Page 53 of 150 FirstFirst ... 343515253545563103 ... LastLast
Results 521 to 530 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #521
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திருச்சி முருகன் திரையரங்கில், 9.4.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, நடிப்புலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" திரைக்காவியம் திரையிடப்பட்டு சக்கை போடு போட்டு வருகிறது.

    திருநெல்வேலியில் உள்ள அருணகிரி (இளைய திலகத்தின் சின்ன தம்பி வெள்ளி விழா ஓடிய அரங்கு) திரையரங்கில், நேற்று (12.4.2010) திங்கள் முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

    இத்தகவல்களை அளித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Thank you kaveri kannan, rakesh, tac, abkhlabhi & saradha mam.

    The audience gave huge and excellent response for Mayangugiral oru maadhu song as they did for every other song. They shouted in joy when they saw NT in subtle and slightly romantic moves. We could have actually seen him blushing if it was a color film.

    As pammalar said, Murali sir rightly recalled Vairamuthu’s quote, “சிங்கம் வெட்கப்பட்டுப் பார்த்திருக்கிறீர்களா? “

    The best part comes towards the end of the song when NT slowly turns his sister’s photograph down on the table. Character analysis, character arc, mis en scene, plots, sub-plots etc., etc., etc., எல்லாத்துக்கும் அந்த காலத்துலயே base போட்டாச்சு.

    In which film institute did these guys had training???


    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #523
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    முன்போல இருந்தால் முதல் ஆளாக நானும் திரையரங்கில் நின்றிருப்பேன். என்ன செய்வது... 'கனவில் நினையாத காலம் இடைவந்து பிரித்த கதை சொல்லவா?'.
    Oh !!

    I pray that your wishes come true very soon.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #524
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Thank you very much Sister Sarada, Mr.Tac, Mr.Bala & also my sincere thanks to everyone.

    Mr.Tac,

    Here's the link through which you can view the Paasamalar Notice, prepared & distributed by Chennai Kodambakkam Kalaipoonga Sivaji Rasigar Mandram.

    http://paasamalar69.webs.com/apps/ph...otoid=78098083

    Happy Viewing,
    Pammalar.
    pammalar

  6. #525
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் அவர்களே

    திருச்சி, நெல்லை தித்திப்புச் சேதிகளுக்கும்
    பாசமலர் சாதனைப் பதிவின் சுட்டி இணைப்புக்கும்

    இரட்டிப்பு நன்றிகள்.


    அன்பு சாரதா அவர்களே

    மண்ணும் கடல்வானும் மறைந்து முடிந்தாலும்
    மறக்க முடியாத, பிரிக்க முடியாத
    நம் - நடிகர்திலகம் உறவைப்

    புத்துணர்ச்சியோடு நீங்கள் கொண்டாடும் காலம் வரும்..

    அதைக் கண்டு மகிழ எங்களுக்கும் காலம் வரும்!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #526
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஆவேசத்தின் முனையில் இருந்த ரசிகர்களை அவ்வப்போது அமைதிப்படுத்தும் பொறுப்பை யாரும் சொல்லாமலே தங்கவேலு எடுத்துக்கொண்டார். இந்த நேரத்திலும் ரசிகர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த அவர், எம்.சரோஜா மற்றும் M.R .சந்தானம் சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்தன. பிறகு நடிகர் திலகம் ஒரு தொழிலதிபர் ஆகி ஆங்கிலம் உட்பட பல்வேறு கலைகளையும் கற்று பியானோ வாசிக்கும் கைகளை காட்டியவுடன் இங்கே மீண்டும் பொங்கிய உணர்ச்சி அலைகள், அவர் கோட் சூட் அணிந்து படியில் டக் டக் என்று இறங்க ஓசை கூடி, சாவித்திரி கையில் வைத்திருக்கும் சூடத்தை அபப்டியே ஸ்டைலாக கண்ணில் ஒத்திக்கொண்டு, மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க என்று சொன்னவுடன் அப்படியே அந்த இடது கையை ஒரு நீட்டு நீட்டி சற்றே மணிக்கட்டை மடித்து வாட்சில் மணி பார்க்கும் போது அணை உடைந்து பாய்ந்தது. அப்படியே ஆபிஸ் சென்று காந்திஜியின் படத்திற்கு ரோஜா மலரை வைத்துவிட்டு சீட்டில் உட்காருவது வரை அது அடங்கவேயில்லை.

    பிறகு ஜெமினி ஊருக்கு திரும்பி வருவது தங்கவேலுவிடம் விவரங்களை தெரிந்துக் கொள்வது என்ற காட்சி முடிந்தவுடன் மீண்டும் அலுவலக அறை. கே.டி.சந்தானத்துடன் பேசிக் கொண்டிருக்கும் ராஜசேகர். ஆனந்தன் என்ற பெயர் கேட்டவுடன் அந்த முகத்தில் வரும் துடிப்பு, வரச் சொல் என்று சொல்லி விட்டு கேடிஎஸ் இருப்பதனால் மனம் விட்டு பேச தயங்க அவர் சென்றவுடன் ஆனந்தா என்று கட்டி பிடித்தவுடன் மீண்டும் ஆரவாரம். கோட் பூட் போட்ருக்கேன்னு பாக்கிறியா அதெல்லாம் ஊருக்கு நம்ம இது போடலைனா கஞ்சன்னு சொல்லுவாங்க, இந்த வசனத்திற்கு பயங்கரமான கைதட்டல்கள் முழக்கங்கள் ஒலித்தன. ஜெமினி வேலை கேட்க அதை தவிர்க்க நினைக்கும் நடிகர் திலகத்தின் தர்மசங்கடமான பல்வேறு முகபாவங்கள் இவற்றையெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து பார்த்தது. அடுத்து வந்தது சாவித்திரியின் பிறந்த நாள் காட்சி.

    ராதா உன் தோழிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே போ என்ற வசனத்தில் ஆரம்பித்து ஜெமினியை அடித்துவிட்டு கதவை திறக்க கேடிஎஸ் தடுக்க தடுக்க மீண்டும் அடிக்க முயற்சிக்கும் வண்ணமாக இடது தோளை சரித்து முட்டியை மடக்கி மோதிரத்தை வாயோடு சேர்த்து வைத்து கண்ணில் வெறியை காட்டும் அந்த போஸிற்கு காது செவிடாகும் கைதட்டல்.

    அந்த உணர்வை அதிகப்படுத்துவது போல உடனே தொழிற்சாலை காட்சி. கத்தியை எடுத்து பென்சிலை சீவும் போது தொடங்கியது. எலிப்பொறியில் உணவை வைப்பது எலியின் பசியை போக்கவா, புற்றுக்கு வெளியே நாதம் இசைப்பது நாகத்தின் காதுகளை குளிர வைக்கவா எனும்போதெல்லாம் சிம்மகுரலோனின் ஒலியையும் விஞ்சும் வண்ணம் இங்கே ஆரவாரம். நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்து, Mr.Anandhan, I am the sole proprietor என்று அடுத்த வசனத்தை எல்லாம் யாரும் கேட்டிருக்கவே முடியாது. அது போல் I say no - விற்கும் விசில் பறந்தது. முரசு கொட்டு முழக்கமிடு- வில் ஆரம்பித்து now get out வரை யாரும் அடங்கவேயில்லை.

    நடிகர் திலகம் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார் என்பதற்கு அடுத்த காட்சி ஒரு அற்புதமான உதாரணம். ஸ்ட்ரைக் செய்யும் ஜெமினியை கைது செய்ய போலீசிற்கு போன் செய்வார். இன்ஸ்பெக்டர் நான்தான் ராஜசேகர் பேசறேன் yes ராஜசேகர் என்று சொல்லிவிட்டு குட் மார்னிங் குட் மார்னிங் என்பார். ஒரு பெரும் தொழிலதிபர், ஊர் பெரிய மனிதர் பேசும்போது அரசாங்க அதிகாரிகள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மனதில் இருத்தி அதை திரையில் வெளிப்படுத்தும் பாங்கு -அற்புதம்.

    அடுத்து வரிசையாக அலப்பறை காட்சிகள். நம்பியார் வீட்டு விருந்துக்கு செல்லும் நடிகர் திலகம். எம்.என்.ராஜத்தை கண்டவுடன் சிகரெட்டை கிழே போட்டுவிட்டு வணங்கும் பணிவு, பியானோவில் விரல்கள் விளையாட பாட்டொன்று கேட்டேன் பாடல். இந்த அளவிற்கு விசிலும் கைதட்டலும் இனி கேட்க முடியுமா என்கிற அளவிற்கு ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்.

    அடுத்த காட்சியில் காமிரா மேலிருந்து பார்க்க வீட்டுக்குள்ளே ராஜ நடை நடந்து வருவார். தங்கச்சி தோட்டத்தில் ஆனந்தனோடு என்று கேட்கும்போதே சங்கரனின் கழுத்தை நெரிக்கும் நடிகர் திலகம். பிஸ்டலை கையில் எடுத்து தோட்டத்திற்கு போக யாருக்கும் எந்த வசனமும் கேட்கவில்லை. உன் அண்ணன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போது ஜெமினிக்கு விழுந்த லட்சார்ச்சனை இருக்கிறதே! பாவம். அந்த பிஸ்டலால் கண்ணீரை துடைக்கும் போதெல்லாம் தியேட்டருக்கே வெறி பிடித்தாற் போன்று இருந்தது. அடுத்த காட்சி தங்கை விரும்பியவனையே மனம் முடிக்கும் காட்சி. தன் அண்ணனுக்காக தன் வாழ்வின் ஆதாரமான காதலையே ஒரு தங்கை தியாகம் செய்யறானா அந்த தங்கைக்காக அந்த அண்ணன் என்ன வேணா செய்யலாம்மா என்ன வேணா செய்யலாம் என்னும் போது நிறையப் பேர் உணர்ச்சிவசப்பட்டனர்.

    வாராய் என் தோழி பாடல் அடுத்து. இறுதி சரணம் மலராத பெண்மை மலரும் - இதில் ஆரம்பித்து இரண்டோடு மூன்று வளராதோ எனும் போது தலை குனிந்தவாறே சின்ன புன்னைகையுடன் நடிகர் திலகம் அந்த இடத்திலிருந்து நடந்து செல்ல இங்கே பிரித்து எடுத்து விட்டார்கள்.

    அன்புடன்

    (தொடரும்)

  8. #527
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாராட்டிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.

    பாசமலர் நோட்டிஸை ஸ்கேன் செய்த சுவாமிக்கு நன்றி. அதை விட திருச்சியில் ஆண்டவன் கட்டளை, நெல்லையில் சிவகாமியின் செல்வன் என்ற செய்திகள் மிகுந்த மகிழ்வை கொடுத்தன.

    tac,

    1961-ன் சாதனைகளைப் பார்த்தீர்களா? இதில் கூட பாருங்கள் அந்த வருடம் சென்னையில் 50- நாட்களை தவற விட்ட ஒரே படம் மருத நாட்டு வீரன் நமது மதுரையில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. கேரளத்தில் 75 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது. மறு வெளியீடுகளில் வசூலை வாரிக் குவித்தது. நமது படங்களே நமது படங்களுக்கு போட்டியாக வந்திருக்காவிட்டால் பாசமலர் மதுரையிலும் திருச்சியிலும் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும். திண்டுக்கல் போன்ற நகரங்களில் 100 நாட்களை கடந்திருக்கும். பாலும் பழமும் மதுரையில் வெள்ளி விழா ஓடியிருக்கும்.

    ஏப்ரல் 13 - தெய்வப்பிறவி பொன் விழா.

    ஏப்ரல் 14 - பேசும் தெய்வம் 43 -ம் ஆண்டு நிறைவு விழா.

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அன்புடன்

  9. #528
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    ஆண்டவனின் அவதாரமாக இப்பூவுலகில் அவதரித்த நமது நடிப்புலக மகானின் "தெய்வப்பிறவி" திரைக்காவியத்திற்கு இன்று (13.4.2010) பொன்விழா நிறைவு. இக்காவியம் இன்று 50 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து 51வது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது. இக்காவியத்தைப் பற்றிய தகவல்களுக்கு, புகைப்படங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்.

    http://deivappiravi61.webs.com/

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #529
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    ஆவேசத்தின் முனையில் இருந்த ரசிகர்களை அவ்வப்போது அமைதிப்படுத்தும் பொறுப்பை யாரும் சொல்லாமலே தங்கவேலு எடுத்துக்கொண்டார். இந்த நேரத்திலும் ரசிகர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த அவர், எம்.சரோஜா மற்றும் M.R .சந்தானம் சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்தன. பிறகு நடிகர் திலகம் ஒரு தொழிலதிபர் ஆகி ஆங்கிலம் உட்பட பல்வேறு கலைகளையும் கற்று பியானோ வாசிக்கும் கைகளை காட்டியவுடன் இங்கே மீண்டும் பொங்கிய உணர்ச்சி அலைகள், அவர் கோட் சூட் அணிந்து படியில் டக் டக் என்று இறங்க ஓசை கூடி, சாவித்திரி கையில் வைத்திருக்கும் சூடத்தை அபப்டியே ஸ்டைலாக கண்ணில் ஒத்திக்கொண்டு, மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க என்று சொன்னவுடன் அப்படியே அந்த இடது கையை ஒரு நீட்டு நீட்டி சற்றே மணிக்கட்டை மடித்து வாட்சில் மணி பார்க்கும் போது அணை உடைந்து பாய்ந்தது. அப்படியே ஆபிஸ் சென்று காந்திஜியின் படத்திற்கு ரோஜா மலரை வைத்துவிட்டு சீட்டில் உட்காருவது வரை அது அடங்கவேயில்லை.

    பிறகு ஜெமினி ஊருக்கு திரும்பி வருவது தங்கவேலுவிடம் விவரங்களை தெரிந்துக் கொள்வது என்ற காட்சி முடிந்தவுடன் மீண்டும் அலுவலக அறை. கே.டி.சந்தானத்துடன் பேசிக் கொண்டிருக்கும் ராஜசேகர். ஆனந்தன் என்ற பெயர் கேட்டவுடன் அந்த முகத்தில் வரும் துடிப்பு, வரச் சொல் என்று சொல்லி விட்டு கேடிஎஸ் இருப்பதனால் மனம் விட்டு பேச தயங்க அவர் சென்றவுடன் ஆனந்தா என்று கட்டி பிடித்தவுடன் மீண்டும் ஆரவாரம். கோட் பூட் போட்ருக்கேன்னு பாக்கிறியா அதெல்லாம் ஊருக்கு நம்ம இது போடலைனா கஞ்சன்னு சொல்லுவாங்க, இந்த வசனத்திற்கு பயங்கரமான கைதட்டல்கள் முழக்கங்கள் ஒலித்தன. ஜெமினி வேலை கேட்க அதை தவிர்க்க நினைக்கும் நடிகர் திலகத்தின் தர்மசங்கடமான பல்வேறு முகபாவங்கள் இவற்றையெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து பார்த்தது. அடுத்து வந்தது சாவித்திரியின் பிறந்த நாள் காட்சி.

    ராதா உன் தோழிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே போ என்ற வசனத்தில் ஆரம்பித்து ஜெமினியை அடித்துவிட்டு கதவை திறக்க கேடிஎஸ் தடுக்க தடுக்க மீண்டும் அடிக்க முயற்சிக்கும் வண்ணமாக இடது தோளை சரித்து முட்டியை மடக்கி மோதிரத்தை வாயோடு சேர்த்து வைத்து கண்ணில் வெறியை காட்டும் அந்த போஸிற்கு காது செவிடாகும் கைதட்டல்.

    அந்த உணர்வை அதிகப்படுத்துவது போல உடனே தொழிற்சாலை காட்சி. கத்தியை எடுத்து பென்சிலை சீவும் போது தொடங்கியது. எலிப்பொறியில் உணவை வைப்பது எலியின் பசியை போக்கவா, புற்றுக்கு வெளியே நாதம் இசைப்பது நாகத்தின் காதுகளை குளிர வைக்கவா எனும்போதெல்லாம் சிம்மகுரலோனின் ஒலியையும் விஞ்சும் வண்ணம் இங்கே ஆரவாரம். நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்து, Mr.Anandhan, I am the sole proprietor என்று அடுத்த வசனத்தை எல்லாம் யாரும் கேட்டிருக்கவே முடியாது. அது போல் I say no - விற்கும் விசில் பறந்தது. முரசு கொட்டு முழக்கமிடு- வில் ஆரம்பித்து now get out வரை யாரும் அடங்கவேயில்லை.

    நடிகர் திலகம் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார் என்பதற்கு அடுத்த காட்சி ஒரு அற்புதமான உதாரணம். ஸ்ட்ரைக் செய்யும் ஜெமினியை கைது செய்ய போலீசிற்கு போன் செய்வார். இன்ஸ்பெக்டர் நான்தான் ராஜசேகர் பேசறேன் yes ராஜசேகர் என்று சொல்லிவிட்டு குட் மார்னிங் குட் மார்னிங் என்பார். ஒரு பெரும் தொழிலதிபர், ஊர் பெரிய மனிதர் பேசும்போது அரசாங்க அதிகாரிகள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மனதில் இருத்தி அதை திரையில் வெளிப்படுத்தும் பாங்கு -அற்புதம்.

    அடுத்து வரிசையாக அலப்பறை காட்சிகள். நம்பியார் வீட்டு விருந்துக்கு செல்லும் நடிகர் திலகம். எம்.என்.ராஜத்தை கண்டவுடன் சிகரெட்டை கிழே போட்டுவிட்டு வணங்கும் பணிவு, பியானோவில் விரல்கள் விளையாட பாட்டொன்று கேட்டேன் பாடல். இந்த அளவிற்கு விசிலும் கைதட்டலும் இனி கேட்க முடியுமா என்கிற அளவிற்கு ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்.

    அடுத்த காட்சியில் காமிரா மேலிருந்து பார்க்க வீட்டுக்குள்ளே ராஜ நடை நடந்து வருவார். தங்கச்சி தோட்டத்தில் ஆனந்தனோடு என்று கேட்கும்போதே சங்கரனின் கழுத்தை நெரிக்கும் நடிகர் திலகம். பிஸ்டலை கையில் எடுத்து தோட்டத்திற்கு போக யாருக்கும் எந்த வசனமும் கேட்கவில்லை. உன் அண்ணன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போது ஜெமினிக்கு விழுந்த லட்சார்ச்சனை இருக்கிறதே! பாவம். அந்த பிஸ்டலால் கண்ணீரை துடைக்கும் போதெல்லாம் தியேட்டருக்கே வெறி பிடித்தாற் போன்று இருந்தது. அடுத்த காட்சி தங்கை விரும்பியவனையே மனம் முடிக்கும் காட்சி. தன் அண்ணனுக்காக தன் வாழ்வின் ஆதாரமான காதலையே ஒரு தங்கை தியாகம் செய்யறானா அந்த தங்கைக்காக அந்த அண்ணன் என்ன வேணா செய்யலாம்மா என்ன வேணா செய்யலாம் என்னும் போது நிறையப் பேர் உணர்ச்சிவசப்பட்டனர்.

    வாராய் என் தோழி பாடல் அடுத்து. இறுதி சரணம் மலராத பெண்மை மலரும் - இதில் ஆரம்பித்து இரண்டோடு மூன்று வளராதோ எனும் போது தலை குனிந்தவாறே சின்ன புன்னைகையுடன் நடிகர் திலகம் அந்த இடத்திலிருந்து நடந்து செல்ல இங்கே பிரித்து எடுத்து விட்டார்கள்.

    அன்புடன்

    (தொடரும்)
    Murali,

    பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரம் போல தங்கள் NT பற்றி எழுதும் எழுத்து ஜொலிக்கிறது. Your Episode 2 is better than episode 1. Great going.

    தமிழ் பட வரலாற்றிலேயே பாசமலர் NT -GG Argument சீன் தான் பெஸ்ட் Argument சீன் என்று சொல்லலாம். Gemini என்ன தான் ஈடு கொடுத்து நடித்தாலும் நம் நடிகர் திலகம் சும்மா புகுந்து விளையாண்டிருப்பார். நான் தான் இந்த பாக்டரி முதலாளி என்று சொல்லும் arrogance ஆகட்டும், பென்சிலை சீவி கொண்டே ஸ்டைலோடு பேசுவதாக ஆகட்டும் - A Treat to Watch !! அந்த 5 நிமிட சீன் - நம்மை வேறு உலகத்துக்கே கொண்டு சென்றுவிடும். இந்த சீன்க்கு 1961 -இல் எவ்வாறு response இருந்துருக்கும்!!?

    Eagerly waiting for your next episode.

    Regards

  11. #530
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    [quote=sankara70][quote="tacinema
    நான் மும்பை ஆரோர தியேட்டரில் ஞாயிறு காலை காட்சியில் "மலர்ந்தும் மலராத" பாட்டு காட்சியில் தியேட்டர் கதறி விட்டது.

    Still, I feel our madurai fans will handsomely beat chennai fans.

    regards

    Tac,

    Are u from Mumbai?

    I remember seeing Pasamalar screened in Arora, Mumbai in 90s

    Enakku ninaivu therinju nan partha padam Pasa malar.

    Appuram enga oorla tharai ticket la urkarnthu konjam friends udan evening show(azhudu konde) partha niyabakam

    Intha padathukku eedu inai yethu undu

    Thirai ulagile paasathai valartha padam endru annan solli irukar

    Annan endru nam intha padathukku appurama than avarai azhaikirom.

    Entha scenai viduvathu -Sivaji udan oru pullu(grass) nadicha kooda nalla nadikume

    Sivaji intha padathil padi padiya munneruvathaka kathai-avarudaya nadai udai bhavam maruvathu arumai

    Intha padathil naditha mathiri oru 5% yaravathu nadikka mudiyuma

    Gemini-nalla modulation-oru scenela avarukkum NT kkum karuthu verubadu vandapuram-appao kooda avar NT ya vittu kudukkama

    pesuvathaka oru katchi irukkum
    Thangai Savithri-made for the role
    MN rajam-also nalla role-NTs wife in the movie.

    Padalgal Then-Kannadasan

    Thangavelu-Saroja nalla comedy

    PS Gnam ammaa-bayama irukku ippo ninaicha kooda
    [/quote]

    Sankara,

    I used to work in Mumbai and that was my 3rd time I watched this movie at Aurora.

    It was a wonderful experience watching paasamalar at Mumbai: Paid 100% more for a "black" ticket for Sunday Morning show..... With lots of NT fans from Dharavi - it was a great experience.

    Regards.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •