-
14th June 2016, 06:06 PM
#11
Moderator
Diamond Hubber
சிறிய கேரக்டர்களை தவிர்க்கும் ரேஷ்மா
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றி அதன் பிறகு மீடியா வாழ்க்கை பிடித்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல் நடிகை ஆனவர் ரேஷ்மா. 'வாணி ராணி', 'வம்சம்', 'சுந்தரகாண்டம்' தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 'என் இனிய தோழியே' தொடரில் நடித்து வருகிறார். ரேஷ்மா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரசாத் பசுபலேட்டியின் மகளாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்.
தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில தொடர்களில் முக்கியமான சில கேரக்டர்களுக்கு ரேஷ்மாவை அணுகியபோது மறுத்துவிட்டாராம். “ஹீரோயினாகத்தான் நடிப்பேன். அப்போதுதான் என் முழு கவனமும் கேரக்டரில் இருக்கும், எல்லா எபிசோடிலும் நான் வருவேன். மக்கள் மனதிலும் பதிய முடியும்” என்ற அதற்கு காரணம் சொன்னாராம். இன்னொரு தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
-
14th June 2016 06:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks