-
6th October 2013, 09:30 PM
#1
Senior Member
Seasoned Hubber
continued from last post.
உதறாமல் கால்கையை* * உச்ச ரித்தார்!
குதறாத வழியர்க்கோ அச்ச மென்ன?
குதர்க்கமிலார் என்றென்றும் எதற்கு மஞ்சார்,
இதற்குவர லாறிதுவாம் நேரம் தானே!
உதறாமல் கால்கையை*- with unshaken resolve to do justice. disregarding the stature of the accused person,
உச்ச ரித்தார்! - made decisions and passed judgment.
-
6th October 2013 09:30 PM
# ADS
Circuit advertisement
-
8th October 2013, 08:51 PM
#2
Senior Member
Seasoned Hubber
some explanation of the words used:
With ref to post #494:-
சிதறாத - referring here to evidence ( before a court,) which the judge considered to be reliable and not punctured with holes by the defence attorney in cross-examination etc.,
சான்றுகள் - evidence, oral as well as documentary and exhibits.
கண்டு - seen and examined.
கேட்டார்! - heard in hearing session.
அதிராகு - unprecedented.
பதறாத தூண் ஒத்தார் - refers here to the high stature of the accused person,
கதறாத கட்சியினர் - the political party to which the accused belongs has been taken aback by the court decision. Previously they had never been in such position.
Last edited by bis_mala; 8th October 2013 at 08:55 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
10th October 2013, 07:04 PM
#3
Senior Member
Seasoned Hubber
அழகேற்றுதல்
பத்து நூறாயிரம் ஆண்டுகள் நினைவின்றியே
பயன்பெற இனைந்து செயலாற்றிய உணர்வு!
ஒத்து வேறாவன தேடிடும் மனமின்றியே
உடனிவை புனைந்து கவினூட்டிய நிகழ்வு.
சொத்து வீணாவதைப் போன்றது குணமின்றியே
சூழ்த*ரும் உடல்தோல் அழகேற்றுதல் விடுத்தல்,
முத்துப் போலாவது வாழ்விது செயலின்றியே
மூப்பொடு பிணியை உடலேற்றியே அழித்தல்.
இவை பாடகி ரிரி கூறிய சில கொண்டு ஆக்கப்பெற்ற வரிகள்.
Last edited by bis_mala; 11th October 2013 at 04:20 AM.
B.I. Sivamaalaa (Ms)
-
3rd December 2013, 09:57 PM
#4
Senior Member
Seasoned Hubber
on computer bug or virus
பொட்டு வைத்த எழுத்திலிருந்து
பொட்டினை விலக்கிவிட்டு
கட்டுக் கவிதைக் குள்ளில்சென்று
கண்டபடி நட்சத்தீரங்கள்
கொட்டி வைத்த காட்சிபோன்றே
கோலமே விளைத்ததம்மா
மட்டு மீறி கணிணிமேவி
வைரஸென்னும் அரிபுழுவே!
இது மரபுக் கவிதை அன்று. ஒருபுதுக்கவிதை.
-
3rd December 2013, 10:48 PM
#5
Senior Member
Senior Hubber
அச்சச்சோ..ஏன் காஸ்பரஸ்கி (kaspersky anti virus) வைத்துக் கொள்ளவில்லையா
கசமுசா பெயர்கொண்ட பொருள்தான் - கொஞ்சம்
. கணினியுள் புகுந்தேதான் செய்திடும் அருள்தான்
பசப்புக்கள் பலசெய்த வாறே - உள்ளே
..பக்குவ மாய்நுழைந்த கிருமியை அள்ளும்
வசம்பினை உண்டதால் உடலும் - நல்ல
..வசப்பட்டு வேகமாய் குணமடைதல் போலும்
கசக்கிய துணியான கணிணி - மாற்றி
..கண்குளிர வேலைசெய வைத்திடும், போற்றி!
-
11th December 2013, 09:58 AM
#6
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
அச்சச்சோ..ஏன் காஸ்பரஸ்கி (kaspersky anti virus) வைத்துக் கொள்ளவில்லையா
கசமுசா பெயர்கொண்ட பொருள்தான் - கொஞ்சம்
. கணினியுள் புகுந்தேதான் செய்திடும் அருள்தான்
பசப்புக்கள் பலசெய்த வாறே - உள்ளே
..பக்குவ மாய்நுழைந்த கிருமியை அள்ளும்
வசம்பினை உண்டதால் உடலும் - நல்ல
..வசப்பட்டு வேகமாய் குணமடைதல் போலும்
கசக்கிய துணியான கணிணி - மாற்றி
..கண்குளிர வேலைசெய வைத்திடும், போற்றி!
thank you CK!
Good pleasant-to-read lines. Is your kaspersky available in CD-Rom.?
ஏவிஜி என்டி வைரஸ் உள்ளது--இருந்தும்
வைரஸ் இப்படித் துள்ளுது--என் எழுத்துக்குள்
குப்பைகளைக் கொட்டித் தள்ளுது-- அறியா என்
கண்ணையும் காதையும் கிள்ளுது
-
10th December 2013, 06:36 PM
#7
Senior Member
Seasoned Hubber
போர்க்குற்றம்......... நீதிமுன்
அதிகாரக் கோதை மயக்கு
கோடி பொதுமக்கள் கொன்றவன்-- அதிகாரக்
கோதை மயக்குநீர் உண்டவன்!
தேடிப் பதைப்பவை செய்தவன் --- இனக்கொலை
தேர்ந்தவன் பாவத்தில் உய்தவன்.
அரியணை நீங்கிடா ஆணவன்-- புவி
அனைத்தும் சொலக்கே ளாதவன்!
புரிந்துள போர்க்குற்றம் நீதிமுன்-- வைத்துப்
புகலவும் நெஞ்சொப்பி டாதவன்..
குற்ற மனைத்துக்கும் கொள்கலம்--- இது
குழைவின்றிக் கண்டதுஇந் நன்னிலம்!
இற்றைக் கியான்மட்டும் கண்டதோ!-- ஆக
இவன்யார் என்பது விண்டிலேன்.
Last edited by bis_mala; 10th December 2013 at 06:39 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
11th December 2013, 09:22 AM
#8
Senior Member
Seasoned Hubber
riots in Singapore
சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப் பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!
அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள் நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.
சூடு கிளப்பி சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்தபண் பட்டகா வல்துறை.
Last edited by bis_mala; 11th December 2013 at 10:56 AM.
B.I. Sivamaalaa (Ms)
-
11th December 2013, 10:18 PM
#9
Senior Member
Seasoned Hubber
நெல்சன் மண்டேலா
இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்
இன்னொரு காந்தியென
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்மரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?
நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று நாட்டுவரோ?
மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க
நிறைந்துயரந்த தமிழ்ப்பாவால்
நின்றுபணிந்தேத்திடுவோம்.
Last edited by bis_mala; 12th December 2013 at 06:42 AM.
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks