Results 1 to 10 of 145

Thread: நெஞ்சம் மறப்பதில்லை

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்னதான் முடிவு?...

    முடிவை நோக்கித் தொடர்கிறது..தொடர்ந்து முடிகிறது.



    தம்பியோ கைதி என்று மாப்பிள்ளை வீட்டாரால் அறியப்பட்டு திருமணம் தடைபடுகிறது. 'உன் பழி உணர்ச்சி தீர நீயே உன் தங்கையைக் கொன்றுவிடு' என்று அண்ணன் தம்பியிடம் கத்தியை வெறுப்புடன் எடுத்துத் தருகிறான். அப்போதும் தம்பி தான் பழிவாங்கக் காத்திருப்பவனை கொலை செய்து 'அந்த பிணத்தின் மேல் உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்' என்று தங்கையிடம் சூளுரைத்தபடி நிற்கிறான்.

    கல்யாண வீட்டில் சலசலப்பு. மானேஜர் வந்துவிட்டார். திருமணத்திற்கு வரும் மானேஜர் பெரியவரை ஊரே வரவேற்கிறது. அவர் புகழ் பாடி தெய்வமாக அவரைக் கொண்டாடுகிறது. தூரத்தில் தெரியும் அவரை தம்பி உற்றுப் பார்க்கிறான். தெரிந்த முகம் போல் தெரிகிறது. ஊரார் அனைவரும் அந்த உத்தமரின் காலில். அண்ணன் விவரம் சொல்லுகிறான். தம்பி கொலை செய்யக் காத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரிடமே தம்பிக்கு புத்தி சொல்ல சொல்கிறான் அந்த அப்பாவி அண்ணன்.

    தம்பியை நோக்கி வரும் மானேஜர் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார். கொஞ்சமும் அவர் சலனப்படவில்லை. அவர் முகத்தில் மரண பீதி இல்லை. நடுக்கம் இல்லை. செய்த பாவங்களுக்கு சந்தோஷத்துடன் அவர் தண்டனை அனுபவிக்கத் தயார்.

    அவனிடம் 'என்னைத் தெரியலையா... நான்தான்... உன்னை கொலைகார பட்டம் கொடுத்து ஆயுள் கைதியாய் அனுப்பிய கொடும்பாவி நான்தான்.... உன் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்று அவன் கையில் இருக்கும் கத்தி முன் தலை குனிகிறார்.



    பழி உணர்ச்சியும் கொலை உணர்ச்சியும் மேலோங்கி இருக்க அந்தப் பெரியவரை தரதரவென ரூமிற்குள் இழுத்துச் சென்று தாழிட்டுக் கொள்கிறான் தம்பி. அனைவரும், பதட்டத்துடனும், அதிர்ச்சியுடனும் சென்று கதவை தட்டுகின்றனர். தாங்கள் வணங்கும் அந்த மனித சாமிக்கு ஏதாவது நேர்ந்தால் அத்தனை பேரும் தம்பியைக் கொல்லும் கொலைகாரர்கள் ஆவோம் என்று எச்சரிக்கிறார்கள். உள்ளே ஒரு சப்தமும் இல்லை. ஊரே கூடி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால்...பார்த்தால்?...

    அந்த மனித தெய்வம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறான் தம்பி கண்களில் நீர் நிறைய. அவன் அவரைக் கொலை செய்யவில்லை. மாறாக அவர் பாதங்களை அவன் கண்ணீரால் கழுவி கதறுகிறான். அவருடைய நல்ல குணங்களை அவன் உணர்ந்து விட்டான். அவர் திருந்தியதை அறிந்து விட்டான். புத்தி தெளிந்து விட்டான். அவன் வாழ்வு சீர்குலையக் காரணமாயிருந்த அந்த பெரிய மனிதர் ஆனந்தத்துடன் கூடிய அழுகை அழுகிறார். 'வைஷ்ணவ ஜனதோ' பின்னணியில் ஒலிக்க இருவரும் மனதார தழுவிக் கொள்கின்றனர் மனமொத்த அன்பினால். அன்பு வென்றது. பாவம் உணர்ந்து செய்த புண்ணியம் வென்றது. செய்த தர்மம் அதர்மத்தை வீழ்த்தியது. பழி உணர்ச்சி தோற்றுப் போனது.

    அருமையான பின்னணி விளக்கத்துடன் படம் முடிகிறது.

    'மனிதன் தவறு செய்யாத போது மனிதனாகவே இருக்கின்றான்.

    தவறு செய்யும் போது அதே மனிதன் மிருகமாக மாறி விடுகின்றான்.

    மிருகம் தன்னை உணர்ந்து திருந்தும் போது தெய்வத் தன்மை அடைந்து விடுகிறது.

    தெய்வத்தன்மை அடைந்த மனிதன் உலகத்தில் வாழத்தானே வேண்டும்?'

    என்ன அருமையான ஒரு படம்! என்ன ஒரு மெஸேஜ்!

    கொடுமைக்கார மானேஜராகவும் திருந்திய பெரியவராகவும் பாலையா நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார். பழுத்த அனுபவம் பேசுகிறது. 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே' என்று கோவில் கோவிலாக சென்று பாவங்களைத் தீர்க்க மனமுருக வேண்டுவது அருமை. தான தருமங்களை புத்திமதியோடு அளிப்பது அம்சம்.

    பழி வாங்கும் இளைஞனாக ராஜன். ஏ.வி.எம்.ராஜன். உணர்ந்த, உயர்ந்த நடிப்பு. அண்ணனாக வி.எஸ்.ராகவன். இவர் நடித்த படங்களிலேயே இதுதான் இவரது சிறந்த நடிப்பைக் கொண்ட படம் என்பேன்.

    குடிகார பணக்காரராக வி.கே ராமசாமி. ராகவனின் மனைவியாக அஞ்சலி தேவி. தங்கையாக 'பலே பாண்டியா' வசந்தி. (இவர் பி.ஏ பட்டப்படிப்பு முடித்தவர்) நிர்மலா ('வெண்ணிற ஆடை' அல்ல) என்ற முகம் அறியாத நடிகை ராஜன் ஜோடி. மற்றும் கே.எஸ்.ஜி படங்களின் ஆஸ்தான குத்தகை நடிகர்கள் கரிக்கோல் ராஜ், சாமிக்கண்ணு, கவர்ச்சி வில்லன் கண்ணன், 'அய்யா.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி, நம்பிராஜன், ராஜவேலு அனைவரும் உண்டு.

    ரவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. பாடல்களை கொத்தமங்கலம் சுப்புவும், கோபாலின் காவிய கவிஞனான மாயவநாதனும் இயற்றி இருப்பார்கள்.

    மகரிஷியின் மூலக்கதைக்கு திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பார் கோபாலகிருஷ்ணன் என்னும் 'இயக்குனர் திலகம்'.

    இசை ஆர்.சுதர்சனம். அருமையான பாடல்கள்.

    பாடகர் திலகத்தின் 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே'

    'நீண்ட மதிற்சுவரும்
    நெட்ட நெடுங் கோபுரமும்
    சூழ்ந்து மறைத்திருக்கும்
    சுத்தவெளி பொற்சபையே'

    உருக்கி, உருக்குலையச் செய்யும் பாடல்.



    'பொண்ணப் பார்த்து மயிலக் காள மயங்கிதிப்போது' சுசீலாவின் குரலில் கிறங்கடிக்கும் கிராம பாணிப் பாடல். அலுப்பே ஏற்படுத்தாத பாடல்.



    'தமிழ்க் கலைதனில் விழுந்த களை எடுப்பாய்' என்ற கலைநிகழ்ச்சி நாட்டியப் பாடல். படத்தில் பாடுபவர் நமது எஸ்.ஏ.கண்ணன். லட்சுமி ராஜம், காஞ்சனா, உதய சந்திரிகா ( இவரே பின்னால் கே.எஸ்.ஜியின் 'சுவாதி நட்சத்திரம்' படத்தின் கண் தெரிந்தும் தெரியா நாயகி) இவர்களின் நடனத்தில். நவநாகரீகக் கலையை கேலி செய்து, தமிழ்க் கலைகளின் பெருமை குறைகிறதே, குலைகிறதே என்று கவலைப்படும் கலைப் பாட்டு.

    Last edited by vasudevan31355; 24th June 2015 at 11:42 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks RAGHAVENDRA thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •