-
6th August 2010, 05:27 PM
#11
Thanks Mr.Mahesh, It was very heartening to read the article on PP. Be it 46 years or 460 years, PP will always be fresh and new for all of us and the world. That's the greatness of NT and PP'songs.
Regards
Shivram
-
6th August 2010 05:27 PM
# ADS
Circuit advertisement
-
6th August 2010, 09:45 PM
#12
Senior Member
Devoted Hubber
கலைக்குரிசில், நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் 7ம் பாகத்தை துவக்கி வைத்த சகோதரி சாரதா அவர்களே ! 70ம் பாகம் என்ன?100 ம் பாகமும் நீங்களே துவக்கி வைப்பீர்கள்.
என்றென்றும் நடிகர் திலகத்தின் பக்தன்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
6th August 2010, 09:50 PM
#13
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 101
கே: 'பராசக்தி' கணேசனுக்கும், 'என் தம்பி' கணேசனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (கோ.முருகன், மதுரை - 6)
ப: முதல்வர் உதயசூரியன்! பின்னவர் உச்சிகால சூரியன்!
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)
அன்புடன்,
பம்மலார்.
-
7th August 2010, 12:13 AM
#14
சாரதா,
எங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி. இத்திரி மேன்மேலும் வளர வாழ்த்துகள். திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள்.
சுவாமி, செந்தில் மற்றும் சிவ்ராம்,
அன்னை இல்லத்தில் சாய் பாபா பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி. ஆனால் அவை அனைத்தும் நடிகர் திலகத்தையே சேரும்.
NOV,
நான் எடுத்த சாய்பாபா புகைப்படத்தை எனது பதிவிலேயே அப்லோட் செய்ததற்கு நன்றி.
ராகவேந்தர் சார்,
நடிப்பு பல்கலைக்கழகத்தை பட்டதாரிகளுக்கு வழங்கும் பட்டம் போல வடிவைமைத்து நமது நடிகர் திலகம் இணைய தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி பாராட்டுகள் .
இந்த மகிழ்வான நேரத்தில் இந்த திரியின் முதல் பாகத்திலிருந்து உருவாக்கி, வளர்த்து, யாரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் தனியாக நடிகர் திலகம் புகழ் பாடிய ஜோ அவர்களுக்கும் நமது நன்றியை சொல்லவேண்டும். பாராட்டும் அதே நேரத்தில் ஜோவிற்கு ஒரு வேண்டுகோள். மனகசப்பின் காரணமாக நமது ஹப்பிலிருந்து விலகி நிற்கும் நீங்கள் மீண்டும் வரவேண்டும். நடிகர் திலகத்தின் திரியில் மட்டுமாவது [இப்போதைக்கு] பதிவிட வேண்டும்.
அன்புடன்
-
7th August 2010, 01:14 AM
#15
Senior Member
Regular Hubber
congrats to Mr.Raghavendra, Mr.Murali, Pammalar, Nov madam sardha
-
7th August 2010, 10:31 AM
#16
Senior Member
Seasoned Hubber
டியர் குமரேஷ்,
தங்கள் பாராட்டுகள் நம் அனைவருக்கும் உரியதாகும், ஊர் கூடி இழுக்கும் தேர் அல்லவா இது. மேலும் பல பாகங்களை எளிதாக கடக்கும் என்பது திண்ணம்.
முரளி சார்,
தங்களுடைய சாய்பாபா தகவலும், படமும் மிகவும் அருமை. தெய்வங்களுக்குத் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் செய்த தொண்டே நடிகர் திலகத்திற்குத் தற்போது கடாட்சமாய்க் கிட்டி அவர் இல்லத்திற்கு அருள் பாலிக்கிறது. அதே போல் தன்னுடைய திரைப்படங்க்ளின் மூலமும் விளம்பரமில்லாமல் தான் செய்த நற்கொடைகள் நற்காரியங்கள் மூலமும் இந்நாட்டிற்கும் மற்றும் தேசிய இயக்கத்திற்கும் தன் நேரம், பொருள் யாவையும் அர்ப்பணித்த நற்தொண்டுகளும் அவருக்கு நிச்சயம் உரிய முறையில் ஆண்டவன் அருளால் பலனீட்டும் என்பதும் திண்ணம்.
நடிகர் திலகம் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம். உண்மையிலேயே அவர் பெயரில் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம் அமைத்தால் அதனுடைய இலச்சினை எப்படி வடிவம் பெறலாம் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இச் சித்திரம் உருவாக்கப் பெற்றது. இதன் பின்னணியில் சில தத்துவங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள இரு முகங்கள் உலக அளவில் நடிப்புக்கான குறியீடுகளாகக் கருதப் படுகின்றன. அந்த இரு முகங்களில் ஒன்று சோகத்தையும் மற்றது மகிழ்ச்சியையும் குறிக்கின்றன. சோகமான முகம் இருக்கும் பக்கத்தில் அதற்கான நிறமாக சாம்பல் நிறமும், சோகத்தைக் குறிக்கும் பூவாக பாரிஜாத மலரும் இடம் பெற்றுள்ளன. அதே போல் மகிழ்ச்சியைக் குறிக்கும் நிறமாக மஞ்சள் நிறமும் அதற்குரிய பூவாக ரோஜா மலரும் இடம் பெற்றுள்ளன.
வாழ்வின் இரு துருவங்களாக உணர்ச்சியில் விளங்கும் மகிழ்ச்சி, சோகம் இரண்டையும் தன்னுடைய திரைப்படங்களில் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார் நடிகர் திலகம். இடைப்பட்ட உணர்ச்சிகள் இந்த இரண்டின் கிளைகளாகவே வருகின்றன. சில உணர்வுகள் ஒரே நேரத்தில் இன்பமும் துன்பமும் ஒரு சேரக் கலந்தும் வந்துள்ளன. இந்த உணர்வையும் அவர் பல படங்களில் காட்டியுள்ளார்.
இவற்றைப் பிரதி பலிக்கும் வகையிலேயே இந்த இலச்சினை மாதிரியான படம் உருவாக்கப் பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அப்படி ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம் நடிகர் திலகத்தின் பெயரில் உருவாகுமானால் அதற்கு இந்த படம் பயன்படலாம்.
முரளி சாரின் பாராட்டுக்களுக்கு மீண்டும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th August 2010, 11:59 AM
#17
Senior Member
Regular Hubber
Originally Posted by
Murali Srinivas
சாரதா,
இந்த மகிழ்வான நேரத்தில் இந்த திரியின் முதல் பாகத்திலிருந்து உருவாக்கி, வளர்த்து, யாரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் தனியாக நடிகர் திலகம் புகழ் பாடிய ஜோ அவர்களுக்கும் நமது நன்றியை சொல்லவேண்டும். பாராட்டும் அதே நேரத்தில் ஜோவிற்கு ஒரு வேண்டுகோள். மனகசப்பின் காரணமாக நமது ஹப்பிலிருந்து விலகி நிற்கும் நீங்கள் மீண்டும் வரவேண்டும். நடிகர் திலகத்தின் திரியில் மட்டுமாவது [இப்போதைக்கு] பதிவிட வேண்டும்.
அன்புடன்
அன்பு நண்பர் ஜோ அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதிவு சமீப காலமாக இல்லாததற்கு வேலைப் பளு காரணமாக இருக்கலாம் என்று கருதியிருந்தேன்.
வேறு காரணம் இருப்பினும், நீங்கள் முன்பு போல தொடர்ந்து active ஆக பதிய் வேண்டும் என்று அனைவர் சார்பாகவும், உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் மட்டுமல்ல உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என்ற special உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
-
7th August 2010, 12:00 PM
#18
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்தர், முரளி, பம்மலார், NOV, ராகேஷ் (grouch), சந்திரசேகர், செந்தில் (Harish), சிவராம், K.மகேஷ், J.ராதாகிருஷ்ணன், குமரேஷ்..... உங்கள் அனைவரின் அன்புக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
முரளியண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஐந்தாம் பாகமும், பம்மலார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஆறாம் பாகமும் நடிகர்திலகத்தின் திரைப்பட ஆய்வுகளையும், அவரது சாதனைகளையும், அவரைப்பற்றிய பல்வேறு அபூர்வத் தகவல்களையும், அவரது படங்களின் மறுவெளியீட்டின் சிறப்புக்களையும் தாங்கி வந்து வெகு விரைவாக நிறைவடைந்தது போல, இந்த ஏழாவது பாகமும் விரைவாக நிறைவடைந்து.....
இதன் எட்டாம் பகுதி, 'எண்ணத்தாலும் செயலாலும் அண்ணன் நடிகர்திலகத்தின் புகழ்பரப்புவதே மூச்சாகக்கொண்டு செயலாற்றிவரும்' அன்புச்சகோதரர் ராகவேந்தர் அவர்களின் பொற்கரங்களால் துவக்கிவைக்கப்படும் நாள் விரைவில் வரவேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த பங்களிப்பு அவசியம்.
டியர் முரளியண்ணா,
நண்பர் 'ஜோ' (Joe) அவர்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் உண்மையிலும் உண்மை. அதைப்பற்றி நானே எழுதவேண்டும் எனறு நினைத்தபோது நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். இத்திரியின் முதல் இரண்டு பாகங்களைக்கவனித்தோமானால், யாரும் பங்கேற்காத சூழ்நிலையில் கூட, தனியொருவராக இத்திரியில் பதிவிட்டு வளர்த்த பெருமை ஜோ அவர்களையே சாரும். தவிர ஒவ்வொரு பாகம் துவங்கும்போதும், அதன் முந்தைய பாகத்தின் முக்கிய இணைப்புகளை முதல் பக்கத்தில் தருவதையும் ஒரு கடமையாக வைத்திருந்தார். (இப்போது அவர் அந்த பொறுப்பில் இல்லாததால் நண்பர் NOV அவர்கள் அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்).
அவரது மனப்புண்ணுக்கு மருந்திட்டு ஆற்ற நாமெல்லாம் இருக்கும்போது, 'ஜோ' அவர்கள் மீண்டும் முழுமூச்சுடன் நடிகர்திலகத்தின் திரியில் பங்கேற்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
-
7th August 2010, 12:08 PM
#19
Administrator
Platinum Hubber
Originally Posted by
saradhaa_sn
(இப்போது அவர் அந்த பொறுப்பில் இல்லாததால் நண்பர் NOV அவர்கள் அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்).
ungal mudhal padhivOdu inaikka pattuladhu. paarththu magizhungal
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th August 2010, 04:17 PM
#20
Senior Member
Seasoned Hubber
டியர் நவ் சார்,
சகோதரி சாரதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக அனைத்து இணைப்புகளையும் பதித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய உறுதுணையாலும் ஆதரவினாலும் இத்திரி மென்மேலும் பல பாகங்களைக் கடக்கும் என்பதில் ஐயமில்லை.
முரளி சார் சொன்னது போல் நண்பர் ஜோ அவர்கள் நமது திரியில் தொடர்ந்து பங்கு பெற்று தமது கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
சகோதரி சாரதா அவர்களின் எழுத்துக்கள் இந்தத் திரிக்கு ஒளிவிளக்காக வெளிச்சம் தந்து கொண்டுள்ளன. பாராட்டுக்கள். ஒவ்வொரு ரசிகருக்கும் அவர் தரும் மரியாதை மிகவும் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியது.
மற்றொரு அவா இந்நேரத்தில் வெளிப்படுத்த விழைகிறேன். நமது ஹப்பில் நடிகர் திலகம் திரியில் பங்கு பெற்று கருத்துக்களை எழுதும் அனைத்து நண்பர்களும் அனைவருக்கும் உகந்த நாளில், இடத்தில், நேரத்தில் சந்தித்து உரையாடலாம். அதைப் பற்றி அனவைரும் தங்களுடைய கருத்துக்களைக் கூறலாம். எதிர் வரும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை ஒட்டிவரும் ஏதேனும் ஒரு நாளில் சந்தித்து நேர் அறிமுகம் மற்றும் உரையாடல் மேற்கொள்ளலாம்.
இவ்விஷயத்தில் தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks