Page 166 of 191 FirstFirst ... 66116156164165166167168176 ... LastLast
Results 1,651 to 1,660 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #1651
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,144
    Post Thanks / Like
    வாழ்வில் வேண்டும் கொஞ்சம் துன்பம்
    வருத்தம் வானை வளைக்க முயன்று
    வெட்கம் சமூக அக்கரை குறைகையில்
    வேதனை வெட்டி முறிக்க முடியாமையில்
    வீணாய் போன நல்நோக்கு திட்டங்களில்
    விழவேண்டும் மீண்டும் எழுந்து நிற்பதற்கு
    வியர்வை விரயமாய் போய்விட்டபோதும்
    விரும்புவாயோ உப்பில்லா பத்திய சோற்றை
    விருந்தென்றால் வேண்டாமோ அறுசுவை
    வெடித்து முளைக்கும் விதைக்குள் ஆலமரம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. Likes Russellhni liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1652
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    ஆலமரத்தின் பழம் சிறிதே
    அதிலே உண்டு ஆயிரம் விதை
    அதனுள் ஒன்று வித்தாகி
    அகல மரமாய் அதை ஆக்கி
    அனேக விழுது அதை தாங்கி
    ஆயிரம் பறவைக்கு அடைக்கலமே

    அரிக்கும் கரையான் அடிமரத்தை
    ஆனால் ஆலோ தழைத்தோங்கும்
    ஆயிரம் விழுது ஊன்றியதால்
    அதுபோல் மனிதா ஆவாயே !
    ஆல் போல் தழைத்து வாழ்வாயே !
    Last edited by Muralidharan S; 15th April 2015 at 01:45 PM.

  5. #1653
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,144
    Post Thanks / Like
    வாழ்வாயே மனிதா கொஞ்சம் ஆன்மாவிற்காய்
    வயிறு பிரதானம்தான் இல்லையெனவில்லை
    ஐம்புலன் சுகங்கள் இன்பந்தான் ஐயமில்லை
    திரவியம் தேடி தேடியதை கண்டபடி இறைத்து
    தடைகள் பல தாண்டி பந்தயத்தில் ஓடி வென்று
    களைக்கையில் உள்மன தாகம் தீர் அறம் செய்து
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #1654
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    அறம் செய்து வாழ வழியென்று அன்றே
    அறுத்திட்ட மறை ஒழுக்கம் - அஃதே
    விழுப்பம் தருமாம் வள்ளுவன் வாக்கு -அதை
    அகம் கொண்டு சொல் செயலினில் நாட்டு
    Last edited by Muralidharan S; 16th April 2015 at 06:30 PM.

  7. #1655
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,144
    Post Thanks / Like
    செயலினில் நாட்டு கண்கள் சிவக்க கத்தினாள்
    ஓடும் தண்ணீரில் எழுதவேண்டுமுன் பேச்சை
    பெற்றவளுக்கும் பின் வந்த ஒரு மற்றவளுக்கும்
    நடுவில் விழி பிதுங்கும் கணவனொரு கோழை
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #1656
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    கோழை இல்லை நான் மோழையும் இல்லை
    ஏழையென் சொல் அம்பலத்தில் ஏறவில்லை
    எதிர்த்து பார்த்தேன் எந்த பயனுமில்லை
    எடுபட்டவனே விட்டேனா பார் என்றனர்


    எடுத்தேன் ஓட்டம் வெட்ட வரும் போது
    வெட்டி வீரம் வேண்டாம் வீண் அது இப்போது
    இன்று வெற்றி இல்லையெனில் நாளை உண்டு
    எருமை போல் பொறுமை எனக்கென்றுமே உண்டு


    வென்று காட்டினார் வீழ்த்தினார் வாலியை அன்று
    வெகு எளிதாக இராமன் மறைவினில் நின்று
    மறுபடி எதிர்ப்பேன் இம்முறை ஒளிந்து கொண்டு
    மறம் உண்டு எனை வெல்ல இனி எவருண்டு ?
    Last edited by Muralidharan S; 17th April 2015 at 03:11 PM.

  9. #1657
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எவருண்டு எனக்கேட்டால் என்ன செய்வாள்
    …ஏந்திழையின் மனதுள்ளே நுழைந்த காதல்
    பயிரதுவும் வெட்டிவிட்டு எரித்திடு வாரோ
    ..பாவையவள் நெஞ்சுள்ளே நடுக்கம் மேலும்
    விழிகளிலே ஆச்சர்யம் தன்னைக் கூட்டி
    …விறுவிறுப்பாய்க் கேட்டாளே தந்தை முன்னர்
    விவரந்தான் கூறுங்கள் இந்தக் கேள்வி
    ..விவரிக்கும் காரணமும் புரிய வில்லை..


    பாலாய்த் தேனாய்ப் பாசங்கள்
    ..பலவாய்க் கூட்டி வளர்த்தமகள்
    யாரோ வயதுப் பையனிடம்
    …ஏனோ சிரித்தே நின்றிருந்தாள்
    ஊரார் பார்த்தே சொல்லத்தான்
    ..ஓடி வந்தே தான்கேட்டால்
    பாவ முகமாய் நிச்சலனப்
    ..பாவம் கூட்டிக் கேட்கின்றாள்

    அன்பே மகளே அருங்கனியே
    ..அழகாய்த் தானே நான்வளர்த்தேன்
    எண்ணும் எழுத்தும் எண்ணவொண்ணா
    ..ஏற்றங் கொடுக்கும் நற்சிந்தை
    இன்னும் பலவும் நீகேட்க
    …எளிதாய்க் கொடுத்தேன் உண்டிலையா
    பொன்னே பெண்ணே பூந்தளிரே
    ..புவிநீ இன்னும் அறியவிலை..

    இன்னும் பேச்சு எதற்கப்பா..
    ..என்ன விஷயம் சொல்லுங்களேன்
    உங்கள் மகள்தான் வாரிசுநான்
    ..உணர்வில் மயங்க மாட்டேனே..
    கன்னஞ் சிவக்கும் யாரேனும்
    ..களிப்பாய் என்னை நெருங்கவுந்தான்
    திண்ண புத்தி எனக்குண்டு
    ..சொல்வீர் உமது கேள்வியினை

    அந்தக் கடைப்பக்கம் ஆடவன் ஒருவனுடன்
    …அழகுப் பெண்ணிலவு உன்மகள் பேசுகிறாள்
    சொந்தம் போல்சிரித்து கண்ணில் கனவுகளும்
    ..சொர்க்கம் போல்விரிய நின்றபடி தானிருந்தாள்
    இன்னும் பலவாகச் சொன்னவர் எத்தனையோ..
    …ஏற்றம் தரும்படியும் இனிமையாய் இல்லையம்மா
    மென்மைக் காதலென்று பலர்சொலும் விஷமுந்தான்
    ..மேவி உனைச்சேர்ந்து விட்டதா சொல்லம்மா..

    சிரிப்பலை கொஞ்சம் மெல்ல
    …சிற்சில வாகக் கூடி
    விரிந்ததே இதழு மங்கு
    ..விவரணை சொல்ல வொண்ணா
    புரிதலும் இல்லா நோக்கு
    ..புனைந்தது கண்கள் மெல்ல
    வரிவரி யாக நெற்றி
    ..வாகாகக் கோடு போட


    சின்ன விஷயம் இதுதானா
    ..சீர்மிகும் உங்கள் சோகந்தான்
    எண்ணம் சொல்ல ஏந்தயக்கம்
    ..எனக்கோ காதல் எதுமில்லை
    வண்ண மாக நான்பேசி
    ..வாகாய்ச் சிரிப்பும் சொல்லியவர்
    உள்ள விஷயம் சொலவில்லை
    ..உங்கள் தயக்கம் புரிகிறது..


    பேசிச் சிரித்த நல்மனிதர்
    ..பெரிய மனிதர் என்னுடைய
    நேசிப் புக்கும் உரியவளாம்
    .. நேகா வுடைய அண்ணனவர்
    பூசி மெழுகும் பழக்கம்தான்
    ..பூவை எனக்குக் கிடையாது
    சேதி தவறு என்தந்தாய்
    .. செல்வீர் என்றே தான்சிரித்தாள்..

    உளத்தினில் கொண்ட காதல்
    ..உணர்வையும் மறைத்து வைத்தாள்
    வழக்கமாய் அவனும் வந்தால்
    ..வருத்தமாய் முகத்தை வைத்து
    பழக்கமும் வேண்டாம் என்றே
    ..பக்குவ மாகச் சொல்ல
    உரமென நினைத்துக் கொண்டாள்
    …உருக்குமா காதல் நாளை..

  10. #1658
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,144
    Post Thanks / Like
    நாளை என்னாகுமோ இந்நாடு
    களை மண்டிய காடானதின்று
    சொல்லவொணாத் துயரச் சுமைகள்
    சொகுசறியா அனந்த கோடி பெண்கள்
    உண்மை உணராமல் போக்கிரியாய்
    மலிவு விளம்பரத்தில் பகட்டுகிறாள்
    பதறிட பலபேர் பாராட்டிடவும் பலபேர்
    பெண் சுதந்திரம் இதுவென்று பகர்கிறாள்
    பொல்லாத பொருந்தாத பேச்சுக்கள்
    பேசுகிறாள் பொறுப்பில்லாத மின்மினி
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #1659
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    மின்மினி பூச்சி ஒளியினை போல்
    மின்னும் விண்மீன்கள் ஏராளம்
    அண்டத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம்
    அருணனின் வெப்பம் கொட்டும் – ஆயின்

    தரணிக்கு தாரகையால் பயனுமில்லை
    தண்மதியின் வெண்ணொளி அதற்கில்லை
    தங்கமும் வெள்ளியும் தங்காத செல்வமும்
    தரமில்லா கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் !
    Last edited by Muralidharan S; 18th April 2015 at 06:47 PM.

  12. #1660
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,144
    Post Thanks / Like
    கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் ஆனதே
    வஞ்சியிவளிடம் வந்த வார்த்தைகள்
    வக்கில்லை சொல்லுக்கு வெறும் சாடைகள்
    விளங்குவதில்லை அவற்றின் அர்த்தங்கள்
    கடுப்பா களிப்பா குழப்புகின்ற கருவிழிகள்
    கிண்டலா ரசிப்பா கனி உதட்டின் சுழிப்புகள்
    ம் என்றும் ஓ என்றும் உதிரும் முத்துக்கள்
    உணர்த்தவில்லை அவள் உள்ளக்கிடக்கைகள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  13. Likes Russellhni liked this post

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •