-
7th June 2016, 07:29 PM
#11
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரியான மெட்டிஒலி காயத்ரி!
சினிமாவில் பாசமலர், ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காயத்ரி. அப்படி அவர் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்-அஜீத் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு சினிமாவில் அவர்கள் இருவரும் வளர்ந்து வந்தபோதும், காயத்ரிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மெட்டிஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரவேசித்தார். அந்த சீரியலில் சேத்தனின் மனைவியாக அவர் நடித்த சரோஜா என்கிற வேடம் பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. குறிப்பாக, அந்த சீரியலின் க்ளைமாக்ஸ் காட்சியை லைவாக ஒளிபரப்பு செய்தபோது, சிங்கிள் டேக்கில் நடித்து பாராட்டு பெற்றார் காயத்ரி.
அதைத் தொடர்ந்து மேகலா, நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட சில தொடர்களில் நடித்த காயத்ரிக்கு மெட்லிஒலி அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. பின்னர் திரு மணம் செய்து கொண்டு செட்டிலான அவர், தற்போது ஒரு குழந்தைக்கும் அம்மாவாகி விட்டார். இந்த நிலையில், மறுபடியும் அவர் சின்னத்திரையில் என்ட்ரியாகியுள்ளார். அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் சில தினங்களுக்கு முன்பு பங்கேற்றார் காயத்ரி. அதில் பங்கேற்றவர்கள் அனைவருமே இளவட்டங்கள் என்றபோதும், திருமணமான காயத்ரியும் அவர்களுக்கு இணையாக காரில் உயரத்துக்கு சென்று சாகசம் செய்தார். அதோடு, குழந்தை பிறந்த பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்றும் தெரிவித்துக்கொண்டார் காயத்ரி.
நன்றி: தினமலர்
-
7th June 2016 07:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks