Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    24 ஆம் தேதி கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்

    நடிகர் திலகத்தின் மீது அதீத அன்பு கொண்டவர், காலப்போக்கில் அரசியல் இருவரையும் சிறிது காலம் சக நண்பர்களின் சூழ்ச்சியால் பிரித்துவைக்க...நடிகர் திலகம் கட்டபொம்மன் திரைப்படம் தயாரிக்க அதில் திரு எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களை வெள்ளையத்தேவன் பாத்திரத்தில் நடிக்க அழைக்க, எதற்கு இனியும் கணேசனுடன் சேர்ந்து நடிக்கவேண்டும், என்ற துர்போதனையில் அவரையும் தனது சொந்த படமான சிவகங்கை சீமையில் நடிக்கவைத்தார். வெள்ளையத்தேவன் கதாபாத்திரம் திரு ஜெமினி அவர்கள் நடிக்க மேலும் சிறப்பு பெற்றது கட்டபொம்மன்.

    திரை விற்பன்னர்கள் திரு மெய்யப்ப செட்டியார் முதல் பலர் கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து சிவகங்கை சீமையை வெளியிட்டால் பெரிய வெற்றி பெரும் என்று அடித்து கூற....சுயநலம் கொண்ட, நடிகர் திலகம் மீது வெறுப்பு கொண்ட கயவர் கூட்டத்தின் துர்போதனையால் சிவகங்கை சீமை படத்தை கட்டபொம்மன் வந்த சில நாட்களில் வெளியிட்டு தனது கையை வெகுவாக சுட்டுக்கொண்டார்,...

    தனது வெளிவராத ஒரு புத்தகத்தில் நடிகர் திலகம் திரைப்படங்கள் மூலம் தனக்கு தொடர்ந்து அதிகமாக பாடெழுதும் வாய்ப்பு வந்ததை பற்றி மறைமுகமாக கோடிட்டு காட்டி இருந்தார் கவிஞர் கண்ணதாசன்.

    இவர் கடைசியாக எழுதி வெளிவந்து சுபெர்ஹிட் பாடல் கண்ணே கலைமானே என்ற பாடல்.

    திரை உலகிலும் மக்களாலும் இப்படி ஒரு சொல் இப்பொழுதும் நிலவையில் உள்ளது

    பாடல் என்றால் அது ....
    கண்ணதாசன் எழுதவேண்டும்
    விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும்
    சுந்தரராஜன் பாடவேண்டும்
    சிவாஜி கணேசன் நடிக்கவேண்டும் .....!!!!

    எத்துனை சத்தியமான வார்த்தைகள் !!






    Rks
    Last edited by RavikiranSurya; 23rd June 2015 at 09:14 PM.

  2. Thanks Russelldwp thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •