-
13th February 2015, 07:05 AM
#1481
Senior Member
Platinum Hubber
கவனிடி அவனடிக்கிற கூத்தை
பாராதது போல் பார்க்கிறான்
தெரியாதது போல் நடிக்கிறான்
அப்பாவி போலவே நிற்கிறான்
பசப்பும் மாயக்கண்ணன் இவன்
மன்மத லீலையில் மன்னன்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th February 2015 07:05 AM
# ADS
Circuit advertisement
-
13th February 2015, 11:29 AM
#1482
Junior Member
Devoted Hubber
மன்னனா அவன் மாக்கான் என்றோ மதி நுட்பம் எனக்கென்றோ
மனம் கெட்டு சொல்வது நன்றன்று மன்னவனோ மேலேவலனோ
மானியம் கொடுப்பவன் அவன் மறுத்தாலோ வெறுத்தாலோ
சூனியம் கொள்வது சொந்த காசில் நாமன்றி பின் வேறாரோ
Last edited by Muralidharan S; 13th February 2015 at 11:45 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th February 2015, 11:43 AM
#1483
Senior Member
Senior Hubber
வேறாரோ வந்தாலும் வெண்ணிலவே உன்னுடைய
…வேராகும் அவனென்பேன் விட்டுவிடல் சரியாமோ
ஊரார்கள் சூழ்ந்திருக்க உற்றார்கள் சேர்த்துவைத்த
…உணர்வுகளின் பாலமதை வீழ்த்திவிடல் முறையாமோ
தேராக மெல்லமெல்ல திண்ணமாக அசைந்துசெலும்
..சிறப்பான வாழ்வன்றோ நீபெற்ற நல்விருந்து
போராடி வேண்டியதைப் பெறமுயல விட்டுவிட்டு
…போம்மாபோ வென்றேதான் சொல்லுவது நியாயமிலை.
Last edited by chinnakkannan; 13th February 2015 at 11:45 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th February 2015, 12:08 PM
#1484
Junior Member
Devoted Hubber
நியாயமிலை நியாயமில்லை
நாலு வரி நான் கவிதையாய் எழுத
நாளு முழுக்க கண்டதையும் சிந்திக்க
நாலே நொடியில் நீ சென்றதையே முடிக்க
நக்கலாய் கவிதை ஒன்று சொக்கலாய் கொடுக்க
நான் இனி என்ன பண்ண நண்பனாய் நீயே சொல்லு
Last edited by Muralidharan S; 13th February 2015 at 12:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th February 2015, 12:37 PM
#1485
Senior Member
Senior Hubber
சொல்லுவதற்கு என்ன இருக்கிறது கற்றறிந்தோர் சபைதனிலே
வெல்லத்தான் முடியுமா சிறுவன்? ஒருவர் நாள் முழுக்க
செல்லத்தான் யோசித்து அற்புதக்கவிதை வரைய, மற்றொருவர்
நல்லவையாய் நாலே நொடியினில் நன்றாக சொல்லுகிறார்.
இல்லையென்று சொல்லாமல் கற்பியுங்கள் கவிதைப்பாடம்.
நில்லாது போகிடுமோ உம் கவிதைத்திறன் இச்சிறுவனிடம்.
Last edited by kalnayak; 13th February 2015 at 01:20 PM.
.........-`҉҉´-
-`҉҉´..)/.-`҉҉´-
....¨´“˜~.)/¸.~“˜¨
........¨´“˜~.“˜
-
13th February 2015, 02:38 PM
#1486
Senior Member
Senior Hubber
இச்சிறுவ னிடமென்ன இப்படியோர் விளையாட்டு
..இப்புவியில் பலருண்டு ஏற்றமிகு நல்லறிஞர்
மெச்சுதலாய்ப் பலசெயல்கள் மேதினியில் புரிந்தேதான்
..மேவியுனை இதயத்தில் இருத்தித்தான் வைக்கின்றார்
தச்சனென என்னிதயம் செதுக்காமல் ஈசாநீ
…தாரணியில் எனைச்சீண்ட எண்ணியதும் ஏனப்பா
மெத்தனவே இருந்துவிட்டேன் உன்கழலைப் பற்றாமல்.
…மெல்லமெல்ல மாறிடுவேன் மன்னிப்பாய் பரம்பொருளே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th February 2015, 07:03 PM
#1487
Senior Member
Platinum Hubber
பரம்பொருளே பார்த்தாயா வேடிக்கையை
காதலா காமமா பேதமறியா இருவர்
கூடி வாழ்ந்து கசந்த ஒரு காலத்தில்
வழக்குத் தொடுக்கிறாள் கெடுத்தானென
வாக்குக் கொடுத்தான் கை பிடிப்பேனென
நம்பி தந்தேன் என்னை அவனின்று
மணக்க மறுக்கிறான் ஆதலாலிது
வன்புணர்வென்று வாதிடுகிறாள்
வம்பாய் தண்டனை வாங்கித்தர
தடுமாறுது நீதி செய்வதறியாது
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
14th February 2015, 10:11 AM
#1488
Senior Member
Senior Hubber
செய்வதறியாது திகைக்கிறது மனது
அது என்ன
கருஞ்சிகப்புச் சுடிதார்
பின் கொஞ்சம் வெளிர் நிற துப்பட்டா
நெற்றியில் நெளிப் பொட்டு
தலையில் ஒற்றை ரோஜா
கண்களில் கனவு மின்னல்
எல்லாம் கொண்டு
நீ வந்து மனம் திறந்ததும்
இந்த நாள் தான்
பின்
இரண்டு வருடங்களில்
இந்த் நாளில்
மலர்க்கொத்துக்கள்
ஐஸ்க்ரீம்
வாழ்த்தட்டைகள்
எஸ் எம் எஸ்
பரிமாறிக்கொண்டதும்
இந்த நாள் தான்.
இதோ
இன்று காலை
ஒரு வாஸ்ஸப் தகவல்
உன்னிடமிருந்து
புகைப்படத்துடன்
இது பிடிச்சிருக்கா
அப்பா அம்மா பார்த்திருக்காங்க
எனக்குப் பிடிச்சுருக்கு என
சத்தியமாகப் புரியவில்லை
செல்லிடைப் பேசி அழைப்புக்கும்
பதிலில்லை
ஏதோ நினைவில்
வழக்கமாகச் சந்திக்கும்
மொட்டை மாடிக்கு வந்தால்
சிரித்தபடி ஹாய்…
பின் மெலிதான பதற்றம் உன்னிடம்
என்னாச்சுப்பா ஏன் இப்படி இருக்க
பின்ன யார் இவன்
கண்களால் மொபைலைக் காட்டிக்
கேட்க
முதலில் அவள் கண்ணில் புதிர்
பின் சிரிப்பு..
கண்ணில் நீர் மல்க
மேலும் தொடர் சிரிப்பு..
ஓ என் இனிய முட்டாளே
அது எனக்கல்ல
என் அக்காவிற்கு..
அவள் சிரிப்புக் கொடி
என்னிடமும் படர
என் கைபற்றி
சுற்றிலும் யாருமில்லையா எனப் பார்த்து
குட்டி முத்தா கொடுத்தவள் சொன்னாள்
“காதலில் முக்கியமானது
நம்பிக்கை”
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2015, 11:33 AM
#1489
Senior Member
Senior Hubber
நம்பிக்கை வைத்த பெற்றோர் சொல் காக்க
படிக்கிற வயதில் தறி கெட்டுப்போகாமல்
நடித்திருந்தான் காதல் வராததுபோல், தைரியமாய்
காதல் சொன்னவளின் கண்ணை மூடிவிட்டான்
காலம் சென்றபின் நினைவிலேயே குடித்தனம்.
ஏமாற்றுவது ஒருவரையல்ல, இருவரை சிந்தித்துப்பார்.
.........-`҉҉´-
-`҉҉´..)/.-`҉҉´-
....¨´“˜~.)/¸.~“˜¨
........¨´“˜~.“˜
-
14th February 2015, 05:02 PM
#1490
Junior Member
Devoted Hubber
சிந்தித்து பார் என்றும் சீர்மையாக வாழ்வாய்
செம்மையாய் வழியிதை விழியென கொள்வாய்
உன்னை நீ அறிந்து உணர்ந்து கொண்டால்
எண்ணத்தில் என்றும் எழுச்சி கொண்டால்
எதிலும் எப்போதும் நேர்மையாய் நின்றால்
முடிவை நினைத்து மடியிலாமல் சென்றால்
முக்கியம் முன்னால் வை மற்றவை பின்னென்றால்
முடியும் எதுவும் உன்னால் வெற்றியே கிட்டும் தன்னால்
---
* Courtesy : Stephen R Covey’s 7 habits of highly effective people
1. Be proactive 2. Begin with the end in mind 3.Put first things first 4. Think win-win
5. First understand, then be understood 6. Synergies 7.Sharpen your saw
Last edited by Muralidharan S; 14th February 2015 at 07:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks