-
28th August 2020, 10:13 AM
#1
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் நாற்பதாவது படமாக...
வாணி ராணி 1974
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 40
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th August 2020 10:13 AM
# ADS
Circuit advertisement
-
29th August 2020, 09:02 AM
#2
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 09:04 AM
#3
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th August 2020, 09:45 AM
#4
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் பட்டம் பதவியை விரும்பாதவர் என்று மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்று விட முடியுமா?
1962 ல் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வந்தது,
அந்தத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக பலமாக மோதிக்கொண்டன, இரண்டு கட்சிகளுக்குமே நடிகர் திலகம் சிவாஜி, புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற இரு பெரும் சக்திகள் துனை நின்றன,
நடிகர் திலகத்தை பொறுத்த அளவில் திமுக உறவை 1956 ல் முறித்துக் கொண்டு சில வருட இடைவெளிக்குப் பின் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று 1961 ல் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தார், ஆனால் எம்ஜிஆர் அவர்களோ 1954 லிலிருந்து நடிகர் திலகத்திற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் இணைந்து தன்னை முன்னிறுத்திய அரசியலில் ஈடுபட்டு வந்தார்,
இந்நிலையில் தான் 1962 ல் நடைபெற்ற தேர்தலானது சிவாஜி VS எம்ஜிஆர் என்ற மோதலை குக்கிராமங்கள் வரை கொண்டு சென்றது,
திமுக வின் மேடையில் எம்ஜிஆர் அவர்கள் பேரறிஞர் அண்ணா முன்னிலையில் தேர்தல் நிதியாக ரூபாய் ஒரு லட்சம் தருகிறேன் என்று அறிவித்தார்,
காங்கிரஸ் தரப்பில் நடிகர் திலகம் அவர்கள் நலிந்த வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகிதிகளின் ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளையும் ஏற்பதாக அறிவித்தார்,
அந்தத் தேர்தலானது நடிகர் திலகத்திற்குத்தான் பெரும் சவால்கள் கொடுக்கும் நிலையில் இருந்தது, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பொதுவாகவே இருக்கும் எதிர்ப்பலை இருக்கவே செய்தது, மேலும் தென் தமிழகத்தில் பெரும் செல்வாக்கிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பகைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் என இன்னொரு எதிர்ப்பலை, இத்தனையையும் மீறி நடிகர் திலகம் மேற்கொண்ட சூறாவளி தேர்தல் சுற்றுப் பயனம் வளர்ச்சி பாதையில் பயணித்து வந்த திமுகவை நிலை குலையச் செய்தது,
முக்குலத்தோர் நிரம்பிய பகுதியில் நடிகர் திலகம் பிராச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக பல திட்டங்கள் தீட்டினர், ஆனால் எதுவும் ப்யனளிக்கவில்லை, நடிகர் திலகத்தின் முன்னேறிய பிரச்சாரம் தொடர்ந்தது,
தேர்தலும் நடந்தது அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, 139 தொகுதிகளைக் கைப்பற்றியது, திமுகவிற்கு 50 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது,
தற்போது பதிவின் தலைப்பிற்கு வருகிறேன், "பட்டம் பதவியை விரும்பாதவரா நடிகர் திலகம்"
ஆம் நிச்சயமாக விரும்பாதவர் என்று நடிகர் திலகம் தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்ள முடியும்,
ஏனெனில் எதிர்தரப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுக தோல்வியுற்ற போதிலும் கூட தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர் ஐ கௌரவப்படுத்தும் விதமாக சட்ட மன்ற மேலவை உறுப்பினர்( எம்.எல்.சி) பதவிக் கொடுத்து கௌரவப்படுத்தினார்,
அதே தருணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை பெற்றும் கூட அந்த வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் ஈடுபட்ட நடிகர் திலகத்திற்கு எதிர்தரப்பினர்ப் போல பதவி என்ற கௌரவம் கொடுக்க முன்வரவும் இல்லை, நடிகர் திலகமும் பட்டம் பதவியை எதிர்நோக்கவும் இல்லை,
சிலர் கேட்கக்கூடும்
அவ்வாறு வெற்றியை பெற்று கொடுத்த உங்கள் நடிகர் திலகத்தால் அதற்கு அடுத்தத் தேர்தல்களில் ஏன் வெற்றியை பெற்றுத் தரமுடியவில்லை? என்று
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் கல்லூரி மானவர்களை வளைத்துப் போட்ட இந்தி எதிர்ப்பும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களது துப்பாக்கிச் சூடு மட்டுமே காரணம்,
:- புகைப்படம் நியூஸ் 7 சேனலிலிருந்து
thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th August 2020, 09:50 AM
#5
Senior Member
Devoted Hubber
ராணுவ வீரர்களுக்கு நிதி உதவி
Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 08:55 AM
#6
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 41-வது படமாக...
தங்கப்பதக்கம் 1974
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 41
வெளியான நாள் ஜுன் 1 1974
திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
ஓடிய நாள் 134
மொத்த வசூல் ரூ 5, 42 ,902.90
நிகர வசூல் ரூ 2, 74, 013 .55
வி பங்குத் தொகை 1, 46, 115.79
படம் வெளியான 6 மாத காலத்திற்குள் முதல் சுற்றில்
வசூல் செய்த மொத்தத்தொகை 1 ,10,04 ,257.82
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 10:57 AM
#7
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st August 2020, 07:50 PM
#8
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 43-வது படமாக...
அவன்தான் மனிதன் 1975
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 43
வெளியான நாள் ஏப்ரல் 11 1975
திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
ஓடிய நாள் 105
வசூலான தொகை 4, 15, 491.40
நிகர வசூல் 1, 91, 945.88
வி பங்குத் தொகை 1 ,04 ,694.43
சென்னை சாந்தி 100
சென்னை கிரவுண் 100
சென்னை பவுனேஸ்வரி 100
மதுரை சென்ட்ரல் 105
திரச்சி ராஜா 114
சேலம் நியு சினிமா 105
யாழ் லிடோ 122
கோவை கீதாலயா 85
கொழும்பு கிங்ஸ்லி 84
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st August 2020, 07:33 PM
#9
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் 42-வது படமாக...
என் மகன் 1974
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 42
வெளியான நாள் 21-08-1974
திரையிட்ட அரங்கு நியு சினிமா
ஓடிய நாட்கள் 101
மொத்த வசூல் 3, 07 ,343.13
நிகர வசூல் 1, 47, 345.17
வி பங்குத்தொகை 0, 84, 285.35
'நீங்கள் அத்தனைபேரம் உத்தமர்தானா"
அன்றைய அரசியலின் முகத்திரையை
கிழித்த இத்திரைப்பட பாடல் பெரும் ஹிட்டானது.
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st September 2020, 12:22 AM
#10
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் பட வரிசையில்... #மன்னவன்வந்தானடி1975
இந்தப்படம் மதுரையில் ஒரே வளாகத்தில் இரு அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 90 நாள்களும், மற்றொன்றில் 20 நாள்களும் என்று மொத்தம் 110 நாள் ஓடியிருப்பினும் இதனை நூறு நாள் பட்டியலில் மதுரை சிகர மன்றத்து இதயங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படியே நாமும் அவர்களின் வழியைப் பின்பற்றி இப்படத்தை விலக்கிவிட நினைத்தாலும் இதன் வசூல் அப்படி கடந்துவிட நம் உள்மனதை அனுமதிக்கவில்லை. எனவே, அதன் வெற்றி ஓட்டத்தையும் வசூலையும் தனித்தனியாகவே குறிப்பிட்டுள்ளேன்.
இப்படத்தையெல்லாம் ஏன் அப்போது வெற்றி இலக்காக கருதப்பட்ட நூறு நாட்கள்வரை தொடர்ச்சியாக திரையிடவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பின்குறிப்பு :
தமிழ் வார இதழ் ஒன்றில் இதன் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான திரு.பாலமுருகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை ஏற்கனவே முகநூலில் நான் பதிவிட்டிருந்தாலும், தற்போது மீள்பதிவாக இங்கே பதிவிடுவது சாலப்பொருத்தம் என எண்ணுகிறேன்.
நிற்க.
# சற்று மன அமைதிக்காக நண்பர்கள் திரு.ஞானராஜ் மற்றும் திரு.அடைக்கலராஜ் இருவருடன் திருச்சியில் ஒரு ஹோட்டலில் நடிகர்திலகம் தங்கியிருந்தபோது, அவரை சந்திப்பதற்காக ஜேயார் மூவிஸ் படநிறுவன அதிபர்கள் திரு.சங்கரன், திரு.ஆறுமுகம் மற்றும் கதாசிரியர் திரு.பாலமுருகன் மூவரும் வந்தனர்.
வழக்கமான காபி உபசாரங்கள் முடிந்ததும் "என்ன விஷயமாக வந்தீர்கள்?" என்று நடிகர்திலகம் கேட்க, "சும்மாதான்... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்" என்று பாலமுருகன் சொன்னார்.
உடனே நடிகர்திலகம், "உங்களுக்கு விசயம் தெரியுமா? நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை..." என்று மூவரையும் பார்த்துச் சொல்ல,
"அப்படியா! அப்போ எப்படி உங்களுக்குப் பொழுது போகும்? நடிக்காமல் சும்மா எப்படி இருப்பீர்கள்?" என்று பாலமுருகன் நடிர்திலகத்தைத் திருப்பிக் கேட்க,
" அதான் எனக்கும் தெரியல... ரொம்ப போரடிக்குது! " என்று திலகம் பதிலளிக்க, "அப்போ நான் ஒரு கதை சொல்றேன்... கேக்குறீங்களா?" என்று பாலமுருகன் சொல்ல... " சரி.. சொல்லு" என்று நடிகர்திலகம் சொல்ல, பாலமுருகன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
முழுக் கதையையும் திரு.பாலமுருகன் சொல்லி முடித்ததும், நடிகர்திலகம் ஒரு புதுமுக நடிகரைப்போல, "ரங்கசாமியைக் கூப்பிட்டு விக் ரெடி பண்ணச் சொல்லு... ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டு டிரெஸ் ரெடி பண்ணச் சொல்லு... ஆமாம்., பூஜை எப்போ?" என்று பரபரத்தார்.
"அடுத்தவாரம்" என்று தயாரிப்பாளர் திரு.ஆறுமுகம் சொல்ல, "என்ன சாமி விளையாடுறீங்களா? அடுத்தவாரம் பூஜையை வச்சிக்கிட்டு நான் இங்க இருந்து என்ன பண்றது? புறப்படுங்க! நானும் வந்திடுறேன்..." என்று சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானார் நடிகர்திலகம்.
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இனி நடிக்கப் போறதில்லைனு சொன்னீங்க... அதுக்குள்ளே எப்படி மனசு மாறிடுச்சு?" என்று பாலமுருகன் திலகத்திடம் கேட்க, " உன் கதையும், அந்த கேரக்டரும் என் மனசை மாத்திடுச்சு!" என்று பதிலளித்தார் நடிகர்திலகம்.
அந்தக் கதைதான் #மன்னவன்வந்தானடி!
அன்றைக்கு நிலவிய அரசியல் அவலங்களைப் பகிரங்கமாக சாடியிருந்த இப்படம் வெளியான பின்பு, அன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் கோமாளிக் கதாப்பாத்திரங்கள் உருவாகி அரசியலைச் சாடஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இடம் பெற்றிருந்த "நான் நாட்டைத் திருத்தப் போறேன்" என்னும் பாடல் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பாடலாக நாடெங்கும் ஒலித்தது.
படம் பார்ப்பவர்களை சிவாஜிக்கு டூயல்ரோல் போல என எண்ணும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks