-
21st February 2013, 10:08 PM
#11
Senior Member
Seasoned Hubber
நானே ராஜா - ராமாயணத்தை நினைவு படுத்தும் கதையமைப்பு. நடிகர் திலகம் வில்லாளன் என்ற மன்னனாக வருவார். கதைப்படி வி.கோபாலகிருஷ்ணன் கிரிஜா காதலர்கள். ஆனால் நடிகர் திலகத்தின் தங்கையாக நடிக்கும் எம்.என்.ராஜம் கதைப் படி கோபாலகிருஷ்ணனை விரும்புகிறார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துடிக்கிறார். தன் சகோதரர்களான நடிகர் திலகத்தையும் எஸ்.வி.சுப்பையா வையும் அதற்குப் பணிக்கிறார். வி.கோபால கிருஷ்ணனைப் பழி வாங்குதற்காகவும் வழிக்குக் கொண்டு வருவதற்காகவும் ஸ்ரீரஞ்சனியையும் அவர் கணவரையும் கடத்தி வருகிறார் நடிகர் திலகம். அதனைத் தொடர்ந்து இடம் பெறும் சம்பவங்களே படத்தின் சாராம்சம்.
மிகவும் மெதுவாக நகரும் படம். வலுவற்ற திரைக்கதை என்றாலும் அதனைத் தன் வசனத்தால் ஈடு செய்து விடுகிறார் கண்ணதாசன். இப்படத்திற்கு இசை மிகப் பெரிய ஆறுதல். பாடல்கள் அனைத்தும் தேன் சுவை. குறிப்பாக நடிகர் திலகம் போதையில் தள்ளாடியதே பாடுவதாக வரும் பாடல் மந்த மாருதம் தவழும் சூப்பர். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஸ்டைலில் நடிகர் திலகம் கலக்கி யிருப்பார். இப்படிப் பட்ட மெதுவான ஓட்டமுள்ள படத்தைப் பார்க்க வைப்பது இசையும் நடிகர் திலகமும் தான். பாடல்களைப் பாருங்கள். ஆதியந்த மில்லா அருள் ஜோதியே பாடல் மிக இனிமை. அதை விட இனிமையானது சிந்து பாடும் தென்றல் பாடல். முதல் முறை கேட்பவர்கள் அந்தப் பாடலை மீண்டும் போட்டுக் கேட்பார்கள்.
பாருங்கள் பாடல்களையும் நடிகர் திலகத்தின் ஸ்டைலையும்
பாடல் காட்சிகள்
ஆதியந்தமில்லா அருள் ஜோதியே
ஆடல் கலை – குமாரி கமலா நடனம்
மந்த மாருதம் தவழும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st February 2013 10:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks