-
6th March 2017, 03:15 PM
#11
Junior Member
Devoted Hubber
தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் MG வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும், கிட்டாரும், ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. நினைவு படுத்திய mappi க்கு நன்றி. சாதாரண அர்த்தம் தான், ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி, தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது? அப்லாஸ்!
வானமுகில் வாகனத்தில்
நான் அவளை ஏற்றிவைத்தது
வானுலகில் தேவதைகள்
நாணும்வரை போய் வரவா?
-
6th March 2017 03:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks