-
29th December 2010, 09:31 PM
#21
Senior Member
Veteran Hubber
Originally Posted by
NOV
vasanth, pinnitta
you left out sivandha mann
Sivantha Mann - Sridhar padam thAnE ....
infact some of the good inspirations from Sridhar had Muthuraman in them ... like nenjil or alayam, ooty varai uravu, sivantha mann, kathalikka neramillai, avalukkendru oru manam etc ...
What was Muthuraman's last movie?
-
29th December 2010 09:31 PM
# ADS
Circuit advertisement
-
29th December 2010, 09:47 PM
#22
Senior Member
Veteran Hubber
Muthuraman in ThiruvilayAdal ....
Muthuraman defined a new meaning to what it is to be a King ....
Coping a scene with NT is something everybody fears - Muthuraman handled the scene with utmost discipline and respect - even when giving back a stern reply to NT in the scene (idhu arasa sabai andru - thamizh thiruchabai) - one would definitely note voice modulation when he shows the stern high pitch when saying "arasa sabai andru" and brings his voice down with respect when he says thamizh thiruchabai .... that coming up with ease in front of the great NT - is something
His dialogue delivery too was very sharp and his voice took its advantage ....
Also, when you interrupt somebody - your voice should carry over between two stunning voices - this too is something which Muthuraman did it with ease when he was saying "pulavargaLE .. sAnthamAga uraiyAdungaL ...." - one could observe a pitch difference at this point too - where pulavargaLe would be said in a puchy way - and then his voice slides down to calm them ...
When NT and APN are arguing - the camera still engulps the King in their presence - one could see his involvement in the scene by looking with utmost fear and keen-ness and belonging to the scene though he has no dialogue delivery to make .... there used to be many actors who may just look perplexed when they are part of a scene and has nothing to speak ... Muthuraman's belonging to that scene too is something ....
-
30th December 2010, 06:14 AM
#23
Administrator
Platinum Hubber
Originally Posted by
bingleguy
What was Muthuraman's last movie?
He died in 1982.
That year he had acted in two movies - Thaai Moogaambigai and Mullillaatha Roja
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th December 2010, 06:23 AM
#24
Senior Member
Seasoned Hubber
1000 Muthangal was the last film Muthuraman was acting and this film had Radha and Malayalam actor Jose in the lead roles, with a beautiful song "Selai Kudai Pidikka" tuned by Shankar Ganesh. The character played by Jose was of a sadist resembling one of characters now played in the TV serial Nadhaswaram.
Raghavendran,
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th December 2010, 06:27 AM
#25
Administrator
Platinum Hubber
Yes, yes Raghavendra. I now remember Aayiram Muththangal was his last film.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th December 2010, 08:02 AM
#26
Senior Member
Diamond Hubber
guys. Keep it going.
Muthuraman, I dare say, is one of the best looking of them all. I recall reading somewhere, where someone, it seems, told MGR that after NT, there were none who can act well. MGR said, "Yen, namma Muthuraman irukkare?". I could be wrong, but I vaguely recall that.
My mother said that when folks were going nuts about NT and MT, she was secretly admiring Muthuraman as great actor, and Jai (had crush too) as a star.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
9th June 2014, 11:57 AM
#27
Senior Member
Veteran Hubber
கண்ணம்மா (1972)
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, (தென்னகத்துக்கு தேசிய விருதுகள் குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில்) தேசிய விருதை அள்ளிய செம்மீன் படத்தை இயக்கிய ராமுகாரியத், தமிழில் தயாரித்த வண்ணப்படம் கண்ணம்மா. இப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியவர் மா. லட்சுமணன்.
நாயகனாக நவரசத்திலகம் முத்துராமன், நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் மிக அருமையான குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் நம்பியாரும், பாலாஜியும். பிற்காலத்தில் நம்பியார் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கியபின் வந்த படமல்ல, அவர் வில்லனாக கொடிகட்டிப்பறந்த காலத்தில் வந்த படம். இப்படி ஒரு வேடத்தில் கொஞ்சமும் எதிர்பாராமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இன்னொரு திருப்பம் இப்படத்தின் பிரதான வில்லனாக நாகேஷ். அழகான பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக்கொண்ட காமுகன். இவர்தான் எந்த ரோலிலும் தூள் கிளப்புவாரே. அதகளம் பண்ணிட்டார். நீச்சல் குளத்தை ஒட்டிய, கண்ணாடி சுவர் வைத்த பாதாள அறையில் அமர்ந்து, குளிக்கும் பெண்களின் அழகை அவர்கள் அறியாவண்ணம் ரசிப்பது, பின் அவர்களில் ஒருவரை மிரட்டி படுக்கை அறைக்கு வரவழைப்பது போன்ற காமக் கொடுரங்களில் '24 மணிநேரம்' எக்ஸ்.டபிள்யூ.ராமரத்னம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு பிளே-பாய்.
நகைச்சுவை நடிகர் வில்லனாக கோட்டையைப் பிடித்தாரென்றால், வில்லன் நடிகர் குணச்சித்திர ரோலில் கொடிநாட்டினார். இரண்டு பெண்குழந்தைகளில் ஒன்றை இறந்தும், இன்னொன்றை உயிரோடும் பறிகொடுத்துவிட்டு பிள்ளைப்பாசத்தில் துடிக்கும் துடிப்பை நம்பியார் மிக அருமையாக காட்டியிருந்தார்.
அதிலும் பிளாஷ் பேக்கில் காட்டப்படும் காட்சி மனதை அதிர வைக்கும். ரங்கூனிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்குழந்தை இறந்துவிட, சொந்த ஊரில் கொண்டுபோய் இறுதிச்சடங்கு செய்ய கொண்டுவரும்போது, ரயிலில் உடன் பயணம் செய்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிணத்தை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியும்படி வற்புறுத்த, இவர் மறுக்க, இதனிடையே இறந்த குழந்தையின் பிணத்தை பக்கத்தில் கிடத்திவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, பயணிகள் அனைவரும் தொடர்ந்து விடாமல் நச்சரிக்க, அவசரத்தில் செய்வதறியாமல் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே வீசியெறிய, ஜன்னலைத்தாண்டி விழும்போது குழந்தை 'அப்பா'வென்று காத்த, அதிர்ச்சியில் "கண்ணம்மா" என்று நம்பியார் அலறும்போது தியேட்டர் மொத்தமும் அதிர்ச்சி அலையில்.
இன்னொருபக்கம் பாலாஜி, கண்சிமிட்டும் வக்கீல் பத்திரத்தை மிக அழகாக செய்திருந்தார். முத்துராமனுக்கு அளவான, அமைதியான கதாநாயகன் ரோல், மிக நன்றாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயாதான் வழக்கம்போல கொஞ்சம் ஓவராக அலட்டிக்கொண்டார். டைட்டில் அவர் பெயரிலாச்சே, அதுவும் ஒரு காரணமோ. இவர்களோடு ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக சுகுமாரி, முஸ்லிம் பெரியவராக ஓ.ஏ.கே.தேவர், நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக ஜெய்குமாரி நடித்திருந்தனர். (அழகான ஜெய்குமாரியை விட்டுவிட்டு, அவரைப்போல இருமடங்கு உருவம் கொண்ட மொக்கை கே.ஆர்.விஜயாவை நாயகன் காதலிக்கும்போது 'என்னய்யா உன் டேஸ்ட்டு' என்று தோன்றுகிறது நமக்கு).
இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் காதுக்கினிய மதுர கீதங்கள். நீண்ட நெடிய காலத்துக்குப்பிறகு இப்படத்தின் பாடல்கள் தற்போது தொலைக்காட்சிகளில் (குறிப்பாக 'முரசு' சேனலில்) ஒளிபரப்பாகின்றன.
கிராமத்து கல்யாண ரிசப்ஷனில் முத்துராமன் பாடுவதாக அமைந்த "எங்கெங்கும் என் எண்ணம், அங்கெல்லாம் உன் வண்ணம்" பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இறுதிக்காலப் பாடல்களில் ஒன்று. நிஜமான கிராமத்து கல்யாண வரவேற்பு இசை நிகழ்ச்சி போலவே அமைத்திருப்பார் இயக்குனர். மேடையில் அமர்ந்து மடியில் 'புல்-புல்-தராங்' இசைக்கருவியை வைத்து இசைததவாரே ரொம்ப கேஷுவலாக நடித்திருப்பார் முத்துராமன். (இந்த -புல்-புல்-தராங்' இசைக்கருவி எங்கள் வீட்டிலும் ரொம்ப காலம் இருந்தது. இந்த இசைக்கருவியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' பாடல்தான்).
அடுத்த பாடல் விஜயாவின் கற்பனையில் கே.ஆர்.விஜயா, முத்துராமனுடன் டூயட் பாடுவதாக வரும் "அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு" என்ற சுசீலாவின் சோலோ பாடல். ஊட்டி கார்டனில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கியிருப்பார்கள். மெட்டும் அழகான மெட்டு. என்ன ஒன்று, விஜயா பல்வேறு மாடர்ன் உடைகளில் வந்து பாடாய் படுத்துவார். (அவரது கணவர் இப்படத்தின் துணைத்தயாரிப்பாளர் என்பதால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது?).
எனக்குப்பிடித்த இன்னொரு அருமையான பாடல் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடிய "தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்". இப்பாடலில் முத்துராமனும் விஜயாவும் கேரளா முஸ்லிம் பணியில் உடையணிந்திருக்க, கேரளா சூழலில் படமாக்கப்பட்ட அழகான பாடல். கேரள ஏரியில் படகு சவாரி கண்களுக்கு விருந்து.
விஜயாவுக்காக சுசீலா பாடும் மற்றொரு பாடல், "செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே" என்ற பாடல். தன் வளர்ப்புத்தந்தை நம்பியார் அளிக்கும் விருந்தில் செல்வர்கள் கூடியிருக்க, தன் ஏழைக்காதலன் முத்துராமனை நினைத்துப் பாடும் பாடல். அனைத்துப்பாடல்களுமே சங்கர்-கணேஷ் இரட்டையர் உழைத்து உருவாக்கியிருந்தனர்.
படத்தின் டைட்டில் காட்சியில் சென்னை மௌண்ட்ரோட்டில் கேமரா பயணிக்கும்போது சாந்தியில் பட்டிக்காடா பட்டணமா, பிளாசாவில் பிள்ளையோ பிள்ளை, குளோப்பில் நான் ஏன் பிறந்தேன் படங்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களைக் காணலாம்.
எனது அனுபவம்: பட ரீலீஸின்போதே குளுகுளு மிட்லண்ட் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன். சற்று வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களின் வித்தியாசமான உருவாக்கம், நட்சத்திரங்களின் மாறுபட்ட நடிப்பு, இனிய பாடல்கள் மற்றும் இசை என எல்லாவிதத்திலும் எனக்குப்பிடித்திருந்தது
-
9th June 2014, 12:54 PM
#28
கார்த்தி சார்
உண்மையில் நாகேஷ் அருமையான வில்லன் கேரக்டர் பண்ணுவார்
அபூர்வ சகோதர்கள்,மௌனம் சம்மதம் (மம்மூட்டி),சோழன் பாண்டியன் (விஜயகுமார் சரத்குமார்) எல்லாமே நாகேஷின் மிக சிறந்த வில்லன் கேரக்டர் கொண்ட திரைப்படங்கள் even நம்ம "கௌவரம்" தில் அவர்தானே வில்லன்
-
9th June 2014, 01:26 PM
#29
Senior Member
Veteran Hubber
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி கிருஷ்ணாஜி,
தில்லானாவிலும். இவரது வில்லத்தனம் பெரிய வில்லன்களை பின்னுக்குத் தள்ளிவிடும்.
-
9th June 2014, 09:15 PM
#30
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக்
மிட்லண்ட் தியேட்டரில் கண்ணம்மா படத்தை நானும் பார்த்திருக்கிறேன். தாங்கள் கூறியது போல் அந்த டைட்டில் காட்சிக்காகவே பலர் அந்த படத்தைப் பார்க்க வந்திருந்தார்கள். பாடல்கள் அனைத்துமே நன்றாக இருந்ததும் படத்திற்கே பலம்.
கண்ணம்மா படத்தில் தாங்கள் கூறிய அந்த டைட்டில் காட்சி நம் பார்வைக்காக மீண்டும் இப்போது
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks