-
21st April 2007, 08:56 PM
#21
Senior Member
Platinum Hubber
¸¡Äí¸û Á¡È¢É¡Öõ Ó¨È Á¡ôÀ¢û¨Ç À¢Ã¨É ÓÊÅ¢øÄ¡Áø ¦¾¡¼÷¸¢È§¾¡?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
21st April 2007 08:56 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2007, 05:15 PM
#22
Senior Member
Diamond Hubber
கார்த்திக் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தின் சின்ன முள் எட்டிலும், பெரிய முள் பனிரெண்டிலும்
இருந்தன. ஜன்னலுக்கும் வெளியே இருந்த வேப்ப மரத்துக் கிளையில் இருந்த காகம் ஒன்று அதன் குரலைக்
கேட்டுதான் அவன் எழுந்து கொண்டான் என்ற மகிழ்ச்சியுடன் தன் இறகுகளை மாறி மாறி விசிறிக்கொண்டது.
இன்னும் கொஞ்ச நேரம் கீழ் இமையுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என்று மேல் இமை கேட்டுக் கொண்டது.
ஆனாலும் அதற்கு சமயம் இல்லை என்பது போல காகம் குரலெழுப்பியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு
அவன் எழுந்து கொண்டான்.
"கார்த்தி இன்னுமா தூங்கறான்?" என்று வெளியே கல்யாணி கேட்பது அவன் காதில் விழுந்தது.
"மூஞ்சியிலே வெய்யில் அடிச்சாத்தான் இவன் எழுந்திருப்பான். நம்ம துரதிருஷ்டம் இவன் ரூம் ஜன்னல்
மேற்கு பாத்து இருக்கு" என்று சொன்னபடி கல்யாணி உள்ளே வந்தாள்.
"இன்னும் என்ன கும்பகர்ண தூக்கம் ? ஞாயித்துக் கிழமை அப்படின்னு சொல்லுவே.. அது சரிதான்..
இருந்தாலும் ஒரு நேரம் காலம் கிடையாதா ?"
"அதான் எழுந்துட்டேனில்லையா.. மாது என்ன செய்யறான் ?"
"அவன் எழுந்து குளிச்சு, டிபன் சாப்டு பேப்பர் படிச்சுண்டு இருக்கான். அவன் உன்ன மாதிரி சோம்பேறியா?"
"போறும் போறும்.. காலம்பர எழுந்ததும் திட்ட ஆரம்பிச்சாச்சு"
"போர்வையை மடிச்சு வச்சுட்டு, ஃபேனை ஆஃப் செய்ய தனி ஆள் போடவேண்டியதுதான்"
"ம்ம்ம்.. அதுக்குத்தான் அம்மா அம்மா அப்படின்னு ஒருத்தி இருக்காளே !"
கல்யாணி முறைத்தபடி படுக்கையைச் சரி செய்ய கார்த்தி கொல்லைப் பக்கம் விரைந்தான்.
சுமதி சமையலறையில் மிக்சியில் சட்னி அரைத்துக் கொண்டிருக்க, அடுப்பில் இட்லி குக்கர் ஏறியிருந்தது.
"வாவ்... இட்லிக்கு இன்னைக்கு தேங்காய், புதினா சட்னியா ?" கார்த்தி சமையல் அறைக்குள்
நுழையும் முன்பே பின்னாலிருந்து வந்த கல்யாணி "டேய்.. முதல்ல போய் பல்லைத் தேச்சுட்டு உள்ளே வா.
காபி ஆறிண்டிருக்கு" என்றாள்.
"ஏன்.. நான் எழுந்த அப்புறம் சூடா பாலைக் காய்ச்சினா குறைஞ்சு போயிடுமோ ... " கார்த்திக் ஒரு
துள்ளலுடன் பின்னால் போக..
"ஈஸ்வரா... பெத்தது ரெண்டும் ரெண்டு துருவமா இருக்கு.. என்னத்த சொல்லுவேன் ? இவர் எங்கே காணும் ?
காலங்காத்தால தோட்டத்தை சுத்தப் போயிட்டாரா ?" என்றபடி கல்யாணி நகர்ந்தாள்.
சுமதி புன்னகையுடன் சத்தமாய் ஓடிக்கொண்டிருந்த மிக்சியை நிறுத்தினாள்.
..................................................
கடிகாரம் காலை பத்து மணியைக் காட்டியபோது கார்த்திக் மெதுவாக சமையலறைக்குள் மறுபடி
பூனை போல நுழைந்தான். கல்யாணியைக் காணவில்லை. சுமதி கத்திரிக்காயை நறுக்கிக் கொண்டு
இருந்தாள்.
"உஷ்... "
சுமதி தலையை நிமிர்த்தி புருவங்களால் என்ன என்று கேட்டாள்.
"அம்மா எங்கே ? "
"அத்தை வாசல்ல இருப்பா.. என்ன விஷயம் ?"
கார்த்திக் ஒரு தட்டை எடுத்துக் கொண்டான்.
"ஏய்.. சுமி.. எனக்கு வயித்துல என்ன்வோ செய்யறது. அதுனால இப்போ நீ என்ன செய்யறே அப்படின்னா
ரெண்டு கரண்டி சாதத்துல ரெண்டு கரண்டி ரசம் மட்டும் விட்டு என் கிட்டே கொடுத்துடணும். அதுக்கு
ஜஸ்ட் ஒரு சுட்ட அப்பளம் தொட்டுக்க இருந்தா போறும். அப்பாவும், மாதுவும் நிதானமா சாப்பிட வரதுக்குள்ள
என்னோட சிறுகுடலை பெருங்குடல் தின்னுடும்."
சுமதி தலையைக் கவிழ்ந்து கொண்டு சிரிப்பை மறைக்க முயன்றாள்.
கார்த்திக் கோபமாக முறைத்தான். "இப்ப எதுக்காக இப்படி இளிக்கிறே?" என்று அழுத்தமாகக் கேட்டு முடிக்குமுன்
கல்யாணி உள்ளே வந்தாள்.
"என்னடா இங்கே வந்து கத்திண்டிருக்கே ?"
சுமதி திரும்பிக் கொண்டு "அத்தை.. கார்த்தியோட சிறுகுடலை பெருங்குடல் தின்ன ஆரம்பிச்சுடுத்தாம்" என்றாள்.
கல்யாணி கண்களை விரித்து "பசிக்கறதா.. மாதவனுக்கு வச்சிருந்த இட்லியையும் உனக்கு சேர்த்து போட்டுட்டேன்.
அதுனால அவனுக்கு உப்புமா கிளறிக் கொடுத்தேன். இன்னிக்கும் ஆபீஸ் கூட கிடையாது. அதுக்குள்ளே
சாப்பாட்டுக் கடையை திறக்க வந்துட்டியா ? கொஞ்சம் பொறுத்துக்கோ.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.
ஈஸ்வரா.... பெத்தது ரெண்டும்.... "
"அம்மா.. ஸ்டாப்..ஸ்டாப்... மிச்ச டயலாக் எல்லாம் நானே சொல்லிக்கறேன்" என்று கார்த்திக் வெளியே ஓட
சுமதி சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டு கல்யாணி நிற்பதைப் பார்த்தவுடன் "என்ன அத்தை ? என்னாச்சு ?" என்றாள்
"ஒண்ணும் இல்லேம்மா... உன்னை பாக்கறப்போ உன் அம்மாவைப் பாக்கற மாதிரி இருக்கு"
சுமதி புன்னகையுடன் கல்யாணியை நெருங்கி "அதனால் என்ன அத்தை ? அம்மா இல்லாம போனா என்ன ?
நான் இருக்கேனே.. என்னிக்கும் உங்களுடன் இருப்பேன்"
கல்யாணி புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு "மாதவனுக்கு பச்சடி போறும். இந்த சின்னக்
கடங்காரனுக்கு புடலங்காய் கூட்டு வேணுமாம். நேத்திக்கே சொல்லிட்டான். கத்திரிக்காயை வதக்கிட்டு
அதையும் நான் செஞ்சுடறேன். நீ மிஷின்ல போட்ட துணியை எல்லாம் கொண்டு போய் உலர்த்திட்டு
வந்துடு.."
"சரி அத்தை"
சுமதி போவதைப் பார்த்தபடி கல்யாணி நின்று கொண்டிருந்தாள்.
.................................................. ............................
-
30th April 2007, 10:21 PM
#23
Senior Member
Diamond Hubber
Anbe Sivam
-
1st May 2007, 04:48 AM
#24
Senior Member
Diamond Hubber
vaasi..
idhellam characterisation... appdithAn irukkum :P
-
31st May 2007, 09:25 PM
#25
Senior Member
Devoted Hubber
avlo thaana story?
-
7th June 2007, 10:42 AM
#26
Senior Member
Diamond Hubber
-
28th January 2008, 07:36 PM
#27
Senior Member
Diamond Hubber
" ஒரு கதை நாடகமாக்கப் படுகிறது "
-
28th January 2008, 07:43 PM
#28
Senior Member
Platinum Hubber
-
28th January 2008, 08:06 PM
#29
Senior Member
Platinum Hubber
paravaayilla! enakku innum njaapaga sakthi konjamaavathu micham irukku!
thambi kathai sollum paaNiyE vegu jOr! ippo piLLaiyaar pidikka kurangaakaamal irukkaNumE! Too many hands spoil the broth enbathai eppadi poyyaakkapOkiROm?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
28th January 2008, 08:09 PM
#30
Senior Member
Platinum Hubber
Originally Posted by
pavalamani pragasam
paravaayilla! enakku innum njaapaga sakthi konjamaavathu micham irukku!
thambi kathai sollum paaNiyE vegu jOr! ippo piLLaiyaar pidikka kurangaakaamal irukkaNumE!
Too many hands spoil the broth enbathai eppadi poyyaakkapOkiROm?
sathyama kathai kandal thaan
onnum seyya mudiyathu, since script is left to the imagination of all
Bookmarks