Page 52 of 178 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #511
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    oh thanks akka

    madhu anna, varudha padatheenga....unga thiramaiya paarattinen :P
    Anbe Sivam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    vaasi..

    mudhalil nee indha paattukku solla ninaitha explanation ennannu post sei

    appuram matha vishayathai pEsalAm

  4. #513
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    sp akka, that song sounds weird ...i like that needhaana ..naandhaana part


    madhu anna,
    enakku andha paatte vilanga....idhulla adhukku porul mattum enge irundhu vilangi irukkum
    i was just wondering how the boat can be safe on shore...palatha kaathadicha adhuvum poi nadhiyila sernthidaadha'nu nethu raathiriyila irundha josichittu irundhen
    and ganesh sollum varaikkum andha female ennatha patthi paaduraanganne enakku theriyaadhu....i felt she was ularing while the male was seriously singing
    Anbe Sivam

  5. #514
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    yaar azhaithathu - salangaiyil oru sangeetham

    This semi-classical song can always stay in our heart EVERGREEN!

    Many thanks to Thyaagu for uploading this song that I love!

    http://music.cooltoad.com/music/song.php?id=324205

    யார் அழைத்தது கனவு ராணியா
    நான் ரசிப்பது கலையின் வாணியா
    எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
    உந்தன் கண்ணில் தங்கி விட்டது

    ஆனந்த மங்கை...தசநிச தசநிச தநிதநிம
    ஆகாய கங்கை...ஆ ஆ ஆ...
    சலங்கை என்னிடம் ஜதி பாடுது...தசதநிச
    அதனால் என் மனம் ஸ்ருதி சேருது...சநிதநிச
    ஆகாயம் வரைக்கும் என்னுள்ளம் பறக்கும் (2)
    சலங்கையது குளுங்கியதே நவரசங்களும்
    இவள் வசம் இலவசம் அட...

    யார் அழைத்தது கனவு ராணியா
    நான் ரசிப்பது கலையின் வாணியா
    எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
    உந்தன் கண்ணில் தங்கி விட்டது

    நீ வந்த பின்னே....ஆ ஆ ஆ...
    ஆனந்தம் பெண்ணே...தசநிச தசநிச தநிதநிமா
    சதுரங்க நாட்டியம் நடந்தாலென்ன...ஆ ஆ ஆ
    சலங்கையின் ஓசையில் விடிந்தாலென்ன
    நான் என்னை மறந்தேன் உன்னோடு கரைந்தேன் (2)
    கலைமகளே திருமகளே விழியசைந்தது
    உயிர் வரை அசைந்தது அட...

    யார் அழைத்தது கனவு ராணியா
    நான் ரசிப்பது கலையின் வாணியா
    எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
    உந்தன் கண்ணில் தங்கி விட்டது

  6. #515
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    http://ww.smashits.com/music/tamil/s...irudathe.html#

    click on "oh priya priya"

    When this movie was on peak, we were all playful college kids. A song which disturb one's mind for its tune and the story.

    I cant forget this song, cause, I had a freind who would substitute 'prabha' instead of 'priya' and sing the song ( then My initial was N.Prabha )


    ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
    ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ
    நீயோர் ஓரம் நான் ஓரோரம்
    கானல் நீரால் தாகம் தீராது

    ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
    இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
    காலம் சிறிது காதல் நமது
    தேவன் நீதான் போனால் விடாது

    தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
    வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

    அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
    ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
    ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
    வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
    எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
    எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
    கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
    காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
    அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

    ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

    காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
    பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
    ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
    பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
    இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
    அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
    விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
    பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
    இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

    ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

    ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
    நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
    காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
    ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

  7. #516
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    very nice song ....

    Anbe Sivam

  8. #517
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    crazy, nice watching that song!

  9. #518
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    http://ww.smashits.com/music/tamil/s...oldies-4.html#

    (first song)

    தண்ணிலவு தேன் இறைக்க
    தாழைமரம் நீர் தெளிக்க
    கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
    இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்
    நாணி நின்றாள்

    நெஞ்சமதில் அலை எழும்ப
    தஞ்சமலர் அடி கலங்க
    அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு
    அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
    நினைந்து நின்றாள்.

    விண்ணளந்த மனமிருக்க
    மண்ணளந்த அடியெடுக்க
    பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு
    பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்
    கண்டு நின்றாள்

    பொட்டிருக்க பூவிருக்க
    பூத்தமலர் மணமிருக்க
    கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு
    கண்விழியில் கவிதை கண்டு நின்றாள்

    __________________________

    தண்மையான அதாவது குளுமையான இரவு நேரத்திலே, இனிமையான நேரத்திலே, நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே, அவளின் 'தேனிலவு' நேரத்தில் (அவள் முதலாம் இரவில் புது உறவை சந்திக்கச் செல்லும் நாள்) தாழை மரம் என்றால் தாழ் விட்டிருக்கும் மரம். ஒரு பெண் குலம் வழங்க அந்த தாழை மரம் நீர் (பனி பொழிகிறது) தெளித்து (பன்னீர் தெளித்து) அவளை மணவறைக்குள் வரவேற்கிறது.. அவள் குலம் தழைத்து வளர வாழ்த்துகிறது.

    இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்த கன்னிப் பெண்... செல்கிறாள். எப்படிச் செல்கிறாள்? நடை பயின்று செல்கிறாள். நடந்து செல்லவில்லை. நடைபயின்று என்றால்....குழந்தை எப்படி மெதுவாய், தட்டுத் தடுமாறி, யோசித்து, தயங்கி, அடிமேல் அடி வைத்து நடக்குமோ அதற்குப் பெயர் 'நடைபயில்'தல். அப்படி நடை பயின்றபடி செல்கிறாள். சென்றவள் கணவனை / காதலனைக் கண்டு நாணி நிற்கிறாள்.

    புதுமணப்பெண்ணிற்கு மனநிலை எப்படி அச்சமும், கலக்கமும், மகிழ்ச்சியும், மயக்கமும் கலந்து இருக்குமோ, அப்படியெல்லாம் அவள் மனமும் ஒவ்வொரு உணர்ச்சியில் தடுமாறுகிறது.


    நெஞ்சமதில் அலை எழும்ப (இரு பொருள் கொள்ளலாம், வேறு பொருளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை) நெஞ்சத்தில் அலை எழும்ப, எப்படிப் பட்ட அலை என்பது அவரவர் மன நிலையைப் பொருத்தது. அது பய அலையாக மயக்க அலையாக தயக்க அலையாக என பலவகைப் படலாம். நெஞ்சத்தில் ஏதேதோ எண்ண அலைகள் எழும்ப தஞ்சம் புகுந்த அந்த மலர் (மங்கை) அடி கலங்க (மெதுவாய், நடுங்க) வருக்கிறாள்.

    அல்லது தஞ்ச மலரடி அதாவது தஞ்சம் புகுந்த அவளின் மலரடி (மலர் போன்ற பாதம்) கலங்க) நடந்து வருகிறாள்.

    (எப்படியும் அவள், அவனிடம் தஞ்சம் புகுந்து விட்டாளாம்! )

    பயந்து தயங்கி இடை துவண்டு (பயத்தால் இடை துவண்டு) வருகிறாள். இடையை இப்படியும் அப்படியுமாக (இப்படியும் அப்படியும் இருந்தால் doubtful hence பயந்து) ஆட்டி வருகிறாள் என்பது இன்னொரு பொருள். வந்தவள் தன் பயத்தைப் போக்கிக்கொள்ள அவள் காதலனின் அன்பை, காதலை, நினைந்து தன்னை சற்றே அமைதிப் படுத்தி நின்றாள்.


    மனம் என்னவோ விண்ணளந்து, பறந்து, மகிழ்ந்து, சிறகடித்து, கற்பனையில் மிதக்க, அவள் கண்கள் மட்டும் மண்ணை நோக்கி தாழ்ந்திருக்கிறது. அவள் மண்ணளந்து நடக்கிறாள். மண்ணளக்க வேகமாக நடந்தால் முடியாது. அடிமேல் அடிவைத்து மெதுவாய் நடந்தால் தான் மண்ணை அளக்கமுடியும். அப்படி அவள் அடிமேல் அடிவைத்து, நடந்து, (அடி என்பது அளவுகோல் + பாதம் என்று இரு பொருள் கொள்ளலாம்) நடுங்கியபடி, பயந்து, தயங்கி வருகிறாள். அவள் பொன்னை ஒத்த மேனி, பொன்னை சரியாக அளவாக அளந்து செதுக்கிய மேனி மெல்ல நடுங்கியபடி வருகிறாள். வந்த அவள், அவளை (அவள் = பூவை) பூவையை அளந்த அவனின் முகத்தைக் கண்டு நின்றாள். பூ போன்ற அவளின் முகத்தை அளந்த அவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு அளப்பது என்பது எடை போடுவது. அவளை, அவள் மனக்கலக்கத்தை, பயத்தை, ஆசையை, அன்பை, அழகை எடை போடும் அவனின் முகம் கண்டு நின்றாள்.

    ஒருவழியாக பலவிதமான எண்ண அலைகள் மோத அரைக்குள் நுழைந்து அவனையும் கண்டுவிட்டாள்...இனி, அந்த அறைக்குள் அவளை போட்டும் பூவும் அலங்காரங்களும் வரவேற்கின்றன.

    பொட்டும் பூவமாக அவள் மெல்ல வருகிறாள் என்று வரும். அல்லது 'பூவிருக்க' என்றால் கொலுவிருக்க, வீற்றிருக்க என்று இன்னொரு பொருளும் உண்டு. எனின், அவன் பூவிருக்கிறான் (வீற்றிருக்கிறான்) . பூவைக்காக காத்திருக்கிறான் என்றும் வரும். எங்கும் அலங்காரங்கள் தொங்க, பூத்தமலர்களின் மணம் அரையெங்கும் பரவியிருக்கிறது.

    பூத்த (சந்தோஷத்தில் பூத்த) அவனின் அல்லது அவளின் மணமும் சேர்கிறது. இனி பயமும் அச்சமும் விலக, மயக்கம் மேலோங்குகிறதாம். அதனால் அவள் ஒருவழியாக கட்டிலுக்கு அருகில் சென்றுவிடுகிறாள்.

    அவனின் இரு கண்விழியில் காதல் எனும் கவிதை கண்டு நின்றாள்.
    அவனின் இரு கண்விழியையே கவிதையாய் கண்டு நின்றாள்.
    அவன் இரு கண்விழியில் தன் நிழல் ( image of hers இங்கு தன்னைக் கவிதையாய் வரித்துக் கொள்கிறாள்) கண்டு நின்றாள்.

    என்று அவரவர் கற்பனைக்கேற்ப எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொண்டு மகிழலாம்.

    அள்வோ தான்!

  10. #519
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    romba azhaga vilakki irukkinga prabha i thoroughly enjoyed it :P
    ungalukku theriyaadha edhaiyum naan solla povadhillai, aanaal kannadasanin paadalgalai melum suvaikka virumbum vaasi-kkaaga :P

    Quote Originally Posted by Shakthiprabha
    தண்ணிலவு தேன் இறைக்க
    தாழைமரம் நீர் தெளிக்க
    கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
    இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்
    நாணி நின்றாள்

    தண்மையான அதாவது குளுமையான இரவு நேரத்திலே, இனிமையான நேரத்திலே, நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே, அவளின் 'தேனிலவு' நேரத்தில் (அவள் முதலாம் இரவில் புது உறவை சந்திக்கச் செல்லும் நாள்) தாழை மரம் என்றால் தாழ் விட்டிருக்கும் மரம். ஒரு பெண் குலம் வழங்க அந்த தாழை மரம் நீர் (பனி பொழிகிறது) தெளித்து (பன்னீர் தெளித்து) அவளை மணவறைக்குள் வரவேற்கிறது.. அவள் குலம் தழைத்து வளர வாழ்த்துகிறது.
    irandu suzhi 'ன்' iruppadhaaga eduththu kondaal.. than nilavu, thanakku sondhamaana nilavu.. adhaavadhu avaladhu kanavan ( avalai vinnukke kootti sendru vittaan avanadhu then pondra inimaiyaana vaarthaigalai theliththu ie pesi )

    "தாழைமரம்" thazham poovin sirappu ennavendraal, adhai mugarndhu kondirundhaal naam mayakka nilaikku sendru viduvom.. aagave avaladhu mayakka nilaiyai solvadharkkaaga payan paduththa pattirukkalaam.. alladhu, thaazhndhu irukkum maram, adhaavadhu vinnil parandha aval, vinnukkum mannukkum (ground level realities) idaiyil sikki ullaal.. matra uravinargalin geliyai kurippiduvadharkkum irukkalaam

    Quote Originally Posted by Shakthiprabha
    இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்த கன்னிப் பெண்... செல்கிறாள். எப்படிச் செல்கிறாள்? நடை பயின்று செல்கிறாள். நடந்து செல்லவில்லை. நடைபயின்று என்றால்....குழந்தை எப்படி மெதுவாய், தட்டுத் தடுமாறி, யோசித்து, தயங்கி, அடிமேல் அடி வைத்து நடக்குமோ அதற்குப் பெயர் 'நடைபயில்'தல். அப்படி நடை பயின்றபடி செல்கிறாள். சென்றவள் கணவனை / காதலனைக் கண்டு நாணி நிற்கிறாள்.


    Quote Originally Posted by Shakthiprabha
    நெஞ்சமதில் அலை எழும்ப
    தஞ்சமலர் அடி கலங்க
    அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு
    அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
    நினைந்து நின்றாள்.

    நெஞ்சமதில் அலை எழும்ப (இரு பொருள் கொள்ளலாம், வேறு பொருளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை) நெஞ்சத்தில் அலை எழும்ப, எப்படிப் பட்ட அலை என்பது அவரவர் மன நிலையைப் பொருத்தது. அது பய அலையாக மயக்க அலையாக தயக்க அலையாக என பலவகைப் படலாம். நெஞ்சத்தில் ஏதேதோ எண்ண அலைகள் எழும்ப தஞ்சம் புகுந்த அந்த மலர் (மங்கை) அடி கலங்க (மெதுவாய், நடுங்க) வருக்கிறாள்.
    nenja madhil.. madhil enbadhu suvar endru kondaal.. avaladhu nenjam madhil mel poonaiyaai, aasaikkum achchathirkkum naduvil thadumaara, aanaal aasai alai achchaththai vida satru adhigaama irundhadhu :P

    இரு பொருள்: aval nenjam, aasaiyinaal vimmiyadhu :P

    Quote Originally Posted by Shakthiprabha
    விண்ணளந்த மனமிருக்க
    மண்ணளந்த அடியெடுக்க
    பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு
    பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்
    கண்டு நின்றாள்

    மனம் என்னவோ விண்ணளந்து, பறந்து, மகிழ்ந்து, சிறகடித்து, கற்பனையில் மிதக்க, அவள் கண்கள் மட்டும் மண்ணை நோக்கி தாழ்ந்திருக்கிறது. அவள் மண்ணளந்து நடக்கிறாள். மண்ணளக்க வேகமாக நடந்தால் முடியாது. அடிமேல் அடிவைத்து மெதுவாய் நடந்தால் தான் மண்ணை அளக்கமுடியும். அப்படி அவள் அடிமேல் அடிவைத்து, நடந்து, (அடி என்பது அளவுகோல் + பாதம் என்று இரு பொருள் கொள்ளலாம்) நடுங்கியபடி, பயந்து, தயங்கி வருகிறாள். அவள் பொன்னை ஒத்த மேனி, பொன்னை சரியாக அளவாக அளந்து செதுக்கிய மேனி மெல்ல நடுங்கியபடி வருகிறாள். வந்த அவள், அவளை (அவள் = பூவை) பூவையை அளந்த அவனின் முகத்தைக் கண்டு நின்றாள். பூ போன்ற அவளின் முகத்தை அளந்த அவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு அளப்பது என்பது எடை போடுவது. அவளை, அவள் மனக்கலக்கத்தை, பயத்தை, ஆசையை, அன்பை, அழகை எடை போடும் அவனின் முகம் கண்டு நின்றாள்.
    lovely

    Quote Originally Posted by Shakthiprabha
    பொட்டிருக்க பூவிருக்க
    பூத்தமலர் மணமிருக்க
    கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு
    கண்விழியில் கவிதை கண்டு நின்றாள்

    ஒருவழியாக பலவிதமான எண்ண அலைகள் மோத அரைக்குள் நுழைந்து அவனையும் கண்டுவிட்டாள்...இனி, அந்த அறைக்குள் அவளை போட்டும் பூவும் அலங்காரங்களும் வரவேற்கின்றன.

    பொட்டும் பூவமாக அவள் மெல்ல வருகிறாள் என்று வரும். அல்லது 'பூவிருக்க' என்றால் கொலுவிருக்க, வீற்றிருக்க என்று இன்னொரு பொருளும் உண்டு. எனின், அவன் பூவிருக்கிறான் (வீற்றிருக்கிறான்) . பூவைக்காக காத்திருக்கிறான் என்றும் வரும். எங்கும் அலங்காரங்கள் தொங்க, பூத்தமலர்களின் மணம் அரையெங்கும் பரவியிருக்கிறது.

    பூத்த (சந்தோஷத்தில் பூத்த) அவனின் அல்லது அவளின் மணமும் சேர்கிறது. இனி பயமும் அச்சமும் விலக, மயக்கம் மேலோங்குகிறதாம். அதனால் அவள் ஒருவழியாக கட்டிலுக்கு அருகில் சென்றுவிடுகிறாள்.

    அவனின் இரு கண்விழியில் காதல் எனும் கவிதை கண்டு நின்றாள்.
    அவனின் இரு கண்விழியையே கவிதையாய் கண்டு நின்றாள்.
    அவன் இரு கண்விழியில் தன் நிழல் ( image of hers இங்கு தன்னைக் கவிதையாய் வரித்துக் கொள்கிறாள்) கண்டு நின்றாள்.

    என்று அவரவர் கற்பனைக்கேற்ப எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொண்டு மகிழலாம்.


    Quote Originally Posted by Shakthiprabha
    அள்வோ தான்!
    prabha :P

  11. #520
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like


    kuripida virumbaathathaiyum kurippittu vitteergal :P

    thazhai maram endraal 'thazhampoo' vaik kurikkuma? eppadi varum? puriyavillai

    I expected diff perspectives from u and u did not dissapoint me

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •