-
9th June 2012, 02:09 AM
#1521
Junior Member
Devoted Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Punnaakku! Nee nermaiyaanavanaannu makkal sollanumdaa, nee illa! (sorry guys for that singularity)
என்ன சகலா...சடார்னு கோவ பட்டுட்டீங்க? பட், நெஜமா நல்ல பாய்ண்ட்ஸ்.
ராஜா சாரோட நேர்மை, திறமை இதிலெல்லாம் யாருக்கும் இங்கே சந்தேகம் இல்லை. என்ன, அப்பப்போ பேசும் போது, ஒன்னு கோவம் ஜாஸ்தியா வருது இல்லைன்னா தத்துவார்த்தமா பேசி, நம்ம மூஞ்சிய சுளிக்க வெக்கராரேன்னு தோணுது அவ்ளோ தான்.
-
9th June 2012 02:09 AM
# ADS
Circuit advertisement
-
9th June 2012, 02:15 AM
#1522
Senior Member
Platinum Hubber
continuing the pEsum padam 1976 interview...
"இசைத்துறையில் தாங்கள் பிரவேசிக்கக் காரணம் என்ன? அதற்கு யார் உறுதுணையாக இருந்தார்கள்" என்று கேட்டேன்.
"மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைப்புரம் தான் என் சொந்த ஊர். என்னுடைய அண்ணன் பாவலர் வரதராசன் ஒரு மெல்லிசைக்குழு வைத்திருந்தார். அக்குழுவில் நான் பாடுவேன். சிறிது காலம் செல்லவும் நண்பர் பொதும்பு முருகன் மூலமாக ஒ.ஏ.கே.தேவரிடம் அறிமுகமானேன். நாடகங்களுக்கு இசையமைக்கத் துவங்கினேன். தொடர்ந்து சுருளிராஜன் தேங்காய் சீனிவாசன் நடித்த நாடகங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது."
"நண்பர்கள் பாரதிராஜ், செல்வராஜ் இருவரின் அன்பும், உற்சாகமும் எனக்குப்பெரிதும் உதவின. செல்வராஜ் தான் என்னை பஞ்சு அண்ணனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அதன் பயனாகத்தான் 'அன்னக்கிளி' படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரியம் பெரும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது" - இளையராஜா தான் இந்தத்துறைக்கு வந்த விவரத்தைக் கோடிட்டுக் காண்பித்தார்.
-
9th June 2012, 02:16 AM
#1523
Senior Member
Platinum Hubber
BR's name, at the time of this interview is quite interesting - Bharathi Raj
IMG he modified it to rAjA due to the success of another rAjA
-
9th June 2012, 02:39 AM
#1524
Senior Member
Diamond Hubber
BaarathiRaj is Ok, but Amar Singh?! Oru veLa chennaila, Pannaipurathaan nu solrathai vida, North Indian nnu sonnaa respett & job ethaachum kedaikkum grathaalayaa?
-
9th June 2012, 02:47 AM
#1525
Senior Member
Platinum Hubber
"முதன் முதலில் தாங்கள் பதிவு செய்த பாடல் எது? அன்று தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?" என்று கேட்டது தான் தாமதம்.
" 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்ற பாடலைத்தான் முதன் முதலில் ரிக்கார்ட் செய்தோம். இப்பாடலை லதா மங்கேஷ்கரைப் பாடச்செய்வதாக திட்டமிட்டிருந்தனர். சில காரணங்களால் முடியாது போகவே ஜானகி அவர்கள் பாடினார்கள். ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்கனவே இப்பாடலுக்கான ஒத்திகை முடித்து விட்டேன். ஏ. வி. எம்-மில் தான் இப்பாடல் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. முதல் நாள் ரிக்கார்டிங் பூஜை முடிந்தது. திடீரென்று எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. 'நல்ல சகுனம்' என்று ஒருவர் கிண்டலாகக் கூறியது என் காதில் விழுந்தது. முதல் நாளும் அதுவுமாக இப்படி விளக்குகள் அணைந்து விட்டதே என்ற வேதனையில் ரிக்கார்டிங் தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன். டைரக்டர் மாதவன் அவர்கள் வேறு ஒரு பூஜைக்குச் சென்று விட்டு அங்கு வந்தார். சோர்ந்து போயிருந்த எனக்கு அன்போடு பிரசாதத்தைக் கொடுத்தார்.
"சிறிது நேரம் சென்றிருக்கும். கரென்ட் வந்துவிட்டது. அணைந்திருந்த விளக்குகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. முதல் டேக் ரிக்கார்ட் ஆகவில்லை. மீண்டும் சோதனை. பிறகு தான் 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' பாடல் பதிவு செய்யப்பட்டது. இன்று அந்தப்பாடலைக் கேட்டுப் பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப்பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு அன்று நடந்த சோதனைகள் தான் நினைவிற்கு வருகின்றன."
- சோதனைக்கு வித்திட்ட அந்தப்பாடல் தான் இன்று இசைத்தட்டு விற்பனையில் பெரும் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
-
9th June 2012, 02:49 AM
#1526
Senior Member
Platinum Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
BaarathiRaj is Ok, but Amar Singh?! Oru veLa chennaila, Pannaipurathaan nu solrathai vida, North Indian nnu sonnaa respett & job ethaachum kedaikkum grathaalayaa?
You may be surprised but in Madurai & South, it's not unusual to see people with names having Singh suffix. (That is parent given names).
One of my mom's uncles named four out of five of his sons , with singh suffix! (Not posting their names here for privacy's sake).
-
9th June 2012, 02:49 AM
#1527
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajaramsgi
என்ன சகலா...சடார்னு கோவ பட்டுட்டீங்க? பட், நெஜமா நல்ல பாய்ண்ட்ஸ்.
ராஜா சாரோட நேர்மை, திறமை இதிலெல்லாம் யாருக்கும் இங்கே சந்தேகம் இல்லை. என்ன, அப்பப்போ பேசும் போது, ஒன்னு கோவம் ஜாஸ்தியா வருது இல்லைன்னா தத்துவார்த்தமா பேசி, நம்ம மூஞ்சிய சுளிக்க வெக்கராரேன்னு தோணுது அவ்ளோ தான்.
கோபம்/திமிர் இதெல்லாம் நல்லவனுக்கு வேலி! அது இல்லைன்னா மேஞ்சிருவாங்க! (thanks Kamal dialog in MMA) இப்பவே இப்படின்னா இழுத்த இழுப்புக்கெல்லாம் போனா என்ன கதி பண்ணிடுவாங்க?
கோபம் வராத மாதிரி கேள்வி கேளுங்க! "ராகம், மெட்டு என்ன வித்யாசம்?" கொய்யால இதென்ன பாட்டு கிளாசா? அப்புறம், "உங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே சமயம் விருது தர்றது பத்தி?" இப்படி கேட்டா கோவம் வராதா! நியாயமா இதுக்கு அவர் ரொம்ப பொறுமையாவே பதில் சொல்லிருக்கார். "அரசாங்கத்துக்கு என் அருமை அவ்ளோ தான் புரிஞ்சிருக்குன்னா அதுக்கு நான் என்ன செய்யுறது?" இப்படி குட சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லலை.
அப்புறம் இந்த கேடுகெட்ட நிருபப்பசங்க எதுக்கு "இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் எல்லாம் எப்படி?" ன்னு கேக்குறானுங்க? வம்பு பண்ணத்தான்!
ஒரு முறை ஒரு விகடன் பேட்டி, அப்பா ரஹ்மான் வந்து செம்ம பீக்ல போன புதுசு. வடக்குல எல்லாம் அவர் பாட்ட அப்டியே காப்பி அடிச்சாங்க. அப்ப ஒரு முறை இவர் சொன்னார் "இப்ப எல்லாரும் ஒரே ஒருத்தர் மாதிரி தான் இசை அமைக்குறாங்க!" அப்படி ஒரு அர்த்தம் வர்ற மாதிரி எதோ சொன்னார். ரஹ்மானை மனசில் வெச்சி சொல்லிருக்க வாய்ப்புண்டு. இந்த நிருபப்பசங்க தேவை இல்லாம சீண்டாம இருந்திருந்தா, அவரே கூட ரஹ்மான் உள்பட் மத்த இசையமைப்பாளர்கள் பத்தி நல்லவிதமா சொல்லி இருபாரு. சும்மா அவரை கோபப்படுத்திட்டு, அப்புறம் எதுக்கு அவரை குறை சொல்றீங்க?
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 9th June 2012 at 02:53 AM.
-
9th June 2012, 02:51 AM
#1528
Senior Member
Platinum Hubber
I don't know whether "Latha Mangeshkar" means LRE (rAsAvukku appa rombakkuRumbu paNRa vayasu, illaiyA?)
-
9th June 2012, 03:08 AM
#1529
Senior Member
Platinum Hubber
"நீங்கள் பின்னாளில் ஓர் இசையமைப்பாளராக வரவேண்டுமென்பதற்காக உங்களை எந்த அளவுக்குத் தயார் செய்து கொண்டீர்கள்" என்று கேட்டேன்.
"என் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், சலீல் சௌத்ரி, ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், ஷங்கர் கணேஷ், தேவராஜன், தட்சிணாமூர்த்தி, கே.வி.மகாதேவன், விஜயபாஸ்கர் ஆகியோரிடம் உதவியாளனாக பல படங்களுக்குப் பணிபுரிந்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருந்தது. ஒவ்வொருவரும் ஒரு பாடலை இசையமைக்கும் விதத்தினைக் கூர்ந்து பார்ப்பேன். பின்னணி இசை சேர்க்கும்போது எந்தெந்த இடங்களில் பிரத்தியேகக் கவனம் வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். பாடல் பதிவின் போது சிறு விஷயங்களைக்கூட கவனிக்கத் தவறுவதில்லை. இசையமைப்பாளனாக வரவேண்டுமென்ற ஆர்வத்தில் திறமை மிக்க இசையமைப்பாளர்களிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இன்று எனக்கு அது உதவுகிறது" என்றார் இளையராஜா.
-
9th June 2012, 03:24 AM
#1530
Senior Member
Veteran Hubber
Raja talks HIGH of his predecessors always!
Never fails to show respect or admiration.
there are couple videos roaming around in the web.
Rajavai antagonize pannadheengappa!
Last edited by baroque; 9th June 2012 at 03:29 AM.
Bookmarks