Page 1 of 73 1231151 ... LastLast
Results 1 to 10 of 722

Thread: 'Kalai Nilavu' RAVICHANDRAN

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like

    'Kalai Nilavu' RAVICHANDRAN

    'கலை நிலவு' ரவிச்சந்திரன்

    இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும்.

    முதல் படத்திலேயே கதாநாயகன்
    முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம்
    முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம்
    முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்

    1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன். (1952-ல் கலர்ப்படங்கள் வராதகாரணத்தால் மற்ற மூன்றும் சாத்தியமானவர் 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள்).

    காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    "காதலிக்க நேரமில்லை"

    முதல் குட்டு மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்ற இலக்கணத்திற்கேற்ப, முதல் படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் அறிமுகமானார் ரவி. அப்படத்தில் மூன்று ஜோடிக்காதலர்கள். அதில் ஒரு நாயகனையும் நாயகியையும் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். வழக்கமாக இவ்வாறு அறிமுகம் செய்யும்போது புதிய நாயகனையும், புதிய நாயகியையும்தான் ஒருஜோடியாக எல்லோரும் போடுவார்கள். ஆனால் ஸ்ரீதர் இதிலும் புதுமை செய்ய எண்ணி, பழைய நடிகர் முத்துராமனுக்கு புது நடிகை காஞ்சனாவை ஜோடியாகவும், புது நடிகர் ரவிச்சந்திரனுக்கு பழைய நடிகை ராஜஸ்ரீயை ஜோடியாகவும் போட்டார். அதாவது ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு அனுபவம், ஒரு அறிமுகம்.

    'காதலிக்க நேரமில்லை' கதையை இங்கே சொல்வது, கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான படம் அது. அதில் ஸ்ரீதர், கோபு, கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வின்சென்ட், பி.என் சுந்தரம், எடிட்டர் என்.எம்.சங்கர் ஆகியோர் பெரிய ராஜாங்கமே நடத்தியிருந்தனர்.

    முதல் படத்திலேயே ரவிச்சந்திரனுக்கு பி.பி.எஸ் குரலில் நான்கு அருமையான பாடல்கள். (முத்துராமனுக்கு ஜேசுதாஸ் குரலில் இரண்டு பாடல்களும் சீர்காழியின் குரலில் ஒரு பாடலும் தான். அதுபோக நாகேஷ் சச்சு ஜோடிக்கு ஒரு பாடல்). விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேன் சொட்டின. இன்றுவரை அவையனைத்தும் மக்களால் பெரிதும் விரும்பிக்கேட்கப்படுகின்றன. பாடலின் தரத்துக்கேற்றாற்போல வின்சென்ட் - சுந்தரம் கூட்டணியின் அற்புதமான ஒளிப்பதிவு. காஞ்சனாவையும், ராஜஷ்ரீயையும் ரவிச்சந்திரன் டீஸ் செய்து பாடும் 'உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா?' என்ற சாதாரண பாடலில்தான் கேமரா என்ன விளையாட்டு விளையாடியிருக்கும்?. ஆளியாறு அணைப்பகுதியில் படமாக்கப்பட்ட வெளிப்புறக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. 'அனுபவம் புதுமை' மற்றும், 'நாளாம் நாளாம் திருநாளாம்' பாடலின் மெலோடியைப்பற்றியெல்லாம் பேச நிச்சயம் எனக்கு தகுதியில்லை. ஆனால் 'நாளாம் நாளாம்' பாடலை செட்போட்டுப் படமாக்கியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. அதைவிட சென்னை மெரீனாவில் படமாக்கியிருந்த 'என்ன பார்வை உந்தன் பார்வை' காட்சியமைப்பிலும், படமாக்கிய விதத்திலும் சூப்பர்.

    படம் துவக்கத்திலிருந்து 'வணக்கம்' வரை நகைச்சுவை கொடிகட்டிப்பறந்தது. காதல் ஜோடிகளோடு சேர்ந்துகொண்டு, பாலையா, நாகேஷ், சச்சு, பிரபாகர் (சச்சுவின் அப்பா) ஆகியோரும் நகைச்சுவையில் கலக்கினர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சித்ராலயா கோபுவின் வசனங்கள். போதாக்குறைக்கு படத்தில் ரவிச்சந்திரன் வைத்திருக்கும் அந்த டப்பா காரும் நமக்கு சிரிப்பை மூட்டியது. அதுவரை சோகம், செண்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த முத்துராமனுக்கு, காதலிக்க நேரமில்லையில் அவர் ஏற்றிருந்த 'டூப்ளிகேட்' பணக்கார கிழவன் வேடமும், அதில் அவர் கொடுத்த நகைச்சுவை சரவெடிகளும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதன்முதலாக ஜெமினி கலர் லேபரட்டரியில் வண்ணப்பிரதிகள் தயாரானதும் இப்படத்துக்குத்தான். (அதற்குமுன் வந்த கர்ணன், படகோட்டி ஆகிய ஈஸ்ட்மன் கலர்ப்படங்கள் மும்பை ஃபிலிம் செண்ட்டரில் ப்ராஸஸிங் செய்யப்பட்டன).

    முதல் படமே 200 நாள் படமாக அமைய, 'வெள்ளிவிழா நாயகன்' என்ற சிறப்புப்பட்டத்துடன் திரையுலகில் வலம் வரத்துவங்கினார் ரவிச்சந்திரன்.

  4. #3
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Ravichandran used to stay in the same mansion as my father. Apparently, he was so broke that my father and his friends had to sponsor his lunches, tiffin and cigarette often. We met him once in a cine reception in 80's, and he was down to earth and called my father "aNNE, ningaLLAm illainA nAn heroaagi irukka mudiyAdhuNNE".

  5. #4
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    UPDATES

    இதுவரை ஆய்வு செய்யப்பட்ட படங்கள்....

    1) காதலிக்க நேரமில்லை
    2) இதயக்கமலம்
    3) குமரிப்பெண்
    4) எங்க பாப்பா
    5) நான்
    6) மோட்டார் சுந்தரம்பிள்ளை
    7) கவரிமான்
    8) அதே கண்கள்
    9) மூன்றெழுத்து
    10) பாக்தாத் பேரழகி
    11) உத்தரவின்றி உள்ளே வா
    12) புகுந்த வீடு
    13) நீயா..?
    14) பணக்காரப் பிள்ளை
    15) மஞ்சள் குங்குமம்
    16) மகராசி
    17) எதிரிகள் ஜாக்கிரதை
    18) சொர்க்கத்தில் திருமணம்
    19) காவியத்தலைவி


    சிறப்புப் பதிவுகள்

    1) ரவிச்சந்திரன் சந்தித்த ரயில் விபத்து
    2) கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது பட சர்ச்சை
    3) ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு
    4) 'காதலிக்க நேரமில்லை' வெற்றி பவனி (சென்னை/மதுரை) BY பம்மலார்

  6. #5
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    ராமண்ணா - ரவி கூட்டணிக்கு அச்சாரமிட்ட

    "குமரிப்பெண்"

    1960 களின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நடிக்கவைத்து வரிசையாக ‘ப’ வரிசைப்படங்களை (பாசம், பெரிய இடத்துப்பெண், பணக்கார குடும்பம்) எடுத்துக்கொண்டிருந்த ராமண்ணா 1965-ல் எம்.ஜிஆரை வைத்து ‘பணம் படைத்தவன்’ படத்தை வெளியிட்ட கையோடு, (இதனிடையே 1965-ல் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை நடிக்கவைத்து "நீ" படத்தையும் இயக்கியிருந்தார்) .மீண்டும் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து ‘பறக்கும் பாவை’யை வண்ணத்தில் எடுத்துவரும் அதே சமயத்தில், இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து கருப்புவெள்ளையில் உருவாக்கிய படம்தான் 'குமரிப்பெண்'. ஒருபக்கம் செண்டிமென்ட் படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தபோதிலும், அதே சமயம் ஜனரஞ்சகமான படங்களும் வெற்றியடைந்துகொண்டிருந்த வேளையில் இப்படம் வெளியானது.

    ரவிச்சந்திரனின் ஜோடியாக கலைச்செல்வி ஜெயலலிதா நடித்திருந்தார். குமரிப்பெண் படத்தின் பெயரைச்சொன்னதும் நமக்கு நினைவுக்கு வரும் முதல் காட்சி, கட்டுக்குடுமியுடன் கிராமத்திலிருந்து ரயிலில் வந்துகொண்டிருக்கும் ரவியை, நவநாகரீக உடையணிந்த ஜெயலலிதாவும், அவரது தோழிகளும் கிண்டலடித்துப்பாடும் "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" என்ற பாடல்தான். எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடியது. இதே "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" பாடலை பின்னர் ரவிச்சந்திரன், ஜெயலலிதாவைக் கிண்டலடித்துப் பாடுவதாகவும் வரும். அதை ரவிக்காக டி.எம்.எஸ். பாடியிருந்தார். (என்ன சொல்றீங்க?. இதைப்பார்க்கும்போது உங்களுக்கு 'கட்டவண்டி... கட்டவண்டி...' பாடல் நினைவுக்கு வருதா?). அப்போதெல்லாம் ரவிச்சந்திரனின் படங்களில், கதாநாயகியை டீஸ் செய்து பாடுவதுபோல ஒரு பாட்டு வந்துவிடும். அதில் இதுவும் ஒன்று. (Music by Mellisai Mannar MSV)

    P.B.S.பாடிய "ஜாவ்ரே ஜாவ்.. இந்த கேட்டுக்கு நீ ராஜா" பாடல், கடமையைச்செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கூர்க்காவை கிண்டலடித்து ரவி பாடுவதாக வரும். இந்தப்பாடலை T.M.S. பாடியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். சில பாடல்களுக்கென்று சில குரல்கள் பொருந்துமல்லவா?.

    ரவிச்சந்திரன் ஜெயலலிதா டூயட் பாடல், "நீயே சொல்லு... நீயே சொல்லு... நடந்தது என்னவென்று நீயே சொல்லு. ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு" பாடலை P.B.S., L.R.ஈஸ்வரி பாடியிருந்தனர்.

    ரவிச்சந்திரனின் சினிமா வாழ்க்கையில் அதுவரை கலர்ப்படங்களே வெற்றியடைந்து வந்த நிலையில், மாபெரும் வெற்றியைத்தந்த முதல் கருப்புவெள்ளைப்படம் குமரிப்பெண். 1966-ல் வெளியான மொத்தம் 42 தமிழ்ப்படங்களில் 10 படங்கள் மட்டுமே 100 நாட்களைக்கடந்து ஓடின. அவற்றில் 'குமரிப்பெண்'ணும் ஒன்று. (எந்தப்படமும் வெள்ளிவிழாவைத் தொடவில்லை). நான் முன்பே சொன்னதுபோல, சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில் தியேட்டர் கிடைக்காமல், மயிலை காமதேனு அரங்கில் திரையிடப்பட்டு, அங்கு 100 நாட்களை வெற்றிகரமாகக் கடந்தபின், மவுண்ட் ரோடு காஸினோ அரங்குக்கு மாற்றப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

    இன்றைக்கும் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களும் அருமையான பாடல்களும் கொண்ட படம் குமரிப்பெண்.


    இதயத்தை வருடிய
    [b]"இதயக் கமலம்"[/b]

    ரவிச்சந்திரன் நடித்த இரண்டாவது வண்ணப்படம். பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத்தின் 'பிரசாத் புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கியிருந்தார். 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாதான் ரவிச்சந்திரனின் ஜோடியாக நடித்திருந்தார். ஜோடி என்பதைவிட அவர்தான் முழுப்படத்தையும் வியாபித்திருந்தார். இறந்துபோன மனைவியை எண்னி எண்னி இவர் வருந்த, கொஞ்சம் கொஞ்சமாக ஃப்ளாஷ்பேக்கிலேயே படம் நகரும். 'மேளத்த மெல்லத்தட்டு மாமா' என்று பாடியபடி தெருக்கூத்தாடியாக அறிமுகமாகும்போதும் சரி, பைத்தியக்கார விடுதியில் பைத்தியங்களோடு அடைக்கப்பட்டு அவதிப்படும்போதும் சரி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார் K.R.விஜயா. முதன்முதலாக ரவிச்சந்திரன் சோக நடிப்பை வழங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். நன்றாகச்செய்திருப்பார்.

    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில்...
    "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்ற பாடலும்
    "என்னதான் ரகசியமோ இதயத்திலே" என்ற பாடலும்
    சுசீலாவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தன.
    ரவிச்சந்திரனுக்காக, பி.பி.எஸ் பாடிய...
    "தோள் கண்டேன் தோளே கண்டேன்" பாடலும்
    "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடலும் பாப்புலராயின. இதில் ஒரு பாடல் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது.

    தாய்க்குலத்தின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற 'இதயக்கமலம்' ஒரு பெரிய வெற்றிப்படம்.

  7. #6
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    பி.ஆர். பந்துலுவின்

    'எங்க பாப்பா'

    தமிழ்த்திரையுலகுக்கு பல பிரமாண்டமான சரித்திரப் படங்களை உருவாக்கித் தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, 1966-ல் வெளியான குடும்பச்சித்திரம் 'எங்க பாப்பா'

    ரவிச்சந்திரன் பாரதி ஜோடியுடன், அப்போதைய பிரபலமான குழந்தை நட்சத்திரம் 'பேபி ஷகீலா' (நினைவிருக்கிறதா? கற்பகம், முரடன் முத்து, எங்கவீட்டுப்பிள்ளை..?) முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம். படத்தில் இரண்டுமுறை பாடப்படும்
    'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
    ஒரு அன்னை தந்தது, ஒன்று காவல் கொண்டது
    ஒன்று கண் மலர்ந்தது... கண்மலர்ந்தது'
    பாடல் படத்துக்கே ஜீவநாடி. அதிலும் அந்தக்குழந்தை அண்ணன் ரவிச்சந்திரனை விசிறியால் விசிறிக்கொண்டே பாடித்தூங்க வைக்கும்போது, நம் கண்களில் நிச்சயம் நீர்கட்டும்.
    'இரண்டு கண்கள் சேர்ந்து காணும் காட்சியும் ஒன்று
    இரண்டு நெஞ்சும் சேர்ந்து சொல்லும் சாட்சியும் ஒன்று
    அருகில் வைத்து தூங்கச்செய்யும் தாயில்லாதது
    ஆசை வெட்கம் வெளியில் சொல்ல வாயில்லாதது... வாயில்லாதது

    நாதியில்லை என்று உன்னை ஊர் சொல்லலாமா - இங்கு
    நானிருந்தும் உனக்கு அந்தப்பேர் வரலாமா
    ஜாதிப்பூவில் பாதிப்பூவை பிரிக்கக்கூடுமா
    அண்ணன் தங்கை உறவைக்காக்கும் பெருமையாகுமா... பெருமையாகுமா'

    சமீபத்தில் கவிஞர் பிறைசூடன் சொன்னதுபோல, 'இத்தனை ஆண்டுகளிலும் வாலி என்ற கவிக்கிழவன் யாராலும் பிடிக்க முடியாதபடி ஓடிக்கொண்டிருக்கிறார்' என்பது எத்தனை உண்மை. எங்கபாப்பாவுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1966-ல் வெளியான இப்படத்துக்கு 65-லேயே பாடல்கள் பதிவாகி படப்பிடிப்பு நடந்து வந்தது. தன் இணையான ராமமூர்த்தியை விட்டுத்தனியே பிரிந்து தனது முத்திரையைப் பதித்துக்கொள்ள மெல்லிசை மன்னர் அசகாய சூரத்தனங்கள் செய்துகொண்டிருந்த நேரம். அதன் விளைவாக ரசிகர்களுக்கு அற்புதமான பாடல்கள் கிடைத்துக்கொண்டிருந்தன.

    இன்னொரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் (கூடவே டி.எம்.எஸ்)
    'சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
    இந்த மாதிரித்தான் இருப்பாள்' பாடல் பார்க்கவும் கேட்கவும் தேனமுதம்.

    ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
    'நான் போட்டால் தெரியும் போடு
    தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
    என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.

    தாய்க்குலத்தின் ஆதரவைப்பெற்ற 'எங்க பாப்பா' பெரிய வெற்றியைப்பெறாவிடினும் தமிழகம் முழுவதும் பரவலாக ஒடியது.

  8. #7
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
    'நான் போட்டால் தெரியும் போடு
    தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
    என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.
    yaarai kurithu?
    I mean Rajni-Kamalngara major leageukku parallel-A ippO, Ajith-Vijay, Surya-Madhavan-nu ippO minor leagues nadakkara maadhiri appO Sivaji-MGR major leagueku parallelA Ravichandran-X irundhudhA? Who was X? PM aavadhu paNnunga

  9. #8
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum
    Ravichandran used to stay in the same mansion as my father. Apparently, he was so broke that my father and his friends had to sponsor his lunches, tiffin and cigarette often. We met him once in a cine reception in 80's, and he was down to earth and called my father "aNNE, ningaLLAm illainA nAn heroaagi irukka mudiyAdhuNNE".
    Quite likely.

    He fought with his family in Malaysia and left to India to seek his fortunes. His brother is none other than the famed Bairoji Narayanan of Radio Malaysia fame.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #9
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum
    Ravichandran used to stay in the same mansion as my father. Apparently, he was so broke that my father and his friends had to sponsor his lunches, tiffin and cigarette often. We met him once in a cine reception in 80's, and he was down to earth and called my father "aNNE, ningaLLAm illainA nAn heroaagi irukka mudiyAdhuNNE".
    நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட் Plum....

    பெரும்பாலான கலைஞர்களின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணம் அவர்களிடம் இருக்கும் அபார திறமை மட்டுமல்ல. நடந்துவந்த பாதையை மறக்காததும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் பழையவற்றை போற்றுவதும் கூடத்தான்.

    ரவிச்சந்திரன் மட்டுமல்ல. பல நடிகர்களின் பேட்டிகளைப்பாருங்கள். அவர்கள் ஆரம்பகால கஷ்ட்டங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக்கூறுவார்கள். அவர்கள் இப்போதிருக்கும் நல்ல நிலையில் அவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. இருந்தாலும் அவர்கள் எப்போதும் வெளிப்படையாகச் சொல்வார்கள்.

    ஊரில் அவர்கள் குடும்பம பட்ட கஷ்ட்டங்கள். சென்னைக்கு வர காசில்லாமல் திருட்டு ரயில் ஏறிவந்தது. டி.டி.ஆரைக்கண்டதும் டாய்லெட்டுக்குள் ஒளிந்தது. சென்னை வந்ததும் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் அலைந்தது. தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் சந்தித்த ஏமாற்றங்கள், அவமானங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டது. ஒரு டீ அருந்துவதற்குக்கூட நண்பர்கள் தயவை எதிர்பார்த்திருந்தது. தங்க இடமின்றி பிளாட்ஃபாரத்தில் பேப்பரை விரித்து தூங்கியது. ஒரு சின்ன வேடமாவது கிடைக்காதா என்று ஸ்டுடியோ கேட்டுக்கு வெளியே காத்திருந்தது..... என எல்லாவற்றையும் வெளிப்படையாகக்கூறுவார்கள்.

    ஆனால் நடிகைகள்...??. (நான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஸேம்சைட் கோல் போடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையைச்சொல்லித்தானே ஆக வேண்டும்). சௌகார் போன்ற ஒரு சில நடிகைகளைத்தவிர வேறு யாரும் தாங்கள் சிரமப்பட்டு சினிமாவுக்குள் நுழைததாகச் சொல்லவே மாட்டார்கள். அவர்கள் பேட்டிகளைப்பாருங்கள். என்னமோ சினிமா உலகமே இவர்களுக்காக ஏங்கி நின்றதுபோல...

    'எனக்கு சினிமாவுக்கு வர இஷ்டமே கிடையாது. என்னுடைய லட்சியமெல்லாம் மெடிக்கல் காலேஜில் படிச்சு பெரிய எஞ்சினீயர் ஆகணும். அல்லது எஞ்சீனியரிங் காலேஜில் படிச்சு பெரிய லாயர் ஆகணும், அல்லது லா காலேஜில் படிச்சு பெரிய டாக்டர் ஆகணும், அல்லது அட்லீஸ்ட் ஆர்ட்ஸ் காலேஜில் படிச்சு L.K.G, U.K.G போன்ற பட்டங்கள் வாங்கனும்ங்கிறதுதான். ஆனால் என்னை ஒரு கல்யாண ரிஸப்ஷனில் பார்த்த டைரக்டர் 'எக்ஸ்' கண்டிப்பாக தன் படத்துல நடிக்கணும்னு கெஞ்சிக் கேட்டார். நான் மறுத்துட்டேன். அப்புறம் என் அம்மாவிடம் 'உங்க பொண்ணு மட்டும் என் படத்துல நடிச்சா எதிர்காலத்தில் பெரிய ஸ்டாரா வருவாங்க'ன்னு சொல்ல, என் அம்மாவின் விருப்பத்துக்காகத்தான் நடிக்க வந்தேன்'

    (நடிகைகளின் உடலில் இருப்பது முழுக்க தசை அல்ல. பாதிதான் தசை, மறுபாதி கொழுப்பு ).

  11. #10
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    sarada, I dont want to take an extreme views on actresses. Maybe, they exaggerate but is it possible that they come form a privileged background and really didnt have to struggle?( I agree even within that framework they may be exaggerating).
    On the other side, we might have actresses not wishing to even recollect their past...
    For example, a whole lot of rumours go about KR Vijaya's past - unsavoury - do we really want her to come out with it, even if it is true?

Page 1 of 73 1231151 ... LastLast

Similar Threads

  1. Was Kalai Arasi the first Indian film to feature aliens?
    By inetk in forum Tamil Films - Classics
    Replies: 3
    Last Post: 18th November 2010, 03:19 AM
  2. Hariharan gets `kalai mAmaNi'
    By app_engine in forum Current Topics
    Replies: 1
    Last Post: 15th February 2006, 10:12 PM
  3. Songs from "Pagalil oru nilavu"
    By S.Balaji in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 17
    Last Post: 19th October 2005, 09:37 PM
  4. NILAVU SONGS
    By Justice in forum Current Topics
    Replies: 72
    Last Post: 1st October 2005, 10:52 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •