-
31st January 2008, 12:56 PM
#1
Senior Member
Seasoned Hubber
Meera Vasudevan Interview
குடும்பப் பிரச்சினை... காவல் துறையில் புகார்... விவாகரத்து... செய்திகளுக்குப் பிறகு தெள்ளத் தெளிவான மீரா வாசுதேவனை கலைஞர் டிவியில் பொங்கலன்று பார்க்கமுடிந்தது. டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் ஷோவில் காம்பியரிங் கலக்கல் மீராதான்!
இனி ஹஸ்கி வாய்ஸில் மீராவின் பதில்கள்...
நீங்கள் காம்பியரிங் செய்யும் ரியாலிட்டி ஷோவின் தனித் தன்மை என்ன?
நீங்கள் இதுவரை பார்த்த எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி, அதில் ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக இருக்க வேண்டும், ஐ.டி. பார்க்குகளில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இருக்கும். கலைஞர் டி.வி.யில் கலா மாஸ்டர் டைரக்ட் செய்யும் டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கூட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகிறோம். இதுதான் நான் காம்பியரிங் செய்யும் இந்த ரியாலிட்டி ஷோவின் ஸ்பெஷாலிட்டியே!
சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் சின்னத் திரையில் நடிக்க வந்தீர்களா?
அப்படிச் சொல்ல மாட்டேன். சிறந்த நடிகைக்கான தமிழ் மாநில அரசின் விருதைப் பெற்றவள் நான். ஏனோதானோ என்று என்னால் படங்களில் நடிக்க முடியாது. என்னுடைய இந்தத் தீர்மானத்தில் மண் விழுந்தது, என்னுடைய திருமணத்திற்குப் பின்தான். என்னுடைய கணவரின் வற்புறுத்தலால் பல படங்களை எனக்கு விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன். அவர்களுக்குப் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. நல்ல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எவ்வளவோ சொன்னேன். யாரும் கேட்பதாக இல்லை. அவர்களின் வற்புறுத்தலால்தான் டிவி பக்கமே வந்தேன். ஆனால் கணவன் போடாத சோறை, எனக்கு இந்தச் சின்னத் திரைதான் இப்போது போட்டுக் கொண்டிருக்கிறது!
என்ன படிக்க வேண்டும், எந்த மாதிரியான பணியில் ஈடுபடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இந்தக் காலப் பெண்கள், தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு விடுவது ஏன்?
எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், புகழின் உச்சியில் இருந்தாலும் தனக்காக உருகும் ஒரு துணை வேண்டும் என்று எதிர்பார்ப்பவளாகத்தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். இதற்கு நான் உள்பட எந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்புதான் பெண்களின் பலவீனம்; இந்த பலவீனத்தை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம்.
மீடியாவின் வெளிச்சத்தில் வலம் வரும் பல பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருட்டு சூழ்ந்திருக்கிறதே...?
பேங்க் பணியில் இருப்பவர், மார்க்கெட்டில் காய், கனிகள் விற்பவர், ஐ.டி. பணிகளில் இருப்பவர்.... இப்படிச் சமூகத்தில் எந்தப் பணியில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனால் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. மீடியாவில் புகழின் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் தோல்விகள்தான் எல்லோருக்கும் எளிதாகத் தெரியும்.
டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ எவ்வளவோ வந்தாலும் மக்களிடம் சீரியல்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையவில்லையே?
இனிமேலும் குறையாது என்பதுதான் என்னுடைய கருத்து. டாக் ஷோ, ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே பார்ப்பவர்களை என்டர்டெயின் பண்ணுவதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது. சீரியல்கள் அப்படி இல்லை. அதன் ஒவ்வொரு எபிசோட்டுடனும் ரசிகர்கள் ஒன்றிப்போய் இருக்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களோடு, சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் கதைச் சம்பவங்களை பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். வெற்றியும், தோல்வியும், பொறாமையும், மாமியார் கொடுமையும், குடிகார கணவர்களின் கொடுமையும் இவற்றுக்கு எதிராகப் போராடும் பெண்களின் கதைகளும் தானே இன்றைக்கு பெரும்பாலான தொடர்களின் மையக் கருத்தாக இருக்கின்றது. இதற்கு பெண்களிடம் வரவேற்பு எப்படிக் குறையும்?
டி.வி.சேனல்களில் இன்னும் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
குழந்தைகளுக்கென்று சேனல்கள் இருக்கின்றன, பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான சேனல்கள் இருக்கின்றன. கலந்துரையாடல், அர்த்தமுள்ள அரட்டை அடிப்பதற்கான சேனல்கள் இருக்கின்றன. இளைஞர்களுக்காக டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ போன்றவைகளுக்காக தனித் தனி சேனல்கள் இருக்கின்றன. விளையாட்டுக்கென்று இருக்கின்றன... இன்னும் என்ன மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். போதுமான அளவுக்கு எல்லா சேனல்களுமே இருக்கின்றதே!
கிளிசரின் தேவைப்படாத கதாபாத்திரங்கள் உங்களுக்கு சின்னத் திரையில் கிடைக்கின்றதா?
நிச்சயமாகக் கிடைக்கின்றது என்றுதான் சொல்லுவேன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூர்யவம்சத்தில், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, வயிற்றில் வளரும் தன்னுடைய குழந்தையையும், குடும்ப மானத்தையும் மனம் கலங்காமல் காப்பாற்றும் வேடம். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வைஜெயந்தி ஐ.பி.எஸ். தொடரில் காக்கிச் சட்டை அணிந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதில் கிளிசரினுக்கு வேலை இல்லை... துப்பாக்கிக்குத்தான் வேலை!
முன்னணி நடிகைகளாக இருந்தவர்களே, ரீ-என்ட்ரி ஆகும்போது "ஐட்டம் சாங்'குகளில் தூள் கிளப்புகிறார்கள்... நீங்கள் எப்படி?
ஐட்டம் சாங் ஆடவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் நடிப்புத் திறமைக்கேற்ற வாய்ப்பு நிச்சயம் வரும். சின்னத் திரையில் இன்னும் நிறைய சீரியல்களில் நடிப்பேன். மறுபடியும் சினிமாவில் நல்ல ரோல்களில் என்னைப் பார்க்கலாம். இது உறுதி. இனிமேல் எனக்கு நல்ல காலம்தான்!
-
31st January 2008 12:56 PM
# ADS
Circuit advertisement
-
31st January 2008, 01:03 PM
#2
Senior Member
Seasoned Hubber
Chandra Lakshmanan (Kolangal) Interview
"செய்யற வேலை யை ஒழுங்கா செஞ் சாத் தான் நிலைச்சு நிற்க முடியும். கவனத்தை வேறு திசையில திருப்பி தொழிலை கோட்டை விட்டுடக் கூடாது!' விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலில் நடிக்கும் சந்திரா லட்சுமணனை "ஜோடி நெ.1' போட்டி ஆட் டத்தின் போது "பேட்டி'க்கு சந்தித்தோம். சந்திராலட்சுமணனின் சுவாரஸ்யமான பேட்டி:
* நீங்கள் நடிக்கும்"காதலிக்க நேரமில்லை' சீரியலில் திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்பது போல கதை போகிறதே?
காதலிக்க நேரமில்லாத ஆணும், பெண்ணும் காதலிப்பதற்காக ஒரு புதிய தளத்தை உருவாக்கி தங்களுடைய காதலை சொல்ல முயல்றாங்க. திருமண பந்தம் இக்காலக் கட்டத்தில் சுமையாக கருதப்படுகிறதா? திருமணத்திற்கு முன் இருவரும் இணைந்து வாழும் உறவை ஏற்றுக் கொள்ள முடியுமா? உண்மையான காதலை எப்படி தெரிந்து கொள்வது? பரபரப்பான இந்த வாழ்க் கை சூழலில் காதலுக்கு நேரம் உண்டா, காதலிக்கும் போது இருக்கும் நேசம், பாசம் திருமணம் முடிந்த சில காலங்களில் குறைந்துவிடுகிறதா இப்படி பல கேள்விகளோடு "காதலிக்க நேரமில்லை'கதை போகிறது. சீரியலில் எனக்கு டைரக்டர் கொடுத்த கேரக்டரை செஞ்சிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்கிற கலாசாரத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.
* கோவிலில் "சீட்' எழுதிப் போட்டு, நடிக்க வந்ததாக பேசப்பட்டதே?
காலேஜ்ல கேட்டரிங் டெக்னாலஜி படிச்சு முடிச்ச பிறகு அடையார்ல பார்க்ஷெரட்டன் ஒட்டலில் டிரெயினிங் போயிருந்தப்ப,அங்கு என்னை டைரக்டர் சந்தோஷ் பார்த்தார். அவரது படத்தில் நடிக்கிறியான்னு கேட்டார். அப்பா அம்மாக்கிட்டே சொன்னேன். அவுங்க சாமிக் கிட்டே கேட்டுடலாம்ன்னு சொல்லி "சீட்' எழுதிப் போட்டு பார்த்தோம். நடிக்கலாம்ன்னு வந்தது. படத்தில் நடிச்சேன். மலையாளத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து "ஸ்டாப் வயலன்ஸ்' படத் தில் நடிச்சேன். நுõறு நாட்களை தாண்டி ஓடியது. தொடர்ந்து 10 படங்களில் நடித் தேன். சீரியலிலும் நடிச்சிட்டிருக்கேன்.
* "காதலிக்க நேரமில்லை' சீரியலில் உங்களோடு இணைந்து நடிக்கும் பிரஜினும் நீங்களும் "ஜோடி நெ.1'லும் இணைந்து ஆடும் வாய்ப்பு எப்படி வந்தது?
விஜய் "டிவி' நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களை வச்சு தான் "ஜோடி நெ.1' வடிவமைக்கப்பட்டுள்ளது."காதலிக்க நேரமில்லை'யில் நானும் பிரஜினும் நடிப்பதால் இப் போட் டியில் ஜோடி போட்டு ஆடுவதற்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. வேறு ஏதும் காரணம் இல்லை.
* நடிகை ஸ்ரீவித்யாவுடன் சேர்ந்து முன்பு மேடைகளில் கச்சேரி செய்ததாக சொன்னார்களே, இசையில் நாட்டம் உண்டா?
இசையின் மீது ஆர்வம் அதிகமிருந்ததால கத்துக்கிட்டேன். குருவாயூர் கோவிலில் நானும் ஸ்ரீவித்யா மேடமும் சேர்ந்து பாடி னோம். மென்மையான மனுஷி. அவுங்க இறந்த மாதிரியே தெரியலை. அவுங்க உயிரோடு இருப்பது போலவே நினைக்க தோன் றது. நாங் கள் தெய்வச் சன்னதியில் சேர்ந்து பாடியதை மறக்க முடியாது.
* அதிர்ஷ்டம் என்று நினைப்பது எதை?
சினிமா "டிவி'யில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இரண்டு, மூன்று வருடம் கழிச்சு பிரேக் வந்துடும். எனக்கு அப் படி பிரேக் ஏதும் ஏற்படலை. சினிமா, சீரியல்ன்னு வாய்ப்பு வந்திட்டிருக்கு. எல்லாம் கடவுள் கொடுக்கிறார்ன்னு நினைச்சிட்டு ஒர்க் பண்ணிட்டிருக்கேன். இது என்னோட அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறேன்.
* கல்லூரியில் படிக்கும் போது காதல் ஏதும்?
கல்லூரினா காதலிலில்லாம இருக்குமா. எனக்கு காதல் வரலை. ஆனா நிறைய லவ் லெட்டர் வந்தது. எதையும் கண்டுக்காம விட்டுட்டேன். இப்ப நினைச்சா சிரிப்பாயிருக்கு. எந்தக் கவலையும் தெரியாம ப்ரி பேர்ட்ஸா பறக்கிற காலம் காலேஜ் லைப் தாங்க.
* காதல் விஷயத்தில் இப்போது உங்கள் நிலை...?
""காலேஜ் லைப்ல லவ் லெட்டரை ஜாலியா எடுத்து விட்டுடலாம். தொழில்ல லவ்'வின் பார்வை வேறு விதமாகதான் இருக்கும். செய்யற வேலையை ஒழுங்கா செஞ்சாத்தான் நிலைச்சு நிற்க முடியும். கவனத்தை வேறு திசையில திருப்பி தொழிலை கோட்டை விட்டுடக் கூடாது. என்னோட பழகுகின்ற மற்றவங்களுக்கும் நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரியும். அதனால யாரும் காதல் கணை இதுவரை தொடுக்கலை.எனக்கு லவ்'வும் வரலை. லவ்' பண்ண பயப்படவும் வேண்டியதில்லை. அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு நான். ஒரு ஆளைக் காட்டி இவரைத் நான் காதலிக்கிறேன். மேரேஜ் செஞ்சு வைங்கன்னா செஞ்சு வச்சுடுவாங்க. என்னோட முடிவுகள் சரியானதாகத் தானிருக்கும்ன்னு பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் இதற்கு காரணம். <<உலக நடப்புகளை அப்பா அம்மா எனக்கு சொல்லிக் கொடுத் திருங்காங்க. எப்படி வாழ்ந்தால் பிரச் னையில்லாமல் பெருமையா வாழலாம்ன்னும் சொல்லி வளர்த்திருக்காங்க. இப் படி வளர்க்கப்பட்ட நான் எப்படி "ரூட்' மாறி போவேன் சொல் லுங்க. எனக்கு வர்ற மாப் பிள்ளை என் அப்பா அம்மாவுக்கு பிடித்த ஆளாகத் தானிருப்பார். கடவுள் எனக்கு வேண்டியவரை தான் என்னிடம் காட்டுவார்,'' என்று ஆர்வமாக சொன்னார் சந்திராலட்சுமணன்.
-
31st January 2008, 01:05 PM
#3
Senior Member
Seasoned Hubber
Priyanka Interview
சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் "தவம்' சீரியலில் ஷூட்டிங்'கில் பிரியங்காவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""அப்பா அம்மாவை பத்திரமா பாதுகாக்கணும், அவுங்களோட வயசான காலத்தில நாம காட்டும் பாசம், பரிவு அவுங்களை சந்தோஷப்படுத்தணும். முதியோர் இல்லத்தில விட்டுட்டு அவுங் களை அன்புக்கு ஏங்க வைக்கக் கூடாது,'' என்று உருக்கமாக சொன்னார். பிரியங்காவின் பேட்டி:
* சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்து "டிவி'பக்கம் வந்துட்டீங்களே?
நடிக்கணும்ன்னு வந்துட்டு, சினிமாவில் நடிக்க ஆசையில் லாம இருக்குமா. "காதல் கிறுக் கன், துõள், மருதமலை, அலை' ன்னு பல படங்கள்ல நடிச்சிட் டேன். சினிமாவுல நடிக்க காத்திருந்து நாட்களை வேஸ்ட் செய்ய வேண்டியிருந் தது. "டிவி' பக்கம் வந்ததால ஒவ்வொரு நாளும் பிரயோசனமானதாக இருக்கு. மாதத் தில் 20 நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். "டிவி'ப் பக்கம் வந்ததால சினிமாவுக்கு நான் ஒன்றும் "குட்பை' சொல்லிடலை. நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.
* காமெடி சீனில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பேசப் பட்டதே?
எனக்கு காமெடி சீன்ல நடிக்க ஆசையிருக்கு. "மருதமலை' படத்தில வடிவேலுவுடன் நடிச்சேன். சாதாரணமான சீனை வடிவேலுவிடம் கொடுத்தாலே போதும், மனுஷர் அட்டகாசமா காமெடி செஞ்சு அசத்திடுவார். சீன்'ல அவரோட ஈடுபாடு,எதார்த்த ரீயாக்ஷன்ல இருக்கிற காமெடி கலக்கல் மிரட்டும். சென்டிமென்ட் சீன்'ல நடிக்கிறதைவிட காமெடி சீன்'ல நடிப்பது சிரமம். இருந்தாலும் சென்ட்டிமென்ட் சீனைவிட காமெடி சீனுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கு. காமெடி சீன்'ல நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சா வெளுத்து வாங்கிடுவேன்.
* சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடிப்பது பற்றி?
வில்லி கேரக்டரில் விரும்பி நடிக்கிறேன்னு சொல்றதைவிட இந்த கேரக்டரில் நல்லா செய்வேன்னு நினைச்சு டைரக்டர்கள் கொடுக்கிறாங்க. ஸ்டோரிக்கு ஹீரோ, ஹீரோயின் முக்கியமானவங்களா இருந்தா லும், டேர்னிங் பாயிண்ட்'டா வில்லி கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. நடிக்க வந்த பிறகு இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டிருக்கலாமா, எந்தக் கேரக்டரிலும் நான் நடிப்பேன். பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப ஏ.வி.எம்.. நிறுவனத்திற்காக "ஸ்டில்' சாரதியுடன் ஒரு சந்திப்புக்கு காம்பியரிங் செய்ய வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் சித்தி, அண்ணாமலை, அஞ்சலி'ன்னு நிறைய வாய்ப்பு வந்தது. அரசி, தீரன் சின்னமலை, தவம், ரேகா ஐ.பி.எஸ்., நடிச்சிட்டிருக்கேன்.
* நடிகைகளை கிளாமராக நடிக்க வைக்க நினைக்கும் இயக்குனர்கள் பற்றி?
படத்தின் கதையை சொல்லும் போதே இயக்குனர்கள் சீன்களை சொல்லிடுவாங்க. அதில் கிளாமராக நடிக்க வேண்டிய சீன் இருந்தாலும் சொல்லிடுவாங்க. எதுவும் சொல்லாம ஷூட்டிங் ஸ்பாட்'டில் போய் டைரக் டர் சீன் சொல்லி கிளாமரா நடிக்கணும்ன்னு சொல்லும்போதுதான் பிரச்னை வந்துடுது. சீன் பற்றி முன்பே பேசிட்டா ஷூட்டிங்' போகும் போது பிரச்னை இருக்காது. கிளாமராக நடிப்பது பற்றியும் பிரச்னை வராது.
* தவிர்க்க வேண்டிய விஷயம் என்று ஏதும் மனதில்?
""அப்பா, அம்மாவைவிட கண்கண்ட தெய்வம் இல்லைன்னு தான் சொல்வேன். அவுங்க வயசான காலத்தில அவுங்களை இடைஞ்சலா நினைக்கக்கூடாது. எவ்வளவு வேலை இருந்தாலும் அவுங்களை கவனிச்சிக் கிடறதுக்கும் நேரம் ஒதுக்கணும். வசதி வாய்ப்பிருந்தும் பல பேர் பெற்றோர் களை முதியோர் இல்லத் தில கொண்டு போய் விடறாங்க. அவுங்க அங்கு அன்புக்கு ஏங்கி தவிக்கிறாங்க, நம்மலை எப்படியெல்லாம் பாது காத்து வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கணும். அம்மா, அப்பாவை கடைசி வரை சந்தோஷமா காப்பாத்தணும். குழந் தைங்க நம்மளை நல்லபடியா பாத்துக்கிடுதுன்னு அவுங்க சந்தோஷப்பட்டாத்தான் நாம நல்லாயிருப்போம்,'' என்று உருக்கமாக சொன்ன பிரியங்காவை அவரது அம்மா மொபைல் போனில் அழைக்க பறந்தார்.
-
31st January 2008, 07:55 PM
#4
Moderator
Diamond Hubber
Thanks for the info LATHA
-
31st January 2008, 08:06 PM
#5
Senior Member
Seasoned Hubber
who is Chandra Lakshmanan in kOlangal???
Sarva dharman parithyajya mamekam sharanam vraja, aham thva sarvapapebhyo mokshayishyami ma suchaha
-
1st February 2008, 08:53 PM
#6
Moderator
Diamond Hubber
Originally Posted by
Arthi
who is Chandra Lakshmanan in kOlangal???
Ganka
check here
http://mychandu.wordpress.com/2007/1...jay-tv-serial/
-
2nd February 2008, 01:04 PM
#7
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
aanaa
nandri
Sarva dharman parithyajya mamekam sharanam vraja, aham thva sarvapapebhyo mokshayishyami ma suchaha
-
6th February 2008, 07:45 PM
#8
Moderator
Diamond Hubber
ஐம்பதாவது பகுதியை கடந்து வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது சந்தனக்காடு தொடர். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் இத்தொடர் சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை ஒப்பனையில்லாமல் வெளிப் படுத்தி வருகிறது. படத்தின் இயக் குனர் வ.கவுதமனை தமிழ்திரையுல கத்தின் முக்கிய இயக்குனர்களும், தமிÖறிஞர்களும், தமிழ் ஆய்வா ளர்களும் பாராட்டி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் பிரான்ஸ், மலே சியா, இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அயல் நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னைக்கே வந்து கவுதமனை பாராட்டியதோடுஇத் தொடரை தடை செய்ய சொல்லி தான் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார். எதிர்கால சந்ததிகளான சின்னக்குழந்தைகள் என் வீட்டுக்காரரின் மேல் இருந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வது போல் இந்த தொடர் அமைந்திருக்கிறது. உள்ளது உள்ளபடி அப்படியே எடுத்திருக்கிறீர்கள். என் பகுதியும் என் குழந்தைகள் பகுதியும் வர எனக்கு முழு சம்மதம் என்று தெரிவித்து இருக்கிறார் முத்துலட்சுமி.
சந்தனக்காடு தொடர் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக டைரக்டர் கௌதமன் கூறினார். "சந்தனக்காடு தொடருக்காக அவர் கஷ்டப்பட்டு உழைத்துப் கொண்டிருக்கிறார். இதன் பயனாக கவுதமனுக்கு 2 சினிமா படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தனக்காடு தொடரில் வீரப்பன் வேடத்தில் கராத்தே ராசா, முத்துலட்சுமி வேடத்தில் தீபிகா (இவர் 10ம்வகுப்பு மாணவி) அர்ச்சுனன் வேடத்தில் வ.லெனின், வால்டர் தேவாரம் வேடத்தில் அழகு நடித்துள்ளனர்.
-
6th February 2008, 07:46 PM
#9
Moderator
Diamond Hubber
ஜெயா டிவியின் அடுத்த புத்தம் புதிய நிகழ்ச்சி கடிச்சா தங்கம். தினமும் இரவு 8.30 மணிக்கு
ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பாஸ்கி தொகுத்து வழங்குகிறார்.
இது நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாகும். இதில் நேயர்கள் கலந்து கொண்டு கடி ஜோக் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த கடி ஜோக் சொல்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியின் இடைஇடையே நகைச் சுவை காட்சிகள் காட்டப்படும். தினமும் சிரித்துக் கொண்டே தங்கம்
வெல்லலாம்.
-
8th February 2008, 06:54 AM
#10
Moderator
Diamond Hubber
Bhuvana 's Interview
- as maayaa in Anjali , Nandhini in Suryavamsam
நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது புரிகிறதா புவனா சொல்றது...!
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது. கலை ஆர்வத்தை ஆண்டவன் கொடுத்த கிப்ட்டாக நினைக்கிறேன் என்று சொல்லும் புவனா, மேடை கச்சேரியிலும், சீரியல்களிலும் திறமை காட்டி கொண்டிருக்கிறார்.
தேன்மொழியாள், சூர்யவம்சம், அலைபாயுதே சீரியல்களில் நடித்து வரும் புவனா, சரிகா என்ற பெயரில் இசைக் குழுவையும் நடத்தி வருகிறார்.
புவனாவின் பேட்டி:
* கலைத்துறையை தவிர வேறு வேலைக்கு போக முடியாது என்று உறுதியாக இருந்தீர்களாமே?
எனக்கு இசையின் மீது தான் நாட்டம் இருந்தது. மனசுக்கு பிடிச்ச விஷயத்தில் நாட்டம் செலுத்தினால்தானே சாதித்க முடியும். பிடிக்காத விஷயத்தில் எப்படி சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் உள்ள என்னால ஆபீஸ்ல போய் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உட்கார முடியாது. அதனால தான் வேறு வேலைக்கு போக வேண்டாம்ன்னு உறுதியா இருந்துட்டேன்.
* நினைச்ச மாதிரி இடத்தை பிடித்து விட்டீர்களா?
இசையின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது ஆண்டவன் கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன். நடிப்பு, பாட்டு, நடனம் மற்றவங்களை சந்தோஷப்படுத்த ஆண்டவன் நமக்கு கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன்.மேடையில பாடிட்டிருந்தப்ப கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி என்னை பார்த்தார். சீரியலில் நடிக்கிறியான்னு கேட்டார். "அஞ்சலி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் "சூர்யவம்சம், தேன்மொழியாள், அலைபாயுதே' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்.
* சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?
"அஞ்சலி'யில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிச்சேன். அனுதாபம் பெறும் கேரக்டர். அடுத்து வில்லியாக நடித்து அசத்தணும்ன்னு ஆசை இருக்கு.
* கச்சேரிகளில் பாடிய உங்களுக்கு சினிமா வாய்ப்பு?
அண்ணாமலை மன்றத்தில் கச்சேரியில பாடிட்டிருந்தப்ப தியாகராஜன் என்பவர் என்னை பார்த்திருக்கிறார். என்னை பற்றி மலேசியா வாசுதேவனிடம் சொல்ல, அவரிடமிருந்து அழைப்பு வந்தது. போய் பார்த்தேன். அவரது "உலவும் தென்றல்' "ரீ மிக்ஸ்' ஆல்பத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அவரது குழுவில் நிறைய பாடியிருக்கிறேன். நல்ல மனிதர். இசையில் நுணுங்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இசையில் அவர் எனக்கு "காட் பாதர்'ன்னு சொல்வேன். மேடையில் நான் பாடியதை பார்த்த மோகன் என்பவர் எனக்கு போன் செய்து இசையமைப்பாளர் தேவா சாரை போய் பாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னார். நான் போய் பார்த்தேன். அவரோட இசையமைப்பில் பாஞ்சாலங்குறிச்சி உட்பட பல படங்களில் பாடியிருக்கிறேன். அவரது மேடைகச்சேரிகளிலும் நான் பாடியிருக்கிறேன்.
* காதல் திருமணம் செய்து கொண்டீர்களே; குடும்பம் எப்படி இருக்கிறது?
மேடையில் பாடும்போது என்னோட சேர்ந்து பாடிய வெங்கடேஷும் நானும் லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டோம். இருவருமே இசை துறையில இருந்ததால குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்க முடியலை. இதனால, யாருக்கு நல்லா வாய்ப்பு அமையுதோ அவுங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிடுவோம். அடுத்தவங்க வேறு தொழில் செய்யலாம்ன்னு முடிவு செஞ்சோம். எனக்கு பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைச்சதால நான் கலைத்துறைக்கு வந்து விட்டேன்.அவர் கடிகார கடை நடத்தி வருகிறார். என்னோட முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்பதால் வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு.
* முன்னேற வழி கேட்டால்...?
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்தால் முடியாதது இல்லைன்னு நினைச்சு முயற்சிக்கணும். உடனே சக்ஸஸ் கிடைக்கலாம், இரண்டு வருடம் கழிச்சும் சக்ஸஸ் கிடைக்கலாம். ஏன் 10 வருஷங்கள் கழிச்சுக்கூட சக்ஸஸ் கிடைக்கலாம். பொறுத்திருந்து நல்ல தருணம் வரும் போது அந்த வழியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
* கலைத் துறை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிரச்னை எளிதாக ஏற்பட்டு விடுகிறதே?
செய்யற வேலையை விட்டுட்டு சம்பந்தமில்லாத வேலையில இறங்கினா சிக்கல் வராம என்ன செய்யும். தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தா பிரச்னை எப்படி வரும். வேகமான உலகத்தில் எல்லாத்திலும் பெண்கள் உஷாராக இருக்கணும். நாம சரியா நடந்துக்கிட்டா பிரச்னை நம்மை எப்படி நெருங்கும், என்று ஆர்வமாக சொன்னார் புவனா.
Bookmarks