happened to watch avaLukku nigar avaLE *ing Ravichandran, V.A. Niramala (triple roles), Kalyana Kumar, Shangmugasundaram, VKR, Major, Thengai, Manorama and many more...
The story line is similar to mayangugiRaaL oru maadhu. Ravichandran was seen in the movie for about 5 to 6 scenes. paattum onnum sollikkiRaapla illai...
Will post the youtube link for the movie later.
Thanks RC...
'அவளுக்கு நிகர் அவளே' திரைப்படம் வெண்ணிற ஆடை நிர்மலாவின் சொந்த தயாரிப்பு. (ஏற்கெனவே 'அவள்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்ததால் இப்படி ஒரு பெயர் வைத்தனர்). படத்தை 'பட்டு' இயக்கியிருந்தார். சங்கர் - கணேஷ் இசையமைத்ததாக நினைவு. ரவிச்சந்திரனுக்கு இதில் கெஸ்ட் ரோல் மாதிரி.
படம் முக்கால்வாசி தயாரிப்பில் இருக்கும்போது, இயக்குனருக்கும் தயாரிப்பாளர் நிர்மலாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதால், படத்தை எப்படியோ முடித்து வெளியிட்டனர். படம் வெற்றியடையவில்லை.
maamanaarin soththu, paNam vandhavudan guNam maaRi thirundhum villaththanamaana paaththinraththil Ravichandran. Ravichandran had lot of scenes compared to the Hero Muthuraman.
‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர், ‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன் இணைந்து நடித்திருந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் இதுவும் ஒன்று. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதற்கு கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.
நாடக மேடையிலிருந்து திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு, குடும்பக்கதைகளையே (அவற்றில் சீரியஸும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) இயக்கி வந்த கே.பி., முதன்முறையாக ஒரு ஆக்ஷன் படமாக இதை இயக்கினார். அதுமட்டுமல்லாது, அதுவரை கருப்புவெள்ளைப் படங்களிலேயே வெற்றிகளைக்குவித்து வந்த அவர் இயக்கிய முதல் வண்ணப்படமும் இதுதான். ஆனால் முழுக்க ஆக்ஷன் படமாக இல்லாது, அதில் செண்டிமெண்ட்டையும் புகுத்தியதால் படம் ஒருவித சொதப்பலாகப்போனது.
வழக்கம்போல ஸ்டுடியோ செட்களிலேயே அதுவரை முழம்போட்டு வந்த கே.பி., கிட்டத்தட்ட முக்கால்வாசிப்படத்தை வெளிப்புறங்களிலேயே எடுத்ததும் இப்படத்தில்தான். ஆக, இப்படம் பலவிதங்களில் கே.பி.க்கு பரீட்சாத்த முயற்சியாக ஆகிப்போனது.
இருவரது கைகளும் இணைத்து விலங்கிடப்பட்ட கைதிகளாக வரும் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இருவரும் கோவாவில் இணைந்தே சுற்றுவதும், விலங்கிடப்பட்ட நிலையிலேயே தங்கள் காதலிகளோடு டூயட் பாடுவதுமாக கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்திருந்தனர். ஆனால் படத்தில் சௌகார் ஜானகி ஏற்றிருந்த கதாபாத்திரம் தான் ஓவர் செண்டிமெண்ட்டாக அமைந்து பார்ப்போர் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.
1970-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 71 துவக்கத்தில் வெளியான படம் இது. 1969-ல் 'இருகோடுகள்' படத்தின் பெருவெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட எதிரொலி, நவக்கிரகம், காவியத்தலைவி, நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு ஆகிய ஐந்து படங்களை ஒருசேர ஒப்புக்கொண்டு இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். அதனால் எல்லாவற்றிலுமே அவருக்கே உரித்தான முத்திரைக் காட்சிகள் ப்ஞ்சமாகிப்போகத் துவங்கின.
இதுபோக நவக்கிரகம், நான்கு சுவர்கள் இவ்விரண்டு படங்களையும் எப்படி உருவாக்கி வருகிறார் என்ற விவரங்களையும் குமுதம் வாரப்பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார். அதனால் இவ்விரண்டு படங்களைப்பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிப்போனது. குறிப்பாக நான்கு சுவர்கள் படத்தில், எண்ணெய் ஊற்றோ ஏதோவொன்று எப்படிப்பொங்கி வருகிறது என்பதைப்படமாக்கிய விதம் பற்றி அவர் சொல்லியிருந்த விதம் மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. எதிரொலி சரியாகப்போகாத நிலையில், ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'நவக்கிரகம்' தோல்வியைத் தழுவியது. அதோடு வெளியான ராமன் எத்தனை ராமனடி, திருமலை தென்குமரி ஆகியன வெற்றியடைந்தன. தேடிவந்த மாப்பிள்ளை சுமாராக ஓடியது.
அடுத்து தீபாவளிக்கு 'காவியத்தலைவி' ரிலீஸாகி வெற்றியடைந்தது. உடன் வெளியான சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், சற்று முந்தி வெளியான எங்கள் தங்கம் என எல்லாமும் வெற்றியடைந்தன. மூன்று படங்கள் குறைந்துவிட்ட நிலையில் நான்கு சுவர்களை 71 பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தில், பிப்ரவரி 6 அன்று வெளியானது. 'கே.பி.யின் முதல் வண்ணப்படம், வித்தியாசமான கதை, கே.பி.இயக்கத்தில் முதல் ஆக்ஷன் படம், ஜெய்-ரவி என இரண்டு கதாநாயகர்கள், கோவாவில் வெளிப்புறப்படப்பிடிப்பு' என்றெல்லாம் ஓவர் எக்ஸ்பெக்டேஷனில் வந்ததால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் அமையாமல் போகவே படம் தோல்வியடைந்தது.
இதற்கு அடுத்த மாதமே வெளியான 'நூற்றுக்கு நூறு' இயக்குனர் சிகரத்தின் வழக்கமான முத்திரைகளைத்தாங்கி வந்ததால் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று வெற்றியடைந்தது. தனது வழி எதுவென்று 'நான்கு சுவர்கள்' தெளிவாகக்காட்டிவிட்டதால் மீண்டும் பழைய பாதையிலேயே புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா, அரங்கேற்றம் என பயணிக்கத்துவங்கினார் இயக்குனர் சிகரம். (தான் இயக்கிய படங்களிலேயே தனக்குப்பிடிக்காத படங்களாக நான்கு சுவர்கள், பத்தாம் பசலி இரண்டையும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பாலச்சந்தர்)
நான்கு சுவர்கள் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் டூயட் பாடலான 'ஓ... மைனா... ஓ.. மைனா' பாடல் நன்கு பிரபலமடைந்தது. ஜெய்சங்கருக்காக டி.எம்.எஸ்ஸும், பின்னர் ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி.யும் பாடியிருந்தனர். கதாநாயகியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். ஜெய், ரவி இருவருமே ரொம்ப ஸ்மார்ட்டாக நடித்திருந்த இப்படம், இப்போது பார்த்தால் விரும்பக்கூடிய படமாக அமையக்கூடும்.
நான்கு சுவர்கள் படத்தைப் பற்றிய தங்கள் அறிமுக பதிவு அந்தக் காலகட்டத்திற்கே அழைத்து சென்று விட்டது. சென்னை மிட்லண்ட் திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தது. அதுவும் வெலிங்டனில் இரு துருவம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் சென்றோம். கடைசி நாள் வரை இருதுருவம் படம் கடைசி வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து வந்தது. பாலச்சந்தரின் கலர் படம், ஜெய் ரவி இருவரும் இணைந்து நடித்த படம் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி ஏமாற்றத்தைத் தந்தது என்றால் மிகையில்லை. இதில் மற்றொரு ஏமாற்றம், வாணிஸ்ரீக்கு செய்யப் பட்ட ஒப்பனை. மிகைப் படுத்தப் பட்ட ஒப்பனை, படத்தில் அவரை விகாரமாகத் தோற்ற மளித்து, அரங்கில் ஒரே கூச்சலும் கிண்டலும் கேலியும் நிறைந்திருந்தது. குறிப்பாக நினைத்தால் நான் வானம் சென்று பாடலை தப்பித் தவறிக் கூட காட்சியாக பார்க்கக் கூடாது என்று அன்றே நினைத்து விட்டேன். ஒரு ஆங்கிலப் படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் தென்பட்டன.
பத்தாம் பசலி நிச்சயமாக நல்ல படம். அதுவும் மிட்லண்ட் திரையரங்கில் தான் பார்த்தேன். நாகேஷின் நடிப்புக்காகவே பல முறை பார்க்க வேண்டிய படம். குறிப்பாக வி.குமாரின் இசையில் உருவான வெள்ளை மனம் கொண்ட பாடலும் நாகேஷ் பாடும் மற்றொரு பாடல் உணவுக் கூடையை சுமந்து கொண்டு பாடும் பாடல் இரண்டும் இனிமை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
'நான்கு சுவர்கள்' பதிவுக்கான மறுமொழிக்கும், பாடல் இணைப்புகளுக்கும் மிக்க நன்றி.
அந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள், மக்கள் மத்தியில் சிறிது ஏமாற்றமளித்ததால் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டன. அவற்றில் நடிகர்திலகத்தின் 'இரு துருவங்கள்', மக்கள் திலகத்தின் 'நீரும் நெருப்பும்', ஏ.பி.என்.னின் 'கண்காட்சி', கே.பி.யின் 'நான்கு சுவர்கள்', ஏ.வி.எம்.மின் 'அனாதை ஆனந்தன்', சாவித்திரியின் 'பிராப்தம்', ஸ்ரீதரின் 'அவளுக்கென்று ஓர் மனம்', புட்டண்ணாவின் 'சுடரும் சூறாவளியும்' போன்றவையும் அடங்கும்.
அதே சமயம் ஸ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா', கோவை செழியனின் 'குமரிக்கோட்டம்', கே.எஸ்.ஜி.யின் 'குலமா குணமா', ராம்குமார் பிலிம்ஸ் 'சுமதி என் சுந்தரி', கே.பி.யின் 'நூற்றுக்கு நூறு', மல்லியம் ராஜகோபாலின் 'சவாலே சமாளி', ஆர்.எம்.வீரப்பனின் 'ரிக்ஷாக்காரன்', ஏ.சி.டி.யின் 'பாபு', மதுரை திருமாறனின் 'சூதாட்டம்' ஆகியன பெரும் வெற்றி பெற்றன.
பொங்கலுக்கே வந்திருக்க வேண்டிய சோ-வின் 'முகம்மது பின் துக்ளக்', சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சென்ஸாரால் நிறுத்தி வைக்கப்பட்டு, தேர்தல் முடிந்தபின் வெளியானது.
பிப்ரவரி 6 அன்று, மிட்லண்ட், மகாராணி, சயானி அரங்குகளில் நான்கு சுவர்கள் வெளியானது. படம் சரியாகப்போகாததால் அடுத்த மாதமே (மார்ச் 18) கே.பி.யின் 'நூற்றுக்கு நூறு' படம் கெயிட்டி, பாண்டியன் (மகாராஜா), மேகலா, சீனிவாசா ஆகியவற்றில் வெளியானது. இதனிடையே மகாராணி, சயானியில் 'நான்கு சுவர்கள்' எடுக்க்ப்பட்டு, குலமா குணமா வெளியானது (மற்ற அரங்குகள் பிளாசா, லிபர்ட்டி). மிட்லண்டில் ஸ்ரீதரின் 'அவளுக்கென்று ஓர் மனம்' ரிலீஸானது.
வா ராஜா வா, திருமலை தென்குமரி படங்களின் வெற்றியால் உந்தப்பட்டு ஏ.பி.என்., அதே பாணியில் குறைந்த சம்பள நடிகர்களை வைத்து 'கண்காட்சி' படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டபின், தன் பழைய புராணப்பட பாதையில் இறங்கி, உடன் 'அகத்தியர்' பட ஷூட்டிங் வேலையைத்துவக்கினார்.
நடிகை வாணிஸ்ரீக்கு, ‘நான்கு சுவர்கள்’ ஏமாற்றியபோதிலும், இந்த ஆண்டில் அவருக்கு வேறு சில நல்ல படங்கள் வந்தன. குலமா குணமா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், 'இருளும் ஒளியும்' படத்தில் மாறுபட்ட இரட்டை வேடங்களில் தூள் கிளப்பி, 1971-ம் ஆண்டின் சிறந்த நடிகை என்ற விருதைத் தட்டிச்சென்றார். (உண்மையில் 'சூதாட்டம்' மற்றும் 'சபதம்' படத்துக்காக கே.ஆர்.விஜயா எதிர்பார்த்திருந்தார்). நடிகர்திலகத்தின் சிறந்த ஜோடிகளில் ஒருவரான கே.ஆர்.விஜயாவுக்கு இந்த ஆண்டில் (1971) நடிகர்திலகத்தின் பத்து படங்கள் வெளியாகியும் கூட அவருடன் ஒரு படம்கூட வரவில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். மற்றபடி அவரது பழம்பெரும் ஜோடிகளான சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகியோருடன் நிர்மலா, விஜயஸ்ரீ ஆகியோரும் இவ்வாண்டு ஜோடி சேர்ந்தனர்.
நடிகர்திலகத்தின் 150-வது படமான 'சவாலே சமாளி'யும், மக்கள்திலகத்தின் 'ரிக்ஷாக்காரனும்' மற்றெல்லாப்படங்களையும் பின் தள்ளி, வசூலில் முந்தி நின்றன, என்றபோதிலும் அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழாப்படமாக கே.எஸ்.ஜி.யின் 'ஆதிபராசக்தி' அமைந்தது. (மக்கள் கலைஞரின் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' பற்றி தனியே எழுத இருப்பதால், இங்கு குறிப்பிட வேண்டியதில்லை).
குறிப்பிட்ட அந்த ஆண்டுகளில் இந்திப்படங்களான 'ஆராதனா', 'அந்தாஸ்', 'கட்டி பதங்', 'சாவன் பாதன்', 'சச்சா ஜுட்டா', 'கேரவன்', 'ஷர்மிலீ' போன்ற படங்கள் சூறாவளியாய் சென்னை மற்றும் தமிழக முக்கிய நகரங்களில் சுழன்றடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ்ப்படங்களின் இந்த வெற்றிகள் உண்மையில் சந்தோஷப்படத் தக்கவையாக அமைந்தன என்பதில் ஐயமில்லை.
Bookmarks