Page 24 of 46 FirstFirst ... 14222324252634 ... LastLast
Results 231 to 240 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #231
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடிக்கிறேன்! - நடிகை பாலாம்பிகா பேட்டி


    நாதஸ்வரம், பிரியமானவள், அக்னி பறவை, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை பாலாம்பிகா. பெரும்பாலும் அம்மா வேடங்களாகவே நடித்து வரும் அவர், அம்மா வேடங்களே எனக்கு திருப்தியாக உள்ளதால், அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடித்து வருகிறேன் என்கிறார்.


    தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது.
    1991ல் பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நான் சினிமாவில் அறிமுகமானேன். முதல் படத்தில் தங்கையாக அறிமுகமானதால் அதன்பிறகு எனக்கு தங்கை வேடங்களாகவே வந்தன. நடிகனில் குஷ்புவுக்கு தங்கை, பாட்டாளி மகன் படத்தில் அர்ஜூன், திருமதி பழனிச்சாமியில் சத்யராஜ் இப்படி பல முன்னணி ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து விட்டு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய தம்பிக்கு ஒரு பாட்டு படத்தில் ஹீரோயின் ஆனேன். அதையடுத்து என் ஆசை தங்கச்சி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தேன். பின்னர் 2001ல் திருமணமாகி விட்டது. அதனால் 12 வருடங்களாக நடிப்பை விட்டு விலகியிருந்தேன்.


    இந்நிலையில், 2013ல் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். திருமுருகனின் நாதஸ்வரம் தொடரில்தான் ரீ-என்ட்ரி ஆனேன். அதன்பிறகு பிரியமானவள் உள்பட பல தொடர்களில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. சீரியல்களில் எனக்கு மகளாக நடிக்கும் பொண்ணுங்களே என்னை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். இது பெரிய சந்தோசமாக உள்ளது. இதுதவிர அக்கா, அண்ணி வேடங்கள் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் சீரியல்களில் அக்கா அண்ணி கேரக்டர்கள் ரொம்ப கம்மி. அதேசமயம் அம்மா கேரக்டர் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். இந்த வேடங்களுக்கு சீரியல்களில் அதிக முக்கியத்துவமும் உள்ளது. அதனால் அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடித்து வருகிறேன்.


    சீரியல்களில் எந்த அளவுக்கு ரீச் கிடைக்கிறது? என்று அவரைக்கேட்டால்,


    நான் நாதஸ்வரம் தொடரில் ஒரு வில்லியாக நடித்தேன். கேங் லீடர் போன்ற ஒரு வேடம் கொடுத்தார் திருமுருகன். நான் ஆளை கடத்துவேன். ஏய் தூக்குடா அவளை என்று அதிரடி வசனம் பேசுவேன். நான் வில்லின்னா என்னாலே நம்ப முடியல. ஆனா என்னையும் வில்லியாக நடிக்க வைத்தார் டைரக்டர். இதே மாதிரி வேறு சில தொடர்களிலும் நெகடீவ் வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில், சினிமாவை விட சின்னத்திரைதான் எனக்கு திருப்தி கொடுத்துள்ளது.


    நான் சினிமாவில் நடிக்கிற காலத்தில் ஒரு படத்தில் நடித்தாலே ரீச். ஆனால் இப்போது அப்படியல்ல. 15 படங்களில் நடித்தால்தான் வெளியில் தெரிவோம். அதேசமயம், ஒரு மெகா சீரியலில் நடித்தாலே பெரிய ரீச் இப்போது கிடைத்து விடுகிறது. சீரியல்களில் நடிக்கிற எனது பெயர் எந்த நேயர்களுக்கும் தெரிவதில்லை. ஆனால் பிரியமானவள் கதாநாயகி அவந்திகாவின் பெயரை சொல்லி அவந்திகா அம்மா போறாங்க பாரு என்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல் உடனே மக்கள் மனதில் பதிந்து விடுகிறது.


    சீரியல் நடிகைகளெல்லாம் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே. நீங்கள் எப்படி?
    எனக்கு இப்போது சினிமாவில் நடிக்கிற ஆசை உள்ளது. அதனால் சில படங்களின் ஆடிசன்களில் கலந்து கொள்கிறேன். பாலாம்பிகா என்ற நடிகையை முன்பு தெரியும். ஆனால் இப்போது எனது உருவம் உடல்கட்டு யாருக்கும் தெரியாது என்பதால் சில கம்பெனிகளுக்கு நானே செல்கிறேன். சமீபத்தில் வெளியான குபேர ராசி படத்தைத் தொடர்ந்து ஆறாது சினம், ஒரு கனவு போல, மூன்று ரசிகர்கள், பாதை என 6 படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் அம்மா வேடங்களில்தான் நடிக்கிறேன். அந்த வகையில், சீரியல்களைப்போலவே சினிமாவிலும் அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடிக்கிறேன்.


    செண்டிமென்ட் நடிப்பில் என்னென்ன வித்தியாசம் காட்டி வருகிறீர்கள்?

    அம்மா மகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்கிறபோது பிரச்னைகளுக்கேற்ப நடிப்பு மாறுபடும். மற்றபடி கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஹேர்ஸ்டைல், காஸ்டியூம் என மாற்றிக்கொள்வேன். குறிப்பாக, வசதி, ஏழ்மை, நடுத்தரம் என அதற்கேற்பவும் என்னை மாற்றிக்கொள்வேன். அப்படி நான் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கும்போது பர்பாமென்சும் மாறுபடும். அந்த வகையில், ஒவ்வொரு சீரியல்களிலும் எனது நடிப்பை கதைகளின் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டே வருகிறேன் என்று கூறும் பாலாம்பிகா, இப்போது சீரியல்களில் மாதம் 15 நாட்கள் பிசியாக இருக்கிறேன். அது தவிர, ஏதேனும் கடை திறப்பு விழா, கேம்ஸ் ஷோ, சமையல் ஷோ என வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். ஆக, சினிமா-சின்னத்திரை என்று மீண்டும் கலைத்துறையில் பிசியாகி இருப்பது சந்தோசமாக உள்ளது. இது தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்






    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #232
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நேயர்களை சிரிக்க, சிந்திக்க வைப்பதே எனது நோக்கம்! -ஜனனி நிவிதா


    ராஜ் டிவியில் லைவ் ஷோ, செலிபிரிட்டி ஷோ, பிரபலங்களின் பிறந்த நாள் ஷோ என பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் ஜனனி நிவிதா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார். எதிர்காலத்தில் நேயர்களை சிரிக்க, சிந்திக்க வைக்கக்கூடிய நிகழ்ச்சிகளை இயக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாம்.


    இதுபற்றி தினமலர் இணையதளத்திற்கு ஜனனி நிவிதா அளித்த பேட்டி..


    விஸ்காம் படித்து விட்டு டைரக்சன் துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உடனடியாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ராஜ் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக என்ட்ரி ஆனேன். அதையடுத்து விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க இப்போது உதவி இயக்குனராக ஒர்க் பண்ணி வருகிறேன். மேலும், 3 வருடத்துக்கு முன்பு நிஜத்தில் ஒரு கனவு, என்ன இப்படி நடக்குது போன்ற குறும் படங்களிலும் நான் நடித்திருக்கிறேன்.
    மேலும், முதலில் ஆக்ட் பண்ண மட்டுமே ஆசை இருந்தது. ஆனால் இப்போது டைரக்சன் பண்ண வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக காமெடி ஷோ பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பெண்ணாக இருப்பதால் பெண்களை மனதில் கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கான் செப்ட்டை யோசித்து நிகழ்ச்சி டைரக்ட் பண்ணுவேன். இன்னும் ஒரே வருசத்தில் டைரக்டர் ஆகிடுவேன். அதில் எனக்கேற்ற வேடம் இருந்தால் நடிப்பேன்.


    உங்களது ரோல் மாடல்?
    கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி டைரக்டர் தாம்சன்தான் எனது ரோல் மாடல். அவருக்கு ஒர்க்தான் பர்ஸ்ட். அவ்ளோ ரெஸ்பான்சிபிலிட்டி. அதோடு தன்னிடம் இருப்பவர்களையும் வளர்க்கனும் என நினைப்பார். பொறுமையாக சொல்லிக்கொடுப்பார். அவரிடம்தான் டைரக்சன் பற்றி நிறைய கற்றுக்கொண்டி ருக்கிறேன். அதேமாதிரி, நடிகர் உதயராஜ் எனக்கு நிறைய நடிப்பு பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார். நிலாக்காலம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பு திறமையை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்.


    எதிர்காலத்தில் சினிமாவில் பிரவேசிக்கும் எண்ணம் உள்ளதா?
    சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன். மற்றபடி, சின்னத்திரையில் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை இயக்கி குறிப்பாக, குடும்பப் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடிய விசயங்களையும் எனது நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்துவேன். ஆனால் அதை அட்வைசாக இல்லாமல் மருந்தில் தேன் கலப்பது போல் கொடுப்பேன் என்கிறார் ஜனனி நிவிதா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #233
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வைராக்கியம், அழகி, கஸ்தூரி, தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களில் மெயின் வில்லியாக நடித்தவர் நிஷா. இதில் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வரும் ப்ரியா கேரக்டர் டிவி நேயர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட திட்டுக்களை வாங்கிக்கொடுத்திருக்கிறதாம்.இப்படி டிவி நேயர்கள் உங்களை திட்டுவது மனதை பாதிக்கிறதா? என்று நிஷாவைக்கேட்டால்,ஆரம்பத்தில் இப்படி திட்டுகிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அது பழகி விட்டது. தொடர்ந்து நான் வில்லியாகவே நடிப்பதால் ஷாப்பிங் போகும் இடங்களில் என்னை பார்க்கும் பெண்கள் சகஜமாக பேச மாட்டார்கள். அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொள்வார்கள். பின்னர் தயக்கத்துடன்தான் பேசுவார்கள்.


    ஆனால் நான் அவர்களிடம் சீரியலில் பேசுவது போன்று ரப் அண்ட் டப்பாக பேசாமல் மென்மையாக பேசுவதைப்பார்த்து அவர்களும் என்னிடம் சகஜமாக பேசுவார்கள். ஆனபோதும், எதற்காக சீரியல்களில் அவ்வளவு மோசமானவராக நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அப்போது அவர்களிடம், ஒரு கதை என்று வருகிறபோது வில்லி கேரக்டர் அப்படி இருந்தால்தான் கதையே நகரும். டைரக்டர்கள் எப்படி அதில் நடிக்க சொல்கிறார்களோ அப்படித்தான் நாங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்வேன். அதை சிலர் புரிந்து கொள்வார்கள்.


    மேலும், சீரியலில் பேசப்படும் நடிகையாகி விட்ட எனக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது. என்று கூறும் நிஷா, விஷால் நடித்த பூஜை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். தொடர்ந்து சீரியல்களைப் போன்று சினிமாவிலும் என்னை வெளிச்சம் போட்டு காட்டும் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அதோடு, என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ், நெகடீவ் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எனக்கு ஸ்கோர் பண்ணுவதற்கு எந்த கேரக்டரில் வாய்ப்பு இருக்கிறதோ அதில் நடிப்பேன் என்கிறார் நிஷா.



    நன்றி: தினகரன்
    "அன்பே சிவம்.

  5. #234
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாசிட்டீவ் வேடங்களில் நடிக்க வேண்டும்! - சீரியல் நடிகை ஷாமிலி


    தென்றல், பிரியசகி என சில சீரியல்களில் வில்லியாக நடித்து வந்த எனக்கு, இப்போது பாசமலர் தொடரில் பாசமான தங்கையாக நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது. அதனால் தொடர்ந்து நிறைய செண்டிமென்ட் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஷாமிலி.</p><br /><p><b>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
    தென்றல் சீரியலில் சுஜி என்ற வில்லியாகதான் நான் என்ட்ரியானேன். நல்ல டிஆர்பியான சீரியல் என்பதால் என்னை அந்த சீரியலே பிரபலப்படுத்தி விட்டது. அந்த சமயத்தில் எங்க வீட்டில் யாருமே சீரியல் பார்க்க மாட்டார்கள். அப்போது அந்த சீரியல் டைரக்டர், உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள் சீரியலைப் பார்த்துவிட்டு என்ன ரிசல்ட் சொல்கிறார்கள்? என்று கேட்டார். ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் எதுவும் சொல்லவில்லை. அதனால் ரெஸ்பான்ஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை என்றேன்.
    ஆனால், அந்த சமயத்தில் ஒருநாள் நான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில பெண்கள் சுஜி போறா பாரு என்றார்கள். அதோடு எல்லோரையும் நான் பழிவாங்குவதை சொல்லி திட்டினார்கள். எனக்கு பயமாகி விட்டது. இது என்னடா வம்பா போச்சு என்று இதை டைரக்டரிடம் சொன்னேன். இப்பத்தானே திட்ட ஆரம்பிச்சருக்காங்க. போகப்போக உனக்கு இது பழகிடும் என்றார்.அப்புறம் உதிரிப்பூக்களில் மேகா என்ற கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு பெஸ்ட் பர்பாமர் என்ற விருது வாங்கித்தந்தது. பிரியசகியில் பாசிட்டீவா இருந்து நெகடீவாக மாறும் ரோலில் நடித்தேன். ஹீரோயினியின் லவ்வருக்காக அப்படி மாறுவேன். இப்போது பைரவி, பாசமலர் ஆகிய தொடர்களில் நடிக்கிறேன்
    இதில், பாசமலரில் ஒரு அண்ணன் ரெண்டு தங்கச்சி கதை. அதுதான் கான் செப்ட்டே. ரெண்டு தங்கைகளை கல்யாணம் செய்து கொடுக்க ஒரு அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதுதான் கதை. ரொம்ப நல்ல சீரியல். இந்த சீரியலில் எனது செண்டிமென்ட் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு, இன்னும் இந்த மாதிரி பாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் ஷாமிலி, என்னதான் வில்லி வேடங்கள் பரபரப்பாக பேசப்பட்டபோதும், பாசத்தை வெளிப்படுத்தும் பாசிட்டீவான வேடங்களில் நடித்து நேயர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #235
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Eeagavalli

    kealdi kanmani, aboorva raagangal, en iniya thozhi,sabitha engira sababathi endra Naangu seriyalgalil thrpothu bisiyaga nadithu kondirupavar nadigai eagavalli.

    http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm

  7. Likes aanaa liked this post
  8. #236
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

  9. Likes aanaa liked this post
  10. #237
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Maina kearaktaril en ammavaithaan pirathibalikkirean . saravanan meenakshi Nandhini interview.


    http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm

  11. Likes aanaa liked this post
  12. #238
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும்! - டெலிபோன் ராஜ் பேட்டி




    நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்து விட்டு, சின்னத்திரை சீரியல்கள், சினிமா என பரவலாக நடித்து வருபவர் டெலிபோன் ராஜ். அதிகமாக காமெடி வேடங்களிலேயே நடித்துள்ள எனக்கு சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், ரசிகர்களை அழ வைக்கக் கூடிய கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் டெலிபோன் ராஜ்.


    தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி..


    இதுவரை என்னென்ன சீரியல்களில் நடித்திருக்கிறீர்கள்?
    மெளலி இயக்கிய பிளைட் நம்பர் 172 தான் நான் நடித்த முதல் சீரியல். கமல்ஹாசன் சாரே அப்போது எனது நடிப்பை பாராட்டினார். அதன்பிறகு செவன்த் சேனல் தயாரித்த மரியாதை ராமன், கள்வனின் காதலி, வாழ்க்கை, பாண்டியன் பரிசு, எத்தனை மனிதர்கள் என பல சீரியல்களில் நடித்தேன். டைரக்டர் வசந்த் தயாரித்த சீனியர் ஜூனியரில் நடித்தேன். வாரம் ஒரு விஐபி இடம்பெற்ற அந்த சீரியலில் ஒரு வாரம் சூர்யாவும் நடித்தார். பின்னர் பாக்யராஜின் ஒரு கதையின் கதை, ஏவிஎம்மின் கீதாஞ்சலி, இப்படிக்குத்தென்றல், நடிகை ரோஜா நடித்த நதி எங்கே போகிறது, ராதிகாவின் செல்லமே, கோவை சரளாவுடன் தம்பதிகள் களப்படம், ஊர்வசி நடித்த ருக்கு ருக்கு ருக்குமணி, மசாலா குடும்பம், நாம் சிரித்தால் தீபாவளி என கிட்டத்தட்ட நூறு சீரியல்களில் நடித்து விட்டேன்.


    சமீபத்தில் மடிப்பாக்கம் மாதவன் தொடரில் 25 எபிசோடு நடித்தேன். எமன், அரசியல்வாதி, கந்துவட்டிக்காரன், பெரிய தாதா, லோக்கல் தாதா, தெலுங்கு தாதா என பல கெட்டப்புகளில் நடித்தேன். அடுத்து ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் ஆ மாமியார் ஓ மருமகள் -என்ற சீரியலில் நடிக்கயிருக்கிறேன்.


    கேரக்டர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
    என்னைப்பொறுத்தவரை கேரக்டர்தான் முக்கியம். நல்ல வேடம் கொடுத்தால் நான் பணத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எத்தனை பக்கம் டயலாக் கொடுத்தாலும் பேசி நடித்துக்கொண்டேயிருப்பேன். நேரம் காலம் பார்க்கவே மாட்டேன். மேலும், இன்றைக்கு சின்னத்திரையில், தெரிந்தவன், வேண்டப்பட்டவன் என யார் வந்தாலும் சான்ஸ் கொடுத்து சீரியல்களை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தகுதியான வர்களை நடிக்க வைத்து தரமான படைப்புகளை டைரக்டர்கள் நேயர்களுக்கு கொடுக்க வேண்டும்.


    காமெடி வேடங்களாக நடித்துள்ள உங்களுக்கு குணசித்ர வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதா?
    நிச்சயமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் நான் தோழர்கள் கலைக்களம் -என்ற நாடக ட்ரூப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் 200 நாடகங்களை நடத்தியிருக்கிறேன். பி.எல். ராகவன் எனது 50 சீரியல்களில் நடித்துள்ளார். ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துவோம். தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கோல்கட்டா என பல வெளிமாநிலங்களுக்கு சென்று நாடகம் நடத்தியிருக்கிறேன். பின்னர் மெளலியின் டிராமா ட்ரூப்பில் பத்து வருடம் இருந்தேன்.
    முக்கியமாக, மேடை நாடகங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி அழவும் வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு அப்போதே நான் குணசித்ர வேடங்களிலும் நடித்து பெயர் வாங்கினேன். என்னுடன் சேர்ந்து ரசிகர்களையும் கதறி அழ வைத்திருக்கிறேன். அந்த மாதிரி நாடகங்களில் எனக்கு கதாபாத்திரங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது எனக்கு தொடர்ந்து சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே என்னை காமெடியனாகவே பயன்படுத்தி வருகிறார்கள். இவர் இந்த மாதிரி மட்டும்தான் நடிப்பார் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். ஆனால், எனக்கு சீரியசான, எமோசனலான, செண்டிமென்டான வேடங்களில் நன்றாக நடிக்கத் தெரியும். அதற்கான வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை


    உங்களது விருப்பத்தை டைரக்டர்களிடம் தெரிவித்ததுண்டா?
    இதுவரை சொல்லவில்லை. ஆனால் இப்போது எனது விருப்பத்தை சில டைரக்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், கடல் படத்தில் மணிரத்னம் சார் ஒரு வேடம் கொடுத்தார். அலையில் விழுந்த என மகன் இறந்து கிடப்பான். அவனை மடியில் போட்டுக்கொண்டு நான் அழுகிற மாதிரி காட்சி. சுற்றி நின்றவர்கள் கண்கலங்கும் அளவுக்கு நடித்தேன். மணிரத்னம் உள்பட அனைவருமே பாராட்டினார்கள். காமெடி பண்றவர் இப்படி நடிக்கிறீர்களே என்றனர். எனக்குள் ஒரு குணசித்ர நடிகர் இருப்பதை அப்போது வெளிப்படுத்தினேன். ஆக, சரியான சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கிறேன்.


    ஆனால், காமெடியாக நடிப்பதுதான் கடினம் என்று சிலர் சொல்கிறார்களே?
    என்னைக்கேட்டால், நடிப்பைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதிப்பது, சண்டை காட்சிகளில் நடிப்பதுதான் கடினம். மற்றபடி எந்த நடிப்பிலும் கஷ்டம் இல்லை. அதேசமயம், நம்முடன் இணைந்து நடிப்பவர்களும் நல்ல நடிகர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் போட்டி போட்டு நடிக்க முடியும். காட்சிகளும் நன்றாக வரும். இதை வடிவேலு செய்வார். அவருடன் நடிக்கிற அனைவருமே நல்ல நடிகர்களாக போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் அவரது காமெடிகள் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது என்கிறார் நடிகர் டெலிபோன் ராஜ்.



    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 12th January 2016 at 09:56 PM.
    "அன்பே சிவம்.

  13. #239
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான்! - அரவிந்த் பேட்டி


    பாசமலர் தொடரில் பாரிவள்ளல் என்ற லீடு ரோலில் நடித்து வருபவர் அரவிந்த். அப்பா-அம்மா - இரண்டு தங்கைகள் என குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பொறுப்புள்ள வேடத்தில் நடித்திருக்கிறார் அவர். அதன்காரணமாக ஏராளமான நேயர்களின் மனங்களிலும் இடம்பிடித்து பிரபலமாகி வருகிறார் அரவிந்த்.


    தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
    சின்னத்திரையில் வீடியோ ஜாக்கியாக எனது கேரியர் தொடங்கியது. 5 வருடங்களாக மியூக் சேனலில் தொகுப்பாளராக இருந்தேன். சினிமாவே எனது டார்கெட்டாக இருந்ததால் அதற்காக நிறைய ஹார்டு ஒர்க் பண்ணி, அதாவது பிசிக்கலாவும், மென்டலாவும் ரெடியாகி மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் நடித்தேன். அடுத்து பலம் என்ற படத்தில் நடித்தேன். அந்த இரண்டு படங்களுமே 2009-ல் ரிலீசானது. அதன்பிறகு அஸ்தினாபுரம், சூரத்தேங்காய் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இதில் சூரத்தேங்காய் படத்துக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். அடிக்கு அடி உதைக்கு உதை என்கிற ரீதியில் கதை உள்ளது. சில சிறுவர்கள் என்ன அண்ணா நீங்க, சண்டையே போடமாட்டேங்கிறீங்க -என்று பீல் பண்ணி வந்தனர். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்க்கும் வகையில் இந்த படத்தில் ஆக்சன் ரோலில் டிரை பண்ணியிருக்கிறேன். பள்ளிக்கூட பருவத்திலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மனதில் போட்ட ஒரு விதைதான் இன்றைக்கு மரமாக முளைத்து நிற்கிறது.
    இந்த நேரத்தில் தற்போது குடும்ப சூழல், அதாவது பணத்தேவைகள் காரணமாக சின்னத்திரையில் பாசமலர் தொடரில் நடிக்கிறேன். எனது பார்வையில் சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான். அங்கேயும் டைரக்டர் ஸ்டாட் கேமரா ஆக்சன் சொல்கிறார். இங்கேயும் அதைத்தான் சொல்கிறார். சினிமாவில் ஒரு நாளைககு 3 சீன் என்றால் சின்னத்திரையில் 6 சீன் எடுக்கிறார்கள். இது எனக்கு பெரிய அனுபவமாக உள்ளது. இங்கே வேலை அதிகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அதை ஆர்வத்துடன் செய்யும்போது கடினம் தெரியாது. அதோடு நாளுக்கு நாள் நம்மை வளர்த்துக்கொண்டிருப்பது போல்தான் சீரியலில் நடிப்பது இருக்கிறது. குறிப்பிட்ட டயத்திற்குள் ஒரு விசயத்தை பெஸ்ட்டா கொடுக்க வேண்டும் என்பது பெரிய சேலஞ்சிங்கான விசயம். இதை சின்னத்திரையில் செய்கிறோம். அதனால் என்னைப்பொறுத்தவரை சின்னத்திரை பெரிய பயிற்சிக்களமாகவும், ஆரோக்யமாகவும் உள்ளது. அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகுகிறார்கள். சந்தோசமாக உள்ளது.


    மேலும், இந்த பாசமலர் சீரியலில் பாரிவள்ளல் என்ற ரோலில் நடிக்கிறேன். கோபக்காரன். ஆனால் கஞ்சப்பிசுனாரி. அதே சமயம் பொறுப்பானவன். அதாவது நிஜவாழ்க்கையில் எனக்கு எப்படி அம்மா, அப்பா, இரண்டு தங்கையோ அதேபோல்தான் இந்த சீரியலிலும் எனக்கு அம்மா-அப்பா இரண்டு தங்கைகள் உள்ளனர். அதனால் நடிப்பு என்று நினைக்காமல் நிஜவாழ்க்கை போன்றே இந்த சீரியலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும், சீரியலில் ஒருநாள் நான் அடிவாங்கினாலே அடுத்த நாள் இரண்டு பாட்டிகள் வந்து, அடி வாங்காதேப்பா என்று அழுது கொண்டே சொல்கிறார்கள். சீரியல்கள் மூலம் தினமும் அவர்களது வீடடிற்கே செல்வதால் அவர்களது குடும்பத்தில் ஒருவர் போலவே சீரியல் நடிகர் நடிகைகளை நேயர்கள் நினைக்கிறர்கள்.


    அதோடு, என்னைப்பொறுத்தவரை சின்னத்திரை, பெரிய திரை என்ற வேறுபாடெல்லாம் இல்லை. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு நான் வந்திருந்தாலும், சினிமாதான் எப்போதுமே எனது டார்கெட்டாக உள்ளது. அதனால் மீண்டும் சினிமாவுக்கு வருவேன். சின்னத்திரைக்கு வந்திருப்பது எனக்கு எந்தவகையிலும் வருத்தமளிக்கவில்லை. நான் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும் என்று உறுதியான நம்பிக்கையுடன் சொல்கிறார் அரவிந்த்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  14. #240
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Cinema heroin aagiraar pooja.

    S.S. music thogupaalini pooja peatti.

    http://cinema.dinamalar.com/tamil-tv...as-heroine.htm

Page 24 of 46 FirstFirst ... 14222324252634 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •