்தில் மேற்கண்ட இரண்டு படங்களும் திரையிடப்பட்ட திகதி தியேட்டர் விபரங்கள்
    கொண்ட ஆதாரம் கைவசம் இல்லாமையால் அன்று அதனை பதிவிடமுடியாமல்போய்விட்டது.

    தற்சமயம் அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது அவை நமது வாசகர்களின் பார்வைக்கு,..








    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #8
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 43-வது படமாக...

    அவன்தான் மனிதன் 1975


    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 43

    வெளியான நாள் ஏப்ரல் 11 1975

    திரையிட்ட அரங்கு சென்ட்ரல்

    ஓடிய நாள் 105

    வசூலான தொகை 4, 15, 491.40

    நிகர வசூல் 1, 91, 945.88

    வி பங்குத் தொகை 1 ,04 ,694.43

    சென்னை சாந்தி 100

    சென்னை கிரவுண் 100

    சென்னை பவுனேஸ்வரி 100

    மதுரை சென்ட்ரல் 105

    திரச்சி ராஜா 114

    சேலம் நியு சினிமா 105

    யாழ் லிடோ 122

    கோவை கீதாலயா 85

    கொழும்பு கிங்ஸ்லி 84




    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #9
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் 42-வது படமாக...

    என் மகன் 1974


    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 42

    வெளியான நாள் 21-08-1974

    திரையிட்ட அரங்கு நியு சினிமா

    ஓடிய நாட்கள் 101

    மொத்த வசூல் 3, 07 ,343.13
    நிகர வசூல் 1, 47, 345.17
    வி பங்குத்தொகை 0, 84, 285.35

    'நீங்கள் அத்தனைபேரம் உத்தமர்தானா"
    அன்றைய அரசியலின் முகத்திரையை
    கிழித்த இத்திரைப்பட பாடல் பெரும் ஹிட்டானது.



    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #10
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் பட வரிசையில்... #மன்னவன்வந்தானடி1975
    இந்தப்படம் மதுரையில் ஒரே வளாகத்தில் இரு அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 90 நாள்களும், மற்றொன்றில் 20 நாள்களும் என்று மொத்தம் 110 நாள் ஓடியிருப்பினும் இதனை நூறு நாள் பட்டியலில் மதுரை சிகர மன்றத்து இதயங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படியே நாமும் அவர்களின் வழியைப் பின்பற்றி இப்படத்தை விலக்கிவிட நினைத்தாலும் இதன் வசூல் அப்படி கடந்துவிட நம் உள்மனதை அனுமதிக்கவில்லை. எனவே, அதன் வெற்றி ஓட்டத்தையும் வசூலையும் தனித்தனியாகவே குறிப்பிட்டுள்ளேன்.
    இப்படத்தையெல்லாம் ஏன் அப்போது வெற்றி இலக்காக கருதப்பட்ட நூறு நாட்கள்வரை தொடர்ச்சியாக திரையிடவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.


    பின்குறிப்பு :
    தமிழ் வார இதழ் ஒன்றில் இதன் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான திரு.பாலமுருகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை ஏற்கனவே முகநூலில் நான் பதிவிட்டிருந்தாலும், தற்போது மீள்பதிவாக இங்கே பதிவிடுவது சாலப்பொருத்தம் என எண்ணுகிறேன்.
    நிற்க.
    # சற்று மன அமைதிக்காக நண்பர்கள் திரு.ஞானராஜ் மற்றும் திரு.அடைக்கலராஜ் இருவருடன் திருச்சியில் ஒரு ஹோட்டலில் நடிகர்திலகம் தங்கியிருந்தபோது, அவரை சந்திப்பதற்காக ஜேயார் மூவிஸ் படநிறுவன அதிபர்கள் திரு.சங்கரன், திரு.ஆறுமுகம் மற்றும் கதாசிரியர் திரு.பாலமுருகன் மூவரும் வந்தனர்.
    வழக்கமான காபி உபசாரங்கள் முடிந்ததும் "என்ன விஷயமாக வந்தீர்கள்?" என்று நடிகர்திலகம் கேட்க, "சும்மாதான்... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்" என்று பாலமுருகன் சொன்னார்.
    உடனே நடிகர்திலகம், "உங்களுக்கு விசயம் தெரியுமா? நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை..." என்று மூவரையும் பார்த்துச் சொல்ல,
    "அப்படியா! அப்போ எப்படி உங்களுக்குப் பொழுது போகும்? நடிக்காமல் சும்மா எப்படி இருப்பீர்கள்?" என்று பாலமுருகன் நடிர்திலகத்தைத் திருப்பிக் கேட்க,
    " அதான் எனக்கும் தெரியல... ரொம்ப போரடிக்குது! " என்று திலகம் பதிலளிக்க, "அப்போ நான் ஒரு கதை சொல்றேன்... கேக்குறீங்களா?" என்று பாலமுருகன் சொல்ல... " சரி.. சொல்லு" என்று நடிகர்திலகம் சொல்ல, பாலமுருகன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
    முழுக் கதையையும் திரு.பாலமுருகன் சொல்லி முடித்ததும், நடிகர்திலகம் ஒரு புதுமுக நடிகரைப்போல, "ரங்கசாமியைக் கூப்பிட்டு விக் ரெடி பண்ணச் சொல்லு... ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டு டிரெஸ் ரெடி பண்ணச் சொல்லு... ஆமாம்., பூஜை எப்போ?" என்று பரபரத்தார்.
    "அடுத்தவாரம்" என்று தயாரிப்பாளர் திரு.ஆறுமுகம் சொல்ல, "என்ன சாமி விளையாடுறீங்களா? அடுத்தவாரம் பூஜையை வச்சிக்கிட்டு நான் இங்க இருந்து என்ன பண்றது? புறப்படுங்க! நானும் வந்திடுறேன்..." என்று சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானார் நடிகர்திலகம்.
    " கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இனி நடிக்கப் போறதில்லைனு சொன்னீங்க... அதுக்குள்ளே எப்படி மனசு மாறிடுச்சு?" என்று பாலமுருகன் திலகத்திடம் கேட்க, " உன் கதையும், அந்த கேரக்டரும் என் மனசை மாத்திடுச்சு!" என்று பதிலளித்தார் நடிகர்திலகம்.
    அந்தக் கதைதான் #மன்னவன்வந்தானடி!
    அன்றைக்கு நிலவிய அரசியல் அவலங்களைப் பகிரங்கமாக சாடியிருந்த இப்படம் வெளியான பின்பு, அன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் கோமாளிக் கதாப்பாத்திரங்கள் உருவாகி அரசியலைச் சாடஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
    இப்படத்தில் இடம் பெற்றிருந்த "நான் நாட்டைத் திருத்தப் போறேன்" என்னும் பாடல் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பாடலாக நாடெங்கும் ஒலித்தது.
    படம் பார்ப்பவர்களை சிவாஜிக்கு டூயல்ரோல் போல என எண்ணும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.




    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 15 of 107 FirstFirst ... 513141516172565 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •